All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க தலைவர தினம் தினம் அழவைத்து தான் விழுதுகளின் தலைவி என்பதை ஒவ்வொரு எபியிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ரைட்டர்ஜி 🤷‍♀️🤷‍♀️
 

JoRam

Active member
உங்க பதிவு சூப்பர், உங்க கவித சூப்பர் என்று தானே சொல்கிறோம், அப்புறம் ஏன் எங்க அமரை தினமும் அழ வைக்கீறீங்க ?? இது சரியில்லை, அப்புறம் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பாகாது.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? எல்லோர் மனதையும் மிகவும் கஷ்டப்படுத்திய பதிவு...

அமரின் பிறந்த நாளிற்காக கனி உடை பரிசு கொடுக்க அதை உடுத்தி வந்த அவன் கம்பீர நடையும் அழகையும் பார்க்கும் அஞ்சலி தன்னை மறந்து நின்றது அழகென்றால் சாதாரண உடையிலும் அஞ்சலி அமரின் கண்களுக்கு பேரழகியாய் தெரிவது அழகோ அழகு..

அஞ்சலியிடம் பரிசை கேட்பது அழகென்றால் அவன் புன்னகை அனைத்தும் பொய் என்று அவனுக்காக சிந்தும் அவள் கண்ணீரை கண்ட அமர் அவளை அழாமலும் புன்னகைக்கவும் சைகை சொல்வது அழகோ அழகு...

அமர் அஞ்சலியிடம் கேக் கொடுத்து சாப்பிட சொல்லும் போது இந்த நாள் சந்தோஷமான நாள் என்பது ஒரு புரியாத புதிர்...

பிறந்த நாளிற்காக கனி அஞ்சலியை பாட சொல்ல அவள் அவனுக்கு ஆறுதல் சொல்வது போல் பாட... அற்புதம் ஸ்ரீ மேம்.. ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண்களில் உயிரோட்டமாய்...

கனிக்கு சந்தேகம் வந்து அஞ்சலியிடம் அதே கேள்வியை கேட்டு அவளுக்கு அறிவுரையும் கூறி விட்டாள்... ஆனால் அஞ்சலி???

உண்மையான காதல் தன்னவன் மனம் தவித்து தத்தளிக்கும் போது அவனை விட்டு நீங்குமா? ஆனால் நல்ல மனம் படைத்த அமரோ அவளை இங்கிருந்து சென்று விட சொல்ல அவளோ?

அவளின் பாடல் அவனை உறங்க வைக்க அவள் கண்ணீர் அவனை விழிப்படைய செய்ய... பாவம் ஸ்ரீ மேம்.. ஏதோ உணர்ச்சி வசத்தால் துவண்டு இருக்கும் போது ஒட்டு மொத்த பெண்கள் மேல் உள்ள கோபத்தால் தப்பு செய்து விட்டு இப்போது மனம் வெறுத்து தன்னையே நொந்து கண்ணீரில் கரையும் நம் அமரின் வாழ்வில் வசந்தம் வீசும் நாள் எந்நாளோ?

அற்புதமான கவிதை வரிகள்... அஞ்சலி தன் கற்பு என்ற நெருப்பில் அமரை தங்கமாய் மிளிர செய்வாளோ?

காத்திருக்கிறோம் பதிலை எதிர் நோக்கி..
 
Top