All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 28(3)
மகளையும் காப்பாற்ற வேண்டும் ,இந்த இருவருக்கும் மகள் கிடைக்கவும் கூடாது ,ஆனால் சோனா அண்ட் கோ எதிர்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் .இப்படி தசாவதானியாக ஒருவனுக்கு அவர் எங்கே போவார் ????இன்ஸ்டன்ட் காபி போல் இன்ஸ்டன்ட் ஆக்ஷன் ஹீரோவை பிளிப்கார்ட்இ,swiggyயிலா ஆர்டர் செய்ய முடியும் ??

வெளியே இருந்து சோனாவால் பிரச்சனை என்று பார்த்தால் ,வீட்டினுள் ஒரு சகுனி ஒருவர் இருக்காரே ...கணவன் என்ற பெயரில் . அவர் பாட்டுக்கு தான் தோன்றியாய் முடிவு எடுத்து விட்டு மற்றவர்ர்களின் மேல் அதை திணிப்பதே வேலையாக கொண்டு இருப்பவர் .இருபது வருடங்களுக்கு முன் சேதுவோடு சண்டை வந்த போதும் இப்படி தான் .வந்தார் .குன்னூரில் வேலை கிடைத்து இருக்கு .கிளம்பனும் என்று டெம்போ லாரியுடன் வந்து நின்றவர் .இன்னும் அந்த பழக்கம் மாறவில்லை .குடும்பம் என்ற கூட்டில் கணவன் ,மனைவி இருவரும் சமம் என்பதே இவர் அறிந்து இருக்கவில்லை .இவர் மட்டுமல்ல சராசரியாய் 60%ஆண்கள் இப்படி தான் .

இவர்களை பொறுத்த வரை வீட்டில் உள்ள பொருட்கள் பத்தோடு பதினொன்று மனைவி என்பவள் .கையில் உள்ள ஒரு விரல் போகும் வரை அதற்கு எப்படி நாம் முக்கியத்துவம் கொடுப்பது இல்லையோ அப்படியே மனைவி என்பவளுக்கு அங்கீகாரம் நிறைய வீட்டில் இருப்பது இல்லை .எடுக்கும் ஆடையில் இருந்து ,வாங்கி வரும் மளிகை சமான் வரை ,குழந்தைகளின் படிப்பு முதல் தாய் வீடு செல்வது வரை ,சமைத்து வைத்த உணவிற்கு பாராட்டு முதல் ,நோய் என்றால் டாக்டரிடம் செல்வது வரை பல இல்லத்தரசிகளுக்கு சுதந்திரம் என்பது இல்லை .

எவ்வளவூ தான் படித்து இருந்தாலும் ,எவ்வளவூ பெரிய வேலையில் இருந்தாலும் சில வீட்டு இல்லத்தரசிகளுக்கு கரண்டி பிடிக்கும் வேலை மட்டும் உடல் நலமில்லாத போது கூட விடுவதில்லை .ஒரு சிறு பாராட்டு ,சிறு ஆறுதலான வார்த்தை ,உடல் நலமில்லாத போது ஒரு கனிவு ,அக்கறை என்று எதிர் பார்த்தே பல இல்லறங்கள் ,துறவற மேடைகள் ஆகின்றன .இவை எதுவும் கிடைக்காமல் ,மற்றவர்களுக்கு வெளியே எதுவும் தெரியவிடாமல் ,போலி புன்னகையுடன் ,அரிதாரம் பூசாமல் நடித்து கொண்டு இல்லறத்தில் இருந்து கொண்டே துறவறம் பெற்று விட்ட மனைவிமார்கள் தான் ஏராளம் .பவானியும் அவ்வாறு மனதளவில் துறவறம் பெற்றவர் தான் .

எங்கு அவர் மனைவியாய் தோற்றார் .........எங்கு கணவனிடம் தன்னை விளக்க ,தன் விருப்பு ,வெறுப்பு ,எதிர்பார்ப்புகளை சொல்லி புரிய வைக்க தவறினார் என்று எப்படி யோசித்தும் அவருக்கு விளங்கவில்லை .ஒருவேளை இவர் பேசும் முன்னே இவருக்காக சங்கரன் எல்லா முடிவுகளையும் எடுத்து விட்டு பின் கூறுவதால் ஒரு நிலைக்கு மேல் இவரிடம் எதையும் கேட்பதும் ,ஏன் கணவன் ,மனைவியின் "பர்சனல் டைம் " என்பதே பேசுவதற்கு கூட இல்லாமல் போய் விட்டது தான் .

குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.

ஒளவை பாட்டி சொல்கிறார்

பாடல்

தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்


எளிமையான பாடல் தான்.

தாயோடு அறுசுவை போம் ...குழந்தை பிறந்தது முதல் அது தன் தாய் செய்யும் உணவைத்தான் உண்கிறது. தாயின் கை பக்குவம் தான் ஒரு குழந்தையின் அடிப்படை சுவை. உலகில் எவ்வளவு பெரிய சுவையான உணவு செய்தாலும், "எங்க அம்மா செய்தது போல வருமா " என்று சொல்லுவது எல்லோருக்கும் வழக்கம். காரணம், சுவை என்ற ஒன்றை அறிவதே தாயின் உணவில் இருந்துதான். எப்போதாவது கணவன் அவனுடைய மனைவியிடம் "எங்க அம்மா கை பக்குவம் உனக்கு இல்லை " என்று கூறினால், மனைவி கோபம் கொள்ளக் கூடாது. மனைவி எவ்வளவுதான் சுவையாக சமைத்தாலும், அம்மாவின் சாப்பாட்டின் சுவை தான் அடிப்படை (base ). அதை மாற்ற முடியாது.

தந்தையோடு கல்வி போம் ... ஏன் ? பள்ளி மற்றும் கல்லூரிக்கு பணம் கட்ட தந்தை வேண்டும், தந்தை இல்லாவிட்டால் பிள்ளைகள் சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டி இருக்கும், அதனால் கல்வி தடை படும் என்பதாலா ? இல்லை.எவ்வளவோ வீட்டில் , தந்தை இருப்பார். அதிகமாக சம்பாதிக்க முடியாமல் இருப்பார். ஏழை குடும்பமாக இருக்கும். தந்தை இருந்தும் படிக்க வசதி இருக்காது. அந்த மாதிரி இடத்தில், தந்தை இருந்தும் கல்வி போய் விடுகிறதே ?

அவ்வை சொன்னது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அல்ல.தந்தை மகனுக்கு வேண்டியதைச் சொல்லித் தருவான். அனுபவ பாடங்கள். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை " என்று சொன்னது அதனால் தான்.ஒரு மகனின் அல்லது மகளின் முன்னேற்றத்தில் அவர்களின் தந்தையை விட அதிக அக்கறை கொண்டவர்கள் யார் இருப்பார்கள் ? தந்தை, தான் கற்றவற்றை, தான் செய்த தவறுகளை, அவற்றை திருத்திய விதத்தை எல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவான். எனவே தான், "தந்தையோடு கல்வி போம்"

சேயோடு தான் பெற்ற செல்வம் போம் .... பிள்ளைகள் தவறி விட்டால் எவ்வளவு செல்வம் சம்பாதித்து என்ன பயன் ? அவர்கள் இல்லை என்றால் இருக்கும் செல்வத்திற்கு ஒரு மதிப்பு இல்லை.

மனைவி என்பவள் ஒருவனுக்கு அனைத்துமாகி நிற்கிறாள். தாயாக, தந்தையாக, உடன் பிறப்பாக, உறவினர்களாக, பிள்ளையாக ...எல்லாமாகி நிற்கிறாள்.மனைவியோடு அறுசுவை உணவு, கல்வி, வாழ்க்கை, செல்வம், உடல் வலிமை என்று எல்லாம் போய் விடும் என்கிறாள் அவ்வைப் பிராட்டி. மனைியின் முக்கியத்துவத்தை சொல்லும் அதே நேரத்தில், ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டும் என்றும் அவ்வை கூறுகிறாள்.மனைவி என்பவள் ஒருவனுக்கு, தாயைப் போல அன்பு காட்டி, தகப்பனைப் போல அறிவுரை கூறி, உடன் பிறப்பைப் போல வலிமை கூட்டி, உறவுகளை போல வாழ்க்கைக்கு வளம் சேர்த்து இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட மனைவி போனால், எல்லாம் போய் விடும்.

இத்தனையும் தரும் மனைவியை , ஒருவன் எப்படி கொண்டாட வேண்டும் ....இது புரிந்து இல்லறத்தை சொர்கமாய் மாற்றும் வித்தை பல கணவன்மார்களுக்கு புரிவதில்லை .மனைவி மட்டும் அல்ல கணவனும் ஒரு இல்லறம் என்ற வண்டிமாட்டுக்கு இன்னொரு அச்சாணி தான் .இரண்டில் ஒன்று இல்லை என்றாலும் வாழ்க்கை பயணம் சுமையாகி விடும் .

கணவனை எப்படி சமாளிப்பது ,மகளின் வாழ்வை எப்படி காப்பாற்றுவது ,சோனா அண்ட் கோவை எப்படி விலக்குவது என்று புரியாமல் மண்டை காய்ந்து போனார் பவானி .

சட்டென்று ஒரு எண்ணம் வலுப்பெற தன் போனை எடுத்தவர் ஒரு நம்பருக்கு அழைப்பு விடுத்தார் .நல விசாரிப்புகளுக்கு பிறகு ,முக்கிய விசயத்திற்கு வந்தார் பவானி

"உங்களை பார்த்து பேசணும் ..........விஷயம் உயிர் ,மானம் போகும் அளவு சீரியஸ் ........நாம் சந்திப்பது வேறு யாருக்கும் இப்போதைக்கு தெரிய வேண்டாம் .........."என்றார் பவானி

எதிர்புறம் ஒரு அட்ரஸ் கூறப்பட்டது ."நாளைக்கு இந்த பார்ம் ஹவுஸ்க்கு வா பவானி .........உனக்கு கொடுத்து இருக்கும் வாக்கு படி உனக்காக என் உயிரையும் நான் கொடுப்பேன் ...........நான் இருக்கும் வரை உனக்கோ ,உன் குடும்பத்திற்கோ எந்த பிரச்னையும் வர விட மாட்டேன் ..........என் பிரச்சனையில் மதுராவுக்கு வந்த ஆபத்தை நான் கவனிக்கவில்லை தான் .............இனி இந்த தவறு நடக்காது ............மதுராவின் வாழ்வூ இனி என் பொறுப்பு ...."என்றார் எதிர் முனையில் இருந்தவர் .

"தேங்க்ஸ் ..........ரொம்ப நிம்மதியா இருக்கு இப்போ தான் ..........ரொம்ப கலங்கி போய் இருந்தேன் .......தேங்க்ஸ் ....இனி நான் நிம்மதியா இருப்பேன் ............நாளை பார்ப்போம் ."என்றவர் தன் அழைப்பை துண்டித்தார் .

அவர் அழைப்பை துண்டித்த மறுகணம் சங்கரனிடம் இருந்து அழைப்பு வந்தது பவானிக்கு .இருந்த ஆத்திரத்திரத்தில் அவர்க்கு அந்த அழைப்பை ஏற்க மனமேயில்லை தான் .ஆனால் சங்கரனின் மன நிலையை அறியாமல் எதையும் மேலும் பேச பவானி விரும்பவில்லை .ஏனென்றால் சங்கரனுக்கு அடிக்க வேண்டியது வேப்பிலை மரத்தையே அல்லவா ?????

"பவா !............."மனைவியிடம் ஆறு மாதம் கழித்து பேசும் நெகிழிவூ சங்கரனனின் குரலில் பொங்கி வழிந்தது .

"சொல்லுங்க .........."பவானியும் பாதிப்பில் தான் இருந்தார் .ஏறக்குறைய முப்பது வருட தாம்பத்தியம் ஆயிற்றே .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"எப்படி இருக்கே பவா ......"என்றார் சங்கரன்

"நல்லா இருக்கேன் ."என்று வாய் மொழியாக சொன்னவர் ,மனதிற்குள் ,'செய்யறதை எல்லாம் செய்துட்டு கேட்கும் கேள்வியை பாரு 'என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்து கொண்டு இருந்தார் .

"நான் எவ்வளவூ சந்தோசமா இருக்கேன் தெரியுமா பவா ?"என்றார் சங்கரன்

'நாங்க யாரும் சந்தோசமா இல்லையே '
View attachment images (15).jpg

"அப்படியே வானத்தில் பறப்பது போல் இருக்கு ."என்றார் சங்கரன்

'எங்களுக்கு அப்படியே புதைகுழியில் மாட்டி மூச்சு முட்டி சாவதை போல் இருக்கு .'

"திரும்பவும் நம்ம சொந்த ஊருக்கே திரும்பிட்டோம் ......திரும்பவும் அண்ணா கூடவே இருக்க போறோம் .....தலை குனிந்து ,கூனி ,குறுகி போன நாம திரும்பவும் தலை நிமிர்ந்து மீண்டும் வெற்றியோடு நம்மை தூற்றியவர்களின் முன் வாழ்ந்து காட்ட போகிறோம் ......நான் படித்த லா படிப்புக்கும் ,கணித படிப்புக்கும் இப்போ தான் தகுந்த வேலை கிடைத்து இருக்கு ......ஜெயிச்சுட்டோம் பவானி .....ஜெயிச்சிட்டோம் ....உனக்கே தெரியும் தானே இந்த நிறுவனம் என் கனவு நிறுவனம் ......அதில் தலைமை பொறுப்பு என்னுடையது .....மொத்த சென்னையின் முக்கிய புள்ளிகள் income tax ,வரவு ,செலவு கணக்கு எல்லாம் என் பொறுப்பு .....இப்போ தான் நிம்மதியா மூச்சு விட முடியுது ."என்றார் சங்கரன் .

'மூச்சு முட்டுது எங்களுக்கு '

"உனக்கு தெரியுமா பவானி ....அந்த சேகர் ,ராமு ,தீனா எல்லாம் அண்ணாவோடு சண்டை வந்த போது எப்படி எல்லாம் கேலி பேசினாங்க தெரியுமா ????நான் சொர்ணாவை மணந்து வீட்டோடு மாப்பிளை ஆகும் கனவில் இருந்தேனாம் ......அது களைந்து விட்டது என்று சொல்லி கேலி பேசினாங்க ....இன்னைக்கு அவர்கள் மூவரும் என் கீழே தான் வேலை பார்க்க போறாங்க ......பைத்தியக்காரனுங்க ....."என்றார் சங்கரன் சிரிப்புடன் .

'அவனுங்க பைத்தியம் இல்லை நீ தான்யா .....சொர்ணாவை நீ மணக்காமல் உன் அண்ணன் புண்ணியம் கட்டிக்கிட்டார் ......நீ தப்பிச்சுட்டே ....நான் மாட்டிட்டேன் .............'

"அவனுங்க எல்லாம் friendsசா ?????...........முதுகில் குத்திட்டானுகடீ ............இப்போ என் டர்ன் ..........ஜெயிச்சு கட்டிட்டேன் ...."என்றார் சங்கரன் பெருமையோடு .

'யோவ் .........உனக்கு என்ன மனசுல அண்ணாமலை பட ரஜினின்னு நினைப்போ ....'அடேய் நண்பா ....உண்மை சொல்வேன் ....சவால் வேண்டாம் உன்னை வெல்வேன் "என்று ஒரே பாட்டில் நீ கோடீஸ்வரன் ஆகி "அசோக் !இந்த நாள் உன் டைரியில் குறிச்சுக்கோ ......"என்று தொடை தட்டி சவால் விட்டு அதில் ஜெயிக்க .'

"பாஸ் ....நாளைக்கு ஏதோ மீட்டிங் வைச்சு இருக்கார் .....எத்தனை நாள் ஆகும் என்று தெரியலை .....பைல் எல்லாம் செக் செய்து ,இங்கு நடைமுறைகளை புரிந்து கொள்ள .....சாமான் எல்லாம் புது வீட்டில் பேக்கர்ஸ் அண்ட் மூவேர்ஸ் இறக்கி வைச்சுடுவாங்க .....நீ நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி ,கணபதி ஹோமத்திற்கு ஏற்பாடு செய்மா ."

'அமாம் இது ஒன்று தான் குறைச்சல் .'

"உனக்கு தெரியுமாடீ ...இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை ....மூணே நாளில் என் வாழ்க்கை தலை கீழாக மாற்றி விட்டார் .மூணு நாளைக்கு முன் என் பழைய பாஸ் நரசிம்மன் சார் இந்த நிறுவனத்தை சூர்யா சார் கிட்டே விற்று விட்டதாக கூறிய போது என் வேலை காலினு ரொம்பவே டென்ஷன் ஆகிட்டேன் ....ஆனா skype பேசிய சூர்யா சார் ,'என் திறமை ,அறிவு ,experience அவருடைய கம்பனிக்கு வேண்டும் என்றும் ,எனக்கு பதவி உயர்வோடு கூடிய சம்பளம் ,மொத்த சென்னைக்கும் நான் தான் பொறுப்பு என்றதும் எனக்கு கையும் ஓடலை ,காலும் ஓடலை .......அனா உன்னை நினைத்து ,உன் வேலையை நினைத்து தயங்கினேன் ....பட் உனக்கும் அவர் பள்ளியிலேயே வேலை அதுவும் பிரின்சிபால் வேலை அதுவும் சென்னையின் முதல்தரமான பள்ளிக்கு கொடுப்பர் என்று நினைக்கவேயில்லை ......ரொம்ப சந்தோசம் ...........நம்ம ரகு கேட்டான் என்று அவனுக்கும் சென்னைக்கே மாற்றல் கொடுத்து இருக்கார் ...இனி நீ ,நான் ,நம்ம பிள்ளைகள் எல்லாம் ஒன்றாவே இருப்போம் ......"என்றார் சங்கரன்

'எப்பா .....ஒரு கணமாவது என்னை பற்றி நினைக்க தோன்றியதே ...அதுவே பெரியது ....ஆனா அப்போ கூட என்னை ஒரு வார்த்தை கேட்கணும் என்று தோன்றவில்லை .....வழக்கம் போல் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் முடிவூ எடுத்து விட்டு தகவலை மட்டும் சொல்லியாகி விட்டது .....அமாம் அந்த சூர்யா கர்ணன் பரம்பரை ....ஊரில் பேசிட்டு இருந்தாங்க .....அவனே உன்னை வைத்து என் மகளை ரூட் போட எல்லாம் செய்யறான் .............'இன்று போய் நாளை வா 'படத்தில் பாக்யராஜ் வீட்டு வேலை எல்லாம் செய்து காந்திமதி மூலமாக அவர் மகள் ராதிகாவை மணக்க பிளான் போடுவார் ....இவன் கோடீஸ்வரன் இல்லையா ......அதான் பணத்தை கொண்டு ,தன் அதிகாரத்தை கொண்டு குதிரை முன் கேரட் காட்டி ஓட வைக்கிறான் ....இது புரியாமல் ............சூர்யா போற்றி போற்றி பாடுறீங்க .......உங்களை .....'

""நான் இன்னைக்கு ஹோட்டலில் தங்க போகிறேன் .....சார் நாளைக்கு மீட் செய்துட்டு அங்கேயே வந்துடறேன் .....சரி பவா வச்சுடறேன் ....ஹோட்டல் வந்துடுச்சு ."என்ற சங்கரன் அழைப்பை துண்டித்தார் .

கணவன் பேச்சில் பவானிக்கு புரிந்தது ஒன்று தான் .இது வரை பிடித்து இருந்த 'சோனா மூத்த மகள் 'என்ற பைத்தியதோடு ,இனி "சூர்யா என் கடவுள் "என்ற பைத்தியமும் சேர்ந்து பிடித்து கொண்டது ...தன் கணவன் சூர்யாவின் பக்கம் சாய்ந்து விட்டார் .

பவானி அங்கு தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட ,தன் அறையில் மதுரா தூங்காமல் விழித்து கொண்டு இருந்தாள் .டேபிள் மேல் இருந்த தன் ஹாண்ட்பாக் எடுத்தவள் ,அதில் இருந்து மூன்று பொருட்களை எடுத்து கட்டிலின் மேல் வைத்தாள் .அது ஒரு சிறிய நோட்பேட் ,ஒரு செயின் ,ஒரு பென்டிரைவ் .

View attachment impressive-samantha-ruth-prabhu-wallpapers-for-desktop-9.jpg

PENANCE WILL CONTINUE.......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 28(4)

தன் அறையில் மதுரா தூங்காமல் விழித்து கொண்டு இருந்தாள் .டேபிள் மேல் இருந்த தன் ஹாண்ட்பாக் எடுத்தவள் ,அதில் இருந்து மூன்று பொருட்களை எடுத்து கட்டிலின் மேல் வைத்தாள் .அது ஒரு சிறிய நோட்பேட் ,ஒரு செயின் ,ஒரு பென்டிரைவ் .

அவை ஆல்வின் வீட்டில் இருந்த விஜய்யின் secret அறையில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்கள் .முதலில் செயின் லாக்கெட் உடன் இருந்தது .அந்த லாக்கெட் தங்கத்தில் ஜொலித்து கொண்டு இருந்தது .

'மவளே !மனசுக்குள் பெரிய கணேஷ் வசந்துன்னு நினைப்பு .......நீ செஞ்ச வேலைக்கு பெயர் திருட்டு .......சிறையில் கலி எப்படி இருக்கும் என்று எனக்கு நோ ஐடியா "நேரம் காலம் தெரியாமல் வந்து ஆஜர் ஆனா மனசாட்சியை "சீ போ "என்று விரட்டி அடித்தவள் ,லொக்கெட் மேல் "I LOVE YOU "என்று பொறிக்க பட்டு இருந்ததை கண்டு தலையை குலுக்கி கொண்டாள் .லாக்கெட்டை திறந்து பார்த்தாள் உள்ளே அவளை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள் மற்றொரு மதுராக்ஷி ஒரு புறம் .விஜய் மற்றொரு புறம் .

"நெனச்சேன் .......அலிபாபா குகையோடு மோசமா இருக்கும் போதே நெனச்சேன் ......ஆனா சும்மா சொல்ல கூடாது பிளான் எல்லாம் நல்லா தான் போடுறே விஜய் .......யாருமே சஸ்பெக்ட் செய்யாத ஆல்வின் வீட்டில் உன் திருட்டுவேலை எல்லாம் ஸ்டார் ஆகி இருக்கு ........... ஹ்ம்ம் அடுத்து என்ன ?பென் டிரைவ் ...."என்றவள் தன் லேப்டாப் எடுத்து வந்து அதில் இன்ஸெர்ட் செய்து ,ஹெட்போன் மாட்டி PLAY செய்தாள் .

ஏதோ ஒரு கலை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது .மேடைக்கு விஜய் கிடார் ஓடு செல்ல கரகோசத்தில் அரங்கமே அதிர்ந்தது .
View attachment vijays-birthday-to-be-celebrated-in-a-noble-manner-photos-pictures-stills.jpg

"அனைவர்க்கும் வணக்கம் ...........இன்றைக்கு என் பிறந்த நாள் "என்று விஜய் சொன்ன உடன் ,குழுமி இருந்த மாணவ மாணவியர் வாழ்த்து ஒலியில் அரங்கம் மற்றொரு முறை அதிர்ந்தது .

"ஹ்ம்ம்ம் ........செம FOLLOW UP இருந்து இருக்கும் போல் இருக்கே விஜய் உனக்கு ?"என்றாள் மதுரா அந்த ரகலையை கண்டு .

"இன்று மீண்டும் புதிதாய் நான் பிறந்த நாள் ..........ஒரு தாயால் ஜனனம் எடுத்த நான் இன்று மற்றொரு பெண்ணால் என்னை நானே உணர்ந்து கொண்ட நாள் ............எனக்குள் அவள் காதலை விதைத்து என்னை மனிதனாய் மாற்றிய நாள் ......."என்றவனை இடை இட்டது பல குரல் .

"நோ .....நோ .....அப்போ எங்க கதி ????"

"இப்படி ஏமாத்திட்டேயே மாமு "

"யார் அந்த லக்கி கேர்ள் ?"

"லவ் சொல்லிட்டியா .............என்ன க்ரீன் சிக்னல்லா ??????"

எங்கு இருந்தாலும் வாழ்க ..........."

என்று பல குரல் அரங்கை நிறைத்தது .

"யார் அவங்க .....?பேர் என்ன ?என்ன கிளாஸ் ....நம்ம காலேஜ்ஜா ????அத்தை பெண்ணா ?"

பல பல கேள்விகள் ......அவை அனைத்திற்கும் விஜய்யிடம் மௌனமே பதிலாக மென்முறுவலுடன் வந்தது .

"மாமு ...........வழக்கம் போல் சிரித்து எஸ்கேப் ஆக பார்க்காதே ...........யார் ....யார் யார் அவள் யாரோ ?"

"யாரோ அவள் ...யாரோ அவள் ..........உன் பூக்களின் வேரோ அவள் ?"

"டேய் மச்சான் மேரேஜ் எப்போ ?"என்று முதல் வரிசையில் இருந்து கேட்டது சாட்சாத் ஆல்வின் தான் .

"பாலு ...அவனை கொஞ்சம் கண்ட்ரோல் செய்யுடா "என்ற உடன் பத்து இருபது பேர் பாய்ந்து ஆல்வின்னை நொங்கி எடுத்தனர் .

"அடேய் நீ எல்லாம் நண்பனா ???ஆளை விட்ட அடிக்கறே ???எப்போ மேரேஜ்ன்னு தானேடா கேட்டேன் ????அது ஒரு குத்தமாயா ?????"என்று புலம்பினான் ஆல்வின் .

"அடேய் அவனே இன்னும் ப்ரோபஸ் செய்யலை ......இன்னைக்கு தான் சிஸ்டர் பர்த்டே ....ப்ரொபோஸ் செய்ய போறான்...அதை தான் சார் சுத்தி வளைச்சு காதல் பைத்தியத்தில் உளறிட்டு இருக்கான் ......அதற்குள் முந்திரி கொட்டை மாதிரி மேரேஜ் வரைக்கும் போனா அவன் டென்ஷன் அவனா மாட்டானா ?????போடா போடா மங்கூஸ் மண்டையா "என்று கொட்டினான் பாலாஜி .

"ஹி ஹி எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான் ....நீ continue பண்ணு மச்சி ."என்றான் ஆல்வின் அசடு வழிந்தவாறு .

"என்னது என் பர்த்டே அப்போ ப்ரொபோஸ் செய்ய இருந்தானா .........."வாய் விட்டே அலறி விட்ட மதுராவிற்கு ஒரு கணம் இதயம் நின்று பின் துடித்தது .
View attachment 4b11c40525f2a79ba39a8d44f331111a.jpg

"என் பர்த்டே அன்னைக்கு தான் இவர் புதிதாய் மறுபடியும் பிறந்தாரமா ?.........கடவுளே .....மேடை ஏறி இப்படியா இப்படியா பிதற்றி வைப்பே .............லூசு லூசு "என்று புலம்பினாள் மதுரா என்றோ நடந்ததிற்கு இன்று .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"இந்த சாங் அவங்களுக்காக தான் ...."என்றவன் தன் மியூசிக் ட்ரூப் உடன் ஹிந்தி படமான "hai dil hai முஷ்கில் "என்ற படத்தில் வந்த பாடலை பாட ,அவன் குரல் வளத்தில் ,அவன் முக பாவத்தில் ,அதில் தெரிந்த காதலில் மதுரா திறந்த வாய் திறந்த படி இருக்க ,கண்கள் தெறித்து வெளியே விழுந்து விடும் அளவு அதிர்ந்து போய் அவன் பாடுவதை பார்த்து இருந்தாள் .இதயம் வெகு வேகமாக துடிக்க ,எங்கே அது வெளியேவே வந்து விழுந்து விடுமோ என்று நெஞ்சில் கை வைத்து அழுத்தினாள் .

ஒருவனால் ஒரு பாட்டில் தன் குரலால் ,முக பாவத்தால் காதலை சொல்ல முடியுமா என்ன ???பாஷை புரியாதவர்கள் கூட அவன் காதலை அந்த கணம் உணர்ந்தார்கள் .அவன் விழுந்து விழுந்து அந்த வரிகளை எழுதவில்லை .இசை அமைக்கவில்லை தான் .ஆனால் அவனால் முடிந்தது பாடுவது .பாடும் திறன் மூலம் தன் குரலால் தன் காதலை உலகம் அறிய பிரகடனப்படுத்தி கொண்டு இருந்தான் அந்த காதலன் .
View attachment 1540092272345.png

View attachment 1534268727.jpg
View attachment CrKE4ZrWcAAyjfX.jpg

( இந்த பாடல் வரிகளில் இருந்து புரிந்து கொண்டதை தமிழில் கொடுத்து இருக்கிறேன் ....தவறுகள் ,பிழைகள் இருக்கலாம் .)

"என் பயணமும் நீ தான் ..............என் பயணத்தின் இலக்கும் நீ தான் .
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது
நீ என் கடவுள் ..............என் எல்லா பிராத்தனைகளிலும் இருப்பவளும் நீ தான்
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது


நீ என்னுடன் இல்லாத நேரங்கள் என்னை சோதிக்கின்றன (கொல்கின்றன )
என்னுடைய எல்லா குறைகளையும் நிறைவாக்க தேவை படுவது நீ தான் .
(நீ இருந்தால் தான் என் எல்லா றைகளும் ,இழப்புகளும் நிறைவாகும் )
என்னுடைய பேரார்வம் உனக்கு தகுந்தவனாக நான் இருப்பது மட்டும் தான்
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது


இந்த ஆத்மா என்னுடையது ,இந்த உடல் என்னுடையது
ஆனால் உன்னை சந்தித்த பிறகு இரண்டுமே என்னுடையது அல்ல ....
(அவை உன்னுடையதாக மாறி விட்ட பிறகு அவை என்னுடையது அல்ல )
வலிகளை மட்டுமே நீ கொடுப்பதாய் இருந்தாலும் ,கொடுப்பது நீ என்பதால் எனக்கு அது பரிசே (வரமே )


நான் வானம் .....நீ என் பூமி
உன்னை தேடியே என் பயணம்
என்னுடைய எல்லா குறைகளையும் நிறைவாக்க தேவை படுவது நீ தான் .
இந்த பூமியில் சேர முடியாது என்றால் நாம் இணைவு சொர்க்கத்திலாவது நடக்கட்டும் .
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது


என்னுடைய இந்த வாழ்வானது .............நீ இல்லாதது
நீ இல்லாமல் ..........வாழ்க்கையை வாழவே எனக்கு தெரியாது
(நான் உயிர் வாழ தேவை படுவது நீ தான் )


நான் உன்னை தீவிரமாக காதலிக்கிறேன் .
உனக்கு இது தெரியாமல் போகலாம்
தெரியாமலே நீ இருந்து விடலாம்
ஆனால் உன்னை நோக்கிய என் பயணம் ஒரு வழி பயணம்
இலக்கான உன்னை அடையாமல் போனாலும்
உன்னை நோக்கி பயணித்து கொண்டு இருப்பதே அழகானது


பாடல் முடிந்த போது கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆனது .கண்ணை உணர்ச்சி பிரவாகத்தில் பாடி கொண்டு இருந்தவன் கண்ணை திறக்க அதில் தெரிந்த கண்ணீரின் பளபளப்பின்னை கேமரா வெகு அழகாக பதிவு செய்து இருந்தது .

அன்று கலங்கி இருந்த அவன் கண்களுக்கு ,இன்று மதுராவின் கண்கள் கண்ணீரை சொரிந்து கொண்டு இருந்தன .மன பாரம் தாங்க முடியாமல் கட்டிலில் அப்படியே சாய்ந்து விட்டாள் .




PENANCE WILL CONTINUE....
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 28(5)
யாரோ எழுதிய கவிதை ,யாரோ இசை அமைத்து பாடியது தான் .அது அவன் சொந்த படைப்பு இல்லை தான் என்றாலும் மேடையில் அவன் பாடிய விதம் ,கேட்பவரின் மனதை போட்டு பிசைந்து எடுத்தது .அந்த பாடலின் மொழி வேறு தான் என்றாலும் ,இசைக்கு, காதலுக்கு மொழி தேவை இல்லை தானே .....அந்த பாடலை கேட்டவருக்கு விஜய்யின் காதல் அதன் ஆழம் புரியாமல் இருக்காது தான் .மற்றவருக்கே அதன் பாதிப்பு இருக்கும் போது யாருக்காக அவன் பாடினானோ,யாருக்காக அவன் உருகி கொண்டு இருக்கிறானோ அவளுக்கு புரியாமல் போகுமா என்ன ????
View attachment vijay-speech-mersal-audio.jpg

விஜய்யின் காதல் தோட்டத்தில் அமர்ந்து யோசித்த போதே விளங்கி விட்டது தான் .அவனும் அவன் சொல்லால் ,செயலால் காதலை உணர்த்தி விட்டான் தான் .ஒரு வீட்டின் அறை முழுக்க நினைவு சின்னங்களை எழுப்பி அல்லவா வைத்து இருக்கிறான். ஆனால் எப்படி அவன் கைகள் கட்டப்பட்டு இருக்கிறதோ அதே போல் மதுராவின் கரங்களும் கட்டப்பட்டு இருந்தது .அவள் முடிவுக்கு யாரும் குறுக்கே வர போவதில்லை தான் .அப்படியே குறுக்கே வந்தாலும் அதை சமாளிக்கும் திடமும் அவளுக்கு உண்டு தான் .ஆனால் விஜய்க்கும் அவளுக்கும் நடுவே இருக்கும் அகழி மிக பெரியது ஆயிற்றே .....practical ப்ரோப்லேம் நிறைய உண்டு என்பதால் தான் அவள் மௌனம் காப்பது .

கண்ணீர் வழிய படுத்து இருந்தவள் கைகளில் பட்டது அந்த நோட்பேட் .அதனை எடுத்து புரட்டியவள் விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள் .பக்கம் பக்கமாக அவள் படங்கள் பென்சில் ஸ்கெட்ச் மூலம் வரைய பட்டு இருந்தது .சிலவற்றில் விஜய்யும் உடன் இருந்தான் .இருவரையும் வரைந்து இருந்தான் .அத்தனை தத்ரூபம் அதில் .சிலவற்றுக்கு வண்ணம் பூச பட்டு இருந்தது .இதே போல் 20 குறையாத பெரிய நோட்பேட்களை அந்த அறையில் பார்த்ததாக நினைவுக்கு வர தலையை பிடித்து கொண்டாள் மதுரா .
View attachment 24125638_163908057688915_7207221788617474048_n.jpg
View attachment DTEV47GV4AIUSRo (1).jpg
View attachment 38638207_2213683032252136_7525708998188728320_n.jpg

முப்பது பக்கம் திருப்பிய பின் ,விஜய் கை எழுத்தில் அவர்களின் கடந்தகாலம் முன்னே விரிந்தது .

"ஒரு குடும்பத்திற்கு மூத்த மகன் என்பது பெரும் சுமை .அதுவும் அப்பா பாராலிஸிஸ் வந்து படுத்த படுக்கையாக இருக்கும் போது இதை எல்லாம் எப்படி சமாளித்தார் என்று சுத்தமாக புரியவில்லை .நேத்து வரை கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்ந்து விட்டேன் .ராஜா வீட்டு கண்ணுகுட்டியாக அப்பாவும் ,அம்மாவும் என்னை தாங்கி விட்டனர்.ஆனால் இன்றோ இவர்களையும் ,தம்பி ,தங்கையையும் தாங்கும் பொறுப்பு என்னுடையது .யாரின் வயிறும் வாடா கூடாது ,அப்பாவுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் ,எங்கள் மூவரின் படிப்பும் கெட கூடாது .தம்பி நான் வேலைக்கு போகிறேன் என்று வந்து நிற்கிறான் .அவனை சமாளிப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது .வேலை சமயத்தில் இப்படி ஆனதால் இழப்பீடு பெரும் தொகையாகவே வந்து இருக்கு .அதை பேங்க்கில் போட்டு மாத வருமானம் வரும் படி செய்து விட்டேன் .சொந்தமாய் குடி இருந்த வீட்டை காலி செய்து விட்டு ,சிறிய வீட்டுக்கு குடி போய் விட்டோம் .சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டோம் .அது மெயின் ஏரியா என்பதால் வாடகையும் கணிசமாக வருகிறது .ஊரில் இருந்த விவசாய நிலத்தையும் ஆண்டு காண்ட்ராக்ட்டுக்கு குத்தகை விட்டு இருக்கிறேன் .

அம்மாவும் சிக்கனமாக தான் செலவு செய்கிறார் .தம்பி ,தங்கை பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்கின்றனர் .அப்பாவுக்கும் உயர்தர சிகிச்சை அளித்தால் மீண்டும் பேசவும் ,எழுந்து நடமாடவும் முடியுமாம் .அதனால் வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு செய்து ஆல்வினின் அப்பா செய்யும்


"செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலில் அவர்க்கு உதவி கொண்டு இருந்தேன் .விற்கும் இடத்திற்கு ஏற்ப கமிஷன் தாராளமாகவே வருகிறது .சில பள்ளி பசங்களுக்கு டியூஷன் எடுக்கிறேன் ..ஆனாலும் சில சமயம் மூச்சு முட்டி போகிறது .எல்லோருக்கும் சுமைதாங்கி கல்லாக இருப்பதால் அவர்கள் பிரச்சனைகளை ,தேவைகளை என் மேல் இறக்கி வைக்கிறார்கள் .ஆனால் நான் யாரிடம் இளைப்பாறுவேன் ????

(பாவம் விஜய் நீ...........அந்த சமயத்துல நான் என்ன செய்தேன் ....கார்திக்க்கை உண்டு இல்லை என்று செய்து கொண்டு இருந்தேன் .........ஸ்கூலில் வால் என்று பேர் எடுத்தேன் ......பவானியின் BP ஏத்தி கொண்டு இருந்தேன் )

உறங்க கிடைப்பதே வெறும் நான்கு மணி நேரம் தான் .பசி ,தூக்கம் இது எல்லாம் பார்க்கவே முடியாது .ஆனாலும் ஏதோ ஒரு சோர்வு .இப்படி தந்தையை ,குடும்பத்தை காப்பாற்ற ஓடி கொண்டு இருந்த போது தான் மாசிலாமணி சார் பழக்கம் ஆனார் .குன்னூர் அருகே அவருக்கு ஏதோ ஒரு பங்களா வாங்க வேண்டி இருந்தது .ஆல்வின் அப்பாவால் அதை செய்ய முடியவில்லை .என்னை தான் அனுப்பினார் .வேண்டா வெறுப்பாக தான் சென்றேன் .ஆனால் அந்த பயணம் தான் என் வாழ்க்கைக்கு உயிர் அளித்தது .அவர் எதிர்பார்த்ததை முடித்து கொடுத்தேன் .அவருக்கு என்னை மிகவும் பிடித்து போனது .என்னை பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.மூன்றே நாளில் மற்றொரு தந்தையாக மாறி போனார் அந்த கோடீஸ்வரர் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தனை அன்பு ,கருணை .மனிதருள் காணக்கிடைக்காத மாணிக்கம் அவர் .கோடி கோடியாய் பணம் இருந்தும் ,ஒற்றை பிள்ளை பெற்று இருந்தும் ,அந்த குன்னூரில் பணக்கார ஏழையாய் இருந்து கொண்டு இருக்கிறார் .அன்புக்கு மிகவும் ஏங்கி போய் இருந்தார் .அவருக்கு உடம்பு சரி இல்லாமல் போகவே கூடவே இருந்து நான் தான் பார்த்து கொண்டேன் .அவர் குணமானதும் கூட என்னை போக விடவில்லை .அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு மேலும் இரண்டு நாட்கள் தங்கி இருந்த போது தான் என் வாழ்வு ஒரு விபத்தால் மாறியது .

யார் அது என்று தெரியவில்லை ........குடித்து விட்டு வண்டி ஒட்டி என்னை பரலோகத்திற்கு அனுப்ப முடிவு செய்தவன் .ஆனால் எனக்கு கிடைத்தது சுவர்க்கம் .அடி பட்டு ரத்த வெள்ளத்தில் நடு ரோட்டில் துடித்து கொண்டு இருந்தேன் .கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தார்களே ஒழிய துணித்து யாரும் உதவ முன்வரவில்லை .இவர்களுக்கு எல்லாம் மருத்துவ துறையில் "கோல்டன் டைம் "என்று ஒன்று உண்டு .டாக்டர் கூட சொல்வாரே "கொஞ்ச நேரத்திற்கு முன் கொண்டு வந்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று " அந்த முதல் உதவி நேரத்தை ,உயிரை காப்பாற்றும் அந்த நொடியை தான் "கோல்டன் டைம் "என்பார்கள் .இதற்குள் நோயாளிகளை ,விபத்தில் சிக்கியவர்களை கொண்டு சென்றால் காப்பாற்றி விடலாம் .ஆனால் யாருமே முன்வரவில்லை .மரணபயத்தில் துடித்து கொண்டு இருந்தேன் .வலி ....வலி ..........வலி மட்டுமே தெரிந்தது .

அப்பொழுது தான் அது நடந்தது ......கூட்டத்தை விளக்கி கொண்டு வந்தாள் அவள் .அவளை கண்ட அந்த நொடி நான் இறந்து விட்டேனா என்று கூட குழம்பி விட்டேன் .என் உயிரை கொண்டு செல்ல வந்த வானத்து தேவதை தான் அவளோ என்று........அவ்வளவூ அழகு அவள் ........அடிபட்டு நினைவு தப்பி கொண்டு இருந்த வேளையில் சைட் அடித்தவன் நான் ஒருவனாக தான் இருப்பேன் .அதுவும் அந்த பெண் பார்ப்பதற்கு ஸ்கூல் கேர்ள் போல் இருந்தாள் .
View attachment IMG_20170428_002912_761.jpg

அவளுக்கு பத்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் கண் முன்னே விரிந்தது .அடிபட்டு உயிர்க்கு போராடிய ஒருவனை தான் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்த்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது .ரத்த வெள்ளத்தில் இருந்த அவன் முகம் அன்று அவளுக்கு சரியாக தெரியவில்லை .அன்று தான் காப்பாற்றிய நபர் விஜய் தான் என்று இன்று அவன் எழுதியதை படித்த பின் தான் அவளுக்கு தெரிய வந்தது .

(அட பாவி ............பதறி துடித்து ஓடி வந்தால் அந்த ரணகளத்துலேயும் உனக்கு சைட் ..........அப்படியே விட்டு போய் இருக்கனும் .)

அங்கு இருந்தவர்களை சரமாரியாக திட்டி தீர்த்தவள் ,பெரிய towel ஒன்றை வைத்து அழுத்தி அதனை அவள் தாவணி கிழித்து கட்டி என் ரத்த பெருக்கை நிறுத்தியவள் என்னை மடி தாங்கி கொண்டாள் .

"சார் ...........சார் ..............உங்களுக்கு ஒன்றும் ஆகாது ......சீக்கரம் ஹாஸ்பிடல் போய்டலாம் ........."---ஒஹ்ஹஹ் குயில் கூவியதோ ...........அவள் தான் என் கன்னத்தை தட்டி பேசி கொண்டு இருந்தாள் .

(உயிர் இருக்கான்னு நான் பயந்துட்டு இருந்தா ...........குயிலாம் குயில் )

அவள் மடியில் சொகுசாக படுத்து கொண்டு ,அவளையே சைட் அடித்து கொண்டு இருந்தேன் .அவளோ என் உயிரை காக்க போராடி கொண்டு இருந்தாள் .

"angel "----அவள் பெயர் தெரியாது .ஆனால் அவள் தான் என் angel .என்னை காப்பாற்ற வந்த தேவதை பெண் .எனக்காகவே கடவுள் படைத்த மறுபாதி ....என்னவள் ............தவம் செய்யாமலே எனக்கு கிடைத்த தேவதை .....

ஆட்டோ மூலம் என்னை ஹாஸ்பிடல் கொண்டு சென்றாள் .அன்னையாய் என் மடி தாங்கி இருந்தாள் .இப்படியே என் உயிர் போனாலும் எனக்கு கவலை இருந்து இருக்காது .அத்தனை அமைதி அவள் அருகே இருக்கும் போது .

(அடப்பாவி நீ நிம்மதியா உயிர் விட்டு இருப்பே ....நான் அல்லவா ஒரு உயிரை காப்பாற்ற முடியவில்லையே என்று வாழ்க்கை முழுதும் அழுது இருப்பேன் ....தத்து பித்துன்னு உளறுது எருமை .)

அவள் தொடுகை .....அவள் வாசம் ....அவளின் எனக்கான தவிப்பு ..........எனக்கு பிடித்து இருந்தது .எனக்கே எனக்காக ஒரு உயிர் துடிக்கிறது அது எனக்கு அடிபட்டதால் தான் என்றாலும் ........காதல் கொண்ட மனம் அதற்கு பிடித்த வர்ணம் பூசி கொண்டது .

காதல் ..............அவன் அவனுக்கு எப்படி எப்படியோ காதல் வரும் ...........எனக்கு நடு ரோட்டில் ....ரத்த வெள்ளத்தில் உயிர்க்கு போராடும் சமயத்தில் காதல் வந்தது .....அதுவும் நல்லதிற்கு தான் .....அவளை கரம் பிடிக்க வேண்டும் என்ற வெறியே "பூட்ட கேஸ் "என்ற நிலையில் இருந்த என்னை மீட்டு வந்தது என்பது தான் நிஜம் .....நான் உயிர் பிழைத்தது அந்த தேவதையால் தான் .....அந்த தேவதைக்காக மட்டும் தான் ........அவளோடு வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே என் உயிர் பிழைத்ததோ என்று இன்று தோன்றுகிறது .

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 29
ஹோச்பிடலில் icu கொண்டு செல்லும் வரை என் கையை அவள் விடவில்லை .....அவள் கையை நானும் விடவில்லை ...."angel "அதை தவிர என்னால் வேறு ஒன்றையும் பேசமுடியவில்லை தான் என்றாலும் அவளை கை விட்டால் மறைந்து விடுவாளோ என்று பயமாக இருந்தது .ஒரு வேளை அவள் அடிபட்ட என் மூளையின் உருவகம் என்றால் .....கண்ணை மூடி நான் மயங்கி விட்டு எழும் போது அவள் இல்லை என்றால் நான் என்ன ஆவேன் ....

"பயப்படாதீங்க .............உங்களுக்கு ஒன்றும் ஆகாது ............நான் இருக்கேன் ............உங்களுக்காக நான் pray பண்றேன் ......நீங்க சீக்கிரம் நன்றாகி விடுவீங்க ..........மனதைரியத்தை விட்டுடாதீங்க ...........உங்களுக்கு நல்லதாவே நடக்கும் ............"என் தேவதையின் அந்த வார்த்தைகள் தான் எனக்கு சஞ்சீவி வரத்தை கொடுத்ததோ ??

அதற்குள் ஏதோதோ பார்ம்களில் சைன் வாங்கினார்கள் .

"அழாதே மா .....உன் மாமாவுக்கு எதுவும் ஆகாது ...."அங்கு இருந்த நர்ஸ் என்ன எல்லாம் தெரிந்த முனிவரா ????எனக்கும் என் தேவதைக்கும் உள்ள சொந்தத்தை அசரீரியாக சொல்லி விட்டாரே .....என்னை என் தேவதை பெண் ஏற்பாளா ???/அந்த நர்ஸ் வாக்கு பலிக்குமா ?

((("ஏன்டா டேய் ...அது எனக்கு தெரிந்த ஹாஸ்பிடல் ......என் அண்ணனை அவர்களுக்கு தெரியும் .....உன்னையும் எப்படி அண்ணன் என்று சொல்வது என்று குழம்பி ,பயத்தில் "என் மாமா "என்று உளறி வைத்தால் அதற்கு இப்படி ஒரு வில்லங்கமா ?))))

மீண்டும் நான் கண்விழித்த பிறகு பயத்துடன் கண் விழித்தேன் .எங்கே என் தேவதை காணாமல் போய் விடுவாளோ என்று நான் பதறி தவித்தது இன்றும் கூட நினைத்தால் நிஜம் பதறுகிறது .எனக்கு விழிப்பு வந்த உடன் ,டாக்டர் அவளை அழைத்து வந்தார் .அந்த கண்களில் கண்ட பயம் ,நான் கண்விழித்ததை கண்டதும் நிம்மதி ,அவளின் அழகான புன்னகை ..........அது ஹாஸ்ப்பிட்டல் என்பதே மறந்து போனது .

"உங்களுக்கு ஒன்றும் இல்லை ......யூ ஆர் அல்ரைட் .....உங்க FRIEND ஆல்வின் என்பவருக்கு விவரம் சொல்லிட்டேன் ...வந்துட்டே இருக்கார் ....கவலை படாதீங்க ...."என்றவளின் குரல் எனக்குள் தேனாய் பாய்ந்தது .

மீண்டும் அவளோடு டூயட் பாடியவாறு மயங்கி போனேன் ....மறுமுறை விழிப்பு வந்த போது அந்த அறையில் இருந்த சோபாவில் குறுக்கி படுத்து இருந்த தேவதையை கண்டேன் .....அப்பா என்ன அழகு ......கனவில் என்ன கண்டாலோ பபுன்னகைத்து கொண்டு இருந்தாள் .அப்படியே அவளை அள்ளி எடுத்து கட்டிப்பிடித்து தூங்க வேண்டும் என்று எண்ண மட்டும் தான் என்னால் முடிந்தது ...கை ,கால் உடைந்து படுத்து கிடப்பவனால் இதை எப்படி செய்ய முடியும் என்று கூட தோன்றவில்லை .....காலம் எல்லாம் தூங்கும் முன் கடைசியாக பார்க்க விரும்பும் முகம் அவள் ஒருத்தியின் முகம் தான் .காலை கண் விழிக்கும் போதும் காண விரும்பும் முகம் அவள் ஒருத்தியுடையதாக தான் இருக்கும்.
View attachment maxresdefault (15).jpg

இரவு முழுவதும் எனக்காக இங்கேயே இருந்து இருக்கிறாள் என்ற எண்ணமே இனித்தாலும் ,வீட்டில் இவளை தேட மாட்டார்களா என்ற பயமும் ஒரு பெண்ணின் அண்ணனாய் எனக்கு வந்தது .வீட்டில் தேட மாட்டார்களா என்று தோன்றினாலும் ,அவளை தேடவே கூடாது என்று சுயநல எண்ணமும் எழாமல் இல்லை ......எனக்காக ,யார் என்றே தெரியாத எனக்காக இரவு முழுவதும் ஹாஸ்பிடலில் தங்கிய அந்த தைரியம் ,கனிவு ,கருணை என்னை புரட்டி போட்டது .

அவள் தூங்கி கொண்டு இருந்தாள் .தூங்கும் அவளை கண்களால் நிரப்பி கொண்டு நான் தூங்காமல் விடிய விடிய அந்த தேவதையை மனதில் நிரப்பி கொண்டு இருந்தேன்.இன்னும் எவ்வளவூ நேரம் இவள் என்னுடன் இருக்க போகிறாள் என்று பதை பதைத்து போனேன் .என்னையும் அறியாமல் தூங்கி எழுந்தால் நான் நினைத்தது போல் என் தேவதை காணாமல் தான் போனாள் என்னை என் நண்பனிடம் ஒப்படைத்து விட்டு .

என் உயிரை காப்பாற்றி என் இதயத்தை,உயிரை அவள் எடுத்து கொண்டு சென்று விட்டாள் .நான் வெறும் கூடாக அந்த ஹாஸ்பிடலில் கிடந்தேன் என்பதை என் தேவதை அறிவாளா ???அவளை தேடி கண்டு பிடிக்காவது நான் குணமாக வேண்டும் என்ற வெறியே எழுந்தது .

மருந்துகளின் உபயத்தால் நான் உறங்கி கொண்டு இருக்கும் பொழுது எல்லாம் அவள் வந்து சென்று இருக்கிறாள் .ஆல்வினுக்கு உணவு கொண்டு வந்து தந்து ,ஹாஸ்பிடல் பில்லுக்கு அவளின் வளையல் ,செயின் அடகு வைக்க வேறு தந்து இருக்கிறாள்,எனக்கு தேவை பட்ட ரத்தத்தையும் கொடுத்தது அவள் தான் என்று பின்னர் ஆல்வின் சொல்லி தான் தெரிந்து கொண்டேன் .மடையன் நான்கு நாட்கள் வரை ஓசியில் தின்றவன் அவள் பெயரை கூட கேட்காமல் விட்டு இருக்கிறான் .


தேவதைகளுக்கு பெயர் தேவையா என்ன ?????அதன் பிறகு ஹாஸ்பிடல் விட்டு கிளம்பும் வரை அவள் வரவில்லை .உயிரை அவளிடம் விட்டுவிட்டு வெறும் கூடாக நான் சென்னை திரும்பினேன் .வாழ்க்கையும் அதன் போக்கில் சென்றது .ஆனால் ஒரு வித்தியாசம் இப்பொழுது வண்ண மயமாகி இருந்தது .அவளின் ரத்தம் என் உடலில் இருப்பது அவளே என்னுடன் இருக்கும் உணர்வை தான் எனக்கு கொடுத்தது .
தேவதையை கரம் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்றவனாக என்னை மாற்ற வேண்டுமே ......அவளுக்காகவே உழைக்க ஆரம்பித்தேன் ....காதல் என்ற நெருப்பில்என் தேவதை என்ற உளியால் என்னை நானே செதுக்கி கொண்டேன் .ஒரு பெண்ணை காதலிப்பது பெரிய விஷயம் அல்ல .ஒரு பெண்ணிடம் காதலை சொல்வதற்கு முன் அதை சொல்லும் தகுதி எனக்கு இருக்க வேண்டும் அல்லவா ????இளவரசி மாதிரி வீட்டில் வளர்க்க படும் பெண்ணை நான் ராணியாக தங்காவிட்டால் காதலித்து என்ன பயன் ????ஆண் என்று சொல்லிக்கொள்வதற்கு தான் என்ன அர்த்தம் இருந்து விட முடியும் ???? காதலால் நான் அவளாகி போனேன் .பெற்ற வெற்றிகள் எல்லாம் அவளுக்கான என் காணிக்கை ......தேவதைகள் வரங்கள் மட்டுமே தருவார்கள் என்பது உண்மை தானோ ????மீண்டும் அவளை சந்திப்பேனோ ?????என் காத்திருப்புக்கும் தவத்திற்கும் வரமாக அவள் வருவாளா ????"
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இளவரசியாக வளர்க்க படுபவளை பணிப்பெண்ணாக மாற்றுவதா காதல் ......அவள் தந்தையை விட மனதாலும் ,செயலாலும் அவளை நான் தாங்க வேண்டுமே .....அது என்ன மனைவி மட்டும் தாயாய் மடி தாங்க வேண்டும் ,தோழியாய் தோள் கொடுக்க வேண்டும் ,அமைச்சராய் வழி காட்ட வேண்டும் என்பது ???அதே போல் கட்டிய மனைவிக்கு ,காதலிக்கு ஒருவனால் இருக்க முடியாதா என்ன ???நான் இருக்கிறேன் ...கடைசி மூச்சு வரை இருப்பேன் என்று வாய் வார்த்தையாய் சொல்வதை விட செயலில் செய்து காட்டுவது மேல் இல்லையா .....அதற்காக தான் இந்த செதுக்கல்கள் .

காதலுக்கு மரியாதை,அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்கள் இப்பொழுது புது அர்த்தம் கொடுக்கிறது ....அதில் காதல் வெற்றி பெரும் வரை தான் காட்டி இருப்பார்கள் ....காதலித்தவளை கை பிடிப்பது மட்டுமே வெற்றியாக காட்டப்படும் .வெற்றி என்பதன் தொடக்கம் மட்டுமே அது ....உண்மையான வெற்றி கடைசி வரை காதலித்தவளுக்காக வாழ்வது ,மடி தாங்குவது மட்டும் தான் ..........என் தேவதையே உன்னை மடி தாங்கி என் கடைசி மூச்சு வரை உன் ஒருத்திக்காகவே என் இதயம் துடிக்கும் ...........என் கை சேர வருவாயா ?"
View attachment 0TLsm5xGiJ_m2vUldCIBzRGHCkX6i27NSEGf3IdFcFjwQtzc-h4mQdkHE8c06DC58zuiCdh1c3A5tINQTsJJhg.jpg

என்று முடித்து இருந்தான் .

கண்களில் கண்ணீர் வழிய திக்கற்று வெறித்து கொண்டு அமர்ந்து இருந்தாள் மதுரா .
உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே.


O did I not think of you?
and thinking of you,
did I not think and think again of you?
was I not baffled
by the world’s demands
that held me to my work?
O love, did I not think of you,
and think of you till I wished
I were here to sate my passion
till this flood of desire
that once wet the branch of the tall tree
would think
till I can bend and scoop a drink of water
with my hands?
View attachment 370ed78b-6117-4c9a-baad-513c71336e93_1024.jpg

அவன் இந்த கேள்விகளுக்கு ,எதிர்பார்ப்பிற்கான பதில் தான் அப்பொழுது அவளிடம் இல்லை .சொல்லவும் முடியாது .சொல்லவும் கூடாது .அர்த்தம் அநர்த்தமாகி விடும் .

காதல் அவன் சொன்னது போல் யார் வேண்டும் என்றாலும் செய்து விடலாம் தான் .அதில் வெற்றி பெறுவது ஒரு சிலரால் மட்டுமே முடியும் .அப்படி காதலில் வெற்றி பெற்றவர்கள் எத்தனை சதவீதம் சிறு சிறு விஷயங்கள் ஊதி பெருசாக்க பட்டு ,டைவோர்ஸ் வரை போகிறார்கள் ?இல்லை எத்தனை சதவீதம் உயிர் பிரியும் அந்த கடைசி நொடி வரை தன் இணையை ,காதலித்த வாழ்கிறார்கள் ?

ஆனால் இங்கு இந்த கேள்விகளுக்கு அர்த்தமே இல்லையே !.....சோனா என்ற மாபெரும் சீன பெருஞ்சுவர் நடுவே இருக்கிறதே ....இந்த காதலுக்கு மரியாதை தான் செலுத்த முயன்றால் ,அதற்கான அர்த்தமே மாறிவிடும் .ஊர் உலகத்தில் கதைகளில் ,டிவி தொடர்களில் வேண்டும் என்றால் இவற்றை ஆதரிக்கலாம் .நிஜ வாழ்க்கை என்று வரும் போது இதற்கு வேறு வர்ணம் அல்லவா பூசப்படும் ??? சமூகம் ,கலாச்சாரம் ,பண்பாடு என்ற ஒன்று உண்டு .சோனா -விஜய் திருமணத்திற்கு மட்டும் வந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் தாண்டியதாம் .....அந்த 1 லட்சம் பேருக்கு மட்டும் அல்ல , இவன் காதலை தான் எந்த விதத்தில் அங்கீகரித்தாலும் மீடியா முன் செல்லும் சோனாவிற்கு தான் அனைவரின் சப்போர்ட் இருக்கும் .

யோசித்து பார்க்க பார்க்க மதுராவிற்கு தலை வலித்தது .
View attachment hqdefault (2).jpg

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 29(1)
அதே சமயம் நகரின் வேறு ஒரு பக்கம் தன் வீட்டில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள் ACP ராஜேஸ்வரி .ஆல்வின் ,விஜய் கொடுத்த தகவல்களை ஆராய்ந்து கொண்டு இருந்தாள் .பல்வேறு இடங்களுக்கு ஆட்களை அனுப்பியும் ,பல அழைப்புகள் விடுத்தும்,உடன் இருந்த ஆதாரங்களை குறிப்பு எடுத்து கொண்டு இருந்தாள் .அதே சமயம் வந்த அழைப்பினை ஏற்றவளின் நெற்றி சுருங்கி கண்கள் தீவிரம் குடி ஏறியது .
View attachment jyojyo.jpg

"மேடம் ....பிரபாஸ் சார் இங்கே பார்க்க சொன்னார் .....நீங்க உடனே வரது நல்லது ...."என்றது எதிர்முனை (விஜய்யின் பெயர் வெளியே தெரிய கூடாது என்று இந்த சங்கேத பெயர் )

"என்ன விஷயம் ?"என்றாள் ராஜேஸ்வரி .

"சார் எதிர் பார்த்தது தான் நடந்துட்டு இருக்கு .....அட்ரஸ் அனுப்பறேன் ....."என்றது எதிர் முனை .

அட்ரஸ் வந்த உடன் ,கமிஷனர் தொடர்பு கொண்ட ராஜேஸ்வரி ,"சார் ....ஒரு அட்ரஸ் ரெய்டு போறேன் ....ஹ்ம்ம் ஆபரேஷன் ஜாக்கெல் தான் சார் ......"என்றாள் .

"கோ AHEAD .....உன் சஸ்பென்ஷன் கான்செல் செய்துட்டேன் ......"என்றார் கமிஷனர் .

"சார் ரெண்டு நாள் கூட ஆகலையே .....அதற்குள் எப்படி ?"என்றாள் ராஜேஸ்வரி .

"மிஸஸ் சிவகாமி மேடம் பேட்டி பார்த்த பிறகு CM சார் நேரிடையாகவே கூப்பிட்டு கேட்டார் .....நடந்ததை சொன்னேன் .....உன் சஸ்பென்ஷன் கான்செல் செய்துட்டார் .....அவருக்கும் நிறைய பெண்கள் காணாமல் போவதாக இன்டெலிஜென்ஸ் தகவல் வந்து இருக்கு .....சோ இதில் இறங்க முழு பவர் தந்து இருக்கார் ....எந்த தலையீடும் இருக்காதாம் .....யூ கேர்ரி ஆன் "என்றார் .

தமிழ்நாட்டில் பெண்கள் ,குழந்தைகள் காணாமல் போவதை கண்டுபிடித்து குற்றவாளிகளை ஒழிக்க அமைக்க பட்ட பிளான் அண்ட் குழுவிற்கு பெயர் தான் "ஆபரேஷன் ஜாக்கெல் "இதற்கு வெளியே இருந்து உதவுவது விஜய்யும் ,ஆல்வினும் .விஜய் ஏற்பாட்டின் பெயரில் பல இடத்தை கண்காணிக்க ஆட்கள் நிறுத்த பட்டு இருந்தனர் .அதில் ஒருவன் தான் ராஜேஸ்வரிக்கு தகவல் சொன்னது .அந்த தகவலை கொண்டு ,அடுத்த பதினைந்து நிமிடத்தில் அந்த அபார்ட்மெண்ட் சுற்றி வளைக்க பட்டது .

ராஜேஸ்வரி உள்ளே நுழையவும் ஒருவன் வெகு வேகமாக வந்து ,"ஐந்தாவது மாடி .ஒட்டுமொத்த பிளோர் அவங்க தான் வாடகைகக்கு எடுத்து இருக்காங்க ....."என்றான் .
View attachment Mardaani-Rani-Mukerji-Stil.jpg

அடுத்த சில வினாடிகளில் சில பல அடிதடி ,தூப்பாக்கி சூட்டின் பிறகு அந்த தளத்தில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர் .அது பெண்கள் ஏலம் விடப்படும் இடம் .பொருள் வாங்குவது போல் பணம் இருந்தால் பெண்களை விலைக்கு வாங்கி செல்லலாம் .10 பெண்கள் மீட்க பட்டனர் .குற்றவாளிகளை அர்ரெஸ்ட் செய்தும் ,மீட்கப்பட்ட பெண்களை பெண்கள் இல்லத்திற்கும் அனுப்பி வைத்தாள் . மீடியாவும் குழுமி இருந்தது .
"மேடம் ....என்ன நடந்தது மேடம் .....யார் இவங்க எல்லாம் ?????ஏதோ பெண்கள் மீட்க ஆபரேஷன் ஏற்பாடு செய்து இருக்கீர்களாமே ....."என்ற கேள்விகள் பல்வேறு பகுதிகளில் இருந்து பறந்து வந்தது .

"எல்லோருக்கும் வணக்கம் .....இப்பொழுது பிடித்தது ஹியூமன் ட்ராபிக் ரிங் ஒரு பகுதி .அதாவது பெண்களையும் ,குழந்தைகளையும் கடத்தி அவர்களை விற்கும் கும்பல் இவர்கள் .இப்படி கடத்த படும் பெண்கள் ,குழந்தைகள் வெளிநாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் விற்க பட்டுவிடுவார்கள் .ஆன்லைன் வியாபாரம் கூட நடக்கும் ......"என்றாள் ராஜேஸ்வரி .

"போலீஸ் தூங்குகிறதா மேடம் ....இது நாள் வரை இப்படி ஒரு தகவல் வெளியே வரவில்லையே ஏன் ?"

"போலீஸ் தூங்கவில்லை ......மக்கள் தூங்கி கொண்டு இருக்கிறார்கள் ....இந்த அபார்ட்மெண்டை பாருங்க ....ரொம்ப போஷ் ஏரியா ....ஆனால் ஒருத்தருக்கு ஒருத்தர் தொடர்பில் இல்லை ....அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் அது எனக்கு நடக்காத வரை சந்தோசம் என்று இருப்பதால்
வரும் வினை .....நான்கு சுவற்றுக்குள் என் வக்கிரத்தை தீர்த்து கொள்கிறேன் என்று இணையத்தளத்தில் ஆபாசத்தை விளைவிக்கும் ஒவ்வொருவரும் காரணம் .....இப்படி தொழிலுக்கு வரும் பெண்கள் ,குழந்தைகள் யாரோ ஒருவரின் மகள் ,தங்கை என்ற மனிதாபிமானம் இல்லாததது காரணம் ......இது பல மில்லியன் டாலோர் புழங்கும் வெளியுலகத்திற்கு தெரியாத இருட்டு உலகம் ....இப்படி கடத்த படும் பெண்கள் முன்பு எல்லாம் "LOW ரிஸ்க் "VICTIMS என்பார்கள் ....அதாவது அனாதைகள் ,காணொம் என்று யாராலும் தேட படாதவர்கள் ....இவர்கள் இருந்தாலும் ,செத்தாலும் என் என்று கேள்வி கேட்க யாரும் முன் வர மாட்டார்கள் .போலீஸ்க்கும் கம்பளைண்ட் எதுவும் வராது ......ஆனால் இப்பொழுதோ காதல் என்ற பெயரில் தெருவுக்கு தெருவு நான்கு பேர் பைக்கில் நிற்கிறார்கள் .....எதையும் அறியாத விட்டில் பூச்சிகளாக பெண்களும் ஷாப்பிங் மால் ,பீச் ,பார்க் என்று "உரிமை "என்ற பெயரில் ,"நாகரீகம் "என்ற பெயரில் காதல் என்ற வலையில் மாட்டி அலைந்து கொண்டு இருக்கிறார்கள் .இப்பொழுது இவர்களை கடத்துவது தான் அதிகமாக நடக்கிறது .கடத்தவில்லை என்றாலும் இவர்களுடன் சேர்ந்து இருக்கும் படங்களை காட்டி பணம் பறிப்பது வெகு ஜோராக நடக்கிறது ....."என்றாள் ராஜேஸ்வரி .

"இது நடக்காமல் தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும் ?"
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 1540371201356.png

"முதலில் மக்கள் எங்கு தவறு நடந்தாலும் துணித்து குரல் கொடுக்க வேண்டும் ...நான்கு சுவற்றுக்குள் இருந்து முகநூலில் இல்லை .....வெளிப்படையாக .....உங்களுக்கு சிறு குழந்தைகள் இருந்தால் முதலில் "குட் டச் ,பேட் டச் "சொல்லி கொடுங்க ....டியூஷன் ,கிளாஸ் அனுப்பும் இடங்கள் பாதுகாப்பானதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள் ....உங்கள் பள்ளி ஆசிரியர் ,ஆசிரியர் ,உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்வோரின் மேல் கவனம் இருக்கட்டும் ...பள்ளி முடிந்து வந்த உடனே குழந்தையிடம் அன்று நடந்ததை விசாரியுங்கள் ...நாகரீகம் என்ற பெயரில் குழந்தைகளுக்கு KERCHIEF அளவு சிறிய உடல் தெரியும் உடைகளை தவிருங்கள் ....முகநூல் ,ட்விட்டர் ,இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் உங்கள் பிள்ளைகளின் போட்டோக்களை பதிவு செய்யவே வேண்டாம் ....உங்கள குழந்தையின் படத்தினை எடுத்து அதை கொண்டு "ப்ளூ பிலிம் "தயாரிப்பர்வர்கள் அதிகம் உண்டு .....இவர்கள் PEDOPHILE ஆவார்கள் ....குழந்தைகளை மட்டுமே குறி வைப்பவர்கள் .....வெளியே பார்க் ,பீச் ,ஷாப்பிங் செல்லும் போது உங்களின் கவனம் உங்கள் குழந்தையின் மேலும் ,சுற்றுப்புறத்தை மேலும் இருக்கட்டும் ....குழந்தைகள் வெளியே வாங்கி சாப்பிட அனுமதிக்க வேண்டாம் .....பள்ளிகளின் அருகே போதை மருந்துகள் கலந்த தின்பண்டங்கள் விற்பனையும் நடக்கும் ....."என்றாள்

View attachment 1540371682143.png

"வயது பெண்களின் பெற்றோர்களுக்கு உங்களின் அறிவுரை ?"

"ஒரு வயதுக்கு மேல் INDEPENDENCE அவசியம் தான் என்றாலும் அது சுதந்திரமாக உங்கள் பிள்ளைகள் எடுத்து கொள்ளும் அளவு விட்டுவிடாதீர்கள் ....அவர்களின் நடவடிக்கைகளை கவனியுங்கள் .அவர்களின் நண்பர்கள் யார் ,அந்த நண்பர்களின் குடும்பம் எப்படி பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள் ....அடிக்கடி ஸ்பெஷல் கிளாஸ் வைக்கிறார்களா என்று கல்லூரியில் தெரிந்து கொள்ளுங்கள் ....ஒரு காலேஜ் எடுத்து கொண்டால் அந்த காலேஜின் பெற்றோர் குழு விவாதித்து ,காலை ,மாலை காலேஜ் அருகே ரவுண்ட்ஸ் வரலாம் ...போலீஸ் ,காலேஜ்க்கு எழுதி போட்டு இந்த சமயங்களில் ரோந்து வர மனு போடலாம் .உங்கள் பிள்ளைகளின் காண்டாக்ட் லிஸ்ட் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் .....செல்ல பெயர் வைத்து காண்டாக்ட் லிஸ்ட் இருந்தால் அது யார் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் .....இட்ஸ் பெட்டர் SAFE தான் சாரி .ஹோஸ்டேலில் தங்கி படித்து ,வேலை செய்யும் பெண்களின் பெற்றோர்களும் ,ஹாஸ்டல் வார்டன் எப்படி பட்டவர் ,அந்த ஹோஸ்டேலில் போதிய CCTV வசதி இருக்கிறதா ,மகள் எத்தனை மணிக்கு திரும்ப வருகிறாள் ,யார் அவளை பார்க்க வருகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .போலீஸ் ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் காவலுக்கு வர முடியாது .பெற்றோர் ,சுற்றி இருக்கும் மற்ற பெற்றோர் தான் இதனை உங்கள் கடமையாக எடுத்து செய்ய வேண்டும் .இது என் நம்பர் ....யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும் எப்பொழுது வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளலாம் .....நன்றி "என்ற ராஜேஸ்வரி கிளம்பினாள் .
View attachment Rani-Mukherjee-Mardaani1.jpg
"பிடிபட்ட அந்த ஹியூமன் டிராபிக் ரிங் தலைவனை விசாரிக்கும் விதத்தில் ராஜேஸ்வரி விசாரித்ததில் அவன் அப்ரோவ்ர் ஆகி மொத்த உண்மையையும் சொன்னான் . கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அது போல் பலமுறை பெண்களை ஏலம் விட்டதாகவும் ,சில பேர் அங்கு உள்ள தனியார் ரெசார்ட்களில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டதாகவும் ,சில பேர் கன்டைனரில் அடைக்கப்பட்டு ,போலி சான்றிதழ் பெறப்பட்டு கப்பல் மூலம் சிங்கப்பூர் ,மெக்ஸிகோ ,சீனாவிற்கு கடத்தப்படுவதாக உண்மை முழுதையும் கூறினான் .ஆனால் இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது அவனுக்கே தெரியவில்லை ....

View attachment download.jpg

PENANCE WILL CONTINUE.....
 
Status
Not open for further replies.
Top