All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 24(4)
timthumb.jpg


கணவன் பேச வருவதற்குள் அந்த வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டாள் ரூபிணி

அந்த அறையின் கதவை தட்டி ,"சாரி ரூபா ...ரொம்ப சாரி மா ...இன்னைக்கு ஆபீஸ் friend பொண்ணுக்கு பர்த்டேன்னு கூப்பிட்டான் போனேன் ....அந்த குட்டி பாப்பாவை பார்த்த உடன் எனக்கு நம்ம குழந்தை நியாபகம் வந்துடுச்சு ......நம்ம குழந்தை உயிரோடு இருந்தா அதற்கு நாலு வயசு ஆகி இருக்கும் இல்லை இந்நேரம் .....அந்த கொடுப்பினை தான் எனக்கு இல்லையே ...பேசுடீ .....என் கிட்டே நீ பேசி நாலு வருஷம் அச்சுடீ .....உயிர் போரா மாதிரி வலிக்குதுடீ .....வந்து பேசு ,சண்டை போடு ....அடிக்க கூட அடிச்சுடு ....இப்படி பேசாமல் கொள்ளாதே ..."என்று கதவை தட்டி அழுத திவாகர் ,அந்த வீட்டின் உள்ளே இருந்த மாடிப்படியின் கடைசி படியில் அமர்ந்தான் .அந்த படிக்கெட்டில் ஒரு விளக்கும் ,சிறு பூக்களும் ஏற்ற பட்டு இருந்ததை கண்டவன் முகத்தை மூடி அழுதான் .

"கண்ணா !....நீ சாக இந்த பாவியே காரணமாகிட்டேனே ....இந்த அப்பாவை மன்னிச்சுடு ...."என்று அழுதவன் அந்த படியில் தலை வைத்து படுத்து விட்டான் .

அந்த படியில் தான் ரூபிணி உருண்டு விழுந்து அவர்களின் குழந்தை கருவிலேயே இறந்து போனது .அது அவன் கருணாவிற்கு செய்த பாவத்திற்கான கடவுளின் தண்டனை என்று தான் அவனுக்கு தோன்றியது .

ரூபிணியும் ,அவனும் காதலித்தார்கள் .இரு குடும்பமும் சம்மதிக்க ,அவன் வீட்டில் கேட்டதற்கு மேலேயே கருணா வீட்டில் திருமணத்திற்கு செய்து கொண்டு இருந்தார்கள் .திவாகரின் பெற்றோரின் பேராசை ஊர் அறிந்த ஒன்று .இவர்களின் திருமணம் கை கூடும் சமயத்தில் தான் சோனாவும் ,அவள் தாத்தா கஜேந்திரனும் இவன் பெற்றோரை சந்தித்து ,வீடு ,வேலை ,பணம் என்று ஆசை காட்டியது .பதிலுக்கு இவர்கள் செய்ய வேண்டியது கருணா சோனாவை மணக்க சம்மதித்தால் மட்டுமே ரூபிணியின் கழுத்தில் தாலி ஏறும் என்று கருணாவிடம் சொன்னார்கள் .

கருணா அதற்கு சம்மதிக்கவேயில்லை .அதனால் ரூபிணி ,திவாகரின் திருமணம் நிற்கும் நிலைக்கு வந்து விட்டது ஆனால் விதி அங்கு தான் விளையாடி இருந்தது .திருமணம் ஆக போகிறதே என்று ரூபிணியும் ,திவாகரும் அளவுக்கு மீறி பழகி இருந்ததன் விளைவூ ரூபிணி தாய்மை அடைந்து இருந்தாள்.அதன் எதிரொலி கருணாகரன் சோனாவின் கணவனானது .

"கருணா !உங்க தங்கச்சி கழுத்தில் நான் தாலி கட்ட தயார் ......ஆனால் முதல் முகுர்த்ததில் என் தங்கையின் கழுத்தில் நீங்க தாலி கட்டி இருக்க வேண்டும் .....இல்லை என்றால் எங்க திருமணம் நடக்காது ...."என்றான் திவாகர் -சங்கரனை போலெ சோனா சொல்லிய 'கருணாவின் மேல் காதல் 'பொய்யில் ஏமாந்த இன்னொரு முட்டாள் .

"உங்க தங்கையை திருமணம் செய்கிறேன் .....ஆனா இப்படி நீங்க கேட்டதோ ,திருமணம் நடக்காமல் நின்ற விஷயமோ ரூபிணிக்கு தெரிய வேண்டாம் ....அவ தாங்க மாட்ட ....."என்ற கருணா சோனாவின் கழுத்தில் தாலி கட்டினான் .

ரூபிணிக்கும் ,திவாகருக்கும் அதே மேடையில் அடுத்த முகுர்த்ததில் திருமணம் நடந்தது .தாலி ஏறிய ஒரு மணி நேரத்தில் அதை கழற்றி வீசி விட்டு சோனா சுமன்னோடு சென்றதை கண்ட திவாகரின் திகைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாததாக இருந்தது .

மனைவியோடு தங்கள் வீடு வந்தவன் ,தாயை மாடிக்கு கூட்டி சென்று பொரிய ஆரம்பித்தான் ."என்னமா ...நீ என்னவோ சொன்னே அந்த சோனா உன் தங்கை ....அவ கருணாவை உயிருக்கு உயிராய் காதலிக்கறா ....அவன் இல்லை என்றால் செத்துடுவா .....உங்க கஜா பெரியப்பா தான் அவ உயிரை காப்பாற்றியது என்று சொன்னே .....இவ ஒரு மணி நேரத்தில் கட்டின தாலியை அவுத்து போட்டுட்டு இன்னொருத்தனோடு போறா ......என்ன மா இது .....நீ சொன்னே என்றதால் தானே நான் கருணாவிடம் 'உங்க தங்கை pregnant டா இருக்கா ...அவ கழுத்தில் நான் தாலி கட்டனும் என்றால் நீங்க என் தங்கையை திருமணம் செய்ய வேண்டும் இல்லை என்றல் உங்க தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துகோங்கோ என்று சொன்னேன் ....'"என்றான் திவாகர் .

"டேய் பைத்தியக்கார .....அது கோடீஸ்வர வீட்டு பொண்ணு ....வெளிநாட்டில் வளர்ந்தவ ....அப்படி இப்படி தான் இருப்பா .....அன்னாடம் காய்ச்சியான அந்த கருணாவுக்கு யோகம் அடித்து இருக்கு ....நமக்கும் பெங்களூருவில் வீடு ,உன் தம்பிக்கு தொழில் ,நமக்கு பணம் பெரியவர் இதற்காக தான் கொடுத்து இருக்கிறார் ....அவர் சொன்ன வேலையை செய்து விட்டோம் ....இனி அவங்களாச்சு ,கருணாவாச்சு ....நமக்கு என்ன ......போய் பொழைக்கும் வழியை பாரு ..."என்று சொல்லிய தாயை கண்டு இடிந்து நின்ற திவாகர் தாயின் பின் நோக்க அவர்கள் பேசியதை கேட்டு நெஞ்சை பிடித்து கொண்டு நின்று இருந்த ரூபிணி மயங்கி சரிந்தாள் .

ரூபிணி மயங்கிய இடம் படிகளின் ஆரம்பமாக இருக்க,படிகளில் உருண்டு விழுந்தவளின் கரு களைந்து போனது .ரத்த வெள்ளத்தில் மனைவியை பார்த்த திவாகருக்கு மனதில் மரண அடி விழுந்தது .ஹாஸ்பிடலில் கொண்டு சேர்த்தால் அங்கு இரண்டாவது அடியாக அவர்களின் வாரிசு இறந்த செய்தி கிடைக்க நிலைகுலைந்து போனான் திவாகர்

ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது ரூபிணி வீடு திரும்ப ....வீடு வந்த பிறகும் ரூபிணியின் வெறித்த பார்வை மாறவில்லை .

"ரூபா !குழந்தை இறந்தது எனக்கும் வருத்தம் தான் .....அதற்குன்னு இப்படியே இருந்தா எப்படிம்மா .....வந்து சாப்பிடு ...."என்று அழைத்தவனுக்கு தெரியவில்லை மனைவியின் வெறிப்புக்கு ,உயிர் ஓட்டம் இல்லாத நிலைக்கு காரணம் குழந்தையின் இறப்பு அல்ல ,தங்களின் துரோகம் தான் காரணம் என்று .

"எனக்கு வருத்தம் இல்லை ......"என்றாள் ரூபிணி மெல்லிய குரலில் .

"வாட் ...என்ன சொன்னே ...."திவாகர் தான் அதிர்ந்து போனான் .ஒருவேளை தன் காதில் தான் ஏதாவது கோளாறா என்று குழம்பி விட்டான் .

அவனை நேர் கொண்டு பார்த்த ரூபிணி ,"உங்க குழந்தை இறந்ததில் எனக்கு வருத்தமே இல்லை ....ரொம்ப ரொம்ப சந்தோசம் தான் .......என் அண்ணன் எனக்கு அப்பா மாதிரி .....அவரின் வாழ்வூ அழிந்த பிறகு உங்களுக்கு மட்டும் மனைவி ,குழந்தை வேண்டி கிடக்குதா ......என் அண்ணன் வாழ்வூ அழிய காரணமான இந்த வீட்டு வாரிசு அழிந்ததில் எனக்கு நிம்மதி தான் .......என் வாழ்வுக்காக தன்னை பலி கொடுத்த என் அண்ணன் எங்கே ....கேவலம் பணத்துக்காக ,சொத்து சுகத்துக்காக விலை போன நீ எங்கே .....மனுஷனா நீ எல்லாம் ......உன்னை போய் உயிராய் நினைத்தேனே ,உன்னை நம்பி திருமணத்திற்கு முன்பே என்னை கொடுத்தேனே ............என் நம்பிக்கையை உடைச்சுட்டு ,என் பெண்மையை விலை பேசி இருக்காய் .....உன் வாரிசை நான் சுமக்க வேண்டுமா ........முடியாது ....என் அண்ணன் வாழாத வாழ்வூ நீ மட்டும் வாழ்ந்து விடுவாயா ......"என்று கொதித்து எழுந்தாள் ரூபிணி

"ஏய் !என்னா விட்டா ரொம்ப பேசிட்டு போறே ......வாழ முடியாதுன்னா கிளம்பி உங்க அப்பன் வீட்டுக்கு போடீ ...."என்றார் திவாகரின் அம்மா அகிலாண்டம் .

அவரின் கன்னத்தை பதம் பார்த்தது ரூபிணியின் கரங்கள் ."நான் இங்கு இருக்கும் வரை தான் உங்க உயிருக்கு உத்திரவாதம் .....திரும்பி நான் என் வீட்டுக்கு போனேன் ஒன்று என் அண்ணன் உங்களை வெட்டுவார் .....வெட்டிட்டு சோனவை விவாகரத்து செய்வார் ......அப்படி செய்தால் அந்த கஜேந்திரன் உங்களை சும்மா விடுவாரா .....அவர் கொடுத்த பணம் ,வீடு ,தொழில் என்று எல்லாத்தையும் புடுங்கிட்டு நடு தெருவில் நிற்க வைப்பார் ...."என்றவள் பேப்பரில் 'திவாகரை டைவோர்ஸ் 'செய்வதாக எழுதி கொடுத்து விட்டு வெளியே செல்ல முயன்றாள் .

நிதர்சனம் புரிய ,"தா தா இப்போ என்ன சொல்லிட்டோம் என்று போறே .....புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் ....நீ வா அகிலா "என்று மனைவியை உள்ளே கூட்டி போக முயன்றார் உலகநாதன் .கிடைத்த வீடு ,பணம் ,தொழில் விட அவர்கள் என்ன முட்டாள்களா ???

"ஒரு நிமிஷம் .....இங்கு நான் இருக்க வேண்டும் என்றால் இனி நீங்க யாரும் இங்கு இருக்க கூடாது .....போங்க வெளியே "என்றாள் ரூபிணி .

"ஏய் நாங்க ஏண்டீ வெளியே போகணும் ...இது எங்க திவா சம்பாதித்த சொத்து ....."என்று மீண்டும் எகிறினார் அகிலாண்டம் .

"ஓஹ் அப்படியா ....சரி நீங்க இருங்க ...நான் என் அண்ணனை அனுப்புகிறேன் ....."என்றவளின் பேச்சில் பேய் அறைந்தது போலெ நின்றனர் அவன் குடும்பத்தினர் .

"போனா....இந்த வயசான காலத்த்தில் நாங்க எங்கே போவது ....?"என்று மூக்கை சிந்தினார் அகிலாண்டம் .

"அதான் உங்க மூத்த பிள்ளையை விற்று பெங்களூருவில் ஒரு வீடு வாங்கி இருக்கீங்கல அங்கே போங்க ......நான் இங்கு உங்க மகனின் மனைவி என்ற போர்வையில் இருக்கும் வரை தான் உங்களுக்கு இவரை விற்று கிடைத்த எல்லாமும் இருக்கும் ....சாய்ஸ் ஹிஸ் யூர்ஸ் ...."என்று ரூபிணி நக்கலாக.சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்று கதவை சாத்தி கொண்டாள் .அது தான் அவள் கடைசியாக பேசியது .அதன் பிறகு நான்கு வருடங்களாக அவள் பேசியதே இல்லை .
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரூபிணியின் முதல் பேச்சிலேயே ஊமையாகி போய் இருந்தான் திவாகர் .அவன் நியாயவாதி .தங்கை என்று நம்பி சோனாவிற்கு உதவு என்று தாய் சொல்லியதை நம்பியவன் ,கடைசியில் தான் பேரம் பேசப்பட்டு விற்க பட்டு இருக்கிறோம் என்று புரிந்து விட நொறுங்கி போனான் .ஒரே நாளில் மனைவி ,குழந்தை ,மானம் ,ரோசம் எல்லாம் இழந்து பிணமாய் மாறி போனது போலெ உணர்ந்தான் .

அவன் பெற்றோர் தங்கை ,தம்பி உடன் பெங்களூரு குடி பெயர்ந்தார்கள் .தம்பி ,தங்கை திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .ஆனால் அவனோ வாழ்க்கையை வெறுத்த நடைப்பிணமாக தானே இருக்கிறான் .அதை பற்றி அவன் குடும்பத்திற்கு கவலை இல்லை என்னும் போது ,இவர்களுக்காக தான் பகைத்து கொண்ட மனைவியை நினைத்து நெஞ்சு வலித்தது .அவளுக்காக தான் எதையும் செய்யவில்லை .ஆரம்பம் முதலே தான் அவளிடம் இருந்து எடுத்தது தான் அதிகம் என்ற உண்மை அவனை சுட்டது .

அந்த படிகளிலே அவன் உறங்கி விட ,நள்ளிரவில் கதவை திறந்து வெளியே வந்த ரூபிணி கணவனின் நிலையை கண்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்து விட்டாள் .அவனை மன்னிக்கவோ ,அவன் செய்ததை மறக்கவோ முடியவில்லை அவளால் .நம்பிக்கை துரோகம் அல்லவா அவளின் உயிரினும் மேலான அவன் செய்தது .தன்னை ,தன் மானத்தை ,தன் வயிற்றில் வளர்ந்த கருவை அல்லவா கேடுகெட்ட ஜென்மத்திற்காக அவனும் ,அவன் குடும்பமும் பணயம் வைத்தது .இன்று சோனாவிற்காக இந்த அளவூ இறங்கியவன் நாளை அவள் வேறு எதுவும் கேட்டாலும் செய்ய துணியமாட்டான் என்று என்ன நிச்சயம் ????இல்லை செய்ய முடியாது என்றால் அவன் குடும்பம் தான் அவனை சும்மா விட்டு விடுமா ...அவன் அன்னை ஒருவர் போதுமே .

தனக்கு செய்தது ஒருவித துரோகம் என்றால் ,தன்னால் தானே தன் அண்ணன் சோனாவை மணக்க வேண்டி வந்தது .திருமணம் நிச்சயம் ஆன உடனே கணவன் என்ற உரிமையை தான் இவனுக்கு கொடுத்ததால் தானே தன் அண்ணன் பணிய வேண்டி வந்தது .இல்லை என்றால் இவர்களை எல்லாம் தூக்கி போட்டு பந்தாடி இருப்பானே ....தங்கை வாழ்வூ ,மானத்திற்காக பலி ஆனவன் வாழ்க்கை கேள்வி குறியாக இருக்கும் போது தான் மட்டும் எப்படி கணவனோடு என்று வாழ முடியும் ?????

ஒரு பக்கம் காதலுக்கு நடந்த துரோகம் ,இன்னொரு பக்கம் அண்ணனுக்கு தன்னால் நடந்த அநியாயம் .இதற்கு விடிவூ காலம் தான் என்று .கண்களில் இருந்து நீர் வழிய இரவூ முழுவதும் அப்படியே அமர்ந்து இருந்தாள் ரூபிணி .

தாம்பத்தியம் என்பது உடலை தாண்டிய மனதின் தேடல் .அது பலருக்கு கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம் .அந்த தேடலின் பதில் ----தன் துணையாக இருக்கும் போது வாழ்வூ சுவர்க்கம் தான் .கிடைக்காத பலருக்கு தினமும் ஒரு முள் பாதை தான் .

இந்த முள் பாதையில் மாட்டி கொண்ட இந்த இரு இதயங்களுக்கான மீட்சி ----காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .

மறுநாள் காலை பொழுது புலர்ந்து விட யார் யாருக்கு எது காத்திருக்ககிறது என்ற எதிர்பார்ப்புடன் முதலில் மதுரா வீட்டிற்கு ஒரு விசிட் .கார்த்திக்கின் வாழ்வில் விளக்கு ஏற்றியே தீருவேன் என்ற கொள்கையுடன் மதுரா ஊர்வசி வீட்டுக்கு போக ரெடியாகி வந்தாள் .மகளின் அலங்காரத்தில் ,அவளின் அழகில் பவானி மட்டும் அல்ல ,அந்த வீட்டில் இருந்த அனைவரும் ஒரு கணம் கண் இமைக்கவும் மறந்து தான் போனார்கள் .

hqdefault (21).jpg

"என்ன மதுரா புதுசா புடவை எல்லாம் கட்டிட்டு ரெடியாகி இருக்கே .....என் கண்ணே பட்டுடும் போலெ கோயில் சிலை மாதிரி அம்சமா இருக்கே ......மறக்காம சுத்தி போடணும் ."என்றார் பவானி -விடிந்தும் விடியாததுமாக மகள் எங்கேயோ கிளம்புகிறாளே என்ற கவலை அவருக்கு -நேரிடையாக கேட்க முடியாது அல்லவா

"என் friend வீட்டு வளைகாப்பு மா ....கார்த்திக்க்கொடு தான் போறேன் .....அவன் தான் கார் ஓட்டிட்டு கூட வர போறான் ."என்று அடுத்து அடுத்து வர போகும் தாயின் கேள்விகளுக்கு ஒரே பதிலில் பதில் அளித்து விட்டாள் .

கார்த்திக்க்கொடு மகள் போகிறாள் என்றதும் பவானிக்கு வேறு எதுவும் தேவை இருக்கவில்லை .

"சீக்கிரம் வந்துடுங்க ....."என்றவர் ஜோடியாக போகும் இருவரையும் சீக்கிரம் தம்பதிகளாக பார்க்க பேராவல் எழுந்தது .
(சாரி மிஸஸ் பவானி .......உங்க பொண்ணு போவதே தரகர் வேலை பார்க்க தான் .....அதுவும் தன் கார்த்திக் அண்ணனுக்காக .....)

"என்னடா மங்கூஸ் மண்டையா .......பதினோரு மணிக்கு முன்னாடி உனக்கு சூரியனே உதிக்காதே ....என்ன இன்னைக்கு எனக்கு முன்னாடி ரெடியாகி நிற்கறே ......என்ன நைட் புல்லா பூரணி கூட டூயட்டா ???"என்றாள் மதுரா கிண்டலாக .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ச்சே போடி .....நானே தப்பு செய்யறோமோன்னு பயத்துல இருக்கேன் ...நீ வேற நேரம் காலம் தெரியாம ......எனக்கு இது ஒத்து வரும்ன்னு தோணலைடீ ......அந்த பொண்ணு தான் ஏதோ புரியாம லவ் பண்ணுது .....இதுல எவ்வளவூ இருக்கு தெரியுமா ......"என்றான் கார்த்திக் வேதனையோடு

"ஓராயிரம் கூட இருக்கட்டும் கார்த்தி .....உன் மனசுக்கு பூரணியை பிடித்து இருக்கா இல்லையா என்று மட்டும் சொல்லு .....மத்த எதை பற்றியும் கவலை உனக்கு வேண்டாம் ......உன் குணத்திற்கு ஏற்ற பெண் அவள் தான் .....இத்தனை வருடம் உன் கூடவே வளர்ந்து இருக்கேன் .....அவ தான் உனக்கு செட் ஆவா .....சொல்லுடா பூரணியை பிடிச்சு இருக்கா இல்லையா ...."என்றாள் மதுரா

"பிடிச்சு இருக்குடீ ....."என்றான் கார்த்திக் ஒரு பெரு மூச்சோடு .

அதே சமயம் ஊர்வசி வீட்டு மாடி ஹாலில் சோகமே உருவாக ஒரு மூலையில் தூணின் மேல் சாய்ந்து நின்று இருந்தாள் பூரணி .கீழே நடக்கும் எதிலும் அவளால் கலந்து கொள்ள முடியவில்லை .தனக்கு என்று எதுவுமே கிடைப்பது இல்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் .பிரிய கூடாத வயதில் சொந்த சகோதிரியின் குணத்தால் பெற்றோரை பிரிந்து ,எல்லோரும் இருந்து அன்புக்கு ஏங்கும் அனாதை ஆக்க பட்டவள் அவள் .கண் காணாத தூரத்தில் ஒரு ஹாஸ்டெலில் அவள் வாழ்வூ .ஊர்வசியை தவிர வேறு உண்மையான நட்பு அவளுக்கு இல்லை

hansika-motwani-wallpapers-26762-1948733.jpg

எதுவுமே இல்லாத அவளுக்கு ஒரே நாளில் அனைத்துமாக நான் இருக்கிறேன் என்று செய்கையால் உறுதி அளித்து விட்டான் கார்த்திக் .கார்த்திக் மேல் கொண்ட காதலால் மீண்டும் உயிர்த்து எழுந்தாள் அந்த பாவை .கனவில் அவனோடு ,யார் என்றே தெரியாமல் மனைவியாக வாழ்ந்து கொண்டு இருந்தவளுக்கு நிதர்சனம் புரிய வைக்க பட்டது அவள் குடும்பத்தால் .அந்த மாதம் அவளை பார்க்க வந்த பெற்றோர் ,அந்த முறை புலம்பியது சோனாவின் அடுத்த பலியாடு ஆன மதுராவை பற்றி .சோனா மதுராவை வைத்து விஜயையை எப்படி எல்லாம் torture செய்கிறாள் என்று சொன்னவர்கள் ,அவளுக்கு ஏற்பாடு செய்து இருக்கும் மாப்பிளை போட்டோவை காட்ட மின்னாமல் முழங்காமல் அவள் தலையில் இடி இறங்கியது .

PENANCE WILL CONTINUE......
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 25
மாப்பிளை போட்டோவை காட்ட மின்னாமல் முழங்காமல் பூரணியின்தலையில் இடி இறங்கியது .
Siddharth-700x520.jpg
"யாருமா இவர் ...."மகள் உயிரை கையில் பிடித்து கொண்டு கேள்வி கேட்பதை அறியாமல்

"இது கார்த்திக் மா மதுராவை கட்டிக்க போறவன் .....ரெண்டு குடும்பமும் ரொம்ப கிளோஸ் .மதுரா பிறக்கும் முன்பே இவளுக்கு தான் கார்த்திக் என்று முடிவூ செய்து விட்டார்கள் பாப்பா .....இப்போ இவங்களுக்கு தான் சோனா எதையும் விபரீதமாக செய்வதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும் கருணா ரொம்பவே துடிக்கிறான் ....."என்றார் சேது

அணுகுண்டை வெடிக்க வைத்து விட்டு அவர்கள் சென்று விட ,அங்கு அந்த பெண் குற்றுயிர் ஆகி போனாள் .ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுகையில் கரைந்தாள் அவள் .ஊர்வசியும் செமஸ்டர் லீவு என்று சென்று இருக்க அங்கு அவளை தேற்ற ஆள் இல்லாமல் போனது .

ஒரு பெண்ணாய் மதுராவிற்கு ஏதாவது ஆகும் முன் அவள் கார்திக்க்கை மணக்க வேண்டும் என்று தன்னை தானே தேற்றி கொண்டாள் .ஆனால் கார்த்திக்கின் மனைவியாய் ,அவனை காதலித்து விட்டவளால் அந்த எண்ணத்தை தாங்க முடியாது உள்ளுக்குள் கதறினாள் .

இதயத்தின் வலி நாளுக்கு நாள் அதிகமானதே ஒழிய குறையவில்லை .வாழ்க்கை வெறுத்து போய் இருந்த சமயத்தில் தான் ஊர்வசி அவளை வற்புறுத்தி சென்னையில் நடக்கும் அவளின் வீட்டு நிகழச்சிக்கு கூடி வந்தது .கிளம்பி வந்த பூரணியின் மனதில் தன் வாழ்வை முடித்து கொள்ளும் எண்ணம் தான் மேல் ஓங்கி இருந்தது .அந்த நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு போவதாக சொல்லி விட்டு பீச்சிலோ ,ரயில் தண்டவாளத்திலோ தன் வாழ்க்கையாய் முடித்து கொள்ளூம் எண்ணத்தில் தான் வந்து இருந்தாள் அவள் .

ஆனால் ஊர்வசியோ தோழியின் மாற்றத்தை உணர்ந்து,அவள் வீபரீதமான முடிவூ எடுக்கும் முன் அவளின் வாழ்வை மீட்டு தர கார்திக் மெயில் id வாங்கி அவனை தொடர்பு கொண்டாள் .பூரணியின் நல்ல நேரமோ என்னவோ அந்த மெயில் id தவறாகி மதுராவை சென்று அடைந்தது பூரணியின் காதல் .அந்த உண்மையான காதலை நிறைவேற்ற மதுரா தயார் ஆகி,பூரணியின் தவத்திற்கான வரத்தை கொடுக்க கார்திக்க்கை அழைத்து வந்து விட்டாள் .

கார் ஊர்வசியின் வீட்டின் போர்டிகோவில் நிற்க ,ஓடி வந்த ஊர்வசி இவர்களை வரவேற்றாள்.

"ரொம்ப சந்தோசம் அண்ணா நீங்க வந்தது ....நேற்றில் இருந்தே அவ முகம் சரியாய் இல்லை .....அவ பேசுற விதம் ,நடந்துக்குற முறை எதுவுமே நல்லதா படலை ......ஒரு அளவுக்கு மேல் என்னாலும் எதையும் செய்ய முடியலை .....வீடு பூரா உறவூ குவிஞ்சு இருகாங்க .....ப்ளீஸ் மதுரா அவ உயிரை காப்பாற்றுங்க .....அவ ரொம்ப நல்லவ ....அவ அக்கா சோனா மாதிரி இல்லை ....அதிர்ந்து கூட பேச மாட்ட ....ரொம்ப பயந்த சுபாவம் ......எல்லோரும் இருந்து அனாதை போலெ ஹாஸ்டெலில் வளர்ந்தவ ......அண்ணா ப்ளீஸ் ...."என்றாள் ஊர்வசி கண்களில் நீர் வழிய

"ஊர்வசி !...ச்சே ச்சே ...இதற்கு எல்லாம் அழலாமா ......நீ கவலை படாதே .....பூரணி இனி எங்க வீட்டு பொண்ணு ..... இவன் அவ கழுத்தில் தாலி காட்டுவான் ...நாத்தனார் முடிச்சு நான் போட தான் போறேன் .அதை நீ முதல் வரிசையில் இருந்து பார்க்கா தான் போறே .....எங்கே இருக்கா இந்த கண்ணனின் ராதை ???"என்றாள் என்றாள் மதுரா .

"மதுரா !இந்த பின் வழியா போனீங்க என்றால் படிக்கட்டுகள் வரும் ....ரெண்டாவது மாடியில் தூண் விழுந்திட போகுதுன்னு அதை தாங்கி பிடிச்சி வெளியே வெறிச்சுட்டு இருக்கு அந்த லூசு ....போய் நல்லா வேப்பிலை அடிங்க ....."என்றாள் ஊர்வசி .

"என்னப்பா ...இவனை எல்லாம் லவ் பண்ற ஒரே காரணத்திற்காக எல்லாம் பூரணியை லூசுன்னு சொல்லுவியா நீ ....நியாயமே இல்லை ....பாரு கார்த்தி ....பூரணி லூசுன்னு அவ தோழியே சொல்லிட்டா ...."என்ற மதுராவை முறைத்தான் கார்த்திக் .

"ஐயோ மதுரா நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை ...உண்மையிலே அவ லூஸாகி தான் போயிட்டா ...என்ன வேலை செய்து வைத்து இருக்கா பாருங்க ...."என்ற ஊர்வசி பூரணி எழுதி இருந்த மரண வாக்குமூலத்தை அவர்களிடம் காட்ட மற்ற இருவரும் திகைத்து போயினர் .

"உங்க ரெண்டு பேருக்கும் திருமணம் என்று கேள்வி பட்டதில் இருந்து வாழ்க்கையே வெறுத்து போய் தான் இருக்கிறா ......நல்லவேளை உங்களிடம் பேசி விட்டேன் ...ப்ளீஸ் போங்க ...இனியும் அவளை தவிக்க விடாதீங்க ......"என்றாள் ஊர்வசி .

அவர்கள் மேலும் பேசுவதற்குள் ஊர்வசியை வீட்டின் உள்ளே அழைக்க ,இவர்கள் இருவரும் வீட்டின் பின் பக்கம் இருந்த மாடி படி ஏறி ரெண்டாவது தளத்திற்கு வந்தனர் .இவ்வளவூ நேரம் இவர்கள் பேசுவதை முதல் மாடியில் இருந்து பார்த்து கொண்டு இருந்தான் விஜய் .
gopichand-oxygen-hd-still3.jpg


பெண்களின் நிகழ்ச்சி என்பதால் ஜூஸ்சை அருந்தியவாரே பால்கனியில் நின்று வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவனின் புன்னைகை, கண்களில் கார்த்திக்க்கொடு பேசி சிரித்தவாறே இறங்கிய மதுராவை கண்டதும் அவன் இதயம் ஒரு நொடி நின்று தான் போனது .

இருவரும் பேசுவது கேட்கவில்லை என்றாலும் ,மதுரா ஏதோ சொல்ல அதற்கு கார்த்திக் அவள் காதை பிடித்து திருகுவதையும் ,அவள் கன்னத்தை கிள்ளுவதையும் கண்டு அதிர்ந்து நின்றான் .அந்த நொடி அவன் தான் மதுராவிற்கு கார்த்திக் ஜோடி என்று தரகர் வேலை பார்த்தது எல்லாம் மறந்து போனது .தான் பேசிய வீர வசனங்கள் எல்லாம் காற்றில் கரைந்து போனது .

தனக்கு சொந்தமான பொம்மையை யாராவது திருடி விடுவார்களா என்று பதறும் குழந்தையின் மனநிலையில் தான் அவன் அப்பொழுது இருந்தான் .இவர்கள் பேசி சிரிக்க சிரிக்க அவன் காதில் புகை வராத குறை .அதற்குள் அந்த வீட்டு பெண் ஊர்வசி வந்து விட அவளுடன் வெகு நேரம் பேசி கொண்டு இருக்க ,இவனுக்கு தான் பி .பி எகிறி கொண்டு இருந்தது .

அதற்குள் சேது உள் இருந்து அழைக்க ஒரு கணம் உள்ளே பார்த்து விட்டு இவன் திரும்புவதற்குள் அவர்கள் இருவரையும் காணவில்லை என்றதும் பதட்டமாகி மேல் இருந்து கீழ் இறங்கி ஓடி வந்தான் .ஹால் ,முதல் மாடி என்று எங்குமே அவர்களை காணாமல் பித்து பிடித்தது போலெ ஆனான் .அங்கும் இங்கும் தேடி கொண்டு இருந்தவனை நிறுத்தினார் சேது .

"என்ன கருணா ...என்ன ஆச்சு .....எதற்கு இப்படி பதட்டமா இருக்கே ......பார் எல்லாரும் உன்னையே பார்க்கறாங்க .....கண்ட்ரோல் ...என்ன ஆச்சு ..."என்றார் அவனை அணைத்தபடி .

"மது ....மது ...வந்து இருக்காப்பா இங்கே ...அந்த கார்திக்க்கோடு ...."என்றான் பெருமூச்சை வெளியிட்ட வாறே

மகனின் நிலை புரிந்து விட்டது அந்த தந்தைக்கு .உடன் வந்ததிற்கே பதறும் இவன் தான் மதுராவை கார்த்திக்கு தாரை வார்த்து தர போவதாக அறைகூவல் விடுகிறான் என்று மனதிற்குள் சிரித்து கொண்டார் .

"சரி பா ...அதற்கு என்ன ....அவங்க ரெண்டு பேருக்கும் திருமணம் நடக்க போகுது ....ஒன்றாக ஊர் சுத்தறாங்க ....இதில் நீ பதற என்ன இருக்கு ......மதுராவிற்கு கார்த்திக் உடன் திருமணம் என்று நீ தானே ப்பா சொன்னே ....இப்போ என்ன ....."என்று வாழை பழத்தில் ஊசி ஏற்றினார் .

சேதுவின் பேச்சில் அதிர்ந்தவன் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை கணக்காய் விழித்தான் .மகன் மனம் புரிந்தாலும் ,இப்படி ரண வைத்தியம் அவனுக்கு தேவை என்று புரிய மனதை கல்லாக்கி கொண்டார்
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவனே இவனுக்கு போட்டு கொண்ட விலங்கு ,'சோனாவை மணந்த ஒரே காரணத்திற்காக மதுராவிற்கு தான் இணை இல்லை'என்று வீண் பிடிவாதம் .இவன் சோனாவின் கணவனாம் .அதனால் மதுரா கார்திக்க்கை தான் மணக்க வேண்டுமாம் .இவன் தன் மனதை ,தன் காதலை என்றுமே சொல்ல மாட்டானாம் .சோனாவை மணந்ததால் இவன் கலங்க பட்டு விட்டானாம் .

:)oops::oops::oops::eek::eek::eek::rolleyes:o_Oo_Oo_Oடேய் ....என்ன விதமான லாஜிக் டா விஜய் இது ????நீ சோனா கழுத்தில் தாலியே கட்டவில்லை .நான்கு வருடமாய் ப்ரஹ்மச்சாரி வேறு .....சோனாவின் புருஷன் என்று ஊர் ,உலகம் சொல்வதால் மட்டும் நீ கலங்க பட்டு விட்டாய் என்பது எல்லாம் ரொம்பவே ஓவர் ....உன்னையும் குழப்பி உன்னை சுற்றி உள்ளவர்களையும் ஏனப்பா இப்படி குழப்பறே .....வேணாம் என்றும் சொல்ல மாட்டேங்கற ....வேணும் என்றும் முடிவூ எடுக்க மாட்டேன் என்கிறே .....குஷ்டம் ச்சே நானே குழம்பிட்டேன் ...கஷ்டம் அப்பா உன் கூட .)

இவனின் இந்த ஓட்டை உடைசல் லாஜிக் ,கண்டு தான் மதுரா டீம் 1 தலையை பிய்த்து கொள்வதே .சோனா செய்து வைத்து இருக்கும் பல வேலைகளால் இவன் மனதில் தாழ்வூ மனப்பான்மை மதுரா விஷயத்தில் அளவுக்கு அதிகமாகவே ஏற்பட்டு இருக்க ,ஒரு பக்கம் மனதில் காதல் இருந்தாலும் ,மறு பக்கம் தான் அவளுக்கு பொருத்தமானவன் இல்லை என்ற எண்ணமும் அதிகமாவே இருந்தது .அந்த தாழ்வூ மனப்பான்மை ,காதல் கொண்ட மனதை புதைத்து விட்டு ,கார்திக்க்குக்கு மதுராவை தாரை வார்க்க அப்போ அப்போ துள்ளி கொண்டு இருந்தது .மதுராவிற்கு நல்லது செய்யறாராம் .....

அவனவன் காதலுக்காக எது எதையோ செய்யறான் ...இவன் காதலிக்காக காதலையே துறந்து தேவதாஸ் ஆக போகிறாராம் .....
(மதுராவிற்கு இந்த மேட்டர் தெரிய வரும் வரை தான் நீ சேப் கண்ணா ......தெரிஞ்சுது எப்படி பத்ரகாளியா மாறுவான்னு இப்பவே வயிறு கலங்குது எனக்கு ......சூர்யா வேறு இருக்கான் ...அவன் வேறு அதிரடி நாயகனா இருக்கான் .நீ 'நான் பொருத்தமானவன் இல்லை' என்று டயலாக் பேசிட்டு இருக்கே ..... சோனா பிசாசு இருக்கு ...ரூபிணி வாழ்க்கை ,கஜா ,சுமன் என்று ஒரு கூட்டமே உனக்கு எதிரா இருக்கிறது போதாதா ....)

"கருணா ......சின்னச்சிறுசுங்க ....அப்படி இப்படி தான் இருப்பாங்க........திருமணம் செய்ய போறவங்க ஒரு கிஸ் ,ஒரு ஹக்ன்னு தனிமையை தேடி தான் போவாங்க ......இதுக்கு நீ ஏன் பா டென்ஷன் ஆகுறே .......ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும் ...திருமணம் ...முதல் இரவு,வளைகாப்பு .குழந்தை ,குட்டி என்று எவ்வளவோ மதுரா கார்த்திக் வாழ்வில் வரும் ...........அவன் குழந்தையை ,அவங்க வீட்டு வாரிசை பெற்று எடுப்பா .....இது என்ன ஒரு நாள் கூத்தா .....லைப் லாங் வரும் பந்தம் இல்லையா .....ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும் ,லவ் செய்யணும் ....நீ இதை எல்லாம் கண்டுக்காதே....ஆமாம் நீ ஏனப்பா அந்த கிரண் தம்பி ஒரு படத்துல காரில் அமர்ந்துட்டு ,ஹீரோ ,ஹீரோயினை நினைத்து என்னவோ 'அசைந்தாடும் பூ ,காற்றுக்கு 'என்ற பாட்டுக்கு ரியாக்ஷன் தருவானே அது போல் இருக்கே ....பார்த்து ப்பா அந்த படத்துல கடைசியில் அந்த தம்பி மெண்டல் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருப்பாங்க ....உனக்கும் அந்த நிலைமை வந்துட போகுது ......."என்றவரின் பேச்சை கேட்டு நெஞ்சை பிடித்து கொண்டு அங்கு இருந்த நாற்காலியில் பொத்தென்று அவன் அமர ,அவனை யோசிக்க விட்டு சேது நகர்ந்தார் .

:)oops::oops::oops::oops::censored::censored::censored:சேது அப்பா சான்ஸ்சே இல்லை போங்க ......என்னமா ரிவேர்ஸ் சைகாலஜி டிரீட்மென்ட் தறீங்க .....situation சாங் வேற ......பிச்சி உதறீங்க .....தம்பி விஜய் பார்த்துப்பா உன்னை இன்டர்நேஷனல் ஹீரோன்னு எல்லாம் சொல்லிட்டு இருகாங்க ....கடைசியில் 'எங்கே செல்லும் இந்த பாதைன்னு 'எண்டு சாங் போட வைத்துடாதே )
sethu_11715.jpg


நலங்கு முடிந்து வந்த மரகதமும் ,கனகாவும் விஜய் இருக்கும் நிலை கண்டு திகைத்தவர்களாய் அவன் அருகே செல்ல முயல ,அவர்களை தடுத்தார் சேது .

"என்னங்க ...கண்ணா ...இப்படி இருக்கான் ....நீங்க அமைதியா இருக்கீங்க ...."என்றார் அதிர்ந்தவராய் .

"ரண வைத்தியம் செய்து இருக்கேன் உன் மகனுக்கு ......பைத்தியம் முத்தி போய் தேவதாஸ அலைந்தான் இல்லை அதான் வேப்பிலை அடித்தேன் .....என்ன முழிக்கறே ....மதுராவும் ,கார்திக்க்கும் இந்த விழாவுக்கு வந்து இருகாங்க ....அவங்க இருவரும் சிரித்து பேசுவதை கண்டதும் இந்த தியாக செம்மலால் பொறுக்க முடியவில்லை ....பொறாமை ......காதுல புகை வருது .....செம தீயல் ,கருகல் ............அதான் சின்னசிறுசுங்க ....தனிமையில் அப்படி ,இப்படி இருப்பாங்க ......கிஸ் ,ஹக் எல்லாம் நடக்கும் .....அவன் குழந்தைக்கு தாய் என்று ஏத்தி விட்டேன் ......சார் திருமணம் ,திருமணம் என்று குதித்தார் ஆனா இதை எல்லாம் யோசிக்கல போல் இருக்கு ......அவங்க நெருக்கத்தை பார்த்து .......வீர வசனம் பேசியவர் ...பேய் அடித்தது போல் இருக்கான் ....அவனை அப்படியே விடு .....இனி மேலாவது யோசிக்கட்டும் ...... இவனும் இவன் லாஜிக்கும் ......................"என்றார் சேது கடுப்போடு
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேய் அடித்தது போல் அமர்ந்து இருக்கும் விஜய் சற்று தெளிய அவகாசம் கொடுத்து விட்டு ,'என் இனிய தமிழ் மக்களே 'என்று காமெராவை அப்படியே ரெண்டாம் மாடிக்கு ஷிப்ட் செய்து அங்கு 'மதுரா லவ் பெவிகால் என்ன செய்துன்னு ஒரு லுக் விடுவோம் .
(ஆமா பெரிய ஸ்பீல்பெர்க்குனு நினைப்பு )

பிடித்து கொண்டு இருந்த தூணை விட்டுட்டு இப்போ அங்கு இருந்த சோபாவில் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டு இருந்தாள் .

(ஹனி ஒரு டவுட் ....ஆமாம் அது என்ன படத்துல ஆகட்டும் ,கதையில் ஆகட்டும் ஹீரோயின் அழும் போது மட்டும் பெட் ,சோபா வில் ஓடி வந்து விழுந்து அழுவுறது ?????.....ஒகே ஒகே முறைக்காதே )

அவளின் கண்ணீரை கண்ட கார்த்திக் முழுதும் பிளாட் ஆகி விட ,மதுராவுக்கு பக்கம் பக்கமாக வசனம் பேசும் வேலை மிச்சமானது .பூரணியிடம் ஓட முயன்றவனை தடுத்து நிறுத்திய மதுரா ,'இருப்பா .....நான் போய் பேசி முதலில் குழப்பத்தை தீர்க்கிறேன் ...கூப்பிடும் போது நீ வா "என்று பால்கனி க்கு சென்றவள் சத்தமாக தொண்டையை கணைத்தாள் .

யாரோ வந்து இருக்கும் சத்தம் கேட்க ,தன் கண்களை துடைத்து கொண்ட பூரணி ,ஒரு புன்னகை கொடுத்து விட்டு வேறு அறைக்கு செல்ல முயன்றாள் .

"ஹலோ கவிதாயினி ....நில்லுங்க ....மேடம் .....யெல்லோ சுடிதார் உங்களை தான் ....கொஞ்சம் நில்லுங்கோ ..."என்றாள் மதுரா .

"என்னையா கூப்பிடுறீங்க ?"என்றாள் பூரணி .

"ஆமாம் மிஸ் .கவிதாயினி ....உங்களையே தான் ....."என்றாள் மதுரா .

மதுராவை கண்டு ஒரு கணம் திகைத்தவள் ,"அப்பா என்ன அழகுடா சாமி "என்று பூரணி நினைக்க ,"எப்பா பார்பி பொம்மை மாதிரி எவ்வளவூ cute டா இருக்கா .....chubby பார்பி .....செம்மையான ரசகுல்லா ...மச்சம்டா கார்த்தி உனக்கு "என்று நினைத்தாள் மதுரா .

"மேடம் !....நான் கவிதாயினி இல்லை ...என் பெயர் அன்னபூரணி .....நீங்க யாரோ என்று நினைத்து என்னிடம் பேசுறீங்க ..."என்றாள் பூரணி .

"எனக்கு கன்போர்ம்மா தெரியும் ...நீங்க தான் கவிதாயினி என்று ......ஒஹ்ஹஹ் பேரு என்று நினைத்துடீங்களா .......கவிதை எழுதுறவங்களையும் கவிதாயினி என்று கூப்பிடலாம் "என்றாள் மதுரா .

"ஐயோ எனக்கு கவிதை எல்லாம் எழுத தெரியாது ....படம் வரைவேன் ..."என்றாள் பூரணி .

"ஐயோ உங்களுக்கு கவிதை எழுத தெரியாதா ....அப்போ இந்த கவிதை நீங்க எழுதலையா ....படிக்கிறேன் கேளுங்க .....செமையா இருக்கு .....படிக்கிறேன் கேளுங்க

யாருமில்லை ....யாருமில்லை ...என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை .....
மூளை இல்லை ....மூளை இல்லை .....எனக்கு சுத்தமா மூளை என்பதே இல்லை .....
பெத்தவங்களை தவிக்க விட்டு போக நினைக்கும் என்னை நாலு அறை விட்டாலும் தவறில்லை .....
செய்ய போறேன் ...செய்ய போறேன் .....தற்கொலை தான் செய்துட்டு சாக போறேன்
....

மூன்று புள்ளி ஒரு ஆச்சரியக்குறி ........அடடா அடடா ...பிரமாதம் ...கவிதை ..கவிதை "என்ற மதுராவின் பேச்சை கேட்ட பூரணி திகைத்து போனாள் .அவள் கையில் இருக்கும் லெட்டர் தான் எழுதிய மரணவாக்கு மூலம் என்பதை கண்ட பூரணி அடுத்து என்ன சொல்வது ,பேசுவது என்று புரியாமல் பேந்த பேந்த விழித்தாள் .

PENANCE WILL CONTINUE...............
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 25(1)

அவள் கையில் இருக்கும் லெட்டர் தான் எழுதிய மரணவாக்கு மூலம் என்பதை கண்ட பூரணி அடுத்து என்ன சொல்வது ,பேசுவது என்று புரியாமல் பேந்த பேந்த விழித்தாள்.
HansikaMotwani_Latest_New_Cute_Picture_Photo_6.jpg


அவள் அருகே வந்த மதுரா ஓங்கி ஒரு அறை விட்டாள் ."அப்படி என்னடீ காதல் ....பெத்தவங்களை விட நாலு வருடம் முன் பார்த்தவன் உசத்தி ஆகிட்டான் ......ஏற்கனவே உன் அக்காவால் மனசு உடைந்து போய் இருக்கிறவங்களுக்கு ஒரே நிம்மதி நீ மட்டும் தான் .....நீ செத்து போனா அவங்க நிலைமை என்ன என்று யோசித்தாயாடீ .....சோனாவால் செத்து செத்து பிழைக்கறவங்க உன்னால் ஒரேடியா போய் சேர்ந்து இருப்பாங்க ......சரி இதற்கு பதில் சொல்லு ....லவ் பண்றியே அதை அந்த கார்த்திக்கிடம் முதலில் சொன்னாயா ????இல்லை தானே ....சரி வீட்டில் உள்ளவர்களிடமாவது சொன்னாயா ....இல்லை அந்த கார்த்திக் பேமிலி ,அவன் கட்டிக்க போறவ கிட்டேயாவது சொன்னாயா ????நீ உன் வாயை திறந்து சொல்லாமல் மத்தவங்களுக்கு உன் மனதில் இருப்பது எப்படிடீ புரியும் பாவி ......தற்கொலை செய்துக்கறவங்க நிம்மதியா போய் சேர்ந்துடறீங்க ...ஆனா பெத்தவங்க ,உடன் பிறப்புகள் ,நண்பர்களுக்கு ஏண்டீ ஆயுள் தண்டனை கொடுக்கறீங்க .....உன்னை பெத்த ஒரே காரணத்திற்காக வாழ்நாள் முழுதும் உன் பெற்றோர் சிலுவை சுமக்க வேண்டுமா ......மத்தவங்களை உயிரோடு கொன்னுட்டு அப்படி என்னடீ காதல் வேண்டி இருக்கு உனக்கு ????காதலிக்க தெரிந்த உனக்கு அதற்காக போராடும் தைரியம் இல்லாதவ எல்லாம் எதுக்குடீ காதலிக்குறீங்க ?"என்று பொரிந்தவள் மேலும் ஒரு அறை பூரணிக்கு விட்டாள் .

கன்னத்தை பிடித்து கொண்டு திகைத்து நின்றாள் பூரணி ."யா ...யாருக்கா நீங்க ...."என்றாள் திக்கி திணறி .

"ஹ்ம்ம் உன் பாட்டி .....கேக்குறா பார் கேள்வியை .....நீ எந்த லூசை நினைத்து தற்கொலை வரை போக முடிவூ செய்தியோ அந்த லூசுக்கும் எனக்கும் தான் மேரேஜ் செய்ய எங்க வீட்டு பெருசுங்க முடிவூ செய்து இருக்காங்க .....என்ன புரியலையா ....என் பெயர் மதுராக்ஷி ....நீ லவ் செய்யும் கார்திக்க்குக்கும் எனக்கும் தான் திருமணம் என்று மேடம் சாக முடிவூ எடுத்து இருக்கிறீங்க .....உங்க சக்காளத்தி ...."என்றாள் மதுரா .

"நீங்களா மதுரா "என்று திகைத்து போனாள் பூரணி .....'இவங்க தான் விஜய் அண்ணா லவ் செய்த மதுராவா ...இவங்களை தான் சோனா torture செய்யறாங்களா ......இப்போ தான் புரியுது இவங்களுக்கு கார்திக்க்குக்கும் ஏன் சீக்கரம் மேரேஜ் செய்யணும் என்று ஏன் சொல்லறாங்க என்று .....இவ்வளவூ அழகா இருந்தா அந்த சோனா பிசாசு எப்படி சும்மா இருக்கும் ?????'என்று தனக்குள் பேசி கொண்டாள் பூரணி .

"ஹலோ ...ஹலோ .....எர்த் காலிங் பூரணி .....எர்த் காலிங் பூரணி .....வானத்துல பறக்கறத விட்டுட்டு பூமிக்கு வா செல்லம் ...இங்க பாரு எனக்கு திருமணம் நடக்கனும் .....நீ செத்த கில்ட்டி பீலிங் எல்லாம் வேண்டாம் ....சோ உனக்கு ஏற்கனவே மாப்பிளை பார்த்துட்டேன் ...என் மரேஜ்க்கு முன்னாடி உனக்கு மேரேஜ் ஆகனும் ...பையன் ரொம்ப நல்லவன் ....அக்மார்க் அம்மாஞ்சி .....உன்னை பார்த்தவுடன் பிளாட் ஆகிட்டான் ...கட்டினால் உன்னை தான் கட்டுவேன் என்று ஒத்தை காலில் நிற்கிறான் என்றால் பார்த்து கொள்ளேன் ....உங்க அப்பா அம்மா கிட்டே பேசி தேதி முடிவூ செய்ய போறேன் ....."என்றாள் மதுரா .

"அய்யோ வேண்டாம் ...வேண்டாம் ....ப்ளீஸ் மதுரா ...வேண்டாம் ......என்னால் வேறு யாரையும் மேரேஜ் செய்ய முடியாது .....நான் ப்ரோமிஸ் செய்யறேன் .....நான் தற்கொலை செய்துக்க மாட்டேன் .....சத்தியமா .....ப்ளீஸ் எனக்கு இந்த திருமணம் வேண்டாம் ...."என்று கை எடுத்து கும்பிட்டவளின் கண்களில் அருவியை கண்ணீர் கொட்டியது .

"அந்த மாப்பிளை நான் என்றால் கூட வேண்டாமா ?"என்றது அவளுக்கு பின்னால் இருந்து ஒரு குரல் .

அந்த குரல் ----பூரணியின் உயிர் வரை ஊடுருவ ,கேட்டதை நம்ப முடியாமல் திகைத்து திரும்பியவள் அவள் இதய நாயகனே முன் நிற்பதை கண்ட உடன் மயக்கம் போட்டு விழுந்தாள் .அவள் கீழே விழும் முன் அவளை தாங்கி பிடித்தான் கார்த்திக் .

"ஏன் டா அழகுல மயங்குறது என்று சொல்வார்களே அது இது தானா ?????உன் மூஞ்சியை கிட்டே காட்டாதே என்று சொன்னேன் இல்லை ....பாரு பச்ச புள்ள மயங்கிருச்சு ....."என்றவளை முறைத்த கார்த்திக் ,பூரணியை அங்கு இருந்த சோபாவில் படுக்க வைத்து ,மயக்கம் தெளிய முகத்தில் நீர் தெளித்தான் .

தண்ணீர் பட்டதும் பதறி எழுந்து அமர்ந்தாள் பூரணி .கார்திக்க்கையும் ,பூரணியையும் மாறி மாறி பார்த்து விழித்து கொண்டு இருந்தாள் .

"பூரணி செல்லம் ...ஒரு டவுட் கண்ணு ....உனக்கு விங்ஸ் வைச்சுட்டு நாலு தேவதைங்க சுத்தி நின்று பாட்டு பாடி டான்ஸ் ஆடினா மாதிரி ஏதாவது தெரிஞ்சுதா....இல்லை மொழி படத்தில் ப்ரித்விராஜ் சொல்வது போல் 'லைட் எரிஞ்சி ,மணி அடிச்சுதா ....இந்த situationக்கு அது செட் ஆகுமா ...இல்லை த்தம்தானா தந்தன தான் செட் ஆகுமா "என்றவளின் தலையில் நறுக்கென்று கொட்டினான் கார்த்திக் .


"டாய் ஏன்டா குட்டினே ....எருமை மாடே ..."என்றாள் மதுரா .

"இப்போ இந்த situation சாங் ரொம்ப முக்கியம் பாரு ...."என்றான் கடுப்புடன் .

"ச்சே ச்சே .....உனக்கு எல்லாம் போய் சாங் டெடிகேட் செய்ய நினைத்தேன் பாரு ....ஏய் பூரணி உனக்கு இந்த பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா .....நல்லா யோசிச்சுக்கோ .....உனக்கு சூப்பர் மாப்பிளை நான் கொண்டு வரேன் ...இந்த பல்லி வாயன் ...மங்கூஸ் தலையன் வேண்டாம் ....."என்றாள் மதுரா .

"ம ...மதுரா ....மதுரா ....நீங்க இப்படி பேசுவது நல்லா இல்லைங்க .....நானும் ஒரு பெண் தான் ....இவரை காதலிக்குறவ .....என்னை வைத்து என் பீலிங்ஸ் வைத்து விளையாடாதீங்க .....ப்ளீஸ் ......அவரை கூட்டிட்டு கிளம்புங்கோ ....."என்றாள் மீண்டும் கை எடுத்து கும்பிட்டு .
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"இரு இரு ...பிரேக்கை போடு ....இப்போ எதுக்கு இந்த டயலாக் நீ விட்டே ...."என்று ஒரு கையால் தன் தலை தட்டி யோசித்த மதுரா ,அவள் ஏன் அப்படி பேசினா என்று புரிந்து விட ,"அடியேய் ....நான் ஹீரோயின் டீ ....என்னை வில்லியாக்க பாற்கறியே .....ஹே லூசு பூரணி ....கார்த்திக்க்கொடு எனக்கு திருமணம் ஏற்பாடு செய்தது எங்க வீட்டு பெருசுங்க தான் அதுவும் எங்க ரெண்டு பேரின் சம்மதம் கேட்காமலேயே ......என்றுமே இவன் எனக்கு ஒரு சகோதரன் தான் ......என் மேல் இவன் வைத்து இருப்பது பாசம் .....உன் மேல் இவன் வைத்து இருப்பது காதல் ......முதல் முறை இவன் பெற்றோர் திருமணம் பேச வரும் போது அதை தடுக்க ,கையை உடைத்து கொண்டவன் இவன் .....உன்னையும் ,உன் காதலையும் ,உன் பீலிங்க்சு எல்லாம் ஹர்ட் பண்ண வரலை ....உன்னை இவன் காதலிக்கிறான் ...உன்னை தான் திருமணம் செய்ய போகிறான் என்று சொல்ல வந்தேன் ....எப்பா ...மீதம் நீயே விளக்கிகோ ....மீ எஸ்கேப் ....பூரணி ஆல் தி பெஸ்ட் ...உனக்கு ரூட் கிளீயர் பேபி ....."என்ற மதுரா பக்கத்துக்கு அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டாள் .

மதுரா பேசியதை நம்பவும் முடியாமல் ,நம்பாமல் இருக்கவும் முடியாமல் திணறி போனாள் பூரணி .அவளின் அருகே அமர்ந்த கார்த்திக் ,அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டான் .

"டவ் !ஏதாவது பேசுடீ ..."என்றான் கார்த்திக் .

"அவங்க ....மதுரா அவங்க சொன்னது ...எல்லாம் ....."என்றாள் பூரணி .

"உண்மை தான் .....எங்க வீட்டு பெரியவங்களுக்கு எனக்கும் மதுராவிற்கும் திருமணம் செய்யும் எண்ணம் இருக்கிறது தான் .ஆனால் அவளை பொறுத்தவரை நானும் அவ அண்ணா ரகுவும் அவளுக்கு ஒன்று தான்.அவளுடன் தான் வளர்ந்தேன் ...ஆனா அவளை ஒரு காதலியாகவோ ,மனைவியாகவோ நினைக்க முடியலை ....அவளின் பெஸ்ட் தோழன் நான் தான் .....என் முதல்,கடைசி தோழியும் அவள் தான் .......அவ சொல்லும் வரை நீ என்னை நாலு வருசமா லவ் செய்யறது எனக்கு தெரியாது ....சோனாவின் தங்கை என்றதும் நான் தயங்கியது உண்மை தான் .அவளால் தான் மதுராவிற்கு ,அவ ப்ரெண்ட்ஸுக்கு பிரச்சனை .....பட் என்னை இங்கு கூட்டி வந்ததே அவ தான் ......நாலு வருசமாய் எனக்காக வாழ்ந்த உனக்காக, காலம் முழுதும் உன்னோடு வாழ இந்த தேவதை எனக்கு வரம் தருமா?????உன் drawings உள்ள நிழல் நிஜமாக்க என்னோடு உன் வாழ்வை பகிர்ந்து கொள்ள தயாரா ?"என்றவனை கட்டி பிடித்து கதறி அழுதாள் பூரணி ---சந்தோச கண்ணீர் .
கதறி அழுத்தவளை அணைத்து கொண்டவனின் கண்களும் கலங்க ,பூரணியின் தலையில் தன் தலையை சாய்த்தவன் ,முன் நெற்றில் முத்தமிட்டான் .அவனின் கண்களும் கலங்கி இருந்தன .காதலிப்பதும் காதலிக்கப்படுவது சுகம் தான் .

அதே நேரம் கீழே பந்தி முடிந்து விஜயும் அவன் குடும்பத்தினரும் கிளம்ப முயல ,எங்கு இருந்தோ ஓடி வந்த ஊர்வசி ,"அங்கிள் !அப்பா உங்க எல்லார் கூடவும் பேசனும் என்றார் ....மேலே ரெண்டாவது மாடியில் வலது பக்கம் இருக்கும் அறையில் வெயிட் செய்யறார் ...அழைத்து வர சொன்னார் ."என்றாள்

ஊர்வசியின் தகப்பனார் சேதுவின் கல்லூரி தோழர் .நெருங்கிய நட்பு இருவருக்குள்ளும் .நண்பன் பேச அழைக்க குடும்பத்துடன் ரெண்டாவது மாடிக்கு சென்றவர் ,ஊர்வசி சொன்ன அறைக்குள் செல்ல அங்கு அவரின் நண்பருக்கு பதிலாக வளைகாப்பு விருந்தை ரவுண்டு கட்டி அடித்து கொண்டு இருந்த மதுராவை கண்டனர் .

உள்ளே வந்தவர்களை கண்ட மதுரா ,"ஹாய் பெரியப்பா ...பெரியம்மா ....பாட்டி செல்லம் .....ஹலோ ரோபோட் :என்றாள் வரவேற்கும் விதமாக .

"நீ இங்கே என்ன செய்யரே ?"என்றான் விஜய் ஆரம்ப திகைப்பு நீங்கி .

"பார்த்தா தெரியலை ....சாப்பிடுறேன் ."என்றாள் மதுரா நக்கலாக .

"அது இல்லை மா ....உனக்கு பொண்ணு தோழியா ...இல்லை மாப்பிள்ளையா "என்றார் கனகா .

"பெரியம்மா !நீங்க நண்பன் படம் பார்த்து இருக்கீங்களா .....அதில் விஜய் சார் ஒரு கவர் வாங்கி நண்பர்களுடன் ,சத்யராஜ் பெரிய பொண்ணு திருமணத்திற்கு போவாங்க ......சாப்பிட ......நான் இங்கே வளைகாப்பிற்கு வந்து இருக்கிறேன் .....இங்கு யாரையும் தெரியாது ....."என்றவளின் பேச்சை கேட்டு அவர்கள் திகைத்தனர் .

"பாட்டி !எனக்கு பெரிய டவுட் பாட்டி .....ரொம்ப நாளா யோசித்து யோசித்து மண்டையே வெடிச்சுடும் போலெ இருக்கு ....."என்றாள் மதுரா .

"என்னமா ...."என்றார் மரகதம் பதட்டத்துடன் .மற்றவர்களும் என்னவோ ,ஏதோ என்று கவலையில் இருந்தனர் .

"அது ஒன்றும் இல்லை பாட்டி ....இந்த பெருமாள் கோயில் புளியாவரையும் ,இது போன்ற விசேஷங்களில் செய்யும் புளியாவரையும் மட்டும் எப்படி டேஸ்ட் செமையா இருக்கு ?????அங்கு ஹிட்லர் செய்யும் .....நல்லாவே இருக்காது ......பேஸ் பேஸ் புளியாவரை என்றால் அது பெருமாள் கோயில் புளியாவரை தான் ....ரொம்ப நன்னாயிருக்கு ...."என்று சப்பு கொட்டி சாப்பிட்டவளை என்ன செய்வது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

"ஏய் !விளையாடுறீயா என்ன ....உன்னை காப்பாற்ற ராத்திரி பகல் அவனவன் சோறு தண்ணி இல்லாமல் சுத்திட்டு இருக்கோம் ....யாரு என்ன என்று தெரியாதவங்க வீட்டுக்கு வந்துட்டு ,நக்கலா பன்னிட்டு இருக்கே
....எழுந்திருடீ .......எதுக்கு இங்கே வந்தே ஒழுங்கு மரியாதையா சொல்லு ..."என்றான் விஜய் கண்களில் கோபம் மின்ன .

அவன் கோபத்திற்கு காரணம் சேது உருவாக்கி விட்டு போன 'அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் 'situation தான் ......உள்ளே குமுறும் எரிமலையின் சீற்றம் வெளியே வந்திட்டு இருந்தது .'உன் கோவம் என்னை என்ன செய்யும் 'என்று வெகு நக்கலாக ஒரு லுக் விட்டு சாப்பிடும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள் .இடியே விழுந்தாலும் சாப்பாடு முக்கியமுங்கோ .

"ஏய் ...திமிரா ...கேட்கறேன் இல்லை ......"என்றான் விஜய் அவள் கையை பிடித்து எழுப்பி .

"ஆமாம்ன்னு வச்சுக்கோங்க ......நீங்க ஆக்கி ஆக்கி போட்டு சாப்பிட்டதில் திமிர் ,கொழுப்பு எல்லாம் ஏறிடுச்சு "என்றவளின் மனக்கண்ணில் விஜய் கிச்சன்னில் தோசை கரண்டியுடன் நிற்பது போல் தோன்ற ,எழுந்த சிரிப்பை கட்டு படுத்த மிகவும் போராடினாள் .

அவள் சிரிப்பை கண்டவன் ,அவள் என்ன கற்பனை செய்கிறாள் என்பது புரிந்து விட விஜய்யின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மதுரமா !.....இங்கே என்ன செய்யரே ....."என்றார் சேது .

விஜயிடம் நக்கல் அடித்தது போல் அவரிடம் எதையும் பேசி வைக்காதவள் ,"பொண்ணு பார்க்க வந்தேன் அப்பா ."என்றாள் பவ்யமாக .

"பொண்ணா ...யாருக்கு ?"என்றார் கனகா .

"என் அண்ணனுக்கு ...."என்றாள் மதுரா .

"யார் ரகுவிற்கா ...அவனுக்கு பொண்ணு பார்க்கும் அளவுக்கு நீ பெரியமனுஷி ஆகி விட்டாயா என்ன ?"என்றார் மரகதம் .

"என்ன பாட்டி பண்றது ?அந்த பொண்ணு என் அண்ணனை நாலு வருசமா லவ் பண்ணுது ...அவன் தான் புருஷன் என்று மனசளவில் அவனோடு வாழ்ந்துட்டு இருக்கு .....இது தெரியாத எங்க வீட்டு பெருசுங்க அவங்க என் அண்ணன்னுக்கு இன்னொரு பெண்ணோடு திருமணம் ஏற்பாடு செய்து இருக்காங்க ....இது தெரிய வந்த அந்த பொண்ணு தற்கொலை வரை போய் இருக்கு .....அது வாய் இல்லா பூச்சி ...எல்லோரும் இருந்தும் அனாதை மாதிரி ஹாஸ்டெலில் வளர்ந்தவ ....கோடீஸ்வரியா இருந்தாலும் அன்புக்கு ஏங்குறவ ......அவளின் உயிர் என் அண்ணனிடம் தான் இருக்கு .......அந்த பெண்ணை இங்கு கூட்டி வருவதாக ஊர்வசி சொன்னாள் .....அதான் 'மதுரா லவ் சப்போர்ட் சங்கம்' உருவாக்கி அந்த பெண்ணை என் அண்ணனோடு சேர்த்து வைத்து இருக்கிறேன் ......பெரியப்பா ,பெரியம்மா ,பாட்டி ....நீங்க எல்லோரும் தான் முன் நின்று இந்த திருமணத்தை நடத்தி வைக்கணும் ...உங்களை எல்லாம் நம்பி தான் தான் களத்தில் இறங்கி இருக்கேன் ......"என்றவளை அணைத்து கொண்டார் மரகதம் .

"நிச்சயம் செய்கிறோம் மதுரா .....அவங்க வீட்டில் நாங்களே வந்து பேசுறோம் ......அப்படி ஒத்து கொள்ளவில்லை என்றால் அப்பா ஸ்தானத்தில் நானே இருந்து அந்த பெண்ணை தாரை வார்த்து தருகிறேன்.அவளுக்கு குழந்தை பிறந்தாலும் கூட தாய் வீட்டு சீர் போகும் ....."என்றார் சேது .

(அப்பா .....வாக்கு கொடுத்து மாட்டி கொண்டீர்களே ....)

"அப்பா ! அப்புறம் பேச்சு மாறக்கூடாது ......ப்ரோமிஸ் பண்ணுங்க ....என் அண்ணனை விரும்பும் பெண்ணுக்கு ,என் அண்ணனோடு திருமணம் செய்து வைப்பேன் என்று ..."என்றாள் மதுரா .

"எதுக்குமா ...இதற்கெல்லாம் ப்ரோமிஸ் ......வாக்கு கொடுத்து இருக்கோம் ....மீற மாட்டோம் ......இந்த திருமணத்தை முன் நின்று நடத்தி வைப்போம் ...."என்றார் மரகதம் .

"ஓகே ...ஓகே .....பெண்ணிடமும் ,மாப்பிளையிடமும் ஒரு வார்த்தை நீங்களே சொல்லிடுங்க ...அதாவது இந்த திருமணத்தை நீங்க எல்லோரும் முன் நின்று நடத்தி வைப்பீங்க என்று .....பெரியவங்க வாயால் கேட்ட ரொம்ப சந்தோச படுவாங்க .....ரெண்டு பேரும் இப்போ தான் பேச ஆரம்பித்து இருப்பாங்க ....சோ இப்போதைக்கு ரெண்டு பேரையும் ஜஸ்ட் தூர இருந்து பார்த்துடுங்க ....பிறகு கூப்பிட்டு பேசலாம் ...."என்றவள் பால்கனியை மறைத்து இருந்த screen விளக்கவும் ,அங்கு கார்த்திக் பூரணியை அணைத்து நெற்றியில் முத்தமிடவும் சரியாக இருந்தது .
download (7).jpg

மதுராவை தவிர மற்ற அனைவரும் திகைப்பின் உச்சத்தில் இருந்தனர் .உடனே சமாளித்து கொண்ட விஜய் வெகு வேகமாக கோபத்துடன் பால்கனிக்கு செல்ல முயல ,அவனை கை பிடித்து நிறுத்தினாள் மதுரா .கோபத்தோடு மதுராவை ஏறிட்டவனின் கோபம் அவள் பார்வையின் தீட்சண்யத்தில் குறைந்தது .

"அங்கு இருப்பது கார்த்திக் ,பூரணி மதுரா ....நீ உன் அண்ணன் ரகு என்று சொன்னே ."என்றான் கோபத்துடன் .

"அங்கு இருப்பது கார்த்திக் ,பூரணி என்று கண் நல்ல இருக்கும் எல்லோருக்கும் தெரியும் விஜய் ....எனக்கு கண் நல்லா இருக்கு .....சோ அது கார்த்திக்,பூரணி என்று தெரியும் .......நான் என் அண்ணன் என்று தான் சொன்னேன் ......அது ரகு அண்ணன் என்று நான் சொல்லவேயில்லையே ......கார்த்தியும் எனக்கு அண்ணன் தான் ."என்றாள் மதுரா .

"லூசு மாதிரி உளறாதே மது ......உனக்கும் கார்திக்க்கும் மேரேஜ் செய்யலாம்ன்னு முடிவூ செய்து இருக்கோம் ........."என்றான் விஜய் கோபத்தின் உச்சியில் இருந்து .

" கரெக்ட் .....நீங்க எல்லோரும் தான் முடிவூ செய்து இருக்கீங்க .....எங்க விருப்பம் அதில் இருக்கான்னு பேருக்காவது யாரவது கேட்டிங்களா ?????சின்ன வயது முதல் எனக்கு கார்திக்க்கும் ,ரகுவும் வேறு இல்லை .....அவனும் அது மாதிரி தான் .....என்னை தங்கையாக தான் பார்க்கிறான் .....அதான் அவன் parents முதல் முறை திருமணம் பற்றி பேச வந்த போது அதை தடுக்க தன் கையை உடைத்து கொண்டான் .....நீங்க முடிவூ செய்யலாம் ....ஆன அவனை பார்த்தா எனக்கு அண்ணன் என்ற எண்ணத்தை தவிர வேறு எதுவும் வரவில்லை விஜய் .......நட்பு வேண்டும் என்றால் திருமணத்தில் முடியலாம் ......அண்ணன் -தங்கை உறவு அப்படி மாறினால் கேவலம் .......தவிர பூரணியின் உயிரும் இதில் இருக்கு ...அதை மறந்து விடாதீர்கள் ."என்றாள் மதுரா .

"எங்க வீட்டு பொண்ணுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் ....இதில் நீ தலை இடாதே ...நகர்ந்து போ ..."என்றான் விஜய் .

"என்ன ........இழவூ தெரியும் உனக்கு விஜய் ??????ரொம்ப தெரிந்தது போலெ நீ பேசாதே .....இன்னைக்கு நாங்க வர வில்லை என்றால் இன்று மாலைக்குள் அவ தற்கொலை செய்து இருப்பா ....என்ன திகைத்து போய் பார்க்கரே ....இதோ அவள் எழுதிய லெட்டர் .....படிச்சு பார்த்து சந்தோச படு ......"என்று பூரணியின் லெட்டரை விஜய் கையில் கொடுத்தாள் .அதை படித்து பார்த்த அனைவரும் கதி கலங்கி நின்றனர் .

PENANCE WILL CONTINUE.......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்பூஸ்:cry::cry::cry::cry:

மீ crying .....tour கேன்சல் ஆகிடுச்சு:(:(:(:( .....சோ வழக்கம் போல் இந்த தவம் அப்டேட் தொடரும் .:LOL::LOL::LOL:....

1 டே வேண்டும் என்றால் வெளியே போய்ட்டு வந்துடுவேன் .அது எப்போன்னு வெளியுறவு துறை அமைச்சர் decide பண்ணலை ....

எனக்கு tour போகிறது ரொம்ப பிடிக்கும் .இப்போ வேலை ,படிப்பு ,குடும்பம் என்று வருஷத்திற்கு ஒன்று போவதே குதிரை கொம்பா இருக்கு ....இப்போ கிளம்பலாம்ன்னு முடிவு செய்து இருந்தோம் .பட் லீவு பிரச்சனை. .கோயில்னா பிச்சிட்டு ஓடுறாங்க ஆளுக்கு ஒரு புறம் . எல்லாரையும் கிளப்பிட்டு போறதுக்கு உள்ளே தலை சுத்தி போச்சு .ஆளாளுக்கு ஒரு இடம் போகணுமாம் . போகாமலேயே இருத்துடலாம் ன்னு ப்ரோகிராம் கான்செல் ....

கமெண்ட் section +inbox உங்களுக்குகாக எப்பொழுதும் காத்து இருக்கும் .

தொடர்ந்து படிங்க .....கமெண்ட் படிச்சா சும்மா அதிரனும் ......கொஞ்சம் மனசு வைச்சு R .J .ROWLING ரேஞ்சுக்கு ஆகிடுங்க
 
Status
Not open for further replies.
Top