All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS பொங்கல் விழா - கருத்துப் பட்டிமன்றம் & பாடல் முடிவு

J.வாசுகி

Well-known member
@Chitra Balaji sis really superb...

உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்...

மொபைலால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம்...

இன்றைய இளைய சமுதாயத்தினரின் வீழ்ச்சிக்கு மொபைல் ஆற்றும் பங்களிப்பு பெரிது...

நீங்கள் சொன்ன குறிப்புக்கள் மிகவும் அருமை
👌👌👌👌👌👏👏👏👏👏
 

J.வாசுகி

Well-known member
சாதாரண மாத விடாய் தினத்தை கூட நினைவில் வைத்து கொள்ள முடியாத அளவு... நாம் இருக்கிறோமா?? என்ன மாதிரியான் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்குறோம்...

சமைக்க தெரியவில்லை என்றால்... தன் பாட்டிகளிடம் கேட்டு கற்றுக்கொள்ளலாமே... முப்பாட்டன் காலத்து சமையல்களை கூட அருமையாக சொல்லித்தருவார்கள்...
அவர்களை தொல்லை செய்கிறோம் என நினைத்தால்... சமையலும் ஒரு கலையே... தான் கற்ற கலையை சொல்லித்தருவதில் யாருமே ஆர்வம் இல்லாமல் இருக்க மாட்டரே... இது போல் எத்தனையோ விடயங்களை எம்மை சுற்றியுள்ள வர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாமே... நம்மிடையே பரஸ்பரம் விருத்தியடையுமே....

@gnanavani
எனக்கு தவறென்று பட்டதை சொன்னேன்... காயப்படுத்தி இருப்பின் மன்னிக்கவும் சகோதரி
 

Chitra Balaji

Bronze Winner
@Chitra Balaji sis really superb...

உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்...

மொபைலால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம்...

இன்றைய இளைய சமுதாயத்தினரின் வீழ்ச்சிக்கு மொபைல் ஆற்றும் பங்களிப்பு பெரிது...

நீங்கள் சொன்ன குறிப்புக்கள் மிகவும் அருமை
👌👌👌👌👌👏👏👏👏👏
Thankyou maa
 

Saranvis

Member
இன்றைய தொழில் நுட்பம் எவ்ளோ நம்மை கொடுக்குதோ.... அதை விட பாதிப்பு அதிகம் இருக்குனு தான் நானும் சொல்லுவேன்.... ஒரு அம்மாவா குழந்தைகள இதுல இருந்து காக்க எவ்ளோ போராட வேண்டி இருக்கு..... எல்லாரும் சொல்லற மாதிரி 90kids விளையாட்டுகள அவனுக்கு நான் அறிமுக படுத்தி தான் செல்போன்ல இருந்து வெளிய கொண்டுவரேன்.......chithra balaji கருத்துக்கு நான் ஒத்து போறேன்....
 

J.வாசுகி

Well-known member
@RamyaRaj sis... உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை... எம்மால் எந்த அளவு மொபைல் பாவணையை குறைத்துக்கொள்ள முடியுமோ அந்த அளவு குறைப்பது எமக்கு மட்டுமல்ல இனி வரும் சந்ததிக்கும் சிறந்தது...
 

gnanavani

Bronze Winner
சாதாரண மாத விடாய் தினத்தை கூட நினைவில் வைத்து கொள்ள முடியாத அளவு... நாம் இருக்கிறோமா?? என்ன மாதிரியான் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்குறோம்...

சமைக்க தெரியவில்லை என்றால்... தன் பாட்டிகளிடம் கேட்டு கற்றுக்கொள்ளலாமே... முப்பாட்டன் காலத்து சமையல்களை கூட அருமையாக சொல்லித்தருவார்கள்...
அவர்களை தொல்லை செய்கிறோம் என நினைத்தால்... சமையலும் ஒரு கலையே... தான் கற்ற கலையை சொல்லித்தருவதில் யாருமே ஆர்வம் இல்லாமல் இருக்க மாட்டரே... இது போல் எத்தனையோ விடயங்களை எம்மை சுற்றியுள்ள வர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாமே... நம்மிடையே பரஸ்பரம் விருத்தியடையுமே....

@gnanavani
எனக்கு தவறென்று பட்டதை சொன்னேன்... காயப்படுத்தி இருப்பின் மன்னிக்கவும் சகோதரி
Kandippa neenga sonnadu sari daan aanal ippo irukkum velaibalu la ellarukkum elimayana oru vazhi irukkunradu dan en karuthu
Namma veetu samayal namakku theriyum aana matha state countries nu pala vithiyaasamana visiyangala therinjikkavum pala pengalukku thannabikkaikum adu vudavula adan ennaku ipdi dan ji thonuchi
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவரின் கருத்துக்களையும் படித்தேன்.. மிகவும் அருமையாக இருந்தது... எனக்கு சர்பரைஸ் தந்தது சித்ராவின் முழு நீள தமிழ் தான்..😁

அனைவரும் முக்கியமான விசயமாக எடுத்துக் கொண்டது செல்பேசியை தான்..! உண்மை அது நமக்கு வரமாகவும் அமைந்திருக்கிறது. சாபமாகவும் அமைந்திருக்கிறது..

இன்னும் ஆழமான விசயங்களை எதிர்பார்த்தேன். ஆனால் இவையே அருமை.. நடுவரின் தீர்ப்பை அறிய நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்..


அனைவருக்கும் எனது பாராட்டுதல்கள்..👏👏👏👏
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் கருத்து :

சகோதரி @Samvaithi007 சார்பாக



அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் சாமனியர்களுக்கு நன்மையா!...தீமையா!!...

தொழில் நுட்ப வளர்ச்சியால் நன்மைகள் தான் ஏராளமாக இருக்கலாம்....இருக்கலாம் என்ன இருக்கு.... என் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது நன்மைகளின் பக்கமான தராசே உயர்ந்து நிற்கிறது....

எழுத்து அறிவித்தவன் இறைவனாவன்...

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகளாய் நான் காண்பது சாமன்ய மக்களின் தன்னம்பிக்கையை .... இந்த சமுகத்தினால் புறந்தள்ளப்பட்டு வாழ்க்கையில் வாழ்வதற்கே என்ற நிலை மாறி செய்யும் தொழிலை அவர்களை பின்னுக்கு தள்ளி அவர்களின் உழைப்பின் மூலம் சுகமாக வாழும்... குள்ள நரிகளின் கொடுரப் பக்கங்களை புரட்டி பார்க்கிறேன்....

அவர்கள் முகம் சுளிக்காமல் செய்யும் செயலே நாம் முழு சுகாதாரமாக வாழவும்....நாசுக்காக பேசி நைச்சியமாக உலா வர உதவுகிறது என்பதை மறந்து விடுகிறோம்....

ஆனால் இன்றைய சாமனிய மக்களின் தலைமுறை எங்களுக்கான அடிப்படைகளை வேலைகளை நாங்களே செய்து பழகி விட்டோம்....எங்களுக்கான உயர்ந்த கட்டமைப்பை எங்களின் உழைப்பின் மூலம் நாங்களே தலைநிமர்ந்து உருவாக்கி தலை நிமிர்த்தி பார்க்க வைப்போம் என்னும் இந்த தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் உருவாக்கி உந்துசக்தியாக விளங்குவது இத்தொழில்நுட்பமே....

ஆழமான பள்ளத்தில் அமிழ்ந்து அவலங்களை அவர்களின் வாழ்க்கையை வர்ணங்களை வாரியிரைத்து நந்தவனமாக மாற்றி நைந்து போனவர்களின் வாழ்க்கையில் வெளிச்ச தீபத்தை வெகு அழகாக ஏற்றி வைத்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவர்களின் அறிவுசுடரை இந்த பாரெல்லாம் அறிய செய்தது இந்த தொழில்நுட்பமே...

இந்த தொழில்நுட்ப உலகில் அறிவு மட்டுமே அடையலாம்....பித்தலாட்ட பெருமைகள் எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டார்கள்....

கையை தட்டி விட்டு.... முகம் சுழிந்து நின்றவர்கள் எல்லாம் கை கொடுத்து கரம் குவித்து வரவேற்க தயாராக இருப்பதே சான்று....

சல்லி வேராய் நினைத்து சாய்த்து விட துடித்தவர்களையெல்லாம் ஆணிவேராய் மாறி அசையாமல் நிற்க உதவியதே இந்த தொழில் நுட்பமே....

இன்னாருக்கு இன்ன தொழில் என்று பிரித்து பிரிவினையை விதைத்த காலம் மாறி மனதில் வரித்த தொழிலை மனம் போல் செய்திட வித்திட்டது இந்த தொழில்நுட்ப வளர்ச்சியே....

எள்ளி நகையாடிய தொழிலெல்லாம் தொழில்நுட்ப புரட்சியினால் வரையறுக்க முடியாத வானளவ வளர்ச்சியடிந்து இந்த தொழில்நுட்பமே...

கலையே தொழிலாக கொண்டவர்களை கூத்தாடிகளாக பார்த்த காலம மாறி் அண்ணார்ந்து பார்க்கும் விண்மீன்களாக மாற்றியது தொழிநுட்பமே...

பட்டணத்து பகட்டில் கிரமத்து வாழ்க்கையா என்று ஏளனமாக பார்த்தவர்கள் இன்று கிராமத்தின் ஒவ்வொரு அணுவையும் இரசிக்க ருசிக்க ஏக்கம் கொள்ள உதவியது தொழில்நுட்பமே....

இன்னும் எத்தனையே எத்தனையே உதாரணங்கள் எண்ண(ன்னி)லடங்கா இருந்தாலும் எடுத்து சொல்ல இந்த தருணம் எனக்கு போதாது.....

பார்க்கும் பார்வை நமதே....நல்லவைகளை அலசி ஆராய்ந்து அல்லவைகளை ஒதுக்கி தள்ளும் அன்னபட்சியாக மாறிட நாம் கற்றிட வேண்டும்...அதனையே நம் சந்ததியினர் கற்று தெரிந்திட உறுதுணையாய் நின்றே உதவிட வேண்டும்...

அச்சம் அகற்றி...நெஞ்சம் நிமிர்த்தி...புத்தொளி பாய்ச்சி புது தெம்புடன் நடை பயின்றிடவே நித்தமும் நம் வாழ்வில் வழி வகுத்திட்ட இந்த புரட்சியின் கைப்பற்றியே நம் வாழ்க்கையின் வளம் பெற்றிடவும்....நன்மைகளை நாடியும் தீமைகளை களைந்தும் வாழ்திடவும் இத்திருநாளில் நாம் அனைவரும் ஒன்று கூடி ஒவ்வொருவருக்கும் வாழ்த்து கூருவோமே அதுவும் தொழில்நுட்பமே


சாமனியர்களை சாதிக்க வல்லவர்களாக மட்டுமல்லாமல் சரித்திரம் படைக்க கூடியவர்களாக வும் மாற்றிய பெருமை தொழிநுட்பத்திற்கு உண்டு....

எடுத்துகாட்டாக கூற வேண்டுமென்றால்
யூ ட்டியூப் உதவியுடன் கலக்கும் my country foods aananthi....

தொலைக்காட்சி உதவியுடன் கலக்கும் நிஷா....

இன்னும் எத்தனையே கூறலாம்....
இவர்களை கூறுவதற்கான காரணம் தன் உழைப்பின் பலம் தொழில் நுட்பத்தின் துணைக்க கொண்டு இன்று உலகளாவிய புகழ் அடைந்தவர்கள்.....

நமது இளம் குழந்தைகளின் அளப்பறிய ஆற்றலை மெய்பிக்கும் வகையில் ஆன்லைனில் பரிட்சை எழுதி NASAவில் கால் பதிப்பது இதன் மகத்துவமன்றோ....

மொழி கடந்து மதம் கடந்து நாடு கடந்து இன்று தனக்கென்று தனியே ஒரு சொந்தம் உருவாக்கி வைத்திருப்பதும் இதன் உன்னதமன்றோ...இதற்கு நாமே சான்று அன்றோ....



ஏன் நமது எழுத்தாள சொந்தங்கள் தம் ஆசைகளை கனவுகளையும் நனவாக்கி கொண்டதோடு ...இதோ நமது பந்தமாக நாமெல்லாம் ஒன்றாக ...ஒரே குடும்பமாக உணர இந்த தொழில் நுட்ப தூணின் துணை கொண்டே என்பது நாம் மறுக்க முடியாத உண்மை...
எல்லைகளை கடந்து நேசிக்கவும் கற்று கொடுத்தது இதன் உச்ச பட்ச சாதனையென்றால் மறுத்துகூறுவருமுண்டோ!!!!

நட்போடு நாம் கூடிடும் இந்நான்னாளை நமக்கு அளித்ததும் இந்த தொழிநுட்பமன்றோ!!!!

முகத்தால் இல்லாது அகத்தில் இணைந்திட்ட என் அன்பு உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த தை திருநாள் வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷



நன்றி 🙏
super maa... semmayaa solli irukkeenga...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம்..

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.அதனால் நன்மையா? தீமையா? என்றால் எனது வாதம் நன்மையே.

என்னென்ன நன்மைகளை செய்திருக்கிறது இந்த தொழில்நுட்பம் மருத்துவம்,அறிவியல்,கலை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் கட்டைகள் உதவியின்றி செயற்கைக்கால்கள் பொருத்தப்பட்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றனரே
தொழில்நுட்பவளர்ச்சியின் நன்மைக்கு இது ஒரு சான்றல்லவா? முன்னரெல்லாம் தங்கள் படைப்புகள்
பத்திரிக்கைகளில் பிரசுரமாகாதா? என்று பலர் ஏங்கிய படி இருக்க,
இன்றோ நமக்கென்று ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கி நம்
எண்ணங்களை பதிவு செய்ய முடிகிறதே?அது நன்மையல்லவோ?
விண்வெளியில் மனிதன் ஆராய்ச்சி செய்ய ஒரு கூடத்தை அமைத்தது
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமல்லவா? நாம் ஒரு இடத்தில் இருந்தபடியே இணையத்தில் சுயமாக பணி செய்து வருமானம் ஈட்டுகிறோம். நாம் தயாரித்த பொருட்களை இணைய சந்தையின் மூலம் நாடு விட்டு நாடுவி ற்கிறோம்,வாங்குகிறோம்.பண்டிகை காலங்களில் பயணச்சீட்டு கிடைக்காமல் அவதியுறும் இன்னல்களின்றி, பயணச்சீட்டு
முன்பதிவு செய்து சொகுசான பயணத்தை மேற்கொள்கிறோம்.

எங்கோ உலகத்தின் மூலையில் இருக்கும் நம் உறவினர்களிடம் முகம்
பார்த்து காணொலியில் கதைக்கிறோமே எதனால்? தொழில்நுட்பவளர்ச்சியின் பயனால். வீட்டிலிருந்த படியே மின்சாரம்,வாடகை,வங்கிக்கடன்கள் அனைத்தையும் செலுத்துகிறோமே எப்படி?தொழில்நுட்பம் வேலை செய்வது அப்படி.

எங்கோ,எப்பொழுதோ நமது
முன்னோர்கள் இப்படி வாழ்ந்தார்கள்,அப்படி உண்டார்கள், உடை உடுத்தினார்கள் என புகைப்பட ஆதரங்களுடன் நாம் தேடும்
நேரத்தில் கைக்குள்ளே விசயங்களை தெரிந்து கொள்கிறோம்..நாம் தேடும் தலைப்புகளில் எல்லாம் தகவல்களை வாரி வழங்குகிறது கணினி தொழில்நுட்பம். முன்பு தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ
ஒரு நிகழ்ச்சியை பார்க்கத் தவறிவிட்டால் மீண்டும் எப்போது
ஒளிபரப்புவார்கள் என்று காத்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாம் நமக்கு சவுகரியமான நேரத்தில் அந்த நிகழ்ச்சிகளை
சவுகரியமான இடத்தில் பார்த்துக் கொள்கிறோம்.

நேர்முகத்தேர்வுகள் கூட இப்பொழுதெல்லாம் இணையத்தில்
சுலபமாக நடக்கிறது. வங்கிகளில் பணம் போட,எடுக்க,புத்தகத்தை
அச்சிட என இயந்திரங்கள் நமது நேரத்தை குறைக்கிறது.

இணையத்தில் “ஹேக்கிங்” என்று ஒன்று உள்ளது போல “எத்திக்கல்
ஹேக்கிங்” என்று உள்ளது தெரியுமா? இதனை பயன்படுத்தி
இணையத்தில் நடக்கும் கிரிமினல் குற்றங்களை தடுக்கலாம்.
எனது வாதப்படி இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நன்மையையே அளிக்கிறது என்பேன்.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனார் வாக்கின் படி, தொழில்நுட்பத்தை சரியான வழியில்,சரியான செயல்களை செய்ய பயன்படுத்தினால் தொழில்நுட்பம் தரும் நன்மைகள் ஏராளம்! ஆகையால்
நன்மை வழியில் செல்வோம். நன்மைக்கு துணையிருப்போம்

நன்றி!
super maa... unga karuththu alaku...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம் தொழமைகளே.... பொங்கல் நல்வாழ்த்துக்கள்......... நான் chitra Balaji.....
தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதகமான விளைவுகள்! என்னது வாதம்....

விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக நவீன சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுவது ஒருபுறமிருக்க, அதன் விளைவாக மனித குலத்துக்கு தீங்குகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. மக்களுக்கு இன்றைய காலத்தில் பெரும் தீங்குகளை விளைவித்துக் கொண்டிருக்கும் நவீன சாதனங்களில் ஒன்றாக ‘ஸ்மாட் போன்’ மாறியிருக்கின்றது.

‘ஸ்மாட் போன்’ கைத்தொலைபேசியின் வாயிலாக இன்றைய நவீன யுகத்தில் மக்களுக்குக் கிடைக்கின்ற அனுகூலங்களைப் பார்க்கிலும் பிரதிகூலங்களே கூடுதலாக ஏற்படுவது தெரியவந்துள்ளது. ஸ்மாட்போன்களின் பயன்பாட்டினால் தற்காலத்தில் ஏற்படுகின்ற விபத்துகளும், மரணங்களும் இதற்கு சான்றாக அமைகின்றன.

வீதியில் நடந்து செல்லும் போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், வீதிவிபத்துகள் பெருகியுள்ளன. பலர் காயமடைவதையும், மரணங்கள் சம்பவிப்பதையும் நாம் காண்கிறோம். கைத்தொலைபேசியைப் பயன்படுத்தியபடி தண்டவாளத்தின் மீது நடந்து சென்ற வேளையில் புகையிரதத்தால் மோதுண்டு உடல் சிதறிப் பலியாகிப் போனோரின் எண்ணிக்கையும் ஏராளம்.

இவ்வாறான மரணங்கள் துரதிர்ஷ்டமும் பரிதாபமும் மிகுந்தவையாகும். கைத்தொலைபேசிப் பாவனையில் காணப்படுகின்ற ஆபத்துகள் தொடர்பாக ஊடகங்களில் எச்சரிக்கை விளம்பரங்கள் வெளிவருகின்ற போதிலும் இவ்விடயத்தில் எதுவித பலனும் ஏற்பட்டதாக இல்லை. ‘ஸ்மாட் போன்’ பாவனையினால் விபத்துகளும் மரணங்களும் அதிகரித்தபடியே செல்கின்றன.

கல்வியறிவற்றோர் மாத்திரமன்றி நன்கு கற்றவர்களும் கூட கைத்தொலைபேசியின் பாவனையினால் அநியாயமாக உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்பதுதான் இங்கு வியப்புக்குரிய விடயம். சமீப காலமாக கைத்தொலைபேசியின் விளைவாக சம்பவித்துள்ள மரணங்களை எடுத்து நோக்கும் போது இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்றபடி ‘செல்பி’ எடுத்துக் கொண்ட வேளையில், நீருக்குள் தவறி விழுந்து வைத்தியர் ஒருவர் மரணமான சம்பவம் பதிவாகியிருக்கின்றது. ‘செல்பி ‘ மோகம் என்பது எவரையுமே விட்டு வைக்கவில்லையென்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வோர், விந்தைமிகு இடங்களில் நின்றபடி தங்களைப் ஒளிப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவது இன்று நேற்றுத் தோன்றிய அவா அல்ல. ஒளிப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே மனிதனைப் பீடித்துள்ள ஆசை இது. ஆனால் ஒருவரை மற்றவர் ஒளிப்படம் எடுப்பதனால் விபத்தோ மரணமோ சம்பவித்தது கிடையாது.

தன்னைத் தானே ஒளிப்படம் எடுத்துக் கொள்வதற்கான ‘ஸ்மாட்போன்’ என்ற சாதனம் அறிமுகமானதன் பின்னரே விபரீதமும் வந்து சேர்ந்தது. புகையிரதப் பாதை, உயர்ந்த கட்டடங்களின் உச்சிகள், கடலோரம், நீர்வீழ்ச்சி, மலையுச்சிகள் என்றெல்லாம் பல்வேறு இடங்களுக்கும் மனிதனின் ‘ஷெல்பி’ ஆசை பரந்து விரிந்ததனால் பலர் அநியாயமாக உயிரிழந்து போயிருக்கிறார்கள்


லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன் தெரிவித்தனர்.

இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர். விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும் முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது, நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது. அவர்களின் பார்வை குறைபாட்டுக்கு இதுவே காரணம் என்று உறுதி செய்தனர் மருத்துவர்கள்.

லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த இந்த இரண்டு இளம்பெண்கள் மட்டுமல்ல; இன்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது. 'ஒளி மாசு' என்ற வார்த்தை, உலகை அச்சுறுத்தும் விஷயமாக உருவெடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சி காரணமாக, இன்று ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் அரிதாகிவிட்டனர். நம் வேலை நேரத்தில் மட்டுமல்ல; அதைத்தாண்டியும் இன்று நாம் செல்போன்களிலேயே உழன்று வருகிறோம். இரவு நேரமும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆதரித்து, அதற்கு நம் கண் பார்வையை தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.


"நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்து விட்டு, நாம் திடீரென நம் அறைக்குள் நுழையும்போது, சில நொடிகள் கண் இருண்டுவிட்டது போன்று போல் தோன்றும். நம் விழித்திரை பளீர் வெளிச்சத்தை எந்தளவுக்கு சந்திக்கின்றதோ அதே அளவுக்கு சாதாரண நிலையில் குருட்டுத் தன்மை நீடிக்கும் என்பது அறிவியல்.

அதேபோல் ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கீரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் சாதாரண வெளிச்சத்தில் காட்சிகளை நாம் பார்க்கும்போது தெளிவாக தெரியாது, சில வினாடிகளுக்குப் பின்னர்தான் நம் கண்கள் இயல்பான பார்வையைப் பெற்று பொருட்களை பார்க்கநேரிடும். ஆனால் இதுவே தொடர்ந்தால் ஒருகட்டத்தில் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும்” என்கிறார் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் ஓமர் மஹ்ரு.


அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெற்றோரில் 27% க்கும் மேற்பட்டவர்களும், குழந்தைகளில் 50% க்கும் மேலானவர்களும் மொபைல் போனுக்கு அடிமையானவர்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இன்று பல வீடுகளில், குழந்தைகளை ஒரே இடத்தில் உட்காரவைக்க கூடிய கருவியாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்த்து, வீட்டிலேயே ஸ்மார்ட்போன்களில் பல மணிநேரம் விளையாடுவது, ரைம்ஸ் பாடல்கள் பார்க்க வைப்பது என்ற அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.

இதை ஸ்மார்ட் மெத்தடாக கருதும் பெற்றோர்கள், குழந்தையின் கண்களையும் அவர்கள் உடல்நலனிலும் அக்கறைக்கொள்வதில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தால் நலம்.


செல்போன்களை முழுமையாக பயன்படுத்தும் முதல்தலைமுறை நாம்தான் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்வது நலம். செல்போன்களால் ஏற்படும் தீமைகள் இன்னும் முற்றாக வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை. ஒளி மாசைத் தொடர்ந்து செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இதனால் செல்போன் உபயோகத்தில் கட்டற்ற சுதந்திரத்தை கொஞ்சம் குறைத்து, கண்களை பாதுகாத்துக்கொள்வது நலம்.
கைதொலைபேசியில் குழந்தைகளின் பாதிப்பு....
மொபைல் விளையாட்டில் குழந்தைகளின் வெறித்தனம் அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும்

பஸ்சிலும், வகுப்பறையிலும், படுக்கை அறையிலும் மறைத்து வைத்து விளையாடும் வசதி மொபைல் போனில் இருக்கிறது. அதனால் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் அதில் இருந்தாலும் அந்த விளையாட்டுக்கு தேவையான உடல் சக்தியும், மனோபவமும் மொபைல் கேம்ஸ்க்கு தேவையில்லை. அதனால் அந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.

அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. மதுவுக்கு அடிமையாவது போன்ற சூழல் இல்லை என்றாலும், சில குழந்தைகளிடம் அதைவிட மோசமான பாதிப்பையும் இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.

‘எனது குழந்தை சமர்த்து. அவன் ஒருபோதும் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையாகமாட்டான்’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

தவறு!. அப்படி நினைக்காதீர்கள். எவ்வளவு புத்திசாலியான குழந்தை என்றாலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடும். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.



‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.

உங்கள் குழந்தைகள் தினமும் 1 - 2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள்.

உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம். படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். ‘விளையாட்டில் இருந்து விலகி, முழு நேரமும் படிக்க வேண்டும்’ என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம். ‘அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், நல்ல சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன். நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன்’ என்று கூறி, குழந்தைகளை ஊக்குவியுங்கள்.

உங்கள் குழந்தை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாகிவிட்டால் குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் அவசியம். அதற்காக மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறவேண்டும்....
ஒழுக்க விழுமியங்களையும் கலாசார பண்பாடுகளையும் முகநூல் துடைத்தெறிந்து கொண்டிருப்பதையிட்டு சமூக ஆர்வலர்களும் கவலைப்படுவதைக் காண முடியவில்லை.

‘ஸ்மாட்போன்’ பாவனை மனிதனுக்குத் தீங்கு தருவதாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் எவராவது பேசுவது முடியாத காரியம். அக்கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு இளைஞர், யுவதிகள் தயாராக இல்லை.

சாதாரண தர வகுப்பு மாணவருக்கே அவர்களது பெற்றோர் ‘ஸ்மாட்போன்’ சாதனத்தை கட்டாயமாக வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற நிலைமை இப்போது உருவாகி விட்டது. அதனை பெற்றோரிடம் வலிந்து கேட்கும்படியாக இன்றைய எமது சமூகக் கட்டமைப்பு மாற்றம் பெற்றுவிட்டதென்பது புரிகின்றது.

‘ஸ்மாட்போன்’ சாதனத்துக்குள் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தேவையான பயனுள்ள ஏராளமான விடயங்கள் பொதிந்துள்ளன. அதேசமயம் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைச் சீரழிக்கக் கூடிய ஏராளமான ஆபத்துகள் அதற்குள் மறைந்துள்ளன. மனித சமுதாயத்துக்கு ஆக்கத்தைத் தந்துள்ள அறிவியல் வளர்ச்சியானது, அழிவுக்கும் வழிகோலும் போது யாரால்தான் அதனைத் தடுத்து நிறுத்த முடியும்? நன்றி....
wow alaka soli irukeenga maa...
 
Top