Renugadevi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மை டியர் ஃப்ரெண்ட்ஸ் வணக்கம், நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்
மனதோடுதான் நான் பேசுவேன் - அத்தியாயம் 7
' அடி உன்னால எவ்வளவு அடிக்க முடியுமோ அடி, உன்னை காயப்படுத்த எவ்ளோ அடியையும் தாங்கிக்குவேன்'
" நீ எத்தனைதடவ அடிச்சாலும் நான்
அப்படிதான் சொல்லுவேன் உன்னால என்னபண்ண முடியுமோ பண்ணிக்கோ" சீற்றத்துடன் சீறினாள் அந்த பாவை
அவள் முகத்தை சில நொடிகள் கூர்ந்து பார்த்தவன், ரூமைவிட்டு வெளியேறிவிட்டான்
அவன் வெளியேறி பத்து நிமிடங்களுக்குப் பிறகு ராஜியின் தாய் சித்ரா உள்ளே வந்தாள்
மகளின் வதங்கிய தோற்றம் கண்டு மனம் பற்றி எரியத்தான் செய்தது பெற்றவளாயிற்றே
டிபன் சாப்பிட ராஜியையும் சங்கரையும் அழைத்துவர மாடிக்கு வந்தவள் , ராஜி பேசியதும், சங்கர் அவளை அடிப்பதையும், கண்டு திகைத்து நின்றுவிட்டாள்
ரூமை விட்டு வெளியே வந்தவன் சித்ராவை கண்டவுடன் ஒரு நொடி சங்கடபட்டான் , பின் அமைதியாக அவளை கடக்க முயல
"நில்லுப்பா , உங்களுக்குள்ள என்ன சண்டைனு நான்
கேட்கமாட்டேன் , ஒரே நாள்ல அவ வாழ்க்கையே திசைமாறி போயிடுச்சு , இந்த நேரத்துல அவகிட்ட நீ கோபமா நடந்துகிட்டா அவளும் அப்படித்தான் துடுக்குத்தனமா பேசுவா , அது நமக்கு கோபம் வரும் தேவையில்லாத சண்டையில போய் முடியும் , இந்த பதினைந்து நாளைக்கு அவபோக்குல
விட்டுருப்பா, துடுக்குத்தனமாக பேசினாலும் ,குழந்தை தனமா இருப்பா கண்டிச்சுபேசு, கைநீட்டாதப்பா, ஒரே பொண்ணு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம் "
சித்ரா அவன் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்கவும் அவனுக்கே,தவறு செய்துவிட்ட உணர்வு ஒரு மாதிரி ஆகிவிட்டது
அவனின் இன்னொரு மனமோ 'இது சும்மா ட்ரைலர்தான் , மெயின் பிக்சர் இன்னும் ரொம்ப மோசமா இருக்கும் மனதில்
கூறிக்கொண்டான் '
"அவ போக்குல விட்டுட்டு பேசாம இருந்தா நடந்ததையே
நினைச்சுகிட்டு இருப்பா, இனி அவளோட வாழ்க்கை என்னோடதான் - என் வாழ்க்கை அவளோடதான், அத அவளுக்கு புரிய வைக்கணும் அத்தை அதனாலதான் அவள கோயிலுக்கு கூட்டிட்டு போலாம்னு வந்தேன் , இனி எல்லாமே அவளுக்கு நான்தான், இப்ப நடந்ததை நினைச்சு வருத்தப்படாதீங்க", நடந்தவற்றை சுருக்கமாக கூறி மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு,,,,
"அவளை கெளப்பி கூட்டிட்டு வாங்கத்தை, நான் வீட்டுக்கு போயிட்டு வந்தர்றேன் "
மனநிம்மதி பெற்றவளாக மகளின் ரூமிற்கு வந்தாள்
சித்ராவை கண்டதும்
"அம்மா ,,,,,,,"
அழும்மகளை கண்டதும் ஓடி வந்து அணைத்துக்கொண்டாள் சித்ரா, அதுதானே தாய்மனம், மகள் இருக்கும் நிலையில் அவளுக்கு ஆறுதல் கூறுவதா, இல்லை கண்டிப்பதா என்று குழம்பி நின்றாள்
சங்கரின் கைவண்ணம் ராஜியின் கண்ணத்தில் பளிச் பளிச்சென மின்னியது,
"முரட்டு பய என் பிள்ளையை போட்டு எப்புடி அடிச்சிருக்கான் பாரு"
"வலிக்குதும்மா,,,,,"
"வினைய நீயே தேடிகிட்ட உங்க அப்பா என்ன சொன்னாரோ அதைத்தான் நானும் சொல்றேன் இனி பேசி எதுவும் ஆகப்போறது இல்ல, அவன் தான் உனக்குனு எழுதியிருக்கு அவனுக்கு ஏத்த மாதிரி நீ உன்ன மாத்திக்க அதுதான் உனக்கும் நல்லது உன் வாழ்க்கைக்கும் நல்லது, நம்ம குடும்பத்துக்கும் நல்லது"
"அவன் எனக்கு வேண்டாம், அவனோட நான்
வாழமாட்டேன் அதுக்கு பதிலா எனக்கு விஷத்தை வாங்கி கொடு, நிம்மதியா போயர்றேன் உனக்கும் உன் புருஷனுக்கும் , அப்புறம் எந்த பிரச்சனையும் இருக்காது"
இப்போது ராஜியிடம் எதையும் பேசி புரிய வைக்க முடியாது என்பதை உணர்ந்தவள்,
அவள்பீரோவை திறந்து ரமேஷ் வீட்டில் அவளுக்கு எடுத்த நிச்சயபுடவை, மோதிரம், செயின் எல்லாத்தையும் எடுத்து டேபிள் மீது வைத்தாள்
"அந்த பையன் உனக்கு வேற எதுவும் வாங்கி கொடுத்தானா, வீட்டுக்கு வரும்போது
ரிங் வாங்கிட்டு வந்தானே அது எங்க "
அதிர்ச்சியுடன் தாயை பார்த்தவள்
"நான் என்ன சொல்றேன் நீ என்னம்மா பண்ற " விழிகள் சிவக்க கத்தினாள்
"அப்புறம் என்னடி பண்ணசொல்ற, ஒன்னு சொல்புத்தி இருக்கணும் இல்லையா, சுயபுத்தி இருக்கணும் உனக்கு ரெண்டுமே இல்ல, நீ சாகுறதுக்கா பெத்து இத்தனை வருஷம் உன்ன கண்ணுக்குள்ள வச்சு வளத்தோம் , கல்யாணம் எப்படி வேணாலும் நடந்து இருக்கலாம் ஆனால் அத நல்லபடியா அமச்சுகுறதும், நரகமாக்கிறதும் உன் கையிலதான் இருக்கு புரியுதா"
"அம்மா வேண்டாம் இதுக்கு மேல ஏன்
வாயகிளறின என்ன பேசுவேன் எனக்கே தெரியாது பேசாம போய்டு"
"நீயா பட்டு திருந்தனும்னு இருக்கு, சரி அந்த மோதிரத்தை குடு"
" அது என்கிட்ட இப்ப இல்லமா , கல்யாண மண்டபத்துல நடந்த சண்டைல எத எங்க போட்டேன் கூட தெரியல"
ராஜியை அதற்குமேல் கட்டாயப்படுத்தி கேட்க முடியவில்லை சித்தராவாள்,
" சங்கர் வீட்டுல குலதெய்வம் கோவிலுக்கு போகனும் சொல்லிருக்காங்க, கெளம்பிவாடா",
மகளின் தலையை வருடியவாறு கூறியவளுக்கு கண்கள் நீரை சொரிந்தது
"பணிஞ்சு போனவங்க யாரும் கெட்டுப் போனதில்லை, அம்மா உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன், தப்போ சரியோ கல்யாணம் நடந்துருச்சு ,உனக்கு அவன்தான்னு ஆகிப்போச்சு புரிஞ்சிக்க ராஜிமா, நீ சொன்னத கேட்டப்ப எனக்கே கோபம் வந்துச்சு, நடந்தத உன்னால இப்ப ஏத்துக்க முடியாதுதான், இனி இதுதான் நம்ம வாழ்க்கைனு புரிஞ்சுகிட்டு வாழ ஆரம்பிச்சுடினா, அப்பறம் எந்த பிரச்சினையும் இல்லடா"
தாய் கூறுவது சரி என்று புத்திக்கு உறைத்தாலும் மனது ஏற்க மறுத்தது அமைதியாக கண்களை
மூடி படுத்துக்கொண்டாள்
கிளம்பி வரட்டும் என்று நினைத்தபடி சித்ரா கீழே வந்து விட்டாள் , அங்கே சங்கர், தன் மாமனார்களிடம் செக்கை நீட்டிக்கொண்டிருந்தான்
"எதுக்கு மாப்ள இது, நாங்க குடுத்துக்குறோம் "
"மத்த பொருளை எப்படி குடுப்பீங்களா அது உங்க விருப்பம் ஆனால் நிச்சயம், முகூர்த்த புடவை இரண்டுக்கும் எவ்வளவு பணம் சொல்லுங்க"
" சொன்னா கேக்கமாட்டீங்க, சரி முகூர்த்தப் புடவைக்கு உள்ள பணத்தை மட்டும் நீங்க குடுங்க, நிச்சயப்புடவைக்கு உள்ள பணத்தை நாங்க கொடுத்துக்குறோம்"
சங்கர் மறுக்கவே விடாப்பிடியாக நின்றுவிட்டார் நடராஜன் ஆகையால், முகூர்த்த புடவைக்கு உள்ள பணத்தை மட்டும் செக்கில் எழுதிக் கொடுத்துவிட்டு
" கெளம்புங்க மாமா வீட்டுக்கு போய் கார் எடுத்துட்டு வந்தர்றேன் "
" நடராஜனும் ஆனந்தனும் அர்த்தத்துடன் பார்வையை பரிமாறிக் கொண்டனர் "
***************************************************
மனதோடுதான் நான் பேசுவேன் அத்தியாயம்-8
"என்னத்தா பொங்கல் வச்சாச்சா இல்லையா நேரம் ஆயிட்டே இருக்கு "
"இதோ முடிஞ்சுடுச்சுப்பா அவ்ளோதான்" பாலா தந்தையிடம்
"நடுவுல்லவன் எங்கே"
"அண்ணன் குளிச்சுட்டு இருக்குப்பா இப்ப வந்துடும்"
"சீக்கிரம் வர சொல்லு "
பட்டுவேட்டி சட்டை, அடர்த்தியான மீசை நெற்றியில் திருநீறு, நீண்ட கழுத்தில் முறுக்கு செயின், மணிக்கட்டில் பிரேஸ்லெட் என்று சுற்றி இருப்போரின் கவனத்தை தன் புறம் திரும்பிப் பார்க்க வைக்கும் கம்பீரத்துடன் வந்து நின்றான் சங்கர்
தன் மகனின் கம்பீரத்தை பார்த்து மீசையை முறுக்கி விட்டார் முத்துச்சாமி
" ராஜி எங்கப்பா"
"இதோ வந்துடாங்க"
பாலா திரும்பிய திசையில் அனைவரும் தலையை திருப்ப, பச்சை வண்ண பட்டு உடுத்தி அதற்கு ஏற்றார்போல் காதணியும் கழுத்தணியும் பூட்டி , முகத்தில் முக்கோணப் பொட்டு வைத்து அதற்கு மேலே திருநீரும் கீழே அரக்கு நிற குங்குமம் அவளின் படர்ந்த முகத்திற்கு தனி தேஜஸ்சை கொடுத்தது 'மகாலட்சுமி மாதிரி இருக்கு பொண்ணு அதான் கல்யாணமேடை வரைக்கும் போய் புடிச்சுருக்கான் ' மனதிற்குள் நினைத்து கொண்டார் முத்துச்சாமி
பார்வையால் ராஜியை விழுங்கிக்கொண்டிருந்த சங்கரின் இடுங்கிய கண்களுக்கு, அவள் கன்னத்தில் தன் விரல்களின் அடையாளம் லேசாக தெரிந்தது, குற்ற உணர்வுக்கு பதில் அவள் பேசிய வார்த்தைகள் காதில் எதிரொளிக்க அவனின் மனமும் முகமும் பாறையாக ஆரம்பித்தது
'திமிராவாபேசுற , இன்னும் ரெண்டு சேத்து வச்சிருக்கணும், இருக்கட்டும் சாயந்தரம் வச்சுக்கிறேன் கச்சேரி'
நினைத்ததை காட்டும் பளிங்கு முகம் கொண்டவளுக்கு, அவளின் வெற்று பார்வையும் எதையோ, இழந்து விட்டது போன்ற சோக முகமும் அவன் பொறுமையை ஆட்டித்தான் பார்த்தது, சீற்றம் ஏறிக்கொண்டே போக சுற்றுப்புறத்தை உணர்ந்து தன் நிலைக்கு வர உள்ளங்கையை இறுக மூடிக்கொண்டான்
முத்துச்சாமி, பார்வதி, சங்கர் , பாலாஜி ஒருபுறம் நிற்க,
ஆனந்தன்,சித்திரா, கலாவதி மூவரும் மறுபுறம் நின்றனர்,
மஞ்சள் துணியில் காசு முடிந்து, சங்கரின் கையில் ஆனந்தனையும் ராஜியின் கையில் முத்துசாமியும் கட்டச் சொல்லிவிட்டு, மாலையை எடுத்து பொண்ணு மாப்பிள்ளை கையில் கொடுக்க சொன்னார் பூசாரி ஆனந்தனிடம் மாலையை வாங்கி,
ராஜியின் கழுத்தில் மாலையிட்டான் சங்கர்,
முத்துசாமியிடம் மாலையை வாங்கிய ராஜி சில வினாடிகள் அப்படியே நின்று விட்டாள்
"என்ன யோசனை பண்ணிட்டு இருக்க மாலைய போடு "
சித்ரா மகளின் தோலை இடித்தாள், "மாலைய போடுமா" என்ற ஆனந்தனை உயிர் இல்லாத பார்வை பார்த்துவிட்டு சங்கரின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் நடுங்கும் கரங்களால் அவன் கழுத்தில் மாலையிட்டாள் ராஜி,,,,,,,,,,,,,,,,
"ஹலோ "-சிவா
"ஹலோ"-ஆர்த்தி
"நல்லா இருக்கியா ஆர்த்தி"
"நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க ரொம்ப நாளா ஆள காணோம் "
"வொர்க் அதிகமா இருந்தது அதான் பேச முடியல, அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்க"
"நான் கொஞ்சம் வெளியில இருக்கேன் வீட்ல போய்டு பேசட்டுமா "
"எங்க இருக்க கடைவீதி வந்தேன் "
"வீட்டுக்கு போய்ட்டு மெசேஜ் பண்ணு "
"ஓகேனா"
இரண்டு மணி நேரம் ஆகியும் அவளிடமிருந்து எந்த பதிலும் வராததால் அவனே திரும்ப கூப்பிட்டான், ஆனால் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு ரூமிலேயே வைத்துவிட்டாள்
பத்துமணிக்கு செல்லை எடுத்து பார்த்த பின்புதான் அவளுக்கு ஞாபகம் வந்தது ஐயையோ திட்டுவானே, செல்ல சைலன்ட்ல போட்டு ரூம்ல வச்சிட்டு போயிட்டேன் மெசேஜை தட்டிவிட்டாள்
"ஓகே நாளைக்கு கால் பண்றேன் இப்ப என்ன பண்ற சாப்டியா "என்ற மெசேஜ் அவனிடம் இருந்து அடுத்த நொடியில் வந்தது
" சாப்பிட்டேன் நீங்க எப்படி இருக்கீங்கனா ரொம்ப நாளாச்சு பேசி "
"வொர்க் ரொம்ப அதிகமா இருந்தது அதான் பேச முடியல கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன் "
இப்படியே இவர்களது உரையாடல் இரவு பன்னிரண்டு மணிவரை தொடர்ந்தது
"ஒரு மணி நேரமா உனக்கு கால் பண்றேன் பிஸி பிஸி னு வருது யார்ட்ட பேசிட்டிருந்த" எரிந்துவிழுந்தான் அவளிடம்
என்னோட ரிலேஷன்ட்ட பேசிட்டு இருந்தேன்,
யாரு?
" ராம், என் அத்தை பையன் துபாய்ல இருந்து கால் பண்ணான் சின்ன வயசுல இருந்தே நானும் அவனும் பிரண்ட்ஸ், அம்மா வேற பேசிட்டு இருந்தாங்க அதான் ரொம்ப நேரம் ஆயிடுச்சு ,அவன் பையனுக்கு வேற முடியலைன்னு சொல்லிட்டு இருந்தான் போய் பாக்கணும் அவள் பாட்டிற்கு சொல்லிக்கொண்டே போக ,,,,
"யார் பையன் "
'ஐயோ கடவுளே இவனுக்கு புரியவைக்க கொள்ளையும் '
"ராமோட பையன் தான் "
"என்ன படிக்கிறான் "
"ரெண்டு பசங்க அவனுக்கு பெரிய பையன் எயித்தோ நயன்தோ படிக்கிறான் , சின்ன பையன் சிக்த்து படிக்கிறான் "
" ஓஓஓஓஓஓஓஓஓ"
"ராமுக்கும் எனக்கும் பத்தொன்பது வயசு வித்தியாசம் இருக்கு , சின்ன வயசுல என்ன தூக்கி வளர்த்தவன், பிரண்ட்ஸ் மாதிரிதான் பேசிக்குவோம் சின்ன வயசிலிருந்தே டா போட்டு பேசி பழகிடுச்சு , நான் எயித்து படிச்சப்ப தான் அவனுக்கு மேரேஜ் ஆச்சு, என்னையும் பெரிய மனுஷி மாதிரி பொண்ணு பாக்க வேற கூட்டிட்டு போய்டுவாங்க , இவனுக்கு எவ்வளவு பொண்ணும் பாத்தோம் தெரியுமா மேரேஜ் முடியறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு அவள் சொல்லிக் கொண்டே போக ,,,,,,,,,,,,"
"என் காது வலிக்குதுடி போதும்"
"என்னது டி யா"
"ஆமாண்டி இப்ப என்னடி அதுக்கு "
"நீங்க என்ன ஓவரா டி சொல்றீங்கன்னா"
"சொன்னா என்னடி"
" நோ நீங்க என்ன டி சொல்லக்கூடாது"
" அப்படிதாண்டி சொல்லுவேன் "
"அப்ப நானும் உங்கள டா சொல்லிடுவேன்"
" சொல்லிக்கோ "
"என்ன சொல்லிக்கோ, பேர் சொல்லி கூப்பிடதுக்கே திட்டினவர்தானே நீங்க"
"முன்னாடியே உன்கிட்ட இதுக்கான ஆன்சர் சொல்லிட்டேன் ஃபர்ஸ்ட் நம்ம க்ளோசா பேசல, இப்போ க்ளோஸ் ஆகிட்டோம் ,
இப்ப நீ போடான்னு சொன்னாலும் எனக்கு கோவம் வராது புரியுதா "
' அப்படியா'
"சரிடா தூங்குமூஞ்சி , போடா போய் தூங்குடா தூங்கு மூஞ்சி "
" என்னது தூங்குமூஞ்சியா"
"ஆமா தூங்கு மூஞ்சி எப்ப பாரு நைட்டே பேசுறது , டெய்லி நான் தானே குட் மார்னிங் சொல்றேன், என்னைக்காவது ஒரு நாள் நீங்க சொல்லிருக்கீங்களா தூங்கு மூஞ்சி"
விடியற் காலை 6 மணியளவில் ஆர்த்தியின் போன் அலறியது இந்த நேரத்தில் யார் என்று பதறி அடித்துக் கொண்டு எழுந்து போனை பார்த்தவளுக்கு அதிர்ச்சி என்ன இந்த நேரத்துல கூப்புறான் யோசனையுடனே
"ஹலோ என்ன னா இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க "
" நீதானே என்னைக்காவது காலையில குட்மார்னிங் சொல்லி இருக்கீங்களான்னு கேட்ட , அதான் கால் பண்ணேன் "
"அட லூசு , அதுக்குன்னு இப்படியா நான் பயந்திட்டேன் தெரியுமா "
"தூங்கமூஞ்சி என்ன சொல்லிட்டு நீ இன்னும் தூங்கிட்டு இருக்கியா நீ தான்டி தூங்கமூஞ்சி "
"நான் இல்ல நீங்கதான் தூங்குமூஞ்சி"
" இல்ல நீ தாண்டி தூங்கமூஞ்சி"
"நீதாண்டா தூங்குமூஞ்சி போடா சரி சரி போன வை டா " சட்டென்று போனை கட் பண்ணிவிட்டாள்
"ஏன்டி கட் பண்ண"? (மெசேஜ்ஜில்)
"காலை போன் பேசி, அம்மா யாருன்னு கேட்டு , சிவான்னா பேசுதுன்னு சொல்லி, என்ன இந்த நேரத்துல பண்ணிருக்கான் அம்மா கேட்க, குட்மார்னிங் சொல்ல கூப்புடுச்சுமா சொன்னா நீங்கதான் திட்டுவாங்குவீங்க பரவாயில்லையா"
" அட அறிவு கெட்டநாயே"
நாயே என்றதும் ஆர்த்திக்கு கோபம் வந்நுவிட்டது
"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் " என்று அனுப்பிவிட்டு எரிச்சலோடு செல்லை சார்ஜில் போட்டுவிட்டு திரும்ப படுத்துக்கொண்டாள்
'. இவன நானா கால்பண்ண சொன்னேன், நல்லா பேசிட்டு இருக்கப்பவே ஏதாவுது சொல்லி டென்ஸன் பண்றான் இதே இவனுக்கு பொழப்பாபோச்சு '
மனதோடு மீண்டும் பேசுவோம்,,,,,,
-
மனதோடுதான் நான் பேசுவேன் - அத்தியாயம் 7
' அடி உன்னால எவ்வளவு அடிக்க முடியுமோ அடி, உன்னை காயப்படுத்த எவ்ளோ அடியையும் தாங்கிக்குவேன்'
" நீ எத்தனைதடவ அடிச்சாலும் நான்
அப்படிதான் சொல்லுவேன் உன்னால என்னபண்ண முடியுமோ பண்ணிக்கோ" சீற்றத்துடன் சீறினாள் அந்த பாவை
அவள் முகத்தை சில நொடிகள் கூர்ந்து பார்த்தவன், ரூமைவிட்டு வெளியேறிவிட்டான்
அவன் வெளியேறி பத்து நிமிடங்களுக்குப் பிறகு ராஜியின் தாய் சித்ரா உள்ளே வந்தாள்
மகளின் வதங்கிய தோற்றம் கண்டு மனம் பற்றி எரியத்தான் செய்தது பெற்றவளாயிற்றே
டிபன் சாப்பிட ராஜியையும் சங்கரையும் அழைத்துவர மாடிக்கு வந்தவள் , ராஜி பேசியதும், சங்கர் அவளை அடிப்பதையும், கண்டு திகைத்து நின்றுவிட்டாள்
ரூமை விட்டு வெளியே வந்தவன் சித்ராவை கண்டவுடன் ஒரு நொடி சங்கடபட்டான் , பின் அமைதியாக அவளை கடக்க முயல
"நில்லுப்பா , உங்களுக்குள்ள என்ன சண்டைனு நான்
கேட்கமாட்டேன் , ஒரே நாள்ல அவ வாழ்க்கையே திசைமாறி போயிடுச்சு , இந்த நேரத்துல அவகிட்ட நீ கோபமா நடந்துகிட்டா அவளும் அப்படித்தான் துடுக்குத்தனமா பேசுவா , அது நமக்கு கோபம் வரும் தேவையில்லாத சண்டையில போய் முடியும் , இந்த பதினைந்து நாளைக்கு அவபோக்குல
விட்டுருப்பா, துடுக்குத்தனமாக பேசினாலும் ,குழந்தை தனமா இருப்பா கண்டிச்சுபேசு, கைநீட்டாதப்பா, ஒரே பொண்ணு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம் "
சித்ரா அவன் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்கவும் அவனுக்கே,தவறு செய்துவிட்ட உணர்வு ஒரு மாதிரி ஆகிவிட்டது
அவனின் இன்னொரு மனமோ 'இது சும்மா ட்ரைலர்தான் , மெயின் பிக்சர் இன்னும் ரொம்ப மோசமா இருக்கும் மனதில்
கூறிக்கொண்டான் '
"அவ போக்குல விட்டுட்டு பேசாம இருந்தா நடந்ததையே
நினைச்சுகிட்டு இருப்பா, இனி அவளோட வாழ்க்கை என்னோடதான் - என் வாழ்க்கை அவளோடதான், அத அவளுக்கு புரிய வைக்கணும் அத்தை அதனாலதான் அவள கோயிலுக்கு கூட்டிட்டு போலாம்னு வந்தேன் , இனி எல்லாமே அவளுக்கு நான்தான், இப்ப நடந்ததை நினைச்சு வருத்தப்படாதீங்க", நடந்தவற்றை சுருக்கமாக கூறி மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு,,,,
"அவளை கெளப்பி கூட்டிட்டு வாங்கத்தை, நான் வீட்டுக்கு போயிட்டு வந்தர்றேன் "
மனநிம்மதி பெற்றவளாக மகளின் ரூமிற்கு வந்தாள்
சித்ராவை கண்டதும்
"அம்மா ,,,,,,,"
அழும்மகளை கண்டதும் ஓடி வந்து அணைத்துக்கொண்டாள் சித்ரா, அதுதானே தாய்மனம், மகள் இருக்கும் நிலையில் அவளுக்கு ஆறுதல் கூறுவதா, இல்லை கண்டிப்பதா என்று குழம்பி நின்றாள்
சங்கரின் கைவண்ணம் ராஜியின் கண்ணத்தில் பளிச் பளிச்சென மின்னியது,
"முரட்டு பய என் பிள்ளையை போட்டு எப்புடி அடிச்சிருக்கான் பாரு"
"வலிக்குதும்மா,,,,,"
"வினைய நீயே தேடிகிட்ட உங்க அப்பா என்ன சொன்னாரோ அதைத்தான் நானும் சொல்றேன் இனி பேசி எதுவும் ஆகப்போறது இல்ல, அவன் தான் உனக்குனு எழுதியிருக்கு அவனுக்கு ஏத்த மாதிரி நீ உன்ன மாத்திக்க அதுதான் உனக்கும் நல்லது உன் வாழ்க்கைக்கும் நல்லது, நம்ம குடும்பத்துக்கும் நல்லது"
"அவன் எனக்கு வேண்டாம், அவனோட நான்
வாழமாட்டேன் அதுக்கு பதிலா எனக்கு விஷத்தை வாங்கி கொடு, நிம்மதியா போயர்றேன் உனக்கும் உன் புருஷனுக்கும் , அப்புறம் எந்த பிரச்சனையும் இருக்காது"
இப்போது ராஜியிடம் எதையும் பேசி புரிய வைக்க முடியாது என்பதை உணர்ந்தவள்,
அவள்பீரோவை திறந்து ரமேஷ் வீட்டில் அவளுக்கு எடுத்த நிச்சயபுடவை, மோதிரம், செயின் எல்லாத்தையும் எடுத்து டேபிள் மீது வைத்தாள்
"அந்த பையன் உனக்கு வேற எதுவும் வாங்கி கொடுத்தானா, வீட்டுக்கு வரும்போது
ரிங் வாங்கிட்டு வந்தானே அது எங்க "
அதிர்ச்சியுடன் தாயை பார்த்தவள்
"நான் என்ன சொல்றேன் நீ என்னம்மா பண்ற " விழிகள் சிவக்க கத்தினாள்
"அப்புறம் என்னடி பண்ணசொல்ற, ஒன்னு சொல்புத்தி இருக்கணும் இல்லையா, சுயபுத்தி இருக்கணும் உனக்கு ரெண்டுமே இல்ல, நீ சாகுறதுக்கா பெத்து இத்தனை வருஷம் உன்ன கண்ணுக்குள்ள வச்சு வளத்தோம் , கல்யாணம் எப்படி வேணாலும் நடந்து இருக்கலாம் ஆனால் அத நல்லபடியா அமச்சுகுறதும், நரகமாக்கிறதும் உன் கையிலதான் இருக்கு புரியுதா"
"அம்மா வேண்டாம் இதுக்கு மேல ஏன்
வாயகிளறின என்ன பேசுவேன் எனக்கே தெரியாது பேசாம போய்டு"
"நீயா பட்டு திருந்தனும்னு இருக்கு, சரி அந்த மோதிரத்தை குடு"
" அது என்கிட்ட இப்ப இல்லமா , கல்யாண மண்டபத்துல நடந்த சண்டைல எத எங்க போட்டேன் கூட தெரியல"
ராஜியை அதற்குமேல் கட்டாயப்படுத்தி கேட்க முடியவில்லை சித்தராவாள்,
" சங்கர் வீட்டுல குலதெய்வம் கோவிலுக்கு போகனும் சொல்லிருக்காங்க, கெளம்பிவாடா",
மகளின் தலையை வருடியவாறு கூறியவளுக்கு கண்கள் நீரை சொரிந்தது
"பணிஞ்சு போனவங்க யாரும் கெட்டுப் போனதில்லை, அம்மா உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன், தப்போ சரியோ கல்யாணம் நடந்துருச்சு ,உனக்கு அவன்தான்னு ஆகிப்போச்சு புரிஞ்சிக்க ராஜிமா, நீ சொன்னத கேட்டப்ப எனக்கே கோபம் வந்துச்சு, நடந்தத உன்னால இப்ப ஏத்துக்க முடியாதுதான், இனி இதுதான் நம்ம வாழ்க்கைனு புரிஞ்சுகிட்டு வாழ ஆரம்பிச்சுடினா, அப்பறம் எந்த பிரச்சினையும் இல்லடா"
தாய் கூறுவது சரி என்று புத்திக்கு உறைத்தாலும் மனது ஏற்க மறுத்தது அமைதியாக கண்களை
மூடி படுத்துக்கொண்டாள்
கிளம்பி வரட்டும் என்று நினைத்தபடி சித்ரா கீழே வந்து விட்டாள் , அங்கே சங்கர், தன் மாமனார்களிடம் செக்கை நீட்டிக்கொண்டிருந்தான்
"எதுக்கு மாப்ள இது, நாங்க குடுத்துக்குறோம் "
"மத்த பொருளை எப்படி குடுப்பீங்களா அது உங்க விருப்பம் ஆனால் நிச்சயம், முகூர்த்த புடவை இரண்டுக்கும் எவ்வளவு பணம் சொல்லுங்க"
" சொன்னா கேக்கமாட்டீங்க, சரி முகூர்த்தப் புடவைக்கு உள்ள பணத்தை மட்டும் நீங்க குடுங்க, நிச்சயப்புடவைக்கு உள்ள பணத்தை நாங்க கொடுத்துக்குறோம்"
சங்கர் மறுக்கவே விடாப்பிடியாக நின்றுவிட்டார் நடராஜன் ஆகையால், முகூர்த்த புடவைக்கு உள்ள பணத்தை மட்டும் செக்கில் எழுதிக் கொடுத்துவிட்டு
" கெளம்புங்க மாமா வீட்டுக்கு போய் கார் எடுத்துட்டு வந்தர்றேன் "
" நடராஜனும் ஆனந்தனும் அர்த்தத்துடன் பார்வையை பரிமாறிக் கொண்டனர் "
***************************************************
மனதோடுதான் நான் பேசுவேன் அத்தியாயம்-8
"என்னத்தா பொங்கல் வச்சாச்சா இல்லையா நேரம் ஆயிட்டே இருக்கு "
"இதோ முடிஞ்சுடுச்சுப்பா அவ்ளோதான்" பாலா தந்தையிடம்
"நடுவுல்லவன் எங்கே"
"அண்ணன் குளிச்சுட்டு இருக்குப்பா இப்ப வந்துடும்"
"சீக்கிரம் வர சொல்லு "
பட்டுவேட்டி சட்டை, அடர்த்தியான மீசை நெற்றியில் திருநீறு, நீண்ட கழுத்தில் முறுக்கு செயின், மணிக்கட்டில் பிரேஸ்லெட் என்று சுற்றி இருப்போரின் கவனத்தை தன் புறம் திரும்பிப் பார்க்க வைக்கும் கம்பீரத்துடன் வந்து நின்றான் சங்கர்
தன் மகனின் கம்பீரத்தை பார்த்து மீசையை முறுக்கி விட்டார் முத்துச்சாமி
" ராஜி எங்கப்பா"
"இதோ வந்துடாங்க"
பாலா திரும்பிய திசையில் அனைவரும் தலையை திருப்ப, பச்சை வண்ண பட்டு உடுத்தி அதற்கு ஏற்றார்போல் காதணியும் கழுத்தணியும் பூட்டி , முகத்தில் முக்கோணப் பொட்டு வைத்து அதற்கு மேலே திருநீரும் கீழே அரக்கு நிற குங்குமம் அவளின் படர்ந்த முகத்திற்கு தனி தேஜஸ்சை கொடுத்தது 'மகாலட்சுமி மாதிரி இருக்கு பொண்ணு அதான் கல்யாணமேடை வரைக்கும் போய் புடிச்சுருக்கான் ' மனதிற்குள் நினைத்து கொண்டார் முத்துச்சாமி
பார்வையால் ராஜியை விழுங்கிக்கொண்டிருந்த சங்கரின் இடுங்கிய கண்களுக்கு, அவள் கன்னத்தில் தன் விரல்களின் அடையாளம் லேசாக தெரிந்தது, குற்ற உணர்வுக்கு பதில் அவள் பேசிய வார்த்தைகள் காதில் எதிரொளிக்க அவனின் மனமும் முகமும் பாறையாக ஆரம்பித்தது
'திமிராவாபேசுற , இன்னும் ரெண்டு சேத்து வச்சிருக்கணும், இருக்கட்டும் சாயந்தரம் வச்சுக்கிறேன் கச்சேரி'
நினைத்ததை காட்டும் பளிங்கு முகம் கொண்டவளுக்கு, அவளின் வெற்று பார்வையும் எதையோ, இழந்து விட்டது போன்ற சோக முகமும் அவன் பொறுமையை ஆட்டித்தான் பார்த்தது, சீற்றம் ஏறிக்கொண்டே போக சுற்றுப்புறத்தை உணர்ந்து தன் நிலைக்கு வர உள்ளங்கையை இறுக மூடிக்கொண்டான்
முத்துச்சாமி, பார்வதி, சங்கர் , பாலாஜி ஒருபுறம் நிற்க,
ஆனந்தன்,சித்திரா, கலாவதி மூவரும் மறுபுறம் நின்றனர்,
மஞ்சள் துணியில் காசு முடிந்து, சங்கரின் கையில் ஆனந்தனையும் ராஜியின் கையில் முத்துசாமியும் கட்டச் சொல்லிவிட்டு, மாலையை எடுத்து பொண்ணு மாப்பிள்ளை கையில் கொடுக்க சொன்னார் பூசாரி ஆனந்தனிடம் மாலையை வாங்கி,
ராஜியின் கழுத்தில் மாலையிட்டான் சங்கர்,
முத்துசாமியிடம் மாலையை வாங்கிய ராஜி சில வினாடிகள் அப்படியே நின்று விட்டாள்
"என்ன யோசனை பண்ணிட்டு இருக்க மாலைய போடு "
சித்ரா மகளின் தோலை இடித்தாள், "மாலைய போடுமா" என்ற ஆனந்தனை உயிர் இல்லாத பார்வை பார்த்துவிட்டு சங்கரின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் நடுங்கும் கரங்களால் அவன் கழுத்தில் மாலையிட்டாள் ராஜி,,,,,,,,,,,,,,,,
"ஹலோ "-சிவா
"ஹலோ"-ஆர்த்தி
"நல்லா இருக்கியா ஆர்த்தி"
"நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க ரொம்ப நாளா ஆள காணோம் "
"வொர்க் அதிகமா இருந்தது அதான் பேச முடியல, அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்க"
"நான் கொஞ்சம் வெளியில இருக்கேன் வீட்ல போய்டு பேசட்டுமா "
"எங்க இருக்க கடைவீதி வந்தேன் "
"வீட்டுக்கு போய்ட்டு மெசேஜ் பண்ணு "
"ஓகேனா"
இரண்டு மணி நேரம் ஆகியும் அவளிடமிருந்து எந்த பதிலும் வராததால் அவனே திரும்ப கூப்பிட்டான், ஆனால் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு ரூமிலேயே வைத்துவிட்டாள்
பத்துமணிக்கு செல்லை எடுத்து பார்த்த பின்புதான் அவளுக்கு ஞாபகம் வந்தது ஐயையோ திட்டுவானே, செல்ல சைலன்ட்ல போட்டு ரூம்ல வச்சிட்டு போயிட்டேன் மெசேஜை தட்டிவிட்டாள்
"ஓகே நாளைக்கு கால் பண்றேன் இப்ப என்ன பண்ற சாப்டியா "என்ற மெசேஜ் அவனிடம் இருந்து அடுத்த நொடியில் வந்தது
" சாப்பிட்டேன் நீங்க எப்படி இருக்கீங்கனா ரொம்ப நாளாச்சு பேசி "
"வொர்க் ரொம்ப அதிகமா இருந்தது அதான் பேச முடியல கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன் "
இப்படியே இவர்களது உரையாடல் இரவு பன்னிரண்டு மணிவரை தொடர்ந்தது
"ஒரு மணி நேரமா உனக்கு கால் பண்றேன் பிஸி பிஸி னு வருது யார்ட்ட பேசிட்டிருந்த" எரிந்துவிழுந்தான் அவளிடம்
என்னோட ரிலேஷன்ட்ட பேசிட்டு இருந்தேன்,
யாரு?
" ராம், என் அத்தை பையன் துபாய்ல இருந்து கால் பண்ணான் சின்ன வயசுல இருந்தே நானும் அவனும் பிரண்ட்ஸ், அம்மா வேற பேசிட்டு இருந்தாங்க அதான் ரொம்ப நேரம் ஆயிடுச்சு ,அவன் பையனுக்கு வேற முடியலைன்னு சொல்லிட்டு இருந்தான் போய் பாக்கணும் அவள் பாட்டிற்கு சொல்லிக்கொண்டே போக ,,,,
"யார் பையன் "
'ஐயோ கடவுளே இவனுக்கு புரியவைக்க கொள்ளையும் '
"ராமோட பையன் தான் "
"என்ன படிக்கிறான் "
"ரெண்டு பசங்க அவனுக்கு பெரிய பையன் எயித்தோ நயன்தோ படிக்கிறான் , சின்ன பையன் சிக்த்து படிக்கிறான் "
" ஓஓஓஓஓஓஓஓஓ"
"ராமுக்கும் எனக்கும் பத்தொன்பது வயசு வித்தியாசம் இருக்கு , சின்ன வயசுல என்ன தூக்கி வளர்த்தவன், பிரண்ட்ஸ் மாதிரிதான் பேசிக்குவோம் சின்ன வயசிலிருந்தே டா போட்டு பேசி பழகிடுச்சு , நான் எயித்து படிச்சப்ப தான் அவனுக்கு மேரேஜ் ஆச்சு, என்னையும் பெரிய மனுஷி மாதிரி பொண்ணு பாக்க வேற கூட்டிட்டு போய்டுவாங்க , இவனுக்கு எவ்வளவு பொண்ணும் பாத்தோம் தெரியுமா மேரேஜ் முடியறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு அவள் சொல்லிக் கொண்டே போக ,,,,,,,,,,,,"
"என் காது வலிக்குதுடி போதும்"
"என்னது டி யா"
"ஆமாண்டி இப்ப என்னடி அதுக்கு "
"நீங்க என்ன ஓவரா டி சொல்றீங்கன்னா"
"சொன்னா என்னடி"
" நோ நீங்க என்ன டி சொல்லக்கூடாது"
" அப்படிதாண்டி சொல்லுவேன் "
"அப்ப நானும் உங்கள டா சொல்லிடுவேன்"
" சொல்லிக்கோ "
"என்ன சொல்லிக்கோ, பேர் சொல்லி கூப்பிடதுக்கே திட்டினவர்தானே நீங்க"
"முன்னாடியே உன்கிட்ட இதுக்கான ஆன்சர் சொல்லிட்டேன் ஃபர்ஸ்ட் நம்ம க்ளோசா பேசல, இப்போ க்ளோஸ் ஆகிட்டோம் ,
இப்ப நீ போடான்னு சொன்னாலும் எனக்கு கோவம் வராது புரியுதா "
' அப்படியா'
"சரிடா தூங்குமூஞ்சி , போடா போய் தூங்குடா தூங்கு மூஞ்சி "
" என்னது தூங்குமூஞ்சியா"
"ஆமா தூங்கு மூஞ்சி எப்ப பாரு நைட்டே பேசுறது , டெய்லி நான் தானே குட் மார்னிங் சொல்றேன், என்னைக்காவது ஒரு நாள் நீங்க சொல்லிருக்கீங்களா தூங்கு மூஞ்சி"
விடியற் காலை 6 மணியளவில் ஆர்த்தியின் போன் அலறியது இந்த நேரத்தில் யார் என்று பதறி அடித்துக் கொண்டு எழுந்து போனை பார்த்தவளுக்கு அதிர்ச்சி என்ன இந்த நேரத்துல கூப்புறான் யோசனையுடனே
"ஹலோ என்ன னா இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க "
" நீதானே என்னைக்காவது காலையில குட்மார்னிங் சொல்லி இருக்கீங்களான்னு கேட்ட , அதான் கால் பண்ணேன் "
"அட லூசு , அதுக்குன்னு இப்படியா நான் பயந்திட்டேன் தெரியுமா "
"தூங்கமூஞ்சி என்ன சொல்லிட்டு நீ இன்னும் தூங்கிட்டு இருக்கியா நீ தான்டி தூங்கமூஞ்சி "
"நான் இல்ல நீங்கதான் தூங்குமூஞ்சி"
" இல்ல நீ தாண்டி தூங்கமூஞ்சி"
"நீதாண்டா தூங்குமூஞ்சி போடா சரி சரி போன வை டா " சட்டென்று போனை கட் பண்ணிவிட்டாள்
"ஏன்டி கட் பண்ண"? (மெசேஜ்ஜில்)
"காலை போன் பேசி, அம்மா யாருன்னு கேட்டு , சிவான்னா பேசுதுன்னு சொல்லி, என்ன இந்த நேரத்துல பண்ணிருக்கான் அம்மா கேட்க, குட்மார்னிங் சொல்ல கூப்புடுச்சுமா சொன்னா நீங்கதான் திட்டுவாங்குவீங்க பரவாயில்லையா"
" அட அறிவு கெட்டநாயே"
நாயே என்றதும் ஆர்த்திக்கு கோபம் வந்நுவிட்டது
"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் " என்று அனுப்பிவிட்டு எரிச்சலோடு செல்லை சார்ஜில் போட்டுவிட்டு திரும்ப படுத்துக்கொண்டாள்
'. இவன நானா கால்பண்ண சொன்னேன், நல்லா பேசிட்டு இருக்கப்பவே ஏதாவுது சொல்லி டென்ஸன் பண்றான் இதே இவனுக்கு பொழப்பாபோச்சு '
மனதோடு மீண்டும் பேசுவோம்,,,,,,
-