வியனி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புத்தாண்டை முன்னிட்டு புது டீஸர்..படிச்சுட்டு சொல்லுங்க நண்பர்களே.. வழக்கம் போல் இன்னும் கதைக்கு பெயர் வைக்கல..
"ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவோடு
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ ஆ ஆ ஆ"
தன் மனம் கவர்ந்த கார்மேக வண்ணன், புல்லாங்குழலில் இசை மீட்டி மறைந்திருந்து மாயம் செய்யும் மாயவனை காதல் மனதுடன் தவித்து அழைக்கும் பாடலுக்கு, விரல்கள் அபிநயம் பிடிக்க, முகத்தில் நவரசம் வழிந்தோட.. உணர்ச்சி பொதிந்த நேத்திரங்கள் தன் நந்த கோபனை தேடி அங்குமிங்கும் அலைபாய.. காற்றில் ஆடும் கொடி போல்.. வளைந்து நெளிந்து உடல் சாகசம் செய்ய.. காண்போர் அனைவரையும் தன் பரதத்தால் கட்டி போட்டிருந்தாள் நிலானி ரவிச்சந்திரன்.
"கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ "
என்ற வரிகளுக்கு தன்னை தான் அழைக்கிறாளோ என்ற எண்ணம் மேலோங்க.. தாடி அடர்ந்த முகத்தில் யாருக்கும் தெரியாமல் அதரங்கள் மெல்லிதாக வளைய.. 'நான் இங்குதான் உன் முன்னால் அமர்ந்து இருக்கிறேன், அதை கவனிக்காமல் எங்கோ தேடிக் கொண்டிருக்கிறாயே..' எழுந்து சென்று கட்டி அணைத்து சொல்லிவிடலாமா..? என்று நினைத்தவனின் எண்ணத்தை பக்கத்தில் அமர்ந்திருந்தவள் அறிந்துகொண்டது போல்.. அவனையும், நடனமாடும் அவளையும் ஒரு நிமிடம் கவனித்துவிட்டு புன்னகைத்துக் கொண்டாள்.
************************************************
"இங்க பாருங்க மா.. உங்களை மாதிரி நாங்களும் அரசியல் குடும்பம் தான் இல்லைன்னு சொல்லல.. அது எங்க அப்பாவோட முடிஞ்சு போச்சு.
எனக்கு இந்த அடிதடி அரசியல் எல்லாம் வேண்டாமென்று தான் மருத்துவம் படிச்சு மருத்துவராகி என்னால் முடிஞ்ச அளவுக்கு நான், என் மனைவி, மகள் எல்லாம் சேவை பண்ணிக்கிட்டு இருக்கோம்.அது மட்டுமில்லாமல் உங்க தம்பி உங்களுக்கு ஒரு அடியாளு மாதிரி, நீங்க கண்ண காமிச்சா என்ன வேணும்னாலும் பண்ணுவார்னு ஊரறிந்த விஷயம், ஏன் நானே ஒரு தடவை ஒருத்தனை ஓட ஓட அடிச்சு துரத்திகிட்டு போனதே என் கண்ணால் பார்த்தேன்.
அப்படி பட்டவருக்கு என் பொண்ணை நான் கட்டி கொடுக்க விருப்பப்படலை, தயவு செய்து வெளில போய்டுங்க என்றார்" நிலானியின் தந்தை ரவிச்சந்திரன்.
"இங்க பாருங்க அய்யா..! எல்லா மனுஷங்களும் தப்பு செய்றவங்க தான்.. அதில் நல்லவன் கெட்டவன்னு தீர்மானிக்கிறது.. அவன் செய்யிற தப்போட அளவு தான், அதே மாதிரி தான் அரசியல் வாதியான நாங்கலும் உங்களை விட கொஞ்சம் அதிகத் தப்பு பண்றோம். கெட்ட விசயத்துக்காக மட்டும் நாங்க தப்பு பண்றது இல்லை, சில நல்ல விசயங்களை செய்யவும் தப்பு பண்ண வேண்டியது இருக்கு" என்று கோப்பெருந்தேவி கூற..
"நீங்க எதுக்கோ பண்ணுங்கம்மா.. அந்த விளக்கம் எல்லாம் எனக்குத் தேவை இல்லை.என் பொண்ணை உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு விருப்பம் இல்லை.இப்போ நீங்க இடத்தை காலி பண்ணுங்க, நான் ஹாஸ்பிடல் போகனும்" என்றார்
அவர் கூறியதற்கு இதழ் பிரியாது மென்மையாக புன்னகைத்தவள், "அப்படி எல்லாம் நீங்க சொல்ல கூடாது. நல்லா யோசிச்சு ஒரு முடிவை சொல்லுங்க, உங்க பதிலுக்காகக் காத்துகிட்டு இருக்கேன், இது என் தம்பி வாழ்க்கை."
"முதலில் நீங்க உங்க புருசனோட வாழ வழிய பாருங்க.. அப்புறம், உங்க தம்பி வாழ்க்கையை பத்தி யோசிக்கலாம்" நக்கலாகச் சொல்ல..
அவரை திரும்பி உறுத்து விழித்தவள்.. எதுவும் கூறாமல் அங்கிருந்து அகன்றாள்.
************************************************
நோயாளி தான் உள்ளே வந்திருக்கிறார் என்று நிமிர்ந்து பார்த்தவள், அங்கு வந்தவனை கண்டு அதிர்ந்து, பின் தன்னை சமாளித்துக் கொண்டவள்"உங்களுக்குச் சாதாரண பிரச்சனை என்றால் ஜெனரல் டாக்டரை பாருங்க.. நான் கார்டியாலோஜிஸ்ட்" என்றாள் மாற்றி இங்க வந்துவிட்டானோ என்ற ஐயத்தில்..
அவள் சொன்னதை காதில் வாங்காமல்.. நோயாளி அமரும் இருக்கையில் அமர்ந்தான்.
'ஏதோ பிரச்சனை போல் அதனால் தான் வந்திருக்கிறான்' என நினைத்து..
"சொல்லுங்க என்ன பண்ணுது..?"என்றாள்.
பதில் பேசாமல் காற்றில் சுழன்று, சுழன்று ஆடிக் கொண்டிருந்த அவள் சுருள் குழலை அவன் பார்த்துக் கொண்டிருக்க..
"ப்ச்.. உங்களுக்கு அடுத்து நிறைய பேரு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. நீங்க என்ன பண்ணுதுன்னு சொன்னால் தானே.. நான் உங்களை செக் பண்ண முடியும்" என்றாள்.
காணாததைக் கண்டது போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. "நெஞ்சில் கை வைத்து இங்க பிரச்னை"என்றான்.
அவனை சந்தேகமாகப் பார்த்துவிட்டு அவன் நெஞ்சில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து செக் செய்தவள்.. "ஹார்ட் பீட் எல்லாம் நார்மலா இருக்கு, எதுக்கும் ஒரு ஈசிஜி(ECG) எடுத்து பார்த்துடலாம்,சில சமயம் வாயு தொல்லையால் கூட வலி வந்துருக்கலாம், வேறு பிரச்னை இருக்க வாய்ப்பில்லை" என நகர போனவளின் கையை பற்றி தன் நெஞ்சில் வைத்து பொத்திக் கொண்டவன்,
"இங்க இருந்துட்டு என்னை தூங்க விடாமல் நீ தான் பிரச்னை பண்ணிட்டு இருக்கே,நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் பக்கத்திலையே இருந்தால் என் பிரச்சனை சரியா போய்டும்" கண்களில் காதல் வழிந்தோட கூறினான்.
அவன் முரட்டு கைகளிலிருந்து.. தன் மென்மையான கைகளை பகீரத பிரயத்தனப் பட்டு பிரித்துக் கொண்டவள்.
"பத்து பேரை அடிச்சு போடற அளவுக்கு உடம்ப வளர்த்து வச்சுருக்கவனுக்கு என்ன பிரச்னை இருக்க போகுதுன்னு நினைச்சேன், அது சரி தான்" என்றவள்,
"கண்டதை எல்லாம் பேசி என் நேரத்தை வீணடிக்காமல் கிளம்புங்க, அடுத்த பேசன்டை நான் பார்க்கணும்" என்றாள் நிலானி.
"என் பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் நான் எப்படி போறது டாக்டர் மேடம்..? என்றான், ராஜராஜன்.. கோபெருந்தேவியின் அன்பு தமையன்.
"என்கிட்ட அதுக்கான ட்ரீட்மென்ட் இல்லை, நீங்க வெளில போகலாம்" முகத்தில் அடித்தார் போல் கூறினாள்.
தன் இடத்திலிருந்து எழுந்து, அவள் இருக்கையில் இரு புறமும் கை வைத்து அவள் முகம் நோக்கி குனிய.. "ஏய் என்ன பண்ற தள்ளி போ!" என்றவள் தன் உடல் மேல் அவன் ஸ்பரிசம் தீண்டாதவாறு குறுக்கி அமர்ந்தவள்,
"எனக்கான மருந்து நீ தான்.. ! என் நோய்க்கான ட்ரீட்மென்டை நீ கொடுக்கிறேன்னு சொல்ற வரைக்கும் நான் இங்க வருவேன். இப்போ சின்ன ட்ரீட்மென்டை நானே எடுத்துட்டு போறேன்" என அவள் இதழ்களில் தன் இதழ்களை பட்டும் படாமல் பதித்தவனை வேகமாக தள்ளிவிட்டு எழுந்தவள், அவன் கன்னத்தில் தன் பிஞ்சு விரல்களை பதித்திருந்தாள்.
அவள் அடித்த தன் கன்னத்தில் கை வைத்தவன்.. உதட்டை வளைத்து "போர்ஸ் பத்தல.. குழந்தை தடவிக் கொடுத்தது மாதிரி சுகமா இருந்துச்சு, எப்படி அடிச்சா வலிக்கும்னு நான் கத்துத் தரேன்" என்றவன் அவள் அறையிலிருந்து வெளியே செல்லும் வரை இருந்த சிரிப்பு மறைந்து எப்போதும் போல் கடுமையாக மாறியது.
"சர்ஜிக்கல் நைஃப்பில் ஒரு கோடு போட்டிருந்தா.. தெரிந்திருக்கும், சுகமா இருந்துச்சா இல்லையான்னு,அரசியல்வாதில்ல அதான் சுரணை கெட்டவனா இருக்கான்" கோபத்தில் பொரிந்துக் கொண்டிருந்தாள்.
அன்புடன்
வியனி
"ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவோடு
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ ஆ ஆ ஆ"
தன் மனம் கவர்ந்த கார்மேக வண்ணன், புல்லாங்குழலில் இசை மீட்டி மறைந்திருந்து மாயம் செய்யும் மாயவனை காதல் மனதுடன் தவித்து அழைக்கும் பாடலுக்கு, விரல்கள் அபிநயம் பிடிக்க, முகத்தில் நவரசம் வழிந்தோட.. உணர்ச்சி பொதிந்த நேத்திரங்கள் தன் நந்த கோபனை தேடி அங்குமிங்கும் அலைபாய.. காற்றில் ஆடும் கொடி போல்.. வளைந்து நெளிந்து உடல் சாகசம் செய்ய.. காண்போர் அனைவரையும் தன் பரதத்தால் கட்டி போட்டிருந்தாள் நிலானி ரவிச்சந்திரன்.
"கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ "
என்ற வரிகளுக்கு தன்னை தான் அழைக்கிறாளோ என்ற எண்ணம் மேலோங்க.. தாடி அடர்ந்த முகத்தில் யாருக்கும் தெரியாமல் அதரங்கள் மெல்லிதாக வளைய.. 'நான் இங்குதான் உன் முன்னால் அமர்ந்து இருக்கிறேன், அதை கவனிக்காமல் எங்கோ தேடிக் கொண்டிருக்கிறாயே..' எழுந்து சென்று கட்டி அணைத்து சொல்லிவிடலாமா..? என்று நினைத்தவனின் எண்ணத்தை பக்கத்தில் அமர்ந்திருந்தவள் அறிந்துகொண்டது போல்.. அவனையும், நடனமாடும் அவளையும் ஒரு நிமிடம் கவனித்துவிட்டு புன்னகைத்துக் கொண்டாள்.
************************************************
"இங்க பாருங்க மா.. உங்களை மாதிரி நாங்களும் அரசியல் குடும்பம் தான் இல்லைன்னு சொல்லல.. அது எங்க அப்பாவோட முடிஞ்சு போச்சு.
எனக்கு இந்த அடிதடி அரசியல் எல்லாம் வேண்டாமென்று தான் மருத்துவம் படிச்சு மருத்துவராகி என்னால் முடிஞ்ச அளவுக்கு நான், என் மனைவி, மகள் எல்லாம் சேவை பண்ணிக்கிட்டு இருக்கோம்.அது மட்டுமில்லாமல் உங்க தம்பி உங்களுக்கு ஒரு அடியாளு மாதிரி, நீங்க கண்ண காமிச்சா என்ன வேணும்னாலும் பண்ணுவார்னு ஊரறிந்த விஷயம், ஏன் நானே ஒரு தடவை ஒருத்தனை ஓட ஓட அடிச்சு துரத்திகிட்டு போனதே என் கண்ணால் பார்த்தேன்.
அப்படி பட்டவருக்கு என் பொண்ணை நான் கட்டி கொடுக்க விருப்பப்படலை, தயவு செய்து வெளில போய்டுங்க என்றார்" நிலானியின் தந்தை ரவிச்சந்திரன்.
"இங்க பாருங்க அய்யா..! எல்லா மனுஷங்களும் தப்பு செய்றவங்க தான்.. அதில் நல்லவன் கெட்டவன்னு தீர்மானிக்கிறது.. அவன் செய்யிற தப்போட அளவு தான், அதே மாதிரி தான் அரசியல் வாதியான நாங்கலும் உங்களை விட கொஞ்சம் அதிகத் தப்பு பண்றோம். கெட்ட விசயத்துக்காக மட்டும் நாங்க தப்பு பண்றது இல்லை, சில நல்ல விசயங்களை செய்யவும் தப்பு பண்ண வேண்டியது இருக்கு" என்று கோப்பெருந்தேவி கூற..
"நீங்க எதுக்கோ பண்ணுங்கம்மா.. அந்த விளக்கம் எல்லாம் எனக்குத் தேவை இல்லை.என் பொண்ணை உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு விருப்பம் இல்லை.இப்போ நீங்க இடத்தை காலி பண்ணுங்க, நான் ஹாஸ்பிடல் போகனும்" என்றார்
அவர் கூறியதற்கு இதழ் பிரியாது மென்மையாக புன்னகைத்தவள், "அப்படி எல்லாம் நீங்க சொல்ல கூடாது. நல்லா யோசிச்சு ஒரு முடிவை சொல்லுங்க, உங்க பதிலுக்காகக் காத்துகிட்டு இருக்கேன், இது என் தம்பி வாழ்க்கை."
"முதலில் நீங்க உங்க புருசனோட வாழ வழிய பாருங்க.. அப்புறம், உங்க தம்பி வாழ்க்கையை பத்தி யோசிக்கலாம்" நக்கலாகச் சொல்ல..
அவரை திரும்பி உறுத்து விழித்தவள்.. எதுவும் கூறாமல் அங்கிருந்து அகன்றாள்.
************************************************
நோயாளி தான் உள்ளே வந்திருக்கிறார் என்று நிமிர்ந்து பார்த்தவள், அங்கு வந்தவனை கண்டு அதிர்ந்து, பின் தன்னை சமாளித்துக் கொண்டவள்"உங்களுக்குச் சாதாரண பிரச்சனை என்றால் ஜெனரல் டாக்டரை பாருங்க.. நான் கார்டியாலோஜிஸ்ட்" என்றாள் மாற்றி இங்க வந்துவிட்டானோ என்ற ஐயத்தில்..
அவள் சொன்னதை காதில் வாங்காமல்.. நோயாளி அமரும் இருக்கையில் அமர்ந்தான்.
'ஏதோ பிரச்சனை போல் அதனால் தான் வந்திருக்கிறான்' என நினைத்து..
"சொல்லுங்க என்ன பண்ணுது..?"என்றாள்.
பதில் பேசாமல் காற்றில் சுழன்று, சுழன்று ஆடிக் கொண்டிருந்த அவள் சுருள் குழலை அவன் பார்த்துக் கொண்டிருக்க..
"ப்ச்.. உங்களுக்கு அடுத்து நிறைய பேரு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. நீங்க என்ன பண்ணுதுன்னு சொன்னால் தானே.. நான் உங்களை செக் பண்ண முடியும்" என்றாள்.
காணாததைக் கண்டது போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. "நெஞ்சில் கை வைத்து இங்க பிரச்னை"என்றான்.
அவனை சந்தேகமாகப் பார்த்துவிட்டு அவன் நெஞ்சில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து செக் செய்தவள்.. "ஹார்ட் பீட் எல்லாம் நார்மலா இருக்கு, எதுக்கும் ஒரு ஈசிஜி(ECG) எடுத்து பார்த்துடலாம்,சில சமயம் வாயு தொல்லையால் கூட வலி வந்துருக்கலாம், வேறு பிரச்னை இருக்க வாய்ப்பில்லை" என நகர போனவளின் கையை பற்றி தன் நெஞ்சில் வைத்து பொத்திக் கொண்டவன்,
"இங்க இருந்துட்டு என்னை தூங்க விடாமல் நீ தான் பிரச்னை பண்ணிட்டு இருக்கே,நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் பக்கத்திலையே இருந்தால் என் பிரச்சனை சரியா போய்டும்" கண்களில் காதல் வழிந்தோட கூறினான்.
அவன் முரட்டு கைகளிலிருந்து.. தன் மென்மையான கைகளை பகீரத பிரயத்தனப் பட்டு பிரித்துக் கொண்டவள்.
"பத்து பேரை அடிச்சு போடற அளவுக்கு உடம்ப வளர்த்து வச்சுருக்கவனுக்கு என்ன பிரச்னை இருக்க போகுதுன்னு நினைச்சேன், அது சரி தான்" என்றவள்,
"கண்டதை எல்லாம் பேசி என் நேரத்தை வீணடிக்காமல் கிளம்புங்க, அடுத்த பேசன்டை நான் பார்க்கணும்" என்றாள் நிலானி.
"என் பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் நான் எப்படி போறது டாக்டர் மேடம்..? என்றான், ராஜராஜன்.. கோபெருந்தேவியின் அன்பு தமையன்.
"என்கிட்ட அதுக்கான ட்ரீட்மென்ட் இல்லை, நீங்க வெளில போகலாம்" முகத்தில் அடித்தார் போல் கூறினாள்.
தன் இடத்திலிருந்து எழுந்து, அவள் இருக்கையில் இரு புறமும் கை வைத்து அவள் முகம் நோக்கி குனிய.. "ஏய் என்ன பண்ற தள்ளி போ!" என்றவள் தன் உடல் மேல் அவன் ஸ்பரிசம் தீண்டாதவாறு குறுக்கி அமர்ந்தவள்,
"எனக்கான மருந்து நீ தான்.. ! என் நோய்க்கான ட்ரீட்மென்டை நீ கொடுக்கிறேன்னு சொல்ற வரைக்கும் நான் இங்க வருவேன். இப்போ சின்ன ட்ரீட்மென்டை நானே எடுத்துட்டு போறேன்" என அவள் இதழ்களில் தன் இதழ்களை பட்டும் படாமல் பதித்தவனை வேகமாக தள்ளிவிட்டு எழுந்தவள், அவன் கன்னத்தில் தன் பிஞ்சு விரல்களை பதித்திருந்தாள்.
அவள் அடித்த தன் கன்னத்தில் கை வைத்தவன்.. உதட்டை வளைத்து "போர்ஸ் பத்தல.. குழந்தை தடவிக் கொடுத்தது மாதிரி சுகமா இருந்துச்சு, எப்படி அடிச்சா வலிக்கும்னு நான் கத்துத் தரேன்" என்றவன் அவள் அறையிலிருந்து வெளியே செல்லும் வரை இருந்த சிரிப்பு மறைந்து எப்போதும் போல் கடுமையாக மாறியது.
"சர்ஜிக்கல் நைஃப்பில் ஒரு கோடு போட்டிருந்தா.. தெரிந்திருக்கும், சுகமா இருந்துச்சா இல்லையான்னு,அரசியல்வாதில்ல அதான் சுரணை கெட்டவனா இருக்கான்" கோபத்தில் பொரிந்துக் கொண்டிருந்தாள்.
அன்புடன்
வியனி