susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-14
இரண்டு நாட்கள் மெதுவாய் நகர்ந்திருந்தன. ஆருத்ராவோ, இமயனுக்காய் காத்திருந்தாள். அவன் சில நாட்களாய் வீடு வந்து சேரவே இல்லை. சட்டென மனதிற்குள் வந்த ஞாபகங்களில், அவன் தன்னை மாயன் என அறிமுகப் படுத்திக் கொண்டிருந்து மட்டும் தான் ஞாபகம் இருந்தது.
வேறு எதுவுமே அவளுக்கு ஞாபகமே வரவில்லை. எத்தனை முறை யோசித்தாலும், வேறு எதுவும் அவளுக்குத் தெரியவும் இல்லை. யாரிடம் அவனைப் பற்றி விசாரிப்பது? அவன் எப்போது வருவான்? எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.
அவளுக்கு அவளின் பதிமூன்று வயதில், தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவளுக்காக சிரமப்பட்டு பட்டாம் பூச்சியைப் பிடித்துத் தந்தவன், அவள் பார்வைக்கு நாயகனாகத்தான் தெரிந்தான். பதின் பருவத்தில் வரும் ஈர்ப்பு அவன் மீது இருந்ததென்னவோ நிஜம் தான். ஆனால், நாட்கள் போகப் போக, அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து காணாமல் போனதும் நிஜம் தான்.
ஆனால், அவனைப் போல், மாநிறமாய், அவனின் சாயலில் இருந்த ஆண்கள் மீது, அவள் விழிகள், நொடி நேரம், அதிகமாக நிலைத்ததும் நிஜம். இவ்வளவு ஏன், அவள் காதலித்த விவேக் கூட, கொஞ்சம் சாயலில் இமயனைப் போலத்தான் இருந்தான்.
அனைத்துமே அவள் பொறுமையாய் நிதானமாய் யோசிக்கும் போது தான் புரிந்தது. ஆனாலும், சிறு வயதில் ஏற்பட்ட ஈர்ப்பிற்காக மட்டும், அவனைத் திருமணம் செய்துக்கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் அவளிடம் இருந்தது.
'இப்போது என்ன செய்வது? இவனை எப்படி சந்திப்பது?' என்ற யோசனை அவளுக்குள் ஓட, ராகவைத் தேடிப் போனாள் அவள்.
"ராகவ்.. ராகவ்..!" என அவள் சத்தமாக அழைத்துக் கொண்டே உள்ளே நுழைய,
"எதுக்கு இப்படி கத்தறே?!" எனக் கோபமாய் கேட்டான் ராகவ்.
"எனக்கு உன் அண்ணனைப் பார்க்கணும். அவன் எங்கே இருப்பான்?"
"எனக்குத் தெரியாது ஆரு!"
"நீயெல்லாம் ஒரு தம்பியா டா? உங்க அண்ணன் ரெண்டு நாளாய் வீட்டுக்கு வரலை. என்ன செய்றான்? ஏது செய்றான்? எதையும் கண்டுக்க மாட்டே அப்படித்தானே?" என அவள் கேட்க,
"அதெல்லாம் அண்ணன் சொல்ல மாட்டாரு. அவரு செய்ற வேலைக்கு நேரம், காலமெல்லாம் சொல்ல முடியாது.!" எனச் சொன்னான் ராகவ்.
"ஆமா, உங்க அண்ணன் போலீஸ் வேலை பார்க்கிறாரா? இல்லை டாக்டர் வேலை பார்க்கிறாரா? நேரம் காலம் தெரியாமல் வேலை செய்ய?" என மென்மையாய் சலித்துக்கொண்டாள்.
"ஆமா.. என் அண்ணனைப் பார்த்தாலே, எரிஞ்சு எரிஞ்சு விழுவ.. இப்போ என்ன புதுசா அவரைத் தேடுற?" என. ராகவ் கேட்க, தடுமாறிப் போனாள் ஆருத்ரா.
"அது.. வந்து.. சும்மா தான்..!" எனத் தடுமாறினாள் ஆருத்ரா.
"பார்க்கிற நேரமெல்லாம் எரிஞ்சு எரிஞ்சு விழற நீ.. தேடுறதெல்லாம் அதிசயமாகத்தான் இருக்கு." எனச் சலித்துக் கொண்ட ராகவ்,
"இமயன் நம்பர் உனக்கு வாட்ஸ்-அப் பண்ணயிருக்கேன்.. கால் பண்ணி பாரு. அவன் கிட்டே உன் நம்பர் இருக்கான்னு தெரியலை.
ஒருவேளை அவன் கிட்டே உன் நம்பர் இருந்தாலும், அவன் அட்டன் பண்ணுறது சந்தேகம் தான்.!" என ராகவ் சொல்ல, அவள் முகம் சட்டெனச் சுருங்கியது.
"இன்னும் நாலு நாள் தான் இருக்கு கல்யாணத்திற்கு. இன்னைக்கு சாயங்காலம் ஊருக்குக் கிளம்பணும். அதனால் எப்படியும் ஈவ்னிங்குள்ளே வந்துடுவான். நாளைக்கு காலையிலே பந்தக்கால் ஊன்றணும் இல்லையா?!" என அவன் சொல்ல,
"எந்த ஊருக்குப் போகணும்?" எனக் கேட்டாள் அவள்.
"கீழவளவு தான். அது தான் எங்க சொந்த ஊரு. சொந்த மண்ணில் தான் கல்யாணம் பண்ணணும்ங்கிறது, இமயனோட ஆசை. முதல் கல்யாணத்தின் போதே யோசிச்சோம். ஆனால், செய்ய முடியலை. ஆனால் இந்த முறை அண்ணன் மட்டும் இல்லை. வீட்டில் எல்லோருமே அங்கே தான் நடத்தணும்ன்னு ரொம்ப பிடிவாதமாய் இருக்காங்க!" .எனச் சொல்லி நிறுத்தினான் ராகவ்.
அதே நேரம், "ஹாய் ராகவ்!" என்றபடி வந்து நின்றாள் கவிநயா.
கவிநயாவைப் பார்த்ததும் ஆருத்ராவின் முகம் கோபத்தைப் பிரதிபலித்தது. கவிநயா வந்து நின்றதும்,
"அப்பறம் பார்க்கலாம் ராகவ்!" என ஆருத்ரா நகரப் போக,
"ஆருத்ரா ஒரு நிமிஷம்!" எனத் தடுத்து நிறுத்தினாள் கவிநயா.
"என்னைப் பார்த்தால், உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். உங்களோட கோபம் எனக்குப் புரியுது. ஆனால், இமயனோட வாழ்க்கை இப்படி மாறினதற்கு நான் தான் காரணம்ங்கிற கில்ட் எனக்கு இருக்கு. அதுக்காகவாவது, உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியணும்ன்னு நான் நினைக்கிறேன்.!" என கவிநயா சொல்ல, என்ன சொல்வதெனத் தெரியாமல் விழித்தாள் ஆருத்ரா.
யோசனையில் மனம் உழன்றது.
'இமயன் அவன் தரப்பை சொல்லும் வரை காத்திருப்பதா? இல்லை இவளிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வதா? உண்மை தானே தெரிய வேண்டும், இவளும் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறாள் தானே, சம்மந்தப்பட்ட இருவரில், யார் சொன்னால் என்ன?' என அவள் மனம் குழப்பமாய் யோசித்தது. ஆனால், இதுவரை அவசரப்பட்டு செய்ததெல்லாம் போதும், இமயனே எதுவாக இருந்தாலும், நேரடியாய் சொல்லட்டும். என ஒரு தெளிவான முடிவை எடுத்திருந்தாள் ஆருத்ரா. அவன் மீதிருந்த சின்ன நம்பிக்கை அவளை இந்த முடிவை எடுக்க வைத்திருந்தது. அவளுக்கு உண்மை தெரிய வேண்டும் தான்.
ஆனால், அவளின் தனிப்பட்ட வாழ்க்கையின் இடையே கவிநயா வருவதை அவள் விரும்பவில்லை. இது அவள் வாழ்க்கை எனும் போது, முடிவும் அவளுடையாதாக தானே இருக்க வேண்டும். கவிநயா ஒரு முடிந்து போன அத்தியாயம். அதை காற்புள்ளி இட்டு தொடர்வதில், ஆருத்ராவிற்கு சுத்தமாய் விருப்பமில்லை.
"இட்ஸ் ஓகே கவிநயா! நான் இமயன் கிட்டேயே கேட்டுக்கிறேன். உங்களுக்கு எந்த சிரமமும் வேணாம்.!"
"அது இல்லை ஆருத்ரா! நான் என்ன சொல்ல வர்ரேன்னா..!" என கவிநயா எதோ சொல்ல வர, கை நீட்டி இடை நிறுத்தியவள்,
"நீங்க பொய் சொல்லலை.. எனக்குத் தெரியுது. பட், என் விருப்பத்தோடோ, விருப்பம் இல்லாமலோ, இமயன் என் வாழ்க்கைக்குள்ளே வந்துட்டார். உண்மை எதுவாக வேணும்ன்னாலும் இருந்துட்டு போகட்டும். அதை இமயனே வந்து சொல்லட்டும். நான் அதுவரை வெய்ட் செய்றேன். ஒண்ணும் பிராப்ளம் இல்லை. நீங்க இதைப் பற்றி கவலைப் படாதீங்க! நீங்க இமயனோட, இறந்த காலமா இருந்திருக்கலாம். ஆனால், அவனோட நிகழ்காலமாகவோ, எதிர்காலமாகவோ நீங்க இருக்க முடியாது. உங்களோட, நிகழ்காலமும், எதிர்காலமும் உங்க குடும்பம் தான். அவங்களோட சந்தோஷமா இருங்க! இமயன் வாழ்க்கையைப் பற்றின குற்றவுணர்வு உங்களுக்கு தேவையில்லை.!" கவிநயாவைப் பேசவே விடாமல், வெளிப்படையாய் பேசினாள் ஆருத்ரா.
"நிஜமாகவே என் மேல் உங்களுக்கு கோபம் இல்லை தானே?!" கவிநயா கேட்க, இடவலமாய் தலையசைத்தாள் ஆருத்ரா.
"தேங்க்ஸ் ஆரு! நீங்க என்னைப் புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கலை. இமயனோட வாழ்க்கை இப்படி மாறினதுக்கு முக்கியமான காரணம் நான் தான். அந்த கில்ட் இப்போவும் எனக்குள்ள இருக்கு. நான் வேணாம்ன்னு உறுதியாய் மறுத்திருந்தால், இந்தக் கல்யாணம் நடந்திருக்காது. ஆனால், அப்போ இருந்த சூழ்நிலையில், என்னால் என் அப்பாக்கிட்டே பேச முடியலை. அவர் எனக்கு நல்லது தான் செய்வாருன்னு நம்பினேன். பட், எல்லாரும் நமக்கு நல்லது செய்ய மாட்டாங்களே?" என்ற கவிநயாவின் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.
"பாஸ்ட் இஸ் பாஸ்ட் கவிநயா.! இதுவரை நடந்ததை எல்லாம் விட்டுடுங்க! இப்போ உங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்க வாழ்க்கை இருக்கு தானே?!" என ஆருத்ரா கேட்க, கவிநயாவின் தலை சம்மதமாய் ஆடியது.
"உண்மையைச் சொல்லப் போனால், எனக்கு உங்க மேலே மட்டுமில்லை. இமயன் மேலேயும் கோபம் இருந்தது தான்.இப்போவும் இருக்கு தான். ஆனாலும் ஏதோ ஒண்ணு, என்னைக் அந்தக் கோபத்தை இழுத்து பிடிக்க விடாமல் தடுக்குது. இப்போவும் இந்தக் கல்யாணத்தை என் மனசு முழுசா ஏத்துக்கலை தான். ஆனால், என் பக்கமிருந்து மட்டும் நான் யோசிக்கிறேன்னு அன்றைக்கு இமயன் பேசின போது தான் புரிந்தது. அவர் பக்கம் என்ன இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறேன்.!" என ஆருத்ரா தொடர்ந்து சொல்ல,
"ஆரு.. இமயன் மாதிரி ஒருத்தர் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும். வெளியிலிருந்து பார்க்க இது வெறும் ஒன் சைட் லவ் தானேன்னு தோணலாம். பட், இமயனோட காத்திருப்பு, காதல் எல்லாம் வரம்.!" என கவிநயா சொல்ல, வெறுமையாய் சிரித்துக் கொண்டாள் ஆருத்ரா.
"காதலோ, அன்போ, எதுவாக வேணும்ன்னாலும் இருக்கட்டும், வெளிப்படுத்தாமல், தனக்குள் வச்சிட்டு இருந்தால், தெரிய வேண்டியவங்களுக்கு எப்படி தெரியும்? என் மேல் இருக்கிற அன்பை என்கிட்டே சொல்லாமலே, நானே புரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறதும், என்னைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண முயற்சிக்கிறதும் சரியா? எல்லாரும் இமயன் பக்கமிருந்து மட்டுமே யோசிக்கிறீங்க! என் நிலையில் இருந்தும் யோசிங்க!" எனப் பட்டெனச் சொல்லிவிட்டாள் ஆருத்ரா.
இமயனைச் சந்தித்ததில் இருந்தே, தன்னை மட்டுமே எல்லாரும் குறை சொல்வதாய் தோன்றியது அவளுக்கு. இமயன் நல்லவனாகவே இருந்துவிட்டு போகட்டும். அவன் அவள் மீது வைத்திருக்கும் நேசம் உயர்ந்ததாகவே இருக்கட்டும். ஆனால், தனக்கு அவனைப் பற்றி புரிய வைப்பது இமயனின் கடமை தானே.? எதையுமே செய்யாமல், அவளாகவே புரிந்துக் கொள்ளட்டும், என நினைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? என்ற எண்ணத்தில் தான் பட்டெனப் பேசிவிட்டாள்.
"ஸாரி.. நான் உங்களை ஹர்ட் பண்ணணும்ன்னு சொல்லலை. நான் சொன்னது உங்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிச்சுடுங்க ஆரு!" எனச் சொன்ன கவிநயாவிடம்,
"நானும் நீங்க என்னை ஹர்ட் பண்ணீங்கன்னு சொல்லலை. என் பக்கமிருந்தும் யோசிச்சு பாருங்கன்னு சொல்றேன். நானும் உங்களைக் கஷ்டப்படுத்தணும்ன்னு சொல்லலை.!" என ஆருத்ரா சொல்லவும், புரிந்தது என்பது போல், தலையசைத்தபடியே விடைபெற்றுக் கிளம்பினாள் கவிநயா.
"ஏன் ஆரு.. இப்படி பேசினே? பாவம் கவி.. நீ இப்போவெல்லாம் யோசிக்காமல் பேசிடுற!" என ராகவ் சொல்ல,
"நான் உனக்கு பாவம் இல்லையா டா? உங்க இஷ்டத்திற்கு எல்லாரும் பண்ணுறீங்க? நல்லா யோசிச்சு பாரு.. அந்த விவேக்குடன் பிரேக் அப் ஆன உடனே, உன் அண்ணன் கூட, கல்யாணம் முடிவாகிடுச்சு. அவனை எனக்கு யாருன்னே தெரியாது. அவன் என்னை கல்யாணத்திற்காக ஃபோர்ஸ் பண்ணும் போது எனக்கு எப்படி இருக்கும்? அடுத்த அதிர்ச்சியாய் இத்தனை நாள் என் நண்பனா இருந்த நீ இமயனோட தம்பின்னு தெரியும் போது, எனக்கு எப்படி இருந்திருக்கும்.? நானும் மனுஷி தான் டா! இத்தனைக்கு அப்பறமும் என்னைக் குறை சொன்னால் கோபம் வருமா வராதா? எல்லாரும் அவனுக்கே சப்போர்ட் பண்ணுறதைப் பார்க்கும் போது, காசு கொடுத்து பேச வைக்கிறானோன்னு கூட எனக்குத் தோணுது. என்னால் முடியலை டா ராகவ்.!" என அவள் சலிப்பாய் சொன்னாள்.
"இன்னுமா நீ அந்த விவேக்கை நினைச்சுட்டு இருக்கே?!" எனக் கேட்டான் ராகவ்.
"அதெல்லாம் இல்லை டா. என்னை ஏமாத்தி பச்சை துரோகம் பண்ணினவனை நான் என் மனசில் இருந்து எப்போவோ தூக்கிப் போட்டேன். இப்போ எனக்குள்ளே இருக்கிறதெல்லாம் குழப்பம் தான். என் வாழ்க்கை என்ன ஆகப் போகுதுன்னு எனக்கே தெரியலை. ஒருபக்கம் எல்லாமே நல்லதுக்குன்னு தோணுது. இன்னொரு பக்கம், எதுவுமே நல்லதுக்கு இல்லையோன்னு தோணுது.!" என அவள் சொல்ல,
"ஏய்.. ஆரு! கொஞ்சம் அமைதியாய் இரு. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு! எல்லாமே சரியா போய்டும்!" எனச் சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு போய், அறையில் விட்டுவிட்டு வெளியே வந்திருந்தான்.
******
அறைக்குள் யோசனையோடு நின்றிருந்த ஆருத்ராவின் மனமோ, இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தது. ஒருமனமோ, இமயனுக்காய் வாதாட,
இன்னொரு மனமோ, அவனுக்கு எதிராக நின்று கொடி பிடித்தது. தனக்குள்ளேயே இருக்கும் ரெண்டும் கெட்டான் மனநிலையில், என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்தாள்.
'கவிநயாவிடம், வேண்டாமெனச் சொல்லிவிட்டேன்.. இப்போது எப்படித் தெரிந்துக்கொள்வது?! இப்போது நான் என்ன செய்வது?' என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, காத்திருக்கும் பொறுமை எல்லாம் சுத்தமாக இல்லை. சில நிமிடங்கள் யோசனையில் கடத்தியவள், பின் உறுதியான முடிவு எடுத்தவளாய், அலைபேசியை எடுத்து, ராகவ் சிறிது நேரத்திற்கு முன்னால் அனுப்பிய எண்ணிற்கு அழைப்புவிடுத்தாள்.
முதன் முறையாய் இமயனுக்கு அவளாக அழைக்கிறாள். மனம் ஒருவித படபடப்பை உணர்ந்தது. மனதிற்குள் பட்டாம்பூச்சி பறப்பதைப் போன்ற ஓருணர்வு. ஒரு சாதாரண அலைப்பேசி அழைப்பு அதற்கு ஏன் இத்தனை படபடப்பு அவளுக்குப் புரியவில்லை. விவேக்கை விரும்பிய காலங்களில், எத்தனையோ முறை அழைத்துப் பேசியிருக்கிறாள். ஆனால் இப்படியொரு படபடப்பையோ, பதற்றத்தையோ அவள் உணர்ந்ததில்லை. இமயனின் விஷயத்தில், அவளுக்கு ஒவ்வொன்றும் புதிதாகவும், புதிராகவும் இருந்தது.
'அவன் என் அழைப்பை ஏற்பானா?'
'அழைப்பை ஏற்று என்ன பேசுவான்?'
'என் அலைபேசி எண் அவனுக்குத் தெரியுமாமா?'
'அவன் அலைபேசியில் என் பெயரை என்னவெனப் பதிந்திருப்பான்?' என ஆயிரம் கேள்விகள் அவளுக்குள் ஓடியது. அவளுக்குள் எழுந்த அத்தனை கேள்விகளும், அவன் அழைப்பை ஏற்று,
"சொல்லு ஆரா!" என உரிமையாய்ச் சொன்ன ஒற்றை வார்த்தையில், கரைந்து காணாமல் போனது.
அவள் 'ஹலோ!' என்ற ஒற்றை வார்த்தையைக் கூடச் சொல்லவில்லை.. அழைப்பை ஏற்றவுடன், அவளை அவன் உரிமையாய் விளித்ததில், அவளுக்குள் ஏதேதோ மாற்றங்கள்.
"இ.. இமயன்.!" தட்டுத் தடுமாறி, தயங்கி இவள் அழைக்க,
"நீ எனக்கு ஃபோன் பண்ணியிருக்கன்னா நான் மாயன்னு உனக்கு ஞாபகம் வந்துடுச்சா?!" என அவன் கேட்டதும், ஒட்டுமொத்தாமாகவே அதிர்ந்துவிட்டாள் ஆருத்ரா. தான் வாய் திறந்து பேசாமலே, தன்னைப் பற்றி அத்தனையும் அறிந்து வைத்திருக்கிறானே.. என்ற உணர்வு மேலிட, தன்னையறியாமல் உடல் சிலிர்த்தது அவளுக்கு.
"வெறும் மாயன்ங்கிற பேரு மட்டும் தான் ஞாபகத்திற்கு வந்துச்சு! வேறு எதுவும் எனக்கு ஞாபகம் வரலை. எதையுமே சொல்லாமல் நீ பாட்டுக்கு போய்ட்ட.. நான் யார்கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கிறது? ஏன் இத்தனை நாளாய் வீட்டுக்கு வரலை? வேணும்ன்னே இதெல்லாம் செய்ற தானே?" என அவள் கேட்க, அந்தப் பக்கமிருந்து இமயனின் சிரிப்புச் சத்தம் தான் அவள் செவிகளில் விழுந்தது.
"என்னை மிஸ் பண்ணுறியா ஆரா?" என்ற அவனின் கேள்வி அவளிடம் சில நிமிடங்களுக்கு மௌனத்தை நிலைநாட்டியது.
"அ.. அதெல்லாம் இல்லை. அப்படி என்னதான் உன் கல்யாண வாழ்க்கையில் நடந்துச்சுன்னு எனக்குத் தெரியணும்! அவ்வளவு தான்.. நான் என்ன உன்னை உருகி உருகி லவ் பண்ணுறேனா என்ன? உன்னை மிஸ் பண்ணுறதுக்கு?!" எனச் சொன்னவளின் குரலில் ஆயிரமாயிரம் தடுமாற்றங்கள்.
"அவ்வளவு தானா? நிஜமாகவே அது மட்டும் தானா?" என்ற அவனின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
"ஆமா.. அது மட்டும் தான்..!" என அவள் அவசரமாய்ச் சொன்னதைக் கேட்டு இமயனின் இதழ்களில் சத்தமில்லாத புன்னகை.
"என்னோட கடந்த காலத்தில் என்ன வேணும்னாலும் நடந்திருக்கட்டும் ஆரா.. என்னோட நிகழ்காலமும் எதிர்காலமும் நீ மட்டும் தானே?" என அவள் கவிநயாவிடம் சொன்ன வார்த்தைகளை அப்படியே மாற்றி இவளிடம் சொன்னான் இமயவரம்பன்.
"நிஜமாகவே.. உனக்கு என்னைப் பிடிக்குமா..? இல்லை உன் அரசியல் ஆதாயத்திற்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியா?" எனத் திக்கித் திணறி அவள் கேட்ட அதே நேரம்,
"தங்கச்சி! இந்தப் பையன் உன் மேல் பைத்தியம் பிடிச்சு அலையறான். சீக்கிரம் இவனைக் கல்யாணம் பண்ணி, அந்தப் பைத்தியத்தைத் தெளிய வச்சிடு மா.!" என்ற குரல் திடீரெனச் செவியோரம் மோத, நிஜமாகவே பயந்து போனாள் ஆருத்ரா.
"யார்.. யார் பேசறீங்க?!" என அவள் யோசனையோடு வினவ,
"ஹேய் ஆரு! என் ஃப்ரெண்ட் அர்ஜுன் தான். உனக்குப் புரியற மாதிரி சொல்லணும்ன்னா கவிநயாவின் அண்ணன்.!" என அவசரமாய் இடையிட்டு இமயன் சொன்ன அதே நேரம், திடீரெனக் கேட்ட ஏதோ சத்தத்துடன், எதிர்பாராத விதமாய் அழைப்பு இடையிலேயே துண்டிக்கப்பட்டது.
பேசிக் கொண்டிருக்கும் போது, இணைப்பு தடைபட்டுவிட, மீண்டும், மீண்டும் இமயனுக்கு அழைத்துப் பார்த்தாள் ஆருத்ரா. அழைப்பு சென்று கொண்டே இருந்ததே ஒழிய, யாரும் அழைப்பை ஏற்கவே இல்லை.
'என்ன காரணமாக இருக்கும்? அர்ஜுன் எதாவது உண்மையைச் சொல்லிவிடுவான் எனப் பயந்து, இணைப்பைத் துண்டித்து விட்டானோ? என்னவாக இருக்கும்? நெட் ஒர்க் பிரச்சனையாக இருக்குமோ? அப்படி இருந்தால், அழைப்பு செல்லாதே? ஆனால், அழைப்பு ஏற்கபடாமல் தானே இருக்கிறது? வேண்டுமென்றே அழைப்பை ஏற்க மறுக்கிறானா? இல்லை வேறு ஏதாவது காரணமா? வேறு எதாவது நிகழ்ந்திருக்குமா?'
என அவள் குழம்பி தவித்து நேரம் போவதே தெரியாமல், நின்றிருந்த அதே தருணத்தில், மீண்டும் இமயனின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. இமயனின் அழைப்பைப் பார்த்ததும் தான் அவளால் நிம்மதியாய் மூச்சுவிட முடிந்தது.
"ஹலோ.. இமயன்!" என அவசரமாய் ஏற்றுக் காதில் வைக்க,
"ஹலோ! ஆருத்ரா! நான் அர்ஜுன் பேசறேன். நான் சொல்றதைக் கேட்டு பதற்றப் படாதீங்க! பயப்படாதீங்க! கொஞ்சம் பொறுமையாய் கேளுங்க!" என அர்ஜுன் பூடகமாய்ப் பேச, இங்கே பயப்பந்து உருண்டது அவளுக்குள்.
"இமயனுக்கு ஒண்ணும் இல்லை தானே?!" அவளை அறியாமலே, பதற்றமாய் அவள் குரல் வெளி வந்தது.
"நான் தான் சொல்றேன்ல்ல.. பதறாதீங்க! நான் இமயன் கூடத்தான் இருக்கேன். ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். உங்களைப் பார்க்கத்தான் சர்ப்ரைஸா வந்துட்டு இருந்தான். எதிர் பாராத விதமாய் இப்படி ஆகிடுச்சு. இமயன் ஸேஃப் தான்., நீங்க பயப்படாமல் இருங்க. ஹாஸ்பிட்டல் லொக்கேஷன் அனுப்பறேன் வந்துடுங்க!"
என அர்ஜுன் சொல்லிவிட்டு வைத்துவிட, அவள் காலின் கீழே பூமி நழுவிய உணர்வு. முதலில் அதிர்வில் அவளால் யோசிக்கவே முடியவில்லை. அதிர்வின் தாக்கத்தில் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனம் ஒருமாதிரி கனமாய் இருந்தது. அழுவதா? அமைதியாய் நிற்பதா? என்ன உணர்வுகளை வெளிப்படுத்த என்று கூடத் தெரியாத நிலையில், சட்டெனச் சுதாரித்து நிமிர்ந்து, சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்துக் கொண்டவள், முதலில் தன் அன்னையைத் தான் அழைத்தாள்.
"ம்மா! ம்மா!" அவசரமாய் அழைத்தபடி ஓடிவரும் மகளைப் பதற்றத்துடன் பார்த்தார் அபிராமி.
"என்ன ஆரு..? என்ன ஆச்சு? என்னத்துக்குடி இப்படி ஓடி வர்ர.?" பதற்றமாய் மகளைப் பார்த்து வினவினார் அவர்.
"இ.. இமயனுக்கு ஆக்ஸிடென்ட்..!" எனச் சொன்னவளுக்கு, அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்தது.
"ஏய்.. விளையாடாதே டி! கல்யாணம் நெருங்கிட்டு இருக்கிற நேரத்தில், ஆக்ஸிடென்ட்ன்னா ஆளுக்கு ஒண்ணா பேசுவாய்ங்க டி! உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை தான்.. அதுக்காக ஏதாவது பூகம்பத்தைக் கிளப்பி விட்டுடுடாதே ராசாத்தி!" பயமும் பதற்றமுமாய்ப் பேசினார் அபிராமி.
"நான் பொய் சொல்லி என்னம்மா செய்யப் போறேன்? நான் ஃபோனில் தான் பேசிட்டு இருந்தேன். திடீர்ன்னு ஏதோ சத்தம் கேட்டு ஃபோன் கால் கட் ஆகிடுச்சு. அப்பறம் தான் அர்ஜுன் கால் பண்ணி சொன்னார். கே.எம் ஹாஸ்பிட்டலுக்கு வரச் சொன்னாங்கம்மா!" என தொண்டை அடைக்க, அவள் சொல்ல, உயிர் நடுங்கிப் போனது அபிராமிக்கு.
மகளின் முகத்தில் வந்து போன உணர்வுகளில், அவளின் மனம் அவருக்கு ஓரளவிற்கு புரிந்தது. அவ திருமணம் கூடி வந்த நேரத்தில், இப்படி நடப்பது, இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ? பயம் சூழ்ந்தது அவர் மனதிற்குள்.
அடுத்தச் சில நிமிடங்களில், அர்ஜுனே அனைவருக்கும் தகவல் தெரிவித்திருக்க, அனைவரும் பதற்றமாய் வீட்டின் கூடத்தில், கூடியிருந்தனர்.வீட்டிலிருந்த அனைவரின் முகங்களிலும் கவலையின் சாயல். ஆருத்ராவின் மனதைப் புண்படுத்திவிடக் கூடாதென்பதற்காக, அமைதியாய் அனைவரும் நின்றிருக்க,
"ஏன் அபி! நம்ம கல்யாணம் நிச்சயம் பண்ணின நேரம் எதுவும் சரியில்லையோ? பெரியவர் சொல்லிட்டாருன்னு ஜாதகம் கூடப் பார்க்காமல் தானே, கல்யாணம் முடிவு செஞ்சீங்க? ஜாதகம் பார்த்திருக்கணுமோ?!" என நேரம் காலம் தெரியாமல் வாயை விட்டார், ஆருத்ராவின் பெரியம்மாவான பொன்னி.
"அக்கா! சும்மா இருங்க!" என அபிராமி தடுக்க முயல, பொன்னியைப் பிடித்துக் கொண்டு தானும் பேசினார், இமயனின் அப்பத்தாவான செல்லம்மா.
"முதல் பொண்டாட்டியா வந்தவ, எம் பேரன் வாழ்க்கையைக் கொண்டு போனாள். இவ இன்னும் வீட்டுக்குள்ளே வரவே இல்லை. எம் பேரன் உசிரை எடுத்துடுவா போல..!" என வெளிப்படையாய்ப் புலம்பியிருந்தார் செல்லம்மா.
"அத்தை! வாயை வச்சுக்கிட்டு சும்மா இருங்க! விபத்துங்கிறது எதிர்பாராமல் நடக்கிறது. அதுக்குப் போய் அந்தப் பிள்ளையைக் குறை சொல்றீங்க? அதெல்லாம் எம் மயனுக்கு ஒண்ணும் ஆகாது. அவன் நல்லாத்தேன் இருப்பான். அர்ஜுன் தான் சொன்னானே இமயன் நல்லாத்தேன் இருக்கான்னு சொன்னானே.. இமயனைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு கிளம்பறதை விட்டுட்டு, அந்தப் பிள்ளையைக் குத்தம் சொல்றதெல்லாம் தப்பு அத்தை. நம்ம சூழ்நிலையும் உங்களுக்குத் தெரியும் தானே? எப்போ சிக்குவியான் போட்டுத் தள்ளலாம்ன்னு தானே காத்து கிடக்காய்ங்க! எதையும் யோசிக்காமல் பேசாதீங்கா அத்தை!" எனப் பேசிய இமயனின் அன்னை தனலெட்சுமி,
"ஆரு.. அவங்க இப்படித்தேன் விவரம் புரியாமல் பேசுவாங்க! நீ எதுவும் மனசில் வச்சுக்காதே! நீ எங்கேயும் வர வேணாம். நீ பத்திரமா வீட்டில் இரு. நான் போய்ட்டு என்ன ஏதுன்னு ஃபோன் பண்ணுறேன்.!" எனச் சொன்னார்.
ஆருத்ராவிற்குச் செல்லம்மா பேசியது வருத்தமாய் இருந்த அதே நேரம், தனலெட்சுமி பேசியது கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.
"அது.. வந்து.. அத்தை! நான் இமயனைப் பார்க்கணும்!" என ஆருத்ரா சொல்ல, தனலெட்சுமி மட்டுமல்ல, ஆருத்ராவின் வீட்டினர் முகங்களிலும், ஒரு சின்ன நந்பிக்கையும் புன்னகையும் எட்டிப் பார்த்தது.
"நான் மருமகளைக் கூட்டிட்டு முன்னால் போறேன். நீங்க பின்னால் வாங்க! புள்ளை அவனைப் பார்க்கணும்ன்னு ஆசைப்படுது.!" என்ற தனலெட்சுமி மருமகளைக் கூட்டிக் கொண்டு கிளம்பிய அதே நேரம்,
"என்னடா எதாவது தெரிஞ்சுச்சா?!"
"இந்த மீடியாகாரணுங்க என்ன செய்றானுங்க?"
"இந்த இமயன் இருக்கானா? செத்துட்டானா?"
"அர்ஜுன் ஃபோன் பண்ணினானா? அர்ஜுனுக்கு எதுவும் ஆகிடக் கூடாது! புரியுது தானே?"
"அப்படி ஒருவேளை, இமயன் உயிரோடு இருந்தால், ஹாஸ்பிட்டலில் வச்சே போட்டு தள்ளிடு!" எனக் கேள்விகளையும், கட்டளைகளையும் பிறப்பித்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.
"எவ்வளவு தைரியம் இருந்தால், எம் மகனையே எனக்கு எதிரா திருப்பி நிப்பாட்டுவான். நான் என்ன திட்டம் போட்டாலும், எப்படித் தப்பிக்கிறான்னு தெரியலை. ஆனால், இந்த முறை அவனை நான் சும்மா விட மாட்டேன்!" என அவர் கர்ஜித்துக் கொண்டிருந்த அதே நேரம், மருத்துவமனைக் கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்தான் இமயவரம்பன்.
"அரசியலை நாம்
தவிர்ப்போமானால்..
நம்மால்..
தவிர்க்கப்பட,
வேண்டியவர்கள்,
நம்மை ஆள நேரிடும்..!"
-ப்ளாட்டோ
அன்பாகும்..?!
இரண்டு நாட்கள் மெதுவாய் நகர்ந்திருந்தன. ஆருத்ராவோ, இமயனுக்காய் காத்திருந்தாள். அவன் சில நாட்களாய் வீடு வந்து சேரவே இல்லை. சட்டென மனதிற்குள் வந்த ஞாபகங்களில், அவன் தன்னை மாயன் என அறிமுகப் படுத்திக் கொண்டிருந்து மட்டும் தான் ஞாபகம் இருந்தது.
வேறு எதுவுமே அவளுக்கு ஞாபகமே வரவில்லை. எத்தனை முறை யோசித்தாலும், வேறு எதுவும் அவளுக்குத் தெரியவும் இல்லை. யாரிடம் அவனைப் பற்றி விசாரிப்பது? அவன் எப்போது வருவான்? எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.
அவளுக்கு அவளின் பதிமூன்று வயதில், தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவளுக்காக சிரமப்பட்டு பட்டாம் பூச்சியைப் பிடித்துத் தந்தவன், அவள் பார்வைக்கு நாயகனாகத்தான் தெரிந்தான். பதின் பருவத்தில் வரும் ஈர்ப்பு அவன் மீது இருந்ததென்னவோ நிஜம் தான். ஆனால், நாட்கள் போகப் போக, அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து காணாமல் போனதும் நிஜம் தான்.
ஆனால், அவனைப் போல், மாநிறமாய், அவனின் சாயலில் இருந்த ஆண்கள் மீது, அவள் விழிகள், நொடி நேரம், அதிகமாக நிலைத்ததும் நிஜம். இவ்வளவு ஏன், அவள் காதலித்த விவேக் கூட, கொஞ்சம் சாயலில் இமயனைப் போலத்தான் இருந்தான்.
அனைத்துமே அவள் பொறுமையாய் நிதானமாய் யோசிக்கும் போது தான் புரிந்தது. ஆனாலும், சிறு வயதில் ஏற்பட்ட ஈர்ப்பிற்காக மட்டும், அவனைத் திருமணம் செய்துக்கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் அவளிடம் இருந்தது.
'இப்போது என்ன செய்வது? இவனை எப்படி சந்திப்பது?' என்ற யோசனை அவளுக்குள் ஓட, ராகவைத் தேடிப் போனாள் அவள்.
"ராகவ்.. ராகவ்..!" என அவள் சத்தமாக அழைத்துக் கொண்டே உள்ளே நுழைய,
"எதுக்கு இப்படி கத்தறே?!" எனக் கோபமாய் கேட்டான் ராகவ்.
"எனக்கு உன் அண்ணனைப் பார்க்கணும். அவன் எங்கே இருப்பான்?"
"எனக்குத் தெரியாது ஆரு!"
"நீயெல்லாம் ஒரு தம்பியா டா? உங்க அண்ணன் ரெண்டு நாளாய் வீட்டுக்கு வரலை. என்ன செய்றான்? ஏது செய்றான்? எதையும் கண்டுக்க மாட்டே அப்படித்தானே?" என அவள் கேட்க,
"அதெல்லாம் அண்ணன் சொல்ல மாட்டாரு. அவரு செய்ற வேலைக்கு நேரம், காலமெல்லாம் சொல்ல முடியாது.!" எனச் சொன்னான் ராகவ்.
"ஆமா, உங்க அண்ணன் போலீஸ் வேலை பார்க்கிறாரா? இல்லை டாக்டர் வேலை பார்க்கிறாரா? நேரம் காலம் தெரியாமல் வேலை செய்ய?" என மென்மையாய் சலித்துக்கொண்டாள்.
"ஆமா.. என் அண்ணனைப் பார்த்தாலே, எரிஞ்சு எரிஞ்சு விழுவ.. இப்போ என்ன புதுசா அவரைத் தேடுற?" என. ராகவ் கேட்க, தடுமாறிப் போனாள் ஆருத்ரா.
"அது.. வந்து.. சும்மா தான்..!" எனத் தடுமாறினாள் ஆருத்ரா.
"பார்க்கிற நேரமெல்லாம் எரிஞ்சு எரிஞ்சு விழற நீ.. தேடுறதெல்லாம் அதிசயமாகத்தான் இருக்கு." எனச் சலித்துக் கொண்ட ராகவ்,
"இமயன் நம்பர் உனக்கு வாட்ஸ்-அப் பண்ணயிருக்கேன்.. கால் பண்ணி பாரு. அவன் கிட்டே உன் நம்பர் இருக்கான்னு தெரியலை.
ஒருவேளை அவன் கிட்டே உன் நம்பர் இருந்தாலும், அவன் அட்டன் பண்ணுறது சந்தேகம் தான்.!" என ராகவ் சொல்ல, அவள் முகம் சட்டெனச் சுருங்கியது.
"இன்னும் நாலு நாள் தான் இருக்கு கல்யாணத்திற்கு. இன்னைக்கு சாயங்காலம் ஊருக்குக் கிளம்பணும். அதனால் எப்படியும் ஈவ்னிங்குள்ளே வந்துடுவான். நாளைக்கு காலையிலே பந்தக்கால் ஊன்றணும் இல்லையா?!" என அவன் சொல்ல,
"எந்த ஊருக்குப் போகணும்?" எனக் கேட்டாள் அவள்.
"கீழவளவு தான். அது தான் எங்க சொந்த ஊரு. சொந்த மண்ணில் தான் கல்யாணம் பண்ணணும்ங்கிறது, இமயனோட ஆசை. முதல் கல்யாணத்தின் போதே யோசிச்சோம். ஆனால், செய்ய முடியலை. ஆனால் இந்த முறை அண்ணன் மட்டும் இல்லை. வீட்டில் எல்லோருமே அங்கே தான் நடத்தணும்ன்னு ரொம்ப பிடிவாதமாய் இருக்காங்க!" .எனச் சொல்லி நிறுத்தினான் ராகவ்.
அதே நேரம், "ஹாய் ராகவ்!" என்றபடி வந்து நின்றாள் கவிநயா.
கவிநயாவைப் பார்த்ததும் ஆருத்ராவின் முகம் கோபத்தைப் பிரதிபலித்தது. கவிநயா வந்து நின்றதும்,
"அப்பறம் பார்க்கலாம் ராகவ்!" என ஆருத்ரா நகரப் போக,
"ஆருத்ரா ஒரு நிமிஷம்!" எனத் தடுத்து நிறுத்தினாள் கவிநயா.
"என்னைப் பார்த்தால், உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். உங்களோட கோபம் எனக்குப் புரியுது. ஆனால், இமயனோட வாழ்க்கை இப்படி மாறினதற்கு நான் தான் காரணம்ங்கிற கில்ட் எனக்கு இருக்கு. அதுக்காகவாவது, உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியணும்ன்னு நான் நினைக்கிறேன்.!" என கவிநயா சொல்ல, என்ன சொல்வதெனத் தெரியாமல் விழித்தாள் ஆருத்ரா.
யோசனையில் மனம் உழன்றது.
'இமயன் அவன் தரப்பை சொல்லும் வரை காத்திருப்பதா? இல்லை இவளிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வதா? உண்மை தானே தெரிய வேண்டும், இவளும் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறாள் தானே, சம்மந்தப்பட்ட இருவரில், யார் சொன்னால் என்ன?' என அவள் மனம் குழப்பமாய் யோசித்தது. ஆனால், இதுவரை அவசரப்பட்டு செய்ததெல்லாம் போதும், இமயனே எதுவாக இருந்தாலும், நேரடியாய் சொல்லட்டும். என ஒரு தெளிவான முடிவை எடுத்திருந்தாள் ஆருத்ரா. அவன் மீதிருந்த சின்ன நம்பிக்கை அவளை இந்த முடிவை எடுக்க வைத்திருந்தது. அவளுக்கு உண்மை தெரிய வேண்டும் தான்.
ஆனால், அவளின் தனிப்பட்ட வாழ்க்கையின் இடையே கவிநயா வருவதை அவள் விரும்பவில்லை. இது அவள் வாழ்க்கை எனும் போது, முடிவும் அவளுடையாதாக தானே இருக்க வேண்டும். கவிநயா ஒரு முடிந்து போன அத்தியாயம். அதை காற்புள்ளி இட்டு தொடர்வதில், ஆருத்ராவிற்கு சுத்தமாய் விருப்பமில்லை.
"இட்ஸ் ஓகே கவிநயா! நான் இமயன் கிட்டேயே கேட்டுக்கிறேன். உங்களுக்கு எந்த சிரமமும் வேணாம்.!"
"அது இல்லை ஆருத்ரா! நான் என்ன சொல்ல வர்ரேன்னா..!" என கவிநயா எதோ சொல்ல வர, கை நீட்டி இடை நிறுத்தியவள்,
"நீங்க பொய் சொல்லலை.. எனக்குத் தெரியுது. பட், என் விருப்பத்தோடோ, விருப்பம் இல்லாமலோ, இமயன் என் வாழ்க்கைக்குள்ளே வந்துட்டார். உண்மை எதுவாக வேணும்ன்னாலும் இருந்துட்டு போகட்டும். அதை இமயனே வந்து சொல்லட்டும். நான் அதுவரை வெய்ட் செய்றேன். ஒண்ணும் பிராப்ளம் இல்லை. நீங்க இதைப் பற்றி கவலைப் படாதீங்க! நீங்க இமயனோட, இறந்த காலமா இருந்திருக்கலாம். ஆனால், அவனோட நிகழ்காலமாகவோ, எதிர்காலமாகவோ நீங்க இருக்க முடியாது. உங்களோட, நிகழ்காலமும், எதிர்காலமும் உங்க குடும்பம் தான். அவங்களோட சந்தோஷமா இருங்க! இமயன் வாழ்க்கையைப் பற்றின குற்றவுணர்வு உங்களுக்கு தேவையில்லை.!" கவிநயாவைப் பேசவே விடாமல், வெளிப்படையாய் பேசினாள் ஆருத்ரா.
"நிஜமாகவே என் மேல் உங்களுக்கு கோபம் இல்லை தானே?!" கவிநயா கேட்க, இடவலமாய் தலையசைத்தாள் ஆருத்ரா.
"தேங்க்ஸ் ஆரு! நீங்க என்னைப் புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கலை. இமயனோட வாழ்க்கை இப்படி மாறினதுக்கு முக்கியமான காரணம் நான் தான். அந்த கில்ட் இப்போவும் எனக்குள்ள இருக்கு. நான் வேணாம்ன்னு உறுதியாய் மறுத்திருந்தால், இந்தக் கல்யாணம் நடந்திருக்காது. ஆனால், அப்போ இருந்த சூழ்நிலையில், என்னால் என் அப்பாக்கிட்டே பேச முடியலை. அவர் எனக்கு நல்லது தான் செய்வாருன்னு நம்பினேன். பட், எல்லாரும் நமக்கு நல்லது செய்ய மாட்டாங்களே?" என்ற கவிநயாவின் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.
"பாஸ்ட் இஸ் பாஸ்ட் கவிநயா.! இதுவரை நடந்ததை எல்லாம் விட்டுடுங்க! இப்போ உங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்க வாழ்க்கை இருக்கு தானே?!" என ஆருத்ரா கேட்க, கவிநயாவின் தலை சம்மதமாய் ஆடியது.
"உண்மையைச் சொல்லப் போனால், எனக்கு உங்க மேலே மட்டுமில்லை. இமயன் மேலேயும் கோபம் இருந்தது தான்.இப்போவும் இருக்கு தான். ஆனாலும் ஏதோ ஒண்ணு, என்னைக் அந்தக் கோபத்தை இழுத்து பிடிக்க விடாமல் தடுக்குது. இப்போவும் இந்தக் கல்யாணத்தை என் மனசு முழுசா ஏத்துக்கலை தான். ஆனால், என் பக்கமிருந்து மட்டும் நான் யோசிக்கிறேன்னு அன்றைக்கு இமயன் பேசின போது தான் புரிந்தது. அவர் பக்கம் என்ன இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறேன்.!" என ஆருத்ரா தொடர்ந்து சொல்ல,
"ஆரு.. இமயன் மாதிரி ஒருத்தர் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும். வெளியிலிருந்து பார்க்க இது வெறும் ஒன் சைட் லவ் தானேன்னு தோணலாம். பட், இமயனோட காத்திருப்பு, காதல் எல்லாம் வரம்.!" என கவிநயா சொல்ல, வெறுமையாய் சிரித்துக் கொண்டாள் ஆருத்ரா.
"காதலோ, அன்போ, எதுவாக வேணும்ன்னாலும் இருக்கட்டும், வெளிப்படுத்தாமல், தனக்குள் வச்சிட்டு இருந்தால், தெரிய வேண்டியவங்களுக்கு எப்படி தெரியும்? என் மேல் இருக்கிற அன்பை என்கிட்டே சொல்லாமலே, நானே புரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறதும், என்னைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண முயற்சிக்கிறதும் சரியா? எல்லாரும் இமயன் பக்கமிருந்து மட்டுமே யோசிக்கிறீங்க! என் நிலையில் இருந்தும் யோசிங்க!" எனப் பட்டெனச் சொல்லிவிட்டாள் ஆருத்ரா.
இமயனைச் சந்தித்ததில் இருந்தே, தன்னை மட்டுமே எல்லாரும் குறை சொல்வதாய் தோன்றியது அவளுக்கு. இமயன் நல்லவனாகவே இருந்துவிட்டு போகட்டும். அவன் அவள் மீது வைத்திருக்கும் நேசம் உயர்ந்ததாகவே இருக்கட்டும். ஆனால், தனக்கு அவனைப் பற்றி புரிய வைப்பது இமயனின் கடமை தானே.? எதையுமே செய்யாமல், அவளாகவே புரிந்துக் கொள்ளட்டும், என நினைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? என்ற எண்ணத்தில் தான் பட்டெனப் பேசிவிட்டாள்.
"ஸாரி.. நான் உங்களை ஹர்ட் பண்ணணும்ன்னு சொல்லலை. நான் சொன்னது உங்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிச்சுடுங்க ஆரு!" எனச் சொன்ன கவிநயாவிடம்,
"நானும் நீங்க என்னை ஹர்ட் பண்ணீங்கன்னு சொல்லலை. என் பக்கமிருந்தும் யோசிச்சு பாருங்கன்னு சொல்றேன். நானும் உங்களைக் கஷ்டப்படுத்தணும்ன்னு சொல்லலை.!" என ஆருத்ரா சொல்லவும், புரிந்தது என்பது போல், தலையசைத்தபடியே விடைபெற்றுக் கிளம்பினாள் கவிநயா.
"ஏன் ஆரு.. இப்படி பேசினே? பாவம் கவி.. நீ இப்போவெல்லாம் யோசிக்காமல் பேசிடுற!" என ராகவ் சொல்ல,
"நான் உனக்கு பாவம் இல்லையா டா? உங்க இஷ்டத்திற்கு எல்லாரும் பண்ணுறீங்க? நல்லா யோசிச்சு பாரு.. அந்த விவேக்குடன் பிரேக் அப் ஆன உடனே, உன் அண்ணன் கூட, கல்யாணம் முடிவாகிடுச்சு. அவனை எனக்கு யாருன்னே தெரியாது. அவன் என்னை கல்யாணத்திற்காக ஃபோர்ஸ் பண்ணும் போது எனக்கு எப்படி இருக்கும்? அடுத்த அதிர்ச்சியாய் இத்தனை நாள் என் நண்பனா இருந்த நீ இமயனோட தம்பின்னு தெரியும் போது, எனக்கு எப்படி இருந்திருக்கும்.? நானும் மனுஷி தான் டா! இத்தனைக்கு அப்பறமும் என்னைக் குறை சொன்னால் கோபம் வருமா வராதா? எல்லாரும் அவனுக்கே சப்போர்ட் பண்ணுறதைப் பார்க்கும் போது, காசு கொடுத்து பேச வைக்கிறானோன்னு கூட எனக்குத் தோணுது. என்னால் முடியலை டா ராகவ்.!" என அவள் சலிப்பாய் சொன்னாள்.
"இன்னுமா நீ அந்த விவேக்கை நினைச்சுட்டு இருக்கே?!" எனக் கேட்டான் ராகவ்.
"அதெல்லாம் இல்லை டா. என்னை ஏமாத்தி பச்சை துரோகம் பண்ணினவனை நான் என் மனசில் இருந்து எப்போவோ தூக்கிப் போட்டேன். இப்போ எனக்குள்ளே இருக்கிறதெல்லாம் குழப்பம் தான். என் வாழ்க்கை என்ன ஆகப் போகுதுன்னு எனக்கே தெரியலை. ஒருபக்கம் எல்லாமே நல்லதுக்குன்னு தோணுது. இன்னொரு பக்கம், எதுவுமே நல்லதுக்கு இல்லையோன்னு தோணுது.!" என அவள் சொல்ல,
"ஏய்.. ஆரு! கொஞ்சம் அமைதியாய் இரு. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு! எல்லாமே சரியா போய்டும்!" எனச் சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு போய், அறையில் விட்டுவிட்டு வெளியே வந்திருந்தான்.
******
அறைக்குள் யோசனையோடு நின்றிருந்த ஆருத்ராவின் மனமோ, இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தது. ஒருமனமோ, இமயனுக்காய் வாதாட,
இன்னொரு மனமோ, அவனுக்கு எதிராக நின்று கொடி பிடித்தது. தனக்குள்ளேயே இருக்கும் ரெண்டும் கெட்டான் மனநிலையில், என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்தாள்.
'கவிநயாவிடம், வேண்டாமெனச் சொல்லிவிட்டேன்.. இப்போது எப்படித் தெரிந்துக்கொள்வது?! இப்போது நான் என்ன செய்வது?' என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, காத்திருக்கும் பொறுமை எல்லாம் சுத்தமாக இல்லை. சில நிமிடங்கள் யோசனையில் கடத்தியவள், பின் உறுதியான முடிவு எடுத்தவளாய், அலைபேசியை எடுத்து, ராகவ் சிறிது நேரத்திற்கு முன்னால் அனுப்பிய எண்ணிற்கு அழைப்புவிடுத்தாள்.
முதன் முறையாய் இமயனுக்கு அவளாக அழைக்கிறாள். மனம் ஒருவித படபடப்பை உணர்ந்தது. மனதிற்குள் பட்டாம்பூச்சி பறப்பதைப் போன்ற ஓருணர்வு. ஒரு சாதாரண அலைப்பேசி அழைப்பு அதற்கு ஏன் இத்தனை படபடப்பு அவளுக்குப் புரியவில்லை. விவேக்கை விரும்பிய காலங்களில், எத்தனையோ முறை அழைத்துப் பேசியிருக்கிறாள். ஆனால் இப்படியொரு படபடப்பையோ, பதற்றத்தையோ அவள் உணர்ந்ததில்லை. இமயனின் விஷயத்தில், அவளுக்கு ஒவ்வொன்றும் புதிதாகவும், புதிராகவும் இருந்தது.
'அவன் என் அழைப்பை ஏற்பானா?'
'அழைப்பை ஏற்று என்ன பேசுவான்?'
'என் அலைபேசி எண் அவனுக்குத் தெரியுமாமா?'
'அவன் அலைபேசியில் என் பெயரை என்னவெனப் பதிந்திருப்பான்?' என ஆயிரம் கேள்விகள் அவளுக்குள் ஓடியது. அவளுக்குள் எழுந்த அத்தனை கேள்விகளும், அவன் அழைப்பை ஏற்று,
"சொல்லு ஆரா!" என உரிமையாய்ச் சொன்ன ஒற்றை வார்த்தையில், கரைந்து காணாமல் போனது.
அவள் 'ஹலோ!' என்ற ஒற்றை வார்த்தையைக் கூடச் சொல்லவில்லை.. அழைப்பை ஏற்றவுடன், அவளை அவன் உரிமையாய் விளித்ததில், அவளுக்குள் ஏதேதோ மாற்றங்கள்.
"இ.. இமயன்.!" தட்டுத் தடுமாறி, தயங்கி இவள் அழைக்க,
"நீ எனக்கு ஃபோன் பண்ணியிருக்கன்னா நான் மாயன்னு உனக்கு ஞாபகம் வந்துடுச்சா?!" என அவன் கேட்டதும், ஒட்டுமொத்தாமாகவே அதிர்ந்துவிட்டாள் ஆருத்ரா. தான் வாய் திறந்து பேசாமலே, தன்னைப் பற்றி அத்தனையும் அறிந்து வைத்திருக்கிறானே.. என்ற உணர்வு மேலிட, தன்னையறியாமல் உடல் சிலிர்த்தது அவளுக்கு.
"வெறும் மாயன்ங்கிற பேரு மட்டும் தான் ஞாபகத்திற்கு வந்துச்சு! வேறு எதுவும் எனக்கு ஞாபகம் வரலை. எதையுமே சொல்லாமல் நீ பாட்டுக்கு போய்ட்ட.. நான் யார்கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கிறது? ஏன் இத்தனை நாளாய் வீட்டுக்கு வரலை? வேணும்ன்னே இதெல்லாம் செய்ற தானே?" என அவள் கேட்க, அந்தப் பக்கமிருந்து இமயனின் சிரிப்புச் சத்தம் தான் அவள் செவிகளில் விழுந்தது.
"என்னை மிஸ் பண்ணுறியா ஆரா?" என்ற அவனின் கேள்வி அவளிடம் சில நிமிடங்களுக்கு மௌனத்தை நிலைநாட்டியது.
"அ.. அதெல்லாம் இல்லை. அப்படி என்னதான் உன் கல்யாண வாழ்க்கையில் நடந்துச்சுன்னு எனக்குத் தெரியணும்! அவ்வளவு தான்.. நான் என்ன உன்னை உருகி உருகி லவ் பண்ணுறேனா என்ன? உன்னை மிஸ் பண்ணுறதுக்கு?!" எனச் சொன்னவளின் குரலில் ஆயிரமாயிரம் தடுமாற்றங்கள்.
"அவ்வளவு தானா? நிஜமாகவே அது மட்டும் தானா?" என்ற அவனின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
"ஆமா.. அது மட்டும் தான்..!" என அவள் அவசரமாய்ச் சொன்னதைக் கேட்டு இமயனின் இதழ்களில் சத்தமில்லாத புன்னகை.
"என்னோட கடந்த காலத்தில் என்ன வேணும்னாலும் நடந்திருக்கட்டும் ஆரா.. என்னோட நிகழ்காலமும் எதிர்காலமும் நீ மட்டும் தானே?" என அவள் கவிநயாவிடம் சொன்ன வார்த்தைகளை அப்படியே மாற்றி இவளிடம் சொன்னான் இமயவரம்பன்.
"நிஜமாகவே.. உனக்கு என்னைப் பிடிக்குமா..? இல்லை உன் அரசியல் ஆதாயத்திற்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியா?" எனத் திக்கித் திணறி அவள் கேட்ட அதே நேரம்,
"தங்கச்சி! இந்தப் பையன் உன் மேல் பைத்தியம் பிடிச்சு அலையறான். சீக்கிரம் இவனைக் கல்யாணம் பண்ணி, அந்தப் பைத்தியத்தைத் தெளிய வச்சிடு மா.!" என்ற குரல் திடீரெனச் செவியோரம் மோத, நிஜமாகவே பயந்து போனாள் ஆருத்ரா.
"யார்.. யார் பேசறீங்க?!" என அவள் யோசனையோடு வினவ,
"ஹேய் ஆரு! என் ஃப்ரெண்ட் அர்ஜுன் தான். உனக்குப் புரியற மாதிரி சொல்லணும்ன்னா கவிநயாவின் அண்ணன்.!" என அவசரமாய் இடையிட்டு இமயன் சொன்ன அதே நேரம், திடீரெனக் கேட்ட ஏதோ சத்தத்துடன், எதிர்பாராத விதமாய் அழைப்பு இடையிலேயே துண்டிக்கப்பட்டது.
பேசிக் கொண்டிருக்கும் போது, இணைப்பு தடைபட்டுவிட, மீண்டும், மீண்டும் இமயனுக்கு அழைத்துப் பார்த்தாள் ஆருத்ரா. அழைப்பு சென்று கொண்டே இருந்ததே ஒழிய, யாரும் அழைப்பை ஏற்கவே இல்லை.
'என்ன காரணமாக இருக்கும்? அர்ஜுன் எதாவது உண்மையைச் சொல்லிவிடுவான் எனப் பயந்து, இணைப்பைத் துண்டித்து விட்டானோ? என்னவாக இருக்கும்? நெட் ஒர்க் பிரச்சனையாக இருக்குமோ? அப்படி இருந்தால், அழைப்பு செல்லாதே? ஆனால், அழைப்பு ஏற்கபடாமல் தானே இருக்கிறது? வேண்டுமென்றே அழைப்பை ஏற்க மறுக்கிறானா? இல்லை வேறு ஏதாவது காரணமா? வேறு எதாவது நிகழ்ந்திருக்குமா?'
என அவள் குழம்பி தவித்து நேரம் போவதே தெரியாமல், நின்றிருந்த அதே தருணத்தில், மீண்டும் இமயனின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. இமயனின் அழைப்பைப் பார்த்ததும் தான் அவளால் நிம்மதியாய் மூச்சுவிட முடிந்தது.
"ஹலோ.. இமயன்!" என அவசரமாய் ஏற்றுக் காதில் வைக்க,
"ஹலோ! ஆருத்ரா! நான் அர்ஜுன் பேசறேன். நான் சொல்றதைக் கேட்டு பதற்றப் படாதீங்க! பயப்படாதீங்க! கொஞ்சம் பொறுமையாய் கேளுங்க!" என அர்ஜுன் பூடகமாய்ப் பேச, இங்கே பயப்பந்து உருண்டது அவளுக்குள்.
"இமயனுக்கு ஒண்ணும் இல்லை தானே?!" அவளை அறியாமலே, பதற்றமாய் அவள் குரல் வெளி வந்தது.
"நான் தான் சொல்றேன்ல்ல.. பதறாதீங்க! நான் இமயன் கூடத்தான் இருக்கேன். ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். உங்களைப் பார்க்கத்தான் சர்ப்ரைஸா வந்துட்டு இருந்தான். எதிர் பாராத விதமாய் இப்படி ஆகிடுச்சு. இமயன் ஸேஃப் தான்., நீங்க பயப்படாமல் இருங்க. ஹாஸ்பிட்டல் லொக்கேஷன் அனுப்பறேன் வந்துடுங்க!"
என அர்ஜுன் சொல்லிவிட்டு வைத்துவிட, அவள் காலின் கீழே பூமி நழுவிய உணர்வு. முதலில் அதிர்வில் அவளால் யோசிக்கவே முடியவில்லை. அதிர்வின் தாக்கத்தில் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனம் ஒருமாதிரி கனமாய் இருந்தது. அழுவதா? அமைதியாய் நிற்பதா? என்ன உணர்வுகளை வெளிப்படுத்த என்று கூடத் தெரியாத நிலையில், சட்டெனச் சுதாரித்து நிமிர்ந்து, சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்துக் கொண்டவள், முதலில் தன் அன்னையைத் தான் அழைத்தாள்.
"ம்மா! ம்மா!" அவசரமாய் அழைத்தபடி ஓடிவரும் மகளைப் பதற்றத்துடன் பார்த்தார் அபிராமி.
"என்ன ஆரு..? என்ன ஆச்சு? என்னத்துக்குடி இப்படி ஓடி வர்ர.?" பதற்றமாய் மகளைப் பார்த்து வினவினார் அவர்.
"இ.. இமயனுக்கு ஆக்ஸிடென்ட்..!" எனச் சொன்னவளுக்கு, அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்தது.
"ஏய்.. விளையாடாதே டி! கல்யாணம் நெருங்கிட்டு இருக்கிற நேரத்தில், ஆக்ஸிடென்ட்ன்னா ஆளுக்கு ஒண்ணா பேசுவாய்ங்க டி! உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை தான்.. அதுக்காக ஏதாவது பூகம்பத்தைக் கிளப்பி விட்டுடுடாதே ராசாத்தி!" பயமும் பதற்றமுமாய்ப் பேசினார் அபிராமி.
"நான் பொய் சொல்லி என்னம்மா செய்யப் போறேன்? நான் ஃபோனில் தான் பேசிட்டு இருந்தேன். திடீர்ன்னு ஏதோ சத்தம் கேட்டு ஃபோன் கால் கட் ஆகிடுச்சு. அப்பறம் தான் அர்ஜுன் கால் பண்ணி சொன்னார். கே.எம் ஹாஸ்பிட்டலுக்கு வரச் சொன்னாங்கம்மா!" என தொண்டை அடைக்க, அவள் சொல்ல, உயிர் நடுங்கிப் போனது அபிராமிக்கு.
மகளின் முகத்தில் வந்து போன உணர்வுகளில், அவளின் மனம் அவருக்கு ஓரளவிற்கு புரிந்தது. அவ திருமணம் கூடி வந்த நேரத்தில், இப்படி நடப்பது, இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ? பயம் சூழ்ந்தது அவர் மனதிற்குள்.
அடுத்தச் சில நிமிடங்களில், அர்ஜுனே அனைவருக்கும் தகவல் தெரிவித்திருக்க, அனைவரும் பதற்றமாய் வீட்டின் கூடத்தில், கூடியிருந்தனர்.வீட்டிலிருந்த அனைவரின் முகங்களிலும் கவலையின் சாயல். ஆருத்ராவின் மனதைப் புண்படுத்திவிடக் கூடாதென்பதற்காக, அமைதியாய் அனைவரும் நின்றிருக்க,
"ஏன் அபி! நம்ம கல்யாணம் நிச்சயம் பண்ணின நேரம் எதுவும் சரியில்லையோ? பெரியவர் சொல்லிட்டாருன்னு ஜாதகம் கூடப் பார்க்காமல் தானே, கல்யாணம் முடிவு செஞ்சீங்க? ஜாதகம் பார்த்திருக்கணுமோ?!" என நேரம் காலம் தெரியாமல் வாயை விட்டார், ஆருத்ராவின் பெரியம்மாவான பொன்னி.
"அக்கா! சும்மா இருங்க!" என அபிராமி தடுக்க முயல, பொன்னியைப் பிடித்துக் கொண்டு தானும் பேசினார், இமயனின் அப்பத்தாவான செல்லம்மா.
"முதல் பொண்டாட்டியா வந்தவ, எம் பேரன் வாழ்க்கையைக் கொண்டு போனாள். இவ இன்னும் வீட்டுக்குள்ளே வரவே இல்லை. எம் பேரன் உசிரை எடுத்துடுவா போல..!" என வெளிப்படையாய்ப் புலம்பியிருந்தார் செல்லம்மா.
"அத்தை! வாயை வச்சுக்கிட்டு சும்மா இருங்க! விபத்துங்கிறது எதிர்பாராமல் நடக்கிறது. அதுக்குப் போய் அந்தப் பிள்ளையைக் குறை சொல்றீங்க? அதெல்லாம் எம் மயனுக்கு ஒண்ணும் ஆகாது. அவன் நல்லாத்தேன் இருப்பான். அர்ஜுன் தான் சொன்னானே இமயன் நல்லாத்தேன் இருக்கான்னு சொன்னானே.. இமயனைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு கிளம்பறதை விட்டுட்டு, அந்தப் பிள்ளையைக் குத்தம் சொல்றதெல்லாம் தப்பு அத்தை. நம்ம சூழ்நிலையும் உங்களுக்குத் தெரியும் தானே? எப்போ சிக்குவியான் போட்டுத் தள்ளலாம்ன்னு தானே காத்து கிடக்காய்ங்க! எதையும் யோசிக்காமல் பேசாதீங்கா அத்தை!" எனப் பேசிய இமயனின் அன்னை தனலெட்சுமி,
"ஆரு.. அவங்க இப்படித்தேன் விவரம் புரியாமல் பேசுவாங்க! நீ எதுவும் மனசில் வச்சுக்காதே! நீ எங்கேயும் வர வேணாம். நீ பத்திரமா வீட்டில் இரு. நான் போய்ட்டு என்ன ஏதுன்னு ஃபோன் பண்ணுறேன்.!" எனச் சொன்னார்.
ஆருத்ராவிற்குச் செல்லம்மா பேசியது வருத்தமாய் இருந்த அதே நேரம், தனலெட்சுமி பேசியது கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.
"அது.. வந்து.. அத்தை! நான் இமயனைப் பார்க்கணும்!" என ஆருத்ரா சொல்ல, தனலெட்சுமி மட்டுமல்ல, ஆருத்ராவின் வீட்டினர் முகங்களிலும், ஒரு சின்ன நந்பிக்கையும் புன்னகையும் எட்டிப் பார்த்தது.
"நான் மருமகளைக் கூட்டிட்டு முன்னால் போறேன். நீங்க பின்னால் வாங்க! புள்ளை அவனைப் பார்க்கணும்ன்னு ஆசைப்படுது.!" என்ற தனலெட்சுமி மருமகளைக் கூட்டிக் கொண்டு கிளம்பிய அதே நேரம்,
"என்னடா எதாவது தெரிஞ்சுச்சா?!"
"இந்த மீடியாகாரணுங்க என்ன செய்றானுங்க?"
"இந்த இமயன் இருக்கானா? செத்துட்டானா?"
"அர்ஜுன் ஃபோன் பண்ணினானா? அர்ஜுனுக்கு எதுவும் ஆகிடக் கூடாது! புரியுது தானே?"
"அப்படி ஒருவேளை, இமயன் உயிரோடு இருந்தால், ஹாஸ்பிட்டலில் வச்சே போட்டு தள்ளிடு!" எனக் கேள்விகளையும், கட்டளைகளையும் பிறப்பித்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.
"எவ்வளவு தைரியம் இருந்தால், எம் மகனையே எனக்கு எதிரா திருப்பி நிப்பாட்டுவான். நான் என்ன திட்டம் போட்டாலும், எப்படித் தப்பிக்கிறான்னு தெரியலை. ஆனால், இந்த முறை அவனை நான் சும்மா விட மாட்டேன்!" என அவர் கர்ஜித்துக் கொண்டிருந்த அதே நேரம், மருத்துவமனைக் கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்தான் இமயவரம்பன்.
"அரசியலை நாம்
தவிர்ப்போமானால்..
நம்மால்..
தவிர்க்கப்பட,
வேண்டியவர்கள்,
நம்மை ஆள நேரிடும்..!"
-ப்ளாட்டோ
அன்பாகும்..?!