Rishi24
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 44
"நீ இரு யாழ் நான் இப்போ வந்தட்றேன்"
என்றுவிட்டு அபியை நோக்கி ஓடிய வருணை கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.
அவள் பெயரை சொல்லிவிட்டான்...
இனிமேல் தனக்கு அவனிடம் எந்தப் பேச்சு வார்த்தையுமே இல்லையென்று நினைக்கும் போதே உள்ளுக்குள் அதிகமாய் வலித்தது.
இருந்தும் என்ன செய்ய???
தனக்கு அவன் இல்லை என்ற உண்மையை ஜீரணித்துக் கொள்ளவே அவளுக்கு சற்று நேரம் பிடிக்க இதற்கு மேல் இங்கே இருக்க கூடாது என்று நினைத்தவள் கண்களை துடைத்துக் கொண்டு தானும் வெளியே வந்தாள்.
வராண்டாவில் உள்ள இருக்கையில் அவளை அமர்த்தி வைத்து அவளின் கண்ணங்களை தட்டிக் கொண்டிருந்த வருண் யாழினி வெளியே வருவது கண்டு
"யாழ்....இங்கே வா...இவள பாரு....நா தண்ணி எடுத்துட்டு வந்துட்றேன்" என்றவன் அவளின் பதிலை எதிர்ப்பாராமலேயே சென்று விட கஷ்டப்பட்டு அடக்கியிருந்த கண்ணீர் அபியை பார்த்தவுடன் பீரிட்டுக் கிளம்பியது.
நிலைமை கருதி அவளிடம் விரைந்து கொஞ்ச நேரம் இருந்து கொண்டிருக்கும் போது வருண் வாட்டர் பாட்டிலுடன் வந்தான்.
அவள் முகத்துக்கு தண்ணீரை அடித்து
"அபி...வேக் அப்....என்னாச்சு?"என்று கேட்டுக் கொண்டே அவள் கண்ணத்தை தட்டிக் கொண்டிருக்க மெதுவாக கண்களை திறந்தவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை....
தான் கடைசியாக அன்னையிடம் பேசியது நினைவு வர
"வ...வருண்....அ...அம்மா அம்மா"
"அம்மாவா...அம்மாக்கு என்னாச்சு..... ஏதாவது?"
அவள் முகத்தை மூடி அழ
"அபி....சொன்னால் தானே ஏதாவது பண்ண முடியும்....ப்ளீஸ்"
"அம்மாக்கு.... ஹாஸ்பிடல்....ப்ளீஸ் என்ன விட்டு போய்டாதன்னு சொல்லு வருண்"அவள் சொல்வதிலிருந்து அவனுக்கு ஒன்றுமே புரியாமல் போக சற்று ஓரமாய் நின்றிருந்த யாழினியை பார்க்க அவளோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'இவளுக்கு என்னாச்சு....ஏன் இப்பிடி இருக்கா'என நினைத்தவன் மீண்டும் அபியிடம்
"அபி...ப்ளீஸ் டெல்...."எனவும் வருணிடம் அம்மாவிற்கு சீரியஸாக இருப்பதாக அவள் வீட்டில் வேலை செய்பவர் கால் பண்ணி சொன்னதாக சொல்லிவிட்டு மீண்டும் அழுதாள்.
'ஓ அது கேட்டு தான் மயங்கி விழுந்திருக்கா போல' என யூகித்தவன்
"இப்பிடியே அழுதுகிட்டே இருக்க போறீங்களா அபி.... வாங்க போலாம்" மண்டியிட்டு பேசிக் கொண்டிருந்தவன் எழுந்து அவள் கையை பிடித்து எழுப்ப யாழினி முகத்தை மறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
"யாழ்...நீயும் வா"என்றவன் அபியை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போய் தன் காரில் ஏற்ற விதியை நொந்த படி தானும் சென்று ஏறினாள் யாழினி....
அங்கே...
வீடு முழுக்க கூட்டம் கூடியிருக்க விஷயத்தை சட்டென யூகித்தவன் திரும்பி பின் சீட்டில் யாழினியுடன் அமர்ந்திருந்த அபியை பார்க்க அவளோ கண் மூடி சாய்ந்திருந்தாள்.
கார் நிற்கவும் சுற்று முற்றும் பார்த்தவள் கதறிக் கொண்டே வீட்டுக்குள் ஓட அவளைப் பார்க்கவே பரிதாபமாக போயிற்று வருணுக்கு....
அந்தத் தாய் அவளுக்காகத்தான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்திருப்பார் போலும்...
கையை நீட்டி அவளை அழைக்க அவர் மீதே விழுந்து அழுதவளின் கூந்தலை ஆதரவாக தடவிக் கொடுத்தவரின் கண்கள் வருணை கண்டதும் ஒளி பெற்றன.
அபி ஏற்கனவே ஒரு தடவை இவன் போட்டோவை வைத்துக் கொண்டிருந்ததை அந்தத் தாயுள்ளம் அறிந்து கொண்டுதான் இருந்தது.
அவனையும் கை நீட்டி அழைக்க யாழினியை மீண்டும் திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியாமலே போக அவரருகில் சென்றான்.
அவன் கையையும் தன் மகள் கையையும் இணைத்தவரின் கண்களின் தன் மகளை ஒருவன் கையில் ஒப்படைத்து விட்ட நிம்மதி....
சந்தோஷமாக அவர் கண்களை மூட அபியின் கதறலில் அணைவருக்குமே நீர் துளிர்த்தது.
வருண் இதனை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை... அபி அதை உணரும் நிலையில் இல்லாமல் இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது அவனுக்கு....
அப்போதுதான் மூளையில் மின்னல் வெட்ட சட்டென திரும்பி யாழினியை பார்க்க அங்கே அவள் இல்லை!!!
***
ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்....
"டாமிட்....ஷிட்....." தரையில் ஓங்கி உதைத்து விட்டு டேபில் மேல் இருந்த லேப்டாப்பையும் கீழே போட்டு உடைத்தான் ரிஷி.
"நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது கதிர்.... அவன் எனக்கு வேணும்..... உனக்கு சரியா இருபத்திநாலு மணி நேரம் டைம் தர்றேன்....அதுக்குள்ள அவன் என் கண்ணு முன்னாடி நிக்கணும்....காட் இட்...." என கர்ச்சிக்க
"யெ...யெ...யெஸ் சார்..." நடுங்கிக் கொண்டே சொன்னான் பீ.ஏ கதிரவன்....
"கெட் லாஸ்ட் இடியட்....என் கண்ணு முன்னாடி நிக்காத போ போயி தேடு "என்றவன் டேபிளுக்கே ஓங்கி குத்த அது அவன் கையை அழகாக பதம் பார்த்து விட்டது......
அப்போதும் கோபம் மட்டும் அடங்குவேனா என்றிருக்க அந்த டெபிளையும் கம்பியால் அடித்து நொறுக்கியவன் கண்ணில் கண்ட பொருட்கைளை
எல்லாம் காலால் உதைத்து வீசினான்.
***
ஆரவ்வுடன் மல்லுக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தது சாட்சாத் நம்ம அஷ்வினி அம்மையாரே தானுங்க....
நாங்க அழுதுட்ருப்பான்னுல்ல நெனச்சோம்னு நீங்க சொல்றது என் காதுல கேக்குது நண்பா....பட் உண்மைய சொல்லிடணும்ல....
அவ புருஷன் கால் பண்ணி அப்பிடி பேசினதும் நம்ம ஹீரோயின் செம்ம அழுகை....
அவரு வேற அழாத குழந்தைக்கு பாதிக்கும்னு சொன்னாருல்ல.....அத நெனச்சி....நெனச்சி.....
ஐயோ ரைட்டருக்கே அடிக்க வர்றாங்க நண்பா....நா ஓவரா இழுத்துகிட்டு இருக்கேனாம்....
அப்பிடியான்னு கேட்டதுக்கு கையில ஆயுதத்த தூக்கிட்டாங்க....
எங்க விட்டேன்....ஆ...நெனச்சி நெனச்சி அப்பிடி ஒரு அழுகை....
இருங்க டக்குன்னு சொல்லிட்றேன்....
அழுதுகிட்டு இருந்தவள ஆருவும் கயலும் தான் உசுரக் குடுத்து சமாதானம் பண்ணியிருக்காங்க....
நமக்குதான் நம்ம சி.பி.ஐ ஆபிஸர பத்தி தெரியும்ல....
கண்ணீர வெச்சே கலாய்ச்சுகிட்டு இருந்தவரு திடீர்னு அவ புருஷனுக்கு என்னமோ சொல்லிட்டாராம்....
அம்மணி மதுரய எரிச்ச கண்ணகி மாதிரியே போஸ் குடுத்துட்டு அவன காய்ச்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க....
வாங்க நண்பா நாமளும் போய் பாக்கலாம்.....
எதுக்கும் கொஞ்சம் ஓரமா நின்னுகிட்டீங்கன்னா உங்களுக்கும் சேப் நண்பா....
"நா அப்பிடித்தான்டி சொல்லுவேன்.... ராட்சஸி... ராட்சஸி... நீதான் சின்ன பப்பியாச்சே....முடிஞ்சா உன் புருஷன் கிட்ட மாட்டி விடு...."
"வேணாம் ஆரு....மறுபடி நான் தாத்தான்னு கூப்புட வேண்டி வரும்"
"கூப்டுகோடி....அம்முகுட்டி.... நீ என்ன ஆருன்னு கூப்புடவேல்ல...?"
"இவளுக்கெல்லாம் நான் சப்போர்ட் பண்ணுவேன்னு நீ எப்பிடி ஆரு நெனச்ச?"
"கயல் பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ....மரியாதயா எனக்கு சப்போர்ட் பண்ணு"
"என் அம்முகுட்டி எனக்குதான் சப்போர்ட் பண்ணுவேன்னு சொல்றால்ல....அப்பறமும் எதுக்கு மூக்க நுழைக்கிற ராட்சஸி?"
"டேய் அப்பிடி கூப்புடாதடா.... அவ்வளவு தான் சொல்லிட்டேன்"
"அதான் உன்னால முடிஞ்சத பாத்துக்கோன்னு சொல்லிட்டேன்ல....?"
"ஆரு....அவ அத்தான் இருக்குற தைரியத்துல மோதியிருப்பா....
இப்போதான் அவரு ஆபிஸ் பொய்ட்டாருல்ல....அதான் புலி பதுங்குது"
"அப்போ உன் வாயாலேயே என்ன புலின்னு ஒத்துக்குற?"
"அப்பிடியா சொன்னேன்...."
என்றவள் முறைத்துக் கொண்டிருந்த ஆரவ்வை பார்த்து அசடு வழிந்தாள்.
"ஹி...ஹி....அது சும்மா ஆரு....ஒரு புலோவுல வந்துடுச்சு"
"அம்மு...மானத்த வாங்காதடி.... எனக்கு சப்போர்ட் பண்றன்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டு இருக்க?"
"நீ அவள கவனி ஆரு...இனிமே பாரு"
"ஹாங்...அப்பறம் மிஸ்.ராட்சஸி...."
"சொல்லுங்க ஆரு தாத்தா....?" கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நிதானமாக கேட்வளை பார்த்து சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டுப் போனாள் கயல்....
பின்னே தன் கணவனிடம் யாரு பாட்டு வாங்குவது???
பல்லை கடித்தவன்
"அப்பிடி கூப்புடாதடி கேக்க சகிக்கல...."
"நீங்க தானே ஆரு தாத்தா கூப்புட பர்மிஷன் கொடுத்தீங்க?"
"அ...அ...அது ஆ..ஆமா....இப்போவும் நான்தான் வேணாம்னு சொல்றேன்டி ராட்சஸி"
"எனக்கெல்லாம் பெரியவங்க பேச்சு தட்டி பழக்கமில்ல ஆரு தாத்தா.... இனிமே இப்படித்தான் கூப்புடுவேன்....முக்கியமா பப்ளிக்ல... என்ன ஓகேவா ஆரு தாத்தா?"
"ஹெஹ்ஹேய்....நீதான் வெளிய வரவே மாட்டியேடி ராட்சஸி....மீறி போனா அண்ணாவே உன்ன கட்டி போட்டுடுவாரு"
என்றுவிட்டு கயலுடன் ஹைபை கொடுத்துக் கொண்டவன் அவளுடன் இணைந்து சிரிக்க
"என் புருஷன் ஒன்னும் அப்பிடி பண்ண மாட்டாரு தாத்தா... வயசான உங்களுக்கு அதெல்லாம் கண்ணுக்கு தெரியுறது கஷ்டம்தான்... ச்சு....ச்சு...ச்சு...பாவம் நீங்க" என்றவள் போலியாய் வருத்தப்படுவது போல் நடிக்க கயலின் சிரிப்பு இன்னுமின்னும் கூடியது.
"அத நாங்க பாத்துக்குறோம் ராட்சஸி....நீங்க எப்பிடி வெளிய வருவீங்கன்னு கொஞ்சம் சொல்றீங்களா?"
என்றான் சவால் போலும்....
"காலேஜுக்கு வருவேன்"
"யாரு....நீ.....?"
"ஆமா...நானேதான் ஆரு தாத்தா"
"எப்பிடி எப்பிடி?"
"எப்படியோ"
"காலேஜுக்கு வர்றதுக்கு பர்மிஷன் வேணும்ல மிஸ்.ராட்சஸி....?"
"காலேஜே என் புருஷனோடது தான்.... அதுக்கு நான் பர்மிஷன் கேட்காமலே வருவேன்...."என்றாள் மிடுக்காக....
"அதுக்காகவேல்லாம் உன்ன உள்ள விட மாட்டாங்கடி ராட்சஸி...."
"பாக்கத்தானே போறீங்க ஆரு தாத்தா"
"பாக்கலாம் பாக்கலாம்டி ராட்சஸி...."என்றவனின் போன் அலற விளையாட்டாகவே அடண்ட் செய்து காதில் வைத்தவனுக்கு மறுமுனையில் சொல்லப்பட்டு செய்தியில் உலகம் அப்படியே தட்டமாலை சுற்றத் தொடங்கியது.
***
"வாட்...."அதிர்ந்து எழுந்தான் ராகேஷ் கண்ணா!!!
"எப்பிடி விஷயம் லீக் ஆச்சுன்னு தெரில மச்சான்.....பட் நம்மாள வலை விரிச்சு தேடிகிட்டு இருக்காங்க...." சற்று பதற்றம் போல் ஒலித்தது ரகுவின் குரல்....
இல்லையில்லல பதற்றம் போல் பக்காவாக நடித்துக் கொண்டிருந்தான்.
"ஓ ஷிட்...இது எப்பிடி ஆச்சு இடியட்....அவன் சிக்கும் வர நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த?"
"ராக்கேஷ்....நா சொல்றது உனக்கு புரியுதா இல்லயா....இப்போ வெளில போனா நானும் தான் மாட்டிப்பேன்"
"மாட்டிக்கிட்டு சாகுடா...."
'ஒரு நண்பனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளா இவை....சத்தியாமாக இவன் நண்பனில்லை....
நண்பன் போர்வையில் இருக்கும் துரோகி' நினைத்துக் கொண்டவனின் உதடு ஏளனமாக வளைந்தது.
"லுக் ரகு....நீ என்ன பண்ணுவியோ... அது உன் ப்ராப்ளம்....பட் அவன் அந்த நாயோட கைல மாட்டிக்க கூடாது...."
"...."
"நீ மாட்டிகிட்டெனா அவனுங்க ஃபோகஸ் உன்மேல திரும்பும்.... அந்த கேப்ல நா அவன காப்பாத்திடுவேன்...."
"...."
"அவன் மட்டும் மாட்டிகிட்டான்னா மொத்த சொத்தும் அந்த நாயி பேருக்கே மாத்திடுவேன்னு மிரட்டி இருக்கான்"
"...."
"போதைல கையில இருந்த பேப்பர அவன் கிட்ட குடுத்ததுக்கான தண்டனயதான் இவ்வளவு நாள் அனுபவிச்சிட்டு இருக்கேன்"
"...."
"இதுக்கு மேலயும் அவனுக்கு அடிமயா என்னால இருக்க முடியாது ரகு... அவன காப்பாத்தினாதான் நமக்கு சேப்"
"...."
"அவன் மட்டும் அந்த நாய் கைல மாட்டிகிட்டான்னா அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த முழு சொத்துமே காணல் நீரா போயிடும்"
"பட் மச்சி...அவனுக்கு அந்த ஆர்.கே மேல என்ன கோபம்னு இப்பிடி ஆட்டம் ஆடினான்?" அப்போதுதான் வாயை திறந்தான் ரகு....
இவ்வளவு நாள் ஏனேன்று அவனுக்கும் தெரியாது....இரண்டு உயிர்களுக்காகத் தான் அமைதியாக எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருந்தான்.
ஆனால் இப்போது அப்படி இல்லையே....
நிச்சயமாக அழிவு வரப் போகிறதென்று தெரிந்த பின்னால் எதற்கு பயம்???
தன் பாட்டில் சொல்லிக் கொண்டிருந்தவனும் முதன் முறை வாயை திறந்தான்.
"அந்த நாயி நம்ம அக்ஷுவ கொண்ணதுலதான் இவனுக்கு பிரச்சினை.... அது என்னன்னு இதுவர என்கிட்ட கூட அவன் சொல்லல"
"....."
"நா இப்போவே டிக்கட் புக் பண்ணி அடுத்த ப்ளைட்ல இன்டியா வர்றேன்.... அதுக்குள்ள நீ அவங்ககிட்ட மாட்டி அவன் தப்பிச்சு இருக்கணும்...." என்றான் கட்டளையாய்....
"ஓகே மச்சான்" என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு ஹாயாக கட்டிலில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டு இருந்தான்.
அவனாவது போய் மாட்டுவதாவது.... மாட்ட வைத்த அவனே தப்பிக்க விடுவானா???
***
"மச்சான்....லைன்லதான் இருக்கியா?" ஓங்கி ஒலித்த சித்தார்த்தின் குரலில் நினைவுக்கு மீண்டான் ஆரவ்.
"ஆ...ஆ..சொ...சொல்லு மச்சி...?"
"என்னடா சொல்ல....நீ சீக்கிரம் கிளம்பி மதன் ஆபிஸ் வா.... அவன் வேற டென்ஷனா இருக்கான்"
"நா...நா இதோ இதோ வந்தட்றேன்டா"
மொபைலை துண்டித்து பாக்கட்டில் போட்டவன் அப்போதுதான் அவர்கள் இருவரையும் பார்த்தான்.
கயல் குழப்பமாய் நின்றிருக்க அஷ்வினியின் முகம் பயத்தில் வெளிரி இருந்தது.
"எ...என்னாச்சு ஆரு...தே...தே... தேவ்கு ஒன்னில்லல்ல?" எனவும் வரவழைக்கப்பட்ட சிரிப்புடன்
"ச்சே ச்சே உன் சூப்பர் மேன் புருஷனுக்கு ஒன்னில்ல....நம்ம மதன் இருக்கான்ல...?"
"ம...ம..மதனுக்கு என்னாச்சு?"
"மதனுக்கும் ஒன்னில்ல அஷ்விமா...முதல்ல நீ ரிலாக்ஸாகு...."
என்றவன் அவளை சோபாவில் அமர வைத்து தண்ணீர் குடிக்க கொடுத்தான்.
"மதனுக்கு ஒன்னில்லடி ராட்சஸி... ஏதோ கேஸ் விஷயமா உடனே ட்ரான்ஸ்பர் கெடச்சிருக்காம்"
வாய்க்கு வந்ததை உலறிக் கொட்ட அப்போதுதான் அவள் நிம்மதியானாள்.
"ஓகே அஷ்வி....நா அவசரமா வெளில போறேன்....அம்மு அஷ்விய பாத்துக்கோ...பை"
என்றவன் அடுத்த நிமிடம் மாயமாய் மறைந்திருந்தான்.
.......
கமிஷ்னர் அலுவலக வாசலிலேயே ஆரவ்விற்காக ஜீப்பில் காத்துக் கொண்டிருந்தனர் சித்தார்த்தும் மதனும்...
அவசரத்திற்காக பைக்கை எடுத்துக் கொண்டு வந்தவன் அங்கேயே அதை நிறுத்தி வைத்து விட்டு ஜீப்பில் பாய்ந்து ஏற அது புயலென கிளம்பியது சித்தார்த்தின் கைகளில்....
அவர்கள் இருவர் முகமும் உணர்ச்சியற்று பாறை போல் இறுகி இருக்க
"மச்சான் என்ன விஷயம்னு சொல்லுங்கடா..... கால் பண்ணி எதிரி சிக்கிட்டான்னு மட்டும் சொன்னா நா என்னன்னுடா நெனக்கிறது?" என்றான் ஆரவ் பதற்றத்துடன்....
"...."
"ஏதாவது பேசுங்கடா...யாரு இன்பர்மேஷன் கொடுத்தது?"
"கதிர்" ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான் மதன்.
"வாட் கதிரா....யா...யாருன்னு தெரிஞ்சுதா?" மீண்டும் அவன் கேள்வியெழுப்ப அவர்கள் இருவர் முகமும் மீண்டும் கடினத்திற்கு மாறியது.
அதை அப்போதுதான் கவனித்தவன்
"யாரு மச்சீஸ்?"என்றான் தீவிரமாக....
அடுத்து சித்தார்த்தின் வாயிலிருந்து வந்த பதிலில் அண்ணனை போலவே சர்வமும் நடுங்கிப் போனது ஆரவ்விற்கு.....
இல்லை இல்லை இருக்கவே இருக்காது என்று மனம் கூச்சலிட்டாலும் ஏன் இருக்கக் கூடாது என்று கேட்ட மற்ற மனதை எப்படி அடக்குவதென்றுதான் அவனுக்கு புரிபடவே இல்லை.....
***
தன்னை போகவிடாமல் கட்டிப் பிடித்து அழுது கொண்டிருக்கும் அபியை விலக்கவும் முடியாமல் யாழினியை தேடவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான் வருண்.....
வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது....
அவர் அப்படி செய்து விட்டுச் சென்றதில் சிறு சலசலப்பு உருவாகியிருந்த நிலையில் அவள் அவனை கட்டிப் பிடித்தே கதற அதுவும் அடங்கிப் போனது போல்தான் இருந்தது அவனுக்கு....
துக்கத்தில் இருப்பவளை அப்படியே விட்டு விட்டு செல்லவும் முடியாதாகையால் அமைதியாகவே நின்றிருந்தான்.
"அபி ப்ளீஸ் கண்ட்ரால்....இறப்பு நியதி தானே... இதுக்கே இப்பிடி துவண்டு போயிட்டோம்னா வாழ்க்கைல முன்னேற வேண்டாமா?"
"எனக்குன்னு இனி யாருமே இல்லயே வருண்....இருந்த அம்மாவும் என்ன விட்டு பொய்ட்டாங்களேடா....என்னால அத ஏத்துக்கவே முடிலயே.... இவ்வளவு நாள் கூட இருக்குறாங்கங்குற நம்பிக்கைல தானே நானும் வாழ்ந்துகிட்டு இருந்தேன்...என்ன மட்டும் தனியா தவிக்க விட்டுட்டு போறதுக்கு அவங்களுக்கு எப்பிடிடா மனசு வந்துது...சொல்லு வருண்?"அவனை போட்டு உலுக்கி விட்டு மறுபடியும் அவன் மேலேயே சாய்ந்து அழுதவளை பார்த்து அவனுக்குமே என்னவோ போல் ஆகிவிட்டது.
உனக்கு நானிருக்கிறேன் என்று அவனால் அவளிடம் அந்த நிலையில் கூட சொல்ல முடியாமல் போன போது தான் தெரிந்தது யாழினி மேல் வ்நதிருப்பது ஈர்ப்பு இல்லை காதல் என்பது....
அப்போதுதான் அவனுக்கு தன் தங்கை ஞாபகம் வர அவள் உடல் நிலை கருதி சோல்ல வேண்டாம் வந்து விடுவாள் என நினைத்தவன் ஆறுதலுக்காகவாவது நான்கு வார்த்தை பேசட்டுமே என்று தான் எடுத்தான்.
"சொல்லுங்க வருண் சார்?" சாதாரணமாக ஒலித்த குரலில் தன் நண்பனை நினைத்து சிரிக்கத் தான் தோன்றியது அவனுக்கு....
எல்லாம் அவனால் அல்லவா சாத்தியம்!!!
ஆக மொத்தத்தில் அவள் அவனாகவும் அவன் அவளாகவும் மாறி விட்டிருந்தது தான் விந்தை....
"ரிக்ஷி...அபியோட அம்மா...."
"எ..என்னாச்சுண்ணா..?"
"ரிலாக்ஸ் ரிக்ஷிமா...."
"சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்"
"அபியோட அம்மா இறந்துட்டாங்க ரிக்ஷி...."
"என்னண்ணா சொல்றீங்க...நா... நான் இதோ இதோ வந்தட்றேன்"
"நோ ரிக்ஷி...நீ வெளில வராத ப்ளீஸ்...."
"முடியாது நா அபிய பாக்கணும்... பாவம்ணா அவ..." என்று விட்டு அழவும்
"ரிக்ஷி ப்ளீஸ் அழாதமா...அதான் அண்ணன் இருக்கேன்ல...நா பாத்துக்குறேன் ஓகே?"
"இல்ல இல்ல நான் வருவேன்...." என்றவள் அவன் பேசப்பேச கட் பண்ணி விட்டாள்.
கயலிடமும் விடயத்தை கூறி விட்டு அவள் மறுக்க தனியாகப் போவதாக கூறவும் வேறு வழியில்லாமல் தமக்கையுடன் கிளம்பினாள் தங்கை....
....,
காரை விட்டு இறங்கியவள் கயலையும் மறந்து அழுது கொண்டே உள்ளே நுழைய அவளைப் பார்த்த வருண் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.
"அபி..."என தோள் தொடவும் பற்றுகோல் கிடைத்த கொடியாய் அவளை தாவி அணைத்துக் கொண்டாள் அவள்....
அப்போதுதான் வருணுக்கு நிம்மதிப் பெருமூச்சே வந்தது.
இப்போதாவது தன்னவளை தேடலாம் இல்லையா???
"ரிக்ஷி...இரு நா இதோ வந்துட்றேன்"என்றவன் கயல் உள்ளே நுழையவும் அவளையும் துணைக்கு விட்டுவிட்டு வெளியேறினான்.
***
இரவு......
தன் முன் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தவனை பார்க்கப்பார்க்க கோபம் தலைக்கேறியது ரிஷிக்கு.....
அவன் அடித்து அடித்தே இரத்தத்தில் குளித்திருந்தான் கட்டப்பட்டிருந்தவன்....
தலை ஒரு பக்கமாக தொங்கிங் கொண்டிருந்த நிலையிலும் உதட்டை கேளியாக வளைத்து சிரித்தவனுக்கு மீண்டும் மூஞ்சிலேயே ஒரு குத்து விட்டான் ரிஷிகுமார் தேவமாருதான்.
"துரோகி"என்றுவிட்டு மீண்டும் மீண்டும் போட்டு அடித்துக் கொண்டே இருக்க கதிர் தான் கஷ்டப்பட்டு அவனை அடக்க வேண்டியாதாய் போயிற்று....
அங்கே அமர்ந்திருந்தவன் இல்லையில்லை....
அமர்ந்திருந்தவர் அவள் மனையாளின் தந்தை....
அவன் ஆருயிர் நண்பனின் தந்தை....அவனின் மாமனார்....
மிஸ்டர்.ராமநாதன்!!!!!!
தொடரும்......
06-06-2021.
"நீ இரு யாழ் நான் இப்போ வந்தட்றேன்"
என்றுவிட்டு அபியை நோக்கி ஓடிய வருணை கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.
அவள் பெயரை சொல்லிவிட்டான்...
இனிமேல் தனக்கு அவனிடம் எந்தப் பேச்சு வார்த்தையுமே இல்லையென்று நினைக்கும் போதே உள்ளுக்குள் அதிகமாய் வலித்தது.
இருந்தும் என்ன செய்ய???
தனக்கு அவன் இல்லை என்ற உண்மையை ஜீரணித்துக் கொள்ளவே அவளுக்கு சற்று நேரம் பிடிக்க இதற்கு மேல் இங்கே இருக்க கூடாது என்று நினைத்தவள் கண்களை துடைத்துக் கொண்டு தானும் வெளியே வந்தாள்.
வராண்டாவில் உள்ள இருக்கையில் அவளை அமர்த்தி வைத்து அவளின் கண்ணங்களை தட்டிக் கொண்டிருந்த வருண் யாழினி வெளியே வருவது கண்டு
"யாழ்....இங்கே வா...இவள பாரு....நா தண்ணி எடுத்துட்டு வந்துட்றேன்" என்றவன் அவளின் பதிலை எதிர்ப்பாராமலேயே சென்று விட கஷ்டப்பட்டு அடக்கியிருந்த கண்ணீர் அபியை பார்த்தவுடன் பீரிட்டுக் கிளம்பியது.
நிலைமை கருதி அவளிடம் விரைந்து கொஞ்ச நேரம் இருந்து கொண்டிருக்கும் போது வருண் வாட்டர் பாட்டிலுடன் வந்தான்.
அவள் முகத்துக்கு தண்ணீரை அடித்து
"அபி...வேக் அப்....என்னாச்சு?"என்று கேட்டுக் கொண்டே அவள் கண்ணத்தை தட்டிக் கொண்டிருக்க மெதுவாக கண்களை திறந்தவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை....
தான் கடைசியாக அன்னையிடம் பேசியது நினைவு வர
"வ...வருண்....அ...அம்மா அம்மா"
"அம்மாவா...அம்மாக்கு என்னாச்சு..... ஏதாவது?"
அவள் முகத்தை மூடி அழ
"அபி....சொன்னால் தானே ஏதாவது பண்ண முடியும்....ப்ளீஸ்"
"அம்மாக்கு.... ஹாஸ்பிடல்....ப்ளீஸ் என்ன விட்டு போய்டாதன்னு சொல்லு வருண்"அவள் சொல்வதிலிருந்து அவனுக்கு ஒன்றுமே புரியாமல் போக சற்று ஓரமாய் நின்றிருந்த யாழினியை பார்க்க அவளோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'இவளுக்கு என்னாச்சு....ஏன் இப்பிடி இருக்கா'என நினைத்தவன் மீண்டும் அபியிடம்
"அபி...ப்ளீஸ் டெல்...."எனவும் வருணிடம் அம்மாவிற்கு சீரியஸாக இருப்பதாக அவள் வீட்டில் வேலை செய்பவர் கால் பண்ணி சொன்னதாக சொல்லிவிட்டு மீண்டும் அழுதாள்.
'ஓ அது கேட்டு தான் மயங்கி விழுந்திருக்கா போல' என யூகித்தவன்
"இப்பிடியே அழுதுகிட்டே இருக்க போறீங்களா அபி.... வாங்க போலாம்" மண்டியிட்டு பேசிக் கொண்டிருந்தவன் எழுந்து அவள் கையை பிடித்து எழுப்ப யாழினி முகத்தை மறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
"யாழ்...நீயும் வா"என்றவன் அபியை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போய் தன் காரில் ஏற்ற விதியை நொந்த படி தானும் சென்று ஏறினாள் யாழினி....
அங்கே...
வீடு முழுக்க கூட்டம் கூடியிருக்க விஷயத்தை சட்டென யூகித்தவன் திரும்பி பின் சீட்டில் யாழினியுடன் அமர்ந்திருந்த அபியை பார்க்க அவளோ கண் மூடி சாய்ந்திருந்தாள்.
கார் நிற்கவும் சுற்று முற்றும் பார்த்தவள் கதறிக் கொண்டே வீட்டுக்குள் ஓட அவளைப் பார்க்கவே பரிதாபமாக போயிற்று வருணுக்கு....
அந்தத் தாய் அவளுக்காகத்தான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்திருப்பார் போலும்...
கையை நீட்டி அவளை அழைக்க அவர் மீதே விழுந்து அழுதவளின் கூந்தலை ஆதரவாக தடவிக் கொடுத்தவரின் கண்கள் வருணை கண்டதும் ஒளி பெற்றன.
அபி ஏற்கனவே ஒரு தடவை இவன் போட்டோவை வைத்துக் கொண்டிருந்ததை அந்தத் தாயுள்ளம் அறிந்து கொண்டுதான் இருந்தது.
அவனையும் கை நீட்டி அழைக்க யாழினியை மீண்டும் திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியாமலே போக அவரருகில் சென்றான்.
அவன் கையையும் தன் மகள் கையையும் இணைத்தவரின் கண்களின் தன் மகளை ஒருவன் கையில் ஒப்படைத்து விட்ட நிம்மதி....
சந்தோஷமாக அவர் கண்களை மூட அபியின் கதறலில் அணைவருக்குமே நீர் துளிர்த்தது.
வருண் இதனை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை... அபி அதை உணரும் நிலையில் இல்லாமல் இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது அவனுக்கு....
அப்போதுதான் மூளையில் மின்னல் வெட்ட சட்டென திரும்பி யாழினியை பார்க்க அங்கே அவள் இல்லை!!!
***
ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்....
"டாமிட்....ஷிட்....." தரையில் ஓங்கி உதைத்து விட்டு டேபில் மேல் இருந்த லேப்டாப்பையும் கீழே போட்டு உடைத்தான் ரிஷி.
"நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது கதிர்.... அவன் எனக்கு வேணும்..... உனக்கு சரியா இருபத்திநாலு மணி நேரம் டைம் தர்றேன்....அதுக்குள்ள அவன் என் கண்ணு முன்னாடி நிக்கணும்....காட் இட்...." என கர்ச்சிக்க
"யெ...யெ...யெஸ் சார்..." நடுங்கிக் கொண்டே சொன்னான் பீ.ஏ கதிரவன்....
"கெட் லாஸ்ட் இடியட்....என் கண்ணு முன்னாடி நிக்காத போ போயி தேடு "என்றவன் டேபிளுக்கே ஓங்கி குத்த அது அவன் கையை அழகாக பதம் பார்த்து விட்டது......
அப்போதும் கோபம் மட்டும் அடங்குவேனா என்றிருக்க அந்த டெபிளையும் கம்பியால் அடித்து நொறுக்கியவன் கண்ணில் கண்ட பொருட்கைளை
எல்லாம் காலால் உதைத்து வீசினான்.
***
ஆரவ்வுடன் மல்லுக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தது சாட்சாத் நம்ம அஷ்வினி அம்மையாரே தானுங்க....
நாங்க அழுதுட்ருப்பான்னுல்ல நெனச்சோம்னு நீங்க சொல்றது என் காதுல கேக்குது நண்பா....பட் உண்மைய சொல்லிடணும்ல....
அவ புருஷன் கால் பண்ணி அப்பிடி பேசினதும் நம்ம ஹீரோயின் செம்ம அழுகை....
அவரு வேற அழாத குழந்தைக்கு பாதிக்கும்னு சொன்னாருல்ல.....அத நெனச்சி....நெனச்சி.....
ஐயோ ரைட்டருக்கே அடிக்க வர்றாங்க நண்பா....நா ஓவரா இழுத்துகிட்டு இருக்கேனாம்....
அப்பிடியான்னு கேட்டதுக்கு கையில ஆயுதத்த தூக்கிட்டாங்க....
எங்க விட்டேன்....ஆ...நெனச்சி நெனச்சி அப்பிடி ஒரு அழுகை....
இருங்க டக்குன்னு சொல்லிட்றேன்....
அழுதுகிட்டு இருந்தவள ஆருவும் கயலும் தான் உசுரக் குடுத்து சமாதானம் பண்ணியிருக்காங்க....
நமக்குதான் நம்ம சி.பி.ஐ ஆபிஸர பத்தி தெரியும்ல....
கண்ணீர வெச்சே கலாய்ச்சுகிட்டு இருந்தவரு திடீர்னு அவ புருஷனுக்கு என்னமோ சொல்லிட்டாராம்....
அம்மணி மதுரய எரிச்ச கண்ணகி மாதிரியே போஸ் குடுத்துட்டு அவன காய்ச்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க....
வாங்க நண்பா நாமளும் போய் பாக்கலாம்.....
எதுக்கும் கொஞ்சம் ஓரமா நின்னுகிட்டீங்கன்னா உங்களுக்கும் சேப் நண்பா....
"நா அப்பிடித்தான்டி சொல்லுவேன்.... ராட்சஸி... ராட்சஸி... நீதான் சின்ன பப்பியாச்சே....முடிஞ்சா உன் புருஷன் கிட்ட மாட்டி விடு...."
"வேணாம் ஆரு....மறுபடி நான் தாத்தான்னு கூப்புட வேண்டி வரும்"
"கூப்டுகோடி....அம்முகுட்டி.... நீ என்ன ஆருன்னு கூப்புடவேல்ல...?"
"இவளுக்கெல்லாம் நான் சப்போர்ட் பண்ணுவேன்னு நீ எப்பிடி ஆரு நெனச்ச?"
"கயல் பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ....மரியாதயா எனக்கு சப்போர்ட் பண்ணு"
"என் அம்முகுட்டி எனக்குதான் சப்போர்ட் பண்ணுவேன்னு சொல்றால்ல....அப்பறமும் எதுக்கு மூக்க நுழைக்கிற ராட்சஸி?"
"டேய் அப்பிடி கூப்புடாதடா.... அவ்வளவு தான் சொல்லிட்டேன்"
"அதான் உன்னால முடிஞ்சத பாத்துக்கோன்னு சொல்லிட்டேன்ல....?"
"ஆரு....அவ அத்தான் இருக்குற தைரியத்துல மோதியிருப்பா....
இப்போதான் அவரு ஆபிஸ் பொய்ட்டாருல்ல....அதான் புலி பதுங்குது"
"அப்போ உன் வாயாலேயே என்ன புலின்னு ஒத்துக்குற?"
"அப்பிடியா சொன்னேன்...."
என்றவள் முறைத்துக் கொண்டிருந்த ஆரவ்வை பார்த்து அசடு வழிந்தாள்.
"ஹி...ஹி....அது சும்மா ஆரு....ஒரு புலோவுல வந்துடுச்சு"
"அம்மு...மானத்த வாங்காதடி.... எனக்கு சப்போர்ட் பண்றன்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டு இருக்க?"
"நீ அவள கவனி ஆரு...இனிமே பாரு"
"ஹாங்...அப்பறம் மிஸ்.ராட்சஸி...."
"சொல்லுங்க ஆரு தாத்தா....?" கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நிதானமாக கேட்வளை பார்த்து சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டுப் போனாள் கயல்....
பின்னே தன் கணவனிடம் யாரு பாட்டு வாங்குவது???
பல்லை கடித்தவன்
"அப்பிடி கூப்புடாதடி கேக்க சகிக்கல...."
"நீங்க தானே ஆரு தாத்தா கூப்புட பர்மிஷன் கொடுத்தீங்க?"
"அ...அ...அது ஆ..ஆமா....இப்போவும் நான்தான் வேணாம்னு சொல்றேன்டி ராட்சஸி"
"எனக்கெல்லாம் பெரியவங்க பேச்சு தட்டி பழக்கமில்ல ஆரு தாத்தா.... இனிமே இப்படித்தான் கூப்புடுவேன்....முக்கியமா பப்ளிக்ல... என்ன ஓகேவா ஆரு தாத்தா?"
"ஹெஹ்ஹேய்....நீதான் வெளிய வரவே மாட்டியேடி ராட்சஸி....மீறி போனா அண்ணாவே உன்ன கட்டி போட்டுடுவாரு"
என்றுவிட்டு கயலுடன் ஹைபை கொடுத்துக் கொண்டவன் அவளுடன் இணைந்து சிரிக்க
"என் புருஷன் ஒன்னும் அப்பிடி பண்ண மாட்டாரு தாத்தா... வயசான உங்களுக்கு அதெல்லாம் கண்ணுக்கு தெரியுறது கஷ்டம்தான்... ச்சு....ச்சு...ச்சு...பாவம் நீங்க" என்றவள் போலியாய் வருத்தப்படுவது போல் நடிக்க கயலின் சிரிப்பு இன்னுமின்னும் கூடியது.
"அத நாங்க பாத்துக்குறோம் ராட்சஸி....நீங்க எப்பிடி வெளிய வருவீங்கன்னு கொஞ்சம் சொல்றீங்களா?"
என்றான் சவால் போலும்....
"காலேஜுக்கு வருவேன்"
"யாரு....நீ.....?"
"ஆமா...நானேதான் ஆரு தாத்தா"
"எப்பிடி எப்பிடி?"
"எப்படியோ"
"காலேஜுக்கு வர்றதுக்கு பர்மிஷன் வேணும்ல மிஸ்.ராட்சஸி....?"
"காலேஜே என் புருஷனோடது தான்.... அதுக்கு நான் பர்மிஷன் கேட்காமலே வருவேன்...."என்றாள் மிடுக்காக....
"அதுக்காகவேல்லாம் உன்ன உள்ள விட மாட்டாங்கடி ராட்சஸி...."
"பாக்கத்தானே போறீங்க ஆரு தாத்தா"
"பாக்கலாம் பாக்கலாம்டி ராட்சஸி...."என்றவனின் போன் அலற விளையாட்டாகவே அடண்ட் செய்து காதில் வைத்தவனுக்கு மறுமுனையில் சொல்லப்பட்டு செய்தியில் உலகம் அப்படியே தட்டமாலை சுற்றத் தொடங்கியது.
***
"வாட்...."அதிர்ந்து எழுந்தான் ராகேஷ் கண்ணா!!!
"எப்பிடி விஷயம் லீக் ஆச்சுன்னு தெரில மச்சான்.....பட் நம்மாள வலை விரிச்சு தேடிகிட்டு இருக்காங்க...." சற்று பதற்றம் போல் ஒலித்தது ரகுவின் குரல்....
இல்லையில்லல பதற்றம் போல் பக்காவாக நடித்துக் கொண்டிருந்தான்.
"ஓ ஷிட்...இது எப்பிடி ஆச்சு இடியட்....அவன் சிக்கும் வர நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த?"
"ராக்கேஷ்....நா சொல்றது உனக்கு புரியுதா இல்லயா....இப்போ வெளில போனா நானும் தான் மாட்டிப்பேன்"
"மாட்டிக்கிட்டு சாகுடா...."
'ஒரு நண்பனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளா இவை....சத்தியாமாக இவன் நண்பனில்லை....
நண்பன் போர்வையில் இருக்கும் துரோகி' நினைத்துக் கொண்டவனின் உதடு ஏளனமாக வளைந்தது.
"லுக் ரகு....நீ என்ன பண்ணுவியோ... அது உன் ப்ராப்ளம்....பட் அவன் அந்த நாயோட கைல மாட்டிக்க கூடாது...."
"...."
"நீ மாட்டிகிட்டெனா அவனுங்க ஃபோகஸ் உன்மேல திரும்பும்.... அந்த கேப்ல நா அவன காப்பாத்திடுவேன்...."
"...."
"அவன் மட்டும் மாட்டிகிட்டான்னா மொத்த சொத்தும் அந்த நாயி பேருக்கே மாத்திடுவேன்னு மிரட்டி இருக்கான்"
"...."
"போதைல கையில இருந்த பேப்பர அவன் கிட்ட குடுத்ததுக்கான தண்டனயதான் இவ்வளவு நாள் அனுபவிச்சிட்டு இருக்கேன்"
"...."
"இதுக்கு மேலயும் அவனுக்கு அடிமயா என்னால இருக்க முடியாது ரகு... அவன காப்பாத்தினாதான் நமக்கு சேப்"
"...."
"அவன் மட்டும் அந்த நாய் கைல மாட்டிகிட்டான்னா அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த முழு சொத்துமே காணல் நீரா போயிடும்"
"பட் மச்சி...அவனுக்கு அந்த ஆர்.கே மேல என்ன கோபம்னு இப்பிடி ஆட்டம் ஆடினான்?" அப்போதுதான் வாயை திறந்தான் ரகு....
இவ்வளவு நாள் ஏனேன்று அவனுக்கும் தெரியாது....இரண்டு உயிர்களுக்காகத் தான் அமைதியாக எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருந்தான்.
ஆனால் இப்போது அப்படி இல்லையே....
நிச்சயமாக அழிவு வரப் போகிறதென்று தெரிந்த பின்னால் எதற்கு பயம்???
தன் பாட்டில் சொல்லிக் கொண்டிருந்தவனும் முதன் முறை வாயை திறந்தான்.
"அந்த நாயி நம்ம அக்ஷுவ கொண்ணதுலதான் இவனுக்கு பிரச்சினை.... அது என்னன்னு இதுவர என்கிட்ட கூட அவன் சொல்லல"
"....."
"நா இப்போவே டிக்கட் புக் பண்ணி அடுத்த ப்ளைட்ல இன்டியா வர்றேன்.... அதுக்குள்ள நீ அவங்ககிட்ட மாட்டி அவன் தப்பிச்சு இருக்கணும்...." என்றான் கட்டளையாய்....
"ஓகே மச்சான்" என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு ஹாயாக கட்டிலில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டு இருந்தான்.
அவனாவது போய் மாட்டுவதாவது.... மாட்ட வைத்த அவனே தப்பிக்க விடுவானா???
***
"மச்சான்....லைன்லதான் இருக்கியா?" ஓங்கி ஒலித்த சித்தார்த்தின் குரலில் நினைவுக்கு மீண்டான் ஆரவ்.
"ஆ...ஆ..சொ...சொல்லு மச்சி...?"
"என்னடா சொல்ல....நீ சீக்கிரம் கிளம்பி மதன் ஆபிஸ் வா.... அவன் வேற டென்ஷனா இருக்கான்"
"நா...நா இதோ இதோ வந்தட்றேன்டா"
மொபைலை துண்டித்து பாக்கட்டில் போட்டவன் அப்போதுதான் அவர்கள் இருவரையும் பார்த்தான்.
கயல் குழப்பமாய் நின்றிருக்க அஷ்வினியின் முகம் பயத்தில் வெளிரி இருந்தது.
"எ...என்னாச்சு ஆரு...தே...தே... தேவ்கு ஒன்னில்லல்ல?" எனவும் வரவழைக்கப்பட்ட சிரிப்புடன்
"ச்சே ச்சே உன் சூப்பர் மேன் புருஷனுக்கு ஒன்னில்ல....நம்ம மதன் இருக்கான்ல...?"
"ம...ம..மதனுக்கு என்னாச்சு?"
"மதனுக்கும் ஒன்னில்ல அஷ்விமா...முதல்ல நீ ரிலாக்ஸாகு...."
என்றவன் அவளை சோபாவில் அமர வைத்து தண்ணீர் குடிக்க கொடுத்தான்.
"மதனுக்கு ஒன்னில்லடி ராட்சஸி... ஏதோ கேஸ் விஷயமா உடனே ட்ரான்ஸ்பர் கெடச்சிருக்காம்"
வாய்க்கு வந்ததை உலறிக் கொட்ட அப்போதுதான் அவள் நிம்மதியானாள்.
"ஓகே அஷ்வி....நா அவசரமா வெளில போறேன்....அம்மு அஷ்விய பாத்துக்கோ...பை"
என்றவன் அடுத்த நிமிடம் மாயமாய் மறைந்திருந்தான்.
.......
கமிஷ்னர் அலுவலக வாசலிலேயே ஆரவ்விற்காக ஜீப்பில் காத்துக் கொண்டிருந்தனர் சித்தார்த்தும் மதனும்...
அவசரத்திற்காக பைக்கை எடுத்துக் கொண்டு வந்தவன் அங்கேயே அதை நிறுத்தி வைத்து விட்டு ஜீப்பில் பாய்ந்து ஏற அது புயலென கிளம்பியது சித்தார்த்தின் கைகளில்....
அவர்கள் இருவர் முகமும் உணர்ச்சியற்று பாறை போல் இறுகி இருக்க
"மச்சான் என்ன விஷயம்னு சொல்லுங்கடா..... கால் பண்ணி எதிரி சிக்கிட்டான்னு மட்டும் சொன்னா நா என்னன்னுடா நெனக்கிறது?" என்றான் ஆரவ் பதற்றத்துடன்....
"...."
"ஏதாவது பேசுங்கடா...யாரு இன்பர்மேஷன் கொடுத்தது?"
"கதிர்" ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான் மதன்.
"வாட் கதிரா....யா...யாருன்னு தெரிஞ்சுதா?" மீண்டும் அவன் கேள்வியெழுப்ப அவர்கள் இருவர் முகமும் மீண்டும் கடினத்திற்கு மாறியது.
அதை அப்போதுதான் கவனித்தவன்
"யாரு மச்சீஸ்?"என்றான் தீவிரமாக....
அடுத்து சித்தார்த்தின் வாயிலிருந்து வந்த பதிலில் அண்ணனை போலவே சர்வமும் நடுங்கிப் போனது ஆரவ்விற்கு.....
இல்லை இல்லை இருக்கவே இருக்காது என்று மனம் கூச்சலிட்டாலும் ஏன் இருக்கக் கூடாது என்று கேட்ட மற்ற மனதை எப்படி அடக்குவதென்றுதான் அவனுக்கு புரிபடவே இல்லை.....
***
தன்னை போகவிடாமல் கட்டிப் பிடித்து அழுது கொண்டிருக்கும் அபியை விலக்கவும் முடியாமல் யாழினியை தேடவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான் வருண்.....
வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது....
அவர் அப்படி செய்து விட்டுச் சென்றதில் சிறு சலசலப்பு உருவாகியிருந்த நிலையில் அவள் அவனை கட்டிப் பிடித்தே கதற அதுவும் அடங்கிப் போனது போல்தான் இருந்தது அவனுக்கு....
துக்கத்தில் இருப்பவளை அப்படியே விட்டு விட்டு செல்லவும் முடியாதாகையால் அமைதியாகவே நின்றிருந்தான்.
"அபி ப்ளீஸ் கண்ட்ரால்....இறப்பு நியதி தானே... இதுக்கே இப்பிடி துவண்டு போயிட்டோம்னா வாழ்க்கைல முன்னேற வேண்டாமா?"
"எனக்குன்னு இனி யாருமே இல்லயே வருண்....இருந்த அம்மாவும் என்ன விட்டு பொய்ட்டாங்களேடா....என்னால அத ஏத்துக்கவே முடிலயே.... இவ்வளவு நாள் கூட இருக்குறாங்கங்குற நம்பிக்கைல தானே நானும் வாழ்ந்துகிட்டு இருந்தேன்...என்ன மட்டும் தனியா தவிக்க விட்டுட்டு போறதுக்கு அவங்களுக்கு எப்பிடிடா மனசு வந்துது...சொல்லு வருண்?"அவனை போட்டு உலுக்கி விட்டு மறுபடியும் அவன் மேலேயே சாய்ந்து அழுதவளை பார்த்து அவனுக்குமே என்னவோ போல் ஆகிவிட்டது.
உனக்கு நானிருக்கிறேன் என்று அவனால் அவளிடம் அந்த நிலையில் கூட சொல்ல முடியாமல் போன போது தான் தெரிந்தது யாழினி மேல் வ்நதிருப்பது ஈர்ப்பு இல்லை காதல் என்பது....
அப்போதுதான் அவனுக்கு தன் தங்கை ஞாபகம் வர அவள் உடல் நிலை கருதி சோல்ல வேண்டாம் வந்து விடுவாள் என நினைத்தவன் ஆறுதலுக்காகவாவது நான்கு வார்த்தை பேசட்டுமே என்று தான் எடுத்தான்.
"சொல்லுங்க வருண் சார்?" சாதாரணமாக ஒலித்த குரலில் தன் நண்பனை நினைத்து சிரிக்கத் தான் தோன்றியது அவனுக்கு....
எல்லாம் அவனால் அல்லவா சாத்தியம்!!!
ஆக மொத்தத்தில் அவள் அவனாகவும் அவன் அவளாகவும் மாறி விட்டிருந்தது தான் விந்தை....
"ரிக்ஷி...அபியோட அம்மா...."
"எ..என்னாச்சுண்ணா..?"
"ரிலாக்ஸ் ரிக்ஷிமா...."
"சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்"
"அபியோட அம்மா இறந்துட்டாங்க ரிக்ஷி...."
"என்னண்ணா சொல்றீங்க...நா... நான் இதோ இதோ வந்தட்றேன்"
"நோ ரிக்ஷி...நீ வெளில வராத ப்ளீஸ்...."
"முடியாது நா அபிய பாக்கணும்... பாவம்ணா அவ..." என்று விட்டு அழவும்
"ரிக்ஷி ப்ளீஸ் அழாதமா...அதான் அண்ணன் இருக்கேன்ல...நா பாத்துக்குறேன் ஓகே?"
"இல்ல இல்ல நான் வருவேன்...." என்றவள் அவன் பேசப்பேச கட் பண்ணி விட்டாள்.
கயலிடமும் விடயத்தை கூறி விட்டு அவள் மறுக்க தனியாகப் போவதாக கூறவும் வேறு வழியில்லாமல் தமக்கையுடன் கிளம்பினாள் தங்கை....
....,
காரை விட்டு இறங்கியவள் கயலையும் மறந்து அழுது கொண்டே உள்ளே நுழைய அவளைப் பார்த்த வருண் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.
"அபி..."என தோள் தொடவும் பற்றுகோல் கிடைத்த கொடியாய் அவளை தாவி அணைத்துக் கொண்டாள் அவள்....
அப்போதுதான் வருணுக்கு நிம்மதிப் பெருமூச்சே வந்தது.
இப்போதாவது தன்னவளை தேடலாம் இல்லையா???
"ரிக்ஷி...இரு நா இதோ வந்துட்றேன்"என்றவன் கயல் உள்ளே நுழையவும் அவளையும் துணைக்கு விட்டுவிட்டு வெளியேறினான்.
***
இரவு......
தன் முன் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தவனை பார்க்கப்பார்க்க கோபம் தலைக்கேறியது ரிஷிக்கு.....
அவன் அடித்து அடித்தே இரத்தத்தில் குளித்திருந்தான் கட்டப்பட்டிருந்தவன்....
தலை ஒரு பக்கமாக தொங்கிங் கொண்டிருந்த நிலையிலும் உதட்டை கேளியாக வளைத்து சிரித்தவனுக்கு மீண்டும் மூஞ்சிலேயே ஒரு குத்து விட்டான் ரிஷிகுமார் தேவமாருதான்.
"துரோகி"என்றுவிட்டு மீண்டும் மீண்டும் போட்டு அடித்துக் கொண்டே இருக்க கதிர் தான் கஷ்டப்பட்டு அவனை அடக்க வேண்டியாதாய் போயிற்று....
அங்கே அமர்ந்திருந்தவன் இல்லையில்லை....
அமர்ந்திருந்தவர் அவள் மனையாளின் தந்தை....
அவன் ஆருயிர் நண்பனின் தந்தை....அவனின் மாமனார்....
மிஸ்டர்.ராமநாதன்!!!!!!
தொடரும்......
06-06-2021.