All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷார்ம்ஜெவின் "ஒன்றுபட்ட இதயமே" - கதை திரி

Status
Not open for further replies.

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!!!

கடந்த அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த தோழியர்களுக்கு (மகேஸ்வரி,கவிதா, காத்டேவிட், செல்வி, சித்ரா, மற்றும் இந்துஅவர்களுக்கு) எனது மனமார்ந்த நன்றிகள் பல.....

அடுத்த அத்தியாயத்தை பதிவேற்றியுள்ளேன்... உங்கள் மேலான கருத்துக்களுக்கு

"கூர்ந்த விழியும், திறந்த செவியுமாய்" காத்திருக்கிறேன்.

சிதைக்காமல் சீர்த்தூக்க சிற்பியின் சிகரங்களை எதிர் நோக்கும்

உங்கள் தோழி

SJ
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!!!

கடந்த அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த தோழியர்களுக்கு (மகேஸ்வரி,கவிதா, செல்வி, மற்றும் சித்ரா, அவர்களுக்கு) எனது மனமார்ந்த நன்றிகள் பல.....

அடுத்த அத்தியாயத்தை பதிவேற்றியுள்ளேன்... உங்கள் மேலான கருத்துக்களுக்கு

"கூர்ந்த விழியும், திறந்த செவியுமாய்" காத்திருக்கிறேன்.

சிதைக்காமல் சீர்த்தூக்க சிற்பியின் சிகரங்களை எதிர் நோக்கும்

உங்கள் தோழி

SJ
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
":smiley12 ஒன்றுபட்ட இதயமே - 11 :smiley12"
< உருக்குகிறேன் பேர்வழி என்று உருவேற்றிக் கொண்டிருந்தான் ராஜன்>

வாடி வதங்கிய மலரை மீட்டெடுக்க, பாடலில் மலரை அழைத்தவன்; உண்மையில் அவன் வாழ்வை மீட்டெடுத்தானா? என்பது தெரியவில்லை.

ஆனால், இளைப்பாற கொடுக்கப்பட்ட இடைவெளியில் இளம் தென்றலாய் வீசிய கானத்தில் லயித்து, சோர்வு நீங்கி புதித்தாய் பூத்த மலர் போல் மலர்ந்த முகத்தோடு விகசித்தாள் மங்கையவள். (யம்மா நீ அப்படி கொஞ்சம் இப்படி கொஞ்சம் இருந்தாலும், பயபுள்ளைய கம்ப்ளீட்டா டீல்ல விடமாட்டனு தெரிது, ஏதோ பார்த்து போட்டு செஞ்சி கொடுமா).

தன்னவள் முகத்தில் புத்துணர்ச்சியை கண்டவன் 'தனக்கு தானே தோள் தட்டி சபாஷ்' போட்டுக் கொண்டான். (அப்பு பாதி கிணறு இல்ல ஜஸ்ட் கால தான் எடுத்து முத அடி வச்சிருக்க, பயணம் தெடங்கவே இல்ல அதுக்குள்ள சபாஷா)

அவளால் இன்னும் கொஞ்ச நேரம் தாக்கு பிடிக்க முடியும் என்று தெரிந்தவன் அவளை பார்த்து சம்மதம் கேட்க அவளும் அவனின் நிலை உணர்ந்து துரிதமாய் தன்னை நிலைபடுத்திக் கொண்டாள்.

எல்லாம் சரி என்று உறுதி படுத்திக் கொண்டு வரவேற்பு மேடையை அடைந்த ராஜன், மீதி நிகழ்வை கேலியும் கிண்டலுமாய் கழித்து ஒரு வழியாய் முடிவை நெருங்கினர். (அப்புடியே விட்டுட்டா விதின்னு ஒன்னு நான் இருந்து என்ன பிரயோஜனம் என்று களம் இறங்கியது).

வசந்த், சரவணன், அரசி, ரட்சன்யாவுடன் சேர்ந்து சில இளவட்டங்கள் அவர்களை வம்பிழுக்க திணறி தான் போயினர். கடைசியாக "மாமா நீங்க பாடி கலக்கிட்டீங்க, இப்போ நீங்களும் உங்க கிழத்தியும் சேர்ந்து சில அசைவுகளை செய்தால் நாங்கள் சந்தோஷப் படுவோம்" என்றது மட்டும் அல்லாமல் தன் அல்லக் கைகளை ஜைஞ்ஜப் அடிக்க "ஆமா தானே செல்லங்களா" எனவும்,

அவர்களும் தாளம் தப்பாமல், "ஆமா ஆமா" என்று கோரஸ் போட்டனர்.

அப்பொழுதும் முழித்து கொண்டு இருந்த ராஜனையும் ராணியையும் பார்த்து விட்டேனா கேளு என்று

"மாமா, மாமா"

"ராஜா, ராஜா"

"ராணி, ராணி" என்று உந்துதல் அளிக்க தொடங்கினர்.

ராஜனுக்கு என்ன கசக்கவா போகுது, ஆனா களத்துல கால வெச்சிட்டு ராணி வரல-னா??? அந்த தவிப்பிலையே அடக்கி வாசித்தான்.

மற்றவர்களின் உந்துதலில் தன் வருத்தத்தை தள்ளி வைத்தவள், தயங்கினாலும் விருப்பமின்மையை தவிர்த்து இணக்கமான அசைவில் தன் சம்மதம் தெரிவிக்க, இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டான் ராஜன்

"மச்சான் உன் காட்டுல மழைதான்" என்று காது கடித்தான் வசந்த்

அதில் கனவில் மிதக்க தொடங்கியவனின் கரங்களை பிடித்து "ராசா நீ ட்ரீம்-ல சாங்க்கு போயிட்டு வரர்துக்குள்ள இங்க உன் ராணி நிஜத்துல ஆட வரமாட்டாப்பா, எப்படி வசதி" எனவும் அவசர அவசரமா ட்ரீம் சாங்க கேன்சல் பண்ணிட்டு நிஜத்துல டான்ஸ் ஆட தயார் ஆனான்.
" அன்பில் அவன் "

பாடல் தொடங்கவும் வரிகளை உணர்ந்து ஆடினான் ராஜன் என்றால் ராணியின் துக்கத்தை கிளப்பி விட்டது அதே வரிகள்தான் என்றால் அது மிகையல்ல.

அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என இணைந்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்


உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே


உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே


நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ


உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே


நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
என்று எங்கு அதை பயின்றோம்


பூமீ வானம் காற்று
தீயை நீராய் மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ


உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே


காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே


ஆடிக் கொண்டிருந்தவள் ஆடும் மும்முரத்தில் தன் மனத் தாங்கல்களை மறந்து சுழன்றாட பாடலின் முடிவில் அவன் அவளை தாங்கி பிடிக்க ஒற்றைக் காலை தரையில் ஊன்றி மறு காலை மூட்டில் மடக்கி உடலை சாய் கோபுரமாய் சாய்த்து கண்களில் கவிநயம் பேசியவளை அவன் கைகளில் சரித்து தானும் அவளின் ஆழ்மனதில் குடிகொண்டிருப்பவனை மீட்டெடுப்பேன் எனும் விதம் கண்ணோடு கண் பேசி உறைந்தனர். (உங்களுக்கு உங்க உலகம் ஃப்ரீஸ் ஆயிருச்சுங்கிறதுக்காக எங்களுக்கு எல்லாமுமா ஃப்ரீஸ் ஆகும் உங்க ஃபிலீம ஓட்டுனது போதுஉம், கல்யாணத்துக்கு வந்தவங்கள ஒரு வாய் சாப்பிட்டியானு கேக்க நாதியில்ல, கல்யாணமாம் கல்யாணம். ஒரு பிடி சோறுண்டா, தம்மா துண்டு லெக் ஃபீஸ் உண்டா, அதவிடுங்க சார், ஒரு ஸ்வீட், ஐஸ்கீரீம், ஹும்ஹூம் இவங்க படத்த மட்டுமே ஓட்டிட்டு வெறும் வயத்தோடயே அனுப்பிச்சுடுவாங்க போல).

ஆடிக் களைத்தவர், ஓட்டி சளைத்தவர்கள், கடமை முடித்தவர்கள் என அனைவரும் உணவு உண்ண செல்ல (அப்பா சோறு போடுறாய்ங்க).

பஃப்ஃபேயில் பிடித்தவையை எடுத்துக் கொண்டு தம்பதியராய் அமர்ந்த ராஜனுக்கும் ராணிக்கும் அடுத்து வந்த சோதனை அன்பு பறிமாறல்கள். ஆம் அன்பானவர்கள் அன்பை பொழிந்து விட்டு விலக மேசையில் வைத்திருந்த தட்டில் இருந்த பலகாரம், உணவு வகைகளை பார்த்து மலைத்து விட்டாள். விரும்பி அவளே எடுத்தவை தான் ஆனாலும் வேண்டாம் என்று தடுத்தும் அன்பில் அவரவர் வந்து ஒரு வாய் ஒரு வாய் தான் என ஊட்டி விட அன்பு பறிமாறலிலேயே வயிறு நிறைந்தவளின் தட்டில் எடுத்து வந்தது எப்படியோ அப்படியே இருந்தது. அவர்களின் அன்பை குறை கூற முடியாது தான்; ஆனால் அதே சமயம் அவள் வயிற்றில் கொள்ளும் அளவு தானே அவள் சாப்பிட முடியும். வேண்டாம் என்றால் விட்டுவிட்டும் சென்று விடலாம், ஆனால் அதிலும் ஒரு சிக்கல் (யம்மா நீ எனக்கு விக்கல் வர வைக்காம விடமாட்ட போலயே).

அன்றைய தினத்தின் ஃபோக்கஸே அவர்கள் தான் எனும் போது அரங்கின் அத்தனை பேருடைய பார்வையும் அவர்கள் இருவர் பேரில் தான் நிலைத்திருக்கிறது. தட்டில் எடுத்ததை சாப்பிடவே இல்லை என்றால்? எனவே என்ன செய்வது என்று தெரியாமல் முழி முழி என முழித்துக் கொண்டு செய்வதறியாமல் கொறித்து கொண்டிருந்தவள், சூழ்ந்திருந்தோரின் கேள்விகளுக்கும் கிண்டல்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டே பிடி சோறு உண்க ருசி வேறுபாட்டில் தட்டை பார்த்தாள். அதுவோ காலிதட்டாக மட்டுமே இருந்தது. என்ன மாயமடா இது என திகைத்து திரும்ப, அருகிலிருந்தவன் தன் தட்டை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்தவள் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதி படுத்திக் கொண்டு அவன் புறம் சாய்ந்து “ அது என்னோட தட்டு” என்று ரகசியம் பேசினாள் ராஜனின் காதில்.


கேட்டவனோ "ஆம்" என்னும் விதமாக தலை ஆட்ட

அதில் கண்களில் குளம் கட்டி நின்ற விழி நீரை உள்ளடக்கி "அது இந்த குட்டச்சியின் எச்சில், உங்களுக்கு தான் வாந்தி வந்திடுமே, சோ கொட்டிட்டுங்க" என்று வார்த்தையை கொட்டி விட்டு விறுவிறுவென எழுந்து சென்றுவிட்டாள்.(இப்ப என்னம்மா ஆச்சி).

என்னில் நீயடி உன்னில் நானடி
இரண்டற கலந்தவர்கள் நீ நான் என்னும் நாமடி
அதில் எப்படி உந்தன் மிச்சம் எனக்கு எச்சம் ஆகும்…


ஒன்றுபடும்.....
 
Last edited:

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley12ஒன்றுபட்ட இதயமே...:smiley12 -5
<இது என்ன பந்தம் என்று ராணியும்.... இது எந்தன் பந்தம் என்று ராஜனும்...>

இணக்கம் இன்றி இணைந்தாலும், இருவர் மனமும் வீடு சேர்ந்த உணர்வை உணர்ந்தது
என்னவோ நிஜம் தான். . எனவே அந்த இதத்தோடவே அக்னியை வலம் வந்தனர்.

முதல் சுற்றை முடிக்கவும் ரட்சண்யா வந்து மெட்டியை கொடுத்தாள். ரட்சண்யாவை
கண்டவள் கலக்கம் கொள்ள, ராஜனோ அவள் வலப் பாதத்தின் பெருவிரலை பற்றி அடிமேல் அடி வைத்து எட்டாம் அடியில் அம்மியில் வைத்து, ரட்சண்யா கொடுத்த மெட்டிகளுள் ஒன்றை பெற்று அணிவித்தான்.

பின் மறுசுற்று முடிந்ததும் இடது காலிலும் மெட்டியை அணிவித்தான்.

அணிவித்தவனின் பார்வை உயர்ந்து ராணியின் முகம் காண 'மீ பௌவிங்க் பிஃபோர் அ
க்கேர்ள் நெவர்… ஈவன் ஃபார் டோ ரிங்க்' எனும் ஒலி ரீங்கரித்தது.

அவ்வொலியில் அமிழ்ந்து போகா வண்ணம், ரட்சண்யா "இது தான் அவளும் நோக்கினாள்,
அண்ணலும் நோக்கினாலோ” என்றாள், உடனே சூழ்ந்திருந்தவர் "ஹோ….. ஓ!!" என்று ஆர்பரித்தனர். அதில் தன்னிலை பெற்றவர்கள் அசடு வழிய மூன்றாம் முறை வளம் வந்தனர்.

வந்தவர்களை மணமேடையில் இருந்த மங்கள நீரில் இருந்து வெகுமதியை எடுக்க
சொல்ல, உடன் இருந்தவர்கள்; "ராஜா ஆஸ் யூஷ்வல் நீ தான் வின் பண்ற" என உற்சாகம் ஊட்டினர். யாருக்கு வந்த விருந்தோ என கைவிட்டவள் இவர்களின் ஊக்கத்தை கேட்டு சுதாரிப்பதற்குள் ராஜனின் ராணி எனும் பெயர், இதய வடிவில் பொறிக்கப் பட்ட லாக்கெடை எடுத்தான்.

அய்.....யோ!!! எனும் சோர்ந்த குரல்கள் சேர்ந்து ஒலிக்க, மிஸ் பண்ணிட்டியே எனவும்,
குரல்கள் வந்தது. எடுத்ததை அவளின் கழுத்தில் அணிவிக்க ரிக்வெஸ்ட் வர, அதை விரும்பியே செய்தான் ராஜன்.

இரண்டாம் முறை துலாவுகையில் வெளியில் இருப்போர்க்கு முயன்று தேடுவது போல்
காட்டினாலும் அவள் எடுக்கவே ஆவல் கொண்டான். "குட்டிமா விடாதே, நல்ல தேடு, நீ தான் எடுக்கனும்", அதற்கு தேவையான சூட்டை சுற்றி இருந்தவர்கள் கொடுத்ததால் இம்முறை ராணி அதீத ஈடுபாட்டோடே தேடினாள், அந்தோ பரிதாபம் தேடும் மும்முரத்தில் இருவர் கைகளும் பின்னி பினைந்தது. துழாவலில் தான் கைகள் ஸ்பரிசித்து கொள்கிறது என்று நினைத்தவள் கைகளுக்கு சிக்காமல் நழுவும் வெகுமதியை மறந்தாள்; திகைப்பினூடே... நிமிர நினைக்கையில் கைகளுக்குள் ஏதோ ஒன்று தட்டு பட்டது, திகைப்பாவது ஒன்றாவது எல்லாம் சில நொடிகளுக்கு தான்; தன்னை தானே சுதாரித்தவள் பரிசை கைபற்றினாள்.

அவள் கைபற்றியதும் லாக்கெட்டே, அதில் ராணியின் ராஜன் எனும் பெயரும் இதய
வடிவிலே பொறிக்க பட்டிருந்தது. லாக்கெட்டை பார்த்தவள் "நான் ராஜனின் ராணி தான்! ஆனா நீங்க ராணியின் ராஜானா?" என்னும் கேள்வியை தாங்கி இருந்தது.

முன்றாம் முறையாய் வெகுமதியை எடுக்க கை விட்டவர்களை காட்டிலும் உற்சாகம்
ஊட்டுபவரின் டென்ஷனும், எதிர்ப்பார்ப்புமே அதிகம் இருந்தது எனலாம். அப்படி இருந்தும் அக்குழுவில் இரு இதயம் மட்டும் நடக்கப் போவது எங்களுக்கு தெரியும் என்று இருமாந்திருந்தது.

முன்பு கிடைத்த ஸ்பரிசத்தில் தைரியம் பெற்று மங்கள நீரினுள் தன்னவளின் கைகளை மறுமுறை பற்ற முயல, ராணியின் முகம் பிரகாசம் உற்றது, இம்முறையும் தான் தான் கைபற்றி விட்டோம் என்று கைகளை இறுக மூடிய வண்ணம் வெளியில் எடுக்க; 'வட போச்சே' எனும் உணர்வுடன் கைகளை எடுக்காமல் ஆழ்ந்த பார்வையை அவளை நோக்கி வீசிய ராஜனின் பார்வை எதையோ அறிவுறுத்தியதோ!

ராஜனின் ஆதரவாளர்கள் ஏமாற்றம் படர்ந்த முகத்தோடு பார்த்து, "ராஜா நீதானே எடுத்த"
எனவும் "ஆம்" என்பது போல் இமை அசைத்தான். "ஹேஏஏஏஏஏ…" என்று அவன் கூட்டாளர்களும், ரசிகர்களும் கத்தி களிகூற, ராணியின் பிரதிநிதிகளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் போனது.


ஆனாலும் இரு குழுவிற்கும் வாக்கு வாதம் வந்தது. "ராணி தான் எடுத்திருப்பது" என்றும்
"ராஜன் தான் எடுத்திருப்பது" என்றும். விளையாட்டு வினையாகும் நிலையில், - ராஜன் "ஃப்ரெண்ட்ஸ் இரண்டும் உண்மைதான்" என்றான்.

எல்லோர் முகத்திலும் குழப்பம் படர கேள்வியாய் ஏறிட்டனர், அதில் ராணியும் ஒன்று.

என்ன பெரியதாய் சொல்லிவிட போகிறான் என்று இருந்தவளின் கண்களுள் தன்
கண்களை பொருத்தி - "நான் நானாய் இருக்கையில் என் வெற்றி மட்டுமே குறி என்றிருந்தேன், அது போல் தானே ராணியும், அதை பறைசாற்றவே முதல் முறை நானும், இரண்டாம் முறை ராணியும் எடுத்தது, அதிலும்" என்றவன் எதையோ சொல்ல வர ராணியின் கண்களில் தெரிந்த ஏளனத்தில் அவ்வாக்கியத்தை தொடராமல் அதை அப்படியே விடுத்து, சிரித்தவாறே, "ஆனா பாருங்க இப்ப நான் குடும்பஸ்தன் ஆயிட்டேன் பா, சோ இருவரில் ஒருவரும் வீழ்ந்தோம் என்றில்லாமல் இணைந்தே வென்றோம் என்றிருக்கவே விரும்பினோம்".

சொன்னவன் கைகளை திறக்க சொல்லி கண் சமிக்ஞை செய்ய தன்னை அறியாமல்
அக்கட்டளைக்கு கீழ்படிந்தாள். கைகளை திறந்தவள் கரத்தில் இருந்த கணையாழியை கண்டு சிலையாய் சமைந்தாள்.

********---------***********
எல்லாம் முடிந்து ஆசிவாங்க பெற்றவர்களிடம் சிரம் தாழ்த்திய ராஜாவையும் ராணியையும் பார்த்த மணியும்
பாரதியும் நடந்தது, நடப்பது எதையும் ஜீரணிக்க முடியாமல் ராணியையே பார்த்திருந்தனர்.

"ரதிம்மா இங்க பாருங்க இந்த சின்னு என் சாக்கிய எடுத்துக்கிட்டான்", 'கைய கால உதச்சிக்கிட்டு, கண்ணையும்
கசக்கிக்கிட்டு சின்னவங்களோடு சின்னவங்களா; சிறுவனைப்போல் ட்ரவுசர் போட்டுக்கிட்டு கம்ப்ளேயின்ட் பண்ண ராணியா இது.., இது எப்படி சாத்தியம் இருவரில் யார் பொய்த்து போனது... இல்லையென்றால் எங்கே தவற விட்டுவிட்டேன்...' சிந்தித்து கொண்டிருந்தார்.

"பிள்ளைங்க விழுந்து எவ்ளோ நேரமாச்சி நல்லதா நாலு வார்த்தைய சொல்லுவோமா நடக்க வேண்டியத
பார்ப்போமானு இல்லாம..." சத்தத்தில் கலைந்து பட்டும்படாமலும் வாழ்த்தினர், ஆம் பட்டும் படாமலும் தான்.
அதை தெடர்ந்து தனித்து நின்றிருந்த சரசுவின் காலில் விழ வாரியணைத்த அன்னையின் கைகளில் நடுக்கத்தை
உணர்ந்தவள் விழிகளில் கண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
கலங்கி நிற்கும் மகளை நொடியில் கணித்த சரசு 'தாயறியா சூலா....'(எவன்டா அவன் சும்மா இப்படி
பிட்டப்போட்டுக்கிட்டு) 'நடப்பவை மாற்ற முடியாதவை என்றும்; அது உனக்கே உனக்காய் அளிக்க பட்டது எனவும்; தெரிய வைத்தாள் மகள் என்றும் எதற்கும் பின்வாங்கியதில்லை என்பதை திருமணத்தில் திணித்தது தப்புன்னு தெரியாம தவறென கனித்தது சரசுவின் சறுக்களோ???'
"வாழ்த்துக்கள் ரா...." என சரசு ஆரம்பிக்க, தாமதித்து இணைந்தாலும் தரமாய் இணைந்த ரவி "மாப்பிள்ளை"
என்பதில் அழுத்தம் கொடுத்து முடித்தார் அர்த்த பார்வையை தன் பெட்டர் ஆஃப்பிடம் பதித்த படி.

கூட்டத்திலிருந்து வெள்ளையும் சொல்லையுமாய் வெளிவந்த வசந்த் சிந்திக்கவும் இடைவெளி கொடுக்காமல்
இருவரையும் அழைத்து... (அப்படி சொல்லக்கூடாதோ பிரித்து) சென்றான் அவரவர்கான பிரத்தியேக அறைக்கு.

*******----------********

இக்கொண்டாட்டத்தின் மத்தியில் எதிலும் தன்னை பொருத்திக்கொள்ள முடியாமல் தனித்து விடப்பட்டவள், தான்
என்ன செய்கிறோம் தனக்கு யார் என்ன செய்கிறார்கள் என்பதையும் உணராமல் சரசுவிடமும் ரவியிடமும் வருத்தம் கொண்டு ரொபோட்டைப்போல் கட்டளைகளுக்கு கீழ்படிந்தால்...
தாம்புளத்தில் தன்னை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த மெல்லிய சரிகை வைத்து நெய்யப்பட்ட தந்த (IVORY) நிற
பட்டையே பார்த்திருந்தாள். கைகள் நடுங்க தாம்பீகம் அல்லாமலும், வக்கற்றவர் தருவித்தது என்று விலக்கித் தள்ள முடியாததும் ஆன சேலை;
அவளின் மனமறிந்து தங்க இழைகொண்டு நேர்த்தியாய் சரம் தொடுக்கப்பட்ட பூக்களால் நிறைந்த அப்பட்டை
தடவியவள், வேண்டும் என்று ஒருமனமும், வேண்டாம் என்று ஒரு மணமும், முரண்டு பிடிக்க 'இந்த திருமணத்திற்கு வந்தது தவறோ' என்று தன் வரவை குறித்து மறுமுறை மருகிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது மனம் கடந்த காலத்திற்கு சென்றது… “மன்னர் மன்னரே என்று தந்தையையும்…. மன்னவனின் மதியே
என்று அன்னையையும் அழைத்தவள்… என் திருமணத்தில் எனக்கென்று எந்த ஒரு பிரத்தியேக கண்டிஷன்ஸும் இல்லை", என்று இடைவெளி விட்டாள்.
அதில் முகம் மலர்ந்த பெற்றோரின் சிரிப்பை கண்டு, "சந்தோஷம் கொள்ளாதீர்கள்", என்றாள். உடனே "கதை
சொல்ல ஆரம்பிச்சுட்டா" என சருசுவின் காதை சரசமாய் கடிக்க, இங்கு இவள் பேச ஆரம்பித்திருந்தாள்.
"இப்ப தான் டாஸ்கே ரொம்ப கஷ்டம், ஏனா என்னை நன்றாய் தெரிந்த நீங்கள் எனக்கு ஏற்றவரை, நோட் த பாய்ண்ட்
யுவர் ஆனர், எனக்கு ஏற்றவரை இப்பாரினில் தெரிந்து கொள்வது அத்தனை சுலபம் இல்லையே" என்றவாரே கண் சிமிட்டினாள்.

அவள் விளையாட்டாய் சொன்னாலும் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்தே இருந்தனர் இருவரும். 'குறும்பு தான்
விளையாட்டு தான் ஆனாலும் ஆசை மகள் கடைசி மகள்... எனவே ஒரு நல்லவன் கையில் பிடித்து கொடுக்க வேண்டுமே' என்னும் கவலையில் ஆழ்ந்தனர்.
சரியாக அந்த நேரம் அங்கே ஆஜர் ஆனாள் அரசி. "என்ன ! என்ன!! என்ன!!!, என்ன நடக்குது இங்க" என்று கேட்டவள்,
ராணியை பார்த்ததும் "என்ன கதை ஓட்டிட்டு இருக்கிறா உங்க செல்ல மகள்", என வினவினாள்.
"ஹூம் என் கல்யாண கதை ஓட்டிட்டு இருக்கிறேன் என நொடித்து கொண்டவள், நீங்க கேளுங்க ப்பா" என
சினுங்கினாள்.

செல்ல மகள் சினுங்கினாள் தந்தை உள்ளம் தாங்குமா... "நீ சொல்லுடா!!!" தாமதியாமல் வந்தது மறுவார்த்தை
எப்புடி என்னும் பார்வையை தமக்கை இடம் செலுத்தியவள் "அதனால இவங்க தான் உன் மணாளன் என்று தெரிவு
செய்பவரை மறுவார்த்தை இல்லாமல் அடிதளம் பற்றுவேன்…" என்பதற்கும்,
"யாரு நீ ?" என்றாள் அரசி.
"ஆமா நான்…"
" இவங்க சொல்றவர கட்டிப்ப???"
"ஆமா கட்டிப்பேன்.."
"நம்பிட்டேன்…"
"ம்ம்ம்ம் நம்பனும்"
என்றவளைப் பார்த்து… "போடி போடி இவளே…." என்று வம்பிழுக்க, விளையாட்டாய் தொடங்கியது நேரம் செல்ல
செல்ல வினைக்கு வித்திட்டது.
ஆம், அந்த நேரம் அந்த வார்த்தைகளை கூறினாள் அவள் "நானா வேண்டி நீங்க பார்கிற மாப்பிள்ளைய பார்க்க கூட
போறதில்ல… யாரைப்பார்த்தாளும் எனக்கு ஓகே; நீங்களா ஆள் பார்த்து…, நாள் குறித்து, நேரம் குறித்து, எல்லா முடிவுகளையும் எடுத்துட்டு எப்போ தாலிய வாங்கிக்க சொல்றீங்களோ அப்போ அத மீறாம நான் வாங்கிக்குறேன்" -என்றது.
பேச்சு மாறமாட்டியே? - அரசி
"நெவர்"- உண்மையில் நடப்பில் வாய்விட்டே சொல்லியிருந்தாள் ராணி.
அப்பொழுது கதவை தட்டும் ஒலியில் சுயம் பெற்றவள் அவசர அவசரமாக அந்த புடவையை
அள்ளி முடிந்தாள், தீர்க்கமான முடிவுடன்.


ஒன்று படாமல் ரெண்டு பட்டிருக்கும் இரு இதயம் ஒரு இதயம் ஆவதெப்போ????????.


ஒன்றுபடும்....
I Thank all who shared symbols for this post... Thank You all :smiley36::smiley36:
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley12ஒன்றுபட்ட இதயமே:smiley12 - 1

ரங்காலயா பெயருக்கேற்ற மாதிரி ரங்கன் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு நிகராய் ஜொலித்து
கொண்டிருந்தது அந்த கல்யாண மண்டபம். மண்டபத்திற்கு நூறடி தூரத்திலேயே ஊருக்கே தெரியும் வண்ணம் ஃப்ளெக்ஸ்

:smiley12 ராஜா வெட்ஸ் ராணி :smiley12

என்று கட்டியம் கூற…

மண்டபத்தை சுற்றிலும் பச்சை பட்டுடுத்திய புல்வெளி, ....அதை மேலும் அழகாக்க துள்ளி
குதிக்கும் முயல்கள், கொஞ்சிப் பேசும் கிளிகள், வண்ண விளக்குகளை கொண்டு நடனமாடும் நீர்வீழ்ச்சி … மயக்கும் வகையில் பூ அலங்காரம்,

என மனதை ரம்மியமாக்கும் வித்தை அறிந்தவரின் கைவண்ணத்தில் மண்டபமே ஜொலித்தது…
இவையனைத்திற்கும் சிகரம் வைத்தது எதுவென்றால் வரவேற்பு சட்டந்தான்,

ஏனெனில் அச்சட்டத்தில்

ஒரு இதயம் மற்றோர் இதயத்தை கொய்து தன்னுள் அடக்கும் விதத்தில் அமைத்து, அதிலும்
புதுமை புகுத்த வேண்டி ஒரு முறை ராஜா என்ற பெயர் பதித்த இதயம் ராணியின் இதயத்தை கொய்து தன்னுள் அடக்கியது என்றால் மற்றொரு முறை ராணி என்று பொரித்த இதயம் ராஜாவின் இதயத்தை கொய்வது போல் அமைத்திருந்தனர் (இப்பவே மலைச்சா எப்படி நம்ம வீட்டு கல்யாணம்னா சும்மாவா).

வருவோரை வரவேற்க பிரத்தியேகமான நவீன பொம்மைகளை விடுத்து வண்டுகளை ஈர்க்கும்
சித்தாடை கட்டி சிங்கார பதுமைகளாய் கன்னியர் கூட்டம் படையெடுத்திருந்தனர்,

இவர்கள் வருவோரின் தாகம் தனிக்க வரவேற்பு பானம் கொடுத்து வழி நடத்தினர் என்றால்….

காளையர்களாகிய நாங்களொன்றும் சளைத்தவர்கள் இல்லை எனும் வகையில் ஓடி ஆடி வேலை
செய்து கொண்டே வேளை கிடைக்கும் போதெல்லாம் வழிந்து கொண்டாடினர் தன் அருமை அக்கா ராணி மங்கம்மாவின்( கேட்டா கெட்டா- யாரு நாந்தேன்) திருமண நிகழ்வுகளை.

இளவட்டதிற்கே இளவல் நாங்கள் என்று வரிந்து கட்டிக்கொண்டு (அட பட்டுப்புடவைய
சொன்னேன்) பட்டாடை சரசரக்க தன் கணவன்மார்களை கட்டுக்குள் வைத்திருந்தனர் பெண்டியர்கள்….

வெளியில் வேங்கை…. வேலியில் (டெரிடெரிங்க) வெறுங்கை (வெமாசுசொ அற்றவர் சங்கத்து
உறுப்பினர்கள்) எங்களின் சிங்கம்… வெளில சொன்னா அசிங்கம் என்று முப்பத்திரண்டு பற்களையும் ஈஈஈஈஈஈஈஈ யென காட்டிக்கொண்டே தொடர்ந்தனர் தன் மனைவிமார்களை… (என் இனமடா நீ)….

இதையெல்லாம் கண்டும் காணாதது போல் ஊர் வம்பு பேசவும்… உள்ளூர் வம்பளக்கவும்…
ஆரம்பித்திருந்தனர் நம் மூத்த தலைமுறையினர்….. (எதையும் விளக்கி சொன்னா தான் தெரியும் – அதாங்க மருமக(ள்க)ளின் வீழ்ச்சியையும் மாமியார்களின் எழுச்சியையும் பற்றி…).

ஓடி ஆடி விளையாடாமல், தன் நண்பர்களை கண்டும் இப்படியப்படி அசையாமல், இருக்கையில்
பசைப்போட்டு ஒட்டியது போலவே அமர்ந்து தங்கள் உலகில் மூழ்கி இருந்தனர் சிறார்கள்...

யப்பா கல்யாணத்துல கொஞ்சம் எக்ஸ்ட்ரா சபீனாவ வாங்குங்கடா விலக்குனா தான் தெரிது
(கைக்குள் உலகம் – செல்/ அலைபேசி/ கைபேசி – உலகத்தை மட்டுமல்லாமல் உடல், உள்ளம், உற்றார் உறவினர் என எண்ணிலடங்கா செல்வங்களையும் செல் என்று செல்லரிக்க வைப்பது ).

சரி வாங்க நாமென்ன இவங்க கூத்து பாக்கவா வந்தோம் … நாம போய் நம்ம ராஜா ராணியின்
கல்யாணத்த பார்ப்போம்…. (நல்லா இருக்கே கதஅ எங்க இன்னா இருக்கு … யாரு யாரு எப்பிடெப்புடி உடுத்தி வந்திருக்காங்கனு பார்க்கவே கிளம்பி வந்துட்டு இன்னா பேச்சு பேசுது பாத்தீங்களா…..)

“மாங்கல்யம் தந்துனானேன நமஜீவன ஹேதுனா

கண்டே பத்னாபி சுபஹே சஞ்சீவ சரதாம்ஷதம்….

கெட்டிமேளம் …. கெட்டிமேளம்…..” என்றவுடன்

கெட்டிமேளம் முழங்க அட்சதை தூவ ஆசிகள் பெறுக “மாங்கல்ய தாரணம் செய்ங்கோ…” என
குடும்பி வைத்த ஐயர் சொல்ல

மாங்கல்யத்தை மணமகள் கழுத்துக்கு கொண்டு செல்லும் பொழுது மணமகன் கைகளுக்கு
இருக்கும் தைரியம் அவன் மனதிற்கு இல்லையோ….. ஏனென்றால் கண்களில் கலவரம் ….. எப்போது எழுந்து எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு சொல்லிடுவாளோனு பயந்துக்கிட்டே கண்களை பார்க்க…. நிமிர்ந்தால் தானே… ‘ஏங்க என்ன கொஞ்சம் பாருங்களே’ னு கதரும் அவன் மனதின் வார்த்தைகள் அவளை சென்றடைந்ததோ…..

கசப்புகள் இருந்தாலும் கணவனென்று வரித்தவனாயிற்றே…. தன்னவனின் உணர்வுகளை
உணர்ந்தவள் மெல்ல விழியுயர்த்த, பாவம் போல் மாங்கல்யத்தை பார்த்தான் ….

‘பாக்கறத பாரு,நானும் நல்லவனுட்டு, இவனஆஆஆஅ…. சம்மதம் கேட்க நல்ல இடத்த புடிச்சான்
பாரு ..இடியட்.. தடியன்…ஃப்ராடு… வசைபாட…’

‘ஆத்தாடியோ சும்மா இருந்த சங்க ஊதிவிட்டுட்டோமோனு’ முழிக்க ஆரம்பிச்சுட்டான் ராஜா….

‘ஹா ஹா ஹா ஹா ஹா…. பயந்துட்டான் பயபுள்ள .. இத.. இத.. இதத்தான் எதிர்ப்பார்த்தேன் ! வாடி
மாப்ளே அப்பிடி வா வழிக்கு… ராணிமா கெத்த மெய்டெயின் பண்ணு … இல்ல… ஒன்னுமில்லாம பண்ணிடுவான், ஜாலக்காரன்…’ (மனசுலதாங்க).

மாப்ளே.. ராஜா… அண்ணா.. டே.. என்ற பல குரல்களினால் எண்ணங்களில் சுழன்றுகொண்டிருந்த
இருவரும் நடப்புக்கு வந்தனர். “கனாகண்டது போதும் மிச்சத்த அப்புறம் கண்டுக்கோ இப்போ தாலிய கட்டு ராசா னு” வந்த செல்ல மிரட்டலில் உட்டா போதும்டா சாமினு அவசரவசரமா முடிச்சிட்டான் அவளின் ரபி …

நீல நிற பட்டுடுத்தி, நிலம் பார்க்க வைத்தவனே..

நிற்காத ஓட்டம் கண்டு, நீண்டதொரு பயணம் தந்தாய்...

நீந்தி இப்பிறவி பயனை நிச்சயம் நான் பெற்றிடுவேன்..

நித்தியம் என் இதய தேவன் நீதானென்று உணரச்செய்வேன்...

பக்கத்தில் நிழலாடவும் என்ன என்று பார்த்தவனை பார்த்து எல்லோரும் சிரிக்க “ஏன் பறக்றேள்
இரண்டாம் மூனாமுடிச்சை போடவந்தவாள்கிட்ட கூட குடுக்கலையே அம்பிஇ” னு புரோகிதர் கலாய்க்கவும்

வெக்கம் வந்தாலும் ஓட்டியே தீத்திடுவானுங்கனு சீரியஸ்ஸா இருக்குறாப்போல காட்டிக்கிட்டான்
ரபி என்னும் ராஜா…

அவளின் ரபி மற்றவர்களின் ராஜா….

ஒன்றுபடும்……
:smiley36: I Thank all who shared symbols for this post... Thank You all :smiley36:
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley12ஒன்றுபட்ட இதயமே:smiley12 - 2

“அடேய்…. சின்னு, விட்றா… விட்றா என்னை… இன்னைக்கு அவனா நானா னு பார்த்திட்றேன்….”
திமிறிக் கொண்டிருந்தாள் பெண்ணவள்...
“டீ.... வேண்டான் டீ…. ப்ளீஸ்…." சின்னு கெஞ்சிக் கொண்டிருந்தான்…

“மூச்… நோ….(NO) க்கு நோ (NO)… நோக்கும் நோ….” என்றவள், "ஸீ …. யு ஷுட் நாட் கம் பிஹைண்ட் மீ…"
(see you should not come behind me – இங்க பாரு நீ என் பின்னாடி வரகூடாது).. என்று கண்களை உருட்டியவாறு மிறட்டிவிட்டு…

"யார் டா.... யார்ரா அவன்… பெரிய பருப்பு மாதிரி பேசினது… இப்போ சொல்றேன் டா… என்
டால்டா… நீ ரெடியா இருந்துக்கோ ராணீஸ் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்… (Rani’s time starts now)…."
என்று சொன்னவள் சொன்ன வேகத்தில் சென்று மறைந்தாள்….


“ஏய் சரவணா… சொன்ன மாதிரியே செஞ்சிடுவாளோ???” – பாண்டி வினவ

'தோள்களை குலுக்கிக் கொண்டே உதட்டை பிதுக்கி தெரில' என்பது போல் செய்கை செய்த
சரவணன் தன் நடையை கட்டினான்.

திக் திக் நொடிகள்… நொடிகள்…நிமிடங்களாக… நிமிடங்கள்… மணிகூறானது… மணிக்கூறு
சின்னுவை கூறு போட்டு கடந்ததே தவிற தரிசனம் கொடுக்க வேண்டியவளோ …. வந்த பாடில்லை….

பாண்டிக்கு தலைகால் புரியவில்லை… “டேய் மாப்ள… மாண்டாள் மண்டோதரி, இனி என்ட்ரி
என்னோடுதுரி” என ஆர்ப்பரிக்க…

சரவணனுக்கும் மனதில் சந்தோஷச் சாரல் பொழிய ஆரம்பித்தது….
அந்த குதூகலத்துடன் தங்கள் வீட்டுக்குள் நுழைந்தனர் இருவரும்…. நுழைந்த மறு நொடி சரக்கின்
சாகரத்தில் மூழ்கிட…

கலக்கம் கொண்டான் சின்னு “என்னானதோ… ஏதானதோ…” என்று வாய்விட்டே பதைத்தான்

இதில் விடாமல் அடிக்கும் அலைபேசிக்கு என்ன பதில் கொடுப்பது என்று தெரியாமல், அடிக்கும்
பேசியை கண்டு முகத்தை சுருக்கி யோசித்துக் கொண்டிருக்கையிலே….

திடீர் என துண்டை காணும் துணியை காணும் என்று ஓடி வந்து கொண்டிருந்தான் பாண்டி….

அவன் ராமனை நெருங்கவும்… அழைத்து ஓய்ந்த அலைபேசி “நானே வருவேன் இங்கும் அங்கும்… “எனும் பாடல் ஒலி ஒலிக்க பெறவும் சரியாக இருந்தது….

பீதியில் எங்கே பேதியாகிவிடுமோ என்று ஓடி வந்தவனை மேலும் பயப்படுத்தியது இந்த பாடல்….

கடுப்படித்து விட்டு கச்சேரிக்கு சென்றவன் ஓடி வர, தன்னை கண்டு கொள்ளாமல் போகும், அவன் சட்டையை பிடித்து இழுத்தான்…. ராமன்

இழுபட்டவன், உயிரே போய்விட்டது போல்… மாரியாத்தா, முப்பாத்தா…எங்காத்தா உங்காத்தா…
மங்காத்தா…. என்னை உட்டுரு என அலற ஆரம்பித்தான்….

அதில் சோர்ந்திருந்த முகம், உடனே பிரகாசமாக…. ‘குட்டிமா பத்தி உனக்கு தெரியாததா… அது
தான் போகும் போதே டைம் ஸ்டார்ட்ஸ் னு சொல்லிட்டு போனாளே….’ என தன்னை தானே கடிந்து கொண்டு…. நடப்பதை வேடிக்கை பார்க்க ஆயத்தமானான். அதன் முதல் கட்டமாக பிடித்திருந்த பிடியை தளர்த்தி… அருகிலிருந்த மரத்தின் பின் மறைந்தான் சின்னு என்னும் ராமன்.

பிடித்தது யார்…? விட்டது யார்…? என்பது கூட முக்கியமில்லை என்று விட்டா போதும் னு ஓடியே
மறைந்தான்… பாண்டி.

*************--------*********-------------

வெண்ணிற ஆடை உடுத்தி… தலை விரி கோலமாய்…. என்னை ஏன்டா அப்படி பண்ண சொன்ன?
ஏன்? ஏன்? ஏன்? என்றவள்…. எல்லாம் தெரிஞ்சும் இந்த அப்பாவியை பலி கொடுக்க துணிஞ்சிட்டியே டா…. எனவும் உருகினாள்….

உருகியவள் அடுத்த நொடி… என்னை இந்நிலைக்கு ஆளாக்கிய உன்ன முடிக்கவே அகோர
பசியோட வந்திருக்கேன்…. வா… வா… வந்திடு…. என்று சரவணனை அவன் வீட்டிலிருந்து மிரள வைத்துக்கொண்டிருந்தாள்… ராணி.

உயிர் பயம் உயர்ந்ததே… தவிற குறைந்த பாடில்லை. அசாத்திய தைரியசாலி ஆனாலும் பேய்
என்பதில் பயந்து போனான்… சரவணன். அதற்கு தூபம் போட்டது தீர்த்தம்…

சீறும் சிறுத்தை சிறு பிள்ளையைப் போல் சிறுத்தது கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்…
இருவரும்…. அருகிலிருந்த வண்ணம் ராணியும்… மறைவில் இருந்தவாறே சின்னுவும்….

உச்சகட்ட பயத்தில், இருந்த இடத்திலே மயங்கி சரிந்தான் சரவணன்….

அவன் மயங்கியதும்… நடந்ததை நினைத்து தன்னந்தனியாய் சிரித்தாள்…

அதீக மகிழ்ச்சி… அதீத கவலை… இரண்டுமே ஒருவரை தன்னிலை அற்றுப் போக செய்யும்…
இதனோடு கைக்கோர்த்திருப்பது பதின் பருவமும்… அதன் சாதகமா அல்லது பாதகமா - பிரித்து அறிய முடியா நிலை, இது ஒரு புறம் என்றால் தன்னிலையில் இல்லாத போது தன்னையும் அறியோம் தன் சுற்றமும் அறியோம் … என்பது மறுபுறம்,

அப்படி ஒரு நிலையில் ராணியும் …

தன்னையே ஒரு உருவம் அசூசையாய் பார்த்துக் கொண்டிருப்பது தெரியாமல் போனது…

அது மட்டும் அல்லாமல்… அங்கிருந்து நகர்ந்தவள் மறைவில் நின்றிருந்த ராமனிடம் ஹை பைவ் கொடுத்துக் கொண்டே “ சின்னு பார்த்தியாட அவன் தில்ல… இவனெல்லாம் வீராதி வீரனாம் … சூராதி சூரனாம்…” என்று கலாய்த்தாள்….

இவளின் அலப்பறையை தாங்க முடியாமல்… என்னவோ பண்ணி இருக்க ஆனா என்னானு தான்
தெரில… வருத்தம் கொண்டான். ஆனாலும் மனதோ ‘அப்பாடா நல்ல வேளை வந்து விட்டாள்’ சமாதானம் கொண்டது. அவன் வருத்தம் கொள்வதிலும் நியாயம் இருக்க தான் செய்தது…

ஏனெனில்…

தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணமாகவே இருக்க அவனும் தான் என்ன செய்ய.. எவ்வளவு
சமாளித்தாலும் மாட்டினால் ஆதாரம் இருந்தாலும் இல்லை என்றாலும் சேதாரம் என்பது இவனுக்கு மட்டும் தானே….

யாருக்கென்று பார்க்க… ராணிக்காக வா…. இல்ல பெரியவர்களுக்காக வா… என எப்போதும் எழும்
தடுமாற்றம் இப்பொழுதும் வந்தது…

வராம இருக்குமா??? வரலனாத்தான் ஆச்சரியம்…. ஏனா நம்ம ஆளு அந்த மாதிரி…

“தேவதையே பெண் எனும் வடிவம் கொண்டவளோ…

தேடினாலும் கிடைக்கற்கறிய பொக்கிஷம் தான் இவளோ

வியக்க வைப்பவள் வியர்க்கவும் வைக்கின்றாள்…

விளையாட்டாய் விண்ணையும் பிடிக்கின்றாள்…

தேகம் நோகா வாழ்வை தர வேண்டி

தேனீகள் போல் தேடி சேர்த்தனரே

வடிவம் தந்த பெற்றோர் ஒரு புறம்

வடிவாய் கண்ட உற்றார் மறு புறம்
– என் அன்பு குட்டிமா (ராமன் எழுதல நான் எழுதினேன்).

ரவியும் மணியும் பாலிய நண்பர்கள்….. நண்பர்களுக்கு ஏற்ற வாழ்வரசிகள் சரசுவும், பாரதியும்…
மனம் கோணாமல் வாழும் பாக்கியவதிகள்….

வள்ளுவன் வாசுகி என்று எல்லோராலும் வாரப்படும் மன்னிக்கனும் போற்றப்படும் மணிக்கும்
பாரதிக்கும் பிறந்தவர்கள் ராஜனும், ராமனும் … இரண்டும் இரண்டு துருவங்கள்….

சீரியஸ் ராஜன்… கியர்ஸ் அப் ராமன்….

********--------********---------

மணம் ஒத்து வாழ்ந்த ரவிக்கும் சரசுக்கும் விண்ணரசியாய் பிறந்தாள் அரசி…. தன்னை ஆள வந்த
அரசி அவள் என்பதால் விண்ணரசி என்று பெயர் வைத்து கொண்டாடினர்….

அவளுக்கு பின் பெரும் இடைவெளி கொண்டு கால் பதித்தாள் ராணி என்னும் ஞானராணி…..

அரசி மூத்த மகள் என்பதால் அதிக படியான பொறுப்புடன் இருப்பவள்…. அத்தோடு ஆள்
அரவமற்றும் இருப்பவள்…

ஆனால் அதற்கு நேர் மாறாய் வம்பிழுத்துக் கொண்டே இருப்பவள் ராணி… பெயருக்கேற்ப
காலாட்டாவிலும் ராணி தான்...

இவர்கள் நால்வரில் ஏறு வரிசையில் இவர்களை வரிசை படுத்தினால் முதலாமவதாக அரசி,
இரண்டாவதாக ராஜன், மூன்றாவதாக ராமன், காலம் கடந்து வந்தாலும் கடைந்தெடுத்த அமிழ்தம் ராணி (யாரு நீ? ஆமா நான்.. அமிழ்தம்? ஆமா அமிழ்தம்.. எரரா (error) இருக்க போகுது…. அப்பிடினா? ஆலகால விஷமா இருக்க போகுது ன்னேன்).

*******---------********--------

ராஜன் பெயருக்கு ஏற்றார் போல் தனிக்காட்டு ராஜாவாய் இருந்தவனுக்கு தடையா வந்தவனாய்
பதிந்தான் ராமன்…

“கண்ணிமைக்கும் நேரத்திலே கண்ணன் அல்லாமல் போனேனோ….

எனை தாங்கும் மடி இன்றி மனம் மருகிப் போனேனே..

இளையவன் வருகின்றான் என உரைத்த என் தாயே

எனையே இழக்க வைப்பான் என்று குறிப்புரைக்க மறந்தாயோ…”
சிப்ளிங்க் ரைவாள்ரி … பிள்ளை பிறக்கும் வரை கூட ஆவலாய் எதிர்பார்த்த ராஜன் புதிதாய்
பிறந்தவனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் இளையவனுக்கு தமையனாய் உணராமல் தனக்கான இடஞ்சலாய் உணர்ந்தான்… ராமனை!!

******------******------

தம்பி உடையான் தான் படைக்கஞ்சான் ஆ… தங்கை உடையாளும் படைகஞ்சாள் தான்…. பிகாஸ்
(bcoz - ஏன்னா) ராணி எஸ்கார்ட்ஸ் அரசி….

சின்னுவும் ராணியும் ஒரு செட்…. ரெண்டும் ரெண்டு காலு கொண்ட அறுந்த வாலு… ஸ்கூலுக்கு
போனா அரசியையும் ராஜாவையும் ஏகமாய் போற்றுவர்…. ஆனால் இவர்களை கண்டால் தெரித்து ஓடுவர்… தூற்றுவர் னு சொல்லுவேனு நினைச்சீங்களா, அதுக்கும் அவங்கள விட்டு வைக்கனும் இல்ல, ஏனா அவங்க காம்போ (Combo) இருக்கு பாருங்கோ…அப்பிடி ஒரு காம்போ அரசியும், ராஜாவும் ஒரு ரகம்… படிப்ஸ்…. சின்னுவும்…. ராணியும் தனி ரகம் இதுல தான் சேர்த்தின்னு ஒதுக்கிட முடியாது ….

********----------********--------

ராணியின் குதூகலத்தை பார்த்து இருந்தவன்… "அப்படி என்னடி பண்ண? என்னையும் வரக்கூடாது
னு சொல்லிட்ட" என ஆவல் கொள்ள

"அதுவா ராம் …. என ராகம் இழுத்தவள்"

"அது ஒன்னுமில்ல டா, நம்ம பாஷைல சொல்லனும் னா… சப்ப மேட்டரு குவாட்டரு பீரு” என்றவள்,

தயங்கியவாறே, சொன்னா திட்ட மாட்டேன்னு சொல்லு நான் சொல்றேன்; எனவும் தற்காப்பு
முஸ்தீப்புகளை மேற்கொண்டாள்…

‘எப்ப மிஞ்ச விட்டிருக்க…. கெஞ்ச தானே முடியும்…’ என நினைத்தவன், மீ.... திட்டிங்க் …. யூ…. நெவர்
(never)… என்றான்.

அதில் மேலும் மகிழ்ச்சியில் மூழ்கியவள்…. அவனை நெருங்கி ரகசியம் சொல்ல….

வேண்டியவர் பார்வையில் வேண்டாமல் போக வேண்டியே சிக்கினாள்….

ரெண்டுபடும்….
:smiley36: I Thank all who shared symbols for this post... Thank You all :smiley36:
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley12ஒன்றுபட்ட இதயமே :smiley12 - 3


........ சீரியஸ்ஸா இருக்குறாப்போல காட்டிக்கிட்டான் ராஜா என்னும் ரபி….

அந்த கெத்த மெயின்டெயின் பண்ணிக்க நினைச்சு, கடினப்பட்டு போன குரலில்
“பறக்குறாங்களா...”



எனவும்.

இதை கேட்ட ராணி, அடிபட்ட குழந்தையாய் முகம் வெதும்பி , மனம் மருகி தலையை குனிந்து கொண்டாள்.
சுற்றி இருந்தோரோ வெட்கத்திலும், நாணத்திலும் தலைகவிழ்ந்தாள் என்று நினைத்தனர் (நீங்களா….
ஒன்னு நினைச்சிக்கிட்டு- நல்லா.. ஆ வருவீங்க).

ஐயரும் அந்த குரலுக்கு அடங்கியோ அல்லது அவருக்கு வரிசை கட்டி நிற்கும் அலுவலுக்கோ தன்
அடுத்த வேலையை கவனிக்க தொடங்கினார்.

கரை மீது காதல் கொண்டு தடை மீற நினைத்தாலும், தன்னிடம் சேரவே வரம் பெற்றது கடல் நீர்...
அது போல ராஜனுக்காய் படைக்க பட்டவள் ராணி, எத்தனை தடைகள் வந்தாலும் தன்னவள் தனக்கானவளே என்று எண்ணினாலும், படிகள் பல என்பதையும் புரிந்தே இருந்தான்.

அதனால் 'முதல் கண்டத்தில பாதி கிணற தாண்டிட்டோம்னு பெருமூச்சு விட்டு ஆசுவாசபட்டுக்க….'
“அம்பி குங்குமம் இடுங்கோ…..” எனும் குரல் கேட்டு தூக்கிவாரி போட நிமிர்ந்தான்….

நிமிர்ந்தவன் குங்கும சிமிழில் கண்களை பதித்து எதையோ நினைத்து கொண்டிருக்க,
அவன் நிமிர்ந்த வேகத்தையும் தவறாய் புரிந்து கொண்ட ஐயர் “ப்பறக்…காதேள், உம்ம கிட்ட தான் சொன்னேன், நீர் தான் வைக்கப்போறேள்” எனவும்,

‘அடப்போயா…. நீரும் உம்ம அனுமானமும், நொடிக்கு ஒரு தரம் அத வேற சொல்லி எனக்கு கொள்ளி
வைக்காம போகமாடீர் போலயே….’ என நினைத்தவன்.

‘நல்ல நாளும் அதுவுமா கொள்ளியா’ என்பதை மனதிலும் “ச்சீ தூ” என்பதை சத்தமாயும் சொல்ல.
தனக்கு குங்குமம் வைக்க சொன்னது தான் அவனை அப்படி சொல்ல தூண்டியது என்று சரியாய்
அவன் கூற்றை தவறாய் புரிந்து கொண்டாள்- ராணி.

மனதின் அலைபுறுதல் கண்களுக்கு கடத்தப் பட; ராணியின் நயனங்கள் நிலை கொள்ளும் நிலை அற்று நர்த்தனம் ஆடியது இரு மருங்கிலும்,

திக்கற்ற காட்டில் - தீக்குள்
சிக்கிய சிறு பறவை போல்
தீர்வு காண தன்னையே

தீந்தாள் தீந்தேனாய்....

இதை எதையும் கவனியாமல், குங்குமத்தை அளவாய் எடுத்து வில் போன்று வளைந்திருந்த
புருவத்தின் மத்தியில் கீற்றாய் தீட்டினான், அவன் தீண்டலில் நிலை கொண்ட மிண்டை; மீள நினைக்காமல் நிலை கொண்டது எனினும்; மனமோ!!
'ஸ்பரிசம் தொட்டவன், சரீர அபகமம் செய்ததேனோ'?,
என வருத்தம் கொண்டது.

பெரும்பாலும் அடுத்ததாய் செய்யக்கூடிய அம்மையப்பன் பொறித்த பொன் தாலியில் தீட்டும்
முறைமைக்கு மாறாக, தாலியில் வைக்காமல் உச்சி வகுடெடுத்திருக்கும் வகிடிலும் கீற்றாய் தீட்டி, அதன் பிறகே தாலியில் பொட்டிட்டு கைகளை விலக்கினான் ராஜன்.

உறைந்தவள் தன் நிலையிலேயே உறைந்திருக்க, அவனையும் உணரவில்லை, அவன்
செய்கையையும் உணரவில்லை.

விலகியவனின் பார்வை ராணியின் உச்சி முதல் அளவிட தொடங்கியது, ஸ்வாரஸ்சியமாய் பதிய
வேண்டிய பார்வை 'நேற்றைக்கும், இன்றைக்கும் ஆன வேறுபாடுகள் எத்தனை' என ஆராய்ச்சியாய் அமைய பெற்றது விதியின் விந்தை தானோ!!!

உச்சி வகுடெடுத்து இருபுறமும் கிளிப்பிட்டும், அடங்குவேனா என்று அவளை போலவே அடங்காமல்
சிலிர்த்து நின்றிருந்தது, கொஞ்சமே வளர்ந்திருந்த குட்டை முடி (ஆஸுக்கு புஸுக்கு என்னா எப்பவும் நீண்ட முடி இடை தாண்டின்னு தான் சொல்லனுமோ), எக்ஸ்டென்ஷனில் நீண்டு இருக்க, காதோடு ஒட்டிய வென்முத்தும், பூச்சுக்களற்று, (அதான் பவிடருங்க...... அப்பு, மேக்கப்பு அப்பு) ஆங்காங்கே கருத்த தழும்புகள் நிறைந்த மாநிற முகமும், சருமத்தின் நிறத்திற்கும் எனக்கும் வித்தியாசமில்லை என பறைசாற்றும் மாநிற உதடும், அதிலும் கீழ் உதட்டில் அருகில் இருப்போருக்கு மட்டுமே தென்படுவேன் எனும் சிறிய மச்சமுமாய், அமர்ந்திருந்தவள் தன்னியல்பு போல் வறண்ட உதட்டை நாவினால் ஈர படுத்த,
‘அழகிய சின்ன மேட்டில்
வளைந்து நெளிந்து ஆடுதாம் - பாம்பு’

என்று அவசர கவிதை எழுதினான்... (ரணகளத்திலும் ஒரு குதூஊஉகள......ம் இடித்துரைத்தது மனது).

“அக்கினிய வளம் வாங்கோ” என்னும் அடுத்த கட்டளையை பிறப்பித்த ஐயர் தொடர்ந்து
“அங்கவஸ்திரத்த கொடுங்கோ!!” என்று சொன்னவாரே, குடுப்பதற்காய் கத்திருக்காமல் அவரே எடுத்து முடிச்சிட்டார்... முடிச்சிட்ட கையோடு கடமை வேந்தனாய் மந்திரத்தை ஓத,

தன்னவள் என்ன செய்ய போகிறாள் என்று காத்திருந்த ராஜனுக்கு பல்பு தான் மிச்சம்!!
‘பூங்கரந்தை தருவாள்’ (பூங்கரமா-- பூரிக்கட்டையை காட்டிலும் வலுபெற்ற கரமப்பா அது!!!
என்று சிலர் புலம்புவது தெரிது; நியூ எண்ட்ரி தானே, அப்பிடி தான் சொல்லும் - பயபுள்ளைய போனா போகுதுன்னு விட்டுடுங்கோ) என அவன் இருக்க; ‘கைத்தடம் பற்றுவான்’ என்று இவள் இருந்தாள்.

'தடம் பதிக்க கரம் பிடிப்பதைக் காட்டிலும் மனம் பிடிக்க வேண்டும் என்று காலம் சென்று கண்டு
கொண்டான்' அதனால் பெண்ணவளின் மனம் அறியாமல் கரம் பிடிக்கவில்லை. (நான் சிங்க் லேயே போங்கோ சீக்கிரம் உருப்பட்டுருவீங்க)

இருவரும் தங்கள் நிலையில் இருந்து மாறாமல் இருக்க, அக்கினியை வளம் வர சொன்னவர்களின்
அசைவை உணராத ஐயர், ஏன்டா அம்பி உன் ரொமான்ஸ் ச சத்த தள்ளி தான் வச்சுக்கோயேன், நாழியாரர் தோன்னோ என்று இருவரின் கைகளை பற்ற, எழ காத்திருந்த விழி நீர் கரை கண்டது ராணிக்கு.

அதை தாங்காதவனின் விழி அசைவில் அருகில் இருந்த ஒருவன் வந்து ஐயர் பற்றி இருந்த கரத்தை
தான் பற்றி இருவரின் கரத்தையும் இணைக்க, அக்கினியை வளம் வர கைகளை இணைத்தனர்.

இணைத்த நொடி உறைந்தது இருவரும் தான்
‘இது என்ன பந்தம்’ என்று ராணியும் ....
‘இது எந்தன் பந்தம்’ என்று ராஜனும்...

ராஜனின் உறுதி ராணியை உருக்குமா???
ராணியின் வலிமை ராஜனை விலக்குமா??? - விடை காலன் கையில்....



ஒன்றுபடும் .....
:smiley36: I Thank all who shared symbols for this post... Thank You all :smiley36:
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley12ஒன்றுபட்ட இதயமே:smiley12 - 4


...... வேண்டியவர் பார்வையில் வேண்டாமல் போக வேண்டியே சிக்கினாள்….


ராமனை நெருங்கியவள் அவன் காதில் "நாம நம்ம ப்ளேஸ்க்கு போனா சொல்றேன்…." என்றாள்;

கண்டிக்கும் விதமாக "குட்டிமா… வா வீட்டுக்கு போகலாம்" என்றவனை கிஞ்சித்தும் மதியாமல்
அவன் கையில் இருந்த பைக் சாவியை பிடிங்கிக் கொண்டு, "உடு ஜுட்…. என்று கத்திக் கொண்டே ஓடினாள்".

அவள் அலப்பறைகளை எல்லாம் இதுவரையில் பொறுத்தவனை அவனது மனசாட்சி சின்னு, ‘இவ
கெஞ்சினால் மிஞ்சுவாள் மிஞ்சினால் கெஞ்சுவாள்’ என எடுத்து கொடுக்க;

நின்ற இடத்திலிருந்தே கடினப்பட்டு போன குரலில் "ராணி…" எனவும், அவன் தொனியில் அடுத்த
நொடி முகத்தை முழ நீளத்திற்கு நீட்டிக் கொண்டு, இரண்டு காலையும் தொம் தொம் என்று உயர்த்தி இறக்கி அடி மேல் அடி வைத்து வந்து தன் கையில் இருக்கும் சாவியை நீட்டினாள்.

நீண்ட சாவியை கைப்பற்றியவன், பைக்கை ஸ்டார்ட் செய்து, உறும விட, அமைதியாக வண்டியில்
ஏறி பிடிமானம் அற்று அமர்ந்தாள்.

அவள் அமர்ந்த அடுத்த நொடி, பின்னால் கை உயர்த்தி தன் அன்பு குட்டிமாவின் தலை பற்றி “உற்ற
தோழி உயிர்ப்பற்று இருக்க உடையாதோ எந்தன் இதயம்” – என்றான் அன்புள்ளம் கொண்டவன்.

சிறிது நேரம் உயிர்ப்பற்று இருபதையே தாங்க இயலாதவன், தானே அவளை உயிர் பற்றுஅற்று
போகச் செய்வான் என்று நினைத்திருப்பானோ!!!

-ராமனின் நிலை அறிந்தமையால், 'அவன் முதிகில் நாலு அடி போட்டு கொண்டே', "சாரதியே என்
சரிபாதியை சரி பார்க்க நீவிர் வேண்டும் என்பதால் உம்மை மன்னித்தோம், மறந்தோம்" என்று சிரித்தாள்.

எளிதாய் மன்னித்தோம்; மறந்தோம் என்றவள், மன்னிக்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல்,
ஏன் மரிக்கவும் கூட முடியாமல் மருகும் நாள் தொலைவில் இல்லை என்பதை அறிவாளோ!!!

விழியெடுக்காமல், குரோதம் பொங்க அங்கு நடந்ததையே பார்த்துக் கொண்டிருந்த இருவிழிகள்;
அருவெறுப்பில் முகம் சுளித்தது.

சினுங்களாய், "குட்டிமா வலிக்குது" என்றவனும் 'சமாதானம் ஆகிவிட்டாள்' என்று வண்டியை
கிளப்பி வீட்டை நோக்கி விரட்டினான்.

********-------*******------

வீட்டின் தெரு முனையிலேயே வண்டியை நிறுத்தியவன், குட்டிமாவுடன் வண்டியை
தள்ளிக்கொண்டு வீட்டை அடைந்தான்.

உறக்கம் பிடிக்காமல் வீட்டினர் அனைவரும் சின்னுவின் வீட்டில் அமர்ந்திருக்க, அவர்கள் மத்தியில்
சந்தடி செய்யாமல், யாருக்கும் சந்தேகமும் வராமல், குட்டிமாவின் வீட்டில் நுழைந்தவன்;

முன் ஜாக்கிரதை முத்தன்னாவாய் ஃபோன்ஐ சைலேண்ட் மோடில் இட்டு விட்டு, சின்னுவின் வீட்டை
அடைந்தனர் தங்களது பிரத்தியேக ரகசிய வழியில்.

வீட்டை அடைந்தாலும் உடனே வெளியில் வராமல், அரங்கேற்ற பட இருக்கும் நாடகத்திற்கு
தன்னை தானே தயார் செய்து கொண்டு வெளியில் வந்தான் சின்னு.

அவன் வெளியில் வந்தது தான் தாமதம், என்னும் விதமாக

"ராமு குட்டிமா எங்க?" - பாரதி

"ராமு வாலு எங்க?" - அரசி

"ராமு மங்காத்தா எங்க?"- சரசு

தன்னை சுற்றி எட்டுத்திக்கும் ஒலிக்கும் 'எங்கே!!!!? எங்கே!!!!? எங்கே!!!!?' எனும் சத்தம் கேட்டு
ஒன்றும் புரியாதவனை போல் முக பாவத்தை மாற்றி,

"கு… ட்…. டி…. மா! எங்க! யா!!!?" என்றான் குழப்பத்தில்….

'எப்பா இது உலக மகா நடிப்பு டா சாமி!!!!' - அவன் மனசாட்சி அவனை காறி துப்ப அதை உடப்பில்
போட்டு விட்டு நடப்புக்கு வந்தான்

அப்பொழுதும் கடுப்புடன் "உன் ஃபோன் எங்கே?" என்றார் மணி

"ரூம்ல இருக்கு ப்பா" என்றவனை எரிப்பது போல் பார்த்து "ஃபோன் அடிச்சா எடுக்க மாட்டியா?" எனவும்

அவர்கள் வீட்டின் ட்ராயிங்க் ரூம் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

இதுக்கு மேல போனா சேதாரம் ஜாஸ்தி என்று பாவம் பார்த்த ராணி தான் சின்னுவின் ஃபோனை
கையில் எடுத்து, சோம்பல் முறித்துக் கொண்டே ரூமில் இருந்து வெளியில் வந்தாள்.

வந்தவள் வெளியில் இருப்பவர்களை பார்த்தவுடன் “என்ன விட்டுட்டு என்ன பண்றீங்க"
என்றவாறே… "சின்னு உன் ஃபோன் அடிச்சு என் தூக்கத்தை கெடுத்துடுச்சு” என்று நீட்டினாள்.

அவளை பார்த்ததும் பதற்றம் குறைந்தவர்கள், ஆசுவாச பட்டுக்க;

சரசு மட்டும் "எல்லாரும் தூக்கத்தை உட்டுபுட்டு, வயத்துல நெருப்ப கட்டிக்கிட்டு, நாம இங்க
பதச்சிக்கிட்டு இருந்தா; தூங்கி எழுந்து சாவதானமா வந்ததும் இல்லாம, நட்டநடு ராத்திரில என்ன பண்றீங்கனு ஒரு கேள்வி வேற", நொடித்துக் கொண்டார்.

ஆம் அவர் நொடித்து கொள்ள மட்டும் தான் முடியும், அதையும் மீறி அவர் அவளை அடிக்க கையை
ஓங்கினாலே தீர்த்துக் கட்ட படுவார்.

தவறுகள் கண்டிக்க மட்டும் தானே தவிற தண்டிக்க கூடாது எனும் குடும்பத்தவர்கள்.

பாவம் அவர் அறிந்த மட்டும் ‘அடியா மாடு படியாது’ என்பதே

பற்பல பழமொழி கேட்டும், இம் என்றாலும், உம் என்றாலும் அடி பட்டும், இடி பட்டும் வளர்ந்தவர். எனவே அவர் அதை பிரயோகிக்க நினைக்க முதல் முறை எனும் போதே கடைசி முறை ஆக்கிவிட்டனர் அன்பு வழியில் நம்பிக்கை கொண்ட அக்குடும்பத்து பெரியவர்கள்

யாரும் அறியா வண்ணம் “ஹ்ம்ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்ட சின்னுவை பார்த்துக் கொண்டே,
ராணி "பசிக்குது" எனவும் சாப்பாட்டுக் கடையை மாடிக்கு மாற்றினர்.

கவலை நீங்கி கலகலத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் தம் தம் அறைக்கு தூங்க
சென்றனர்.

எல்லோரும் கலைந்து செல்லவும் வழமை போல் ட்ராயிங்க் ரூம் சென்றனர் ராணியும் ராமனும்.

ராமன் அறையினுள் நுழைந்தவள் கரம் பற்ற, அவன் கரத்தை அவள் பற்றி பின் வழியாய் மாடி
ஏறினர்.

மாடி ஏறிய அடுத்த நொடி "உன் பொறுமையை சோதிச்சது போதும்",

"சோ ஹியர் கம்ஸ் ராணிஸ் கிரியேஷன்ஸில் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்து வழங்கும்
'சிதறியது சிதறு தேங்காய்'", என்று புதுப்பட அறிவிப்பாளர் போல் அறிவித்தாள்.

மேற்கூறியவற்றை சொன்னவள் அதனை தெடர்ந்து "நம்ம ரட்சன்யாக்கு பேய் னா பயம்னு தெரிஞ்சிகிட்டு அவள பயப்படுத்தி இந்த காலேஜிலிருந்தே போக வைக்க, கெமிஸ்ட்ரி லேப்ல தூக்கு போட்டு செத்துபோன சாந்தியோட ஆத்மா சாந்தி அடையாம அங்க அலையறதாவும்; அப்பாவி பொண்ணுங்கள காவு வாங்கிறதாவும்… சொல்லி இருக்கானுங்க…"

"அத அவ எங்கிட்ட கேட்டா",
"நானும் இதெல்லாம் சகஜம், சீனியர்ஸ் சும்மா விளையாடுறாங்க… அப்பிடி எதுவும் இல்லனு சொல்லி சமாதானம் பண்ணி அனுப்பிட்டேன்".

"ஆனா அந்த லூசு இதையே நினைச்சுகிட்டு படுத்திருக்கும் போல கனவெல்லாம் யாரோ ஒரு சாந்தி - சாந்தி கேட்டு வந்துச்சுனு அடுத்த நாள் புலம்புனா";

"அப்பவும் இது ஒன்னும் இல்லனு தைரியம் சொன்னேன்".

"இன்னைக்கு பார்த்தா பெட்டி படுக்கையோட கண் சிவந்து முகம் வீங்கி நடுநடுங்கி போனவளா
வீட்டுக்கு போறேன்னு நிக்குறா!!"

"அவள பார்க்க பாவமா இருந்துச்சா, அதான் அவள கூட்டிக்கிட்டு யார் உனக்கு இந்த சங்கதிய சொன்னதுன்னு விசாரிச்சு அவங்க வாயலேயே இல்லனு நிருபிக்கிறேனும், நிருபிச்சா உனக்கு சந்தோஷமானும் கேட்டு கூட்டிட்டு போனேன்."

"ஆனா அவங்க எல்லாம் ரொம்ப மோசம் சின்னு, ஒரு புள்ள இவ்ளோ பயந்திருக்கே, அவள
சமாதானம் பண்ணலாம் னு நினைக்காம கலாய்க்கிறாங்க." என வருந்தினாள்.

"இவ மட்டும் தான் இப்படினு நெனைச்சா, இது இவளோட மட்டும் முடியாம நிறைய பேர மிரட்டி
வெச்சிருக்கானுங்க…."

"ஒருத்தி என்னடான்னா அவனுங்களுக்கு சலாம் போடுறா, இன்னொருத்தி என்னடான்னா
வக்கனையா சாப்பாடு கொடுக்குறா, இதுல ஹைலைட்டு என்னன்னா ஒரு பையனும் சேர்த்தி!! அவன் என்னடான்னா இவனுங்களுக்கு தம்மு வாங்கி வந்திருக்கான்".

"அதான் வந்த கோபத்துக்கு அங்க அப்படி ஒன்னும் இல்லனு ப்புருவ் பண்ணா இங்க இருக்கிறதிற்கு
உனக்கு ஒன்னும் இல்லையேனு கேட்டேன்?"

"கேட்டதும் அந்த குருவி கூட்டு தலையன் என்ன பார்த்து கைய காமிச்சுக்கிட்டே சாந்தி… சாந்தி தற
சமர்பணம் செய்யிறோம் னு பில்டப்பு குடுக்குறான்…"

அப்போ தான் அந்த சரவணன், ஓ! அவ்வளவு தைரியசாலியா நீ!! ஜான்சிக்கு ராணி வந்திருக்காங்க
பாருங்கனு!!! சொல்லி கிண்டல் பண்ணான்…

"அது மட்டுமில்லாமல் என் கையிலிருந்த வாட்ச கழட்டிக்கிட்டே தைரியசாலினா சாந்திக்கு ரொம்ப
பிடிக்கும்…; சோ நீ என்ன பண்ற நட்டநடு நிசில சுடுகாட்டு மண்ண எடுத்துகிட்டு வந்து கெமிஸ்ட்ரி லேப்ல இருக்க பத்தாம் நம்பர் டேபிள்ல வச்சிட்டு, உன் வாட்ச எடுத்துட்டு வந்தா நாளைல இருந்து நோ ரேகிங்க்; இல்லனா தினமும் இவ வந்து எங்க கால்ல விழுந்து மண்ணிப்பு கேட்டுட்டு தான் படிக்க போகனும்னு சொன்னான்."

இப்படி சொன்னவளை யோசனையுடன் பார்த்த ராமனை கண்டு, "எனக்கும் அதே சந்தேகம்
தான், அதனால நானும் அவன பார்த்தேன்",

உடனே அந்த குருவி கூட்டு தலையன் - பாண்டி ஏளனமாய் சிரிச்சிக்கிட்டே "இவள ஏன் வந்து மண்ணிப்பு கேட்க வரச் சொன்னான்னு பாக்கிறியா; நீதான் சமாதி அடைய போறியே அதான்…. அப்படிங்குறான்…"

"எனக்கு வந்ததே கோபம்… என்று குரலை உயர்த்தியவள், நாம யாருன்னு அவனுங்களுக்கு காட்ட வேண்டாம்; அதான் நானா நீயானு ஒரு கை பார்த்துடலாம்னு," சொல்லும் போதே அவன் முகம் கடுகடுத்ததில் "களத்துல குதிச்சிட்டேன்…. "என்றவளின் குரல் ஆழ் கிணற்றுக்குள் இருந்து வருவது போல் வந்தது.

நம்ம வீரத்த பார் போற்ற வேண்டுமே, தரணி போற்ற வேண்டுமே என்றெல்லாம் நினைக்கல
சின்னு… ரட்சண்யா படிப்பு ரட்சிக்க படணும்கிற மேலான நோக்கத்திற்கு தான் சின்னு", என்று வக்கியத்திற்கு ஒரு சின்னு போட்டாள்.

"ம்ம்ம்ம்" என்று மட்டும் ஒலி எழுப்பியவன், மேலே சொல்லுமாறு சைகை செய்ய; அவளும் விட்ட
இடத்தில் இருந்து தொடங்கினாள்.

"அக்ட்சுவலா நான் என் வாட்ஸ் ஆப்ல லொக்கேஷன் ஷேர் பண்ண ஆன் பண்ணிட்டு அந்த
சுடுகாட்டுக்கு போனேன்… பயப்படுற அளவுக்கு அந்த இடம் பயமா எல்லாம் இல்ல சின்னு, அங்கிருந்து கைப்பிடி மண் எடுத்துகிட்டு வெளிய வந்தா இரண்டு தடித்தாண்டவராயனுங்க!!! தடியோட நிக்குறானுங்க"

"இட் வாஸ் சோ ஃபிஷி… அதனால நான் லொக்கேஷன் ஷேரிங்கை சுடுகாட்டுக் உள்ள போனவுடனே ஸ்டாப் பண்ணிட்டு, பின் வழியா வெளிய வந்துட்டேன்."

"பட் அந்த வழி கொஞ்சம் தூரம் அதனால தான் நான் லேட்"

"‘ராணி… கம்மிங்க் பிட் லேட் இஸ் நாட் அ ப்ராப்ளம் பட் பிகமிங்க் லேட். ராணி ஒன்ஸ் ஃபார் ஆல் இஸ் அ பிராப்ளம்’ "என்னும் விதத்தில் முறைக்க;

அவனை பார்த்து கெஞ்சுவது போல் முகத்தை வைத்து கொண்டு,

"கெமிஸ்ட்ரி லேப்ல இருக்க பத்தாம் நம்பர் டேபிளுக்கு வந்து மண் வைக்க வந்தா அந்த இடதுல ஒரு
பொம்மைய கட்டி தொங்க விட்டிருந்தானுங்க பைத்தியக் காரனுங்க. அந்த பொம்மை கையில் இருந்து என் வாட்ச் ச கழற்றி எடுத்து கொண்டு,"

"இங்க வந்து பாத்தா, இந்த கொசு தொல்லைய தாங்க முடில…" என்று அந்த பாண்டி பண்ண கூத்தை
நினைவு கூர்ந்தாள்;

"அதான் அவனையும் சரி அவன் தலையையும் சரி விட கூடாதுனு அவங்கள சந்தோஷத்துல மிதக்க
விட்டு என்பதை சொல்லும் போது தலையை பின் புறமாக சாய்த்து கையை குடிப்பது போல் அபிநயம் பிடித்து காண்பித்தவள், அவன் வீட்டுக்கு போய் பேய் வேஷங்கட்டி வேர்த்து விறுவிறுக்க வெச்சிட்டோம்…" என்று ஆர்ப்பரித்தாள்.

"சும்மா சொல்லக் கூடாது சின்னு அந்த பாண்டி பயல் இருக்கான் பாரு, ஊள உதார் விட்டுகிட்டு,
உதயமே நாங்க தான்னு" சீன போட்டுக்கிட்டு சுத்துது என சிரித்தாள்.

"சிரித்துக் கொண்டிருந்தவள் திடீர் என்று அங்கிருந்த பாட்டிலில் இருந்து தண்ணீர் எடுத்து முகம்
முழுவதும் தெளித்து கொண்டு தள்ளாடிய வண்ணம் நின்றவள் தலையை சிலுப்பிக் கொண்டு ஹாஹ் ஹாஹ் ஹா ஹாஹா என்று சிரித்தவாறே, சொன்னா கேட்டா தானே… இந்த சரவணன் கிட்ட மோதினா சும்மா விடுவானா… இப்ப பாரு அல்பாயுசுல போயிட்டியே னு சொன்னானா"

நானும் "நானே வருவேன் இங்கும் அங்கும் னுது தான் தாமதம் கல்லெறிய பட்ட காக்காய் கூட்டமாய்
சிதறி ஓடிட்டான் அந்த பாண்டி… இந்த லூசு அப்படியே நீ… நீ… நீ… னு மயங்கிட்டான் இடியட்." என்று உடையல் பாதி வருத்தம் மீதியாய் பகிர்ந்தாள்.

"அதுக்கு அப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே" என்றவள் கை மறைவில் ஒரு கொட்டாவியை
வெளியேற்றி தன் அசதியை பறைசாற்றினால். 'கேடி உனக்கு கிடைக்க போகும் திட்டிலிருந்து தப்பிக்க என்ன எல்லாம் திட்டம் போடுற என இடித்துரைத்தது'.

"கதை கதையாய் காரணமாம் என்ற நீண்ட கதையை கேட்டவன் ஒரு வார்த்தையையும் பேசாமல் வலியுடன் கூடிய பார்வை ஒன்றை அவள் மீது வீசி சென்றான்…"

இணக்கமாக சென்றானா? இறுக்கமாக சென்றானா?

ரெண்டுபடும்….
:smiley36: I Thank all who shared symbols for this post... Thank You all :smiley36:
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley12 "ஒன்றுபட்ட இதயமே -6":smiley12

<வலியுடன் கூடிய பார்வை ஒன்றை அவள் மீது வீசி சென்றான்…

அதிகாலை பொழுது, முகில் மறைத்த சூரியன் எழில் பொங்க அமைதியாய் புலர்ந்தெழ
எல்லோருடைய அமைதியையும் ஆழத்தில் அமிழ்தியவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அவளுக்கு என்ன! அவள் பெயருக்கு ஏற்ற வாறு மகாராணி தான், யாரும் அவளிடம் வாய்
கொடுத்து மீட்டெடுக்க முடியாது. இது ஒரு புறம் என்றால்; பாசத்தை எல்லாம் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்தவள், அதற்கு ஏற்றார் போல் கடைக்குட்டியாக போய் விட்டாள்; ஆக மொத்தத்துல அவள அசச்சிக்க அங்க ஒருத்தரும் இல்ல.

இரவிரவாய் தன் குறும்புகளினால் விறுவிறுப்பாய் வைத்து கொண்டவள் போட்ட வெடியில்
வலியுடன் வெளியே வந்தவன், விடிய விடிய விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவர்களுக்கு அசதியினால் விடியா இரவாகியது என்றால், அவனுக்கு தன் மனதின் பாரத்தினால்
விடியா இரவாகி போனது.

தன்னவளை நினைத்து நொடிக்கொரு தரம் தன் நிலையை அறவே வெறுத்தான்; அவனவள்
கண்களில் கண்ட வெறுப்பினால், தன் நலனுக்கே ஆனாலும் தன்னிடம் உதவி கேட்காமல் தானே எல்லாம் செய்வதும், தான் விலகி இருக்கும் இந்த நிலையில் இப்படி ஆனதே எனவும்; தன்னவளை அனைத்து அனைத்துமாக நானிருக்க உனக்கு என்ன பயம் என்று ஆறுதல் கூற இயலாமல் இருக்கும் தன்னையும், கைகள் கட்ட பட்டிருக்கும் தன் நிலையையும் வெறுத்தான்.

எப்போதடா விடியும் என்று காத்திருந்தவன் விடிந்ததும் விடியாததுமாக விறைந்து சென்றான்
தன்னில் உயிராய் நினைப்பவளை பார்க்க வேண்டி.

தலை களைந்து பொருத்த மற்ற உடையணிந்து தவிப்புடன் வெளிவந்த ராமனை கண்டு அவனின்
பதற்றம் உணர்ந்த பாரதியும் "குட்டிமாவ தேடுறியா கண்ணா" என்றார்.

அவனும் கவலையுடன் காணப்படும் அன்னையை பார்த்து "ஹ்ம்ம்" என்னும் விதமாகவும்
இல்லாமல் இல்லை என்னும் விதமாகவும் இல்லாமல் தலையை உருட்டினான்.

அதை ரசித்தவர் "அப்பாடா இப்ப இப்ப தான் இது ராமன்னு தெரிது" என்றவாரே, "குட்டிமா
ட்ராயிங்க் ரூமுலேயே தான் தூங்குறா" என்றார்.

அதற்கு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு "வர வர இந்த வீட்டு சிங்க குட்டி யாருன்னே
தெரியாம போயிருச்சு" என்று குறும்பு குரலில் இயம்ப, "போடா போடா போக்கிரி" என்றவர் அவனை அடிப்பது போல் பாவனை செய்து கொண்டே "எப்படினாலும் நீ இளைய சிங்க குட்டி தான்" என்று வம்பிழுத்தார். "அம்மா ஆ ஆ ஆ" என்று சினுங்கினான் உடனே என் கண்ணே நீங்க தான் டா என்றவர் அவன் நெற்றியில் முத்தமிட்டார். அதில் கன்னம் குழிய சிரித்தவன் அவர் கடந்து சென்ற பின். தன் அலைபேசியிலிருந்து ஒரு எண்ணிற்கு அழைப்பு விடுத்தவன் அது எடுக்கப்படாததினால் வலி நிறைந்த முகத்துடன் வெறித்தவன் முகம் பிரகாசமாக, ராணி உறங்கிக் கொண்டிருக்கும் அறையை நோக்கித் திரும்பினான்.

"குட்டிமா!!! குட்டிமா!!!"

-----

"கெட் அப்…."

………

"கம் ஆன்…"

…………..

"இட்ஸ் டைம் டூ கோ"

………

"உன்…ன…. வாயால சொன்னா கேட்க மாட்டியே", என்றவன் உலுக்க ஆரம்பித்து விட்டான்.

பின்ன தண்ணிய ஊத்தினா அடித்து பிடித்து எழுந்திருக்கறவங்கள பார்த்திருப்பீங்க; அப்போ இவ எழுந்தரிக்க மாட்டாளானு கேட்காதீங்க, இவளும்
எழுந்தரிப்பாள்!!
ஆனால் தண்ணீர் ஊற்றப்பட்டதற்கு பிறகு எந்த சமாதானத்திற்கும் கட்டுப்படாமல் ஐஸ்கிரீம்
வேண்டும் என்பாள்; ஐஸ்கிரீம் தானே என்று நினைக்க முடியாத படி தொண்டை கட்டி படுத்தாள் என்றாள், கையை பிடிக்க ஒருவர், காலை பிடிக்க ஒருவர், பச்சிளங்குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் உணவு ஊட்ட ஒருவர் என்று சேவகம் செய்ய வைப்பாள், அன்பு உள்ளங்கள் அன்பினால் தான் செய்கிறார்கள் இல்லை என்பதற்கு இல்லை ஆனால் அதிலும் ஆப்பு என்னவோ அப்புக்குத் தான்; ஏனெனில் தலை கீழே நின்றாலும் கூட வீட்டில் வேறு யாரும் ஐஸ்கிரீம் வாங்கி தரமாட்டர்கள் அது மட்டும் அல்லாமல் ஐஸ்கிரீமின் மேல் பேராவல் கொண்டிருந்தாலும் தானாக சென்று வாங்கி உண்ண மாட்டாள்; உடனே நல்ல பிள்ளைனு நினைக்க வேண்டாம், பிகாஸ் ச்சான்ஸ் கிடைச்சா கிடா வெட்டிருவா. ஐஸ்கிரீமுக்கு ஐஸ்கிரீமும் ஆச்சு திட்டும் அவளுக்கு இல்லை.

அதில ப்யூட்டி என்னன்னா ஏமாந்த சோனகிரி என்னவோ , அந்த அப்பாவி ராமன் தான்.

இதனால் கனகாரியமா நண்டு சிண்டு கூட எல்லாம் கூட்டணி அமைத்து பிரத்தியேக ஆய்வு
மேற்கொண்டு கண்டு பிடித்த அடுத்த வழி, உலுக்கி எழுப்புவது. உலுக்கினாள் உறக்கம் பிடிக்காமல் உலகிற்கு வந்து விடுவாள் விராலி.

அவன் உலுக்கிய உலுக்களில் இரண்டு உலுக்கலுக்கு கூட பொறுக்க முடியாமல் 'உலுக்கியவரை
உலுக்கிற உலுக்குல உடலிலுள்ள எலும்பெல்லாம் உதிர்ந்திடனும்' என்று சூல் கொண்டாள்.

கண் திறந்து சின்னுவை பார்த்தவளின் சூல் தூள் தூள் ஆனது தான் மிச்சம்; "ஹாய் மச்சி நீதானா…
ஹூம் நல்ல கனவு.. கலச்சிட்ட போ என்று சினுங்கியவளை",

"குட்டிமா ஃபிளீஸ் சீக்கிரம் கிளம்பி வா" என்று கெஞ்சல் பார்வை பார்த்தான். எதையும் எளிதில்
சமாளிக்க தெரிந்தவன்; நிலை தடுமாறாதவன், யாரிடமும் கெஞ்சி கொண்டு இருந்தது இல்லை.

'தான் எவ்வளவு குறும்பு பண்ணாலும் தன்னையும் தன் குறும்புகளையும் சகித்துக்
கொள்ளுவதோடு, தனக்கு எந்தவொரு தீங்கும் நொருங்கா வண்ணம் தன்னை சுற்றி அரண் அமைத்து காக்கும் தன் நிகரற்றவன் இவன்' என்று இருமாப்பு கொண்டவள், "ஃபிஃப்டீன் மினிட்ஸ்" என்றாள்.

தலையை சம்மதமாக ஆட்டியவன் அவள் சுத்திகரித்துக் கொண்டு வருவதற்குள் பதினைந்து
யுகங்களை கடந்தவனைப் போல் ஓய்ந்திருந்தான்.

கருப்போ, சிவப்போ; பகையோ, நட்போ; பிறந்த குழந்தை எப்படி எல்லோரையும் ஈர்க்குமோ அது
போல் தன்னை சுற்றி உள்ளவர்களை எல்லாம் தன் வெள்ளை சிரிப்பினால் ஈர்ப்பவள் அதே வெள்ளை சிரிப்புடன் "மச்சி ஸ்டார்ட் தி ஜெர்னி" கூவளுடன் வெளிப்பட்டாள்.

வந்தவள் சின்னுவை கவனிக்கவில்லை; சின்னுவும் குட்டிமாவை கவனிக்கவில்லை. இவர்கள் தான்
மற்றவரை கவனிக்கவில்லையே தவிற தவறாமல் பார்க்க வேண்டிய விதி ஒரு வித குதூகலத்துடன் அவர்களையே கூர்ந்தது.

வந்தால் போதும் என்றிருந்தவனும் அவளின் குரல் கேட்டவுடன் பைக்கை மிதித்து ஸ்டார்ட் செய்ய
குரங்கு ஷேஷ்டைகளை செய்தவாறு தாவி குதித்தமர்ந்தாள் ராமனை இறுக்கி பிடித்தவாறே; அவளின் பிடிமானத்தின் உறுதியை பாதுகாப்பானதாக நிர்ணயித்தவன், வாகனக்கடலில் கலந்து சாலையில் விறைந்து மறைந்தான்.

எவ்வளவுக்கு எவ்வளவு விரைந்து மறைந்தானோ! அவ்வளவுக்கு அவ்வளவு அதிருப்தியுடன்
காணப்பட்டது அவ்விரு கண்களுக்கும்…

---------*********------------************----------

ரெண்டுபடும் ......
:smiley36: I Thank all who shared symbols for this post... Thank You all :smiley36:
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!!!

ஏழாவது அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த தோழியர்களுக்கு (சுகன்யா, கவிதா, மது, செல்வி, சித்ரா, ஸ்டெல்லா, இந்து & தமயேந்தி) எனது மனமார்ந்த நன்றிகள்.....

காலம் தாழ்ந்து பதிவேற்றி உள்ளேன், மண்ணிக்கவும் தவிர்க்க முடியா சூழல் ....

எட்டாவது அத்தியாயத்தை பதிவேற்றியுள்ளேன்... உங்கள் மேலான கருத்துக்களுக்கு கூர்ந்த விழியும், திறந்த செவியுமாய் காத்திருக்கிறேன்.

சிதைக்காமல் சீர்த்தூக்க சிற்பியின் சிகரங்களை எதிர் நோக்கும்

உங்கள் தோழி

SJ



:smiley12 "ஒன்றுபட்ட இதயமே -8" :smiley12


சிலர் முதலாம் ஆண்டு மாணவர்களை வம்பிழுத்துக் கொண்டும், சிலர் என்னானதோ ஏதானதோ என்றும், காத்துக் கொண்டு இருக்க,

கல்லூரிக்குள் நுழைந்தவர்களைப் பார்த்தவர்களுடைய கண் பார்த்தபடியே நின்றுவிட்டது;

வம்பிழுத்தவர்களுக்கு ஆச்சரியத்திலும், பதைத்தவர்களுக்கு பூரிப்பிலும்.

ஆனால் யாருக்காக இந்த பந்தயம் ஏற்கப்பட்டதோ அவளின் தடமும் அங்கு இல்லை, யாரால் பந்தயம் கொடுக்கப் பட்டதோ அவனின் அமர்வும் அங்கு இல்லை;

உள்ளே நுழைந்ததிலிருந்து அக்கல்லூரியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் தன் எண்ணத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்த இருவரும் மகிழ்ச்சி கடலில் குளிக்க வேண்டியது, எனவே இலக்கை அடைய நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை பகிர்ந்து கொள்ள ராமனை நோக்கினாள்!!!

இவளின் முன்னேற்றத்துக்கும், சந்தோஷத்துக்கும் இணையான பின்னடைவிலும், துன்பத்திலும் இருந்தான் ராமன். (எ...ன்...னடா... இது? என்ன ஆச்சு??, “ஹூம் குழந்த அழுவுது வுட்வேர்ட்ஸ் கிரேப் வாட்டர் கொடுங்கோ!! ஏன்னா நீங்க குழந்தையா இருக்கறச்சே அதத்தான் கொடுத்தாங்களாம்).

ஒவ்வொரு முறையும் தான் மேற்கொள்ளும் முயற்சியால் தன் இடம் சேர்ந்தேன் என்று எண்ணும் நேரம்; நொடியில் சுழற்றப்பட்ட காலச் சக்கரத்தில் காலம் என்னும் சுழலில் சிக்கி ஆரம்ப புள்ளியிலே வந்தது போல ஆனது ராமனுக்கு. (ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்குவான், போட்டு படுத்தாதீங்கப்பா அவன).

சேர வேண்டிய இடத்திற்கு சரியாக வந்தும்; தவித்துக் கொண்டு இருந்தவனை கண்டு யோசனையில் ஆழ்ந்தாள் ராணி. (மை டியர்!! செல்...லாக்...குட்டி… ரொம்ப எல்லாம் யோசிக்காதடா!! நீ யோசிச்சிட்டா நான் எப்படி விளையாட: விளையாடி பார்க்க ஆவல் கொண்டது விதி – விதியா? நீயா?(SJ) னு கேட்(க்)கிறது கேட்டுச்சு; ஹ்ம் ஹூ… ஹூஹ்ம் மதர் ப்ராமீஸ் விதி தான்)

யோசனையில் ஆழ்ந்தவளை கலைத்தது விண்ணை முட்டும் அளவுக்கு எதிரொலித்த கரகோஷ ஒலி.

“எவ…அவ..”

“கைத்தட்டலுக்கு!! சொந்தக்காரி??”- என தன் குழப்பங்களில் இருந்து நடப்புக்கு வந்தவள்,

ஆர்பரிப்புக்கு தான் தான் காரணம் என்று அறிந்து வெட்கம் பாதி, கூச்சம் மீதி என உள்ளுக்குள் உருகினாள் - ராணி.

உருகினாலும், ஆடி பெருக்கைப் போல் ஆர்ப்பரிக்கும் மாணவர்களின் உற்சாகத்தை உச்சம் தொட வைக்க ஆரவாரமாய் குதித்தெழுந்து ஸ்டாண்ட் போட்டிருந்த பைக்கின் மீது நின்றாள். (குரங்கு சேட்டை நிறைய செய்வாளோ??)

கண்ணிமைக்கும் பொழுதில் சாகசம் செய்பவளை பார்த்து கரகோஷத்தோடு, குரலொலியும் எழுப்ப

வாகை சூடி வந்தால் வாகை மலர் கொண்டு வீரத்தை பறைசாற்றுபவர்களை உப்பரிக்கை மேல் இருந்து குடிமக்களின் ஆர்பரிப்பையும் ஆரவாரத்தையும் ஆதூரத்துடன் கண்டு மகிழும் ராணிக்கு ஒத்த தேஜஸுடன் காணப்பட்டாள் நம்ப ராணி.

அவளின் சாகசத்திலும், பொலிவிலும் மயங்கிய மாணவ மாணவியர்கள் தம்! தம்!! கைப்பேசியை எடுத்து காட்சிகளை பதிவு செய்ய ஆரம்பித்தனர். (இத ஒன்ன கண்டு பிடிச்சிட்டாய்ங்கய்யா!! ஆனா ஊனா பளிச் பளிச் னு க்ளிக்கிக்குக்கிட்டு).

பைக்கின் மீது நின்றிருந்தவள் வலக் கையை உயர்த்தியும் இடக்கையை இடுப்பு பகுதி அருகில் மடக்கியும் என்று மாறி மாறி ஒரு முறை செய்தவள்; கைகளை மடக்கி ஒற்றை காலை உயர்த்தி க்ரண்ச்சஸ் செய்வது போல் செய்து மறுபடியும் வலது கையை உயர்த்தி வெற்றி பெற்றதற்கான போஸ் கொடுக்க

மாணவர்களின் கைகளில் பளிச்சிட்ட மின்னல் ஒளியில் கனகாரியமாய் க்ளிக்கப் பட்ட நிழல் படத்தை கவனிப்பார் அற்று போனது, விதியின் செயல் அன்றி வேறென்று கூறிடத்தான் முடியுமா?


"நிழல் நிஜம் பேசுமாயின்

நிஜம் பேசும் நரரின்

மெய்யும் பொய் யென தாழ்ந்து

மைய் யும் மேடை கட்டி உயர்ந்து

நிஜம் நிழலுக்குள் வீழ்ந்தது

வாழ்வு விழலுக்குள் மாய்ந்தது!!!"


நிகழ் காலத்தில் இல்லாமல், தன்னுள் தொலைந்தவனை எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவளின் துடிப்பும், துணிவும் அதற்கும் குறையாத குறும்பும் கட்டி இழுக்க, அவளால் பெருமை கொண்டான் ராமன். (பெருமை கொண்டவன் அனைவரின் பொறுமை அற்று போக செய்யப் போவதேனோ?).

ராணி!

அப்!! அப்!!,

சரவணன்!

டவுன்!! டவுன்!!!

ராணி!

அப்!! அப்!!,

சரவணன்!

டவுன்!! டவுன்!!!

இளவட்டங்களின் காட்டு கத்தலில், கூச்சல் வானை பிளக்க

விரைந்து வந்த ராமனுடைய சகாக்களின் சமிக்ஞையை புரிந்து, ராமன் சரவணனை அழைத்து வர சொல்ல எத்தனிக்க; ராமனின் உடல் மொழியை கவனித்த ராணி,

“ஹலோ ஃப்ரெண்ட்ஸ்!!!

'ஆஹா ப்ளான மாத்திட்டாளா??'- ராமன்.

இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம் சரவணன்னு சொன்னா அது மிகை இல்லை!” (யம்மாம் பெரிய பொய்ய, இன்னா சுலுவா சொல்லுது பாத்தீங்களா!!).

--------

இடைவெளி விட்டவள், மீண்டும் தொடர்ந்தாள்.

“ஏன்னா அவர் சீனியர்னு கெத்து காட்டாம, எனக்கு இணையா, என் தோழனா, ஒரு நலம் விரும்பியா, இந்த கல்லூரியில இருந்ததுனால தான் இது முடிஞ்சது”. சொன்னவளின் பார்வை நிலை பெற்றிருந்தது சரவணின் வழி தடத்தை பார்த்து, ஏன்னா எனும் போது சின்னுவின் பார்வை ஆவலாய் ராணியின் முகம் பார்த்து, சரவணின் பெயரை சொல்லும் போது கூம்பிப் போனது.

சோ!

எனக்காக இணைந்த உங்கள் கரங்கள் இன்னும் வேகமாக இணையட்டும், நம் சரவணனுக்காய்”.

“விண்வெளியில் இருந்து புறப்படும் இடி முழக்கத்துக்கும் மேலாக இருக்கட்டும்… உங்கள் கரவொலி"

டக் டக்... டக் டக் டக்...,டக் டக்... டக் டக் டக்..., டக் டக்... டக் டக் டக்...,

அறிய நிகழ்வு! அரியணை ஏறியவரும், அறிய முற்படா தீர்வு!!

எளிய முடிவு! ரேகிங்க்கு ஏற்படுத்திய, மட்டற்ற மடிவு”

டக் டக்... டக் டக் டக்..., டக் டக்... டக் டக் டக்..., டக் டக்... டக் டக் டக்..., பிச்சுக்கிச்சு, க்ளாஃப்ஸ்….

“இடி, மழைதுளியும் மண்பூமியும்

இணையும் போது மத்தளம் வாசிக்க வருவது - அது

எப்பேர் பட்டவரையும் திரும்பி பார்க்க வைப்பது

புரிந்தவர்களும் (சீனியர்ஸ்) புதியவர்களும் (ஃப்ரெஸ்ஷர்ஸ்)

இணையும் போது கைத்தாளம் வாசிக்க வரட்டும் - நம் கரங்கள்..

– இது மாணவ சமுதாயத்தையே திரும்பி பார்க்க வைத்த சரவணனுக்காய், அவரின் மேலான ஆலோசனைக்காய்.”

க்ளாஃப்ஸ்…. க்ளாஃப்ஸ்…. (ஹும் ஹூம்... ஹும் ஹூம்... உனக்கில்ல உனக்கில்ல க்ளாஃப்ஸ் உனக்கில்ல..., இங்க லைக்ஸ்கே பஞ்சமாம் இதுல உனக்கு கிளாப்ஸ் கேட்(க்)குதா).

“ஹீ கால்ட் திஸ் ஆஸ் ஃபோஸ்டரிங்க் த யெங்க் ஒன்ஸ்".

வீட்டிலிருக்கும் சகோதர சகோதரியைப் போல் முதலாம் ஆண்டு மாணவர்களை தன் உடன் பிறவா சகோதர சகோதரிகளாய் தெரிவு செய்து அவர்களின் நலம் பேணுவார்களாம்". சொல்லி முடிக்கவும்,

“இத்தகைய உயர்ந்த எண்ணத்தை பகிர்ந்த எங்கள் அண்ணன் சரவணனுக்கு ஜே!!” – கூட்டதிலிருந்த ஒருவனின் குரல் ஓங்கி ஒலிக்க

“சரவணனுக்கு ஜே!!” – பின் பாட்டு பாடினர் கூட்டத்தினர் ( எலேய் திருந்த மாட்டிங்கடா நீங்க!! திருந்த மாட்டிங்க)

“எங்கள் அண்ணன் சரவணனுக்கு ஜே!!”

“சரவணனுக்கு ஜே!!”

புகழாரத்துக்கு மத்தியில் ராணியின் குரல் மீண்டும் ஒலித்தது

“யெஸ் லெட்ஸ் புட் ஆர் ஹண்ட்ஸ் டூ கேதர்…. ஃபார் ஆர் ஒன் அண்ட் ஒன்லி…. சரவணன்!!!”

வார்த்தையின் முடிவில் மந்திரிகள் படை சூழ (சின்னுவின் நண்பர்கள்) மாமன்னர் போல் அழைத்து வரப்பட்டான் சரவணன்

‘நினைச்சது என்ன (அடிச்சு பொலப்பாங்கனு, காரி துப்புவாங்கனு) நடப்பது என்ன னு திகைத்தாலும்’ (சீவி சிங்காரிச்சு கூட்டி போனா உடனே மய..ங்..கிற கூ..டா..து, சீவி சிங்காரிக்கறது எல்லாம் பூச போட்டு வெட்றதுக்கு தான்; பயபுள்ளைக்கு இது தெரியலையே; ச்சு ச்சு ச்சு, சோ ஸேட்), ‘கல்லூரி பட்டாளத்தின் முன் ஸ்டார் ஃபிகராய் திகழ வைத்ததை நம்ப முடியாமல் மலைத்தே போனான்’ சரவணன்.

ஹும் க் ஹூம் க் ஹூம் ஆகட்டும் ஆகட்டும்

உச்சாணி கம்புல நிறுத்தி, உடைக்க போகிறார்களா? உருவாக்கப் போகிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!!!

இரண்டுபடும்....
Thank You for your symbol Maheswari
 
Status
Not open for further replies.
Top