All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Jayanthi Krishna

Active member
செம எபிசொட் ஸ்ரீக்கா :smiley7:

அமர் அஞ்சலி மீட் பண்ணிக்க போறாங்க. அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க ஆவலா காத்திருக்கிறேன். :love:
 

K.Venigovind

Well-known member
அமரஞ்சலி..
ரொம்ப நாள் கழித்து எமோஷனல்லா படிச்ச ஃபீல்.. அஞ்சலி யோட பார்ட் படிக்கிறப்போ கண்ணீரா வருது.. இப்படி தாயன்போட இருக்கிற பெண் எப்படி துரோகம் செய்து இருக்கமுடியும்னு தோணுது..
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அஞ்சலி தம்பி தங்கையை விட்டு பிரிதலையும் அமரை மனைவியின் வலையில் விழ வைக்க அவள் தாயே சதி திட்டம் தீட்டி கொடுத்த பதிவு...

பார்வதி பாண்டு அடித்த அடியில் இறந்து விட்டாள்.. அதனால் தந்தையும் அண்ணனும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்... பிரயோசனம் இல்லாத தாய் என்றாலும் அஞ்சலி இல்லாத சமயத்தில் தம்பி தங்கைகளுக்கு அவள் பாதுகாப்பாய் இருந்தாள்...

அஞ்சலி எடுத்த முடிவு சரியே.. இதை தான் அமரிடம் முன்பு கோபால் அஞ்சலி சம்மதிக்கவில்லை என்று சொன்னவுடன் அவளே வருவாள் என்று சொன்னானோ? அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்து கொண்டே உள்ளான் போலும்...

அமரின் தொண்டு நிறுவனம் மூலம் படிக்க தங்க என்று தம்பி தங்கைக்கு பாதுகாப்பான இடம் ஏற்பாடு செய்தாகி விட்டது...

அவர்களின் பிரிவு எங்களை கலங்க வைத்து விட்டது ஸ்ரீ மேம்... தங்கள் எழுத்துக்களின் மூலம் அந்த யதார்த்தத்தையும் வருத்தத்தையும் அப்பட்டமாக காட்டி உள்ளீர்கள்..

அச்சோ! அமருக்கு போய் இப்படிப்பட்ட மாமியார் மனைவியா? தாயை போல் பிள்ளை என்று நிரூபித்து விட்டாள் மஹிமா.. அமர் தன் கஷ்டத்திலிருந்து மீள செய்து கொண்ட திருமணம் இப்போது அவன் மாமனார் வருத்தப்பட்டு என்ன பயன்? நல்லவர்கள் நேர் வழியில் சென்றால் கெட்டவர்கள் குறுக்கு வழியில் தான் செய்வது தான் சரி என்று அடுத்த அடி வைத்து போய் கொண்டே இருப்பார்கள்..

அஞ்சலி அமர் சந்திப்பது சந்தோஷமா? இல்லை பழி வாங்கலா? மஹிமாவின் சூழ்ச்சியில் அமர் சிக்குவானா?

அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்...
 
Top