ஹாய் ஃபிரண்ட்ஸ் ஒரு புது கதையின் முன்னோட்டதோடு வந்துருக்கேன்.. படித்துவிட்டு உங்களது கருத்தைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.. யாரும் பொங்கிடாதீங்க..
முன்னோட்டம்..
அவள் அந்த தோப்பு வீட்டிற்குள் உள்ளே நுழைந்ததும்.. அவ்வீட்டின் கதவு இழுத்து பூட்டப் பட்டது.. அது அறியாதவள் தயங்கி தயங்கி கையில் வைத்திருந்த பையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு அவளுக்கு முதுகு காட்டி பின்னால் கையை கட்டிக் கொண்டு நின்றவன் அருகில் மெதுவாகச் சென்றாள்.
"சார்" என்று உள்ளே போனக் குரலில் அழைத்தாள்.
அவள் அழைப்பில் உடல் விறைக்க, செவி சாய்க்காமல் அப்படியே நின்றான்.
தான் கொண்டுவந்த பையில் இருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து.. தலையை கீழே குனிந்துக் கொண்டு..
"சார்!! நேக்கு கல்யாணம்.. இந்த பத்திரிக்கையை வாங்கிக்கோங்கோ.." என்றாள்
அவள் 'எனக்கு கல்யாணம்'என்ற வார்த்தையில் வேகமாக திரும்பியவன்.. கண்கள் இரண்டும் சிவக்க.. வெடித்து சிதறும் எரிமலையாய் கனன்று கொண்டிருந்த உள்ளத்தை கடிவாளமிட்டு அடக்கியவன், அவளை பார்த்தபடியே கைகளை கட்டிக் கொண்டு அமைதியாய் நின்றான்.
இதற்க்கு மேல் இங்கு நின்றாள் தன்னையும் அறியாமல் தன் மனதை வெளிபடுத்தி விடுவோமோ என்ற பயத்தில்.. அருகில் இருந்த சிறு மேஜையில் அழைப்பிதழை வைத்தவள்.. கண்கள் இரண்டிலும் கண்ணீர் குளம் கட்டி வெளியேற தயாராக இருக்க.. அதை அவன் பாரா வண்ணம் உள்ளிழுத்துக் கொண்டவள்..
"நான் புறப்படுறேன் சார் பஸ்சுக்கு நாழியாயிடுத்து" என்று சொல்லிவிட்டு கதவருகே சென்று கதவை திறக்க.. அது வெளிபுறமாக பூட்டி இருந்தது.
மனதில் பயம் கவ்வ ஆரம்பிக்க.. "சார்" என சொல்லிக்கொண்டே திரும்பியவளை கதவோடு கதவாக அவள் மேல் மூச்சு காற்று படும் அளவிற்கு நெருங்கி நின்று இரு பக்கமும் கைகளை வைத்து ஆக்ரோஷமாக சிறை செய்தவனைக் கண்டதும் எச்சிலைக் கூட்டி விழுங்கியவள்..
"ஆத்துல எல்லாரும் காத்துண்டு இருப்பா.. நான் போகனும்"என்றாள்.
"நான் போக வேண்டாம்னு சொல்லலையே.."எனக் கூறிக் கொண்டே.. தனது மீசையை ஒற்றைக் கையால் நீவிவியவன், அடுத்த வினாடியே அவள் பிடரி முடியை கொத்தாகப் பற்றி.. அவன் முகம் அருகே அவள் முகத்தைக் கொண்டு வந்து "போகலாம்.. என்னை சந்தோஷப்படுத்திட்டு போகலாம்" என வெறி கொண்டவன் போல் கத்தியவன் அவள் அதரங்களைச் சிறை செய்தான்.
அவனின் திடீர் தாக்குதலில் கண்கள் இரண்டும் அன்று மலர்ந்த மௌவல் மலர் போல் அதிர்ச்சியில் விரிய, அவனை தன்னிடம் இருந்து பிரித்து எடுக்க தன் கரம் கொண்டு அவன் நெஞ்சு பகுதியில் குத்த.. அதை எல்லாம் முறியடித்து அவள் இதழ் தேனை பருகி விடுவித்து, அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க.. கண்களில் இருந்து நீர் துளிகள் உருண்டோடியது.
'அவ்வளவு கஷ்டமா இருக்கா..!! எனக்கும் இப்படி தானடி இருக்கும்.. இதோ இந்த கண்ணாளையே காதல் பாஷை பேசி என்னை ஏமாத்துனல அதுக்கெல்லாம் நீ அனுபவிக்கனும் டி'என மனதில் வன்மமாக நினைத்தான்.
அவளை புல்லு கட்டு போல் தோளில் தூக்கி போட்டுக் கொண்டு படுக்கையறைக்குச் செல்ல.. அவன் நோக்கத்தை உணர்ந்துக்கொண்டவள் தன்னை காப்பற்றிக் கொள்ள.. அவன் முதுகு பகுதியில் தன் கைகளை ஆயுதமாக்கி அடிக்க ஆரம்பித்தவள்..
"சார் ப்ளீஸ்!! இப்படி ஒரு துர்காரியத்தை செஞ்சு உங்களை நீங்களே தாழ்த்திக்காதேள்" என்று அழ.. முழு அரக்கனாக மாறியிருந்த அவன் காதில் அதெல்லாம் விழுந்தால் தானே.. !!
அவளை மஞ்சத்தி தொப்பென்று போட்டவன்.. நொடியும் தாமதிக்காது அவள் மேல் படர்ந்து அவள் முகம் அருகே தன் முகத்தை கொண்டு செல்ல.. அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
'ஓ.. பணக்காரன் கிடைச்சதும் என் முகம் பார்க்க கூட உனக்கு வெறுப்பா இருக்குல்ல' என எண்ணியவன் அவள் தாடையை அழுந்தப் பற்றித் திரும்பி..
"என்னை ஏமாத்துனதுக்கு உனக்கு இந்த தண்டனை தேவை தாண்டி" என்று உறுமியவன்.. அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பிக்க.. கைகள் அவள் மேனியில் கோலம் போட ஆரம்பித்தது.
"சார்.. தப்பு பண்ணாதீங்கோ.. என்னை விட்ருங்கோ!!"என்று கெஞ்ச.. அவள் கெஞ்சல் கூட அவள் மேல் கட்டுக்கடங்காத கோபத்தை விளைவித்தது.
அவள் கதற கதற.. அனிச்சம் மலர் போன்ற மனமும், தேகமும் கொண்ட பெண்ணவளை வெகு நாள் பசித்திருந்த சிங்கமாய் கசக்கி புசித்து திருப்தி கண்டவன் இதழ்களும், கண்களும் குரூர சிரிப்பை உதிர்த்தது.வெகு நேரம் இரக்கமே இல்லாமல் அவளை வதைத்து விட்டு பிரிந்தவன், அவள் மேல் சேலையை எடுத்து வீசினான்.
"இப்போ போய் அவனை தாராளமாக கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்துடி. அவன் ஒவ்வொரு தடவையும் உன்னை தொடும்போது என் ஞாபகம் தாண்டி உனக்கு வரணும்.. என்னை காதலிச்சு ஏமாத்துன பாவத்துக்கு உனக்கு இதாண்டி தண்டனை!!"என கூறியவன் கதவை அடித்து சாத்திவிட்டு வெளியேறினான்
அவன் பேச பேச முகத்தில் எந்த வித உணர்ச்சியும் ப்ரதிபலிக்காமல் ஜடம் போல் கிடந்தவள்.. எழ முடியாமல் எழுந்து தனது ஆடையை சரி படுத்திக் கொண்டு வெளியே சென்றாள்.