சதிகாரர்கள் என்ன செய்ய போகிறார்களோ என்று காத்திருக்கையில் இயற்கை செய்யும் சதியை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சூரியமின்காந்தபுயல் என்று யாரும் எதிர்பாராத சூழல். அதை தெளிவாக விளக்கிய விதம் அருமை. ஒரு பிரச்சனைக்கு தீர்வை யோசிக்கும் முன் அடுத்த பிரச்சனை முளைக்கிறது. அருகில் ஒரு தீவு இருப்பதை அறிந்தாலும் அதில் மனிதர்கள் இல்லை என்பது அடுத்த சவால். கப்பல் எரிவதற்கு முன் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி ஆர்யன் தான் ஒரு சிறந்த கேப்டன் என நிரூபிக்கிறான். ஜெயவர்மனும் தான் ஒரு இராஜா என்பதை செயலில் காட்டுகிறான். ஆரோனும் சூரஜும் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் பகைமையை மறந்து நட்புகரம் நீட்டி விட்டார்கள். அழகரின் இரத்தம் கடலில் கலந்துவிட்டது, இனி எந்நேரமும் நாம் சுறாவை எதிர்பார்க்கலாம். அதற்குள் ஆர்யன் அவர்களை அடைந்துவிடுவான் என நம்புவோம். அவர்களை நோக்கி வருவதும் ஆர்யனாகவே இருக்க வேண்டும். தியாவும் ஆர்யனும் ஒருவர் மற்றவருடைய நலன் குறித்தே எண்ணிகொண்டிருப்பது அவர்கள் உறவில் முன்னேற்றமே. கப்பலில் ஏற்பட்ட பதட்டம் தொடங்கி, அனைவரும் நிலைமையை கையாளும் விதம், மோட்டார் பழுது, புகைமூட்டம், தீப்பற்றி எரிவது பின் அனைவரும் வெளியேறியவுடன் கப்பல் வெடித்து சிதறுவதென அனைத்து காட்சிகளையும் கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள் அனைவரும். ஒரு எதிர்பார்ப்பு இந்த கதையை படிக்க துவங்கியதில் இருந்து எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதமாகவே கடந்த மூன்று அத்தியாயங்களும். இன்னும் விறுவிறுப்பாகவே அடுத்து வரும் பதிவுகளும் இருக்குமென்று நம்புகிறேன். சொந்த வேலை காரணமாக என்னால் கருத்தை சரிவர பகிர்ந்து கொள்ள முடியவில்லை. முடிந்த மட்டும் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.