Karuram
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கலாதரன் தன் மனைவியை யாரும் உபத்திரவம் செய்யாத வகையில் தனிமை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டே வெளியே சென்றிருந்தான். சம்யுக்தாவுக்கான உணவை மலர் அவளின் அறைக்கே எடுத்து கொடுத்து உபசரிக்க, அதை பற்றிக் கூட கண்டு கொள்ளாமல் இயந்திரம் போல் செய்துக் கொண்டிருந்தாள்.
தரனின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து சம்யுக்தாவிடம் யாரும் எதுவும் வினவாத போதும், அவளை கவனித்து கொண்டிருந்த மலருக்கு தரனின் நேற்றைய பேச்சின் எதிரொலி இன்றளவும் மனதை உறுத்திக் கொண்டே இருந்ததில் எங்கே தன் தமையன் பிரிந்து சென்று விடுவானோ என்ற அச்சத்தை விளைவிக்க அதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டி சம்யுக்தாவிடம் கேட்க முனைந்தாள்.
“அண்ணி” என்றவளின் விளிப்பில் திரும்பாது அலைபேசியிலேயே ஆழ்ந்திருந்தவளின் கவனத்தை திசை திருப்ப சற்று அழுத்தம் கூட்டி... “அண்ணி!” என்றழைத்தவளின் குரலுக்கு பலனிருக்கவே அவள் புறம் திரும்பியவள் சைகையால் என்னவென்று விசாரித்தாள்.
“நீங்களும் அண்ணனும் தனிக் குடித்தனம் போகப் போறீங்களா?” என்றவளை புருவம் சுருங்க யோசனையாக பார்த்தவள்...
“என்ன தனிக் குடித்தனமா? அப்படின்னு யாரு சொன்னா?” என்று எதிர்வினா எழுப்பியதும்...
“அண்ணன் தான் சொன்னாரு” என்றவளை நம்பாது பார்வை பார்த்தவள்...
“ம்ஹும்... முதலில் நடந்ததை முழுசா சொல்லு” என்று விசாரித்ததும்... விசாலமாக கொட்டுகின்ற அருவியை போல் மடமடவென்று நடந்த அனைத்தையும் அட்சரம் பிசகாமல் கூறி முடித்தவள்...
“அண்ணன் ரொம்ப கோபமா பேசினாரு... அவர் கோபப்பட்டு பார்த்திருக்கிறோம் ஆனால், இந்தளவுக்கு கோபப்பட்டு பார்த்ததில்லை... ஏற்கனவே வாணியக்கா, அரசிக்கா ரெண்டு பெரும் இல்லாமல் எனக்கு கஷ்டமா இருக்கு, இதில் நீங்களும் இல்லைன்னா நான் என்ன செய்வேன்? எனக்கு பிளஸ் டூ பரீட்சை முடிஞ்சா, அடுத்து என்னை படிக்க வைக்க அண்ணன் இருக்கணுமே, எனக்கு நல்லது கேட்டது பார்க்க அவரை விட்டா யாரிருக்கா?” தன் மனதை மறையாது வெள்ளந்தியாக பேசியவளை கண்டு அவள் மேல் நேச இரக்கம் சுரந்தது.
“உங்க அண்ணன் ஏதாவது கோபத்தில் பேசியிருப்பாரு... அப்படியெல்லாம் உங்க அண்ணன் உங்களை விட்டுட்டு போக நினைக்கமாட்டாரு, நானும் அதுக்கு சம்மதிக்கமாட்டேன், நீ கவலைப்படாதே நாங்க தனிக் குடித்தனம் எல்லாம் போகமாட்டோம்” என்று பரிகாசத்துடன் சிகையை வருடிக் கொடுத்து விட்டு மெலிதாக முறுவலித்தாள்.
“நிஜமா தானே சொல்றீங்க? நேத்து அண்ணன் கோபமா இருந்தாரு, இன்னைக்கு நீங்க ஒரு மாதிரி இருக்கீங்க... எனக்காக என்னை சமாதானப்படுத்த நீங்க பொய் சொல்லலையே?”
“இதில் பொய் சொல்ல என்னம்மா இருக்கு...? நான் தனியா போக நினைச்சிருந்தா இந்த வீட்டுக்குள் கால் பதிச்சிருக்கவே மாட்டேன்... அரசிக்கும், வாணிக்கும் எப்படி நல்ல முறையில் எல்லாமே செய்தோமோ, அப்படி தான் உனக்கும் செய்வோம் அதுவரைக்கும் தனிக்குடித்தனம் எல்லாம் சாத்தியம் இல்லை சரியா, பயப்படாதே!”
“நிஜமாவா?”
“நிஜமா தான்!” என்று முகிழ்நகையுடன் அழுத்தமாக கூறியவளின் பேச்சில் மனச்சலனங்கள் அனைத்தும் நீங்கியவளாக முகம் மலர்ந்தாள்.
மலரின் பேச்சில் தான் நேற்று அவள் வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் சென்றதற்கு கணவனை விசாரிக்க நேர்ந்ததில், அதற்கு அவள் கணவன் அவளுக்காக பேசியிருக்கிறான் என்பதே தெரிய வந்தது.
மேலும் இரண்டொரு நாட்கள் சம்யுக்தாவுக்கு மனதின் பாரம் நீங்காமல் இருக்கவே அன்று கணவனை அணுகியவள்... “எனக்கு மனசு சரியில்லை நான் ஒரு வாரத்திற்கு எங்கயாவது போகணும்... இன்னைக்கே கிளம்பலாம்ன்னு இருக்கேன்” என்றதும் அவளிடம் எந்தவொரு விளக்கமும் இயம்பாது...
“சரி கிளம்பு, நானே உன்னை விட்டுட்டு வரேன்” என்றதும்...
“நான் போய் தொலைஞ்சா சரி தான்னு நிம்மதியா இருப்பீங்க போல?” குதர்க்கமாக வினவியவளை அமர்த்தலாக பார்த்தவன்...
“ஆமாம்! ஆமாம்! ரொம்ப நிம்மதியா இருப்பேன்... என்ன இப்போல்லாம் ராத்திரி தூங்க ஒரு மாத்திரையோ இல்லை, ரெண்டு மாத்திரையோ போடுறேனே, அதை கொஞ்சம் அதிகபடுத்தி கிராம் கணக்கில் போட்டுட்டு படுத்தா நானும் நிம்மதியா இருப்பேன், நீயும் நிம்மதியா இருப்ப, என்ன செய்யட்டுமா? சொல்லு...” என்றவனின் பேச்சு அவள் உயிரை ஆட்டுவித்தது... அவன் வார்த்தைக்கான முன்னோட்டமே பயங்கரமாய் இருக்க, கண்கள் வெகுவாய் பனித்திருந்தது.
“என்ன வாயடைச்சு போயிட்ட? கிளம்பு போ சீக்கிரமே நான் செத்.......” அவன் பேச ஆரம்பித்ததுமே கட்டிலில் இருந்து துள்ளி குதித்து இறங்கியவள், அவனை நெருங்கி தன் உள்ளங்கையால் அவன் அதரங்களை மூடியிருந்தாள்.
“வாயை மூடுங்க! சும்மா அபசகுணமா பேசாதீங்க... கோபத்தில் ஒரு வார்த்தை சொன்னா சீரியஸா பேசுறதா? உங்களை நம்பி உங்க மகள் இருக்கிறா மறந்திட வேண்டாம்”
“என் பொண்ணு மட்டும் தான் என்னை நம்பி இருக்கிறாளா? அப்போ நீ வேறொரு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவில் இருக்கறியா?” அவளை தொடர்ந்து வேகமாக வினவியவனின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஆத்திரத்தில் தடுமாறியவள் அருகில் ஏதேனும் அடிக்க தென்படுமா என்று சுற்றும் முற்றும் பார்வையால் அலசியதை உணர்ந்து...
“சும்மா என்கிட்ட விதண்டாவாதம் பேசாம புறப்படு, உன்னை அர்ஜுன் வீட்டில் விட்டுட்டு வரேன், இங்கே உனக்கிருக்கிற ஒரே உறவு அவங்க தானே, அங்கே தான நீ பிரீயா இருப்ப, அது கூட தெரியாம உன் கூட குடும்பம் நடத்தலை”
‘எல்லாமே தெரிஞ்ச அமுக்க கள்ளன் தான்டா நீ, உன்னை மாதிரி என்னால் எதுவுமே தெரியாத மாதிரி நடிக்க முடியாம தானே, கொஞ்சம் நாள் தள்ளி இருக்கலாம்னு இருக்கேன்’ அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி மானசீகமாக பேசிக் கொண்டிருந்தாள்.
“என்ன என்னை பார்த்து ரசிக்க முடியாதேன்னு யோசிக்கிறியா? கவலைப்படாதே, தினம் ஈவ்னிங் வந்து உன்னை பார்த்துட்டு போறேன்” என்று இமைசிமிட்டியவனின் செயலில் சித்தம் அமைதியடைவதை உணர்ந்தாள்.
“ரெடியாகு! நான் வீட்டில் சொல்லிட்டு வரேன்” என்று விட்டு நகர்ந்தவனிடம்...
“அன்னைக்கு என்னை பத்தி உங்க வீட்டில் என்ன பேசினாங்க?”
“தப்பா எதுவும் பேசலை... வீட்டுக்கு வாழ வந்த மருமகள் காணோமேன்னு வீட்டுக்கு பெரியவங்களா அக்கறையா கேட்டாங்க... ஏன் இப்போ அதுக்கென்ன?”
“என்கிட்டே சொல்லியிருந்தா நான் அவங்களுக்கு பதில் சொல்லியிருப்பேனே?”
“என்னன்னு என்னை பற்றி கேட்க நீங்க யாருன்னா?” என்று கேட்டவனை கண்டு அரண்டாள்... ஏனெனில் அவள் கேட்க எண்ணியதும் அது தானே, எப்படி இப்படி நுணுக்கமாக தன்னை ஆராய்ந்து வைத்திருக்கிறான் என்று கிலேசம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
“தெரியும் டி உன்னை பற்றி, அதனால இது மாதிரி எல்லாம் பிளான் பண்ணாத சரியா... இவங்களை சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு, உனக்கு என்ன தேவையோ அதை என்கிட்டே மட்டும் சொல்லு, என்கிட்டே மட்டும் தான் சொல்லணும்” என்றவன் மேலும் அங்கே நில்லாமல் அறையிலிருந்து வெளியேறியிருந்தான்.
தரன் என்ன பேசினானோ அவள் அறியாள்?! ஆனால் சென்றவன் அடுத்த பத்தாவது நிமிடம் அறைக்குள் புகுந்து தயாரான நிலையில் இருந்த மனைவியையும், குழந்தையையும் அழைத்துக் கொண்டு வெளியேற எத்தனிக்க... அறைக் கதவை திறக்க கை வைத்த மனைவியை தடுத்து திருப்பி, அவள் தாடையை பற்றி முகம் பார்க்க வைத்தவன்...
“உன்னை அங்கே அனுப்பி வைக்கிறது உனக்காக தான்... முழுக்க முழுக்க உன் நிம்மதிக்காக மட்டும் தான்... அதனால் சீக்கிரம் திரும்பி வரப்பாரு... என்னால் ரொம்ப நாளைக்கு உன்னையும், குழந்தையையும் பிரிஞ்சிருக்க முடியாது... அப்படி பிரியணும்னு நினைச்சாலும் நான் அதற்கு விடமாட்டேன்” என்றவன் அவள் அதரங்களை சிறைபிடித்துக் கொண்டு சில கணங்கள் கடந்தே விடுவித்து விட்டு அவளை அழைத்துச் சென்றான்.
கணவனின் வார்த்தையில் இத்தனை காதலை வைத்திருப்பவன் தன்னை ஏன் அப்படி ஒரு கேள்வி கேட்டு விவாகரத்து வரை இழுத்துச் சென்றான் என்ற சந்தேககீற்றை விரட்டியடிக்க அப்போதே அவனிடம் விளக்கம் கேட்டிருந்தால் கூட அனைத்து மனஸ்தாபங்களும் முகவரி இல்லாமல் ஓடி சென்றயிருக்கும், ஆனால் இருவருக்குமே வாழ்க்கை நடத்தும் காதல் என்னும் பரீட்சையில் காலம் கடந்த ஞானோதயம் தான் பிறக்கும் என்றால் விதியை நொந்துக் கொள்வதா இல்லை அவர்களை நொந்து கொள்வதா?!
**********************
“அரசி நீ மலர் கூட இருக்கணும் போல இருக்குன்னு சொன்ன தானே போய் ஒரு வாரம் தங்கிட்டு வாயேன்” என்று கூறிய அர்ஜுனை வியப்பாக பார்த்தவள்...
“என்ன நிஜமாவா சொல்றீங்க? கெஞ்சினா கூட அனுப்பமாட்டீங்க, இப்போ நீங்களாவே போன்னு சொல்ரறீங்க?” புருவம் உயர்த்தி ஒய்யாரமாக வினவினாள்.
“நம்ம கம்பெனிக்கு வந்திருக்கிற புது ஆர்டர் சம்மதமா அடிக்கடி வெளியே போற வேலை இருக்கு, நீ தனியா அங்கிருந்து பார்க்கணும்... அதான் நீ போயிட்டு உன் தங்கச்சி கூட பாசத்தை பரிமாறிக்கிட்டு வா நாம சேர்ந்து வேலை பார்த்துக்கலாம்” என்று இமைசிமிட்டி கூறியவன், அவள் நெற்றியில் முத்தமிட அதில் கரைந்து கட்டுண்டவள் தன் பிறந்து வீட்டுக்கு புறப்பட ஆயத்தமானாள்.
இவர்களின் இந்த பிரிவு பெருத்த விரிசலை ஏற்படுத்த போவது அறியாமல் போனதேனோ?!
சுவடுகள் தொடரும்....
தரனின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து சம்யுக்தாவிடம் யாரும் எதுவும் வினவாத போதும், அவளை கவனித்து கொண்டிருந்த மலருக்கு தரனின் நேற்றைய பேச்சின் எதிரொலி இன்றளவும் மனதை உறுத்திக் கொண்டே இருந்ததில் எங்கே தன் தமையன் பிரிந்து சென்று விடுவானோ என்ற அச்சத்தை விளைவிக்க அதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டி சம்யுக்தாவிடம் கேட்க முனைந்தாள்.
“அண்ணி” என்றவளின் விளிப்பில் திரும்பாது அலைபேசியிலேயே ஆழ்ந்திருந்தவளின் கவனத்தை திசை திருப்ப சற்று அழுத்தம் கூட்டி... “அண்ணி!” என்றழைத்தவளின் குரலுக்கு பலனிருக்கவே அவள் புறம் திரும்பியவள் சைகையால் என்னவென்று விசாரித்தாள்.
“நீங்களும் அண்ணனும் தனிக் குடித்தனம் போகப் போறீங்களா?” என்றவளை புருவம் சுருங்க யோசனையாக பார்த்தவள்...
“என்ன தனிக் குடித்தனமா? அப்படின்னு யாரு சொன்னா?” என்று எதிர்வினா எழுப்பியதும்...
“அண்ணன் தான் சொன்னாரு” என்றவளை நம்பாது பார்வை பார்த்தவள்...
“ம்ஹும்... முதலில் நடந்ததை முழுசா சொல்லு” என்று விசாரித்ததும்... விசாலமாக கொட்டுகின்ற அருவியை போல் மடமடவென்று நடந்த அனைத்தையும் அட்சரம் பிசகாமல் கூறி முடித்தவள்...
“அண்ணன் ரொம்ப கோபமா பேசினாரு... அவர் கோபப்பட்டு பார்த்திருக்கிறோம் ஆனால், இந்தளவுக்கு கோபப்பட்டு பார்த்ததில்லை... ஏற்கனவே வாணியக்கா, அரசிக்கா ரெண்டு பெரும் இல்லாமல் எனக்கு கஷ்டமா இருக்கு, இதில் நீங்களும் இல்லைன்னா நான் என்ன செய்வேன்? எனக்கு பிளஸ் டூ பரீட்சை முடிஞ்சா, அடுத்து என்னை படிக்க வைக்க அண்ணன் இருக்கணுமே, எனக்கு நல்லது கேட்டது பார்க்க அவரை விட்டா யாரிருக்கா?” தன் மனதை மறையாது வெள்ளந்தியாக பேசியவளை கண்டு அவள் மேல் நேச இரக்கம் சுரந்தது.
“உங்க அண்ணன் ஏதாவது கோபத்தில் பேசியிருப்பாரு... அப்படியெல்லாம் உங்க அண்ணன் உங்களை விட்டுட்டு போக நினைக்கமாட்டாரு, நானும் அதுக்கு சம்மதிக்கமாட்டேன், நீ கவலைப்படாதே நாங்க தனிக் குடித்தனம் எல்லாம் போகமாட்டோம்” என்று பரிகாசத்துடன் சிகையை வருடிக் கொடுத்து விட்டு மெலிதாக முறுவலித்தாள்.
“நிஜமா தானே சொல்றீங்க? நேத்து அண்ணன் கோபமா இருந்தாரு, இன்னைக்கு நீங்க ஒரு மாதிரி இருக்கீங்க... எனக்காக என்னை சமாதானப்படுத்த நீங்க பொய் சொல்லலையே?”
“இதில் பொய் சொல்ல என்னம்மா இருக்கு...? நான் தனியா போக நினைச்சிருந்தா இந்த வீட்டுக்குள் கால் பதிச்சிருக்கவே மாட்டேன்... அரசிக்கும், வாணிக்கும் எப்படி நல்ல முறையில் எல்லாமே செய்தோமோ, அப்படி தான் உனக்கும் செய்வோம் அதுவரைக்கும் தனிக்குடித்தனம் எல்லாம் சாத்தியம் இல்லை சரியா, பயப்படாதே!”
“நிஜமாவா?”
“நிஜமா தான்!” என்று முகிழ்நகையுடன் அழுத்தமாக கூறியவளின் பேச்சில் மனச்சலனங்கள் அனைத்தும் நீங்கியவளாக முகம் மலர்ந்தாள்.
மலரின் பேச்சில் தான் நேற்று அவள் வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் சென்றதற்கு கணவனை விசாரிக்க நேர்ந்ததில், அதற்கு அவள் கணவன் அவளுக்காக பேசியிருக்கிறான் என்பதே தெரிய வந்தது.
மேலும் இரண்டொரு நாட்கள் சம்யுக்தாவுக்கு மனதின் பாரம் நீங்காமல் இருக்கவே அன்று கணவனை அணுகியவள்... “எனக்கு மனசு சரியில்லை நான் ஒரு வாரத்திற்கு எங்கயாவது போகணும்... இன்னைக்கே கிளம்பலாம்ன்னு இருக்கேன்” என்றதும் அவளிடம் எந்தவொரு விளக்கமும் இயம்பாது...
“சரி கிளம்பு, நானே உன்னை விட்டுட்டு வரேன்” என்றதும்...
“நான் போய் தொலைஞ்சா சரி தான்னு நிம்மதியா இருப்பீங்க போல?” குதர்க்கமாக வினவியவளை அமர்த்தலாக பார்த்தவன்...
“ஆமாம்! ஆமாம்! ரொம்ப நிம்மதியா இருப்பேன்... என்ன இப்போல்லாம் ராத்திரி தூங்க ஒரு மாத்திரையோ இல்லை, ரெண்டு மாத்திரையோ போடுறேனே, அதை கொஞ்சம் அதிகபடுத்தி கிராம் கணக்கில் போட்டுட்டு படுத்தா நானும் நிம்மதியா இருப்பேன், நீயும் நிம்மதியா இருப்ப, என்ன செய்யட்டுமா? சொல்லு...” என்றவனின் பேச்சு அவள் உயிரை ஆட்டுவித்தது... அவன் வார்த்தைக்கான முன்னோட்டமே பயங்கரமாய் இருக்க, கண்கள் வெகுவாய் பனித்திருந்தது.
“என்ன வாயடைச்சு போயிட்ட? கிளம்பு போ சீக்கிரமே நான் செத்.......” அவன் பேச ஆரம்பித்ததுமே கட்டிலில் இருந்து துள்ளி குதித்து இறங்கியவள், அவனை நெருங்கி தன் உள்ளங்கையால் அவன் அதரங்களை மூடியிருந்தாள்.
“வாயை மூடுங்க! சும்மா அபசகுணமா பேசாதீங்க... கோபத்தில் ஒரு வார்த்தை சொன்னா சீரியஸா பேசுறதா? உங்களை நம்பி உங்க மகள் இருக்கிறா மறந்திட வேண்டாம்”
“என் பொண்ணு மட்டும் தான் என்னை நம்பி இருக்கிறாளா? அப்போ நீ வேறொரு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவில் இருக்கறியா?” அவளை தொடர்ந்து வேகமாக வினவியவனின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஆத்திரத்தில் தடுமாறியவள் அருகில் ஏதேனும் அடிக்க தென்படுமா என்று சுற்றும் முற்றும் பார்வையால் அலசியதை உணர்ந்து...
“சும்மா என்கிட்ட விதண்டாவாதம் பேசாம புறப்படு, உன்னை அர்ஜுன் வீட்டில் விட்டுட்டு வரேன், இங்கே உனக்கிருக்கிற ஒரே உறவு அவங்க தானே, அங்கே தான நீ பிரீயா இருப்ப, அது கூட தெரியாம உன் கூட குடும்பம் நடத்தலை”
‘எல்லாமே தெரிஞ்ச அமுக்க கள்ளன் தான்டா நீ, உன்னை மாதிரி என்னால் எதுவுமே தெரியாத மாதிரி நடிக்க முடியாம தானே, கொஞ்சம் நாள் தள்ளி இருக்கலாம்னு இருக்கேன்’ அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி மானசீகமாக பேசிக் கொண்டிருந்தாள்.
“என்ன என்னை பார்த்து ரசிக்க முடியாதேன்னு யோசிக்கிறியா? கவலைப்படாதே, தினம் ஈவ்னிங் வந்து உன்னை பார்த்துட்டு போறேன்” என்று இமைசிமிட்டியவனின் செயலில் சித்தம் அமைதியடைவதை உணர்ந்தாள்.
“ரெடியாகு! நான் வீட்டில் சொல்லிட்டு வரேன்” என்று விட்டு நகர்ந்தவனிடம்...
“அன்னைக்கு என்னை பத்தி உங்க வீட்டில் என்ன பேசினாங்க?”
“தப்பா எதுவும் பேசலை... வீட்டுக்கு வாழ வந்த மருமகள் காணோமேன்னு வீட்டுக்கு பெரியவங்களா அக்கறையா கேட்டாங்க... ஏன் இப்போ அதுக்கென்ன?”
“என்கிட்டே சொல்லியிருந்தா நான் அவங்களுக்கு பதில் சொல்லியிருப்பேனே?”
“என்னன்னு என்னை பற்றி கேட்க நீங்க யாருன்னா?” என்று கேட்டவனை கண்டு அரண்டாள்... ஏனெனில் அவள் கேட்க எண்ணியதும் அது தானே, எப்படி இப்படி நுணுக்கமாக தன்னை ஆராய்ந்து வைத்திருக்கிறான் என்று கிலேசம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
“தெரியும் டி உன்னை பற்றி, அதனால இது மாதிரி எல்லாம் பிளான் பண்ணாத சரியா... இவங்களை சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு, உனக்கு என்ன தேவையோ அதை என்கிட்டே மட்டும் சொல்லு, என்கிட்டே மட்டும் தான் சொல்லணும்” என்றவன் மேலும் அங்கே நில்லாமல் அறையிலிருந்து வெளியேறியிருந்தான்.
தரன் என்ன பேசினானோ அவள் அறியாள்?! ஆனால் சென்றவன் அடுத்த பத்தாவது நிமிடம் அறைக்குள் புகுந்து தயாரான நிலையில் இருந்த மனைவியையும், குழந்தையையும் அழைத்துக் கொண்டு வெளியேற எத்தனிக்க... அறைக் கதவை திறக்க கை வைத்த மனைவியை தடுத்து திருப்பி, அவள் தாடையை பற்றி முகம் பார்க்க வைத்தவன்...
“உன்னை அங்கே அனுப்பி வைக்கிறது உனக்காக தான்... முழுக்க முழுக்க உன் நிம்மதிக்காக மட்டும் தான்... அதனால் சீக்கிரம் திரும்பி வரப்பாரு... என்னால் ரொம்ப நாளைக்கு உன்னையும், குழந்தையையும் பிரிஞ்சிருக்க முடியாது... அப்படி பிரியணும்னு நினைச்சாலும் நான் அதற்கு விடமாட்டேன்” என்றவன் அவள் அதரங்களை சிறைபிடித்துக் கொண்டு சில கணங்கள் கடந்தே விடுவித்து விட்டு அவளை அழைத்துச் சென்றான்.
கணவனின் வார்த்தையில் இத்தனை காதலை வைத்திருப்பவன் தன்னை ஏன் அப்படி ஒரு கேள்வி கேட்டு விவாகரத்து வரை இழுத்துச் சென்றான் என்ற சந்தேககீற்றை விரட்டியடிக்க அப்போதே அவனிடம் விளக்கம் கேட்டிருந்தால் கூட அனைத்து மனஸ்தாபங்களும் முகவரி இல்லாமல் ஓடி சென்றயிருக்கும், ஆனால் இருவருக்குமே வாழ்க்கை நடத்தும் காதல் என்னும் பரீட்சையில் காலம் கடந்த ஞானோதயம் தான் பிறக்கும் என்றால் விதியை நொந்துக் கொள்வதா இல்லை அவர்களை நொந்து கொள்வதா?!
**********************
“அரசி நீ மலர் கூட இருக்கணும் போல இருக்குன்னு சொன்ன தானே போய் ஒரு வாரம் தங்கிட்டு வாயேன்” என்று கூறிய அர்ஜுனை வியப்பாக பார்த்தவள்...
“என்ன நிஜமாவா சொல்றீங்க? கெஞ்சினா கூட அனுப்பமாட்டீங்க, இப்போ நீங்களாவே போன்னு சொல்ரறீங்க?” புருவம் உயர்த்தி ஒய்யாரமாக வினவினாள்.
“நம்ம கம்பெனிக்கு வந்திருக்கிற புது ஆர்டர் சம்மதமா அடிக்கடி வெளியே போற வேலை இருக்கு, நீ தனியா அங்கிருந்து பார்க்கணும்... அதான் நீ போயிட்டு உன் தங்கச்சி கூட பாசத்தை பரிமாறிக்கிட்டு வா நாம சேர்ந்து வேலை பார்த்துக்கலாம்” என்று இமைசிமிட்டி கூறியவன், அவள் நெற்றியில் முத்தமிட அதில் கரைந்து கட்டுண்டவள் தன் பிறந்து வீட்டுக்கு புறப்பட ஆயத்தமானாள்.
இவர்களின் இந்த பிரிவு பெருத்த விரிசலை ஏற்படுத்த போவது அறியாமல் போனதேனோ?!
சுவடுகள் தொடரும்....
**************************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்-25 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels | WhatsApp-Kanal
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels🖋
நட்புடன்
காருராம்