Rishi24
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 47 [ B ]
காலை....
உதட்டில் உறைந்த சிரிப்புடன் உறங்கும் தன் மனையாளை ஆசையாய் வருடியது ரிஷியின் பார்வை....
தன்னையும் எழ விடாது செய்து கொண்டிருந்தவளின் குறும்பில் பளீரென சிரித்தவன் தன்னை சுற்றியிருக்கும் அவள் கைகளை மெதுவாக எடுக்க விழித்துக் கொண்டாள் பாவை.
அவன் நெஞ்சில் தலைசாய்த்து படுத்திருந்தவள் அவனை அண்ணார்ந்து பார்த்து
"ப்ச்....உங்களால கொஞ்ச நேரம் இருக்க முடியாதா என்கூட....வேல வேல வேல.... அதயே கல்யாணம் பண்ணிகிட்டு இருந்திருக்க வேண்டியது தானே?" எனவும் சிரித்து விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை தன்னோடு இன்னும் அணைத்துக் கொண்டு
"இன்னிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு கண்ணம்மா...ப்ளீஸ்டா... சீக்கிரம் வந்துடுவேன்...." என்றான் காதலாய்....
"முடியாது முடியாது...." சிறு பிள்ளை போல் சிணுங்கியவளை பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு....
"இட்ஸ் ஓகே....அத என் செல்ல பொண்டாட்டிக்காக கேன்ஸல் பண்ணிட்றேன்.... இப்போ ஓகேவா?" அவள் மூக்கை பிடித்து ஆட்ட
"லவ் யூ மாமா...." என்றவாறே அவன் கண்ணத்தில் அழுத்த முத்தமிட்டாள்.
தூக்கத்திலிருந்து திடுமென விழித்தவளுக்கு அது கனவென்று உணர்ந்து கொள்ளவே சற்று நேரம் பிடித்தது.
இன்னும் அவன் தந்த முத்தத்தின் ஈரம் இருப்பது போலவே இருக்க தன் நெற்றியை தொட்டுப் பார்த்துக் கொண்டவளுக்கு அப்போதுதான் அது கனவென்பது உறுதியானது.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் கண்களை மூடிக் கொண்டு பின்னால் சாய கரகரவென்று வழியத் துவங்கியது கண்ணீர்....
எந்தப் பெண்ணுக்குமே தன்னுடைய நிலைபோல் ஒரு போதும் வந்து விடக்கூடாது என மானசீகமாய் வேண்டுதலை வைத்தவள் முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள்.
அவளும் எத்தனை நாள்தான் எனக்கு எந்த பாதிப்புமே இல்லை என்பது போல் நடிப்பது....
நேற்று அவனை பார்த்ததிலிருந்தே அழுகையாக வந்தாலும் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவளால் இன்றைய கனவின் தாக்கத்தில் அழாமல் இருக்க முடியவில்லை....
'என்னால முடில தேவ்....சத்தியமா செத்துடனும் போல இருக்கு.... ஏன் தேவ் பொய்யாகிப் போனீங்க....
என்னால அந்த ஏமாற்றத்த தாங்கிக்கவே முடிலயே... நானும் எத்தன நாளைக்கு தான் வெளில நடிக்கிறது.... உங்க மேல கோபம் வெறுப்பு இருக்கு.... பட் அதயும் தாண்டி.... அதயும் தாண்டி.... நா.... நா..... உங்கள உயிருக்குயிரா லவ் பண்றேன் தேவ்.... எனக்கு நீங்க வேணும்....ஆ...ஆனா என்னால ஏத்துக்க முடிலயே..நா என்ன பண்ணட்டும்....' தன்னவனிடமே விடை தேடி ஊமையாய் அரற்றியது அவள் உள்ளம்!!!
வெற்றிவேல் யுனிவர்சிட்டி.....
"அம்மு....பேசமாட்டியா... ப்ளீஸ் அம்மு.... சாரிடி....வீட்டுக்கு வா ப்ளீஸ்?"
"...."
"ஏன்டி இப்பிடி இருக்க.... புரிஞ்சிக்கோடி....
இப்போதைக்கு சொல்லலன்னாலும் சத்தியமா ஒரு நாள் சொல்லிருவேன் அம்மு...."
"நீ சொல்லும் வர நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன்"
பிடிவாதமாய் மறுத்தாள்.
"அம்மு...உனக்கு என் மேல நம்பிக்க இல்லயா?"
"இருக்கு"
"தேங்க்ஸ்டி"
"அதுக்காக நீ சொல்லாம இருக்க முடியாது"
"இப்போ என்ன உனக்கு தெரியனும் அவ்வளவுதானே?"
"ஆமா...."என்றாள் கண்கள் மின்ன...
"அப்போ எனக்கு சத்தியம் பண்ணி கொடு"
"எதுக்கு?"
"அத அப்பறமா சொல்றேன் நீ சத்தியம் பண்ணு"
"அதெல்லாம் முடியாது....நீ முதல்ல விஷயத்த சொல்லு அப்பறமா பண்றேன்" என்றாள் தெளிவாக....
'இவள பத்தி தெரிஞ்சும் கேக்குறியேடா' காறித் துப்பியது மனசாட்சி....
"என் மேல நம்பிக்க இருந்தா சத்தியம் பண்ணி கொடு" கிடுக்கிப்பிடி போட்டான் அவன்...
அவனையே பார்த்திருந்தவள் சட்டென அவன் கைமீது தன் கையை வைத்து விட அவனுக்குத்தான் அவன் மீதான அவள் நம்பிக்கையில் புல்லரித்துப் போனது.
"இன்னும் ஒன் கண்டிஷன்"
"கண்டிஷனா... சரி சொல்லு"
"இன்னக்கு நீ நம்ம வீட்டுக்கு வரனும்... அதுவும் உன் அக்கா கூட...
இன்னக்கி நீ வீட்டுக்கு வா....நானே உன்கிட்ட எல்லாதயும் சொல்லிட்றேன்"
"ஓகேடா....பட் அஷ்வி...."
"அது எனக்கு தெரியாது.. கண்டிஷன்ஸுக்கு ஓகேனா எனக்கும் ஓகே"
"சரி...." என்றவள் எழுந்து செல்ல அவனுக்குத் தான் இங்கே பயத்தில் காய்ச்சல் வரும்போல் இருந்தது.
இராமநாதபுரம்.....
"மா யோசிச்சுதான் பேசுறியா?"தன் தாயியிடம் கத்திக் கொண்டிருந்தான் வருண்.
"நல்ல வரன் வந்திருக்குடா.... இப்போவே தேவயில்லன்னு சொல்றாங்க"
"புரிஞ்சுதான் பேசுறியா நீ....ரிக்ஷி இப்பிடி இருக்கும் போது என்னால இந்தக் கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாதுமா...."
அவன் முடிவாய் மறுத்துவிட அப்போதுதான் கீழே இறங்கி வந்த அவனது தங்கை இதை கேட்டு கோபமாய் வந்தவள்
"விஜி...இங்க எனக்காக யாரும் அவங்களோட வாழ்க்கய தியாகம் பண்ண வேண்டிய அவஷியம் இல்ல... கல்யாணம் பண்ணிக்கிறதுல நான் தான் தடயா இருக்குறேன்னா நா எங்கயாவது போயிட்றேன்....அவங்கள சந்தோஷமா இருக்க சொல்லுங்க" என வெடித்தாள்.
அதில் வருண் அமைதியாய் அவளைப் பார்த்திருக்க விஜயலக்ஷ்மி
"என்ன பேச்சு பேசுற அஷ்வா... அவன் அந்த அர்தத்துல சொல்லல.... உன் வாழ்க்கைகாக தானே பாக்குறான்" என்றார் ஆதங்கமாக....
"அதயேதான் நானும் சொல்றேன்....
எனக்காக யாரும் தியாகம் பண்ண வேண்டிய அவஷியம் இல்ல"
"ரிக்ஷி...."அஜய் இடையிட்டான் கோபமாக...
"...."
"அவன் உன் அண்ணன்....இப்பிடி பேசுறத முதல்ல நிறுத்து"
"முடியாது....நா அப்பிடிதான் பேசுவேன்....கொலகாரனுக்கு சப்போர்ட் பண்ணி அவனுக்கு ப்ரண்டா இருக்குறவனுக்கு எல்லாம் என்னால மரியாத குடுக்க முடியாது" அவள் முடிக்கும் முன் இடியென வந்திறங்கியது அஜய்யின் அறை....
அனைவரும் அதிர்ச்சியாய் நோக்க
"எங்க இருந்து வந்துது இந்த பழக்கம்....ஒழுங்கா இரு... இல்லன்னா நடக்குறது வேற"அவன் கோபமாய் எச்சரிக்க
"இல்லன்னா என்னடா பண்ணுவ?" அவளும் வார்த்தையை விடவும் அவனுக்கு கோபம் இன்னும் அதிகமாயிற்று....
"டாவா....இனியொரு தடவ மரியாத இல்லாம வார்த்த வந்துச்சு தொலச்சிறுவேன் ஜாக்கிரதை" விரல் நீட்டியவனை பின்னால் இழுத்து விட்டு அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்தான் வருண்.
"நீ உள்ள போ அஷ்வினி..."
"நீங்க சொல்லி நா பண்ணனுமா?"
அதற்கும் எரிச்சல் பட்டவளை அமைதியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் விஜயலக்ஷ்மி தான் பொங்கி விட்டார்.
அவளை தன் புறம் திருப்பி அடிக்க கை ஓங்க அதனைத் தடுத்துப் பிடித்த வருண்
"உள்ள போ அஷ்வினி" என்றான் அழுத்தமாக....
அவன் குரலில் என்ன கண்டாளோ எதுவும் பேசாமல் அமைதியாய் மேலேறிச் செல்ல அவள் போகும் வரை பார்த்திருந்து விட்டு
"அஜய் நீயும் போ..."என்க
"இல்லடா நா" பேச வந்தவனை தடுத்து
"போன்னு சொல்றேன்ல" அவன் கோபப்பட்டதை நம்ப முடியாமல் பார்த்தவன் அடுத்த நொடி சென்றிருந்தான்.
வருணுக்கு கோபமே வராது.... ஆனால் அஜய் அவனுக்கு நேர் எதிர்....
அதனால் தான் இன்று அவன் கோபப்பட்டதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது அஜய்க்கு....
அடுத்ததாக பேசப் போன விஜயலக்ஷ்மியையும் தடுத்தவன்
"மா...நீ எதுவும் ஒர்ரி பண்ணிக்காத....இத பத்தி அப்பறமா பேசலாம்....நா வெளில பொய்ட்டு வந்துட்றேன்..."
என்றுவிட்டு வெளியேறவும் அந்த தாய்க்குத்தான் வருத்தமாகிப் போனது.
ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....
"கதிர்..." அவன் போட்ட கத்தலில் ஆபிஸே அதிர்ந்தது.
அவன் நடுங்கிக் கொண்டே வந்து நிற்கவும்
"இன்னக்கு நடக்க போற மீட்டிங் பத்தின ப்ராஜக்ட் பைல நேத்தே ரெடி பண்ண சொன்னேனா இல்லயா.....
இன்னும் என் கேபினுக்கு அது வந்து சேரல.... என்ன பண்ணிகிட்டு இருக்க?"
"சா...சா...சாரி சார்....மிஸ்.சுமதி தான் அது ரெடி பண்ணிட்டு இருந்தாங்க... அவங்க இன்னிக்கு லீவு....அ... அதான்"
"இடியட்....சின்ன பசங்க மாதிரி காரணம் சொல்லிகிட்டு இருக்காம போய் அத டைப் பண்ணி கொண்டு வா.... போ..." அவன் சொல்லி முடிக்க விட்டால் போதுமென்று ஓடியே விட்டான் கதிரவன்.
"ச்சேஹ்....எனக்குன்னு வந்து சேருது பாரு..." தலையில் அடித்துக் கொண்டவனுக்கு ஏனென்றே தெரியாத எரிச்சல் மண்டிக் கிடந்தது.
மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய ரகுவை அழைத்தான்.
"எஸ்கியூஸ் மீ"
"கம் இன்...."
"என்ன மச்சான்.... என்ன ப்ராப்ளம் உனக்கு.... வா வெளில பொய்ட்டு வர்லாம்..."
"இல்ல நா வர்ல...நீ போ"
"வாடா" என்றவன் அவனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வெளியேறினான்.
.....
"வருண் ஆபிஸுக்கு போலாம்"
இருக்கையில் கண்மூடி சாய்ந்தவாறே படுத்திருந்தவன் கண்களை திறவாமலே ரகுவிடம் பேசினான்.
"ஓகே மச்சான்...."
.....
"மச்சான் வருண் இன்னிக்கு ஆபீஸ் வர்லயாம்டா" சற்று குனிந்து காருக்குள் இருந்தவனிடம் பேசினான் ரகு....
தன் விழிகளை திறந்தவன் நெற்றி சுருக்கியவாறு தன் புருவத்தை நீவி விட்டுக் கொண்டே
"நீ வண்டிய எடு... கால் பண்ணி பேசலாம்...." எனவும் ரகு சுற்றி வந்து காரை எடுக்க தன் நண்பனுக்கு அழைத்தான் ரிஷிகுமார்.
"சொல்லு ஆர்.கே... இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க?" என யோசனையாய் கேட்டவனின் குரலிலிருந்த வேறுபாட்டை கண்டு கொண்டவன்
"எங்க இருக்க?" என்றான் அழுத்தமாக....
"கோபமா இருக்கியாடா....?"
"நத்திங்....நீ எங்க இருக்கன்னு சொல்லு"
"பீச்லடா...."
"வாட்....ஓகே இரு நாங்க வந்துட்றோம்"
"இல்லடா...நீ இரு...எந்த ப்ராப்ளமும் இல்ல"
"நா ப்ராப்ளம்னு சொல்லவே இல்லயே....அப்போ ஏதோ நடந்திருக்கு....ரைட்?"
"இ...இ..இல்லடா"
"அப்போ ஏன் உன் குரல் தடுமாறுது?"
'இவன் வேற'
"எதுவுமில்ல மச்சி....நீ டைம் வேஸ்ட் பண்ணி வர வேண்டாம்"
"ஓகே பய்"
'ஹப்பாடா....'
"பய்டா...." சோர்ந்து ஒலித்தது அவன் குரல்....
"ரகு பீச்ல இருக்கானாம்... அங்கே போலாம்...."
.....
கடற்கரையில் அமர்ந்து கடலலையையே பார்த்துக் கொண்டிருந்தவனின் எதரில் நிழலாட நிமிர்ந்து பார்த்தவனுக்கு ரிஷியைக் கண்டது அதிர்ச்சியாய் இருக்க எழப்போனவனை தடுத்து அருகில் அமர்ந்தனர் இருவரும்....
***
அவளை அடித்து விட்டு வந்ததிலிருந்து மனசே கேட்கவில்லை அஜய்க்கு....
இதுவரை அவள் அழுதாலே தாங்க முடியாதவனால் இன்று தானே அழுவதற்கு காரணமாகிப் போனதில் அப்படி வரு கவலை அவனுள்....
இதில் அவன் தந்தையின் செயல்கள் வேறு அவனை பாடாய்ப் படுத்திக் கொண்டிந்தது.
அஷ்வினியின் வார்த்தைகள் மற்றும் வருணின் தவிர்த்தல்
(தந்தையை) எல்லாமுமாக சேர்ந்து அவனை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தது.
இதற்கு மேல் முடியாதென்று தோன்றிவிடவே தன் தங்கையை காணச் சென்றான் அவன்....
....
மேசையில் தலை கவிழ்ந்து படுத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து அவள் தலையை ஆதரவாக தடவி விட்டவன் யாரென உணர்ந்தாலும் பேசாமல் அமைதியாகவே படுத்திருந்தாள் ரிக்ஷிதா.
அவளுக்கு அருகிலேயே ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து அவள் முகம் காண அவனை காணப் பிடிக்காதவள் போல் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள் அவன் தங்கை....
அவளை எழ வைத்து அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் தன் கட்டை விரலால் அவள் கண்ணீரை துடைத்து விட பட்டென தட்டி விட்டு மறுபடியும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"ஐ அம் சாரிமா... அப்பிடி நீ நடந்துக்கலாமா சொல்லு....அது தப்பில்லையா?" தலையை வருடி விட்டுக் கொண்டே கேட்டான்.
"அவன் கெட்டவனாவே இருந்தாலும் அவன்கிட்ட மரியாத இல்லாம பேசலாமாடா... நீ அவ்வளவு பேசியும் உனக்கு ஒரு வார்த்த சொன்னானா
அவனுக்கு சின்ன வயசுல இருந்தே உன் மேல பாசம் அதிகம்டி...."
"வலிக்குதா?" என்று விட்டு தான் அடித்த இடத்தை வருட மீண்டும் தட்டி விட்டாள்.
"கோபமா இருக்கன்னு புரியுதுடா.... ஐ அம் சாரி செல்லம்" அவள் எழுந்து நகரப் போக அவளை தடுத்தவன்
"அப்பொ உன் அண்ணன மன்னிக்க மாட்டியா... ஐ அம் சாரி அஷ்வி...."
என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து தன்னோடு சேர்த்து அணைக்க அவன் நெஞ்சில் குத்திக் கொண்டே அழுதாள்.
அதை தாங்கிக் கொண்டவனின் கை அவள் கூந்தலை வருடிவிட்டுக் கொண்டே இருந்தாலும் அவன் முகம் பெரும் குழப்பத்தில் இருந்தது.
.......
பிரசவ நாள் நெருங்க நெருங்க விதையாய் இருந்த பயம் விருட்சமாய் வளர்ந்து கொண்டே போனதில் தவித்துப் போனது பேதை மனம்.....
அவன் அருகிலேயே இருந்திருந்தால் இந்தப் பயம் வந்திருக்காதோ என்னவோ....
ஆனால் இப்போதோ நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாகத் தான் இருந்தது.
எப்போதும் அவன் அருகிலேயே இருக்க வேண்டும் என தோன்றும் போதெல்லாம் இயலாமையில் அழுகை தான் வந்து தொலைக்கும் அவளுக்கு....
அதுவே தொடந்த ஏக்கம் அவன் மேல் கோபமாக மாறிவிட்டிருந்ததை பாவம் அவன் அறியவில்லை....
அன்று கயல் வந்து வீட்டுக்கு அழைக்க முடியவே முடியாதென்று மறுத்தவளால் அதன் பிறகு இயல்பாகவே இருக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.
ஒரு தடவையாயாவது பார்த்து விட மாட்டோமா என்றிருக்கையில் கடவுளாகப் பார்த்து அன்று மறுபடியும் கயலை அனுப்பி விட்டிருந்தார்.
"அஷ்வி...." கயல் தோளை தொடவும் தன் சிந்தை கலைந்தவள் அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.
"எப்பிடி இருக்க?"
"இருக்கேன் கயு...நீ சந்தோஷமா இருக்கியா?"
"ம்...ஆமா... காலேஜ் கட் பண்ணிட்டு உன்ன பாக்க வந்தா...நீ என்ன அமைதியா இருக்க?"
"அதான் பாத்துட்டேல்ல?"
"ஏன்டி இப்பிடி பேசுற... சரி....
இன்னிக்காவது வீட்டுக்கு வர்றியா ப்ளீஸ்...."
"முடியாது...."
"ப்ளீஸ் அஷ்வி....ப்ளீஸ் ப்ளீஸ்...."
"இல்ல கயு அது சரியா வராது"
"ப்ளீஸ்கா...ஒரே ஒரு நாள் தானே... ரொம்ப போரடிக்குதுடி... அத்தான் வீட்ல இல்ல....ப்ளீஸ் வா அஷ்வி"
"பாக்கலாம்"
"வர்றேன்னு சொல்லு அஷ்வி... ப்ளீஸ்...எனக்காக ப்ளீஸ்டி....
இன்னிக்கி மட்டும்"
"அது...."
"ஏன்டி கெஞ்ச விட்ற?"
"சரி வர்றேன்"
"ஹே..."
சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவள் அவள் கழுத்தை கட்டிக் கொண்டு அவளின் கண்ணத்தில் இதழ் பதித்தாள்.
காலை....
உதட்டில் உறைந்த சிரிப்புடன் உறங்கும் தன் மனையாளை ஆசையாய் வருடியது ரிஷியின் பார்வை....
தன்னையும் எழ விடாது செய்து கொண்டிருந்தவளின் குறும்பில் பளீரென சிரித்தவன் தன்னை சுற்றியிருக்கும் அவள் கைகளை மெதுவாக எடுக்க விழித்துக் கொண்டாள் பாவை.
அவன் நெஞ்சில் தலைசாய்த்து படுத்திருந்தவள் அவனை அண்ணார்ந்து பார்த்து
"ப்ச்....உங்களால கொஞ்ச நேரம் இருக்க முடியாதா என்கூட....வேல வேல வேல.... அதயே கல்யாணம் பண்ணிகிட்டு இருந்திருக்க வேண்டியது தானே?" எனவும் சிரித்து விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை தன்னோடு இன்னும் அணைத்துக் கொண்டு
"இன்னிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு கண்ணம்மா...ப்ளீஸ்டா... சீக்கிரம் வந்துடுவேன்...." என்றான் காதலாய்....
"முடியாது முடியாது...." சிறு பிள்ளை போல் சிணுங்கியவளை பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு....
"இட்ஸ் ஓகே....அத என் செல்ல பொண்டாட்டிக்காக கேன்ஸல் பண்ணிட்றேன்.... இப்போ ஓகேவா?" அவள் மூக்கை பிடித்து ஆட்ட
"லவ் யூ மாமா...." என்றவாறே அவன் கண்ணத்தில் அழுத்த முத்தமிட்டாள்.
தூக்கத்திலிருந்து திடுமென விழித்தவளுக்கு அது கனவென்று உணர்ந்து கொள்ளவே சற்று நேரம் பிடித்தது.
இன்னும் அவன் தந்த முத்தத்தின் ஈரம் இருப்பது போலவே இருக்க தன் நெற்றியை தொட்டுப் பார்த்துக் கொண்டவளுக்கு அப்போதுதான் அது கனவென்பது உறுதியானது.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் கண்களை மூடிக் கொண்டு பின்னால் சாய கரகரவென்று வழியத் துவங்கியது கண்ணீர்....
எந்தப் பெண்ணுக்குமே தன்னுடைய நிலைபோல் ஒரு போதும் வந்து விடக்கூடாது என மானசீகமாய் வேண்டுதலை வைத்தவள் முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள்.
அவளும் எத்தனை நாள்தான் எனக்கு எந்த பாதிப்புமே இல்லை என்பது போல் நடிப்பது....
நேற்று அவனை பார்த்ததிலிருந்தே அழுகையாக வந்தாலும் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவளால் இன்றைய கனவின் தாக்கத்தில் அழாமல் இருக்க முடியவில்லை....
'என்னால முடில தேவ்....சத்தியமா செத்துடனும் போல இருக்கு.... ஏன் தேவ் பொய்யாகிப் போனீங்க....
என்னால அந்த ஏமாற்றத்த தாங்கிக்கவே முடிலயே... நானும் எத்தன நாளைக்கு தான் வெளில நடிக்கிறது.... உங்க மேல கோபம் வெறுப்பு இருக்கு.... பட் அதயும் தாண்டி.... அதயும் தாண்டி.... நா.... நா..... உங்கள உயிருக்குயிரா லவ் பண்றேன் தேவ்.... எனக்கு நீங்க வேணும்....ஆ...ஆனா என்னால ஏத்துக்க முடிலயே..நா என்ன பண்ணட்டும்....' தன்னவனிடமே விடை தேடி ஊமையாய் அரற்றியது அவள் உள்ளம்!!!
வெற்றிவேல் யுனிவர்சிட்டி.....
"அம்மு....பேசமாட்டியா... ப்ளீஸ் அம்மு.... சாரிடி....வீட்டுக்கு வா ப்ளீஸ்?"
"...."
"ஏன்டி இப்பிடி இருக்க.... புரிஞ்சிக்கோடி....
இப்போதைக்கு சொல்லலன்னாலும் சத்தியமா ஒரு நாள் சொல்லிருவேன் அம்மு...."
"நீ சொல்லும் வர நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன்"
பிடிவாதமாய் மறுத்தாள்.
"அம்மு...உனக்கு என் மேல நம்பிக்க இல்லயா?"
"இருக்கு"
"தேங்க்ஸ்டி"
"அதுக்காக நீ சொல்லாம இருக்க முடியாது"
"இப்போ என்ன உனக்கு தெரியனும் அவ்வளவுதானே?"
"ஆமா...."என்றாள் கண்கள் மின்ன...
"அப்போ எனக்கு சத்தியம் பண்ணி கொடு"
"எதுக்கு?"
"அத அப்பறமா சொல்றேன் நீ சத்தியம் பண்ணு"
"அதெல்லாம் முடியாது....நீ முதல்ல விஷயத்த சொல்லு அப்பறமா பண்றேன்" என்றாள் தெளிவாக....
'இவள பத்தி தெரிஞ்சும் கேக்குறியேடா' காறித் துப்பியது மனசாட்சி....
"என் மேல நம்பிக்க இருந்தா சத்தியம் பண்ணி கொடு" கிடுக்கிப்பிடி போட்டான் அவன்...
அவனையே பார்த்திருந்தவள் சட்டென அவன் கைமீது தன் கையை வைத்து விட அவனுக்குத்தான் அவன் மீதான அவள் நம்பிக்கையில் புல்லரித்துப் போனது.
"இன்னும் ஒன் கண்டிஷன்"
"கண்டிஷனா... சரி சொல்லு"
"இன்னக்கு நீ நம்ம வீட்டுக்கு வரனும்... அதுவும் உன் அக்கா கூட...
இன்னக்கி நீ வீட்டுக்கு வா....நானே உன்கிட்ட எல்லாதயும் சொல்லிட்றேன்"
"ஓகேடா....பட் அஷ்வி...."
"அது எனக்கு தெரியாது.. கண்டிஷன்ஸுக்கு ஓகேனா எனக்கும் ஓகே"
"சரி...." என்றவள் எழுந்து செல்ல அவனுக்குத் தான் இங்கே பயத்தில் காய்ச்சல் வரும்போல் இருந்தது.
இராமநாதபுரம்.....
"மா யோசிச்சுதான் பேசுறியா?"தன் தாயியிடம் கத்திக் கொண்டிருந்தான் வருண்.
"நல்ல வரன் வந்திருக்குடா.... இப்போவே தேவயில்லன்னு சொல்றாங்க"
"புரிஞ்சுதான் பேசுறியா நீ....ரிக்ஷி இப்பிடி இருக்கும் போது என்னால இந்தக் கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாதுமா...."
அவன் முடிவாய் மறுத்துவிட அப்போதுதான் கீழே இறங்கி வந்த அவனது தங்கை இதை கேட்டு கோபமாய் வந்தவள்
"விஜி...இங்க எனக்காக யாரும் அவங்களோட வாழ்க்கய தியாகம் பண்ண வேண்டிய அவஷியம் இல்ல... கல்யாணம் பண்ணிக்கிறதுல நான் தான் தடயா இருக்குறேன்னா நா எங்கயாவது போயிட்றேன்....அவங்கள சந்தோஷமா இருக்க சொல்லுங்க" என வெடித்தாள்.
அதில் வருண் அமைதியாய் அவளைப் பார்த்திருக்க விஜயலக்ஷ்மி
"என்ன பேச்சு பேசுற அஷ்வா... அவன் அந்த அர்தத்துல சொல்லல.... உன் வாழ்க்கைகாக தானே பாக்குறான்" என்றார் ஆதங்கமாக....
"அதயேதான் நானும் சொல்றேன்....
எனக்காக யாரும் தியாகம் பண்ண வேண்டிய அவஷியம் இல்ல"
"ரிக்ஷி...."அஜய் இடையிட்டான் கோபமாக...
"...."
"அவன் உன் அண்ணன்....இப்பிடி பேசுறத முதல்ல நிறுத்து"
"முடியாது....நா அப்பிடிதான் பேசுவேன்....கொலகாரனுக்கு சப்போர்ட் பண்ணி அவனுக்கு ப்ரண்டா இருக்குறவனுக்கு எல்லாம் என்னால மரியாத குடுக்க முடியாது" அவள் முடிக்கும் முன் இடியென வந்திறங்கியது அஜய்யின் அறை....
அனைவரும் அதிர்ச்சியாய் நோக்க
"எங்க இருந்து வந்துது இந்த பழக்கம்....ஒழுங்கா இரு... இல்லன்னா நடக்குறது வேற"அவன் கோபமாய் எச்சரிக்க
"இல்லன்னா என்னடா பண்ணுவ?" அவளும் வார்த்தையை விடவும் அவனுக்கு கோபம் இன்னும் அதிகமாயிற்று....
"டாவா....இனியொரு தடவ மரியாத இல்லாம வார்த்த வந்துச்சு தொலச்சிறுவேன் ஜாக்கிரதை" விரல் நீட்டியவனை பின்னால் இழுத்து விட்டு அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்தான் வருண்.
"நீ உள்ள போ அஷ்வினி..."
"நீங்க சொல்லி நா பண்ணனுமா?"
அதற்கும் எரிச்சல் பட்டவளை அமைதியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் விஜயலக்ஷ்மி தான் பொங்கி விட்டார்.
அவளை தன் புறம் திருப்பி அடிக்க கை ஓங்க அதனைத் தடுத்துப் பிடித்த வருண்
"உள்ள போ அஷ்வினி" என்றான் அழுத்தமாக....
அவன் குரலில் என்ன கண்டாளோ எதுவும் பேசாமல் அமைதியாய் மேலேறிச் செல்ல அவள் போகும் வரை பார்த்திருந்து விட்டு
"அஜய் நீயும் போ..."என்க
"இல்லடா நா" பேச வந்தவனை தடுத்து
"போன்னு சொல்றேன்ல" அவன் கோபப்பட்டதை நம்ப முடியாமல் பார்த்தவன் அடுத்த நொடி சென்றிருந்தான்.
வருணுக்கு கோபமே வராது.... ஆனால் அஜய் அவனுக்கு நேர் எதிர்....
அதனால் தான் இன்று அவன் கோபப்பட்டதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது அஜய்க்கு....
அடுத்ததாக பேசப் போன விஜயலக்ஷ்மியையும் தடுத்தவன்
"மா...நீ எதுவும் ஒர்ரி பண்ணிக்காத....இத பத்தி அப்பறமா பேசலாம்....நா வெளில பொய்ட்டு வந்துட்றேன்..."
என்றுவிட்டு வெளியேறவும் அந்த தாய்க்குத்தான் வருத்தமாகிப் போனது.
ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....
"கதிர்..." அவன் போட்ட கத்தலில் ஆபிஸே அதிர்ந்தது.
அவன் நடுங்கிக் கொண்டே வந்து நிற்கவும்
"இன்னக்கு நடக்க போற மீட்டிங் பத்தின ப்ராஜக்ட் பைல நேத்தே ரெடி பண்ண சொன்னேனா இல்லயா.....
இன்னும் என் கேபினுக்கு அது வந்து சேரல.... என்ன பண்ணிகிட்டு இருக்க?"
"சா...சா...சாரி சார்....மிஸ்.சுமதி தான் அது ரெடி பண்ணிட்டு இருந்தாங்க... அவங்க இன்னிக்கு லீவு....அ... அதான்"
"இடியட்....சின்ன பசங்க மாதிரி காரணம் சொல்லிகிட்டு இருக்காம போய் அத டைப் பண்ணி கொண்டு வா.... போ..." அவன் சொல்லி முடிக்க விட்டால் போதுமென்று ஓடியே விட்டான் கதிரவன்.
"ச்சேஹ்....எனக்குன்னு வந்து சேருது பாரு..." தலையில் அடித்துக் கொண்டவனுக்கு ஏனென்றே தெரியாத எரிச்சல் மண்டிக் கிடந்தது.
மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய ரகுவை அழைத்தான்.
"எஸ்கியூஸ் மீ"
"கம் இன்...."
"என்ன மச்சான்.... என்ன ப்ராப்ளம் உனக்கு.... வா வெளில பொய்ட்டு வர்லாம்..."
"இல்ல நா வர்ல...நீ போ"
"வாடா" என்றவன் அவனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வெளியேறினான்.
.....
"வருண் ஆபிஸுக்கு போலாம்"
இருக்கையில் கண்மூடி சாய்ந்தவாறே படுத்திருந்தவன் கண்களை திறவாமலே ரகுவிடம் பேசினான்.
"ஓகே மச்சான்...."
.....
"மச்சான் வருண் இன்னிக்கு ஆபீஸ் வர்லயாம்டா" சற்று குனிந்து காருக்குள் இருந்தவனிடம் பேசினான் ரகு....
தன் விழிகளை திறந்தவன் நெற்றி சுருக்கியவாறு தன் புருவத்தை நீவி விட்டுக் கொண்டே
"நீ வண்டிய எடு... கால் பண்ணி பேசலாம்...." எனவும் ரகு சுற்றி வந்து காரை எடுக்க தன் நண்பனுக்கு அழைத்தான் ரிஷிகுமார்.
"சொல்லு ஆர்.கே... இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க?" என யோசனையாய் கேட்டவனின் குரலிலிருந்த வேறுபாட்டை கண்டு கொண்டவன்
"எங்க இருக்க?" என்றான் அழுத்தமாக....
"கோபமா இருக்கியாடா....?"
"நத்திங்....நீ எங்க இருக்கன்னு சொல்லு"
"பீச்லடா...."
"வாட்....ஓகே இரு நாங்க வந்துட்றோம்"
"இல்லடா...நீ இரு...எந்த ப்ராப்ளமும் இல்ல"
"நா ப்ராப்ளம்னு சொல்லவே இல்லயே....அப்போ ஏதோ நடந்திருக்கு....ரைட்?"
"இ...இ..இல்லடா"
"அப்போ ஏன் உன் குரல் தடுமாறுது?"
'இவன் வேற'
"எதுவுமில்ல மச்சி....நீ டைம் வேஸ்ட் பண்ணி வர வேண்டாம்"
"ஓகே பய்"
'ஹப்பாடா....'
"பய்டா...." சோர்ந்து ஒலித்தது அவன் குரல்....
"ரகு பீச்ல இருக்கானாம்... அங்கே போலாம்...."
.....
கடற்கரையில் அமர்ந்து கடலலையையே பார்த்துக் கொண்டிருந்தவனின் எதரில் நிழலாட நிமிர்ந்து பார்த்தவனுக்கு ரிஷியைக் கண்டது அதிர்ச்சியாய் இருக்க எழப்போனவனை தடுத்து அருகில் அமர்ந்தனர் இருவரும்....
***
அவளை அடித்து விட்டு வந்ததிலிருந்து மனசே கேட்கவில்லை அஜய்க்கு....
இதுவரை அவள் அழுதாலே தாங்க முடியாதவனால் இன்று தானே அழுவதற்கு காரணமாகிப் போனதில் அப்படி வரு கவலை அவனுள்....
இதில் அவன் தந்தையின் செயல்கள் வேறு அவனை பாடாய்ப் படுத்திக் கொண்டிந்தது.
அஷ்வினியின் வார்த்தைகள் மற்றும் வருணின் தவிர்த்தல்
(தந்தையை) எல்லாமுமாக சேர்ந்து அவனை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தது.
இதற்கு மேல் முடியாதென்று தோன்றிவிடவே தன் தங்கையை காணச் சென்றான் அவன்....
....
மேசையில் தலை கவிழ்ந்து படுத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து அவள் தலையை ஆதரவாக தடவி விட்டவன் யாரென உணர்ந்தாலும் பேசாமல் அமைதியாகவே படுத்திருந்தாள் ரிக்ஷிதா.
அவளுக்கு அருகிலேயே ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து அவள் முகம் காண அவனை காணப் பிடிக்காதவள் போல் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள் அவன் தங்கை....
அவளை எழ வைத்து அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் தன் கட்டை விரலால் அவள் கண்ணீரை துடைத்து விட பட்டென தட்டி விட்டு மறுபடியும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"ஐ அம் சாரிமா... அப்பிடி நீ நடந்துக்கலாமா சொல்லு....அது தப்பில்லையா?" தலையை வருடி விட்டுக் கொண்டே கேட்டான்.
"அவன் கெட்டவனாவே இருந்தாலும் அவன்கிட்ட மரியாத இல்லாம பேசலாமாடா... நீ அவ்வளவு பேசியும் உனக்கு ஒரு வார்த்த சொன்னானா
அவனுக்கு சின்ன வயசுல இருந்தே உன் மேல பாசம் அதிகம்டி...."
"வலிக்குதா?" என்று விட்டு தான் அடித்த இடத்தை வருட மீண்டும் தட்டி விட்டாள்.
"கோபமா இருக்கன்னு புரியுதுடா.... ஐ அம் சாரி செல்லம்" அவள் எழுந்து நகரப் போக அவளை தடுத்தவன்
"அப்பொ உன் அண்ணன மன்னிக்க மாட்டியா... ஐ அம் சாரி அஷ்வி...."
என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து தன்னோடு சேர்த்து அணைக்க அவன் நெஞ்சில் குத்திக் கொண்டே அழுதாள்.
அதை தாங்கிக் கொண்டவனின் கை அவள் கூந்தலை வருடிவிட்டுக் கொண்டே இருந்தாலும் அவன் முகம் பெரும் குழப்பத்தில் இருந்தது.
.......
பிரசவ நாள் நெருங்க நெருங்க விதையாய் இருந்த பயம் விருட்சமாய் வளர்ந்து கொண்டே போனதில் தவித்துப் போனது பேதை மனம்.....
அவன் அருகிலேயே இருந்திருந்தால் இந்தப் பயம் வந்திருக்காதோ என்னவோ....
ஆனால் இப்போதோ நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாகத் தான் இருந்தது.
எப்போதும் அவன் அருகிலேயே இருக்க வேண்டும் என தோன்றும் போதெல்லாம் இயலாமையில் அழுகை தான் வந்து தொலைக்கும் அவளுக்கு....
அதுவே தொடந்த ஏக்கம் அவன் மேல் கோபமாக மாறிவிட்டிருந்ததை பாவம் அவன் அறியவில்லை....
அன்று கயல் வந்து வீட்டுக்கு அழைக்க முடியவே முடியாதென்று மறுத்தவளால் அதன் பிறகு இயல்பாகவே இருக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.
ஒரு தடவையாயாவது பார்த்து விட மாட்டோமா என்றிருக்கையில் கடவுளாகப் பார்த்து அன்று மறுபடியும் கயலை அனுப்பி விட்டிருந்தார்.
"அஷ்வி...." கயல் தோளை தொடவும் தன் சிந்தை கலைந்தவள் அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.
"எப்பிடி இருக்க?"
"இருக்கேன் கயு...நீ சந்தோஷமா இருக்கியா?"
"ம்...ஆமா... காலேஜ் கட் பண்ணிட்டு உன்ன பாக்க வந்தா...நீ என்ன அமைதியா இருக்க?"
"அதான் பாத்துட்டேல்ல?"
"ஏன்டி இப்பிடி பேசுற... சரி....
இன்னிக்காவது வீட்டுக்கு வர்றியா ப்ளீஸ்...."
"முடியாது...."
"ப்ளீஸ் அஷ்வி....ப்ளீஸ் ப்ளீஸ்...."
"இல்ல கயு அது சரியா வராது"
"ப்ளீஸ்கா...ஒரே ஒரு நாள் தானே... ரொம்ப போரடிக்குதுடி... அத்தான் வீட்ல இல்ல....ப்ளீஸ் வா அஷ்வி"
"பாக்கலாம்"
"வர்றேன்னு சொல்லு அஷ்வி... ப்ளீஸ்...எனக்காக ப்ளீஸ்டி....
இன்னிக்கி மட்டும்"
"அது...."
"ஏன்டி கெஞ்ச விட்ற?"
"சரி வர்றேன்"
"ஹே..."
சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவள் அவள் கழுத்தை கட்டிக் கொண்டு அவளின் கண்ணத்தில் இதழ் பதித்தாள்.