All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Banumathi Balachandran

Well-known member
அமர் அஞ்சலியின் மகளான ஆத்மியின் வாழ்க்கையை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அமர் அஞ்சலிக்கு என்ன ஆச்சு
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!

'ஆத்மராகம்' - இது
ஆத்மாவின் ராகம்!

ஆத்மிகாவின் அன்பில்
ஆத்மார்த்தமான பண்பில் - நம்
ஆன்மாவை உயிர்க்க வந்த
அழகோவியம்!

ராம் ராகவேந்தரின் கம்பீரத்தில்
நிதானமான செயலில்
கொந்தளிக்கும் குணத்தில் - நம்
ஆன்மாவை விதிர்க்க வந்த
அழகோவியம்!

ஆத்மாவின் ராகத்தில்
ஆன்மாவின் ஆரோகனத்தில்
அகிலத்தை அசைக்க வந்த
ஆத்மராகம் - இது
எழுத்தரசி பேர் பாடும்
ஆத்ம காவியம்!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Last edited:

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஆத்மிகாவும் ராகவேந்தரும் கலந்து ஆத்மராகம் ஆகி இருவரின் ஆத்மார்த்தமான காதலும் கலந்து ஆத்ம ராகம் ஆகியதோ? அற்புதமான பொருத்தமான தலைப்பு...

ஆத்மார்த்தமான காதலுக்கு பிறந்தவளான ஆத்மிகாவின் கோபத்தில் விளைந்த முரண்பாடான காதலோ ராமின் மீது?

ஆத்மிகாவிற்கு ராமின் மீது நிறைய கோபம் போல? ஆனால் ராம் அவள் அழகை ரசிப்பதும் அவளை வெறியேற்றுவதும் நல்ல சுவாரஸ்யமாக செல்லும் இக்கதையும் காவியமாக வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்... நன்றி.
 
Top