Karuram
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-32
ஆதவன் தன் கதிர்களை பரப்பி சுள்ளென்ற காலை நேர ஒளியினால் ஊடுருவி அவன் வதனத்தை தீண்டியதில் தான் ரஞ்சனுக்கும் சுரணை வர...
“ம்ச்...!” என்று உச்சுக்கொட்டி சலித்தபடி சிரமத்துடன் இமைகளை பிரிக்க போராடிக் கொண்டிருந்தான்.
மெல்ல தன்னிலை உணர்ந்து இரவில் நடந்தவைகள் அசைபோட்டவனுக்கு தன் தவறு புரிய வர வாரிசுருட்டிக் கொண்டு எழுந்தவன் மனைவியையும், மகளையும் தான் தேடலானான். வீடு முழுக்க தேடியும் எங்கும் தென்படாமல் போகவே நெஞ்சம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது.
“வாணி எங்க டி போன?” என்றவன் உடல் அச்சத்தில் வியர்க்க ஆரம்பித்தது... தன் உள்ளங்கையால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவனுக்கு நூறுமடங்கு வேகமாக சிந்தனைகள் சுழன்றது. நொடியும் தாமதிக்காது அதிவிரைவாக கிளம்பியவன் தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு அவளை தேடிப் பார்க்க செல்லலானான்.
தன் கணவனின் அச்சத்தையும், பதற்றத்தையும் அறியாத வாணியோ அன்பழகன் வீட்டில் விச்ராந்தியாக உறவாடிக் கொண்டிருந்தாள். அந்த அர்த்த ஜாம நேரத்தில் குழந்தையுடன் தனியாக வந்தவளிடம் ரமாவிற்கு கேட்க ஆயிரம் கேள்வி இருந்தும் அன்பழகன் இப்போது எதுவும் கேட்காதே என்ற வார்த்தையை ஏற்று அவளிடம் கேட்காமல் விட்டுவிட்டார். தன் சொல்லுக்கு மதித்து மிகவும் தயாள குணத்துடனே அவளை வரவேற்று அவரின் மகளை போல் பார்த்துப் பார்த்து உபசாரம் செய்யலானார்.
மகளுடன் நேரம் செலவழித்துக் கொண்டிருந்த வாணியின் முகத்தில் கணவனை அம்போவென்று விட்டு வந்த துயரம் சிறிதுமின்றி இருந்ததை கவனித்தவர் சிந்தனையுடன் நெருங்கினார்.
“ஏன்மா வாணி நேத்து நீ ஏன் திடிர்னு கிளம்பி வந்த உனக்கும், ரஞ்சனுக்கும் என்ன பிரச்சனை?” என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக கேள்விக்கு தாவியவரின் பேச்சும், பார்வையும் அவளை ஊடுருவி துளைத்ததில் பேதலித்தவள் தன்னை சரிபடுத்திக் கொண்டு இரவு நடந்ததை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தாள்.
“அவர் குடிச்சுட்டு வந்ததும் இல்லாம போதையில என்ன பேசுறோம் என்ன பண்றோம்னு தெரியாமலேயே தள்ளாடுறார் இது தான் திருந்தி வாழுற லட்சணமா?” கோபத்தில் மூக்கு விடைக்க சலித்துக் கொண்டவளை நமட்டு சிரிப்புடன் நோக்கினார்.
“சரி நான் கேட்கிறதுக்கு ஆமாம் இல்லைன்னு மட்டும் பதில் சொல்லு போதும்” என்றவர் தொடர்ந்து...
“ரஞ்சன் குடிக்கிறது இப்போ தான் தெரியுமா?”
“இல்லை ஆண்டி முன்னாடியே தெரியும்... லவ் பண்ணும் போதே அவர் சொல்லியிருக்காரு”
“அப்போ அவன்கிட்டே நீ எந்த எதிர்ப்பும் சொல்லலை சரி தானே?” என்றதும் திடுக்கிட்டு பார்த்தவளுக்கு அவளை கண்டு கொண்டதை எண்ணி முகம் சிறுத்துப் போனது.
“இல்லை” என்று ஈனஸ்வரத்தில் பதிலளித்தாள்.
“ஏன் நீ அப்போ மறுப்பு சொல்லலை?”
“அது... அது வந்து” என்று தட்டு தடுமாறிக் கொண்டிருந்தவளை நோக்கி...
“ஏன்னா அப்போ காதல் கண்ணை மறைச்சிருச்சு அப்படித்தானே?”
“இல்லை ஆண்டி அது அப்போ... இப்போ நான் எத்தனை பிரச்சனைகளை கடந்து வாழ வந்திருக்கேன், அவர் எனக்காக பார்க்கலைனாலும் அட்லீஸ்ட் பிள்ளைக்காக பார்க்க வேண்டாமா?”
“நியாயம் தான்! ஆனால் இதையும் யோசி காதலிக்கும் போது சகஜமாக ஏற்றுக்கிற விஷயத்தை கல்யாணம்ன்னு ஆனா ஏத்துக்க மாட்டாங்க இதில் ஆண், பெண் பேதைமை இல்லாம ரெண்டு பேருக்குமே சமம்”
“காதலிக்கும் போது எதிர்க்க தோணாத ஒரு விஷயம், இப்போ உனக்கு எதிர்ப்பா தெரியுது... இதுலையே உனக்கு புரிஞ்சிருக்கணும் காதல் வேற, கல்யாணம் வேறன்னு” என்றவரின் பேச்சை புரிந்து...
“ம்ம்ம்” என்று மேலும் கீழும் தலையசைக்க விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார்...
“உன் புருஷன் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன பண்ணியிருந்தாலும் அது கடந்தகாலம் இப்போ அது எல்லாம் மாறப் போறதும் இல்லை, அதை மாத்துற சக்தியும் நம்மகிட்டே இல்லை... ஒருத்தன் தப்பை திருத்தி வாழ நினைக்கக்குள்ள பழசை கிளருறது குப்பையை கிளருறதுக்கு சமம், அது வாழ்க்கையை சீராக்குமா? யோசி வாணிமா, நீ படிச்ச பொண்ணு அவசரப்பட்டு எதையும் செய்யாம நிதானத்தை கடைபிடி... நான் உனக்கு அறிவுரை சொல்லுறேன்னு சொல்லிகிட்டே போகலாம் நீயும் நம்ம ஆண்டி அவங்ககிட்டே தானே அடைக்கலம் தேடி வந்திருக்கேன்னு கேட்டுக்கலாம்... ஆனால், இதுவும் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டி எரிச்சலை ஏற்படுத்திரும், உங்க விஷயத்தை நீங்களே சரி செய்ய முயற்சி பண்ணுங்க” என்றவர் தன் வேலை முடிந்தது என்பது போல் அங்கிருந்து நகர்ந்திருக்க, வாணியின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படிந்திருந்தது.
ரஞ்சன் உணவு தண்ணீர் இன்றி அலுத்து, களைத்து சாலையில் திரியும் ஞாளியை போல் ஊரை சுற்றி திரிந்து தன் மனைவியை வலை வீசி தேடிக் கொண்டிருந்தான். அவன் முகமோ பீதியில் வெளுத்திருக்க நிமிடத்திற்கு நிமிடம் இதயத்துடிப்பு எகிறிக் கொண்டே சென்றது.
“வாணி எங்க டி போன?” என்று பித்துக்குளி போல் சிகையை விரல்களால் பிய்த்து கொள்ளாத குறையாக அழுந்தப் பிடித்துக் கொண்டவன் முகம் இருளடைந்து போனது. எங்கே தன் தவறால் மீண்டும் மனைவி மகளை தொலைத்துவிட்டோமோ? என்று சிந்தனை தறிகெட்டு பறக்க பேயறைந்ததை உடல் வெலவெலக்க ஜீவனற்று தவித்து நின்றான்.
“இனி எங்கன்னு போய் தேடுறது? வாணி ப்ளீஸ் வந்திரு என்கிட்டே” என்று மனதார வேண்டிக் கொண்டிருந்தவனுக்கு... அன்பழகனின் அழைப்பும் அவர் கூறிய தகவலும் அவன் வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்க அவனின் ஜீவன் மீண்டு உலகமே வெளிச்சமாகியது போல் இருந்தது... வாணியும், குழந்தையும் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை அறிந்ததும் மெல்ல தன்னிலைக்கு வந்தவன் உடல் அத்தனை நேர படப்படப்பில் பலமின்றி துவள சற்று நேரம் காரின் ஸ்டீரிங்கில் முகம் பதித்து அமர்ந்துவிட்டான்.
சில கணங்கள் சென்றதும் பதற்றம் குறைந்து பலம் திரும்பியிருக்க, வெடுக்கென்று தலையை உயர்த்தியவன் ஆவேசத்துடன் அன்பழகன் வீட்டை அடைந்திருந்தான்... உன் மத்தம் பிடித்தவன் போல் வந்து நின்ற ரஞ்சனை ரமா, அன்பழகன் இருவரும் திகைத்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்களை சட்டை செய்யாமல் நேரே வாணியை நெருங்கியவன் அவள் சுதாரிப்பதற்குள் கன்னத்தில் சப்பென்று அறைந்திருந்தான்.
அவனின் செயலைக் கண்டு ரமாமணி கண்டிக்க முனைய, அன்பழகன் பார்வையால் குறிப்பு காட்டி மனைவியின் கரத்தை பிடித்து நிர்தாட்சண்யமாக தடுத்துவிட்டிருந்தார். வாணிக்கு தன் கணவனின் எதிர்பாராத தாக்குதலில் சிக்கியவளுக்கு உள்ளம் அச்சத்தில் தூக்கிவாரிப் போட கலங்கிப் போனாள்.
“உனக்கும் எனக்கும் ஆயிரம் மனஸ்தாபம் இருக்கட்டும், என் மேல் தீராத கோபம் கூட இருக்கட்டும் அதுக்காக என்கிட்டே சொல்லாம வீட்டை விட்டு போனா போடின்னு விட்டிருவேன்னு நினைச்சியா?” ஆவேசம் சிறிதும் குறையாது சினத்தில் உடல் நடுங்க கூறியவனின் வார்த்தையில் மறைந்திருந்த ஆக்ரோஷம் பொங்கியெழ...
“என்னை அப்படி போடின்னு சொன்ன ஆளு தானே நீங்க? என்னை கேட்கவும், அடிக்கவும் உங்களுகென்ன அருகதை இருக்கு?” கண்களில் கோபம் கொப்பளிக்க சீறினாள்.
“ஆமாம் டி நான் சொன்னவன் தான்... நான் யோக்கியன் இல்லை, அயோக்கியன் தான்... என்கூட வாழத் தானே வந்த.....?” என்றவனின் பேச்சு முடிவுறாமல் தடைபட்டது வாணியின் இடையிட்டில்.
“உங்க கூட நான் வாழ வரலை, என் பொண்ணு சமுதாயத்தில் கௌரவமா வளரணும், அதுக்காக அவ அப்பாவா இருக்கிற உங்க கூட இருக்க வந்திருக்கேன்” என்றதும் ஆத்திரம் சீறிப்பாய...
“ஏய்இ...” என்றவன் கரம் திரும்பவும் அவளை தாக்க வேகத்துடன் ஓங்கி உயர்ந்திருக்க வாணி சுதாரித்து விலகி நிற்கவும், அந்தரத்தில் தொங்கி ஊஞ்சலாடி கொண்டிருந்தது.
“அறிவுகெட்டத்தனமா பேசினா நான் மனுஷனாவே இருக்கமாட்டேன் பார்த்துக்கோ” என்றவனை அசராமல் பார்த்திருந்தாள்.
“காலைல இருந்து பல்லுல பச்சைத்தண்ணி படாம நாய் மாதிரி தெரு தெருவா அலைஞ்சு திரிஞ்சேன்டி... ஆனால் நீ என்கிட்டே ஒரு அனுமதி கேட்காம, தகவல் சொல்லாம ஹாயா இங்க வந்து உட்கார்ந்திருக்கிற? இன்னைக்கு ஒரு நாளையில் நான் எத்தனை தடவை செத்து பிழைச்சேன் தெரியுமா? பாவி...!”
“...........” வேகமூச்சுகளை எடுத்து தன் கோபத்தை சமன் செய்துக் கொண்டவன்...
“இனி ஒரு நிமிஷமும் இங்கே இருக்கக்கூடாது ஒழுங்கா கிளம்பு எதுனாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்”
“வர முடியாது” அழுத்தமாக பதிலளித்தவளின் குரலில் காரம் ஏறியிருந்தது...
“ஏன்?”
“குடிகாரன் கூட எல்லாம் குடும்பம் நடத்த முடியாது?”
“என்ன? என் கூட குடும்பம் நடத்த முடியாதா? இதுக்கு முன்னாடி மட்டும் நல்லா ஜெகஜோதியா குடும்பம் நடத்திட்ட மாதிரி தான்... எப்படியும் என்னை சித்திரவதை தான் பண்ணுவா, அதை கூட இருந்தே செய்து தொலை” என்றவனின் இதழ்கள் ஏளனத்தில் வளைந்தது.
“சரி சித்திரவதை பண்ணுறவ உங்களுக்கு எதுக்கு? உங்க கூட வர முடியாது கிளம்புங்க” என்றதும் பொறுமையை காற்றில் பறக்க விட்டவன்...
“என் பொறுமையை சோதிக்காதே... நான் தான் உன் புருஷன், உங்க வீட்டில் என்னை நம்பி தான் உன்னை அனுப்பி வச்சிருக்காங்க ஒழுங்கா என்னுடன் வா” வரவழைத்துக் கொண்ட நிதானத்துடன் தன்மையாக விளம்ப எதற்கும் அசையாத வாணியோ...
“முடியாது! முடியாது! முடியாது!” என்று பிடிவாதத்துடன் மறுக்க... சினத்தில் நரம்புகள் புடைக்க கைமுஷ்டியை இறுக்கியவன் பற்களை நெரித்துக் கொண்டபடி...
“அப்போ! என் மகளை கொடு டி” என்று சிறிதும் தயவின்றி வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு சென்றிருந்தான்.
அவனின் செயலில் வாணி நிலைகுலைந்து நின்றாள். ரமா அவளை சற்று வருத்தத்துடன் பார்த்தவரின் பார்வையில் அவள் செயலுக்கான எதிர்ப்பு இருக்கவே, உடல் கூசி நின்றவளின் சித்தம்... “எல்லாம் அவனால் வந்தது” என்று கணவனை நிந்தித்து கொண்டிருந்தது.
“ம்ச்...!” என்று உச்சுக்கொட்டி சலித்தபடி சிரமத்துடன் இமைகளை பிரிக்க போராடிக் கொண்டிருந்தான்.
மெல்ல தன்னிலை உணர்ந்து இரவில் நடந்தவைகள் அசைபோட்டவனுக்கு தன் தவறு புரிய வர வாரிசுருட்டிக் கொண்டு எழுந்தவன் மனைவியையும், மகளையும் தான் தேடலானான். வீடு முழுக்க தேடியும் எங்கும் தென்படாமல் போகவே நெஞ்சம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது.
“வாணி எங்க டி போன?” என்றவன் உடல் அச்சத்தில் வியர்க்க ஆரம்பித்தது... தன் உள்ளங்கையால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவனுக்கு நூறுமடங்கு வேகமாக சிந்தனைகள் சுழன்றது. நொடியும் தாமதிக்காது அதிவிரைவாக கிளம்பியவன் தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு அவளை தேடிப் பார்க்க செல்லலானான்.
தன் கணவனின் அச்சத்தையும், பதற்றத்தையும் அறியாத வாணியோ அன்பழகன் வீட்டில் விச்ராந்தியாக உறவாடிக் கொண்டிருந்தாள். அந்த அர்த்த ஜாம நேரத்தில் குழந்தையுடன் தனியாக வந்தவளிடம் ரமாவிற்கு கேட்க ஆயிரம் கேள்வி இருந்தும் அன்பழகன் இப்போது எதுவும் கேட்காதே என்ற வார்த்தையை ஏற்று அவளிடம் கேட்காமல் விட்டுவிட்டார். தன் சொல்லுக்கு மதித்து மிகவும் தயாள குணத்துடனே அவளை வரவேற்று அவரின் மகளை போல் பார்த்துப் பார்த்து உபசாரம் செய்யலானார்.
மகளுடன் நேரம் செலவழித்துக் கொண்டிருந்த வாணியின் முகத்தில் கணவனை அம்போவென்று விட்டு வந்த துயரம் சிறிதுமின்றி இருந்ததை கவனித்தவர் சிந்தனையுடன் நெருங்கினார்.
“ஏன்மா வாணி நேத்து நீ ஏன் திடிர்னு கிளம்பி வந்த உனக்கும், ரஞ்சனுக்கும் என்ன பிரச்சனை?” என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக கேள்விக்கு தாவியவரின் பேச்சும், பார்வையும் அவளை ஊடுருவி துளைத்ததில் பேதலித்தவள் தன்னை சரிபடுத்திக் கொண்டு இரவு நடந்ததை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தாள்.
“அவர் குடிச்சுட்டு வந்ததும் இல்லாம போதையில என்ன பேசுறோம் என்ன பண்றோம்னு தெரியாமலேயே தள்ளாடுறார் இது தான் திருந்தி வாழுற லட்சணமா?” கோபத்தில் மூக்கு விடைக்க சலித்துக் கொண்டவளை நமட்டு சிரிப்புடன் நோக்கினார்.
“சரி நான் கேட்கிறதுக்கு ஆமாம் இல்லைன்னு மட்டும் பதில் சொல்லு போதும்” என்றவர் தொடர்ந்து...
“ரஞ்சன் குடிக்கிறது இப்போ தான் தெரியுமா?”
“இல்லை ஆண்டி முன்னாடியே தெரியும்... லவ் பண்ணும் போதே அவர் சொல்லியிருக்காரு”
“அப்போ அவன்கிட்டே நீ எந்த எதிர்ப்பும் சொல்லலை சரி தானே?” என்றதும் திடுக்கிட்டு பார்த்தவளுக்கு அவளை கண்டு கொண்டதை எண்ணி முகம் சிறுத்துப் போனது.
“இல்லை” என்று ஈனஸ்வரத்தில் பதிலளித்தாள்.
“ஏன் நீ அப்போ மறுப்பு சொல்லலை?”
“அது... அது வந்து” என்று தட்டு தடுமாறிக் கொண்டிருந்தவளை நோக்கி...
“ஏன்னா அப்போ காதல் கண்ணை மறைச்சிருச்சு அப்படித்தானே?”
“இல்லை ஆண்டி அது அப்போ... இப்போ நான் எத்தனை பிரச்சனைகளை கடந்து வாழ வந்திருக்கேன், அவர் எனக்காக பார்க்கலைனாலும் அட்லீஸ்ட் பிள்ளைக்காக பார்க்க வேண்டாமா?”
“நியாயம் தான்! ஆனால் இதையும் யோசி காதலிக்கும் போது சகஜமாக ஏற்றுக்கிற விஷயத்தை கல்யாணம்ன்னு ஆனா ஏத்துக்க மாட்டாங்க இதில் ஆண், பெண் பேதைமை இல்லாம ரெண்டு பேருக்குமே சமம்”
“காதலிக்கும் போது எதிர்க்க தோணாத ஒரு விஷயம், இப்போ உனக்கு எதிர்ப்பா தெரியுது... இதுலையே உனக்கு புரிஞ்சிருக்கணும் காதல் வேற, கல்யாணம் வேறன்னு” என்றவரின் பேச்சை புரிந்து...
“ம்ம்ம்” என்று மேலும் கீழும் தலையசைக்க விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார்...
“உன் புருஷன் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன பண்ணியிருந்தாலும் அது கடந்தகாலம் இப்போ அது எல்லாம் மாறப் போறதும் இல்லை, அதை மாத்துற சக்தியும் நம்மகிட்டே இல்லை... ஒருத்தன் தப்பை திருத்தி வாழ நினைக்கக்குள்ள பழசை கிளருறது குப்பையை கிளருறதுக்கு சமம், அது வாழ்க்கையை சீராக்குமா? யோசி வாணிமா, நீ படிச்ச பொண்ணு அவசரப்பட்டு எதையும் செய்யாம நிதானத்தை கடைபிடி... நான் உனக்கு அறிவுரை சொல்லுறேன்னு சொல்லிகிட்டே போகலாம் நீயும் நம்ம ஆண்டி அவங்ககிட்டே தானே அடைக்கலம் தேடி வந்திருக்கேன்னு கேட்டுக்கலாம்... ஆனால், இதுவும் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டி எரிச்சலை ஏற்படுத்திரும், உங்க விஷயத்தை நீங்களே சரி செய்ய முயற்சி பண்ணுங்க” என்றவர் தன் வேலை முடிந்தது என்பது போல் அங்கிருந்து நகர்ந்திருக்க, வாணியின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படிந்திருந்தது.
ரஞ்சன் உணவு தண்ணீர் இன்றி அலுத்து, களைத்து சாலையில் திரியும் ஞாளியை போல் ஊரை சுற்றி திரிந்து தன் மனைவியை வலை வீசி தேடிக் கொண்டிருந்தான். அவன் முகமோ பீதியில் வெளுத்திருக்க நிமிடத்திற்கு நிமிடம் இதயத்துடிப்பு எகிறிக் கொண்டே சென்றது.
“வாணி எங்க டி போன?” என்று பித்துக்குளி போல் சிகையை விரல்களால் பிய்த்து கொள்ளாத குறையாக அழுந்தப் பிடித்துக் கொண்டவன் முகம் இருளடைந்து போனது. எங்கே தன் தவறால் மீண்டும் மனைவி மகளை தொலைத்துவிட்டோமோ? என்று சிந்தனை தறிகெட்டு பறக்க பேயறைந்ததை உடல் வெலவெலக்க ஜீவனற்று தவித்து நின்றான்.
“இனி எங்கன்னு போய் தேடுறது? வாணி ப்ளீஸ் வந்திரு என்கிட்டே” என்று மனதார வேண்டிக் கொண்டிருந்தவனுக்கு... அன்பழகனின் அழைப்பும் அவர் கூறிய தகவலும் அவன் வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்க அவனின் ஜீவன் மீண்டு உலகமே வெளிச்சமாகியது போல் இருந்தது... வாணியும், குழந்தையும் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை அறிந்ததும் மெல்ல தன்னிலைக்கு வந்தவன் உடல் அத்தனை நேர படப்படப்பில் பலமின்றி துவள சற்று நேரம் காரின் ஸ்டீரிங்கில் முகம் பதித்து அமர்ந்துவிட்டான்.
சில கணங்கள் சென்றதும் பதற்றம் குறைந்து பலம் திரும்பியிருக்க, வெடுக்கென்று தலையை உயர்த்தியவன் ஆவேசத்துடன் அன்பழகன் வீட்டை அடைந்திருந்தான்... உன் மத்தம் பிடித்தவன் போல் வந்து நின்ற ரஞ்சனை ரமா, அன்பழகன் இருவரும் திகைத்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்களை சட்டை செய்யாமல் நேரே வாணியை நெருங்கியவன் அவள் சுதாரிப்பதற்குள் கன்னத்தில் சப்பென்று அறைந்திருந்தான்.
அவனின் செயலைக் கண்டு ரமாமணி கண்டிக்க முனைய, அன்பழகன் பார்வையால் குறிப்பு காட்டி மனைவியின் கரத்தை பிடித்து நிர்தாட்சண்யமாக தடுத்துவிட்டிருந்தார். வாணிக்கு தன் கணவனின் எதிர்பாராத தாக்குதலில் சிக்கியவளுக்கு உள்ளம் அச்சத்தில் தூக்கிவாரிப் போட கலங்கிப் போனாள்.
“உனக்கும் எனக்கும் ஆயிரம் மனஸ்தாபம் இருக்கட்டும், என் மேல் தீராத கோபம் கூட இருக்கட்டும் அதுக்காக என்கிட்டே சொல்லாம வீட்டை விட்டு போனா போடின்னு விட்டிருவேன்னு நினைச்சியா?” ஆவேசம் சிறிதும் குறையாது சினத்தில் உடல் நடுங்க கூறியவனின் வார்த்தையில் மறைந்திருந்த ஆக்ரோஷம் பொங்கியெழ...
“என்னை அப்படி போடின்னு சொன்ன ஆளு தானே நீங்க? என்னை கேட்கவும், அடிக்கவும் உங்களுகென்ன அருகதை இருக்கு?” கண்களில் கோபம் கொப்பளிக்க சீறினாள்.
“ஆமாம் டி நான் சொன்னவன் தான்... நான் யோக்கியன் இல்லை, அயோக்கியன் தான்... என்கூட வாழத் தானே வந்த.....?” என்றவனின் பேச்சு முடிவுறாமல் தடைபட்டது வாணியின் இடையிட்டில்.
“உங்க கூட நான் வாழ வரலை, என் பொண்ணு சமுதாயத்தில் கௌரவமா வளரணும், அதுக்காக அவ அப்பாவா இருக்கிற உங்க கூட இருக்க வந்திருக்கேன்” என்றதும் ஆத்திரம் சீறிப்பாய...
“ஏய்இ...” என்றவன் கரம் திரும்பவும் அவளை தாக்க வேகத்துடன் ஓங்கி உயர்ந்திருக்க வாணி சுதாரித்து விலகி நிற்கவும், அந்தரத்தில் தொங்கி ஊஞ்சலாடி கொண்டிருந்தது.
“அறிவுகெட்டத்தனமா பேசினா நான் மனுஷனாவே இருக்கமாட்டேன் பார்த்துக்கோ” என்றவனை அசராமல் பார்த்திருந்தாள்.
“காலைல இருந்து பல்லுல பச்சைத்தண்ணி படாம நாய் மாதிரி தெரு தெருவா அலைஞ்சு திரிஞ்சேன்டி... ஆனால் நீ என்கிட்டே ஒரு அனுமதி கேட்காம, தகவல் சொல்லாம ஹாயா இங்க வந்து உட்கார்ந்திருக்கிற? இன்னைக்கு ஒரு நாளையில் நான் எத்தனை தடவை செத்து பிழைச்சேன் தெரியுமா? பாவி...!”
“...........” வேகமூச்சுகளை எடுத்து தன் கோபத்தை சமன் செய்துக் கொண்டவன்...
“இனி ஒரு நிமிஷமும் இங்கே இருக்கக்கூடாது ஒழுங்கா கிளம்பு எதுனாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்”
“வர முடியாது” அழுத்தமாக பதிலளித்தவளின் குரலில் காரம் ஏறியிருந்தது...
“ஏன்?”
“குடிகாரன் கூட எல்லாம் குடும்பம் நடத்த முடியாது?”
“என்ன? என் கூட குடும்பம் நடத்த முடியாதா? இதுக்கு முன்னாடி மட்டும் நல்லா ஜெகஜோதியா குடும்பம் நடத்திட்ட மாதிரி தான்... எப்படியும் என்னை சித்திரவதை தான் பண்ணுவா, அதை கூட இருந்தே செய்து தொலை” என்றவனின் இதழ்கள் ஏளனத்தில் வளைந்தது.
“சரி சித்திரவதை பண்ணுறவ உங்களுக்கு எதுக்கு? உங்க கூட வர முடியாது கிளம்புங்க” என்றதும் பொறுமையை காற்றில் பறக்க விட்டவன்...
“என் பொறுமையை சோதிக்காதே... நான் தான் உன் புருஷன், உங்க வீட்டில் என்னை நம்பி தான் உன்னை அனுப்பி வச்சிருக்காங்க ஒழுங்கா என்னுடன் வா” வரவழைத்துக் கொண்ட நிதானத்துடன் தன்மையாக விளம்ப எதற்கும் அசையாத வாணியோ...
“முடியாது! முடியாது! முடியாது!” என்று பிடிவாதத்துடன் மறுக்க... சினத்தில் நரம்புகள் புடைக்க கைமுஷ்டியை இறுக்கியவன் பற்களை நெரித்துக் கொண்டபடி...
“அப்போ! என் மகளை கொடு டி” என்று சிறிதும் தயவின்றி வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு சென்றிருந்தான்.
அவனின் செயலில் வாணி நிலைகுலைந்து நின்றாள். ரமா அவளை சற்று வருத்தத்துடன் பார்த்தவரின் பார்வையில் அவள் செயலுக்கான எதிர்ப்பு இருக்கவே, உடல் கூசி நின்றவளின் சித்தம்... “எல்லாம் அவனால் வந்தது” என்று கணவனை நிந்தித்து கொண்டிருந்தது.
**********************
மலரின் காரணமாக ஏற்பட்ட சச்சரவுக்கு பிறகு தரன் தன் மனைவியிடம் பேசுவதை தவிர்த்திருந்தான்... அவன் எப்போது வருகிறான், எப்போது செல்கிறான் என்றே அறியாது சம்யுக்தா புரியாது குழப்பத்தில் இருக்க, அன்று எப்படியேனும் கணவனிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கணவன் வருகைக்காக காத்திருக்கும் வேளையில் தன் அலுவலக பணியையும் சேர்ந்தே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கலாதரன் வெகு தமாதமாகவே வீட்டிற்கு வந்தவன் முகம் மிகவும் களைப்புற்று வாடிப் போய் தெரிந்தது... கணவனின் வருகையும், அவன் முகத்தில் தெரிந்த அபரீதமான களைப்பும், எதையோ தவறென சுட்டிக் காட்டியது. சம்யுக்தா நொடியும் தாமதியாமல் எழுந்து அவனுக்காக பாதம் கலந்த பாலும், பழமும் எடுத்து வந்தவள் அங்கிருந்த மேஜை மேல் வைத்துவிட்டு...
“இதை குடிச்சுட்டு பழம் சாப்பிடுங்க, ஆல்ரெடி லேட் ஆகிருச்சு, இதுக்கு மேல சாப்பிட்டா உடம்புக்கு பிரச்சனை” என்று அக்கறையாக கூறியவளின் வார்த்தையை சிறிதும் சட்டை செய்யாமல் தன் போக்கில் இரவு உடைக்கு மாறிக் கொண்டிருந்தவனை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘ஏன் எதுவும் பேசவே மாட்டேங்குறான்’ என்று பேசிக் கொண்டவள் அவனிடம் அதை பற்றி நேரடியாகவே விளம்பினாள்.
“என்னாச்சு உங்களுக்கு? எதுவும் பேசவே மாட்டேங்குறீங்க? சாப்பிட சொன்னா சாப்பிட மாட்டேங்குறீங்க, எங்கே போறீங்க, எப்போ வரீங்கன்னு ஒண்ணுமே தெரியறது இல்லை... பொண்டாட்டின்னு ஒருத்தி நான் இங்கே எதுக்காக இருக்கிறேன்” என்றவளை கூர்மையாக பார்த்தவனின் பார்வையில் குற்றச்சாட்டு இருந்தது.
“நீ வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேசுவ நான் கேட்டுகிட்டே இருக்கணுமா? அதுதான் சொன்னியே என்னை விட நல்ல வசதியான பையனா பார்த்து கல்யாணம் பண்ணியிருப்பேன்னு, நான் தான் அதில் மண்ணை வாரிப் போட்டுட்டேன்... தப்பு தான்! என்னை மன்னிச்சிரு... நடந்ததை மாத்துற சக்தி என்கிட்டே கிடையாது, அதனால் எப்போ வேணும்னாலும் கேளு... இந்த எலி பொந்தில் என் கூட இருந்து நீ கஷ்டப்படாமல் இருக்க விடுதலை கொடுத்திடுறேன்” என்று விட்டு திரும்பியவனின் முழங்கையை இறுகப் பற்றிக் கொண்டவள் விழிகள் கனலை கக்கி கொண்டிருந்தது.
“நான் சொன்ன வார்த்தை மட்டும் தான் உங்களுக்கு பெரிய குற்றமா தெரியுதா, உங்க அம்மா பேசினது எல்லாம் தெரியலையா? என் அண்ணன் தப்பு செய்தவன் தான் அதுக்காக பாழுங்கிணறு அது இதுன்னு சொல்லலாமா?”
“அவங்க சொன்னது தப்பு தான் இல்லைன்னு சொல்லலை... ஏதோ பெத்த பொண்ணு வாழ்க்கை இப்படி போராட்டமா போயிருச்சேங்கிற ஆதங்கத்தில் வார்த்தையை விட்டுட்டாங்க... ஆனா அவங்க சொன்ன வார்த்தையும், நீ சொன்ன வார்த்தையும் ஒண்ணாகிருமா? என் முன்னாடியே இன்னொருத்தனை கல்யாணம் செய்திருப்பேன்னு சொல்லுற, இதே வார்த்தையை நான் சொல்லியிருந்தா நீ கேட்டுட்டு சும்மா இருந்திருப்பியா?” என்றதும் அவன் வார்த்தையில் இருந்த உண்மை அவள் மனதை சுட, தன் தவறை உணர்ந்தவளாக பார்வையை தாழ்த்தி உதட்டை கடித்துக் கொண்டாள்.
சில கணங்கள் அவளை வெறித்துவிட்டு அவளுக்கு முதுகை காட்டி படுத்துக் கொள்ள, தானும் அவனுக்கு முதுகை காட்டி படுத்துக் கொண்டாள்... கணவன், மனைவி இருவரும் இரு வேறு துருவங்களாக சயினித்திருந்தவர்களின் விழிகள் நித்திரையை தொலைத்து வெற்று சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தது.
மலருக்கு பள்ளிக் கல்வியின் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க, ஆடை வடிவமைப்பு துறையில் அவளுக்கு வெகுவாக நாட்டம் இருந்ததில் அதை தேர்ந்தெடுக்க திட்டமிட, அதற்கு குழலி பலமான எதிர்ப்பு தெரிவித்ததை சம்யுக்தா, தரன் இருவரும் முறியடித்திருந்தனர்... குருதரன் தான் மனைவியிடம், மகளின் ஆர்வத்தை பற்றி பக்குவமாக எடுத்துக் கூறினார்.
“ஒருத்தியை ஊருவிட்டு ஊரு அனுப்பி வச்சே வாழ்க்கை வீணாப் போச்சு, இதுல இன்னொருத்தியும் அப்படியே அனுப்புறதா, ஊர் உலகம் நம்மளைத் தான் தப்பு சொல்லும்”
“யார் என்ன சொன்னா நமக்கென்ன குழலி? நமக்கு ஒண்ணுன்னா பார்க்கப் போறது நம்ம பிள்ளைகள் தான், ஊருக்காக அவங்க மனசை நோகடிக்கிறது நல்ல அம்மா, அப்பாவுக்கு அழகில்லை”
கோவையில் உள்ள கல்லூரிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டி சம்யுக்தாவின் உதவியை நாடி அதை செய்து முடித்தவளிடம்... “அப்ளிகேஷன் பீஸ், எண்ட்ரன்ஸ் பீஸ் ஆன்லைன் பேமென்ட் மோடில் டிக் பண்ணிரு” என்று கூறி அவளை வழி நடத்திக் கொண்டிருக்க, காற்று வாக்கில் தரனும் அதை கேட்டுக் கொண்டவன் மலர் அங்கிருந்து நகர்ந்ததும் தன் மனைவியை நாடியவன்...
“இந்த பணம் மலருக்கான படிப்பு செலவுக்கானது, அவளுடைய தேவைகளை நான் பார்த்துக்கிறேன்” என்றவன் மேஜை மேல் வைத்துவிட்டு நகர்ந்திருக்க, கணவனின் அன்றைய பேச்சும் இன்றைய செயலும் அவளை ஒதுக்கிவிட்டதாக கருதியவளுக்கு மனம் வெறுத்துப் போனது.
**********************
ரமாமணியின் அறிவுரையில் வாணி ரஞ்சனிடம் மல்லுக்கட்டாமல் அமைதியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள்... ஆனால் எக்காரணம் கொண்டும் அவனுடன் சேர்ந்து இருக்கும்படி அவள் சூழ்நிலையை தக்க வைத்துக் கொள்ளாமல் அருகில் உள்ள தனியறையில் தங்குவதை வாடிக்கையாக்கி கொண்டிருந்தாள்... முன்பிலும் இருமடங்கு அதிகமாக அவனுடனான ஒதுக்கத்தை கடைப்பிடிப்பதில் மிகவும் கவனமாக இருக்கவே அவனுக்கு மனம் வலித்தது.
அவர்களுக்குள் உரையாடல் நிகழ்ந்தால் பெரும்பாலும் அது அவர்களின் மகளை முன்னிட்டே இருந்தது... விரைவில் வரவிருந்த வியனியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட எண்ணிய ரஞ்சன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தான்.
வாணிக்கும், மகள் வியனிக்கும் புதிய ஆடைகளை அவனே தேர்வு செய்து வந்திருக்க அதை தன் மனைவியிடம் சமர்பித்தான்.
“வாணிமா, இந்தா உனக்கும் நம்ம பொண்ணுக்கும் பர்த்டே ஃபங்சன்க்கு வேண்டிய டிரஸ், நம்ம கடையில ரெகுலர் சப்ளையர்கிட்டே உங்களுக்காக ஸ்பெசலா ஆர்டர் பண்ணி வாங்கியிருக்கேன்”
“எங்கே கொடுங்க பார்க்கலாம்” என்று பெற்றுக் கொண்டவள் முதலும் முக்கியமாக அவள் பார்த்தது விலைபட்டியல் அடங்கிய சீட்டை தான்.
“என்னங்க இது பதினஞ்சாயிரம் போட்டிருக்கு, என்கிட்டே இப்போ பத்தாயிரம் தான் இருக்கு அதுவுமில்லாம இவ்ளோ காஸ்ட்லி சேலை எல்லாம் எனக்கு வேண்டாம், இரண்டாயிர ரூபாயில் இருந்தா போதும்... உங்க பொண்ணுக்கு அப்படியே விட்டுட்டு எனக்கு மாத்திருங்க, இந்தாங்க ஐயாயிரம் ரூபாய்” ஏதோ அவள் மூன்றாம் மனுஷியை போலவும், ரஞ்சன் கடை முதலாளி போலவும் பாவித்து பேசி அவனிடம் பணத்தையும் நீட்டியவளை நோக்கி பார்வையை கூர்மையாக்கி கொண்டவன்...
“இங்கே பாரு இதுக்கு நான் ஏதாவது அசிங்கமா கேட்டு விட்டிருவேன்” என்றவன் சினத்தை கட்டுபடுத்திக் கொள்ள பற்களை நெரித்து கொண்டிருந்தான். அவனின் பேச்சை கேட்டு அவள் கண்கள் இடுங்க...
“என்னங்க ஆச்சு?” ஒன்றும் அறியாதவளை போன்று கேட்டு வைத்து அவன் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தாள்.
“ம்ம்ம்... வெங்காயம் ஆச்சு... இந்த காஸை எல்லாம் சேர்த்து வச்சுக்கோ... நான் செத்தா எனக்கு கருமாரி செய்ய இந்த பணத்தை உபயோகப்படுதிக்கோ” அவளால் உண்டான வெப்பத்தில் சற்று காட்டமாக கூறியிருக்க, அவன் வார்த்தையில் நடுங்கிப் போனாள்... என்ன தான் அவன் ஆகாத கணவன் என்றாலும் அவளுக்குள் இருந்த நேசம் என்னும் வேர் அவனின் சொல்லில் அவளை ஆட்டுவித்திருந்தது.
“ஏன் ரஞ்சன் இப்படி பேசுறீங்க? தயவு செய்து இப்படி எல்லாம் சொல்லாதீங்க” என்றவளின் குரல் பீதியில் நடுங்கியது.
“வேற என்னத்தை சொல்ல சொல்லுற? நானும் திருந்திட்டேன்னு இன்னும் எப்படி நிரூபிக்கிறதுன்னு எனக்கு தெரியலை வாணி?”
“...........”
“நான் செத்தாதான் என்னை மன்னிப்பேன்னா அதுக்காகவாச்சும் என் உயிர் போகட்டும்” என்றவன் நிமிடமும் தாமதியாமல் அங்கிருந்து நகர்ந்திருக்க விக்கித்துப் போனாள்.
அவன் பேச்சில் அரண்டு போயிருந்த வாணி அதன் பிறகு அது போன்ற செயலையோ, பேச்சையோ அவனிடம் மறந்தும் பேச துணியவில்லை... மகளின் பிறந்தநாள் விழாவை மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தான் மனோரஞ்சன்.
ரஞ்சன் தேனி சென்று நேரிலேயே அர்ஜுன் மற்றும் தரன் குடும்பத்திற்கு அழைப்பு விடுவித்திருக்க, அனைவரும் தவறாமல் கலந்துக் கொண்டனர்... பூங்குழலிக்கு மகள் எப்படி அங்கே இருக்கிறாளோ என்று வேதனையில் இருந்தவருக்கு, அவளின் படாடோபம் கண்டு மனக்கவலை நீங்கியவராக உற்சாகமாக வளைய வந்தார்.
குருதரன், கேசவதரன் இருவருக்கும் அதே மனநிலை தான் என்பதால் மேற்கொண்டு என்னவென்றாலும் தரனும், மருமகளும் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எண்ணம் துளிர்விட்டது.
அரசியும், அர்ஜுனும் இணைந்து பிறந்தநாள் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்துக் கொண்டிருந்தனர்... “பரவாயில்லை பையன் அடிபட்டதும் தான் திருந்தியிருக்கான்... சும்மாவா சொன்னாங்க அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டங்கன்னு” என்று மனைவியிடம் கூற அரசியோ...
“என்னங்க ஏதேதோ சொல்றீங்க? ரஞ்சன் அடி வாங்குனாரா?” என்று கண்கள் சுருக்கி கேட்டவளின் கேள்வியில் தான் வாய் தவறி உளறியிருப்பதை உணர்ந்தவன் தன் தவறை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டான்.
“ஹிஹிஹி! அதெல்லாம் ஒண்ணுமில்லை அரசி... இந்த ரஞ்சனுக்கு இப்போ வந்த புத்தி இதுக்கு முன்னாடி எங்க போச்சுன்னு தெரியலை, ஒரு வேளை மூளையை குத்தகைக்கு விட்டிருந்திருப்பான் போல” என்று பகடி பேசிவிட்டு அவள் அடுத்த கேள்வியை கேட்க வழியின்றி...
“அங்க என்ன வைக்கறீங்க?” என்று கேட்டபடி வேலை ஆட்களை நெருங்கினான்... அங்கே சிறிய மேடை போல் அமைத்து இசை வாசிப்பு உபகரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தவர்களை கண்டு அரசிக்கும் என்னவென்று விசாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்க அவனை தொடர்ந்து சென்றிருந்தாள்.
தரன் தயாராகிக் கொண்டு திரும்பியவன், அப்போதும் சம்யுக்தா வாராமல் இருக்கவே, அவன் பார்வை இன்னும் தயாராகாமல் இருந்த மகள் மேல் படிந்தது... அவளோ கட்டிலில் இருந்த மாத நாளிதழை சுருட்டி அதை முழுவதுமாக வாயில் திணிக்க முயன்று கொண்டிருந்ததை கண்டு அவளிடமிருந்து பிடுங்க, அழுகையில் உதடு பிதுங்கியதை கண்டு வேறொரு பொம்மையை கொடுத்து சமாதானம் செய்ய முயன்று அதில் வெற்றியும் பெற்றான். அதே சமயம் அவன் மனைவி அங்கே பிரசன்னமாக...
“ஏய் இன்னும் குழந்தையை ரெடி பண்ணாமல் என்ன பண்ணுற?” என்று அதிகாரமாக கேட்க, அவளோ அசட்டையாக அவனை பார்த்தவள்..
“ஏன் உங்க பிள்ளையை நீங்க ரெடி பண்ணுங்க... நான் என் அண்ணன் பெண்ணை ரெடி பண்ணனும்” என்றவள் ரஞ்சன் மகளிடம் திரும்ப கோபமாக பேச முனைந்தவனின் செயல் தடைப்பட்டது வாணியின் வரவில்.
“அண்ணி இந்தாங்க நீங்க கேட்ட லோசன்” என்று கொடுத்தவள் வேகமாக அங்கிருந்தும் நகர்ந்திருந்ததும்...
“ஏய் உன் அண்ணன் மகளை உன் அண்ணன் ரெடி பண்ணமட்டானா... இல்லை; அவ பொண்டாட்டி பார்க்கமாட்டாளா, முதலில் நீ என் பொண்ணை பாருடி” என்று அதட்டல் போட அவளோ அவனின் பேச்சு எதையும் சட்டை செய்யாமல்...
“தங்கப் பொண்ணுக்கு ட்ரஸ் அழகாயிருக்கு” என்று கூறி அவள் பூ போன்ற கன்னத்தில் முத்தமிட்டு மகளை தூக்கிக் கொண்டு சென்றிருந்தாள். தரன் நேரமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் பல்லை கடித்தப்படி மனைவியை கரித்துக் கொட்டிக் கொண்டே மகளை தானே தயாராக்கினான்.
இரவு பல வகையான உணவு வகைகளுடன் கேக் வெட்டும் நிகழ்வும் அருமையாக அமோகமாக முடிந்திருக்க, அவரவருக்கு வேண்டியது போல் பஃப்பே முறையில் ஆங்காங்கே அமர்ந்தும், நின்றும் கதை பேசியபடி உணவை உட்கொண்டனர்.
இவர்களின் பொழுதுபோக்கிற்காக என்று பாட்டு கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தான் ரஞ்சன். அச்சமயம் கச்சேரியும் தொடங்க...
கொஞ்சிக் கொஞ்சி
பேசிவரும் தமிழ்போல
அஞ்சி அஞ்சி
வீசிவரும் அலைபோல
நெஞ்சில் என்றும் தங்கும்
சங்கக் கவிபோல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க
வாழ்த்துகிறோம்
பூ தூவுகிறோம்
என்ற படலை ஒலிக்கச் செய்து அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி சற்று சிந்திக்க வைத்துக் கொண்டிருந்தன.
இரண்டு வரிகளில்
திருக்குறள் இருந்திட
காரணமிருக்கிறதே
கணவன் ஒருவரி
மனைவி ஒருவரி
அர்த்தம் கிடைக்கிறதே
யார் பெரிதென்ற
எண்ணங்கள் வேண்டாம்
சிந்தித்துப்பாருங்களேன்
சரிசமமாய் உள்ள
தூண்களில்தானே
நிற்கும் கோபுரங்கள்
என்ற வரிகளில் மூன்று ஜோடிகளின் பார்வையும் அவரவர் இணைகளுடன் சந்தித்துக் கொண்டன. தர்சன் பாடலை மேம்போக்காக ரசித்துக் கொண்டு வியனி, நிலாயாழினி இருவரையும் தரையில் நிற்க வைத்து உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தான்.
சந்தேகம்தான்
தீயை வைக்கும்
நம்பிக்கைதான்
தீபம் வைக்கும்
இந்த விண்னும் மண்னும்
உள்ள நாள் வாழ்க!
என்ற வரிகள் சரியாக அரசியை குறிபார்த்து தாக்கியிருக்க, அவள் விழிகள் குற்றவுணர்ச்சியுடன் கணவனை தொட்டுக் கொண்டிருந்தது... அர்ஜுனோ அவளின் பார்வையின் பொருள் புரிந்தாலும், ஒன்றும் அறியாதவன் போல் அவளை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர் அவர் எண்ணம்
அவரவர்க்குண்டு
ஆதிக்கம் வேண்டாமே
ஒரு தனிப்பட்ட சுதந்திரம்
இருவருக்கிடையில்
அவசியம் இருக்கட்டுமே
ஒருவருக்கொருவர்
பாசம் தந்து
நன்பர்கள் ஆகுங்கள்
ஒவ்வொருநாளும்
ஒருமுறையேனும்
ஒன்றாய் உண்னுங்கள்
இந்த வரிகள் சம்யுக்தாவை தட்டி எழுப்ப தன் கணவன் அன்று கூறிய வார்த்தைகளை நினைவுக் கூர்ந்து அவனை அர்த்தத்துடன் பார்க்க தரன் நமட்டு சிரிப்புடன் இமைசிமிட்டினான்.
கொஞ்சம் நீங்கள்
விட்டுத்தந்தால்
சொர்க்கம் உங்கள்
வீட்டைத்தட்டும்
காலம் எல்லாம்
உங்கள் நெஞ்சில்
பூப் பூக்கும்
என்ற வரிகள் மூன்று தம்பதியர்களையுமே அசைய வைத்திருக்க வரிகளின் அர்த்தமும், உண்மையும் புரிந்தவர்களாக கட்டுண்டு நின்றனர்.
பாடலை பாடி முடித்ததும் அங்கிருந்த அனைவரின் கரங்களும் ஒன்றிணைந்து தட்டி பலத்த கரகோஷம் எழுப்பியது... ரஞ்சனை பற்றி ஆதியந்தம் முழுவதும் தெரிந்தவர்களுக்கு அவனா இது போன்ற நிகழ்வை நடத்தினான் என்ற பிரமிப்பில் வாயை பிளந்தனர்.
அதை அவர்கள் வாய் வார்த்தையிலும் தவறாமல் கூறிவிட்டு செல்ல ரஞ்சன் அதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை... ஆனால், அவர்களின் பேச்சில் வாணியின் மனதில் அவன் மேல் கொண்ட அபிப்ராயம் மாறுவதற்கான ஆரம்பமாக சலனம் ஏற்பட்டது.
அன்று இரவே குழலி, மல்லிகா இணைந்து அனைவரையும் ஒன்றாக அமர வைத்து திருஷ்டி சுற்றினர். அன்று ஓர் இரவு அனைவரும் விழா முடிந்த திருப்தி மட்டுமின்றி, இனி தங்கள் வாழ்வில் அவரவர் பங்கிற்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற உறுதியை கொண்டே நித்திரையில் ஆழ்ந்தனர்.
அனைவரும் அங்கிருந்து அவரவர்கள் இருப்பிடம் நோக்கி நகர்ந்திருக்க, சம்யுக்தா தன் கணவனுடன் அங்கே நின்றவள் ரஞ்சனிடம் தொழில் சம்மந்தமாக பேசிவிட்டே புறப்பட ஆயத்தமானாள்...
“இங்கே பாரு வாணி என் அண்ணன்கிட்டே இனியும் பழசை கிளறி சண்டை போட்டுக்கிட்டு இருக்காதே... சீக்கிரமே வியனிக்கு ஒரு தம்பி பாப்பாவை ரெடி பண்ணு” என்க... வாணிக்கு முகம் சிவந்து வெட்கத்தில் தலைதாழ்த்திக் கொண்டாள்... ரஞ்சனோ யாருக்கு வந்த விருந்தோ என்று பற்றில்லாமல் உணர்ச்சியற்று நின்றிருந்தான்.
வியனியின் பிறந்தநாளுக்கு பிறகு வாணியிடம் சில மாற்றங்கள் விளைந்தது... அவனுடன் உண்ணும் உணவிலிருந்து தொழில் சம்மந்தமான அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். ரஞ்சன் அவளுடன் இணைந்து இணக்கமாக பேசினாலும், உண்டாலும் அதற்கு மேல் எந்தவித ஈடுபாடும் காண்பிக்கவில்லை. இருவருமே ஒரு எல்லைக்கு மேல் கடந்து செல்ல ஏதோ ஒன்று தடுத்ததில் ஒரே சிந்தனை அலையில் இருந்தனர்.
காலசக்கரம் வேகமாக சுழன்று நாட்கள் நகர்ந்தோட மாற்றம் இல்லாது சில சண்டை சச்சரவுகளுடன் நகர்ந்துக் கொண்டிருந்தது... சம்யுக்தா, தரன் இருவரும் அவரவர்கள் போக்கில் இருந்தனர். சம்யுக்தாவுக்கு தான் கணவன் தன்னிடம் இருந்து விலகியே செல்ல எண்ணுகிறானோ என்ற சந்தேககீற்று மூளையை குடைந்தது... அவர்களின் ஆரம்ப பிரச்சனையும் அதற்கு முட்டு கொடுக்க அவளுள் அது விருட்சமாக வளர ஆரம்பித்தது.
சம்யுக்தா அன்று காணொளி கூட்டத்திற்காக வெகு விரைவாக புறப்பட்டவள், குழந்தையை மலரின் பொறுப்பில் விட்டுச் செல்ல எண்ணி அவளை அணுகியிருந்தாள்.
“மலர் பாப்பாவை பார்த்துக்கோ நான் ஈவ்னிங் தான் வருவேன்”
“அண்ணி நான் இன்னைக்கு என் பிரெண்ட் வீட்டுக்கு போகணுமே?”
“அப்படியா நாளைக்கு போயிக்க முடியாத மலர்... இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கே நான் போயாகணுமே?”
“இல்லை அண்ணி, தப்பா நினைக்காதீங்க காலேஜ் போறதுக்கு முன்னாடி என் பிரெண்டோட அக்காகிட்டே சில புக்ஸ் வாங்கியாகணும், அவ நாளைக்கு அவங்க பாட்டி ஊருக்கு கிளம்புறா, அப்புறம் நான் காலேஜ் போனப்புறம் தான் வருவா அதனால இப்போ போனா தான் உண்டு”
“அப்படியா சரி விடு நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்”
“அண்ணி நான் மதியத்துக்கு மேல் தான் கிளம்பப் போறேன், வேணா பாப்பாவை அம்மாகிட்டே சொல்லி விட்டுட்டு அப்புறம் போறேன், நீங்க கவலைபடாம கிளம்புங்க” என்று கூற இருக்கும் வேலை பளுவிற்கு மறுப்பு கூறாமல் அவள் பேச்சிற்கு ஆமோதிப்பு அளித்துவிட்டு சென்றிருந்தாள்.
பூங்குழலி மருமகளிடம் காட்டும் வீராப்பை குழந்தையிடம் கட்டியதில்லை... பேத்தி என்ற உரிமையுடன் மகிழ்ச்சியுடனே சீராட்டினார்... ஆனால் மலர் கிளம்பும் போது எங்கே அவர் குழந்தையிடம் கோபத்தை காட்டிவிடுவாரோ என்று தவறாக புரிந்துக் கொண்டு...
“அம்மா பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோ, அண்ணி மேல இருக்கிற கோபத்தை நிலா மேல காட்டதே” என்றவளை முறைத்தவர்...
“அடிப்போடி கூறு கெட்டவளே உன் அண்ணிக்கும், எனக்கும் அடிக்கடி முட்டிக்குது தான்... அதுக்காக அவ எனக்கு மருமகள் இல்லைன்னு ஆகிருமா? இல்லை; இந்த தங்கம் தான் பேத்தி இல்லைன்னு ஆகிருமா? நான் ஒன்னுக்கு ரெண்டு பிள்ளைகளா உங்க அக்காவையும், உன்னையும் பெற்றிருக்கிறேன் எனக்கு தெரியும் பார்த்துக்க நீ வேலையை பார்த்துட்டு கிளம்பு”
“கூறுகெட்டவ இந்த வீட்டுக்கு நீ தான்டி வாரிசு உன்னை போய் நான் பார்த்துக்கமாட்டேனாம் உங்க சித்தி சொல்றா” என்று குழந்தையிடம் கூற, அவளுக்கு என்ன புரிந்ததோ தன் இரண்டொரு பற்களை காட்டி கிளுக்கி சிரித்தாள்.
அனைத்தும் நன்றானது போல் மலர் உற்சாகமாக கிளம்பினாள் அனைத்தும் அன்று மாலை வரை மட்டுமே நீடித்தது.
குழலி குழந்தையை விட்டு நகராமல் அடைகாத்துக் கொண்டிருந்தவருக்கு இயற்கை உபாதை குடைச்சல் கொடுக்கவே, அவளை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு கொல்லை பக்கம் சென்று விட்டு வந்து பார்த்தவர் பதைபதைத்து போனார்.
சுவடுகள் தொடரும்....
**************************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்- 32 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels | WhatsApp-Kanal
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels🖋
நட்புடன்
காருராம்