All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஆத்மிகாவும் ராமும் சந்தித்து கொண்டு விவாதம் புரிந்தது தீப்பொறிகள் என நினைக்க வைத்த பதிவு... முதல் பதிவிலிருந்தே புதிரை ஆரம்பித்து விட்டீர்களே ஸ்ரீ மேம்... ஹா! ஹா!

ராமின் வருகை அமர் வீட்டில் வேலை செய்பவர்களே பயந்து வேலை செய்கிறார்கள் என்றால் ராமின் வேலை? வேலைக்காரன் என்று சொல்லி கொள்ளும் அவன் ஆத்மிகாவிடம் மட்டும்??? அஞ்சலி தம்பதியினர் குங்கும விஷயம் அவனுக்கும் தெரிந்துள்ளது... இருந்தும் அவனுக்கு காதல் மேல் நம்பிக்கையில்லை...

ஆத்மிகா ராமையும் ராம் ஆத்மிகாவையும் கோபம் மற்றும் வெறுப்பு இருந்தாலும் ஒருவரையொருவர் நினைக்க மறக்கவில்லை... அவள் இருவரின் பிரச்சனையை அனைவரும் அறிய ராமை காட்டி கொடுக்கவில்லை தன் பாட்டி பத்மினியிடம் கூட... ராமும் அவளை இழுத்து வந்தாவது சாப்பிட வைத்து விட்டான்..

ஆத்மிகா வேறொருவரை காதலிக்கிறாள் என்று தெரிந்தும் நான் தான் உனக்கு கணவன் நீயே உன் தந்தையிடம் பேசு என்பதும், எதை காப்பாற்றி கொள்ள நினைக்கிறாய் என்பதும் எங்கள் மனதிற்கு அதிர்ச்சி இருவரின் பிரச்சனை சாதாரணமானதல்ல என்று..

இவ்வுலகம் ஆண்களுக்கானது என்ற கவிதை அற்புதம் ஸ்ரீ மேம்... சக்தி
சக்தீயாய் ஆவாளா? இல்லை சகதி ஆவாளா? காத்திருக்கிறோம்...

அற்புதமான பதிவு தங்கள் பாணியில் ஆழமாய்... வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 

TM Priya

Well-known member
ராம் யாரும் இல்லாமல் அமரால் வளர்க்கப்பட்டவனா:):)..அமருக்கு ராமை ஆத்மிக்கு மணம் முடிக்கும் எண்ணம் இருக்கின்றது...ஆத்மி ஏன் இப்போ ராமோட மேற்பார்வையில் இருக்க நிர்வாக பொறுப்பை ஏத்துக்கறா ராம் வேலைக்காரன் மட்டுமே என்று உணர்த்தவா:unsure::unsure::unsure:கவிதை எப்பவும் போல மாஸ் மா....
 
Top