All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

💖உன்னுள் தொலைந்தேனே 💖-கதை திரி

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖 உன்னுள் தொலைந்தேனே💖

அத்தியாயம் 8
சத்யன் பிரசாத் அரவிந்த் மூவரும் திருவிழாவிற்கு சென்றனர். போகும் வழியில் சத்தியன் பிரசாத்திடம், ஜல்லிக்கட்டில் நடந்ததைப் பற்றி சொன்னான். பிரசாதிற்கும் பாண்டியின் மீது பயங்கர கோபம் வந்தது உடனே சத்யனிடம், ‘அவனை சும்மாவா விட்ட” என்று கோபப்பட்டான். “எல்லாருக்கும் அவன்மேல் கொலைவெறியே இருக்கு என்ன பண்றது இப்ப திருவிழா சமயம்னு பொறுமையா இருக்கிறோம். என்னைக்காவது மாட்டாமலா போவான் அன்னைக்கு இருக்கு அவனுக்கு” என்று கூறினான் சத்யன். அப்போது ஓரிடத்தில் கும்பலாக என்னவென்று போய் பார்த்த மூவரும் அங்கே பாண்டியை ஆடி வெளுத்துக் கொண்டிருந்தனர்.

உடனே பிரசாத் பக்கத்தில் இருந்தவரிடம்," என்னாச்சு ஏன் அவனை போட்டு அடிக்கிறீங்க" என்று கேட்டான்.

அதற்கு அவரோ , "நாங்க திருவிழாவுக்காக கடை போடுவதற்கு வெளியூரிலிருந்து வந்திருக்கோம் தம்பி .இந்தப் பையன் நைட் குடிச்சிட்டு வந்து அந்த பொண்ணு கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணி இருக்கான் அது மட்டுமில்லாம இப்ப காலைல வந்துட்டு அதே பொண்ணு கிட்ட தப்பு தப்பா பேசுறான் அப்பதான் தெரிஞ்சது இவன் தான் நைட்டு வந்தான்னு நைட் நாங்க புடிக்கிறதுக்குள்ள ஓடிட்டாங்க இவனும் இவன் கூட்டாளிகளும் நாங்களும் வந்த இடத்தில பிரச்சனை வேண்டாம் அப்படின்னு அமைதியா இருந்துட்டோம் ஆனா திரும்பிவந்து இந்த பொண்ணு கிட்ட தேவையில்லாத வார்த்தைகள் எல்லாம் பேசறான்" என்று அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை காண்பித்து கூறினார்.

அதற்குள் கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவரும் "பிழைக்க வந்த இடத்தில் எங்க ஊரு பையன் மேலே கையை வைக்கிறீங்களா உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது அதுவும் எங்க பண்ணையார் பையன் மேலேயே கை வைக்கிறீர்களா" என்று சத்தம் போட்டார்.

உடனே சத்யனும் "நம்ம ஊரை நம்பி பிழைக்க வந்து இருக்காங்க அவங்க கிட்ட போய் தப்பா நடந்துக்க பார்த்திருக்கான், அவன சொல்லாம இவனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் நம்மள நம்பி நம்ம ஊருக்கு கடை போட வந்தவர்களை நாமதான் பார்த்துக்கணும் இப்படி இருந்தா நாளப் பின்ன அவங்க வேற ஊர்ல போய் கடை போடும் போது சொல்ல மாட்டாங்களா அந்த ஊர் திருவிழாக்கு கடை போட போன எங்க பொண்ணு கிட்ட அந்த பண்ணையார் மகன் தப்பா நடந்துக்க பார்த்தான்னு, சொன்னா யாருக்கு அசிங்கம் நம்ம ஊருக்கு தானே. இதுக்கு மேல யாராவது பேசினீங்க நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்" என்று விட்டு அந்த கடைக்காரரிடமும் அந்தப் பெண்ணிடமும் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மூவரும் சென்றனர்.


இதையெல்லாம் பார்த்த பாண்டி சத்யன் மீதும் அரவிந்த் மீதும் கொலைவெறியே இருந்தது ஆனாலும் வேகமாக அந்த இடத்தை விட்டு , விட்டால் போதும் என்று ஓடி விட்டான். அவன் சென்ற திசையை பார்த்த மூவரும் அவன் பின்னே சென்றனர் . அவன் பார்க்கா வண்ணம் தனியாக ஒரு இடத்தில் அவன் மேல் துணியை போட்டு அடித்து விட்டனர் . உடனே பாண்டியோ" யாருடா அது துணியால மூஞ்ச மூடிட்டு அடிக்கிறது தைரியமான ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வந்து அடிங்கடா " என்று கூறினான். ஆனாலும் இவர்கள் ஒன்றும் கூறாமல் "எங்க வீட்டு பொண்ணு மேல கை வைக்கிறியா" என்று மட்டும் சொல்லி அடித்துவிட்டு துணியை நல்லா போர்த்தி விட்டு சென்றனர்.

இவனோ அந்த கடைக்காரர்களுள் யாரும் அடிக்கிறார்கள் என்று அந்த இடத்தை விட்டு , விட்டால் போதும் என்று ஓடி விட்டான் .

கொஞ்ச தூரம் வந்ததும் அரவிந்த் "ஏண்டா துணியை மூடி அடிச்சிங்க துணி எடுத்துட்டு வெழுத்துருக்கனும்" என்று சொன்னான்.

இல்லடா மச்சான்" இப்ப நம்ம அடிச்சோம்னு தெரிஞ்சா ஊர் பிரச்சனையா கிளப்பி விட்டுட்டுவான். ஆனால் இப்போ வெளியே சொல்ல வெட்கப்பட்டு அமைதியா இருப்பான்".

இதெல்லாம் அவனுக்கு பத்தாது . இன்னும் ஏதாவது வேணும் என்றும் கோபம் கொண்டான் சத்யன்.

அவனை அடித்து விட்டு மூவரும் கடைவீதிக்கு சென்றனர் . கடைவீதியில் நுழையும்போதே ஒரு கண்ணாடி வளையல் கடையை பார்த்ததும் பிரசாத்திற்கு கண்ணாடி வளையல் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தது. உடனே "நீங்க போய்க்கிட்டே இருங்க நான் வரேன் டா" என்றான்.

உடனே அரவிந்தோ , "என்னடா தங்கச்சிக்கு வளையல் வாங்க போறியா நீ நடத்து நடத்து" என்று என்றுவிட்டு அரவிந்த் நிற்கவும்,

உடனே சத்யனும் "நானும் அவன்கூட போயிட்டு வரேன் டா" என்றான்.

உடனே அரவிந்த் "டேய் நீயுமாடா". என்றான்." கடைசில என்னை தனியா விட்டுட்டீங்களே. சரி வாங்க மூணு பேருமே போலாம் நீங்க உங்க ஆளுக்கு எடுங்க நான் நின்னு வேடிக்கை பாத்துட்டு இருக்கேன் டா" என்றான்.

"நீயும் பிரியாவுக்கு எடுக்க வேண்டியதுதானே" என்று சொல்லி பிரசாத் அரவிந்தை கிண்டல் செய்தான் . உடனே அரவிந்த் பிரசாத்தை ஒரு பார்வை பார்க்கவும் அமைதியாகி விட்டான் . ஆனாலும் அரவிந்த்திற்கு ஒரு உதா கலர் கண்ணாடி வளையலை பார்த்ததும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே அந்த புடவையின் நியாபகமும் வந்தது. 'அந்த புடவைக்கு நல்லா இருக்குமே என்று அந்த வளையலை மட்டும்' எடுத்துக்கொண்டான்.


உடனே இருவரும் கேலி பார்வை பார்த்தனர் அவனை. "டேய் நான் இதை உன் தங்கச்சிக்கு வாங்கல என் தங்கச்சிக்கு வாங்குறேன்" என்றான் .


இப்படியே அன்றைய பொழுது கழிந்தது திருவிழாவும் நல்லபடியாக முடிந்தது மறுநாள் பங்காளி விருந்துக்கு அனைவரும் தயாராகினர்.

இந்தமுறை பங்காளி விருந்திற்கு ராஜவேலு தங்கதுரை குடும்பத்தையும் கிருஷ்ணவேணி குடும்பத்தையும் நீலவேணி ராஜேந்திர குடும்பத்தையும் தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தார்.

காலையிலேயே ஆண்கள் அனைவரும் நடப்பது பறப்பது ஊர்வது தவழ்வது எல்லாத்தையும் வாங்கி வந்திருந்தனர். நீலவேணி கிருஷ்ணவேணி தமயந்தி மற்றும் அவர்கள் பிள்ளைகள் அனைவரும் சமையலில் ஈடுபட்டிருந்தனர்.

ஆண்கள் அனைவரும் ஒரு புறம் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது ராஜேந்திரனிடம் ராஜவேலு சத்யன் மட்டும் பிரியாவின் கல்யாணத்தை பற்றி கூறினார் . உடனே ராஜேந்திரனும் ஊரிலிருந்து வந்ததும் மச்சான் சொன்னாங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி. அரவிந்தும் நல்ல பையன் தான் என் கண்ணு பார்க்க வளர்ந்தவன் எந்த ஒரு தப்பான செயலுக்கும் போகமாட்டான் ரொம்ப அமைதியான பையன் ஆனா என்ன கொஞ்சம் கோபம் மட்டும் வரும் . அதற்கு ராஜவேலுவும் அவன் கோபத்தை ஜல்லிக்கட்டில் பார்த்தேன் என்றார் . தங்கதுரை அமைதியாக இதை கேட்டுக்கொண்டிருந்தார் .

அங்கே உள்ளே கிருஷ்ணவேணி தமயந்தியிடம் பேசவில்லை என்றாலும் முகம் திருப்பாமல் வேலை செய்தார் . அவருக்கு தன் மகள் வாழ்க்கை நல்ல படியாக அமைந்த திருப்தி. ஆனாலும் தமயந்தி மீது சிறு நெருப்பு எரிந்து கொண்டிருந்தது அந்த வெறுப்பு மகாவின் மீதும் இருந்தது என் அண்ணன் பையனுக்கு இவள் மனைவியாக போறாலா என்ற ஆதங்கம் இருந்தது.

அப்போது நீலவேணி லட்சுமியிடம் அண்ணே உங்களுக்கு விஷயம் தெரியுமா நந்தினிக்கும் பிரசாத்துக்கும் திருமணம் பற்றி பேசியிருக்கும் என்றார்.

இதைக் கேட்டதும் தமயந்திக்கு ஒரே மகிழ்ச்சி . என்னக்கா சொல்றீங்க நந்தினி நம்ம ஊருக்கு மருமகளா வரப்போறாளா என்று சந்தோஷப்பட்டார். உடனே மகாவும் பிரியாவும் நந்தினியை பார்த்தனர் . நந்தினியோ வெட்கப்பட்டு தலை குனிந்து கொண்டாள். ஆனால் இந்த பேச்சு கிருஷ்ணவேணிக்கு பிடிக்கவில்லை என்பது அவரின் முகத்தை வைத்தே கண்டு கொண்டார் லட்சுமி.

லட்சுமியும் நந்தினிக்கு இந்த திருமணத்தில் சம்பதமா என்று அவளைப் பார்த்தார் அவளின் வெட்கமே சொன்னது சம்மதம் என்று.


பின்பு ஒருவழியாக சமையல் வேலை முடித்து அனைவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டுவிட்டு அனைவரும் குட்டி தூக்கம் போட்டு விட்டு , மாலை லட்சுமியும் தமயந்தியும் அனைவருக்கும் காப்பி போட்டுக் கொண்டிருந்தனர் .

அப்போது லக்ஷ்மி தமயந்தியிடம் "வேணிய பத்திதான் உனக்கு தெரியும் இல்ல அண்ணி , அவங்க குணமே அதுதான்".

உடனே தமயந்தியோ, " நான் ஏதும் தப்பா எடுத்துக்கால அவுங்க பொண்ன சத்யனுக்கு கொடுக்க விருப்பப்பட்டாங்க".

உடனே லக்ஷ்மியோ ," சத்யனை விட பிரசாத்தும் நந்தினிக்கும் பொருத்தமாக இருப்பாங்க இதை வேணி உணர்ந்து எல்லாத்தையும் மறக்கனும்னு நினைக்கிறேன்" என்றார் .

"இதெல்லாம் நீ எனக்கு சொல்லனுமா அண்ணி".


மாலை அனைவரும் காபி அருந்தி விட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நந்தினி பிரியா மற்றும் மகா மூவரும் கொல்லை புறத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை பார்க்க வந்த வாண்டுகள் அதாவது பிரியாவின் தோழிகள் அவர்களிடம் வந்து ,"அக்கா அக்கா நாளைக்கு மாங்காய் பறிக்க போலாமா" என்று கேட்டது.

உடனே அவர்களிடம் மகாவும் நந்தினியும் ,"அவ வரமாட்டா அவளை கூப்பிடாதீங்க அவளுக்கு நாளை மறுநாள் கல்யாணம் " என்றனர் .

" கல்யாணம் நடந்தா நீ வரமாட்டியா அக்கா " என்று ப்ரியாவை பார்த்து கேட்டனர் .

அதற்கு பிரியாவோ "அதானே நாளை மறுநாள் தானே கல்யாணம் , நாளைக்கு கல்யாணம் மாதிரி பேசுற , அதெல்லாம் இல்லடா நாளைக்கு போலாம் , நம்ம கந்தசாமியும் மாமா வீட்டு தோட்டத்தில் நிறைய மாங்காய் பார்த்தேன் , நாளைக்கு போய் வேட்டையாடுவோம் சரியா" என்றிள்.

உடனே நந்தினியும் பிரியாவும் "தேவையில்லாத வேலை பார்க்காத ப்ரியா கல்யாணத்தை வைத்துகிட்டு ஒழுங்கு மரியாதையா நாளைக்கு எங்கேயும் போகாத, வீட்டிலேயே இரு". என்றனர் .

உடனே ப்ரியாவும் அவர்களை பார்த்து விட்டு , "சரி சரி நான் எங்கேயும் போகல , டேய் நான் வரலைடா நீங்களே எல்லா மாங்காவையும் பறிச்சு சாப்பிடுங்க" என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.

மகாவும் நந்தினியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர் . இவர்கள் பார்க்காத வண்ணம் அந்த வாண்டுகளை பார்த்து கண்ணடித்தாள் பிரியா அவர்களும் அவள் சொல்வதை புரிந்துகொண்டு ஓடிவிட்டனர்.

இங்க வாசலில் கிருஷ்ணனிடம் ராஜவேலு "மச்சான் நந்தினிக்கும் பிரசாத்துக்கு வர முகூர்த்தத்திலேயே கல்யாணம் வச்சுக்கலாம் .ரொம்ப நாள் தள்ளி போட வேண்டாம். மூணு ஜோடிகளுக்கும் இந்த மாசமே கல்யாணம் நடந்த மாதிரியே இருக்கும்". என்றார் .

உடனே கிருஷ்ணன் ராஜேந்திரனை பார்த்தார் "அவரோ எனக்கு இதுல சம்மதம் தான் மச்சான் ,ஆனா ஊர்ல எல்லாத்தையும் கலந்து ஒரு வார்த்தை பேசிட்டு சொல்றேன், எப்படினாலும் இந்த வருஷம் பிரசாத்தின் கல்யாணத்தை முடிக்கணும் என்றுதான் இருந்தேன். நேரம் கூடி வரும்போது பண்ணிரலாம் . நான் நாளைக்கே எல்லார்ட்டையும் கலந்து பேசிட்டு சொல்றேன் . முதல்ல இவங்க ரெண்டு பேரு கல்யாணமும் முடியட்டும். அடுத்த முகூர்த்தத்திலேயே பிரசாத்துக்கு முடித்துவிடலாம் ". என்று ஒரு வழியாக மூன்று ஜோடிக்கும் திருமணம் பேசி முடித்தனர்.

மறுநாள் மதியம் அனைவரும் திருமண வேலையில் மூழ்கியிருந்த நேரம் பிரியா யாருமறியாமல் கொல்லைப்புறம் வழியாக வந்து மாங்காய் தோட்டத்திற்கு சென்றாள்.

அவளுக்காக காத்திருந்த வாண்டுகளோ இவளைப் பார்த்ததும் துள்ளி குதித்தனர். உடனே "வாங்க வாங்க சீக்கிரம் போய் மாங்க பறிச்சிட்டு சீக்கிரம் போனும் அம்மா பாத்துட்டா அவ்வளவுதான் " என்று சொல்லி மாந்தோப்புகள் பூந்தார்கள்.

அப்போது அங்கே வந்த பாண்டியின் கூட்டாளி பாண்டியை தொலைபேசியில் அழைத்து பிரியாவை பார்த்ததை பற்றி கூறினான். உடனே பாண்டியும் அவளை எப்படியாவது பழி வாங்கணும் என்ற முடிவோடு மாங்கா தோட்டத்திற்கு வந்தான்.

இதை எதுவும் அறியாமல் பிரியா வாண்டுகளுடன் மாங்காய் பறித்து அதில் ஒரு சிறுமி கொண்டுவந்த மிளகாய்த்தூள் உப்பு போட்டு மாங்காய் ரசித்துக் கொண்டிருந்தனர் .

அப்போது அங்கே வந்த பாண்டி பிரியாவை பார்த்து விகாரமாக சிரித்தான் . அவனை பார்த்ததும் பிரியாவிற்கு ஒரு நிமிடம் பயம்வந்தது. சாதாரண நாளாக இருந்தால் கூட பயப்படமாட்டாள். நாளை கல்யாணம் என்ற நிலையில் இன்னைக்கு இவன் கூட பிரச்சனை பண்ணினா தேவையில்லாத பிரச்சனை வருமே என்று தான் பயந்தாள் .

பாண்டியோ," என்னடி ரொம்பதான் பண்ற. அன்னைக்கு என்னவோ ஜல்லிக்கட்டுல அவ உங்க மாட்டை அடக்கி கல்யாணம் பண்ணிக்க போறானா? அவனை நீ கல்யாணம் பண்ணிக்கோ அதுக்கு முன்னாடி____" என்று அசிங்கமாக பேசினான்.

உடனே ப்ரியாவோ ,"நீ எல்லாம் ஆம்பளையாடா தனியா இருக்கிற பொண்டாட்டி உன் வீரத்தை காமிக்கிற இதுதான் உன் ஆம்பளை தனமாக?" என்றாள்.

உடனே," நான் ஆம்பளையா இல்லையானு காமிக்கிறேன் வாடி" என்று அவள் கையை பிடித்தான்.

அப்போது அங்கு வந்த அரவிந்த் உனக்கு வாங்கின அடி பத்தலையா எவ்வளவு வாங்கினாலும் திருந்த மாட்டியா என்று அவனை வெழுத்து வாங்கினான்.

பின், பிரியாவை ஒரு முறை முறைத்தான். உடனே ப்ரியவோ பயந்து கொண்டு அவனுடன் சென்றாள்.

வாண்டுகளுக்கோ தன்னால் பிரியா மாட்டிக் கொண்டதை நினைத்து பயம் கொண்டனர் .

அரவிந்து பிரியாவிடம் ஒன்றும் பேசாமல் அமைதியாக வந்தான் அவனுக்கு பயங்கர கோபம் ,'நாளை கல்யாணத்தை வச்சுக்கிட்டு இவை இன்னைக்கு பண்ணி இருக்க வேலைய பாரு .கடைசில எல்லாரும் சொல்றாங்க நான் இவளை கொடும படுத்துற மாதிரி இவ என்னை படுத்தாமல் இருந்தா போதாதா' என்று வருத்தம் மற்றும் கோபம் இருந்தது . அவன் கோபத்தை அறிந்த பிரியா அமைதியாக வந்தாள்.

அவனின் கோபத்தை புரிந்து கொண்ட பிரியா அவனின் அமைதியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவன் கையை பிடித்தாள் அவனோ அவள் கையை உதரி விட்டு "அவ்வளவு தான் உனக்கு மரியாதை இனிமேயாது பொண்ணா லட்சணமா அடங்கி இரு, இந்த தொல்லைக்கு தான் கல்யாணம் வேணாம்னு சொல்ல நினைச்சேன் நீ எப்ப எந்த பிரச்சனை இழுத்துவிடுவேனு பயமாக இருக்க முடியாது". ச்சீ.

மகா மட்டும் நீங்க நேத்து பேசினத சொல்லாம. இருந்திருந்தா நான் இப்ப இங்கே வந்திருக்கவே மாட்டேன். நீ வர மாட்ட இருந்தாலும் போய் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையில் தான் வந்தேன் ஆனா நீ என் நம்பிக்கைய பொய்யாகிட்ட நான் மட்டும் இப்போ வரலனா உன் நிலைமையை நினைச்சு பாரு ".என்று கோபமாக கூறி சென்று விட்டான்.


அவன் செல்வதையே கண்களில் கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருந்தாள் பிரியா.



மறுநாள் யாருக்கும் காத்திராமல் காத்திருக்காமல் விடிந்தது . காலையிலேயே ராஜவேலு மட்டும் தங்கதுரையின் குடும்பம் கோவிலுக்கு சென்றுவிட்டனர்.

அங்கே தங்கதுரையும் ராஜவேலுவும் கல்யாண வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர் . ராஜேந்திரன் மற்றும் கிருஷ்ணன் வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தனர். கிருஷ்ணவேணி தமயந்தி லட்சுமி மூவரும் மணப்பெண்களை அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்தனர் . பிரியா இன்று மிகவும் அமைதியாக இருந்தாள்.


இங்கு சத்யனும் அரவிந்தன் தயாராகி இருந்தனர். காலையில் இருந்து அரவிந்தின் முகமே சரியில்லை என்பதை புரிந்துகொண்டனர் பிரசாதம் சத்யனும். ஆனால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை .

அரவிந்திற்கு நேற்று நடந்தது நடந்தது ஜீரணிக்கவே முடியவில்லை ' இப்படி விளையாட்டு புத்தியா இருக்காளே இவ எப்படி நாளைக்கு நம்ம குடும்பத்துல ஒத்துப் போவா என்ற பயம் மிகவும் இருந்தது, கடவுளே நீ தான் எல்லாத்துக்கும் நல்லபடியாக ஒரு வழி காட்ட வேண்டும் ' என்று வேண்டுதல் வைக்கவும் மறக்கவில்லை.

இங்கு முகூர்த்தநேரம் வரவும் பொண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்தனர் . சத்யனும் அரவிந்தும் பக்கத்து பக்கத்தில் மணவரை இட்டு அமர்ந்து இருந்தனர். "நேரமாச்சி பொண்ண அழைச்சிட்டு வாங்க " என்று குரல் கொடுத்தார் ஐயர் .

மகாவும் ப்ரியாவும் குனிந்த தலை நிமிராமல் வந்தனர்.

மகாவை பார்த்த சத்யன் அவளின் அழகில் மயங்கினான்.

பிரியாவை பார்த்த அரவிந்த் கோபமாக முறைத்துக் கொண்டிருந்தான் .

சத்யனின் பார்வையில் வெட்கத்தையும் , அரவிந்தின் பார்வையில் கோபத்தையும் பார்த்த இரு பெண்களும் அவரவர் துணையை பார்த்துக்கொண்டு அமைதியாக வந்தனர் .

சத்யன் அருகில் மகாவும் ,அரவிந்த் அருகில் பிரியாவும் , அமர்ந்தனர் .

ஐயர் தாலி எடுத்து கொடுக்க பிரியா அரவிந்த் சத்யன் மகா இருவரின் திருமணமும் இனிதே முடிந்தது .

அரவிந்தின் கோபத்தை பார்த்த பிரியாவிற்கு மனசுக்குள் மிகவும் கஷ்டமாக இருந்தது . அவளுக்கே தெரிந்தது நேற்றைய தவறு அதனால் அமைதியாக இருந்தாள்.


இனி இவர்களின் வாழ்க்கை எப்படி பயணம் செய்யப்போவது என்பதைப் பார்ப்போம்.

தொடரும்...
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖உன்னுள் தொலைந்தேனே 💖

அத்தியாயம் 8 கொடுத்துள்ளேன்..
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.....

சென்ற அத்தியாத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல 🥰🥰🥰

 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖 உன்னுள் தொலைந்தேனே 💖


அத்தியாயம் 9


இரண்டு திருமணமும் நல்லபடியாக முடிந்தது . மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். சத்யனும் மகாவும் ராஜவேலுவின் வீட்டிற்கும் பிரியா மற்றும் அரவிந்த் தங்கதுரை வீட்டிற்கும் அழைத்து வரப்பட்டனர்.

சத்யன் மற்றும் மகா, மகாவிற்கு இந்த வீடு புதிதல்ல இருந்தாலும் முதல் முறையாக தன் கணவர் கைபிடித்து உள்ளே செல்கிறாள், அதுவே ஒரு சந்தோஷ மனநிலையோடு இருந்தாள். சத்யனும் அப்படித்தான். விளக்கேற்றி விட்டு பாலும்-பழமும் கொடுத்தனர்.

ஊர்காரர்கள் ஒவ்வொருவராக வந்து பொண்ணு மாப்பிள்ளையை பார்த்துவிட்டு சென்றனர்.

மகாவை பார்ப்பதற்கு மிகவும் சோர்வாக தெரிந்தாள். லட்சுமியும் அவளைப் பார்த்துவிட்டு மகா நீ உள்ளே போய் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கோ காலையில சீக்கிரமா எந்திரிச்சு அசதியா இருக்கும் என்று நந்தினியிடம் உள்ளே அழைத்துச் செல்லுமாறு சொன்னார்.

நந்தினியும் மகாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். உள்ளே செல்லும்போது "என்னடி நினைச்ச மாதிரி எங்க மாமாவ கல்யாணம் பண்ணிக்கிட்ட சந்தோஷம்தானே" என்றாள். அதற்கு மகா அழகாக வெட்கப்பட்டாள்.

உள்ளே செல்லும் மஹாவை பார்த்து லட்சுமிக்கோ பிரியாவின் ஞாபகம் வந்தது . 'அவள் அங்கே எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை . நேத்துல இருந்து ஒரு மாதிரி வித்தியாசமா தான் இருந்தா. என்னன்னு கேட்டதுக்கு ஒன்னும் சொல்லல . அவளுக்கு எப்பவுமே விளையாட்டுத்தனம் ஜாஸ்தி தமயந்தியை பொறுத்தவரைக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் அரவிந்தின் கோபத்தை பார்க்கும் போது கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. என் பொண்ணோட வாழ்க்கை எப்படி போகும்னு தெரியல .கடவுளே நீ தான் அவளுக்கு துணையாக இருந்து நல்ல புத்தி கொடுக்கணும் '. என்று வேண்டிக் கொண்டு சமையல் அறைக்கு சென்றார்.

இங்கே பிரியாவை ஆரத்தி எடுத்து உள்ளே வந்ததிலிருந்து உம்மென்றிருக்கும் அரவிந்தை பார்த்து கொஞ்சம் பயமாக இருந்தாலும் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள். தமயந்தியின் சொந்தபந்தங்கள் அவளைப்பார்க்க வந்திருந்தனர்.

அப்போது அவளுக்கு சற்று நேரம் முன்பு நடந்தது ஞாபகம் வந்தது அரவிந்தம் பிரியாவும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வரப்பட்டனர். உள்ளே வந்த பிரியாவை விளக்கேற்ற சொல்லி தமயந்தி அழைத்து சென்றால் விளக்கேற்றிவிட்டு சாமி கும்பிடும்போது அரவிந்த் அவள் காதில் , "உன்னோட விளையாட்டுத் தனத்தை எல்லாம் இங்கேயே மூட்டை கட்டி வைச்சிரு. இன்னொரு தடவை நீ அங்க மாங்காய் பறிக்க தேங்காய் பறிக்க போற என்று எங்கேயாவது போனேன்னு தெரிஞ்சா அவ்வளவு தான் . தங்கச்சிக்காக தான் உன்னை பொறுத்துகிட்டு இருப்பேன்". என்றான்.


அவளுக்கே தெரியும் தன்னை அவனுக்கு பிடிக்காது என்று, இருந்தாலும் அவன் வாயால் சொல்லும் போது நெஞ்சில் ஒரு வலி உண்டானது.

அரவிந்தனும் தேவையில்லாமல் வார்த்தை விட்டுட்டோம் என்று வருத்தபட்டான்.

அன்று மாலை ராஜவேலு தங்கதுரையிடம்‌ ,'துரை நாளைக்கு குலதெய்வ கோவிலுக்கு போய் பொங்கல் வச்சிடலாமா" என்றார்.

தங்கதுரையும் , "சரி வேலு அப்படியே பண்ணிடலாம்" என்றார்.

அன்று இரவு இரு தம்பதியர்க்கும் முதலிரவு ஏற்பாடு நடந்தது.

மகாவோ ஒரு வித பதட்டம் மற்றும் குழப்பத்தோடு இருந்தாள்.

இங்கு பிரியாவோ பயத்துடன் இருந்தாள்.

இதே மனநிலையில் இரு பெண்களும் அறைக்குள் சென்றனர்.




முதலிரவு அறைக்குள் குழப்பத்துடன் வந்த மகாவை பார்த்த சத்யன் , "என்னடி பர்ஸ்ட் நைட் ரூம்க்கு எல்லாரும் வெக்க பட்டுட்டே வருவாங்க நீ என்னன்னா குழப்பத்தோட வர" என்றான்.

அதற்கு மாகவோ , "இல்லங்க நேத்து அண்ணன் தோட்டத்து பக்கம் போயிட்டு வந்ததில் இருந்து அது முகமே சரியில்ல என்னனு கேட்டாலும் சொல்லல அதான்‌".

இது சரிவராது விட்டா நீ காலைல வரைக்கும் இப்டியே பேசிட்டு இருப்ப உன்ன......என்று அவளின் கைகளை பிடித்து அவன் புறம் இழுத்தான். அவன் இழுத்ததும் அவன் மேலே விழுந்த அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி நெற்றி கண் கண்ணம் என்று அவனின் அச்சாரத்தை பதித்தான். அவனின் உதடு செய்த மாயாஜாலத்தில் முதலில் குழப்பத்தை மறந்து பின் தன்னையே மறந்து அவனுள் மூழ்கி போனாள்.

இங்கு அரவிந்தின் வீட்டில் பிரியாவோ பயத்துடனே அவனின் அறைக்குள் சென்றாள். அவனோ இன்னும் கோபமாக தான் இருந்தான். உள்ளே சென்ற பிரியாவோ 'இது வேலைக்காகாது நம்ம தான் இதுக்கு ஒரு வழி பன்னனும்' என்று அரவிந்திடம் பால் சொம்பை நீட்டினாள். அவனோ அதை வாங்காமல் அமைதியாக இருந்தான் .


அதை பக்கத்திலிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு அவன் முன்னே வந்து நின்று," இங்க பாருங்க நான் நேத்து பண்ணது தப்புதான் , மன்னிச்சிடுங்க இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன். அதுக்காக இப்படி முகம் திருப்பிட்டு இருக்காதீங்க , பிடிக்குதோ பிடிக்கலையோ நீங்களும் நானும் கணவன் மனைவி. தங்கச்சிக்காக கல்யாணம் பண்ணாலும் நம்ம உறவு மாறப்போவதில்லை. இனிமே உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை நான் செய்ய மாட்டேன் .அதுக்காக ஒரேயடியா மாறிட்டேனு சொல்ல மாட்டேன். கொஞ்சம் கொஞ்சமா என்ன மாத்திக்க முயற்சி பண்றேன். நீங்களும் உங்க லவ்வர நினைச்சுட்டு இருக்க கூடாது . அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் சரியா இனிமேல் நான்தான் உங்க மனசுல இருக்கணும்". என்றாள்.

உடனே அவனும் "எனக்கு லவ்வர் இருக்கா நான் சொன்னேனா ? அன்னைக்கு நீயா கேட்ட, நான் பதில் சொல்றதுக்குள்ள போயிட்ட . அப்படி எல்லாம் யாரும் என் மனசுல இல்ல . தேவையில்லாம போட்டு மண்டைய போட்டு குழப்பிக்காத " என்றான் கோபமாக.

அவன் அப்படி சொன்னதும் பிரியா எப்படி உணர்ந்தால் என்று அவளுக்கே தெரியவில்லை காரணம் அவன் வேறு ஒரு பெண்ணை விரும்பினான் என்று ஒரு சிறு நெருடலாகவே இருந்தது . அந்த சிறு நெறுடலும் இப்போது காணாமல் போய்விட்டது.

இதைக் கேட்டதும் சந்தோஷமாக அவன் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டாள். அவனோ அவளை தீ பார்வை பார்த்தான் .

அதற்கு பிரியாவோ அசராமல் , "இங்க பாருங்க இந்த மாதிரி பார்வை எல்லாம் பார்க்குற வேலை வெச்சுக்காதீங்க. நான் கீழ படுக்க மாட்டேன் நானும் கட்டிலில் தான் படுப்பேன். உங்களுக்கு பிடிக்கலனா நீங்க போய் கீழே படுங்க. இல்லன்னா இங்கயே படுங்க. அது உங்க இஷ்டம் . என்னைக்கு இருந்தாலும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ தான் போறோம் . அதனால ரொம்ப பில்டப் பண்ணாதீங்க". என்று படுத்துக்கொண்டாள்.

என்னடா இவ வந்தா அவ பாட்டுக்கு பேசினா இப்ப எனக்கு என்னனு படுத்து தூங்கிட்டேன் நமக்கு தான் இன்னைக்கு தூக்கம் போச்சு என்று நினைத்தாலும் அவனும் அங்கேயே படுத்துக் கொண்டான்.

ராஜவேலு லஷ்மியிடம் " இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்னோட இரண்டு பிள்ளைகள் கல்யாணத்தையும் நல்லபடியா முடிச்சிட்டேன்." என்றார்.

லஷ்மியோ அவரை பார்த்து நிறைவாக சிரித்தார்.

மறுநாள் காலை காப்பியோடு சத்யனை அறைக்குள் சென்றாள் மகா.

அவளை பார்த்ததும் தூங்குவது போல நடித்தான்.

கணவனின் தூக்கம் கலையாத வண்ணம் மெல்ல அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். உடனே சத்யனோ அவளை கட்டிக்கொண்டான்.

மகாவோ" தூங்கலயா நீங்க நடிச்சீங்களா. ஐயோ விடுங்க இப்போ தான் குளிச்சேன். கோவிலுக்கு போகனும்னு அத்தை கிளம்பி சொன்னாங்க" . என்றாள்.

"அப்டினா எனக்கு ஒரு இங்கிலிஷ் கிஸ் குடு விட்டறேன்" என்றான்.

"அதெல்லாம் முடியாது நீங்க சீக்கிரம் கிளம்பி வாங்க நான் போறேன்‌" என்று அவன் கன்னத்தை கிள்ளினாள்.

அவனோ "ஏய் கிள்ளாதடி வலிக்கிது" என்று அவன் கன்னத்தை தேய்த்தான். இது தான் சமயம் என்று அவன்‌ கன்னத்தில் ஒரு முத்தம் வைத்துவிட்டு சீக்கிரம் கீழ வாங்க என்று ஓடி விட்டாள்.

இவனும் சிரித்து கொண்டே குளிக்க சென்றான்.


இரண்டு குடும்பமும் பொங்கல் வைக்க குலதெய்வ கோவிலுக்கு சென்றனர் . அங்கே சென்றுவிட்டு பொங்கல் வைத்து விட்டு வீட்டிற்கு வந்தனர்.

மறுநாள் நந்தினி மற்றும் பிரசாத்தின் திருமணம் முடிந்த கையோடு தங்கதுரையின் குடும்பம் மதுரைக்கு செல்லலாம் என்று நினைத்திருந்தனர்.


இதை ராஜவேலுவிடம் சொன்னபோது அவருக்கோ தன் மகளைப் பிரிந்து செல்வதை நினைத்து கொஞ்சம் கவலையாக இருந்தது.

அன்றிரவு இதைப்பற்றி லட்சுமியிடம் சொல்லி வேதனைப்பட்டார் . "இதுவரைக்கும் பிரியாவை பிரிஞ்சு இருந்ததே கிடையாது . துரையும் தமயந்தியை மாப்பிள்ளை நல்லா பாத்துப்பாங்க இருந்தாலும் மகளை பிரியறதை நினைச்சாகஷ்டமா இருக்கு". என்றார்.



மறுநாள் நந்தினி பிரசாத்தின் திருமணத்தை கோவிலில் ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரசாத் ஐயர் சொல்லும் மந்திரங்களை சொன்னாலும் தன்னவளின் வரவிற்காக காத்திருந்தான். ஐயர் பெண்னை அழைக்க குனிந்த தலை நிமிராமல் மணமேடைக்கு வந்தாள். மனையில் அமர்ந்ததும் பிரசாத் அவளின் விலாவில் யாரும் பார்க்காதவாறு இடித்தான்.

இவளோ அவனை பார்க்க அவளை பார்த்து கண்னடித்து புருவம் உயர்த்தினான். அதில் நந்தினி வெட்கப்பட்டு தலைகுனிந்தாள்.

ஐயர் தாலியை குடுக்க பிரசாத் அவள் கழுத்தில் கட்டினான்.

நாத்தனார் முடிச்சி போட வந்த பெண்னை போட விடாமல் இவனே மூன்று முடிச்சிட்டு சரிபாதி ஆக்கிக் கொண்டான்.


திருமணம் இனிதே முடிந்தது.

தங்கதுரை யின் குடும்பம் பிரியாவுடன் மதுரைக்கு கிளம்பி கொன்டிருந்தனர்.


அப்போது பிரியாவோ மிகவும் கவலையாக தன் அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக் கொண்டிருந்தாள். பின் சத்யனிடம் சென்று "அண்ணா நான் போயிட்டு வரேன்" என்று கூறவும் சத்யனுக்கு மிகவும் பாரமாக இருந்தது. சிறுவயதிலிருந்து எங்கேயுமே தங்கை சென்றதில்லை. முதல் முறையாக பிரிந்து செல்வதை நினைத்து கவலை கொண்டான். அதேநிலை தான் அரவிந்த் மற்றும் மகாவிற்கும்.

கிளம்பும் முன் தங்கதுரை சத்யனிடம் "மாப்பிள மகாவை இங்க கூட்டிட்டு வரும்போது கல்யாணம் பண்றதா முடிவு இல்லை . இங்கே வந்து திடீர்னு கல்யாணம் முடிஞ்சுருச்சு . அவ கொஞ்சம் பிடிவாதக்காரி தான் பொறுமையா சொன்னா புரிஞ்சுக்குவா. அவளை பத்திரமா பாத்துக்கோங்க " என்றார்.

" அதெல்லாம் நான் பாத்துக்குறேன் மாமா நீங்க கவலைப் படாம போய்ட்டு வாங்க " என்றான்.

இங்கு ராஜவேலு அரவிந்திடம் "மாப்பிள்ளை பிரியா கொஞ்சம் விளையாட்டு புத்தி ஜாஸ்தி ,ஆனால் குடும்ப விஷயத்தில் பொறுப்பா நடந்துக்குவா. சின்ன சின்ன விளையாட்டுத் தனம் பண்ணினாலும் கொஞ்சம் பொறுமையா அவளுக்கு எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவா. என் பொண்ண பத்திரமா பாத்துக்கோங்க". என்றார்

"என்ன மாமா இப்படிலாம் எல்லாம் சொல்றீங்க என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா நான் உங்க பொண்ண நல்லபடியா பார்த்துக்குவேன் நீங்க கவலைப் படாம இருங்க" என்றான் அரவிந்த்.

தங்கதுரையின் குடும்பம் மதுரைக்கு சென்றனர்.

தொடரும்.........
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்


💖உன்னுள் தொலைந்தேனே💖 அத்தியாயம் 9 கொடுத்துள்ளேன்.. சென்ற அத்தியாத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல 🥰🥰🥰

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

யூடியை படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை சொல்லவும்🙈🙈🏃🏃🏃🏃🏃🏃🏃👇👇👇👇👇

 

Attachments

Top