All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

துரோகத்தின் தூண்டலில்
துடிக்கும் மனங்களே!
நீ பார்க்கும் பார்வையில் வேற்றுமை...!

அவன் பார்வை காமத்தில்!
அவள் பார்வை காதலில்!
அவர்கள் மனமோ துரோகத்தில்...!

காக்கும் கரங்கள் காமத்தில்
கனலாய் சுட்டெரிக்க...
நோக்கும் விழிகள் காதலில்
புனலாய் நீர்வடிக்க...
துரோகத்தின் பிடியில் துடித்தாலும்
மோகத்தின் பிடியில் வெடித்தாலும்
காதலின் பிடியில் மடிந்ததேன்...?

ஓ காதலே! உன் வேகத்தில்
விவேகமும் வீழ்ந்த ரோகம்!
காதல் என்பதே கானலோ
என்றெண்ணும் சோகம்!
பெண்ணே! புதுமைப் பெண்ணாய்
சக்தியாய் நிமிர்ந்தாலும்
காளியாய் சம்ஹாரம் செய்தாலும்,
காதலின் பிடியில் கரையும் நீ
தாய்மையின் திரு உருவே!
அன்பின் அருமருந்தே!

அன்பெனும் பிடியில்
அரவணைத்த அன்பனே!
அன்னையாய் பெண்ணை
உயிராாய் வளர்த்துவிட்டு,
உரிமை மீறிய துரோகத்தில்
தன்மானத்தில் சிங்கமாய்
சிலிர்க்கும் மன்னவனே!
உன் அன்பின் அரிச்சுவடியில்
தன்மானத்தின் தாத்பர்யம்
தலை நிமிரும் நேரம்
பிள்ளையாய் இருந்தாலும்
பிறக்காதோ காருண்யம்!

கண்முன்னே காணும் தோற்றங்கள்!
காணப் பொறுக்கா மாற்றங்கள்!
ஆனால், மானுடா?
மனிதம் மீறிய தன்மான எழுச்சி....
தாமதம் இல்லாமல்
தகர்க்கும் உளியே! - அது
அறிவை அறுக்கும் தனியே!
அன்பே மறுக்கும் உனையே!
இதுவே, வாழ்வின் கடையே!

கடையாகும் முன்னே!
கடைத்தேற வந்ததோ
பெண்ணே! உன் காதலே!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
பழி வாங்க தான் kutikitu vanthu இருக்கான் nu avana solra varaikum avaluku appadi எண்ணம் இல்ல இதனை நாள் துன்பம் அவன் kita ஆறுதல் தேடின........ அவன ava love 😍 panraane romba late ah தான் purinji kitu இருக்கா.... Appo சூர்யா oda senthu thaan avanuku துரோகம் panni இருக்கா la.... அமர் avalodaya thambi தங்கச்சி ah vechi miratti avaloda இருக்க ninaikiraan.... Iva appadi எல்லாம் முடியாது seththu poiduvenu solra.... Appram ethuku time கேட்டா nu தான் puriyala........ College முடிச்ச ஒடனே avanuku கஷ்டம் காலம் aarambichidichi போல சூர்யா vaala.... என்னமோ pannitaan avanga product ah.... அவன் அப்பா vuku பொறுப்பு இருந்தா இப்படி ah irunthu irupaan ivvallavu பெரிய விஷயம் nadakuthu அந்த ஆளு மொபைல் la switch off panni vechi இருக்கான்..... Super Super mam... Semma episode
 

Jayanthi Krishna

Active member
அப்படியென்ன அஞ்சலி துரோகம் செஞ்சா.... ஆனாலும் அமர் கொடுக்கும் தண்டனை பெருசுதான்...

சோகமான பதிவு ஸ்ரீக்கா. 😢
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்.. அஞ்சலி அமரின் பழி வாங்கும் எண்ணத்தை அறிந்ததும் இருவரின் முன்னால் நடந்த நினைவுகளுக்கான பதிவு...

அமர் பேபி என்று அஞ்சலியை அழைத்தவுடன் எல்லாம் மறந்து அவளிடம் அவனும் அவனிடம் அவளும் சரணடைந்து அவளின் சிறுப் பிள்ளை செயலை மன்னித்து அவளை ஏற்று கொண்டானோ என்று நினைத்து விட்டோம்... ஆனால் அவளை அணைத்து கொண்டே அவள் துரோகத்தை சொன்னான் பாருங்க அங்கே நிற்கிறான் நம் அமர்... உடனே அஞ்சலியும் விலகி அவளை மாய்ந்து கொள்ள கண்ணாடி துண்டை எடுத்தால் அவனும் சலிக்காமல் அவள் தம்பி தங்கையை ஞாபகப்படுத்தி தான் அப்பட்டமான business man என்று காண்பித்து விட்டான்...

தைரியம் இருந்தால் என்னை தொடுங்கள் என்ற அஞ்சலியை என்னுடைய தேர்வு சோடை போகவில்லை என்று தன்னை தானே மெச்சி கொண்ட அமர்... அவன் விழிகளை பார்க்க சொல்வதும் உனக்கு போய் துரோகம் செய்வானா என்பதும் அதனால் அவனிடம் தன் காதலால் குழையும் அஞ்சலி... ஸ்ரீ மேம் இருவரின் உணர்வையும் அப்பட்டமாய் எங்கள் கண் முன் படம் பிடித்து காட்டி.. அருமை ஸ்ரீ மேம்..

அமரை விரும்புகிறாள் அஞ்சலி... இதை அவனிடம் சொல்ல முடியுமா? சொன்னால் ஒப்பு கொள்வானா? இல்லை எள்ளி நகைப்பானா?

எதிரியான மோகனின் மகன் சூர்யபிரகாஷ்.. அவனுடன் போய் அஞ்சலி காதல் என்று சிறு பிள்ளை தனமாய் சுற்றி திரிந்துள்ளாள்... Face creamல் அதிகமான chemical சேர்க்கப்பட்டுள்ளது என்றால் அந்த நிஜமான chemical %ஐ சூர்ய பிரகாஷிற்கு தெரிவித்தது அஞ்சலியா? இதனால் அமரின் குடும்பமே ஓடி ஒளிய வேண்டி ஆகிவிட்டதே... இந்த நஷ்ட ஈடு போக்க மஹிமா தந்தை தன் மகளை அமரை திருமணம் செய்ய சொல்லி.. என்னுடைய guessing 1% ஆவது ஒத்து போகுதா ஸ்ரீ மேம்... அபார கற்பனை என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டு எங்கள் கற்பனைக்கு எட்டாத ஒரு விஷயத்தை flash backல் கொடுக்க போகிறீர்களா?

அச்சோ! அமரை நினைத்து தான் கஷ்டமாக உள்ளது... எப்படி தாங்கினான்? தன் வாழ்க்கையை அல்லவா பணயம் வைத்தாகி விட்டது... இதற்கு தீர்வு தான் என்ன? அவளால் அழிந்த அமரின் வாழ்க்கை அவளாலேயே சீர் தூக்குமா? இல்லை????

கேள்விகள் பல எங்கள் மனதில் ஊர்வலமாய் வர தங்கள் பதிலை காண எதிர் நோக்கி...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 
Top