All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐம்பத்தி இரண்டாம் பகுதி...

ரஞ்சனி ப்ரணவைப் பற்றி பவித்ரனிடம் ஏதும் கூறவில்லை.

பவித்ரன், பிளீஸ் ரஞ்சனி, சொல்லு, இன்னைக்கு ராஜாவைத் தூக்கீட்டு நீ நின்னதும், எனக்கு உடம்பு ஒரு நிமிசம் சிலித்தது, என் மகனை நினைத்து என சிலாகித்தான் பவித்ரன்.

ரஞ்சனி அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள், என் மகனுக்கும், உனக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்டாள்??

ரஞ்சனியின் இந்தக்கேள்வியைக் கேட்டதும், ரஞ்சனியை அறைய கோபத்தில் கையை ஓங்கிவிட்டான் பவித்ரன்.

ரஞ்சனி அவனை எரிக்கும் பார்வையில் நின்றிருந்தாள்.

பவித்ரன் என்ன நினைத்தானோ! ஓங்கிய கையை மடக்கி மேசையில் குத்தியவன், பட்டென கதவடைத்து வெளியேறினான்.

பவித்ரனை இரவு மது அழைத்தாள். சார் என்னை வேலையிலிருந்து எடுத்துட்டாங்க சார். இப்பத்தான் போன் வந்தது என்றாள்.

யார் ? செய்தது.

ரஞ்சனி மேடம்தான். உங்களுக்குத் தெரியாதா. நிறைய பேருக்கு வேலை போச்சு சார் என்றாள்.

நீ கவலைப்பட வேண்டாம். நான் வந்து சரிசெய்கிறேன் என்றான் பவித்ரன்.

பரவாயில்லை சார். நானே ரிசைன் பண்ணலாம்னு இருந்தேன். போட்டோ நோட்டீஸ்போடில் ஒட்டினதுக்கு பிறகு, ஆபீசில் யாரையும் என்னால் நிமிர்ந்து பார்த்து பேச முடியல, என்னோட பாஸா மட்டும் இல்லாம, ஒரு பிரண்டா என்னை நடத்தினதுக்கு மிக்க நன்றி சார் என்றாள் மனதார மது.

பவித்ரன், உனக்கு வேற எங்கயாவது வேலை ஏற்பாடு செய்யவா?? எனக்கேட்டான் பவித்ரன்.

வேண்டாம் சார். நானே பாத்துக்கிறேன். ஏதோ இனம் புரியாத ஆசையில் இவ்வளவு நாள், எப்படி போனது என தெரியவில்லை.

உங்களுக்கு என்னை பிடித்திருக்கிறது கல்யாணம் செய்து கொள்ள இப்போது கேட்பீர்கள், இன்று கேட்டு விடுவீர்கள் என நான் பலநாள் நினைத்ததுண்டு. ஆனால் ரஞ்சனி மேடம் வந்திருக்கிறார்கள் என தெரிந்ததும், உங்களின் வேகம் கண்டு நான் சந்தோசப்பட்டேன்.

எனக்காகத்தான் அவர்களிடம் பேசப் போகிறீர்கள் என நான் நினைத்தேன். எல்லாமே எனது ஆசை கொண்ட மனதின் விருப்பம்.

நீங்கள் மேடத்தை கண்டதும், கட்டிக்கொண்டு நின்றது, இப்போதும் என் கண்விட்டு நகரவில்லை. என்னை ஓங்கி அறைந்து, நட்பு வேறு, காதல்வேறு என என்னை என் நிஜ உலகிற்கு அழைத்து வந்தது அந்தக் காட்சிதான். என்ன ஒரு லக்கிசார் ரஞ்சனிமேடம் என்றாள் மது.

ஐம் வெறி சாரி மது, இதெல்லாம் எனக்குத் தெரியாது என்றான் பவித்ரன்.

பரவாயில்லை சார். நாம் ஒருவர் மேல் காதலில் இருக்கும் போது, நமக்கு சுற்றி இருப்பவர்கள் பெரிதாய் தெரிய வாய்ப்பில்லை. இது நான் கண்ட உண்மையும் கூட. இவ்வளவு காதலை வைத்துக்கொண்டு எப்படி சார் இவ்வளவு நாட்கள் பிரிந்திருந்தீர்கள்?? எனக்கேட்டாள் மது.

இது யாருக்கும் புரியாது. இப்போது என்முதல் எதிரி அவள்தான். காதலியும் அவளேதான். பகை எங்களை பிரித்து வைத்திருந்தது என்றான். ஆனால் அவளுக்கு நான் முதல் எதிரி மட்டுமே என்றான்.

எனக்கு அப்படித் தெரியவில்லை. ரஞ்சனி மேடம் உங்கல ரொம்ப விரும்புறாங்க. என்னை அவர்கள் வேலையிலிருந்து எடுத்ததே அதற்கு சாட்சி என்றாள் மது.

இப்போ கம்பெனி படு நஷ்டத்துல போகுது சார். பாத்துக்கோங்க சார் என்றமது போனை அணைத்தாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் ஆபீஸ் மேனேஜருக்கு போன் செய்தான்.

அவர் எடுத்ததும், அங்கே என்ன நடக்குது. என காய்ந்தான் பவித்ரன்.

சார். மேடம் ஸ்ரிக்டா உங்களுக்கு எதுவும் தெரியக்கூடாதுனு சொல்லீட்டாங்க என்றார் அவர்.

உங்களுக்கு நான் பாஸா?? இல்ல ரஞ்சனியா?? எனக்கேட்டான் பவித்ரன்.

சார் அவங்க தொழிலாளர்கிட்ட பேசி அவங்களோட சேரை எழுதி வாங்கீட்டாங்க, இப்போ அவங்கதான் மேனேஜிங் டேரைக்டர் என்றார்.

பவித்ரன் நெற்றியை அழுத்தினான். எது நடக்கவே கூடாது என நினைத்தானோ!! அதை சாதித்துவிட்டாள். ஏன் எங்கிட்ட சொல்லல?? இது எவ்வளவு முக்கியமானதுன்னு தெரியுமா?? என படபடத்தான்.

சார் ஆபீசில் இரண்டடுக்கு பாதுகாப்பு சார். செல்லே பேசக்கூடாது. தடிதடியா ஆளுங்க, மிலிட்ரியா?? போலீசானு தெரியல, எந்நேரமும் ரவுண்ஸ்லதான் இருக்காங்க. இது போக பல செக்யூரிட்டி கேமராவும் மாட்டீட்டாங்க. பாத்ரூம் போக எழுந்திரிக்கவே பயமா இருக்கு. ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி அவனுங்கட்ட பர்மிசன் கேட்டுதான் டாய்லெட்டே போக வேண்டிதிருக்கு.

ஆபீசே இந்த ரேண்ஞ்சுல இருந்தா, பேக்டரி எப்படி இருக்க்ம்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க, படு ஸ்ரிக்ட் சார்.

இன்னைக்கு ஒரு நாள்ல மட்டும் லேட்டா வந்தாங்க, பேசுணாங்கணு பத்து பேர வேலைல இருந்து தூக்கீட்டாங்க.

எனக்கு இப்பவே ஐம்பது வயசாச்சு சார். என்னை வேலையவிட்டு எடுத்துறாதீங்க சார். இனிமே இன்டர்வியுக்குகெல்லாம் போனா நல்லா இருக்காது சார் என்று விட்டு போனை வைத்தார்.

இன்று ஒரே நாளில் இவ்வளவு செய்திருக்கிறாள் என்றால், பல நாள் திட்டமா?? எனக்கு இணங்கி அமைதியாய் பேசும்போதே சந்தேகப்பட்டிருக்க வேண்டும். சே!! என நொந்தான் பவித்ரன்.

எவ்வளவு அழகாக என்னை ஏமாற்றி இங்கு கொண்டுவந்துவிட்டாள்!! கண்ணைமூடி பல்லைக் கடித்தவன், செல்வபாண்டியனுக்கு அழைத்தான்.

என்னப்பா?? ரஞ்சனி உங்கிட்டையே வந்துட்டா போல, நல்லா சந்தோசமா இருங்க என வாழ்த்தினார்.

சார். என நடந்ததை சுருக்கமாக கூறியவன். என்னைக் கேட்டாமல், கம்பெனி சேரை வாங்கியது தவறு. இதில் என்ன செய்யலாம் என சட்ட உதவியை கேட்டான்.

செல்வபாண்டியன் சற்று யோசித்துவிட்டு, ரஞ்சனிமேல் தவறு இருந்தாலும், இதை நிரூபிப்பது கடினம் என்றார்.

எனது பேக்டரியை எப்படி நான் கைப்பற்றுவது என்றான் பவித்ரன்.

ரஞ்சனி கைக்கு போனா, திரும்ப கிடைக்கிறது கஷ்டம். அவளைப் பற்றி நன்கு தெரிந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன் என்றவர், யோசித்துச் செய்!! என முடித்துவிட்டார்.

வெளியில் நாய் சத்தம் அதிகமாக இருந்தது. அவனது அறை பால்கனியிலிருந்து தோட்டத்தைப் பார்த்தான்.

புதிதாக வந்த நாய்கள், பழக்கமற்ற ஊட்டி குளிரில் அதிகமாக குலைத்தது.

பவித்ரனின் நாய்கள் கூண்டில் அடைபட்டிருந்தது. அவைகளும், போட்டி போட்டுக்கொண்டு குலைத்தன.

புதிய நாய்கள் அதீத மோப்ப சத்தியில் சுற்றித் திரிந்தன.

பவித்ரன் இப்போது கிட்டத்தட்ட ஹவுஸ் அரஸ்டில் இருந்தான். எவ்வளவு அழகாக சிரித்தே கைபிடித்து இங்கு அழைத்து வந்துவிட்டாள். எவ்வளவு முட்டாள்தனமாக இருந்துவிட்டோம் என தலையை தாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

பவித்ரன் முடிந்ததைப்பற்றி சிந்தித்துக்கெண்டிருக்க, அடுத்த அறையில் ரஞ்சனி தனது நாளைய திட்டத்தை கணக்கிட்டாள்.

நாய்களின் சத்தத்தில் அவளும் பால்கனியை எட்டிப் பார்த்தாள்.

அவளுக்கு நாய்கள் மட்டுமல்ல, பவித்ரன் தலையை தாங்கிக்கொண்டு நிற்பதும், அறை வெளிச்சத்தால் உண்டான நிழலில், நன்றாகவே தெரிந்தது.

பவித்ரன் தனது பேக்டரிக்கு செல்ல, விடியலை நோக்கி காத்திருந்தான். ரஞ்சனியும் நாளைய விடியலில் உள்ள புதையலை எடுக்க ஆவளோடு காத்திருந்தாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி பவித்ரனுக்கு தரும் பிரச்சனைகளை செல்வ பாண்டியன் ரஞ்சனியின் தந்தை ராஜனுக்குத் தெரிவித்தனர்.

ரஞ்சனிமேல் எப்போதும் ராஜனுக்கு ஒரு கர்வம் உண்டு. கோபப்படுவாள் ஆனால் தவறான செயலை எப்போதும் செய்ய மாட்டாள் என்ற நினைப்பு அவருக்கு எப்போதும் உண்டு. ஆனால் இன்று அது சற்றே ஆட்டம் கண்டது.

ராஜன் சற்றே கவலையாய் வீட்டில் நுழைய, பிரணவின் அழுகை கண்டு ஓடினார்.

லதா, குழந்தை செய்த சேட்டைக்கு அடித்திருந்தார். ராஜனுக்கு பிரணவ் அழுததும் மனைவிமீது கோபம் கொண்டவர், அவனை தூக்கி சமாதானப்படுத்தினார்.

எதுக்கு அடிச்ச, அழாத குழந்தைய நீ அழற அளவுக்கு செஞ்சுட்ட, இதுதான் நீ குழந்தைய பாத்துக்கிற லட்சணமா என கடிந்தார்.

லதா, ரஞ்சனிக்கு இப்படித்தான் செல்லம் குடுத்து, கெடுத்தீங்க, இவனையும் கெடுங்க என்றார் அழுகையில்.

மனைவியின் திடீர் அழுகைக்கு காரணம் புரியாமல், ராஜன் ஒரு நிமிடம் திகைத்து விட்டார்.

எங்கிருந்துங்க அவளுக்கு இப்படி ஒரு பழிவாங்குற குணம் வந்துச்சு, அவள அடிக்காம கொஞ்சியே வளத்தீங்கல்ல அதனாலதான். பிடிக்கலனு பிரிஞ்சிட்டா , அத கூட தாங்கிக்கிட்டேன். ஆனா இப்ப பவித்ரன பழிவாங்க கிளம்பி இருக்கா. ரஞ்சனி பவித்ரன்ட பேசுனத கேட்ட சிவத்துக்கு படபடப்பே வந்ததாம். ரஞ்சனிக்குள்ள இப்படி ஒரு மிருகத்தனமான குணமானு கேட்டார். எனக்கு எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா?? என்றார்.

சரியென லதாவை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர்த்தி பக்கத்தில் அமர்ந்தார் ராஜன்.

அம்மாவா?? என்னாச்சு?? என பிரணவ் மழலையில் எதையோ கேட்ட முயற்சிக்க, ராஜன், ஒன்னுமில்ல கண்ணா, என பொம்மைகளுக்கு மத்தியில் அவனை உட்காரவைத்துவிட்டு வந்தார்.

ம்.. நானும் கேள்விப்பட்டேன் என்றார் ராஜன்.

அவளை போன்போட்டு உடனே வர சொல்லுங்க, நான் சொன்னா மதிக்க மாட்டா. உடனே பேசுங்க என்றார் லதா.

எதுக்கு இவ்வளவுநாள் கழிச்சு அவளுக்கு கோபம் எனக்கேட்டார் ராஜன்.

லதா, ரஞ்சனியும் பவித்ரனும் சேரணும்னு ராமசாமிட்ட சொன்னேன். அவர் ஒரு பிளான் பண்ணி ஏதோ சொல்லி, இப்படி ஆயிடுச்சு என்றார்.

அப்படினா இவ்வளவுக்கும் மூல காரணம் நீதானா?? எதுக்கு அப்படி சொன்ன??

உங்களுக்கு தெரியுதா?? இல்லையா??? நம்ம பொண்ணு வாழாவெட்டியா இருக்கா. அவளவிட்டா இப்படியே இருந்திடுவா. எல்லாரையும் போல எம்பொண்ணும் வாழணும் என்றார் லதா.

அப்ப எதுக்கு திரும்ப கூப்பிடணும்.

பாவமில்லையா பவித்ரன். அவருக்கு இப்போதைக்கு தோள் கொடுக்கக்கூட யாருமில்ல.

ராஜன் சற்று யோசித்தார். அவங்களோட சண்டைய நிறுத்த, என பிரணவை லதாவிற்கு சுட்டிக்காட்டினார் ராஜன்.

லதாவிற்கும் இதுதான் சரியான முடிவாகப்பட்டது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரனின் உடைகள் ஒன்று கூட அவனது அலமாரியில் இல்லை. சதி செய்கிறாளாக்கும் என நினைத்தவன், நேற்றைய உடையுடனே கிளம்பினான்.

டேக்சிக்கு போன் செய்ய செல்லை எடுத்தவன், பல்லைக்கடித்தான். அதில் சிம் இல்லை.

ரஞ்சனி தோட்டத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து, செடிகளுக்கு தண்ணீர் விடுவதை வேடிக்கை பார்த்தவாறே, காபி குடித்துக்கொண்டிருந்தாள். சற்று தொலைவில் நாய்கள் அதீதமாக குரைத்துக்கொண்டிருந்தது.

விறுவிறுவென வந்தவன், வந்த கோபத்தில், அவள் கையிலிருந்த காபியை பட்டென தட்டிவிட்டான்.

என்ன பவித்ரன், ஏதும் கோபமா?? எனக்கேட்டாள் ரஞ்சனி.

நடிக்காத ரஞ்சனி!! என்னோட சிம்கார்டு எங்க??

எனக்கு தெரியாதே!! என காபியை பிளாஸ்கிலிருந்து அடுத்த கப்பில் ஊற்றிக்கொண்டிருந்தாள்.

டோண்ட் ஆக்ட் டூ ஸ்மார்ட். பேக்டரில நீ என்னல்லாம் செஞ்சனு எனக்கு நல்லா தெரியும். இன்னும் உன்னோட நடிப்ப நம்ப நான் தயாரா இல்லை.

சரி நம்பவேண்டாம். காபி குடிக்கிறீங்களா?? என காபியை அடுத்த கோப்பையில் ஊற்றினாள்.

ரஞ்சனியை கடும் கோபத்தில் முறைத்துப் பார்த்தவன், என்னோட பேக்டரிக்குள்ள இருக்குற உன்னோட ஆளுங்கள அடிச்சு விரட்டுறேன் என வாயிலை நோக்கி நடந்தான்.

ஒரு நிமிடம் என்றவள், அது என்னோட பேக்டரி என்றாள் அவனை அழுத்தமாகப் பார்த்து.

திரும்பி இரண்டெட்டில், அவள் கழுத்தைப் பிடித்தவன், என்னை கொலைகாரனா மாத்தீடாத டி!! எனவும் நாய்கள் அனைத்தும் பலமாக குரைக்க ஆரம்பித்தது.

கையில் வைத்திருந்த காபியை அவன் முகத்தில் பட்டென விசிறினாள். கையை உதறிக்கொண்டு முகத்தைத் துடைத்தவனிடம், இருந்த ஒரு சட்டையும் போச்சா!! சே!! என்றவள் இப்போது ரஞ்சனியாக தனது நாய்களுக்கு கட்டளையிட்டாள் இங்கிருந்து பவித்ரன் ஒரு அடி வெளியே எடுத்துவைக்கக் கூடாது என்றுவிட்டு உள்நோக்கி நடந்தாள்.

இப்போது பவித்ரன் சட்டென வாயிலை நோக்கி ஓட, இரண்டு நாய்களும் அவனை துரத்தி ஓடியது. பவித்ரன் புல்லட்டிலிருந்து வந்த குண்டு போல் வேகமெடுத்தான். ஓடுவதற்காகவே பயிற்சி எடுத்த நாய்கள் அவனை நோக்கி பாய்ந்தன. பவித்ரன் ஓடும்போதே , மருது மருந்து என சத்தமிட, ரஞ்சனி அப்போதுதான் திருப்பி, நாய்கள் பவித்ரனை துரத்தி ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டாள்.

ரஞ்சனி பவித்ரன் முட்டாள்தனமாக இப்படி ஓடுவான் என நினைக்கவில்லை. நாய்களை தனது பிடியிலிருந்து விட்ட டிரைனரிடம் படபடத்தாள். முதல்ல நாய நிறுத்துங்க, அது மட்டும் பவித்ரனை கடிச்சது, அதுவும் உயிரோட இருக்காது, நீங்களும் இருக்க மாட்டீங்க, அத எப்படியாவது நிறுத்துங்க என கிட்டத்தட்ட கத்தினாள்.

இரு டிரைனரும் கையை பிசைந்து கொண்டு நின்றனர். ஏனெனில் இந்த இரண்டு நிமிடங்களில் கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பவித்ரனும், அவனை துரத்திய நாய்களும் ஓடியிருந்தனர்..

எல்லோரும் பவித்ரனை பார்க்க, ஒரு மதம் பிடித்த யானை வாயிற்கதவை உடைத்துக்கொண்டு, பவித்ரனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ரஞ்சனி உறைந்து நின்றாள்.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 
Top