All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

CRVS2797

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் -26)

'சர்வாவுக்கு கோபம் வருமா..?'ங்கறது அபத்தமான கேள்வி. அவனுக்கு கோபம் வந்து உதி வேணா பார்க்காம இருக்கலாம், ஆனா நாங்க முழுசா பார்த்திருக்கோம் தானே.

உண்மையிலேயே யாராவது ஒருத்தர் இந்த வித்யாங்கிற பூனைக்கு மணி கட்டியே ஆகணும். அப்பத்தான் அவளோட கத்தல் அதிகமா இருக்காது. அந்த வேலையை சிறப்பா உதி செய்ய ஆரம்பிச்சிட்டா.. குட் அட்டெம்ப்ட்.

சபாஷ், புருசனும் பொண்டாட்டியும் சரிக்கு சரியா தாரிகாவுக்கு திருப்பிக் கொடுக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.

ஆனா ஒண்ணுப்பா... தாரிகா தன்னையறியாமலே சர் வா & உதிக்கு இடையிலே காதலை
இன்னும் அழுத்தமா உணர வைக்குறா.... இதுக்காகவே
அவளுக்கொரு தாங்க்ஸ்
சொல்லணும் போல ரெண்டு பேரும்..ஹ..ஹ..ஹ...!
😆😆😆
CRVS (or) CRVS 2797
 

CRVS2797

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் -27)

ஆஹா... இந்த சர்வா விட்டா "யாரு வாங்கி தந்த சட்டை, என் பேப்ஸ் வாங்கி தந்த சட்டை'ன்னு பாட்டு பாடவே ஆரம்பிச்சிடுவான் போலவே..?

உண்மை தான்..! குற்றம் குறைகள் இருந்தால் தான் அது குடும்பம். அதை குறைகூறாது
அனுசரித்து, அரவணைத்து
செல்வதே நல்ல குடும்பத்தினருக்கு அழகு..
மிகவும் அழகான வரிகள்.

அடப்பாவி கிராதகா பரணி...! இன்னொருத்தன் பொண்டாட்டியைத் தேடி வந்ததே தப்பு, இதுல சர்வாவோட பொண்டாடியையே தன்னோட வந்துடு சொல்லி கூப்பிடறது அதை விட தப்பு..
இது மட்டும் சர் வா வுக்கு
தெரிஞ்சது இவனை கொன்னுட்டுத்தான் மறுவேலையே பார்ப்பான் போங்க..!

ஏன்ம்மா உதி...! உன் கணவன் காதல் ரசவாதி மட்டும் கிடையாதே...! காதல் பயங்கரவாதி, காதல் தீவிரவாதி, காதல் கிறுக்கன், காதல் வெறியன்னு,
இன்னும் இன்னும் சொல்லி்ட்டே போகலாம்.

இதோ பாருடா..! இந்த காதல் கிறுக்கன், தன்னோடவளையும்
காதல் கிறுக்குப் பிடிக்க வைச்சுட்டான்...! இதுக்குப் பேரு தான், காதலை கொடுத்து, காதலை வாங்கி, காதலில் இணைந்து, காதலில் மூழ்கி, காதலின் கரை சேராமல், காதலில் காணாமல் போய் விடுவது என்பது இது தானோ..???

அப்ப.. தாரிகாவுக்கும் ஆப்பு வைச்சிட்டு தான் வந்திருக்கான்னு சொல்லுங்க.
ஆனா, அவனோட பேப் அப்படி அவனை விடமாட்டாளே, அரங்க ரெண்டு பேருக்கும் பிராயச்சித்தம்ன்னு ஏதாவது
ஒண்ணை செய்ய சொல்லுவாளே...?
அவன் மனைவி சொல்லே மந்திரம்ன்னு இருக்கிறவன் ஆச்சே...! அப்ப அதையும் செய்து தானே ஆகணும். முதலும் அவனே..! முடிவும் அவனே...!
என்று சும்மாவா சொன்னாங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top