All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Lakshmivijay

Well-known member
ரொம்பவே அழுத்தமான எபி ஸ்ரீமா
ராம்குமார் இந்த மனுசன எதுல சேர்க்கனே தெரியல கேடுகெட்ட ஆளா இருக்கான் :mad::mad::mad::mad::mad:
உடல் நிலைய பற்றி அஞ்சலி ஏன் இந்தர்ட சொல்ல மாட்டுக்கா......
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

வரைமுறை இல்லா வாழ்க்கையில்
வரையரை இல்லா தேடலில்
ஈனமாய் போன பிறவிகள் - அதில்
ஆணென்ன பெண்ணென்ன ஜாதிகள்!

பணம் பணம் பணம் என்றும்
மோகம் மோகம் மோகம் என்றும்
ஆசையின் மீறி பேராசையில்
வெறிப் பிடித்த வெறியர்கள்
வாழும் நாட்டில்...
குலமங்கையர் எல்லாம்
படி தாண்டினாலும்
பத்தினியின் அம்சமே!
நல்மன்னவர் எல்லாம்
விதி மீறினாலும்
ராமனின் அவதாரமே!

தன்னைத் தாங்கிய தாயுமானவனை
தாயாய் தாங்கிய தாரமானவளே...!
உயிர் உருகும் போதும்
உன் காதல் மன்னவன்
உயிர் காத்த உத்தமியே...!
உன் பண்பை விடுத்து அன்பைக் கொடுத்தாய்!
உன் உரிமை விடுத்து உயிர்ப்பைக் கொடுத்தாய்!
உன் கனவை விடுத்து காதலைக் கொடுத்தாய்!
உன் மதிப்பை விடுத்து மகளைக் கொடுத்தாய்!
இனி எதை விடுத்து எதைக் கொடுத்தாலும்
உன் உயிர் மடி தேடும் காதல் மன்னவன்
தலை சாய்க்க நீ இருப்பாயா...?
சந்தேகம் வந்ததால்
தூர நின்றாயோ...?
தாயே! தூர நின்றாயோ...?
உன்னில் மட்டும் உயிர்ப்பவன்
உனை அன்றி வெறொன்றில்
உயிர்ப்பான் என்று நினைத்தாயோ...?
உன்னையே அர்பணித்தாலும்
தன்னையே வெறுப்பானே...
தன்னிகர் அற்ற மன்னனவன்
மகளதிகாரம் பாடினாலும்
காதல் தீவிரவாதி அவன் தானே!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Deebha

Well-known member
அஞ்சலியின் health issues அமரிடம் தெரிய படுத்தி இருக்க வேண்டும். அஞ்சலி தெரிவிக்காததால் சிறு பிரச்னை பெரிதாக போகிறதா ? ராஜ்குமார் பத்மினிக்கு செய்த தவறுக்கு எப்பொழுதுதோ உயிரை பறித்து இருக்க வேண்டும்.
 
Top