All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "வஞ்சிக்கொடியும்! வத்தலக்குண்டின் ரகசியமும்!!" கதை திரி

Status
Not open for further replies.

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 34

இடி மின்னல் சூறாவளி என மொத்தமாய் தாக்கியதில் பிஞ்சு பீசுவாங்கி போன காய்ந்த ரொட்டிப்போல் மாதவனும் ஷங்கரும் நட்ட நடுவீட்டில் தலை மீது கை வைத்து வாழ்க்கையை வெறுத்த நிலையில் அமர்ந்திருந்தனர்.

'சோதனை வேதனை; இன்னும் ரெண்டு நாளு நாம உயிரோட இருந்தோம்னா அது மிகப்பெரிய சாதனை' அவர்கள் மைண்ட் வாய்சோ ரைமிங்காக வேறு பேசி இன்னும் வெறுபேற்றிவிட்டது.

"த்தா ச்சை இந்த வெலங்காத வெங்காய மூளை வேற நேரம் காலம் தெரியாம என்னையே வாரி விடுதே" மாதவன் மெல்ல புலம்ப

"மச்சா மாதவா எனக்கு என்னவோ நாளைக்கு காலைல நம்ம பொணத்தை நாமளே ஆவியாகி பார்க்குற மாதிரியெல்லாம் தோணுதுடா. இந்த பொம்மை பேய்கிட்ட இருந்து நாம எப்புடிடா தப்பிகிறது. அது நம்மல என்னன்னவோ பண்ண சொல்லுதேடா"

பயத்தில் வலிப்பு வந்த பல்லிப்போல் மாதவனோடு ஒட்டியபடி ஷங்கர் கேட்ட

"இனிமே பண்ண என்ன இருக்குடா. அந்த பேய் சொல்லுறத செஞ்சா எங்க அப்பன் அந்த மீசக்காரன் கைகாள நாம சாவோம். கேக்கலனா அந்த பேய் அடிச்சு சாவோம். மொத்தத்தில நம்ப சாவு உறுதியாகி போச்சு. இனி பொலம்பி ஒன்னும் ஆவப்போறது இல்ல. அந்த பேய் சொல்றத செஞ்சுபுட்டு போவ வேண்டியதுதான்"

பயம் ஒரு புறம் இருந்தும் அவர்கள் சிக்கி இருக்கும் சிச்சுவேஷனை கப்பென பற்றிய மாதவன், பேய் கூறுவதை செய்வதென்ற முடிவுக்கு வந்தான்.

"ஆனா மச்சா நம்மகிட்ட வேலைய குடுத்துபுட்டு அந்த பொம்ம எங்கடா போச்சு?" தங்களுக்கு வேலை கொடுத்தப் பின் ஜூமாக்கா ஜூம் என பொம்மை காணாமல் போய்விட அதை வைத்தே ஷங்கர் கேட்டிருந்தான்.

"நம்ம நிலையே சொல்றதுக்கில்ல இதுல அது எங்க போனா நமக்கு என்னடா வந்துச்சு. பேசாமா உக்காருடா" கடுப்பில் மாதவன் கத்தியபின்னரே அமைதியானான் ஷங்கர். பொம்மை சொன்னதை செயல்படுத்த இரவு வரும் வரை காத்திருக்க துவங்கினர் நண்பர்கள் இருவரும்.

இவர்கள் இங்கே பேயுடைய பிளானை எக்சிகியூட் செய்ய காத்திருக்க, அங்கே கேசவனும் அவருடைய பிளானை அன்று இரவு செய்ய அனைத்தையும் தயார் செய்துவிட்டார்.

இங்கு ரெண்டு கேங் அரவிந்த் கேங்குக்கு எதிராக கிளம்பியது தெரியாமல் நம் அரவிந்த் பெத்த முத்தோ, அவன் காதலியுடன் என்றும் இல்லாத திருநாளாய் இன்று கடலையை வறு வறென வறுத்து முடித்து ரொமேன்ஸ் கட்டத்திற்குள் காலை வைத்திருந்தான்.

"வீராம்மா! என்னடி செய்ற" தன் போனோடு ஐக்கியமாகியிருந்த வீராவின் கையை மெல்ல பிடித்து தன் காந்த குரலால் தன் காதலியை அழைத்தான் சித்து.

அவன் குரல் என்றும் இல்லாது இன்று வீராவின் மனதிற்குள் ஏதோ மாயாஜாலம் செய்ததில் அமைதியாக இருந்தாள். சித்துவோ தன் ஒரு கையை எடுத்து அவளின் தலையை மெல்ல கோதியவாறு முன்னே தொங்கிய முடியை அவளுடைய காதின் பின்னே ஒதுக்கிவிட்டான்.

அவனுடைய செய்கையில் வீராவின் இதயம் படபடவென அடித்துக் கொள்ள, அவள் காதுகள் இரண்டும் வெட்கத்தில் சிவந்தே போனது.

முன்பு நடந்த நிகழ்வுகளில் உஷாராகியிருந்த சித்து, இன்று பூஜை வேலை கரடியாக வேறு யாரும் தங்களை டிஸ்டர்ப் செய்யக் கூடாதென கதவை சாவி போட்டு பூட்டி என எல்லா முன்னேற்பாடையும் பக்காவாக செய்து வந்திருந்தான்.

எனவே அவனின் இன்றைய ரொமான்ஸில் யாரும் குறுக்கே வரவில்லை. வீராவும் அவனுடைய கைகள் காட்டும் மாய வித்தையில் சிக்கி கிறங்கி போய்விட்டாள்.

அவள் அசந்த நேரம் பார்த்து பசக்கென நெற்றியில் மென்மையாக ஒரு முத்தத்தை கொடுத்து சிறப்பாக தன் கணக்கை துவங்கி கொண்டான் அரவிந்தின் செல்வமகன்.

கைகளால் அவள் கன்னத்தை வருடியபடி அடுத்த முத்தத்தை அவளின் இரு கன்னங்களில் இறக்க, என்னையும் எடுத்துக் கொள்ளேன் என கூறுவதைப்போல் துடித்து வைத்தது வீராவின் உதடுகள்.

இதற்குமேல் தாங்காது என மெல்ல அவளின் இதழோடு இதழை பொறுத்திவிட்டான் சித்தார்த். மெல்ல மெல்ல அவளின் சிப்பி இதழ்களை அவன் இதழ்கள் சுவைத்து வைக்க, அவனுடைய ஒரு கை அவளின் தலையை தாங்க மற்றொரு கையோ அவளின் இடையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

மூச்சு கூட விட முடியாத அளவுக்கு முத்தத்தை தந்து வீராவை திணறடித்தான் சித்து. இத்தனை நாள் அவனிடம் இருந்த இந்த காதல் மன்னனை எங்கே வைத்திருந்தான் என ஆச்சரியப்படும் வண்ணம் இருந்தது சித்துவின் செய்கை எல்லாம்.

சில நிமிடங்கள் நீடித்த அந்த அழகிய காதல் முத்தம் நிறைவுறும் நேரம் சரியாக வீராவின் அறை கதவை யாரே தட்டும் சத்தம் கேட்க, காதலியோடு முத்தத்தில் திளைத்திருந்த சித்துவுக்கு முதலில் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அந்த சத்தம் வீராவின் காதுக்களில் விழுந்துவிட, சித்துவை தன்னிலிருந்து பிரித்து தள்ளினாள்.

"ஏன்டி தள்ளிட்ட! வாடி"

காதல் பித்து முத்தியதில் ஏக்கத்தோடு பிதற்றிய சித்துவின் மண்டையில் நங்கென கொட்டி நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தாள் அவன் காதலி. அதன்பின்னரே சுற்றி நடப்பது மண்டைக்கு உரைத்தது சித்துவிற்கு.

தன் முன்னால் கைகளை கொண்டு உதட்டை துடைத்த வீராவை கண்டு வந்த சிரிப்பை அடக்கிய சித்து "ஏன் பேபி உதட்டை துடைச்ச" என ஒரு மார்க்கமாய் பேசியவன் மீண்டும் அவள் உதட்டில் ஒரு சிறு முத்தத்தை வைத்து லேசாய் அவள் உதட்டை கடித்து விட்டு கதவை நோக்கி ஓடிவிட்டான்.

தான் அசந்த நேரத்தில் ஒரு காதல் காவியத்தையே தன் காதலன் நிகழ்த்தியதில் "சித்து!" என கோவத்தில் வீரா கத்த, அவளை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டி அவளை மீண்டும் சிவக்க செய்தபடி சித்து கதவை திறந்தான்.

அலமேலுவுடன் வெளியே சுற்றிவிட்டு வந்திருந்த கதிர்தான் கதவை தட்டி இருந்தான். 'நல்லவேளை கிஸ் சீன் முடிஞ்ச அப்புறம் என் மச்சான் வந்தான். இல்லனா இன்னைக்கு நாம மொக்க வாங்கிருப்போம்'

மனதிற்குள் நிம்மதி பெருமூச்சு விட்ட சித்து "கதிர் குட்டி என்னடா தோப்புலா நல்லா சுத்தி பாத்தியா" என அவன் தோளில் கைப்போட்டு அப்படியே அவனை தன்னோடு அழைத்து சென்றுவிட்டான். அவன் காதலி இன்னும் அவன் அளித்த முத்தத்திலிருந்து வெளி வரவில்லை என அவனுக்கு புரியவே அவளை தனியாக விட்டு சென்றான்.

அவன் நினைத்தபடியே வீராவும் கதிர் சித்துவோடு சென்றதை நினைத்து நிம்மதி அடைந்தாள். ஏனெனில் அவள் தற்போது இருக்கும் நிலையில் யாரையும் பார்க்கும் எண்ணம் இல்லை அவளுக்கு. சித்து சென்றபின் இவ்வளவு நேரம் அவன் நிகழ்த்திய சித்து விளையாட்டுகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து இம்சை செய்ய, அந்த சுகநினைவுகளோடு அமைதியாக ஒன்றிவிட்டாள் நம் அதிரடி நாயகி.

இத்தனை நாட்கள் கம்முனு இருந்துவிட்டு இப்போது கும்முனு ஒரு முத்தத்தை போட்டுவிட்டு வந்த சித்துவின் நிலையை சொல்லவா வேண்டும். ஐயா வெட்கம் என்ற பெயரில் ஏதோ ஒரு கன்றாவியான எக்ஸ்பிரஷனை முகத்தில் வைத்தபடி மனதிற்குள் விங்சே இல்லாமல் வானத்தில் பறந்துக் கொண்டிருந்தான்.

எதிரில் மிதந்து வந்த அரவிந்தையும் கண்டுக் கொள்ளவில்லை, நட்ட நடுவீட்டில் ஒரு லிட்டர் சோகத்தை முகத்தில் வழியவிட்டு உக்காந்திருந்த அந்த டூ இடியட்சையும் சட்டை செய்யவில்லை. இன்று சித்துவுக்கும் வீராவுக்கும் ரொமாண்டிக் நாளாக நகர அப்படியே சந்திரனும் பூமியில் தன் ஜாகையை பெட்சீட் விரித்து போட்டுவிட்டான்.

"டேய் மாதவா இன்னைக்கு ராத்திரி அந்த பேய் நம்மல பண்ண சொன்ன காரியத்தை அதுவே செஞ்சு இருக்கலாமேடா. நாம எதுக்கு நடுவுல" ஷங்கர் அவன் மனதில் இருந்ததை கேட்டு விட்டான் மாதவன் கேட்கவில்லை அதுமட்டுமே வித்தியாசம்.

அவனுக்கும் அந்த சந்தேகம் மனதை பிரான்டியதுதான். ஆனால் அதை அந்த பேயிடம் யார் கேட்பது.

"ஏன்டா நானும் உன்கூட தானே இருக்கேன். எனக்கு மட்டும் என்ன ஜோசியமா தெரியும். இல்ல அந்த பொம்ம பிசாசுட்டு போய் கேக்குட்டா. நானே அந்தப் பொம்மை சொன்னதை எப்படி செய்யுறதுன்னு குழப்பத்துல இருக்கேன் நீ வெந்த புன்னுல வேல பாச்சாம அந்த பிளான எப்படி எக்சிகுயூட் பண்றதுன்னு எதாவது ஐடியா வந்தா சொல்லு"

அலுத்து போய் மாதவன் பேச 'அதுவும் சரிதான். யோசிப்போம் எதாவது ஐடியா வரும்' என ஷங்கர் அப்படியே அமைதியாகி அவன் இத்தனை நாள் அப்படியே பிரஷ்ஷாக வைத்திருந்த அவன் மூளையை பயன்படுத்த ஆரம்பித்தான்‌.

'இப்படி பண்ணலாமா ச்சே ச்சே அது சரியாவராது‌. ம்ம் இல்லை இப்படி பண்ணலாமா' காற்றில் கையை ஆட்டி ஆட்டி கணக்கு போடும் தன் நண்பனை பார்க்கையில் தான் மாதவனுக்கு பயத்தில் இன்னும் வயிறு கலக்கியது.

"மச்சா புடிச்சுட்டேன்டா" அமைதியாக இருந்த இடத்தில் திடீரென ஷங்கர் கத்தியதில் ஒரு நிமிடம் மாதவனின் இதயம் நின்று துடித்தது.

"டேய் நாரப்மயலே எதுக்குடா இப்ப உயிரே போன மாதிரி கத்துர"

"ஐயோ மச்சா எனக்கு ஒரு ஐடியா தோனுது சொல்றேன் கேளு. பேசாம உன் வீட்டு ஆளுங்க திங்கிற சோத்துல மருந்த வச்சுட்டா என்னடா. நம்ம நினைச்ச வேலை சட்டுனு முடிஞ்சிடும்ல"

எதோ அதிசயத்தை கண்டுபிடித்ததை போல் ஷங்கர் பேசுவதை கேட்டு மாதவனுக்கு அவனை அப்படியே அடிக்கலாமா இல்லை தூக்கி போட்டு மிதிக்கலாமா என்ற எண்ணம் தான் வந்தது.

"டேய் உனக்கு கைப்புடி அளவாவது மூளை இருக்கா இல்ல அதையும் வறுத்து எதுவும் திண்ணுட்டியா. மருந்து கலந்தா அந்த சோத்த நீயும் நானும் சேந்து தானேடா திம்போம். இதுல எங்கருந்து அந்த பொம்ம சொன்னதை செய்யிறது. கூறுகெட்டவனே வேற எதாவது யோசிச்சு சொல்லுடா"

உக்கிரமாக பேசிய மாதவனை முறைத்த அவன் நண்பன் "ஆமா இவனுக்கு மட்டும் மூளை முக்காக்கிலோ இருக்கு பாரு. அவனும் ஒன்னத்தையும் யோசிச்சு கிழிக்க மாட்டான், பரதேசி நாம ஒரு ஐடியா சொன்னாலும் நொட்டை சொல்லுறது"

தன் ஐடியாவை மாதவன் ஏற்றுக் கொள்ளாத காண்டில் காட்சில்லாவைப் போல் பொசுங்கித் தள்ளிய ஷங்கர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். வெகு நேரம் அதுஇதுவென கண்டதையும் போட்டு யோசித்து இந்த டூ இடியட்ஸ் குரூப் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தது‌.

"எலேய் ஷங்கரு இது எல்லா நமக்கு ஒத்து வராதுடே. ஒரு பிளானு இருக்கு, அறுத பழைய பிளானா இருந்தாலும் இது கொஞ்சம் சரிபடும்"

தீவிரமாய் பேசிய நண்பன் அந்த பிளானை சொன்னதும் ஷங்கரே காரித்துப்பிவிட்டான். ஆனால் கைவசம் வேறு பிளானும் இல்லாத காரணத்தால் இதுலையே இருவரும் பிக்ஸாகி அதற்கு தேவையான சாமான்களை தயார் செய்துவிட்டு, தக்க சமயத்திற்காய் காத்திருந்தனர்.

வழக்கம் போல் நம் சித்தார்த் வீட்டில் இன்றும் இரவு உணவு ஜகஜோதியாய் நடைபெற, இங்கே நம் சித்துவோ வீராவை கண்களால் காதல் செய்து காதல் மன்னனான கியூபிட்கே டப் கொடுத்தபடி இருந்தான்.

'ஐயோ எல்லாரும் சட்டுப்புட்டுனு தின்னுட்டு எடத்தை காலி பண்ணுங்களே' இவர்களுக்கு மத்தியில் இப்படி மனதிற்குள் புலம்பியபடி அமர்ந்திருந்தது வேறு யாரும் இல்லை நம் டூ இடியஸ்தான்.

ஒருவழியாக டைனிங் டேபிளில் டிராமா எல்லாம் முடிந்து ஒவ்வொருவராய் இடத்தை காலி செய்து, அவரவர் அறைக்குள் தஞ்சம் புகுந்தனர். இப்போது தான் அந்த டூ இடியட் நண்பர்களுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. தங்கள் பிளானை எக்சிகியூட் செய்ய, வீட்டில் மட்டுமல்லாது ஊரே தூங்கும் வரை காத்திருந்து நடு இரவிலே தங்கள் வேலையை செய்ய ரெடி ஆகிவிட்டனர்.

-ரகசியம் தொடரும்

 
Status
Not open for further replies.
Top