All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Samvaithi007

Bronze Winner
:smiley15::smiley18::smile1::smiley15::smiley18:

மலரின் மணம் போல, தென்றலின் சுகம் போல.. மழை தரும் பெருமை உணர்ந்து.. ஏற்றுக் கொள்ள அவன் விரிந்த மனத்தினன்..

அவளோ.. காதலின் பிரளயம் அறியா.. குழந்தை இயல்பினள், பார்ப்போம் என்ன நிகழும் என்று..
காத்திருக்கிறேன்❣️❣️❣️❣️
 

தாமரை

தாமரை
வரண்டு நாவிற்கே தான் தெரியும் சொட்டு நீரின் இன்றியமையும் அருமையும்🌹🌹🌹🌹🌹
உண்மை வாசூ மா... தூய்மையும், தன்னலமின்மையும் அரிதினும் அரிதாய்.. போய்க் கொண்டிருக்கிறது..
 

Deebha

Well-known member
கரண் சிறிதாக மாறுகிறார் , மது அம்மா விடம் இயல்பாக பேசுகிறார். சுகர் ஜி கு கை கொடுக்கிறார்.விவி கண்களால் தோழியை control செய்வது சிறப்பு.
 

தாமரை

தாமரை
கரண் சிறிதாக மாறுகிறார் , மது அம்மா விடம் இயல்பாக பேசுகிறார். சுகர் ஜி கு கை கொடுக்கிறார்.விவி கண்களால் தோழியை control செய்வது சிறப்பு.
நன்றி தீபா மா.. கருண் எப்பவுமே கேரிங் தான். ஆட்களுடன் அன்பின் முறையில் பேசுவது இப்போது மதுவால் செய்ய வைக்கப் படுகிறான். அண்ணனுடன்.. இணைப்பு அழகா சொன்னீங்க, அன்னை இல்லாக் குறை..இந்த விலக்கம்,

வீவீ எப்பவும் சூப்பர் தான் மா. கருத்துப் பகிர்விற்கு நன்றி
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

கட்டிப் போடும் நடையில்
மெட்டுப் போடும் இதயம்
தாமரை அவள் கருவில்
சுதிலயத்தில் பாட்டெடுக்க...

மழைச்சாரல் அன்பில்
புதுப் புணலாய் கடலாட...
மது மயக்கம் தீராமல்
மன இயக்கம் மறந்ததென்ன...?

கட்டுப் படுத்தும் நட்பில்
விட்டுப் பறக்கும் மழையவள்
கண்கட்டு வித்தையில்
பீறிட்ட சிரிப்பில்
புண்ணான வயிற்றில்
பசி மயக்கம் மீறாதோ...!

சூரிய வணக்கம்
வேகம் என்றால்
சாவகரி சுணக்கம்
விவேகம் அன்றோ...?

ஆழ்கடலை அசைக்கும்
மழைமகள் ஓட்டம்
மேலைக் கடலில் பாய்விரிக்க
வங்கம் நோக்கி இழுக்காதோ..!

குட்டியாணைக்கு அடி போட்டவள்...
பேர் வைத்து சீராட்டிய அழகு, பேரழகு!

பூம்பாறை நாயகன்
ஆழ்மனம் தேடும்
மழை மகளே!
நீ...
ஆலோலம் பாட
அகம் திறந்தானோ...
கடலவனே!



வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:

JoRam

Active member
கியூபிக் காய்ச்சல் வர கூடாது வேண்டுகிறேன் என்பதே அன்பின் சிறப்பு. அண்ணன் தம்பியிடம் நட்பு கரம் நீட்டி நேச பாதைக்கு வழி வகுக்கின்றான்.

விவி ஹசி சிறப்பு. கருண் வறட்சிக்கு அன்பு மழை பொழிவது அழகோ அழகு.
 

தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

கட்டிப் போடும் நடையில்
மெட்டுப் போடும் இதயம்
தாமரை அவள் கருவில்
சுதிலயத்தில் பாட்டெடுக்க...

மழைச்சாரல் அன்பில்
புதுப் புணலாய் கடலாட...
மது மயக்கம் தீராமல்
மன இயக்கம் மறந்ததென்ன...?

கட்டுப் படுத்தும் நட்பில்
விட்டுப் பறக்கும் மழையவள்
கண்கட்டு வித்தையில்
பீறிட்ட சிரிப்பில்
புண்ணான வயிற்றில்
பசி மயக்கம் மீறாதோ...!

சூரிய வணக்கம்
வேகம் என்றால்
சாவகரி சுணக்கம்
விவேகம் அன்றோ...?

ஆழ்கடலை அசைக்கும்
மழைமகள் ஓட்டம்
மேலைக் கடலில் பாய்விரிக்க
வங்கம் நோக்கி இழுக்காதோ..!

குட்டியாணைக்கு அடி போட்டவள்...
பேர் வைத்து சீராட்டிய அழகு, பேரழகு!

பூம்பாறை நாயகன்
ஆழ்மனம் தேடும்
மழை மகளே!
நீ...
ஆலோலம் பாட
அகம் திறந்தானோ...
கடலவனே!



வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
மழைச்சாரலாய் உம் கவி.. புதுப்புனலாடிய ரசிகையாய் நான்..

ஆழ்கடலை அசைக்குமா மழை..
எம் மனக்கடலின் அலை கிளப்பியது உம் தமிழ்..

ரசிப்பில் புண்ணானதோ வயிறு..
உம் ரசனையால் பொன்னானது இப்படைப்பு...

பூம்பாறை நாயகன்
ஆழ்மனம் தேடும்
மழை மகளே!
நீ...
ஆலோலம் பாட
அகம் திறந்தானோ...
கடலவனே!

மிக அழகு செல்வி மா..

கருண சாகரன் 💖💖 மதுவர்ஷினி ..


நன்றி நன்றி💕💕💕💕💕💟💝💟💝💟💝💟💝
 
Top