All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
கதை பற்றி பேசும் போது நாயகன் நாயகியே பிரதானம் .. மா..

அவர்களின் தவறு தப்புக்களை.. உணர்தல் சரிசெய்தலில் தான் கதையின் ஜீவநாடி இருக்கிறது.


காந்திமதி நிலை சொல்ல.. ஆயிரம் பேர் ..

விக்னேஷ்வரனை திட்ட அனைவரும்..

ஆனால் பாவத்திற்கு பிறந்து.. பரிதாபமாய் வேட்டையாடப்பட்ட ம்ளிரை.. போற்ற வேண்டாம்..ஆனால் பலரும் கரித்துக் கொட்டியது விந்தையிலும் விந்தை.. அதனால் தான்.. நான் இந்த நிலை எடுத்தேன் மா..

அபயனுக்கு உருக கதை படிக்கும் அனைவரும்(நயனிமா வின் எழுத்து வலிமையின் காரணம் மட்டுமே..)

அதை விடுத்து.. அவன் செய்த செயல்களை நடுநிலையில் நின்று பார்க்க நீங்கள் தயாராக இல்லை..

சட்டத்தின் முன்பு.. நீதியின் முன்பு.. அவனின் செயல்கள் குற்றமே..

..


நிறைய விவாதங்கள்.. நிறைய பதில்கள்.. எக்கச்சக்கமான கேள்விகள்..


பண்ணியாச்சு...



நிஜமா.. ஃபீலிங் வெரி டயர்ட்..

யாரும்.. அவர்களின் கருத்துக்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை எனும் போது.. பேசுவது அர்த்தமற்றதாகத் தோணுது..

கற்பனையில் உயிர்த்து.. எழுத்து வடிவில் வந்த கதா பாத்திரங்களை விட.. எழுத்துக்களின் வடிவில் அறிமுகமாகி.. உயிராய் உணர்வாய் இருக்கும் உள்ளங்களை மதிப்பது.. பெரிதா தோணுது...

எனவே...


கதையின் நகர்வு சரியா இருக்கு...

திருப்தியா படிச்சுட்டு போவோம்...

ஹேப்பி எண்டிங் நயனிமா தருவாங்க..... லெட் அஸ் என்சாய்...

மீன லோசனி அம்மா...☺☺☺☺☺☺
தாமரைமா என்ன சொல்ல வலிகளை என்றும் வார்த்தை கொண்டு வடித்து வாதிட முடிந்ததில்லை...
உணர்வால் உயிரால் உணரப்பட வேண்டியவை.... :smiley18::smile1::Puszi:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனி,


கொல்லாமல் கொன்று விதைத்த வித்து
மெல்லாமல் மென்று முழுங்கிய முத்து
இரண்டுக்கும் நடுவே....
சொல்லாமல் சென்று புதைத்த சொத்து...!
காதலின் நடுவே காயங்கள் பேச
ஆறாத ரணங்களும் ஆற்றாத மனங்களும்
ஆலோலம் பாட அன்புதான் மருந்தோ...?

வாழ்த்துக்கள் நயனி, நன்றி
wow sema sema sema.. beautiful words paa... its perfect. thank you so much Mithra.. really I am so happy paa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
தாமரை அம்மா
நீங்கள் இப்பொழுது காந்திமதியின் அம்மா,
நீங்கள் என்ன செய்வீர்கள்?
இங்கு அபயன் அவள் என் அம்மாவாக மாறி
"கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே"
என ரௌத்திரம் கொண்டான் அவன்.
மிளிரிவின் வலி உணரும் நீங்கள் ஏன் காந்திமதியின் வலியை உணரவில்லை?

தென்னை மரத்தின் கீழே பால் குடித்தாலும் கள் என்று சொல்லும் உலகமடா.

"அவளுக்கு ஒரே நாளில்... தகப்பன் கணவன் இரு உறவுகளும் பொய்த்துப் போச்சு.. அவ யாரை நம்புவா"

காந்திமதிக்கு தன் உலகமே இயக்கத்தை நிறுத்தி விட்டது.
பொய்த்துப்போன உறவா?
மரித்துப்போன உணர்வா?

என் கண்ணாடியில் அபயனின் ஒளிச் சிதறல்கள் பட்டு வானவில்லாய் வண்ணங்கள் சிதறுகிறது.

விதிதான்...விதிதான்.....
குந்தியின் மகனாய்ப் பிறந்தது கர்ணன் செய்த பாவம்..
விக்னேஸ்வரனின் மகளாய் பிறந்த மிளிரின் பாவக்கணக்கு.

ஆராதனாக்கு தண்டனையா?
ஆமாம்...
தகப்பன் பெயர் தெரியாமல்,
பிறந்தவுடன் தாயின் சுகம் அறியாமல்,
இருட்டில் மலர்ந்த அல்லி அவள்.
அவளுக்குத் தருவது அந்த காந்திமதிக்கு தருவது போல் அல்லவா?
பச்சை மரத்தில் ஆணி அடித்து விட்டாயிற்று.
விளைந்த குழியை சரி செய்ய அந்த மரமே தன்னை உருக்கி பிசினை ஊற்றி நிறைத்து விட முயல்கிறது.

கடலில் மூச்சடக்கி மூழ்குபவனுக்கு ஊசி கிடைக்காவிட்டாலும் நன் முத்துக்கள் கிடைத்துவிட்டனவே!

வெட்டிய மரத்தை துளிர்க்கச் செய்ய நீர் ஊற்றினால் வேர்கள் வேறு பக்கம் திரும்பி செல்கிறது!

நீர் வேரை நேர் செய்யும்!

அம்மாடியோவ்... எத்தகைய வாதம்... அடேங்கப்பா... மெரசல் ஆயிட்டேன்பா.. ஒரு வார்த்தை சொன்னீங்க.
"குந்தியின் மகனாய்ப் பிறந்தது கர்ணன் செய்த பாவம்..
விக்னேஸ்வரனின் மகளாய் பிறந்த மிளிரின் பாவக்கணக்கு." அருமை.. இதை நா கூட யோசிக்கலப்பா.. அந்தளவு ஆள்மாவா கதைக்குள்ள போய் இருக்கீங்க.. இல்லேன்னா இப்படி சிந்திக்க முடிந்திருக்காது.
"தகப்பன் பெயர் தெரியாமல்,
பிறந்தவுடன் தாயின் சுகம் அறியாமல்,
இருட்டில் மலர்ந்த அல்லி அவள்.
அவளுக்குத் தருவது அந்த காந்திமதிக்கு தருவது போல் அல்லவா?
பச்சை மரத்தில் ஆணி அடித்து விட்டாயிற்று.
விளைந்த குழியை சரி செய்ய அந்த மரமே தன்னை உருக்கி பிசினை ஊற்றி நிறைத்து விட முயல்கிறது." மெய் சிலிர்த்துபோனேன் இதை படித்ததும்...
ஒவ்வொரு சொல்லும் அழுத்தம், ஆழம் அழகு... பேச்சு வரலப்பா. மிக மிக மிக நன்றி மீனா.

:love::love::love::love:
 
Top