All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? தொடர்ந்த வேலையால் என்னால் நேற்று comment போட முடியவில்லை..

அழகான பதிவு.. கணவன் ஒரு மனைவியிடம் எப்படி இருக்க வேண்டும் என்று அழகாக உணர்த்துகிறான் நம் சர்வா... நிஜம் தான்.. அன்பு காட்ட மூளைக்கு வேலையில்லை... மனம் மட்டுமே அங்கே... இல்லையெனில் சர்வா அவள் காலை பிடித்து விடுவது மருந்து தேய்ப்பது இது எல்லாம் சாத்தியம் தானா?

அவன் அன்பு அக்கறையால் கொஞ்சம் கொஞ்சமாக அவன் பக்கம் சாய தொடங்கியுள்ளாள் ரேகா...

ஒவ்வொரு நிகழ்வும் நம் கண் முன் படமாய்... என்னடா இது அழகா சந்தோஷமாக நகருதே அவர்களின் வாழ்க்கை என்று நினைத்தவுடன் எப்படி வைத்தீர்கள் பாருங்க ஒரு twistஐ...

அழகான பதிவு... வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 

Shanthigopal

Well-known member
ஸ்ரீ மேம் மனதை மிகவும் பாதித்த பதிவு... அழகான குடும்பத்தில் கல் எறிந்தது போல்...

எவ்வளவு சந்தோஷமாக மனைவியை ரசித்து கொண்டு இருந்தான்... அவளையும் அவனை வைத்து அவள் சுயமரியாதையை நிலைத்து இருக்கும் படி செய்தவனை ரேகா கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை... அவளுக்கு அவன் மேல் நம்பிக்கை இருந்திருந்தால் நிதானமான அவனிடம் பேசி இருக்கலாம் இதைப் பற்றி... முதலிலேயே நீங்களும் இப்படி தானே என்றதற்கு பொறுமையாக எடுத்து சொல்லி அவனை பற்றி புரிய வைத்தான்...

ரேகா அவன் மனம் நோக எவ்வளவு பெரிய வார்த்தையை விட்டு அவனை சீண்டி விட்டு விட்டாளே? எந்த ஆண்மகனையும் கோபம் கொள்ளும் வார்த்தை.. சர்வாவை போய்... மறப்பானா மன்னிப்பானா அவளை? கண்டிப்பாக தகுந்த பதிலடி கொடுத்து கதற வைப்பானா?

அடுத்த பதிவில் என்னவாகுமோ? என்று திக்! திக்!
 

CRVS

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் -22)

உதியை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. அவளை பொறுத்தவரைக்கும்
வாழ்க்கையைப் பற்றிய எந்த கனவுகளோ, கற்பனைகளோ
கிடையாது. நிதர்சனம் மட்டும் தான் அவளை இதுவரைக்கும் ஓடவிட்டுக் கொண்டே இருந்திருக்கு. திடீர்ன்னு அவ கிட்டப்போய் இந்தா.... உன் வாழ்க்கையில ஒரு வரத்தை கொடுக்கிறேன்னு
சொன்னாக் கூட, அவ அதை திருப்பி, திருப்பி பார்த்துட்டு
இது வரமா ? சாபமா ? ன்னு தான் ஆராய்ச்சியோட பார்ப்பா.
அவ கிட்டப்போய், உனக்கு எத்தனை பெரிய வாழ்க்கையை
கொடுத்திருக்கேன், அன்பை கொடுத்திருக்கேன், காதலை கொடுத்திருக்கேன், அரவணைப்பை கொ்டுத்திருக்கேன்... அது உனக்கு புரியலையான்னு கேட்டா....எதுக்கு கொடுத்திங்க ? ஏன் கொடுத்திங்க..? ன்னு தானே கேட்பா. அவளுக்கு தெரிஞ்சதெல்லாம், அன்பு, கருணை, அனுசரனை, அக்கறை அவ்வளவு தான்.
இந்த காதல், நேசம், கல்யாணம் இதெல்லாம் அவளோட அகராதியில இல்லாத வார்த்தைகள். இன்னும் சொல்லப்போனா, பாட்டி கவலைப் படறாங்க... கல்யாணம் பண்ணிக்கலாம்
அவ்வளவு தான். கல்யாணக் கனவுகளோ, காதல் நினைவுகளோ இல்லாதவள்.

இதுல எங்க பிரின்ஸ்ஸோட காதலையெல்லாம் புரிஞ்சுக்க தெரியும்...? அவன் முதலாளி, இவ தொழிலாளி...! அவன் பணக்காரன், இவ ஏழை.. அம்புட்டு தான்.

அடி ஆத்தி...ஆத்தி...! இவ என்ன இப்படி கபால்ன்னு டிவோர்ஸ் வேணுமின்னு கேட்டுட்டா...? இந்த அறிவாளி பப்ளிமாஸை நான் இத்தனை நாளா பார்க்கலையே..!

ஆனா...சர்வா கிட்டயா இதெல்லாம் நடக்கும்...?
அவ புள்ளியை வைச்சா...
அவன் கோலத்தையே போட்டு
முடிக்கிறவனாச்சே...!!!

ஆக மொத்தம், காதல் பாடம் நடத்தி அவளை கொண்டாட நினைத்தவன்.. இன்று காம பூஜையை நடத்தி
அவளை மொத்தமாக வென்று கொள்ளை கொண்டாடியும் விட்டான். ..!

இதில் காதலின் துணை கொண்டு காமனை வென்றார்களா...? அல்லது காமனோடு இணை கொண்டு காதலை வென்றார்களா...?
என்பது அவர்களுக்கே வெளிச்சம்...!
😃😃😃
CRVS (or) CRVS 2797
 

Shanthigopal

Well-known member
எப்படி இருங்கீங்க ஸ்ரீ மேம்? அழகான ரொமான்ஸ் நிறைய மனத்தாங்களுடன்..

இந்த ரேகா யோசிக்காத தான் பேசி விட்டாள் என்று நினைத்தால் டிவோர்ஸ் வேற கேட்கிறாள்... சர்வா கோபம் உச்சம் தான்... ஆனாலும் எப்படி புரிய வைக்க போறானோ என்று நினைத்தால் இது என்னப்பா அவளுடன் வாழ்ந்து அவனுடைய காதலை புரிய வைத்தானா? அவனிடம் அவள் மயங்கி அன்பு கொண்டுள்ளதை தெரிய செய்தானா??

சர்வாவிற்கு மட்டுமா வேதனை??? எங்களுக்கும் தான்...

முடிந்தவுடன் பட்டம்மாவை வைத்து அருமையாக விளக்கினான்...

இருந்தாலும் வெளிப்படையாக அவன் அன்பு காட்டுவானா? அவளே புரிந்து கொண்டு அவளிடம் வந்தால்...

அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்.
.
 
Top