All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம் நான் உங்க புதிய தோழி் ரேணுகாதேவி, புதுக்கோட்டை பொண்ணு புதுசா வந்து இருக்கேன் உங்கள நம்பி, மனதோடு நான் பேசுவேன் மூலமா உங்களோட தொடர்ந்து பேச போறேன் அதுக்கு உங்களோட சப்போர்ட் வேணும் உங்க சப்போர்ட் இருந்தால்தான் next எபிசோட் என்னால் கொடுக்க முடியும் இதுல வரக்கூடிய நிறை குறைகளை மட்டும் இல்லாம உங்களோட எதிர்பார்ப்பையும் சொல்லுங்க அது படி கொடுக்க முயற்சி பண்றேன்
நன்றி
வாசக நண்பர்களின் கருத்துக்களை எதிர்ப்பார்த்து,,,,,,,,,,
என்றென்றும் நட்புடன்,
உங்கள் தோழி,
N.ரேணுகாதேவி.
கேட்டவுடன் வாய்ப்பளித்த சகோதரி திருமதி ஸ்ரீகலா அவர்களுக்கு நன்றி thanks akkkaaaaaa????
நான் எழுதுறதுறேன்னு சொன்னப்ப உன்னால முடியும் என்று சொல்லி ஊக்கப்படுத்திய என் நண்பர்களுக்கும் என் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றிகள் ???
கதைசுருக்கம் ;
மனதோடுதான் நான் பேசுவேன்
ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு மனதோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறது, அதை இருமனமும் உணர்ந்து அன்பாலும் நேசத்தாலும் ஈர்க்கப்பட வேண்டும் அன்பான அதிகாரத்திற்கு மனம் கட்டுபடும், அன்பும் நேசமும் இல்லை என்றால் அந்த உறவு முறிந்துவிடும்
இங்கே விருப்பட்ட இரு மனம் சேரும் நேரத்தில் பிரிகிறது, வேண்டாம் என்று விலகிய உறவு வன்மத்தோடு வலுக்கட்டாயமாக சேர்கிறது வன்மம் மறைந்து அன்பும் நேசமும் அங்கு மலர்கிறதா என்பதை hero - சங்கர்
heroin - ராஜேஸ்வரி (ராஜி)
இவர்களின் மனதோடு நாமும் பேசி தெரிந்துகொள்வோம் வாருங்கள்
மனதோடுதான் நான் பேசுவேன் - 1
ராஜி.... ராஜி இங்க என்னபன்ற அப்பா உன்ன கீழ தேடிகிட்டு இருக்காரு
இன்னும் ரெண்டு நாளைக்கு தேடப்போரீங்க அப்பறம் ....
இப்படிஎல்லாம் பேசாத ராஜிம்மா சித்ராவுக்கு கண்கலங்கதான் செய்தது இன்னும் ரெண்டு நாளில் மகள் திருமணம் முடிந்து வேறு வீடு செல்லப்போகிறாள் மகள் திருமண சந்தோசத்திர்கு இணையாக மகளை விட்டு பிரியும் வருத்தம் பெற்றவர்களுக்கு இருக்கதானே செய்யும்
உன் அப்பா உனக்கு பிடிக்காத எதையும் செய்யமாட்டாரு
என் அப்பா இந்த மாப்பிள்ளைய உனக்கு பிடிச்சுருக்கா இல்லையான்னு ஒரு வார்த்தை என்ன கேக்கல தெரியுமா
அந்த மனுசன் உன்கிட்ட அப்படி கேட்டுருந்தா என் வாழ்க்கை நல்லாருந்துருக்கும்டி
ஏன் இப்ப வாழ்க்கையில என்ன கொறஞ்ருச்சு கணவன் ஆனந்திடம் அக்னி பார்வையுடன் சித்ரா கேட்க
நம்ம பஞ்சாயத்துக்கு இப்ப நேரம் இல்ல ராஜிம்மா மாப்புள்ள உனக்கு போன்பண்னாரு கொஞ்சநேரம் கழிச்சு பண்னசொன்னேன் என்னனுன்னு கால் பண்ணு
அப்பா என்று கண்கலங்கியவளை நெஞ்சோடு அனைத்துக்கொண்டவர் அழாத ராஜிம்மா
இப்பதான் அழுகை எல்லாம் அப்பறம் என் வீட்டுக்கார் சாப்டாரோ
இல்லையோன்னு புருசனபாக்க ஓடிடுவிங்க
போங்கப்பா அப்படி எல்லாம் இல்ல அந்த நேரம் ஆனந்தன் கையில் இருந்த மொபைல் சினுங்கியது இந்தா மாப்புளதான்
சிரிப்புடன் போனை வாங்கிக்கொண்டு மறைந்துவிட்டாள் ராஜி
ஹலோ எப்படி இருக்கீங்க மேடம்?
என் ஒய்ப் மேடம் எப்படி இருக்காங்க?
உங்க ஒய்ப் மேடம்தான்
அழறாங்க
ஏன் என்னாச்சு?
அப்பா அம்மா பிறந்த இடத்தவிட்டு வரனும்ல,,, ,,,,,,
ஓ,,,,ஓஓ,,, என் மனைகிட்ட சொல்லுங்க அப்பா அம்மாக்கு மேல கணவனுக்கும் மேல நல்ல நண்பனா இருப்பேன்
இப்ப இப்படி தான் சொல்வீங்க கடைசிவறைக்கும் இந்த வார்த்தையை காப்பாத்திரிங்களான்னு பாக்குறேன், இப்ப எங்க இருக்கீங்க
எங்க இருக்கனுமோ அங்க
புரியல
கொஞ்சம் வெளில வந்து பாருங்க மேடம்
என்ன வெளிலயா யோசனையோடு வெளியே வந்தவள்
ஏய்ய்.... ரமேஷ் என்ன இப்படி சர்பிரைஸ்விசிட் நாளைக்கு வர்றதாதானே சொன்னீங்க
வாங்க மாப்பள்ள வாங்க வாங்க உள்ள வாங்க மாப்பிள்ளைய வெளிலயே நிக்க வச்சு பேசிட்டு இருக்க வாய் மொழியிலே மகளுக்கு கொட்டு வைத்துவிட்டு ரமேஷ்க்கு காப்பி கலக்க சென்றாள் சித்ரா
ஆனந்திடம் ராஜி க்கு கிப்ட் வாங்கிட்டு வந்துருக்கேன் மாமா அத குடுத்துட்டு போலான்னுதான் வந்தேன்....
அவன் இழுப்பதை புரிந்துகொண்டவர் ராஜி மாப்பிள்ளைய மாடிக்கு கூட்டிட்டு போ அம்மாவ காப்பி எடுத்துட்டு வரசொல்றேன்
என்ன கிப்ட் சார்?
அவள் விரலில் மோதிரம் மாட்டினான் அதில் RR என்றிருந்தது
ரமேஷ் - ராஜி பிடிச்சுருக்கா
ரொம்ப்பப்ப பிடிச்சுருக்கு இத நாளைக்கு மண்டபத்துலயே குடுத்துருக்கலாமே
குடுத்துருக்கலாம் பட் இன்னைக்குதான் இதகுடுக்கனும்
ஏன் புரியாமல் அவனைப் பார்ததாள்
நாளைக்கு நமக்கு என்கேஜ்மென்ட் அப்ப நீ எனக்கு பாதி மனைவியாயிடுவ அப்ப இந்த ரிங்கபோனடுறது பொருத்தமா இருக்காது
ஏன் ?
ஏன்னா இது நம்ம நட்புக்கு அடையாளம்மா இருக்கனும்
இத பாக்குறப்ப எல்லாம்
நான் நல்ல நண்பன்கிற எண்ணம் உன் மனசுல இருக்கனும் ஒகே,,,
அப்ப நம்ம நல்ல பிரண்ஸ்ஸாவே இருந்தர்லாமே ஏன் மேரேஜ் எல்லாம் வில்லான தன் ஒற்றை புருவத்தை தூக்கி கண்ணடித்து குறும்புடன் ராஜி கேட்கவும்
சுவருடன் அவளை தள்ளி தன் இரு கைகளுக்குள் அவளை சிறையிட்டவன் இதுக்கு பதில் நாளைக்கு இன்நேரம் தெரிஞ்சுக்குவ
இப்பவும் நான் உனக்கு நல்ல நண்பன் என்ற வார்த்தை வானோடு சென்ற அப்தரஸ்களின் சென்றடைந்த்தோ என்னவோ அப்படியே ஆகட்டும் என்று அவர்களும் வாழ்த்திவிட்டு சென்றுவிட்டார்கள்
************************************
வாங்கன்னா எப்படி இருக்கீங்க
நல்லாருக்கேன் ஆர்த்தி நீ எப்படி இருக்க
நல்லாருக்கேன்
உட்காருங்க அம்மாவ கூப்புரேன்
அம்மா சிவா அண்ணா வந்துருக்காரு வா
நீ போய் காபி போடு மகளை அனுப்பிவிட்டு
வாப்பா சிவா நல்லாருக்கியா அம்மா எப்படி இருக்காங்க
நல்லாருக்காங்க ம்மா
சாரதா நல்லாருக்கா
எல்லாரும் நல்லாருக்காங்க அடுத்த வாரம் சிங்கப்பூர் கெளம்புறேன் அதான் சொல்லிட்டு போலான்னு வந்தேன்
காபி எடுத்துக்கங்கன்னா ஆர்த்தி நீட்டிய டம்ளரை வாங்கியவனின் மனமோ பின்நோக்கி சென்றது
இரட்டை ஜடையில் கையில் புக்குடன் கௌனில்
எட்டு வயது ஆர்த்தி
கையில் பந்தை சுழற்றியபடி நின்ற பதினான்ங்கு வயது சிவாவிடம்
இங்க சாரதா மிஸ் வீடு
ஏன் கேக்குற?
மிஸ் புக்கு கேட்டாங்க
கையில் பந்தை சுழற்றியபடியே அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்
சாரதாமிஸ் உங்கள தேடி இந்த பொண்ணு வந்துருக்கு இந்த வீடுதான் ஆர்த்தியிடம் கூறிவிட்டு விளையாடச் சென்று விட்டான்
ஆர்த்தி திரும்பி வந்தபோது
மிஸ்ச பாத்துடீயா என்று கேட்டான்
ம்ம்ம் பூம் பூம் மாடு போல் தலையாட்டினாள்
எது உங்க வீடு
அந்த ப்ளூ கலர் காம்பௌண்ட் சுவர் தான் எங்க வீடு
இப்பதான் புதுசா குடிவந்த இருக்கீங்களா
திரும்பவும் பூம் பூம் மாடானாள்
காபியை குடித்துக் கொண்டே பழைய நினைவுகளிலிருந்து மீண்டவன் அவளைப் பார்த்து சிரித்தான்
என்னன்னா சிரிக்குறீங்க
இப்பவும் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுரியா
இப்படிதானே என்று தலையை பரதநாட்டிய ஸ்டைலில் ஆட்டி காட்டினாள்
முன்னாடில்லாம் பேசமாட்ட இப்ப வாய் அதிகமாய்டுச்சு போல பேச்சிலே குட்டு வைத்தான்
பேசாம இருந்தா ஊமை குசும்புனு சொல்றீங்க பேசினா வாயாடி கட் அன் ரைட்டா பேசினா அழுத்தக்காரி ஒன்னு இரண்டு வார்த்தையோட முடிச்சுக்கிட்டா முசுடு அப்பறம் என்னதான் எங்கள பன்னசொல்றீங்க
அடேங்கப்பா,,, தேரிட்ட ஆர்த்தி தேரிட்ட
எப்பம்மா ஆர்த்திக்கு கல்யாணம் பண்ண போறீங்க
பண்ணனும்பா இந்த வருஷம் படிப்பை முடிச்ச உடனேயே பார்க்க சொல்லிட்டேன்
சும்மா இரும்மா நான் MPhil முடிச்சதுக்கப்பறம் கல்யாணத்தபத்தி பேசிக்கலாம்
அதெல்லாம் ஒன்னும் வேணாம் நாங்க சொல்றதை நீ கேட்டு நடந்தபோதும் இவளுக்கு ஒன்னும் தெரிய மாட்டேங்குது சின்ன புள்ள தனமா இருக்கா சிவா
சரிதான்மா
நீங்களுமான்னா ஆர்த்தி முகத்தை சுளித்தாள்
அம்மா சொல்றதும் சரிதான் ஆர்த்தி அவங்க எடத்துல இருந்து நீ யோசிச்சு பாரு
படிப்புமுடிஞ்சதும் மாப்புள பாருங்க சரியா இருக்கும் சரிமா நேரம் ஆச்சு நான்போய்ட்டுவர்றேன்
சரிப்பா பத்திரமா போய்ட்டு வா
அண்ணா உங்க நம்பர் குடுத்துட்டு போங்க நான் அப்பறம் கால் பண்றேன் நம்பர் கொடுத்து விட்டு
நல்லா படி நான் திரும்ப வர்றப்ப உனக்கு மேரேஜ் ஆனாலும் ஆயிருக்கும்
இப்ப என்ன அவசரம்ன்னா பொறுமையா பாத்துக்கலாம்
போய்ட்டு மறக்காம கால் பண்ணுங்க
ம்ம் பண்றேன் ஆர்த்தி வரவா
பைன்னா சிரித்த முகத்துடன் இவள் பை சொல்ல அவனும் சிரித்த முகத்துடன் பையை வாங்கிச்சென்றான்.
******************************
கல்யாண மண்டபம் கலகலப்பாய் இருந்தது
பேச்சுலர் பார்ட்டி பேச்சுலர் பார்ட்டின்னு கடைசியில் என்னை ஏமாத்திட்டியேடா ரமேஷிடம் புலம்பிக்கொண்டிருந்தன் விக்னேஷ் (ரமேஷ்ன் நண்பன்)
எல்லாருக்கும் ஹோட்டல்ல ரூம் போட்டுக் கொடுத்து அங்கேயே பார்ட்டியும் முடிஞ்சு போச்சு
உன்ன போக வேண்டான்னு நான் சொன்னேனா, ராஜி பிரண்டு கவிதாகிட்ட மொக்க போட்டுகிட்டு அவ பின்னாடியே சுத்திகிட்டு
நீ போகாம் இருந்ததுக்கு நான் என்னடா பண்ணுறது
பாத்தோன்ன அவள புடிச்சு போச்சு சரி உன் கல்யாணத்துலயே என் கல்யாணத்துக்கு ஒரு அச்சாரத்தை போடுவோம்னு அவகிட்ட பேசி வைச்சேன் அந்த நேரம் சிவ பூஜைல கரடியா வந்தது மட்டும் இல்லாம அவ முன்னாடி பார்ட்டிகிக்கு கூப்டா நான் என்னடா பண்ணுறது
சரி கல்யாணம் முடிஞ்சு உடனே பார்ட்டி தர்றேன் இப்போ போய் கதவை திற யாரோ கதவ தட்டிகிட்டு இருக்காங்க
கதவை திறந்த விக்னேஷ் ஓ மை ஸ்வீட் ஹார்ட் அவன் வாய் முணுமுணுத்தது
என்னது அதட்டியபடி கேட்டாள் கவிதா
இந்த சாரீயிலே ரொம்ப அழகா இருக்கீங்க அதைச் சொன்னேன்
தேங்க்ஸ் கொஞ்சம் வழிவிட்டா நல்லாருக்கும்
வழி விடலன்னா நல்லா இருக்காதா விஷமத்துடன் விக்னேஷின் கண்கள் கண்ணடிக்க
அதுசரி இவனுக்கு வாய்தான் வில்லங்கமா பேசுதுன்னா கண்ணும் வில்லங்கமா பாக்குதே
நீங்க வழியே விட வேண்டாம் ராஜி கிட்ட போயி நீ கொடுத்த கிப்ட்ட கொடுக்க முடியல விக்னேஷ் அண்ணா விக்னேஷ் அண்ணா ரொம்ப பெருமை பீத்துவீயே அந்த நொண்ணா நீ குடுத்த கிப்ட உன்ஆல்ட்ட குடுக்கவிடல நீயே போய் உன் கிப்ட குடுத்துக்கன்னு சொல்லியர்றேன்
ஓ... நோ...ஸ்வீட்டி என்றவனை முறைத்துவிட்டு
ஏய்,,,, ஸ்வீட் இருக்கும் அத சாப்பிட நீங்க இருக்கமாட்டிங்க சாரே என் அண்ணா பாக்ஸர் தெரியுமா
என் அண்ணா பேர் பாஸ்கர் தெரியுமா அவனும் அவளைப் மூக்கை விடைத்துக்கொண்டு சொல்ல
டேய் இங்க என்னடா பண்ற
இங்க பாருங்க அண்ணா ராஜி உங்களுக்கு இந்த கிப்ட கொடுத்து விட்டா அதை குடுக்க வந்தா உங்க பிரண்டு வழிவிடாம தகராறு பண்றாரு என்னன்னு கேளுங்க கவிதா ரமேஷிடம் ஞாயம் கேட்டாள்
விக்னேஷை உக்கிற பார்வை பாரத்துவிட்டு் நீங்க உள்ள வாங்க கவிதா
விக்னேஷை முறைத்துக்கொண்டே உள்ளே சென்றாள்
கிப்டை சிரித்த முகத்துடன் வாங்கி பிரித்துப் பார்த்தான் உள்ளே ஒரு அழகான டைட்டன் வாட்ச் இருந்தது
சிகப்பு கலர் இதயவடிவத்தை நான்காக பிரிப்பது போல்
கோல்டன் கலரில் இரு புரமும் R அதை ஊன்றிப் பார்த்தால் தான் உள்ளே உள்ள R வடிவம் புரியும்
வாவ் வாவ் சூப்பராயிருக்குன்னா நைட் கூட கேட்டேன் என்னடி வாங்கிருக்கன்னு சொல்லமாட்டேன்னுட்டா
மச்சி சூப்பர் டேஸ்ட்டா சிஸ்டர்க்கு எக்ஸலன்ட்
தன் கையிலிருந்த வாட்ச்சை கழட்டிவிட்டு ராஜி கொடுத்த வாட்ச்சை கையில் கட்டிக் கொண்டான்
ராஜிக்கு கால் பண்னான்
என்ன மாப்பிள்ளை சார் வாட்ச் பிடிச்சிருக்கா
ரொம்ப பிடிச்சிருக்கு தேங்க்ஸ் சொல்லவா
வெயிட் அதுல இன்னும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கு லெப்ட்சைடு்ல இன்னொரு பட்டன் இருக்கு பாருங்க அத பிரஸ் பண்ணுங்க
ரமேஷ் ரமேஷ்ஷ் ரமேஷ்ஷ்ஷ் டேய் ரமேஷ் என்னடா பண்ற
ரமேஷ் ராஜி கூப்புரா
இப்ப சொல்லுங்க மாப்ள சார் சஸ்பென்ஸ் புடிச்சிருக்கா
புடிச்சிருக்காவா
?????????????????
செல்லில் ரமேஷ் முத்தம் குடுக்க ஆரம்பித்ததும் காவிதா வெட்கப்பட்டுக் கொண்டு ரூமைவிட்டு வெளியேறிவிட்டாள்
டேய்ய்ய் நாங்கலெல்லாம் இங்க நிக்குறதா வேண்டாமா விக்னேஷ் கேட்டது காற்றோடு போனது அவனோ செல்லுக்கு கொடுக்கும் இதழ்ஒற்றலை இன்னும் நிறுத்தியபாடில்ல
கவிதாவின் பின்னோடு வந்த விக்னேஷ்
கவி கவி நில்லுங்க
Hello என் பேர் கவி இல்ல கவிதா
நான் செல்லாம கூப்டேன்
கவிதா சுற்றிமுற்றி கண்களை சுழலவிட்டாள்
யார தேடுறீங்க
சொல்றேன்,,,, அதோப அங்க பாருங்க
எங்க?
அங்க ஹைட்டா வெயிட்டா பாடிபில்டர் மாரி இருக்கான்ல
ஆமா இப்ப என்ன அதுக்கு?
அவன் தான் என் அண்ணன் வாங்க உங்கள introduce பண்றேன்
ஓ,,நோ,,,டைம் இல்ல கவிதா
ஐயர் மாப்பிள்ளைய கூட்டிடுவரசொல்லிட்டாரு நீங்கதான் துணை மாப்பிள்ளை ச்சீச்சீச் இல்ல இல்ல துணைப்பொண்ணு நான் துணை மாப்பிள்ளை நீங்க பொண்ண கூட்டிட்டு வாங்க நான் போய் மாப்பிள்ளைய கூட்டிட்டு வர்றேன் இப்ப போய் அவன கூப்டல போன்லயே குடும்பம் நடத்த ஆரம்பிச்சுடுவான் மேரேஜ் முடிஞ்சோன்ன உங்க அண்ணன்டபோய் நானே இன்ட்றோ ஆயிக்குறேன் கவிதாவின் பதில்லை கூட எதிர் பார்க்காமல் விருட்டென்று சென்றுவிட்டான்
????? கவிதாவிற்கு சிரிப்பை கட்டுப்படுத்த
முடியவில்லை மனதிற்குள் அவன் பேச்சோடு சேர்த்து அவனையும் சேர்த்து ரசிக்க ஆரம்பித்தாள்
ரமேஷை மணவறையில் அமரவைத்தான் விக்னேஷ் கவிதா,மற்ற தோழிகள் புடைசூழ பொன்சிலை என ராஜி அழைத்துவரப்பட்டாள்
ராஜியின் அழகை கண்களால் பருகியவன்
View attachment 1869 தன்னருகில் அவள் அமர வைக்கப்பட்டதும் யாருக்கும் தெரியாமல் அவள் கைகளை கிள்ளினான்
வெட்கப் புன்னகையோடு அவன் புறம் திரும்பியவள் அவன் தொடையில் கிள்ளினாள்
திடீரென பெரும் சத்தம் என்ன ஏது என்று உணர்ந்துகொள்ளும் முன் பெரியதகராறாக மாரியது ரமேஷ்சும் ராஜியும் எழுந்துவிட்டனர் மாலையை கலட்டப்போன ரமேஷை தடுத்த விக்னேஷ் நீ இரு நான் போய் என்னன்னு பாக்குறேன்
விக்னேஷ்ஷின் தலை மறைந்த்தே ஓழிய அவனால் சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை
ரமேஷ் மாலையை கழட்டிவிட்டு கூட்டத்தை நோக்கி சென்றான் ராஜியின் பெரிய விழிகள் கலங்கி நின்றது அருகில் நின்ற கவிதாவின் கையை இருகப்பற்றிக்
கொண்டாள் மண்டபமே சண்டை நடந்த இடத்தை வேடிக்கை பார்த்ததுக் கொண்டிருந்தது
தனக்கு பின் ஒரு உருவம் வந்து நின்றதையோ அதன் கை தன் கழுத்தை நோக்கி வந்ததையோ அவளும் கவனிக்கவில்லை அங்கிருந்தவர்களும் கவனிக்கவில்லை
யதேர்சியாக திரும்பிய கவிதா என்ன பண்றீங்க அவன் கையை பிடிக்கப் போக அவளை தள்ளிவிட்டு அவன் தாலியை கட்டுவதர்க்கும்
கவிதா சத்தம் போட்டதில் என்ன என்று ராஜி திரும்புவதற்கும் சரியாக அமைந்துவிட்டது என்ன பண்றவிடு என்று ராஜி அலறினாள் மேடையில் நின்ற பெண்களும் ஆண்களும் அவனை பிடித்து இழுத்தனர் அவனோ ராஜியின் கழுத்தை தன் இரு கரங்களுக்குள் அடக்கி மூன்றாவது முடிச்சையும் போட்டுவிட்டான் சங்கர்
மனதோடு மீண்டும் பேசுவோம்,,,,,,,,,,,,,,,