Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 14
லலிதாவிற்கு மதுவை பார்த்த கணத்திலேயே அவ்வளவு பிடித்து இருந்தது. அதை விட அதிகமாகப் பேசும் போது குழந்தையைப் போன்ற குணமும் உலகம் அறியா அப்பாவியாக இருந்தவளை ரொம்பவே பிடித்துப் போனது.
ஆனால் அதற்கு அப்படியே நேர் மாறாக அவரின் சீமந்த புத்திரனுக்கு “தான் இல்லாத நேரத்தில் தன்னை ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் நியமிக்கப்பட்டிருந்த மதுவை லலிதாவின் வாய்மொழியாக அவர் இவளை வானளவு புகழ்வதைக் கேட்டுச் சுத்தமாகப் பிடிக்காமல் போனது.
‘நிச்சயமாக அவள் ஏதோ பெரிய திட்டத்தோடு தான் நான் அங்கு இல்லாத நேரமாகப் பார்த்து உள்ளே நுழைந்து நன்றாக நடித்துத் தன் தாயை ஏமாற்றி இருக்கிறாள் என்றே முழுமையாக நம்பியவன், இன்னும் மூன்று நாட்களில் வந்து உன்னை வீட்டை விட்டு துரத்துவது தான் முதல் வேலை...’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தான்.
முதலில் லலிதாவின் மேல் ‘எத்தனை முறை அனுபவப்பட்டாலும் மீண்டும் மீண்டும் தன் இளகிய மனதால் இப்படி ஏமாறுகிறார்களே...’ என்று எழுந்த கோபம் கூட அவர் மதுவைப் பற்றிச் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து, இது நிச்சயம் இவளுடைய ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும்... அந்த அளவிற்கு நடித்து அவரை நம்ப வைத்திருக்கிறாள்...’ என்று முழுமையாக நம்பி லலிதாவின் மேல் இருந்த கோபத்தையும் கூடச் சேர்த்து மதுவின் மேல் டன் டன்னாக மூட்டை கட்டி வைத்திருந்தான், அவளைக் கண்ட நொடியில் அவள் மேல் இறக்குவதற்காக...
ஆனால் இதில் தேவ் அறியாதது ஒன்று உண்டு, அது என்னவென்றால் மதுவை தேர்ந்தெடுத்தது லலிதா அம்மா மட்டும் அல்ல இன்னொரு அந்த வீட்டின் பெரிய மனுஷனும் தான். அவன் தான் அந்த நிமிடம் வரை யார் கையிலும் அடங்காதவன் யாரிடமும் உறங்காதவன் பாந்தமாக மதுவின் கைகளில் அடங்கி உறங்கி தன் சம்மதத்தை லலிதா அம்மாவிற்குப் புரியும்படி செய்ததாலேயே அவரும் மதுவை மனதார ஏற்றுக் கொண்டிருந்தார்.
இரவெல்லாம் அழுகையோடு மித்து உறங்காமல் கதறிக் கொண்டு இருந்ததைக் காண சகிக்க முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த லலிதாவிற்கு மட்டுமே தெரியும் இந்த நிலையில் அவர் மனம்பட்ட அவதியின் அளவு என்னவென்று, அவனைத் தூக்கி ஆறுதல்படுத்த கூடத் தன் உடல்நிலை ஒத்துழைக்காது, தன் வீட்டின் வாரிசு தன் கண்முன்னாலேயே கதறி துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மௌனமாகக் கண்ணீர் வடித்தபடி அவரும் துடித்துக் கொண்டு தான் இருந்தார்.
கடந்த நான்கு மாதங்களாகவே வெளிநாட்டுப் பயணத்தை எல்லாம் ரத்துச் செய்து அவனை நெஞ்சுக்குள் வைத்து பார்த்துக் கொண்டிருந்த தேவ் கிளம்பி சென்ற அன்றிலிருந்தே பிள்ளையின் அழுகை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
எவ்வளவோ இந்தப் பயணத்தைத் தள்ளிப் போடவும் ரத்து செய்யவும் முயன்றும் அந்த முயற்சிகள் பலனளிக்காமல் போனதினாலேயே வேறுவழியின்றிக் கிளம்பி சென்றிருந்தான்.
அன்றிலிருந்து இந்த மூன்று நாட்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்த அழுகையும் அடமும் நேற்று மதியத்தில் தொடங்கி நேரம் செல்லச் செல்ல எல்லை கோட்டை தாண்டி சென்று கொண்டிருந்தது.
தாயின் அரவணைப்பும் கிடைக்காமல் இந்த நான்கு மாதங்களாக அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் தேவ்வின் அரவணைப்பு மட்டுமே, பிறந்ததிலிருந்து தேவ்வின் கை சூட்டை உணர்ந்தவனாதலால் அவனுக்குள் இயல்பாகப் பொருந்திப் போக குழந்தையால் முடிந்தது.
அதேபோல இப்போது இருப்பவர்களில் தேவ்வுக்கு அடுத்து அதிகம் உணர்ந்தது லலிதாவின் அரவணைப்பை தான். ஆனால் இந்த நிமிடம் அதை அவனுக்கு வழங்க முடியாத நிலையில் லலிதா இருக்கவே தான் இப்படி எதுவும் செய்ய முடியாத நிலைக்கு அவரைத் தள்ளியது.
மூன்று நாட்களாக இப்படித்தான் இருக்கிறான் என்பதை அவர்கள் தேவ்வுக்குத் தெரியப்படுத்தவில்லை, எந்த மாதிரி சூழ்நிலையில் என்ன மாதிரியான ஒரு மனநிலையில் இங்கிருந்து தேவ் சென்று இருக்கிறான் என்பதை அறிந்து ஒரு தாயாக அவனைப் பற்றியும் யோசித்துப் பணி செய்பவர்களிடம் தெரியப்படுத்தக் கூடாது எனக் கட்டளையிட்டிருந்தார்.
ஏனென்றால் அவருக்கு நிச்சயம் தெரியும் இந்த விஷயம் தெரிய வந்தது என்றால் ஒரு நொடி கூட அங்கு நிற்காமல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனைத்தையும் தூக்கி போட்டு விட்டு மகனைக் காண ஓடி வந்து விடுவான் என்பது, எனவே லலிதா மகனின் நலனையும் பேரனின் நலனையும் கருத்தில் கொண்டே... அவர் முடிந்தவரை சமாளித்துக் கொள்ளலாம் என நினைக்க...
ஆனால் நேரம் செல்லச் செல்ல மித்து உச்சபட்சமாக வீறிட்டு அலறி அழுது தன்னைத் தூக்குபவர்கள் ஒவ்வொருவரிடமும் தனக்கான அரவணைப்பும் பந்தமும் சொந்தமும் தேடித் தேடி கலைத்து தனக்கானவர்கள் இவர்கள் இல்லை என மீண்டும் மீண்டும் தன்னைச் சார்ந்தவர்களைத் தேடி அழுது கரைந்து கொண்டிருந்த வேளையில் தான் மனதார எந்த ஒரு தயக்கமும் மறுப்போ வெறுப்போ யோசனையும் இல்லாமல் அவனைப் பற்றி எதுவுமே தெரியாமல் கூட அவனை அன்னையாய் தாங்க வந்தாள் மது.
மித்துவின் அழுகையைக் கண்டு மது பதறிய அந்த உணர்வுகள் மித்துவிற்கும் வாய்மொழி வார்த்தைகளில் இல்லாது மது தூக்கித் தன் மார்போடு சேர்த்து அணைத்த விதத்திலேயே உணர முடிந்தது. என்னவோ தனக்கான சொந்தம் இவள் தான் எனப் புரிய அவளிடம் கொஞ்சமும் யோசிக்காமல் சரணடைந்திருந்தான் அந்த யசோதையின் கண்ணன்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேல் மித்துவை கைகளில் இருந்து இறக்காமல் தன் மார்போடு அணைத்து பிடித்தபடியே உறங்க வைத்து கொண்டிருந்தவளை வாஞ்சையாகப் பார்த்துக் கொண்டிருந்தார் லலிதா.
ஆனால் அதே சமயம் அவள் கண்களில் தெரிந்த சோர்வும் களைப்பும் ஒரு தாயாய் அவருக்குப் புரிய விடியற்காலையிலேயே வந்திருந்தபடியால் நிச்சயம் காலையில் எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டாள் என்பது தெளிவாக இதற்கு முன்பு எப்போது சாப்பிட்டாளோ...?! என்ன சாப்பிட்டாளோ...?! எனத் தோன்றவும்,
பணிப்பெண்ணிடம் சொல்லி முதலில் சூடாகப் பாலைக் கொண்டு வரச் சொன்னவர் மது எவ்வளவோ மறுத்தும் அவளை அருந்த வைத்த பின்பே விட்டார். அதேபோல ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காலை உணவையும் வரவழைத்து அவளை உண்ணச் சொல்ல... மது அமர்ந்து இருந்த இருக்கையில் ஒரு கையை மித்துவை பிடித்திருந்தவாறே அவளால் உணவை உண்ணுவதற்கு ஏற்ற வகையில் இல்லாமல் போக...
ஆனால் அதையும் சொல்ல விரும்பாமல் மது “இப்போது பசி இல்லை...” எனக் கூறி சமாளிக்க நினைக்கவும், மதுவின் மனதை நொடியில் அறிந்து கொண்ட லலிதா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் படுக்கையில் சாய்ந்து அமர்ந்தபடியே உண்ணுவதற்கு ஏற்றால் போல் இருக்கும் சைட் ஸ்டாண்ட் லலிதாவின் கண்ணசைவில் கொண்டு வரப்பட்டு அழகாக மதுவிற்கு வலதுபக்கம் நெருக்கமாக வைக்கப்பட...
மது கை கழுவக் கூட எழுந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இட்லி ஸ்பூனோடு பரிமாறப்பட்டு இருந்தாலும் ஃபிங்கர் பவுல் முதற்கொண்டு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.
இப்படி ஒரு கவனிப்பு தன் தகுதிக்கு ரொம்பவே மீறிய செயல் என மதுவிற்கு நன்கு புரிந்தாலும் அதைத் தடுக்கவோ வறுக்கவோ மதுவால் முடியவில்லை. காரணம் இவை அனைத்தும் தனக்காகச் செய்யப்படுவது இல்லை தன் கையில் இருக்கும் அவர்களின் வீட்டு பிள்ளைக்காகச் செய்யப்படுவது என்ற தெளிவு மதுவிற்கு இருந்ததனால்.
குழந்தையின் உறக்கம் கலையாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே இப்போது முதல் கடமை என்பது போலப் பெரிதாக மறுத்துப் பேசி நேரத்தை வீணாக்காமல் விரைவாகவே உண்டு முடித்திருந்தாள் மதுவும்.
ஒரு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண் மது. தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்துப் பூஜை செய்த பின்பே அன்றைய நாளை துவங்குவது அவளின் இத்தனை வருட வழக்கம்.
அவ்வளவு ஏன் தேநீர் கூட அதன் பிறகே அருந்துவர் அவள் வீட்டினர், ஆனால் அவற்றை எல்லாம் இங்குப் பார்க்க முடியுமா...? அதற்கும் மேல் தான் வந்திருப்பதன் நோக்கம் என்னவோ அதற்கேற்றார் போல் சடுதியில் தன்னை மாற்றிக் கொண்டு வளைந்து கொடுத்து சென்றாள் மது.
லலிதாவிற்குத் தான் எடுத்த முடிவு எந்த அளவிற்குச் சரி என்பதை அந்த அடுத்து வந்த மூன்று நாட்களில் பலமுறை நிரூபித்துக் காட்டி விட்டாள் மது. மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்பதற்காகவோ இல்லை அடுத்தவருடைய கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காகவோ எதையும் பார்த்து பார்த்து அவள் செய்யவில்லை என்றாலும் மித்துவின் விஷயத்தில் மது இயல்பாகச் செய்யும் ஒவ்வொரு செயலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது என்பது தான் உண்மை.
மித்து உறக்கம் கலைந்து எழுந்த பிறகு அவனைக் கொஞ்சி அவனோடு விளையாடியபடியே குளிக்க வைத்து உணவை ஊட்டி முடித்த மது. ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்து மித்துவை கவனித்துக் கொள்வதும் அவளின் செல்ல கண்ணனோ கொஞ்சம் கூட முகம் சுணங்காமலும் அழாமலும் அவளோடு ஒட்டிக் கொண்டு இருந்ததும் அவ்வளவு அழகாக இருந்தது.
அதே போல மதிய உணவிற்குச் சத்தான காய்கறிகளை வேக வைத்து குழைத்து சாதத்தோடு கலந்து ஊட்டியவள் செயற்கை உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது என்பதில் சற்று அதிகக் கறாராகவே இருந்தாள்.
இடையிடையே பழங்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கின்னத்தில் வைத்தபடி ஏதேதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டே மித்துவிற்குத் தெரியாமலேயே அவனை உண்ண வைத்துக் கொண்டிருந்தாள்.
தோட்டத்தில் அப்படிச் செய்தபடியே மது உலவிக் கொண்டிருப்பதைக் கண்கள் கலங்க தன் அறையின் படுக்கையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த லலிதாவிற்கு ‘மித்துப் பிறந்த போது இந்த வீட்டில் இருந்த சந்தோஷமும் ஆரவாரமும் கொண்டாட்டமும் குதூகலமும் நினைவுக்கு வந்தது..’ இந்தப் பிஞ்சு வயதில் அவனுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி அவர் வருந்தாத நாளே இல்லை.
தேவ் மகனை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமே அவருக்கு உண்டு. ஆனால் தாயின் அரவணைப்பு என்று கேள்வி வரும் போது மட்டும் அதற்கு விடை அளிக்கவும் விடை காணவும் முடியாமல் ஒரு வெற்றிடமாக இருந்த விஷயம் இன்று முழுமையாக ஒரு தாய் என்ற ஸ்தானத்தில் பூர்த்தியானதோ இல்லையோ...? மது தாய்க்கு நிகராகக் கவனம் எடுத்து பார்த்துக் கொள்வதைக் காணும் போது அவரின் மனதின் தவிப்பு சற்று அடங்கியது போல் உணர்ந்தார்.
இந்த நான்கு மாதங்களில் மட்டும் மித்துவை பார்த்துக் கொள்ள எட்டு பேருக்கும் மேல் நியமிக்கப்பட்டு ஒரு வாரம் பத்து நாட்களுக்குள்ளாகவே வேலையிலிருந்து நீக்கப்பட்டு இருந்தனர்.
முதலில் பெண்களை வேலைக்கு நியமிக்கக் கொஞ்சமும் தேவ் ஒத்துக் கொள்ளாததால் ஆண் கேர் டேக்கர்களையே நியமித்திருந்தான். ஆனால் அவர்கள் குழந்தையைக் கையாளும் விதமும் உணவு கொடுப்பது குளிக்க வைப்பது என ஒரு பொறுமை இன்றிச் செயல்படும் விதமும் எரிச்சலை கொடுக்க, மூன்று பேர்களை மாற்றி மாற்றி நியமித்தும் திருப்தி ஏற்படாமல் இருந்த வேளையில் தான்
“குழந்தைகளைக் கையாள்வது ஒரு கலை அவற்றைப் பெண்கள்தான் சரியாகச் செய்வர்... ஆண்களுக்கு அது அத்தனை சரியாக வராது...” என லலிதா புரிய வைக்க முயன்றார்.
“அப்போ நான் குழந்தையைச் சரியாகக் கவனிக்கவில்லையா...?” எனத் தேவ் திரும்பக் கேட்கவும், “அவரவர் பிள்ளைகளை அவங்கவங்க நல்லாதான் பாத்துக்குவாங்க... அடுத்தவர் பிள்ளை என்று வரும் போதுதான் எப்படிப் பார்த்துக்கிறாங்க என்பது கேள்வி...? பெண்களுக்குள் இயல்பாக இருக்கும் ஒரு தாய்மை உணர்வு எல்லாக் குழந்தைகளையுமே தன் குழந்தையாய் தாங்கும்...” என்ற லலிதா “ஒரு பெண்ணே இந்த வேலைக்குச் சரி...” என வாதிட,
அவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுத்தவன் முதலில் நியமித்தது 45 வயதிற்கு மேல் உள்ள ஒருவரையே, இளம் பெண்கள் இந்த வீட்டிற்குள் வருவதைத் தேவ் சுத்தமாக விரும்பவில்லை, அதற்காகவே இந்த ஏற்பாடு.
ஆனால் அவரின் வயதின் காரணமாகவோ என்னவோ இல்லை இருபத்தைந்து வருட உழைப்பினால் வந்த சலிப்போ எப்போதுமே சிடுசிடுவென அவர் மித்துவிடம் நடந்து கொள்வதைக் கண்டவன் ஒரு வாரத்திலேயே அவரையும் வேலையை விட்டு நீக்கி இருந்தான்.
அடுத்தும் அதே போலச் சற்று வயதானவரையே நியமிக்க... அவரோ சிடுசிடுக்கவெல்லாம் இல்லை குழந்தையை நன்றாகவே பார்த்துக் கொண்டார். ஆனாலும் அவர் உடல் உபாதைகளின் காரணமாக இரவில் மாத்திரை உண்டுவிட்டு உறங்குபவர் நடுநிசியில் குழந்தை எழுந்து அழும் போது எழுந்து கவனிக்க முடியாமல் போக...
அவற்றால் மித்து வீறிட்டு அழும் குரல் கேட்டு தன் அறையில் இருந்து எழுந்து வந்து பார்த்தவன் அவரையும் அன்றோடு வேலையிலிருந்து நீக்கி இருந்தான்.
“இதே போல் வயதானவர்களையே நியமித்தால் இப்படித்தான் ஏதாவது ஒரு பிரச்சினை வரும்...” என லலிதா மீண்டும் வாதிட, அவருக்காக இளம் பெண்களை நியமித்திருந்தான்.
முதலில் வந்தவளோ வீட்டின் முதலாளி படுக்கையில் இருப்பதும் தேவ் வேலை வேலை என அலைந்து கொண்டிருப்பதையும் பயன்படுத்தி முடிந்தவரை கொஞ்சம் கொஞ்சமாகத் திருட தொடங்கியிருந்தாள். அந்தப் பெண் வந்த பத்து நாட்களிலேயே அவளின் பழக்கத்தைக் கண்டு கொண்ட லலிதா மித்துவை நன்றாகப் பார்த்துக் கொள்வதால் அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட...
இதுதான் இவர்களின் பலஹீனம் எனத் தெரிந்துக் கொண்டவளோ சற்று அதிகமாகவே கை நீட்ட தொடங்கியிருந்தாள். ஆனால் ‘இவை தேவ் காதிற்குச் செல்லும் வரை தான் தனக்கு இந்த வாழ்வு...’ என்பது அவளுக்கு அந்த நிமிடம் புரியாமல் போனது.
தன் அதீத கை வரிசையின் காரணமாகத் தேவ்விடமே கையும் களவுமாக மாட்டிக் கொண்டவளை கையோடு காவல்துறையில் பிடித்துக் கொடுத்துவிட்டே அடுத்த வேலை பார்த்தான்.
அடுத்து வந்த இரு பெண்களும் வீட்டின் நிலையையும் குழந்தையின் நிலையையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு இந்த வளமான வாழ்க்கையைத் தங்கள் வசப்படுத்த தங்களால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்தார்கள்.
ஒருத்தி எப்படியாவது தேவ்வை மயக்கி திருமணம் செய்து கொண்டால் அத்தனை சொத்தும் தனக்குத் தான் என்ற எண்ணத்தில் மித்துவை பகடைக்காயாக வைத்து இதைச் செயல்படுத்த தேவ்விடம் முயற்சி செய்ய...
முதல்முறை அதைக் கண்டுக் கொள்ளாமல் விட்ட தேவ்வை கண்டவள் அதையே தனக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் எண்ணி மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவளை தேவ் விட்ட ஒரே அறையில் அந்தப் பெண்ணிற்கு இரண்டு காதுமே கேட்காமல் போனது.
அடுத்து வந்தவளோ இன்னும் ஒருபடி அதிகமாகப் போய் ‘உனக்கு எந்த விதத்தில் வேண்டுமானாலும் வளைந்து கொடுக்க நான் தயார் அதற்கு ஏற்றார் போல என்னை நீ இங்குக் கவனித்துக்கொள்...’ என்பது போலத் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டாள்.
இது போலப் பல பேரை பார்த்திருப்பவன் என்பதாலும் அவர்களை எல்லாம் மிக சாதாரணமாகக் கையாள்பவன் என்பதாலும் சற்று விட்டு பிடிக்க... ஆனால் அவளோ இந்த விஷயத்தை வைத்து தேவ்வை வளைப்பது வெகு சுலபம் என முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டு,
எப்போதும் இரவில் தேவ் தன் படுக்கை அறையின் கதவை தாழ் போடுவதில்லை, தன் தாயின் உடல்நிலை மற்றும் குழந்தையின் அவசர உதவிக்குத் தேவைப்படும் என்பதனால், இப்படிச் செய்வதை அறிந்து கொண்டிருந்திருந்தவள்,
ஒரு இரவு வேளையில் அபாயகரமாக உள்ளே இருப்பதை அப்படியே வெளியே வெளிச்சம் போட்டு காட்டும் வகையான சேலையில் அதீத ஒப்பனையோடு சென்று தேவ்வின் படுக்கையில் அமர்ந்தபடி அவனைத் தன்வசப்படுத்த முயன்றவளை எழுந்து சலனம் இல்லாமல் பார்த்தவன்,
“உன் அறையில் போய் இரு வரேன்...” எனச் சொல்ல, அதையே தனக்குக் கிடைத்த வெற்றியாக எண்ணி குதித்தபடி அறைக்குச் சென்றாள். அடுத்த அரைமணி நேரத்தில் தன் அலைபேசிக்கு வந்த மெசேஜ்ஜை ஓப்பன் செய்து பார்த்தவள் உட்ச பட்சமாக அதிர்ந்தாள்.
அதில் அவள் தேவ் அறைக்குள் நுழைந்ததில் இருந்து தேவ்வை மயக்க முயன்றது, அவனிடம் பேசியது என அத்தனையும் பதிவாகியிருக்க, கேமரா வைத்திருந்த ஆங்கிளின் மூலம் தேவ்வின் முகம் பதிவாகாமல் ஒருவன் படுக்கையில் படுத்திருப்பது அவன் அருகில் படுக்கையில் அமர்ந்து இவள் பேசிக் கொண்டிருப்பது என அனைத்தும் தெளிவாக வார்த்தை பிசகாமல் பதிவாகியிருந்ததோடு, அவை அந்த நிமிடமே சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆக்கப்பட்டுப் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.
இங்குப் பலர் தவறு செய்வதே தாங்கள் செய்யும் தவறு மற்றவர்களுக்குத் தெரியாது என்ற தைரியத்தினாலேயே, ஆனால் இங்கு அவளின் முயற்சிகள் அனைத்தும் வெட்டவெளிச்சமாக்க பட்டுவிட, அவமானத்தில் கூனி குறுகி போனவளை இன்னும் குத்திக் கிழிக்கும் வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியவனைக் கண்டு,
“உங்களுக்குப் பிடிக்கலைனா விட்டு விட வேண்டியது தானே... ஏன் இப்படிச் செஞ்சீங்க...” என அழுகையோடு கேட்டவளை கண்டு ஏளனமாக நகைத்தவன் “இதே ஒரு பெண்கிட்ட ஒரு ஆள் வந்து கேட்டு உங்களுக்குப் பிடிக்கலைனா விட்டுட வேண்டியதுதானே அப்படின்னு சொன்னா சும்மா இருப்பீங்களா...? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா...? உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...? செய்யுறது அத்தனையும் **** வேலை ஆனா போடுவது மட்டும் பத்தினி வேஷம்... இனி யாரும் உன்னை நம்பி வீட்டுக்குள்ள சேர்க்கவே கூடாது... எந்த வீட்டுக்குள்ளேயும் நுழையும் தகுதி உனக்கு இல்லை... அதை வெளிச்சம் போட்டுக் காட்டவே இப்படிச் செஞ்சேன்...” என நாக்கை வாளாக மாற்றி அவளைக் குத்திக் கிழித்தவன், அந்த நடு இரவு என்றும் பாராமல் அவளை வீட்டை விட்டு வெளியே துரத்தினான்.
இதுபோன்ற தொடர் அனுபவங்களிலேயே இனி வீட்டிற்கு மித்துவை பார்த்துக் கொள்ள யாரையும் நியமிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தான். ஆனால் இப்போது மது கொண்டு வந்திருந்தது பத்து நாட்களுக்கு முன்னால் வந்த பழைய செய்தித்தாள், அதிலிருந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு தான் அவள் வந்திருந்தாள்.
இவை அனைத்துமே பார்க்காமலேயே மதுவின் மேல் கோபத்தையும் வன்மத்தையும் வளர்த்துக் கொள்வதற்குக் காரணமாக அமைந்தது. ‘இந்த முறையும் நிச்சயம் யாரோ ஒரு ஏமாற்றுக்காரி தான் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறாள்... என்ன இவளின் ஏமாற்றுத் தந்திரம் சற்று மாறுபட்டு இருக்கிறது...’ என்று எண்ணிக் கொண்டிருந்தவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு அவசரமாக இந்தியா வந்து இறங்கினான்.
அதற்காகவே காத்திருந்தது போல் அழைத்த அவனின் அலைபேசியில் ஒளிர்ந்த லலிதாவின் கேர் டேக்கர் ராஜி அழைப்பது தெரியவும் பதட்டத்தோடு எடுத்துக் காத்திற்குக் கொடுத்தவன் ஒரு சில உடல் உபாதைகளின் காரணமாக லலிதா அவதிப்படுவதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தைச் சொல்லவும், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு நேராக மருத்துவமனைக்குச் சென்று லலிதாவின் வருகைக்காகக் காத்திருந்தான்.
தேவ் மருத்துவமனையை அடைந்த ஐந்து நிமிடங்களில் லலிதாவும் வந்து விட, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் “பெரிதாக எந்தப் பிரச்சினையும் இல்லை... இது போலச் சில நேரங்களில் ஏற்படுவதுதான்...” எனக் கூறி “ஒரு நாள் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு சொல்ல...” அதன்படி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அளிக்கப்பட்ட சிகிச்சையாலும் மருந்தின் உதவியாலும் உறங்கிக் கொண்டிருக்கும் லலிதாவின் அருகில் அமர்ந்திருந்தவனைக் கண்ட மருத்துவர் “இனி அவர் காலையில் தான் கண் விழிப்பார்… நல்லா நன்றாக உறங்குவதற்கு மருந்து கொடுக்கப்பட்டு இருக்கு... நீங்கள் இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை... வீட்டிற்குச் சென்று விட்டுக் காலையில் வாருங்கள்...” எனக் கூறவும் அந்தப் பதினொரு மணி இரவில் வீட்டை வந்தடைந்தான் தேவ்.
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
லலிதாவிற்கு மதுவை பார்த்த கணத்திலேயே அவ்வளவு பிடித்து இருந்தது. அதை விட அதிகமாகப் பேசும் போது குழந்தையைப் போன்ற குணமும் உலகம் அறியா அப்பாவியாக இருந்தவளை ரொம்பவே பிடித்துப் போனது.
ஆனால் அதற்கு அப்படியே நேர் மாறாக அவரின் சீமந்த புத்திரனுக்கு “தான் இல்லாத நேரத்தில் தன்னை ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் நியமிக்கப்பட்டிருந்த மதுவை லலிதாவின் வாய்மொழியாக அவர் இவளை வானளவு புகழ்வதைக் கேட்டுச் சுத்தமாகப் பிடிக்காமல் போனது.
‘நிச்சயமாக அவள் ஏதோ பெரிய திட்டத்தோடு தான் நான் அங்கு இல்லாத நேரமாகப் பார்த்து உள்ளே நுழைந்து நன்றாக நடித்துத் தன் தாயை ஏமாற்றி இருக்கிறாள் என்றே முழுமையாக நம்பியவன், இன்னும் மூன்று நாட்களில் வந்து உன்னை வீட்டை விட்டு துரத்துவது தான் முதல் வேலை...’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தான்.
முதலில் லலிதாவின் மேல் ‘எத்தனை முறை அனுபவப்பட்டாலும் மீண்டும் மீண்டும் தன் இளகிய மனதால் இப்படி ஏமாறுகிறார்களே...’ என்று எழுந்த கோபம் கூட அவர் மதுவைப் பற்றிச் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து, இது நிச்சயம் இவளுடைய ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும்... அந்த அளவிற்கு நடித்து அவரை நம்ப வைத்திருக்கிறாள்...’ என்று முழுமையாக நம்பி லலிதாவின் மேல் இருந்த கோபத்தையும் கூடச் சேர்த்து மதுவின் மேல் டன் டன்னாக மூட்டை கட்டி வைத்திருந்தான், அவளைக் கண்ட நொடியில் அவள் மேல் இறக்குவதற்காக...
ஆனால் இதில் தேவ் அறியாதது ஒன்று உண்டு, அது என்னவென்றால் மதுவை தேர்ந்தெடுத்தது லலிதா அம்மா மட்டும் அல்ல இன்னொரு அந்த வீட்டின் பெரிய மனுஷனும் தான். அவன் தான் அந்த நிமிடம் வரை யார் கையிலும் அடங்காதவன் யாரிடமும் உறங்காதவன் பாந்தமாக மதுவின் கைகளில் அடங்கி உறங்கி தன் சம்மதத்தை லலிதா அம்மாவிற்குப் புரியும்படி செய்ததாலேயே அவரும் மதுவை மனதார ஏற்றுக் கொண்டிருந்தார்.
இரவெல்லாம் அழுகையோடு மித்து உறங்காமல் கதறிக் கொண்டு இருந்ததைக் காண சகிக்க முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த லலிதாவிற்கு மட்டுமே தெரியும் இந்த நிலையில் அவர் மனம்பட்ட அவதியின் அளவு என்னவென்று, அவனைத் தூக்கி ஆறுதல்படுத்த கூடத் தன் உடல்நிலை ஒத்துழைக்காது, தன் வீட்டின் வாரிசு தன் கண்முன்னாலேயே கதறி துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மௌனமாகக் கண்ணீர் வடித்தபடி அவரும் துடித்துக் கொண்டு தான் இருந்தார்.
கடந்த நான்கு மாதங்களாகவே வெளிநாட்டுப் பயணத்தை எல்லாம் ரத்துச் செய்து அவனை நெஞ்சுக்குள் வைத்து பார்த்துக் கொண்டிருந்த தேவ் கிளம்பி சென்ற அன்றிலிருந்தே பிள்ளையின் அழுகை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
எவ்வளவோ இந்தப் பயணத்தைத் தள்ளிப் போடவும் ரத்து செய்யவும் முயன்றும் அந்த முயற்சிகள் பலனளிக்காமல் போனதினாலேயே வேறுவழியின்றிக் கிளம்பி சென்றிருந்தான்.
அன்றிலிருந்து இந்த மூன்று நாட்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்த அழுகையும் அடமும் நேற்று மதியத்தில் தொடங்கி நேரம் செல்லச் செல்ல எல்லை கோட்டை தாண்டி சென்று கொண்டிருந்தது.
தாயின் அரவணைப்பும் கிடைக்காமல் இந்த நான்கு மாதங்களாக அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் தேவ்வின் அரவணைப்பு மட்டுமே, பிறந்ததிலிருந்து தேவ்வின் கை சூட்டை உணர்ந்தவனாதலால் அவனுக்குள் இயல்பாகப் பொருந்திப் போக குழந்தையால் முடிந்தது.
அதேபோல இப்போது இருப்பவர்களில் தேவ்வுக்கு அடுத்து அதிகம் உணர்ந்தது லலிதாவின் அரவணைப்பை தான். ஆனால் இந்த நிமிடம் அதை அவனுக்கு வழங்க முடியாத நிலையில் லலிதா இருக்கவே தான் இப்படி எதுவும் செய்ய முடியாத நிலைக்கு அவரைத் தள்ளியது.
மூன்று நாட்களாக இப்படித்தான் இருக்கிறான் என்பதை அவர்கள் தேவ்வுக்குத் தெரியப்படுத்தவில்லை, எந்த மாதிரி சூழ்நிலையில் என்ன மாதிரியான ஒரு மனநிலையில் இங்கிருந்து தேவ் சென்று இருக்கிறான் என்பதை அறிந்து ஒரு தாயாக அவனைப் பற்றியும் யோசித்துப் பணி செய்பவர்களிடம் தெரியப்படுத்தக் கூடாது எனக் கட்டளையிட்டிருந்தார்.
ஏனென்றால் அவருக்கு நிச்சயம் தெரியும் இந்த விஷயம் தெரிய வந்தது என்றால் ஒரு நொடி கூட அங்கு நிற்காமல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனைத்தையும் தூக்கி போட்டு விட்டு மகனைக் காண ஓடி வந்து விடுவான் என்பது, எனவே லலிதா மகனின் நலனையும் பேரனின் நலனையும் கருத்தில் கொண்டே... அவர் முடிந்தவரை சமாளித்துக் கொள்ளலாம் என நினைக்க...
ஆனால் நேரம் செல்லச் செல்ல மித்து உச்சபட்சமாக வீறிட்டு அலறி அழுது தன்னைத் தூக்குபவர்கள் ஒவ்வொருவரிடமும் தனக்கான அரவணைப்பும் பந்தமும் சொந்தமும் தேடித் தேடி கலைத்து தனக்கானவர்கள் இவர்கள் இல்லை என மீண்டும் மீண்டும் தன்னைச் சார்ந்தவர்களைத் தேடி அழுது கரைந்து கொண்டிருந்த வேளையில் தான் மனதார எந்த ஒரு தயக்கமும் மறுப்போ வெறுப்போ யோசனையும் இல்லாமல் அவனைப் பற்றி எதுவுமே தெரியாமல் கூட அவனை அன்னையாய் தாங்க வந்தாள் மது.
மித்துவின் அழுகையைக் கண்டு மது பதறிய அந்த உணர்வுகள் மித்துவிற்கும் வாய்மொழி வார்த்தைகளில் இல்லாது மது தூக்கித் தன் மார்போடு சேர்த்து அணைத்த விதத்திலேயே உணர முடிந்தது. என்னவோ தனக்கான சொந்தம் இவள் தான் எனப் புரிய அவளிடம் கொஞ்சமும் யோசிக்காமல் சரணடைந்திருந்தான் அந்த யசோதையின் கண்ணன்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேல் மித்துவை கைகளில் இருந்து இறக்காமல் தன் மார்போடு அணைத்து பிடித்தபடியே உறங்க வைத்து கொண்டிருந்தவளை வாஞ்சையாகப் பார்த்துக் கொண்டிருந்தார் லலிதா.
ஆனால் அதே சமயம் அவள் கண்களில் தெரிந்த சோர்வும் களைப்பும் ஒரு தாயாய் அவருக்குப் புரிய விடியற்காலையிலேயே வந்திருந்தபடியால் நிச்சயம் காலையில் எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டாள் என்பது தெளிவாக இதற்கு முன்பு எப்போது சாப்பிட்டாளோ...?! என்ன சாப்பிட்டாளோ...?! எனத் தோன்றவும்,
பணிப்பெண்ணிடம் சொல்லி முதலில் சூடாகப் பாலைக் கொண்டு வரச் சொன்னவர் மது எவ்வளவோ மறுத்தும் அவளை அருந்த வைத்த பின்பே விட்டார். அதேபோல ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காலை உணவையும் வரவழைத்து அவளை உண்ணச் சொல்ல... மது அமர்ந்து இருந்த இருக்கையில் ஒரு கையை மித்துவை பிடித்திருந்தவாறே அவளால் உணவை உண்ணுவதற்கு ஏற்ற வகையில் இல்லாமல் போக...
ஆனால் அதையும் சொல்ல விரும்பாமல் மது “இப்போது பசி இல்லை...” எனக் கூறி சமாளிக்க நினைக்கவும், மதுவின் மனதை நொடியில் அறிந்து கொண்ட லலிதா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் படுக்கையில் சாய்ந்து அமர்ந்தபடியே உண்ணுவதற்கு ஏற்றால் போல் இருக்கும் சைட் ஸ்டாண்ட் லலிதாவின் கண்ணசைவில் கொண்டு வரப்பட்டு அழகாக மதுவிற்கு வலதுபக்கம் நெருக்கமாக வைக்கப்பட...
மது கை கழுவக் கூட எழுந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இட்லி ஸ்பூனோடு பரிமாறப்பட்டு இருந்தாலும் ஃபிங்கர் பவுல் முதற்கொண்டு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.
இப்படி ஒரு கவனிப்பு தன் தகுதிக்கு ரொம்பவே மீறிய செயல் என மதுவிற்கு நன்கு புரிந்தாலும் அதைத் தடுக்கவோ வறுக்கவோ மதுவால் முடியவில்லை. காரணம் இவை அனைத்தும் தனக்காகச் செய்யப்படுவது இல்லை தன் கையில் இருக்கும் அவர்களின் வீட்டு பிள்ளைக்காகச் செய்யப்படுவது என்ற தெளிவு மதுவிற்கு இருந்ததனால்.
குழந்தையின் உறக்கம் கலையாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே இப்போது முதல் கடமை என்பது போலப் பெரிதாக மறுத்துப் பேசி நேரத்தை வீணாக்காமல் விரைவாகவே உண்டு முடித்திருந்தாள் மதுவும்.
ஒரு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண் மது. தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்துப் பூஜை செய்த பின்பே அன்றைய நாளை துவங்குவது அவளின் இத்தனை வருட வழக்கம்.
அவ்வளவு ஏன் தேநீர் கூட அதன் பிறகே அருந்துவர் அவள் வீட்டினர், ஆனால் அவற்றை எல்லாம் இங்குப் பார்க்க முடியுமா...? அதற்கும் மேல் தான் வந்திருப்பதன் நோக்கம் என்னவோ அதற்கேற்றார் போல் சடுதியில் தன்னை மாற்றிக் கொண்டு வளைந்து கொடுத்து சென்றாள் மது.
லலிதாவிற்குத் தான் எடுத்த முடிவு எந்த அளவிற்குச் சரி என்பதை அந்த அடுத்து வந்த மூன்று நாட்களில் பலமுறை நிரூபித்துக் காட்டி விட்டாள் மது. மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்பதற்காகவோ இல்லை அடுத்தவருடைய கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காகவோ எதையும் பார்த்து பார்த்து அவள் செய்யவில்லை என்றாலும் மித்துவின் விஷயத்தில் மது இயல்பாகச் செய்யும் ஒவ்வொரு செயலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது என்பது தான் உண்மை.
மித்து உறக்கம் கலைந்து எழுந்த பிறகு அவனைக் கொஞ்சி அவனோடு விளையாடியபடியே குளிக்க வைத்து உணவை ஊட்டி முடித்த மது. ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்து மித்துவை கவனித்துக் கொள்வதும் அவளின் செல்ல கண்ணனோ கொஞ்சம் கூட முகம் சுணங்காமலும் அழாமலும் அவளோடு ஒட்டிக் கொண்டு இருந்ததும் அவ்வளவு அழகாக இருந்தது.
அதே போல மதிய உணவிற்குச் சத்தான காய்கறிகளை வேக வைத்து குழைத்து சாதத்தோடு கலந்து ஊட்டியவள் செயற்கை உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது என்பதில் சற்று அதிகக் கறாராகவே இருந்தாள்.
இடையிடையே பழங்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கின்னத்தில் வைத்தபடி ஏதேதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டே மித்துவிற்குத் தெரியாமலேயே அவனை உண்ண வைத்துக் கொண்டிருந்தாள்.
தோட்டத்தில் அப்படிச் செய்தபடியே மது உலவிக் கொண்டிருப்பதைக் கண்கள் கலங்க தன் அறையின் படுக்கையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த லலிதாவிற்கு ‘மித்துப் பிறந்த போது இந்த வீட்டில் இருந்த சந்தோஷமும் ஆரவாரமும் கொண்டாட்டமும் குதூகலமும் நினைவுக்கு வந்தது..’ இந்தப் பிஞ்சு வயதில் அவனுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி அவர் வருந்தாத நாளே இல்லை.
தேவ் மகனை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமே அவருக்கு உண்டு. ஆனால் தாயின் அரவணைப்பு என்று கேள்வி வரும் போது மட்டும் அதற்கு விடை அளிக்கவும் விடை காணவும் முடியாமல் ஒரு வெற்றிடமாக இருந்த விஷயம் இன்று முழுமையாக ஒரு தாய் என்ற ஸ்தானத்தில் பூர்த்தியானதோ இல்லையோ...? மது தாய்க்கு நிகராகக் கவனம் எடுத்து பார்த்துக் கொள்வதைக் காணும் போது அவரின் மனதின் தவிப்பு சற்று அடங்கியது போல் உணர்ந்தார்.
இந்த நான்கு மாதங்களில் மட்டும் மித்துவை பார்த்துக் கொள்ள எட்டு பேருக்கும் மேல் நியமிக்கப்பட்டு ஒரு வாரம் பத்து நாட்களுக்குள்ளாகவே வேலையிலிருந்து நீக்கப்பட்டு இருந்தனர்.
முதலில் பெண்களை வேலைக்கு நியமிக்கக் கொஞ்சமும் தேவ் ஒத்துக் கொள்ளாததால் ஆண் கேர் டேக்கர்களையே நியமித்திருந்தான். ஆனால் அவர்கள் குழந்தையைக் கையாளும் விதமும் உணவு கொடுப்பது குளிக்க வைப்பது என ஒரு பொறுமை இன்றிச் செயல்படும் விதமும் எரிச்சலை கொடுக்க, மூன்று பேர்களை மாற்றி மாற்றி நியமித்தும் திருப்தி ஏற்படாமல் இருந்த வேளையில் தான்
“குழந்தைகளைக் கையாள்வது ஒரு கலை அவற்றைப் பெண்கள்தான் சரியாகச் செய்வர்... ஆண்களுக்கு அது அத்தனை சரியாக வராது...” என லலிதா புரிய வைக்க முயன்றார்.
“அப்போ நான் குழந்தையைச் சரியாகக் கவனிக்கவில்லையா...?” எனத் தேவ் திரும்பக் கேட்கவும், “அவரவர் பிள்ளைகளை அவங்கவங்க நல்லாதான் பாத்துக்குவாங்க... அடுத்தவர் பிள்ளை என்று வரும் போதுதான் எப்படிப் பார்த்துக்கிறாங்க என்பது கேள்வி...? பெண்களுக்குள் இயல்பாக இருக்கும் ஒரு தாய்மை உணர்வு எல்லாக் குழந்தைகளையுமே தன் குழந்தையாய் தாங்கும்...” என்ற லலிதா “ஒரு பெண்ணே இந்த வேலைக்குச் சரி...” என வாதிட,
அவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுத்தவன் முதலில் நியமித்தது 45 வயதிற்கு மேல் உள்ள ஒருவரையே, இளம் பெண்கள் இந்த வீட்டிற்குள் வருவதைத் தேவ் சுத்தமாக விரும்பவில்லை, அதற்காகவே இந்த ஏற்பாடு.
ஆனால் அவரின் வயதின் காரணமாகவோ என்னவோ இல்லை இருபத்தைந்து வருட உழைப்பினால் வந்த சலிப்போ எப்போதுமே சிடுசிடுவென அவர் மித்துவிடம் நடந்து கொள்வதைக் கண்டவன் ஒரு வாரத்திலேயே அவரையும் வேலையை விட்டு நீக்கி இருந்தான்.
அடுத்தும் அதே போலச் சற்று வயதானவரையே நியமிக்க... அவரோ சிடுசிடுக்கவெல்லாம் இல்லை குழந்தையை நன்றாகவே பார்த்துக் கொண்டார். ஆனாலும் அவர் உடல் உபாதைகளின் காரணமாக இரவில் மாத்திரை உண்டுவிட்டு உறங்குபவர் நடுநிசியில் குழந்தை எழுந்து அழும் போது எழுந்து கவனிக்க முடியாமல் போக...
அவற்றால் மித்து வீறிட்டு அழும் குரல் கேட்டு தன் அறையில் இருந்து எழுந்து வந்து பார்த்தவன் அவரையும் அன்றோடு வேலையிலிருந்து நீக்கி இருந்தான்.
“இதே போல் வயதானவர்களையே நியமித்தால் இப்படித்தான் ஏதாவது ஒரு பிரச்சினை வரும்...” என லலிதா மீண்டும் வாதிட, அவருக்காக இளம் பெண்களை நியமித்திருந்தான்.
முதலில் வந்தவளோ வீட்டின் முதலாளி படுக்கையில் இருப்பதும் தேவ் வேலை வேலை என அலைந்து கொண்டிருப்பதையும் பயன்படுத்தி முடிந்தவரை கொஞ்சம் கொஞ்சமாகத் திருட தொடங்கியிருந்தாள். அந்தப் பெண் வந்த பத்து நாட்களிலேயே அவளின் பழக்கத்தைக் கண்டு கொண்ட லலிதா மித்துவை நன்றாகப் பார்த்துக் கொள்வதால் அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட...
இதுதான் இவர்களின் பலஹீனம் எனத் தெரிந்துக் கொண்டவளோ சற்று அதிகமாகவே கை நீட்ட தொடங்கியிருந்தாள். ஆனால் ‘இவை தேவ் காதிற்குச் செல்லும் வரை தான் தனக்கு இந்த வாழ்வு...’ என்பது அவளுக்கு அந்த நிமிடம் புரியாமல் போனது.
தன் அதீத கை வரிசையின் காரணமாகத் தேவ்விடமே கையும் களவுமாக மாட்டிக் கொண்டவளை கையோடு காவல்துறையில் பிடித்துக் கொடுத்துவிட்டே அடுத்த வேலை பார்த்தான்.
அடுத்து வந்த இரு பெண்களும் வீட்டின் நிலையையும் குழந்தையின் நிலையையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு இந்த வளமான வாழ்க்கையைத் தங்கள் வசப்படுத்த தங்களால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்தார்கள்.
ஒருத்தி எப்படியாவது தேவ்வை மயக்கி திருமணம் செய்து கொண்டால் அத்தனை சொத்தும் தனக்குத் தான் என்ற எண்ணத்தில் மித்துவை பகடைக்காயாக வைத்து இதைச் செயல்படுத்த தேவ்விடம் முயற்சி செய்ய...
முதல்முறை அதைக் கண்டுக் கொள்ளாமல் விட்ட தேவ்வை கண்டவள் அதையே தனக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் எண்ணி மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவளை தேவ் விட்ட ஒரே அறையில் அந்தப் பெண்ணிற்கு இரண்டு காதுமே கேட்காமல் போனது.
அடுத்து வந்தவளோ இன்னும் ஒருபடி அதிகமாகப் போய் ‘உனக்கு எந்த விதத்தில் வேண்டுமானாலும் வளைந்து கொடுக்க நான் தயார் அதற்கு ஏற்றார் போல என்னை நீ இங்குக் கவனித்துக்கொள்...’ என்பது போலத் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டாள்.
இது போலப் பல பேரை பார்த்திருப்பவன் என்பதாலும் அவர்களை எல்லாம் மிக சாதாரணமாகக் கையாள்பவன் என்பதாலும் சற்று விட்டு பிடிக்க... ஆனால் அவளோ இந்த விஷயத்தை வைத்து தேவ்வை வளைப்பது வெகு சுலபம் என முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டு,
எப்போதும் இரவில் தேவ் தன் படுக்கை அறையின் கதவை தாழ் போடுவதில்லை, தன் தாயின் உடல்நிலை மற்றும் குழந்தையின் அவசர உதவிக்குத் தேவைப்படும் என்பதனால், இப்படிச் செய்வதை அறிந்து கொண்டிருந்திருந்தவள்,
ஒரு இரவு வேளையில் அபாயகரமாக உள்ளே இருப்பதை அப்படியே வெளியே வெளிச்சம் போட்டு காட்டும் வகையான சேலையில் அதீத ஒப்பனையோடு சென்று தேவ்வின் படுக்கையில் அமர்ந்தபடி அவனைத் தன்வசப்படுத்த முயன்றவளை எழுந்து சலனம் இல்லாமல் பார்த்தவன்,
“உன் அறையில் போய் இரு வரேன்...” எனச் சொல்ல, அதையே தனக்குக் கிடைத்த வெற்றியாக எண்ணி குதித்தபடி அறைக்குச் சென்றாள். அடுத்த அரைமணி நேரத்தில் தன் அலைபேசிக்கு வந்த மெசேஜ்ஜை ஓப்பன் செய்து பார்த்தவள் உட்ச பட்சமாக அதிர்ந்தாள்.
அதில் அவள் தேவ் அறைக்குள் நுழைந்ததில் இருந்து தேவ்வை மயக்க முயன்றது, அவனிடம் பேசியது என அத்தனையும் பதிவாகியிருக்க, கேமரா வைத்திருந்த ஆங்கிளின் மூலம் தேவ்வின் முகம் பதிவாகாமல் ஒருவன் படுக்கையில் படுத்திருப்பது அவன் அருகில் படுக்கையில் அமர்ந்து இவள் பேசிக் கொண்டிருப்பது என அனைத்தும் தெளிவாக வார்த்தை பிசகாமல் பதிவாகியிருந்ததோடு, அவை அந்த நிமிடமே சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆக்கப்பட்டுப் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.
இங்குப் பலர் தவறு செய்வதே தாங்கள் செய்யும் தவறு மற்றவர்களுக்குத் தெரியாது என்ற தைரியத்தினாலேயே, ஆனால் இங்கு அவளின் முயற்சிகள் அனைத்தும் வெட்டவெளிச்சமாக்க பட்டுவிட, அவமானத்தில் கூனி குறுகி போனவளை இன்னும் குத்திக் கிழிக்கும் வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியவனைக் கண்டு,
“உங்களுக்குப் பிடிக்கலைனா விட்டு விட வேண்டியது தானே... ஏன் இப்படிச் செஞ்சீங்க...” என அழுகையோடு கேட்டவளை கண்டு ஏளனமாக நகைத்தவன் “இதே ஒரு பெண்கிட்ட ஒரு ஆள் வந்து கேட்டு உங்களுக்குப் பிடிக்கலைனா விட்டுட வேண்டியதுதானே அப்படின்னு சொன்னா சும்மா இருப்பீங்களா...? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா...? உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...? செய்யுறது அத்தனையும் **** வேலை ஆனா போடுவது மட்டும் பத்தினி வேஷம்... இனி யாரும் உன்னை நம்பி வீட்டுக்குள்ள சேர்க்கவே கூடாது... எந்த வீட்டுக்குள்ளேயும் நுழையும் தகுதி உனக்கு இல்லை... அதை வெளிச்சம் போட்டுக் காட்டவே இப்படிச் செஞ்சேன்...” என நாக்கை வாளாக மாற்றி அவளைக் குத்திக் கிழித்தவன், அந்த நடு இரவு என்றும் பாராமல் அவளை வீட்டை விட்டு வெளியே துரத்தினான்.
இதுபோன்ற தொடர் அனுபவங்களிலேயே இனி வீட்டிற்கு மித்துவை பார்த்துக் கொள்ள யாரையும் நியமிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தான். ஆனால் இப்போது மது கொண்டு வந்திருந்தது பத்து நாட்களுக்கு முன்னால் வந்த பழைய செய்தித்தாள், அதிலிருந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு தான் அவள் வந்திருந்தாள்.
இவை அனைத்துமே பார்க்காமலேயே மதுவின் மேல் கோபத்தையும் வன்மத்தையும் வளர்த்துக் கொள்வதற்குக் காரணமாக அமைந்தது. ‘இந்த முறையும் நிச்சயம் யாரோ ஒரு ஏமாற்றுக்காரி தான் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறாள்... என்ன இவளின் ஏமாற்றுத் தந்திரம் சற்று மாறுபட்டு இருக்கிறது...’ என்று எண்ணிக் கொண்டிருந்தவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு அவசரமாக இந்தியா வந்து இறங்கினான்.
அதற்காகவே காத்திருந்தது போல் அழைத்த அவனின் அலைபேசியில் ஒளிர்ந்த லலிதாவின் கேர் டேக்கர் ராஜி அழைப்பது தெரியவும் பதட்டத்தோடு எடுத்துக் காத்திற்குக் கொடுத்தவன் ஒரு சில உடல் உபாதைகளின் காரணமாக லலிதா அவதிப்படுவதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தைச் சொல்லவும், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு நேராக மருத்துவமனைக்குச் சென்று லலிதாவின் வருகைக்காகக் காத்திருந்தான்.
தேவ் மருத்துவமனையை அடைந்த ஐந்து நிமிடங்களில் லலிதாவும் வந்து விட, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் “பெரிதாக எந்தப் பிரச்சினையும் இல்லை... இது போலச் சில நேரங்களில் ஏற்படுவதுதான்...” எனக் கூறி “ஒரு நாள் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு சொல்ல...” அதன்படி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அளிக்கப்பட்ட சிகிச்சையாலும் மருந்தின் உதவியாலும் உறங்கிக் கொண்டிருக்கும் லலிதாவின் அருகில் அமர்ந்திருந்தவனைக் கண்ட மருத்துவர் “இனி அவர் காலையில் தான் கண் விழிப்பார்… நல்லா நன்றாக உறங்குவதற்கு மருந்து கொடுக்கப்பட்டு இருக்கு... நீங்கள் இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை... வீட்டிற்குச் சென்று விட்டுக் காலையில் வாருங்கள்...” எனக் கூறவும் அந்தப் பதினொரு மணி இரவில் வீட்டை வந்தடைந்தான் தேவ்.
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
Last edited: