Rishi24
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 01 [ A ]
ஆறு வருடங்களுக்குப் பிறகு.....
இந்த ஆறு வருடங்களுக்குள்ளும் எத்தனை எத்தனை மாற்றங்கள்!!!
எத்தனை வலிகள்???
எத்தனை எதிர்பார்ப்புக்கள்??
***
லண்டன்.....
பி.எஸ்.ஜி தனியார் பாடசாலை.....
[[ BRITISH SCHOOL OF GENEVA ]]
தனியாக அமர்ந்திருந்த அந்த ஏழு வயது சிறுவனிடம் வந்தாள் மதுமிதா...
அவளும் இந்தியாதான்...
அங்கேயே படித்து பட்டம் பெற்று இப்போது ஆசிரியராக பணிபுரியும் இளம் நங்கை....
இடைவரை நீண்டிருக்கும் கருங்கூந்தல் சீராக வெட்டப்பட்டு இருப்பது கூட அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.
ஒப்பனை தேவையற்ற அழகு...
அனைவரையும் நின்று திரும்பிப் பார்க்கத் தூண்டும் அழகு....
ஆனால் அதை அவள் மெருகூட்டுவதற்கு எந்தப் பிரயத்தனத்தையும் மேற்கொள்ளாதது தான் அவளை இன்னும் பேரழியாகக் காட்டியதோ???
அவன் அருகில் வந்தமரவே அவளைப் பார்த்து வசீகரமாக சிரித்தான் அச்சிறுவன்....
"க்யூட் ஸ்மைல்" என்றாள் எப்போதும் போல் தலையை கலைத்துக் கொண்டே....
அதற்கும் சிரித்தான்....
"என்னாச்சு...ஏன் தனியா உக்காந்திருக்க?"
"டாட் இன்னும் வர்ல மிஸ்"
"எல்லோரும் பொய்ட்டாங்களேடா... தனியா இருந்துப்பியா?"
"எஸ் மிஸ்...டாட் இப்போ வந்துடுவாங்க" அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் முன் வந்தது கருப்பு நிற லம்போகினி ஒன்று....
கதவைத் திறந்து தன் கூலிங் க்ளாஸை கலற்றியவாறே அதிலிருந்து இறங்கிய அந்த ஆறடி ஆண்மகனிடம் துள்ளிக் கொண்டு ஓடினான் அச்சிறுவன்....
அவன் யாதவ்....
யாதவ் தேவமாருதன்!!!
ரிஷியின் தவப்புதல்வன்....
தன்னை நோக்கி பாய்ந்தவனை தூக்கிப் போட்டு பிடித்தவன் அவன் கண்ணத்தில் முத்தமிட எப்போதும் போலவே அவனையும் அச்சிறுவனையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமிதா....
"போலாமா?" தன் மகனை பார்த்து கேட்டவன் திரும்ப எத்தனிக்க
"டாட்...எங்க மிஸ்" என அவளை அறிமுகப்படுத்தவும் அவளைப் பார்த்து வசீகரமாய் சிரித்தவன் தலையசைத்து விடைப் பெற்றுப் போய்விட்டான்.
இப்போது அவளுக்குப் புரிந்தது அந்தச் சிரிப்பு யாரிடமிருந்து வந்திருக்குமென்று...
அமைதியாக வந்து கொண்டிருந்த தன் மகனை திருப்பிப் பார்த்தவன்
"யாது...வட்ஸ் த ப்ராப்ளம்....ஏன் உன் முகம் டல்லா இருக்கு?"
"எப்போவுமே மாம் அவங்களோட பர்த்டேக்கு வருவாங்கன்னு சொல்லுவீங்க.... பட் இன்னிக்கும் வர வர்லியே டாட்.... உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்காது.... ஆனா நீங்க பொய் சொல்லிகிட்டே இருப்பீங்க?" என்றவனின் கேள்வியில் வாயடைத்து இருந்து கொண்டிருந்தான் அவன்....
"பதில் சொல்லுங்க டாட்" அவனுக்கு மௌனமே மொழியாகிப் போக
"யூ ஆர் சீட்டர் டாட்...ஐ ஹேட் யூ" கோபமாய் சொன்னவனுக்கு கண்களில் கண்ணீர் விழவா வேண்டாமா என கேட்டுக் கொண்டு நிற்க அதைக் கண்டு அவசரமாக காரை ஓரமாக நிறுத்தியவன் அவனை ஆதரவாக அணைத்துக் கொள்ள அவனோ அவனை விட்டு விலகி அமர்ந்தான்.
"சாரி" வேறு வழி தெரியவில்லை அந்தத் தந்தைக்கு...
"ஸ்கூல்ல எல்லா பசங்களுக்கும் மாம் தான் ஊட்டி விடுவாங்க டாட்... எனக்கு ஆசயா இருக்கும்" அவன் கண்களில் தெரிந்த ஏக்கத்தில் இவனுக்குள் வலித்தது.
என்ன நடந்திருந்தாலும் அவளிடமே குழந்தையை கொடுத்திருக்க வேண்டுமோ???
அவளைப் பற்றிய நினைப்பு வந்த நொடி அவன் முகம் பாறையாய் இறுகிப் போனது.
அவன் அமைதியாக இருக்கவும்
"சாரி டாட்...இனிமே இப்பிடி பண்ண மாட்டேன்" அவன் கண்ணத்தில் முத்தமிட்டவனைப் பார்க்க தொண்டை அடைத்தது ரிஷிக்கு....
அவன் தலையை கலைத்து விட்டு சிரித்தவனின் சிரிப்பின் பின்னால் ஓராயிரம் வலிகள் மறைந்திருந்தது.
அதே நேரம் இரவு...
இந்தியா...
இராமநாதபுரம்.....
உறங்கிக் கொண்டிருந்த முன்று வயது குழந்தையின் மழலைச் சிரிப்பில் உலகை மறந்து அதனுடன் இணைந்து சிரித்துக் கொண்டிருந்தாள் காரிகை...
அதற்குள் அதற்கு விழிப்புத் தட்டி விட்டதோ என்னவோ தூக்கத்திலேயே இலேசாக சிணுங்க ஆரம்பிக்க மெதுவாக அதை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவளின் கண்களில் சொல்ல முடியாத ஏக்கம் இழையோடிக் கொண்டிருந்தது.
அதன் சிணுங்கல் அடங்கவே மெதுவாக கட்டிலில் கிடத்தியவள் அதன் இரு பக்கமும் தலையணையை அணையாக வைத்து விட்டு நிமிர வாசலில் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் அஜய்...
வீட்டில் அவளுடன் பேசும் ஒரே ஜீவன்!!!
"இன்னிக்கு சீக்கிரமா வந்துட்ட?" அவள் தலையை வாஞ்சையாக தடவிக் கொண்டே கேட்டான் அவன்...
இன்று அவள் சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டு பேசப்படும் மிகப்பெரிய லாயர்...
லாயர் அஷ்வினி என்றாலே கோர்ட்டே நடுநடுங்கும்....
அந்தளவு அசுர வளர்ச்சி எல்லாம் அவளுக்கானது அல்ல...
அவளைத் துறத்திக் கொண்டிருக்கும் நினைவுகளிலிருந்து தப்புவதற்கு அவள் தேர்ந்தெடுத்த வழி....
அவன் நெஞ்சில் வாகாய் சாய்ந்து கொண்டவள்
"இன்னுமே அவர் எங்க இருக்கார்னு தெரியலயாணா?" கண் கலங்க கேட்டவளைப் பார்க்க அவனுக்குமே பொறுக்கவில்லை
அவளும்தான் ஆறு வருடங்களாக தேடிக் கொண்டிருக்கிறாள்... ஆனால் பலன் என்னவோ பூச்சியம்தான்....
தான் இந்தியாவில் இருந்ததற்காக தடயமே இல்லாது இருக்க வேண்டுமென்று அழித்து விட்டானோ???
எங்கு தேடியும் இல்லை...இல்லவே இல்லை....!!!
கடைசி முயற்சியாகத்தான் டிடெக்டிவ் ஏஜன்சியிடம் அவன் போட்டோவை ஒப்படைத்திருந்தாள்.
அதுவும் ரகசியமாக....
அவன் பெயர் கெட்டுப் போய்விடக் கூடாதல்லவா???
"நாளக்கு தான் சொல்லுவாங்கமா பாக்கலாம்" என்றான் வருத்தத்துடன்....
"கயு எங்கணா மித்துவ தூக்க வர்லியா....?"
"வந்துடுவா"
"இன்னிக்கு இவ என்கூடவே படுக்கட்டும்னு சொல்லுணா..."
அவள் ஆசையாய் கேட்கவும் தடுக்க முடியவில்லை அவனால்....
"ம்...சரி....நீ இவக்கூட படுத்துக்கோ... நா கயல் கிட்ட சொல்ஸிட்றேன்"
"தேங்க்ஸ்ணா..." எனவும் அவளின் நெற்றியில் இதழ் பதித்து வெளியேறியவன் குழந்தைக்கான மாற்றுடையையும் பாலையும் எடுத்துக் கொண்டு மீண்டும் வந்து குடுத்துவிட்டு கிளம்பி விட்டான்.
கப்பேர்டில் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த தன் மனையாளை பின்னாலிருந்து அணைத்தான் ஆரவ்.
அஸிஸ்டன் கமிஷ்னர் ஆப் போலிஸ்!!!
"என்ன பண்ற ஆரு விடு"
"என் பொண்டாட்டி நா கட்டிப் பிடிப்பேன்....உனக்கென்னடி?"
"விடு ஆரு"
"இன்னிக்கு தான் உன் அரும மக இல்லாம ப்ரீயா இருக்கேன்... அதுகூட பொறுக்காதா உனக்கு?" எனவும் அவள் உதடுகள் சிரித்தன.
எல்லாவற்றையும் சரி செய்து விட்டு திரும்பி அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாய் கோர்த்தவள்
"ஏ.சி.பி சார் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி தெரீது"
"ஆமா...ரொம்.....ப"
"எனக்கும் சொன்னீங்கன்னா நானும் சந்தோஷப் பட்டுப்பேன்ல?"
"நீயே கண்டுபிடி"
"ப்ளீஸ் ஆரு சஸ்பண்ட்ஸ் வேணாமேடா"
முகத்தை சுருக்கி கெஞ்சவும் கிறங்கிப் போனான் அவன்.
"இப்பிடியெல்லாம் பண்ணீன்னா அப்பறம் எனக்கு பேசுற மூடே போயிடும்"
"இல்ல இல்ல பண்ண மாட்டேன்" சிறு பிள்ளை போல் தலையாட்ட அவள் செய்கை தன் தோழியை ஞாபகப்படுத்தவும் கண்களை இறுக்க மூடித் திறந்தவனுக்கு இருந்த உற்சாகம் இடம் தெரியாமல் மறைந்து போனது.
தன்னை சமாளித்துக் கொண்டவன்
"அண்ணா இருக்குற இடம் தெரிஞ்சு போச்சு"
"நிஜமாவா ஆரு..." துள்ளிக் குதித்தாள் அவள்.
"எங்க எங்க.... சீக்கிரமா சொல்லு"
"லண்டன்"
"வாட்....அங்கேயா?"
"ம்....என் ப்ர்ண்டு ஒருத்தன் தான் அங்க ஸ்கூல்ல பாத்ததா சொன்னான்.... ஏன் இப்பிடி பண்றாங்கன்னு புரிய மாட்டேங்குது அம்மு.... ரொம்ப கஷ்டமா இருக்குடி... ஒன்னு ரெண்டு வருஷம்னா பரவால்ல.... ஆறு வருஷம்....எங்கள யாரயும் பாக்கனும்னு கூட தோனல பாத்தியா... அவ்வளவு அழுத்தம்" தன் மனைவியிடம் நன்றாக திட்டிக் கொண்டிருந்தான்.
"விடு ஆரு....இப்போதான் எங்க இருக்காங்கன்னு தெரிந்சுடுச்சுல்ல... பாத்துக்கலாம் விடு" என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
"சரி....மித்து அவ கூட சமத்தா தூங்கிடுவாளா அம்மு?"
"அதெல்லாம் இருந்துக்குவா...
அவளுக்கு நா அம்மாவா இல்ல அவ அம்மாவான்னே புரிய மாட்டேங்குது"
அவள் அலுத்துக் கொள்ளவும் அவன் வாய்விட்டுச் சிரித்தான்.
"ஆரு....இல்ல...வந்து அ...அஷ்வி..."
"இத பத்தி நாம பேச வேணாம்னு நெனக்கிறேன்"
என்றான் வெடுக்கென....
அவர்கள் எல்லோருக்கும் அவள் அவனிடம் நீ போகாவிட்டால் குழந்தையை கலைத்து விடுவேன் என சொன்ன கோபம் அவளின் மீது...
அவன் போனதன் பின்னர்தான் தெரிய வந்தது விடயம்....
அதுவும் அவளே கூறி கதறிக் கதறி அழுதாள்.
அழுது என்ன பயன்???
அவன்தான் போய்விட்டானே!!!
இருவர் முகமும் வேதனையில் கசங்கியது.
"அத்தான் தான் அவள கஷ்டப்படுத்துறாருன்னு பாத்தா நாமலும் ஏன்டா... பாவம்டா... ப்ளீஸ் ஆரு...நீ பேச வேணாம்....நா மட்டுமாவது பேசுறேன்டா... அவள பாக்கும் போது என்னால அழுகய கட்டுப்படுத்தவே முடிலடா"
"ஓகே..." என்ற ஒற்றை சொல்லொடு முடித்துக் கொண்டவன்
"சரி நீ போய் தூங்கு அம்மு... எனக்கு வேல இருக்கு நா முடிச்சுட்டு படுத்துக்குறேன்"
"ஓகேடா குட் நைட்" என்றவள் அவன் கண்ணத்தில் இதழ் பதித்து விட்டு சென்று படுத்துக் கொள்ள அவன் லேப்டாபை எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.
***
"விஷு....இங்க வாங்களேன்" கத்தி குதூகலித்த தன் மனைவியிடம் வந்தான் வருண் விஷ்வா...
"எதுக்குடி கத்தற?"
"உங்க புள்ள அப்பான்னு சொல்றான்"
"வாட்...." ஆனந்தத்தில் அவனும் கத்தினான்.
அவள் முன் தன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த தன் குழந்தை வருண் ஸ்ரீதரை தூக்கி பிடித்தவன்
"என்னடா கண்ணா....அப்பான்னு கூப்டீங்கலாம்....அதான் அப்பா என் குட்டிய பாக்க வந்துட்டேன்ல....
திரும்ப ஒரு தடவ சொல்லுங்க பாக்கலாம்...." என்க "ங்ஙே...."என தன் பொக்கை வாயை திறந்து சிரிக்க அதன் அழகை ரசித்தவன்
"அப்பா சொல்லுங்க குட்டி..." என்றான் மீண்டும்....
"ப்பா...." எனவும் சந்தோஷக் கூச்சலிட்டவனை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனின் துப்பட்டா விழியழகி....
"யாழ்....இங்க பாரேன்....இவன் அப்பான்னு சொல்றான்டி" அவனைப் பார்த்து சிரித்தாள்.
"எதுக்குடி சிரிக்குற?" இல்லையென தலையாட்டினாள்.
குழந்தையை கிடத்திவிட்டு அவளை தன் வளைவுக்குள் கொண்டு வந்தான்.
"இப்போ சொல்லு"
"தேவாண்ணா போனதுக்கப்பறம் உங்கள இவ்வளவு சந்தோஷமா இன்னிக்குத்தான் பாக்குறேன்"
எனவும் சிரித்துக் கொண்டிருந்தவனின் சிரிப்பு அப்படியே நின்று விட்டது.
"விஷு..." கண்கள் கலங்கியது அவளுக்கு....
அவளை இறுக்கி அணைத்தவன்
"எங்க எப்பிடி இருக்கான்னு தெரில யாழ்....பட் நல்லா இருக்கனும்" அவனின் குரல் கரகரக்க அவனுள் இன்னும் ஒன்றினாள்.
"ப்ச்...விடு யாழ்... எல்லாம் சரியாயிடும்" அவன் கை அவள் கூந்தலை வருடி விட அவளையறியாமல் அவன் கதகதப்பிலேயே உறங்கிப் போனாள் பெண்.
***
"டேய் வேணாம்...குடுத்துடு...
என்கிட்ட விளயாடாத அர்வி
ப்ளீஸ்டா.... என் மொபைல குடுடா" அர்விந்த் அவளுடைய போனை வைத்து போக்கு காட்டிக் கொண்டிருக்க அவனிடமிருந்து எப்படியாவது அதை வாங்கிவிடத் துடித்துக் கொண்டிருந்தாள் அபிநயா...
"ஏன் நா பாக்க கூடாதா?" விடாமல் கேட்டான் அவன்...
அவளுக்கும் பார்க்கக் கூடாது என்றெல்லாம் இல்லை....
அதற்கு காரணமே வேறு....
அவளுடைய வால்பேப்பர் அவன்தான்....
அதை கண்டுவிட்டாள் வைத்து ஓட்டுவான்...
"உன் மேல காதலெ இல்லை..." என்று இவள் சொல்லிக் கொண்டிருக்க இதனைப் பார்த்து விட்டால் அவளின் மனது தெரிந்து விடுமல்லவா???
அதுதான் அவளது தற்போதைய பெரும் பிரச்சனை...
"நீ பாக்கலாம் அர்வி....பட் இப்போ வேணான்டா ப்ளீஸ்"
"இல்ல நா பாத்தே ஆகனும்"
"ப்ளீஸ்டா...ப்ளீஸ் ப்ளீஸ்...குடுத்துடு ப்ளீஸ்"
"ஊஹூம்..."
"ஏன்டா இப்பிடி பண்ற?"
"நீ ஏன் இப்பிடி பண்ற?" மடக்கினான் அவன்...
"ப்ச்...குடுத்துடு அர்வி..ப்ளீஸ்டா"
"முடியாது..."
"ப்ளீஸ் ப்ளீஸ் நீ என்ன சொன்னாலும் பண்ணுவேன்டா"
அவளை கெஞ்ச வைப்பதில் அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம் போலும்...
"என்ன வேணும்னாலும் பண்ணுவியா?"
"ஆமா"
"நா சொல்றத பண்ணா குடுத்துடுவேன்"
"ஓகே சொல்லு"
"எனக்கு ஒரு முத்தம் குடு..." எனவும் அவள் ஆவென வாய் பிளக்க அவள் உதடுகளை திடீரென சிறை செய்தான் அவன்...
((நம்ம அபி இருக்காங்கல்ல.... அவங்க அர்விய தான் கல்யாணம் பண்ணிகிட்டாங்க..
வேற அர்விந்த் இல்ல நண்பா நம்ம அர்விந்தே தான்...
அவங்க அம்மா இவன்கிட்ட இல்ல ஒப்படச்சிட்டு போனாங்க....
அட வருண சொல்றேன் நண்பா....
அவன்தான் அர்விந்த் கிட்ட பேசி ரெண்டு பேரையும் சேத்து வெச்சிட்டான்....
முதல்ல லவ்வெலலாம் இல்லதான்.....அவ அம்மா இறந்ததுனால இவன் அம்மாக்கு எதுவும் ஆகவிடாம பாத்துகிட்டாளா....
துரை டப்புனு லவ்ல விழுந்துட்டாரு....இப்போ மனமொத்த தம்பதிகள்தான்....
புள்ள கூட இருக்கு...
பொம்பள புள்ள தாங்க....
பேரு வர்ஷினி....
நல்லாருக்குல???))
***
"ரிதி...ரிதிமா...." அவன் மேலிருந்து கத்த அவனிடம் அவசரமாக வந்தாள் அவன் மனைவி ரித்திகா...
((அய்யய்யோ...இவங்கள பத்தி மறந்தே பொய்ட்டேன் நண்பா....
இவங்களுக்கும் ஒரு குழந்த இருக்கு...ஆண் குழந்த...
பேரு ரித்விக்...
நம்ம சித்துவும் அஸிஸ்டன்ட் கமிஷ்னர்தான்...
வேற என்ன...
ஹி..ஹி....
அவ்வளவு தான் நண்பா))
"என்ன சித்... ஏதாவது வேணுமா?"
"என் வாட்ச் பாத்தியா... இங்கேதானே வெச்சேன்... எங்க போச்சு..." மீண்டும் தேட அவளும் சேர்ந்து தேடினாள்.
"ஆமா....ரித்வி எங்கடி?" எனவும் இடுப்பில் கை குற்றி முறைத்தவள்
"உங்கள போலவே எல்லாம் லேட்டா எந்திரிச்சு கெளம்புவாங்கன்னு நெனச்சீங்களா...அவன் ஸ்கூல் கெளம்பி அரை மணி நேரமாச்சு"
"ஹி...ஹி...இன்னிக்கு மட்டும் தான் லேட்டுடி"
"யாரு நீங்க...நம்பிட்டேன்"
"நாளக்கு சீக்கிரமா எந்திருச்சுருவேன்டி"
"இதயேதான் அவன் பிறந்ததுல இருந்து சொல்லிகிட்டு இருக்கீங்க...."
"நீ வேணா பாரு"
"சும்மா வெட்டி பேச்சு பேசாம வாட்ச்ச தேடுங்க" என்று விட்டு தேடயவளின் கைகளிலேயே கிடைத்தது அது....
அதை எடுத்துக் கொண்டு அவனருகில் வந்தவள் அதை அவனுக்கு அணிவித்து விட்டு அவனுடைய கேப்பையும் போட்டு விட்டாள்.
அவளையே காதலாய் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து
"வர்றேன்டி...பத்தரமா இருந்துக்கோ...பய்" என்றவன் அவசரமாக வெளியேறி விட்டான்.
ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....
தன் எம்.டி சேரில் அமர்ந்து கொண்டு கணனியில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ரகு....
((நான்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்னு சொன்னேன்ல
இவன் வேணாம்னுதாங்க சொன்னான்... பட் நம்ம ஹீரோதான் நா வரும் வர சரி பாத்துக்கோன்னு ஒப்படச்சிட்டு பறந்துட்டாரு....
தற்காலிகம்னு இவன் நெனக்க ஏழு வருஷமாகியும் அவன் திரும்பி வராததுல ரகுக்கு நம்ம ஹீரோ மேல அப்பிடி ஒரு கடுப்பு...
இப்போவும் ஏதோ அவன் சொன்னானேன்னு தான் வேண்டா வெறுப்பா செஞ்சிகிட்டு இருக்காப்ல....
ஆமா... கதிர் எங்கன்னு நீங்க யோசிக்கிறது புரியுது....
இருங்க அதயும் சேத்தே சொல்லிட்றேன்....
அவரு.... அதாங்க கதிரவன் நம்ம ஹீரோவோட பீ.ஏ... இருக்காருல்ல...
அவன் இன்னும் ரிஷிக்கு பீ.ஏ வாதான் இருக்கான்....
தெளிவா குழப்புறேனா...
ரிஷியோட இந்த கம்பனி இருக்குல்ல.... அதனோட கிளை இருக்குறது லண்டன்ல....
இவ்வளவு நாளா இங்க இருந்தே தான் பாத்துகிட்டு இருந்தான்....
போக வேண்டிய கட்டாயம் வந்ததுல அங்க போயி எம்.டி யா சார்ஜ் எடுத்துகிட்டான்.
கதிர தான் முதல்ல எம்.டி ஆக்க ட்ரை பண்ணான்....பட்...கதிரவன் ஒத்துகல...உங்க கூடவே வர்றேன் சார்னு...லண்டன்லயே அவனும் செட்ல் ஆயிட்டான்....
இப்போ ஆர்.கே இண்டஸ்ட்ரீஸோட பீ.ஏ வா இருக்குறவங்க மிஸ்.வசுந்ரா
இதுதாங்க நடந்துது.....
ஷ்ஷப்பா....முடில))
கதவு தட்டப்பட நிமிர்ந்தவன்
"கம் இன்...." என்க உள்ளே நுழைந்தாள் அவன் பீ.ஏ
"என்ன விஷயம் வசுந்ரா....?"
"இன்னிக்கு இன்டர்வீவ் செலக்ஷன் இருக்கு சார்....அத ஆரம்பிக்கலாமான்னு கேக்கலாம்னு..."
"ஓஹ்....மறந்தே பொய்ட்டேன்....
நீங்க போய் அரேன்ஜ்மண்ட்ஸ் பாருங்க....நா ஆர்.கேக்கு மெயில் அனுப்பிட்டு வந்துட்றேன்...."
என்றவன் அவசரமாக மெயிலை தட்டினான்....
((இவனுக்கு தெரிஞ்சா இவனே சொல்லலாம்னு நீங்க யோசிக்கிறது கரக்ட்...பட் இவன் சொல்ல விட்டாதானேங்க...
பயபுள்ள ரகுகிட்ட சத்தியம் வாங்கி வெச்சிட்டான்....))
அவனுக்கு மெயிலை அனுப்பி விட்டு தன் மொபைலை எடுத்து அவனுக்கு அழைக்க அது துண்டிக்கப்படவும் முக்கியமான வேலையில் இருப்பான் போல என நினைத்தவன் எழுந்து கான்ப்ரன்ஸ் அறை நோக்கி நடந்தான்...
லண்டன்.....
இதே நேரம் இரவு....
ஆடிக் களைத்துப் போய் தன் தோள் மீது தூங்கிக் கொண்டு வரும் தன் மகனின் முடியை அடிக்கடி தடவி விட்டுக் கொண்டிருந்தான் ரிஷிகுமார்....
அவன் டல்லாக இருக்கவும் அவன் மனதை மாற்ற தன் மீட்டிங்களையெல்லாம் கேன்ஸல் செய்து விட்டு அவன் சொன்ன இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றான்....
ஓரளவு தேறியவன் நன்றாக விளையாடி களைத்துப் போய் வந்தும் வராததுமாக படுத்தும் விட்டான்.
மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு இன்று யாதவ் கேட்ட கேள்விகளே மீண்டும் மீண்டும் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
"பர்த்டேக்கு மாம் வந்துடுவாங்கன்னு சொல்லுவீங்கல்ல டாட்..... அப்போ இன்னும் டூ டேஸ்ல மாம் வந்துடுவாங்களா?"
ஏக்கமாய் கேட்டிருந்தான்.
ஆம்....இன்னும் இரு நாட்கள் அவள் பிறந்த நாளைக்கு...
அதுவும் யாதவ்வின் பிறந்த நாள் அன்றே தான் அவளதும்....
ஒவ்வொரு வருடமும் பர்த்டே கேக்கை கட் பண்ண முன் வாசலை பார்க்கும் அவனின் ஏக்கப் பார்வைவில் துடித்துப் போவது என்னவோ அவன் தந்தைதான்.....
அந்த பெரிய வீட்டின் முன் காரை நிறுத்தியவன் இறங்கி வந்து அவனையும் தூக்கிக் கொண்டான்.
நேரே தங்களறைக்குச் சென்று அவனை கட்டிலில் கிடத்தியவனுக்கு தன் மகனின் செய்கையில் தன் மனையாளின் பிம்பம் மின்னி மறைய தலையை உலுக்கி விட்டுக் கொண்டான்.
ஆம் அவன் ரிஷியின் ஷர்ட்டை தன் கைகளால் இறுக்கப் பற்றி இருந்தான்!!!
எப்போதும் நடப்பது தான்....
இவன் இப்படி செய்யும் போதெல்லாம் மின்னி மறையும் அவள் பிம்பத்தை மட்டும் ஏனோ அழிக்கவே முடியவில்லை அவனால்.....
விதி!!!!!
அவனுக்கு போர்வை போர்த்தி
விட்டு தலைவருடி முத்தமிட்டவன் எழுந்து ப்ரஷப்பாக சென்றான்.
கொஞ்ச நேரத்திலெல்லாம் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து தனது லேப்டாப் முன் அமர்ந்தவனால் வேலையை பார்க்கவே முடியாமல் போக எழுந்து பால்கனிக்குச் சென்று விட்டான்.
சிக்கரட் ஒன்றை பற்ற வைக்க நினைத்தவனுக்கு மீண்டும் அவனவளின் பிம்பம்....
அவள் கோபத்துடன் இழுத்து வீசியது நினைவில் படற கோபத்தில் வேண்டுமென்றே புகைக்கப் போனவனால் சத்தியமாய் அதை வாய்க்கு அருகில் கூட கொண்டு செல்ல முடியவில்லை என்பதுதான் நிஜம்!!!
அதை தூக்கிப் போட்டு விட்டு வானத்து நிலவை வெறித்தான் காளை....
ஆறு வருடங்கள் கடந்து விட்டது யாவரையும் பார்த்து....
எல்லோருக்கும் வாழ்க்கை அமைந்து விட்டதென்று தெரியும்....
என்ன அவன் அருகில் இல்லை அவ்வளவே....
அவர்களுடனெல்லாம் பேசக் கூடாதென்று இல்லை....
ஆனால்..... அவள் இருக்கிறாளே....
அதனால் தவிர்த்து விட்டான்.
குழந்தை பிறந்த அன்று அவர்களை விட்டு வந்தவன்தான்...
இதோ இன்றுடன் ஆறு வருடங்கள் கடந்து விட்டன... அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்றெல்லாம் அவனுக்கு தெரியாது....தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை....
இன்னும் இரண்டு நாட்களில் அவன் மகவின் பிறந்தநாள்...
அவளதுவும் கூடவே...
இந்த முறை அவனை சமாளிக்க முடியாதென்றே தோன்றியது அவனுக்கு....
அவள் மீதிருக்கும் கோபத்தில் அவளைப் பற்றி சொல்லாமல் மறைத்து வளர்க்க விரும்பவில்லை அவன்....
என்றாலும் உண்மையையும் கூறிவிட வில்லை...
அம்மா வருவார்கள் என்று சொல்லி வளர்க்க அது அவன் மனதில் ஏக்கமாக மாறும் என்பதை அவன் யோசிக்கவே இல்லையே???
"டாட்...." யாதவ்வின் குரல் கேட்க தன்னை மீட்டவன் சட்டென திரும்பிப் பார்க்க அங்கே கண்ணை கசக்கிக் கொண்டு கொட்டாவி விட்டவாறே தூக்க கலக்கத்தில் நின்றிருந்தான் அவன்....
கீழே மண்டியிட்டு கைகளை விரித்து வா என கண்ணசைக்க ஓடி வந்து தன் தந்தையிடம் அடைக்கலம் புகுந்தவன் அவன் தோளிலேயே தூங்கிப் போனான்.
அவன் முதுகை வருடிவிட கொஞ்ச நேரம் அசையாது இருந்து விட்டு திடீரென எழ
"என்னாச்சுடா....ஏன் எழுந்துகிட்ட?" என்றான் பரிவாக...
"டாட் எனக்கு மாம் வேணும்" எனவும் தூக்கிவாரிப் போட்டது ரிஷிக்கு..
"மாம் வருவாங்க கண்ணா....நீ டாட் கிட்ட சமத்தா தூங்கு" தூங்க வைக்க முயன்றான்.
"இல்ல நீங்க பொய் சொல்லுவீங்க...."
"இந்த பர்த்டேக்கு மாம் தான் உன்னோட பெரிய கிப்ட் சரியா.... கண்டிப்பா வருவா... இப்போ நீ தூங்குறியா?" நடக்கப் போவதில்லை என தெரிந்தே பொய் சொன்னான்.
ஆனால் இந்த தடவை விதியின் விளையாட்டில் அவன் சொன்ன பொய் மெய்யாகப் போகிறதென்று அவன் அறிவானா???
"கண்டிப்பாவந்துடுவாங்கல்ல டாட்...?"
"வந்துடுவா கண்ணா....நீ தூங்கு" மீண்டும் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான் அந்த அன்புத் தந்தை....
இராமநாதபுரம்.....
தன் ஆபிஸ் டேபிளில் தலைசாய்த்தை கண் மூடி இருந்தவளின் கண்களிலிருந்து விடாமல் வழிந்து கொண்டே இருந்தது கண்ணீர்.....
"சாரி தேவ்....ரியலி சாரி....உங்கள பாக்கனும் போல இருக்கு தேவ்... எங்க இருக்கீங்க.... இன்னும் எத்தன நாள் தேவ் காக்க வெப்பீங்க....நரக வேதனயா இருக்கு தேவ்.... நா சாகுறதுக்குள்ள ஒரு தடவ உங்கள பாக்க மாட்டேனான்னு இருக்கு தேவ்.... ப்ளீஸ் வந்துடுங்க நீங்க இல்லாம நானில்லன்னு புரிஞ்சுகிட்டேன் தேவ்... எனக்கு உங்க கூட வாழனும்....நீங்க என் பக்கத்துலேயே இருக்கனும் தேவ்...
என் ஆசய தீத்து வெப்பீங்களா?" பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவளிடமிருந்து....
தன் கையிலிருந்த தன்னவனின் போட்டோ ப்ரேமை வருடிக் கொடுத்துக் கொண்டே
"ஐ மிஸ் யூ தேவ்.... ஐ மிஸ் யூ லாட்...." என்றவள் அவன் நெற்றியில் இதழ் பதித்து
"தேவ்...." என ஆழ்மனதிலிருந்து அழைக்க இங்கே தன் மகனை பக்கத்தில் பொட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான்.
தொடரும்.....
15-05-2021.
உங்களது கருத்துக்களை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பா
ஆறு வருடங்களுக்குப் பிறகு.....
இந்த ஆறு வருடங்களுக்குள்ளும் எத்தனை எத்தனை மாற்றங்கள்!!!
எத்தனை வலிகள்???
எத்தனை எதிர்பார்ப்புக்கள்??
***
லண்டன்.....
பி.எஸ்.ஜி தனியார் பாடசாலை.....
[[ BRITISH SCHOOL OF GENEVA ]]
தனியாக அமர்ந்திருந்த அந்த ஏழு வயது சிறுவனிடம் வந்தாள் மதுமிதா...
அவளும் இந்தியாதான்...
அங்கேயே படித்து பட்டம் பெற்று இப்போது ஆசிரியராக பணிபுரியும் இளம் நங்கை....
இடைவரை நீண்டிருக்கும் கருங்கூந்தல் சீராக வெட்டப்பட்டு இருப்பது கூட அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.
ஒப்பனை தேவையற்ற அழகு...
அனைவரையும் நின்று திரும்பிப் பார்க்கத் தூண்டும் அழகு....
ஆனால் அதை அவள் மெருகூட்டுவதற்கு எந்தப் பிரயத்தனத்தையும் மேற்கொள்ளாதது தான் அவளை இன்னும் பேரழியாகக் காட்டியதோ???
அவன் அருகில் வந்தமரவே அவளைப் பார்த்து வசீகரமாக சிரித்தான் அச்சிறுவன்....
"க்யூட் ஸ்மைல்" என்றாள் எப்போதும் போல் தலையை கலைத்துக் கொண்டே....
அதற்கும் சிரித்தான்....
"என்னாச்சு...ஏன் தனியா உக்காந்திருக்க?"
"டாட் இன்னும் வர்ல மிஸ்"
"எல்லோரும் பொய்ட்டாங்களேடா... தனியா இருந்துப்பியா?"
"எஸ் மிஸ்...டாட் இப்போ வந்துடுவாங்க" அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் முன் வந்தது கருப்பு நிற லம்போகினி ஒன்று....
கதவைத் திறந்து தன் கூலிங் க்ளாஸை கலற்றியவாறே அதிலிருந்து இறங்கிய அந்த ஆறடி ஆண்மகனிடம் துள்ளிக் கொண்டு ஓடினான் அச்சிறுவன்....
அவன் யாதவ்....
யாதவ் தேவமாருதன்!!!
ரிஷியின் தவப்புதல்வன்....
தன்னை நோக்கி பாய்ந்தவனை தூக்கிப் போட்டு பிடித்தவன் அவன் கண்ணத்தில் முத்தமிட எப்போதும் போலவே அவனையும் அச்சிறுவனையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமிதா....
"போலாமா?" தன் மகனை பார்த்து கேட்டவன் திரும்ப எத்தனிக்க
"டாட்...எங்க மிஸ்" என அவளை அறிமுகப்படுத்தவும் அவளைப் பார்த்து வசீகரமாய் சிரித்தவன் தலையசைத்து விடைப் பெற்றுப் போய்விட்டான்.
இப்போது அவளுக்குப் புரிந்தது அந்தச் சிரிப்பு யாரிடமிருந்து வந்திருக்குமென்று...
அமைதியாக வந்து கொண்டிருந்த தன் மகனை திருப்பிப் பார்த்தவன்
"யாது...வட்ஸ் த ப்ராப்ளம்....ஏன் உன் முகம் டல்லா இருக்கு?"
"எப்போவுமே மாம் அவங்களோட பர்த்டேக்கு வருவாங்கன்னு சொல்லுவீங்க.... பட் இன்னிக்கும் வர வர்லியே டாட்.... உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்காது.... ஆனா நீங்க பொய் சொல்லிகிட்டே இருப்பீங்க?" என்றவனின் கேள்வியில் வாயடைத்து இருந்து கொண்டிருந்தான் அவன்....
"பதில் சொல்லுங்க டாட்" அவனுக்கு மௌனமே மொழியாகிப் போக
"யூ ஆர் சீட்டர் டாட்...ஐ ஹேட் யூ" கோபமாய் சொன்னவனுக்கு கண்களில் கண்ணீர் விழவா வேண்டாமா என கேட்டுக் கொண்டு நிற்க அதைக் கண்டு அவசரமாக காரை ஓரமாக நிறுத்தியவன் அவனை ஆதரவாக அணைத்துக் கொள்ள அவனோ அவனை விட்டு விலகி அமர்ந்தான்.
"சாரி" வேறு வழி தெரியவில்லை அந்தத் தந்தைக்கு...
"ஸ்கூல்ல எல்லா பசங்களுக்கும் மாம் தான் ஊட்டி விடுவாங்க டாட்... எனக்கு ஆசயா இருக்கும்" அவன் கண்களில் தெரிந்த ஏக்கத்தில் இவனுக்குள் வலித்தது.
என்ன நடந்திருந்தாலும் அவளிடமே குழந்தையை கொடுத்திருக்க வேண்டுமோ???
அவளைப் பற்றிய நினைப்பு வந்த நொடி அவன் முகம் பாறையாய் இறுகிப் போனது.
அவன் அமைதியாக இருக்கவும்
"சாரி டாட்...இனிமே இப்பிடி பண்ண மாட்டேன்" அவன் கண்ணத்தில் முத்தமிட்டவனைப் பார்க்க தொண்டை அடைத்தது ரிஷிக்கு....
அவன் தலையை கலைத்து விட்டு சிரித்தவனின் சிரிப்பின் பின்னால் ஓராயிரம் வலிகள் மறைந்திருந்தது.
அதே நேரம் இரவு...
இந்தியா...
இராமநாதபுரம்.....
உறங்கிக் கொண்டிருந்த முன்று வயது குழந்தையின் மழலைச் சிரிப்பில் உலகை மறந்து அதனுடன் இணைந்து சிரித்துக் கொண்டிருந்தாள் காரிகை...
அதற்குள் அதற்கு விழிப்புத் தட்டி விட்டதோ என்னவோ தூக்கத்திலேயே இலேசாக சிணுங்க ஆரம்பிக்க மெதுவாக அதை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவளின் கண்களில் சொல்ல முடியாத ஏக்கம் இழையோடிக் கொண்டிருந்தது.
அதன் சிணுங்கல் அடங்கவே மெதுவாக கட்டிலில் கிடத்தியவள் அதன் இரு பக்கமும் தலையணையை அணையாக வைத்து விட்டு நிமிர வாசலில் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் அஜய்...
வீட்டில் அவளுடன் பேசும் ஒரே ஜீவன்!!!
"இன்னிக்கு சீக்கிரமா வந்துட்ட?" அவள் தலையை வாஞ்சையாக தடவிக் கொண்டே கேட்டான் அவன்...
இன்று அவள் சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டு பேசப்படும் மிகப்பெரிய லாயர்...
லாயர் அஷ்வினி என்றாலே கோர்ட்டே நடுநடுங்கும்....
அந்தளவு அசுர வளர்ச்சி எல்லாம் அவளுக்கானது அல்ல...
அவளைத் துறத்திக் கொண்டிருக்கும் நினைவுகளிலிருந்து தப்புவதற்கு அவள் தேர்ந்தெடுத்த வழி....
அவன் நெஞ்சில் வாகாய் சாய்ந்து கொண்டவள்
"இன்னுமே அவர் எங்க இருக்கார்னு தெரியலயாணா?" கண் கலங்க கேட்டவளைப் பார்க்க அவனுக்குமே பொறுக்கவில்லை
அவளும்தான் ஆறு வருடங்களாக தேடிக் கொண்டிருக்கிறாள்... ஆனால் பலன் என்னவோ பூச்சியம்தான்....
தான் இந்தியாவில் இருந்ததற்காக தடயமே இல்லாது இருக்க வேண்டுமென்று அழித்து விட்டானோ???
எங்கு தேடியும் இல்லை...இல்லவே இல்லை....!!!
கடைசி முயற்சியாகத்தான் டிடெக்டிவ் ஏஜன்சியிடம் அவன் போட்டோவை ஒப்படைத்திருந்தாள்.
அதுவும் ரகசியமாக....
அவன் பெயர் கெட்டுப் போய்விடக் கூடாதல்லவா???
"நாளக்கு தான் சொல்லுவாங்கமா பாக்கலாம்" என்றான் வருத்தத்துடன்....
"கயு எங்கணா மித்துவ தூக்க வர்லியா....?"
"வந்துடுவா"
"இன்னிக்கு இவ என்கூடவே படுக்கட்டும்னு சொல்லுணா..."
அவள் ஆசையாய் கேட்கவும் தடுக்க முடியவில்லை அவனால்....
"ம்...சரி....நீ இவக்கூட படுத்துக்கோ... நா கயல் கிட்ட சொல்ஸிட்றேன்"
"தேங்க்ஸ்ணா..." எனவும் அவளின் நெற்றியில் இதழ் பதித்து வெளியேறியவன் குழந்தைக்கான மாற்றுடையையும் பாலையும் எடுத்துக் கொண்டு மீண்டும் வந்து குடுத்துவிட்டு கிளம்பி விட்டான்.
கப்பேர்டில் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த தன் மனையாளை பின்னாலிருந்து அணைத்தான் ஆரவ்.
அஸிஸ்டன் கமிஷ்னர் ஆப் போலிஸ்!!!
"என்ன பண்ற ஆரு விடு"
"என் பொண்டாட்டி நா கட்டிப் பிடிப்பேன்....உனக்கென்னடி?"
"விடு ஆரு"
"இன்னிக்கு தான் உன் அரும மக இல்லாம ப்ரீயா இருக்கேன்... அதுகூட பொறுக்காதா உனக்கு?" எனவும் அவள் உதடுகள் சிரித்தன.
எல்லாவற்றையும் சரி செய்து விட்டு திரும்பி அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாய் கோர்த்தவள்
"ஏ.சி.பி சார் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி தெரீது"
"ஆமா...ரொம்.....ப"
"எனக்கும் சொன்னீங்கன்னா நானும் சந்தோஷப் பட்டுப்பேன்ல?"
"நீயே கண்டுபிடி"
"ப்ளீஸ் ஆரு சஸ்பண்ட்ஸ் வேணாமேடா"
முகத்தை சுருக்கி கெஞ்சவும் கிறங்கிப் போனான் அவன்.
"இப்பிடியெல்லாம் பண்ணீன்னா அப்பறம் எனக்கு பேசுற மூடே போயிடும்"
"இல்ல இல்ல பண்ண மாட்டேன்" சிறு பிள்ளை போல் தலையாட்ட அவள் செய்கை தன் தோழியை ஞாபகப்படுத்தவும் கண்களை இறுக்க மூடித் திறந்தவனுக்கு இருந்த உற்சாகம் இடம் தெரியாமல் மறைந்து போனது.
தன்னை சமாளித்துக் கொண்டவன்
"அண்ணா இருக்குற இடம் தெரிஞ்சு போச்சு"
"நிஜமாவா ஆரு..." துள்ளிக் குதித்தாள் அவள்.
"எங்க எங்க.... சீக்கிரமா சொல்லு"
"லண்டன்"
"வாட்....அங்கேயா?"
"ம்....என் ப்ர்ண்டு ஒருத்தன் தான் அங்க ஸ்கூல்ல பாத்ததா சொன்னான்.... ஏன் இப்பிடி பண்றாங்கன்னு புரிய மாட்டேங்குது அம்மு.... ரொம்ப கஷ்டமா இருக்குடி... ஒன்னு ரெண்டு வருஷம்னா பரவால்ல.... ஆறு வருஷம்....எங்கள யாரயும் பாக்கனும்னு கூட தோனல பாத்தியா... அவ்வளவு அழுத்தம்" தன் மனைவியிடம் நன்றாக திட்டிக் கொண்டிருந்தான்.
"விடு ஆரு....இப்போதான் எங்க இருக்காங்கன்னு தெரிந்சுடுச்சுல்ல... பாத்துக்கலாம் விடு" என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
"சரி....மித்து அவ கூட சமத்தா தூங்கிடுவாளா அம்மு?"
"அதெல்லாம் இருந்துக்குவா...
அவளுக்கு நா அம்மாவா இல்ல அவ அம்மாவான்னே புரிய மாட்டேங்குது"
அவள் அலுத்துக் கொள்ளவும் அவன் வாய்விட்டுச் சிரித்தான்.
"ஆரு....இல்ல...வந்து அ...அஷ்வி..."
"இத பத்தி நாம பேச வேணாம்னு நெனக்கிறேன்"
என்றான் வெடுக்கென....
அவர்கள் எல்லோருக்கும் அவள் அவனிடம் நீ போகாவிட்டால் குழந்தையை கலைத்து விடுவேன் என சொன்ன கோபம் அவளின் மீது...
அவன் போனதன் பின்னர்தான் தெரிய வந்தது விடயம்....
அதுவும் அவளே கூறி கதறிக் கதறி அழுதாள்.
அழுது என்ன பயன்???
அவன்தான் போய்விட்டானே!!!
இருவர் முகமும் வேதனையில் கசங்கியது.
"அத்தான் தான் அவள கஷ்டப்படுத்துறாருன்னு பாத்தா நாமலும் ஏன்டா... பாவம்டா... ப்ளீஸ் ஆரு...நீ பேச வேணாம்....நா மட்டுமாவது பேசுறேன்டா... அவள பாக்கும் போது என்னால அழுகய கட்டுப்படுத்தவே முடிலடா"
"ஓகே..." என்ற ஒற்றை சொல்லொடு முடித்துக் கொண்டவன்
"சரி நீ போய் தூங்கு அம்மு... எனக்கு வேல இருக்கு நா முடிச்சுட்டு படுத்துக்குறேன்"
"ஓகேடா குட் நைட்" என்றவள் அவன் கண்ணத்தில் இதழ் பதித்து விட்டு சென்று படுத்துக் கொள்ள அவன் லேப்டாபை எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.
***
"விஷு....இங்க வாங்களேன்" கத்தி குதூகலித்த தன் மனைவியிடம் வந்தான் வருண் விஷ்வா...
"எதுக்குடி கத்தற?"
"உங்க புள்ள அப்பான்னு சொல்றான்"
"வாட்...." ஆனந்தத்தில் அவனும் கத்தினான்.
அவள் முன் தன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த தன் குழந்தை வருண் ஸ்ரீதரை தூக்கி பிடித்தவன்
"என்னடா கண்ணா....அப்பான்னு கூப்டீங்கலாம்....அதான் அப்பா என் குட்டிய பாக்க வந்துட்டேன்ல....
திரும்ப ஒரு தடவ சொல்லுங்க பாக்கலாம்...." என்க "ங்ஙே...."என தன் பொக்கை வாயை திறந்து சிரிக்க அதன் அழகை ரசித்தவன்
"அப்பா சொல்லுங்க குட்டி..." என்றான் மீண்டும்....
"ப்பா...." எனவும் சந்தோஷக் கூச்சலிட்டவனை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனின் துப்பட்டா விழியழகி....
"யாழ்....இங்க பாரேன்....இவன் அப்பான்னு சொல்றான்டி" அவனைப் பார்த்து சிரித்தாள்.
"எதுக்குடி சிரிக்குற?" இல்லையென தலையாட்டினாள்.
குழந்தையை கிடத்திவிட்டு அவளை தன் வளைவுக்குள் கொண்டு வந்தான்.
"இப்போ சொல்லு"
"தேவாண்ணா போனதுக்கப்பறம் உங்கள இவ்வளவு சந்தோஷமா இன்னிக்குத்தான் பாக்குறேன்"
எனவும் சிரித்துக் கொண்டிருந்தவனின் சிரிப்பு அப்படியே நின்று விட்டது.
"விஷு..." கண்கள் கலங்கியது அவளுக்கு....
அவளை இறுக்கி அணைத்தவன்
"எங்க எப்பிடி இருக்கான்னு தெரில யாழ்....பட் நல்லா இருக்கனும்" அவனின் குரல் கரகரக்க அவனுள் இன்னும் ஒன்றினாள்.
"ப்ச்...விடு யாழ்... எல்லாம் சரியாயிடும்" அவன் கை அவள் கூந்தலை வருடி விட அவளையறியாமல் அவன் கதகதப்பிலேயே உறங்கிப் போனாள் பெண்.
***
"டேய் வேணாம்...குடுத்துடு...
என்கிட்ட விளயாடாத அர்வி
ப்ளீஸ்டா.... என் மொபைல குடுடா" அர்விந்த் அவளுடைய போனை வைத்து போக்கு காட்டிக் கொண்டிருக்க அவனிடமிருந்து எப்படியாவது அதை வாங்கிவிடத் துடித்துக் கொண்டிருந்தாள் அபிநயா...
"ஏன் நா பாக்க கூடாதா?" விடாமல் கேட்டான் அவன்...
அவளுக்கும் பார்க்கக் கூடாது என்றெல்லாம் இல்லை....
அதற்கு காரணமே வேறு....
அவளுடைய வால்பேப்பர் அவன்தான்....
அதை கண்டுவிட்டாள் வைத்து ஓட்டுவான்...
"உன் மேல காதலெ இல்லை..." என்று இவள் சொல்லிக் கொண்டிருக்க இதனைப் பார்த்து விட்டால் அவளின் மனது தெரிந்து விடுமல்லவா???
அதுதான் அவளது தற்போதைய பெரும் பிரச்சனை...
"நீ பாக்கலாம் அர்வி....பட் இப்போ வேணான்டா ப்ளீஸ்"
"இல்ல நா பாத்தே ஆகனும்"
"ப்ளீஸ்டா...ப்ளீஸ் ப்ளீஸ்...குடுத்துடு ப்ளீஸ்"
"ஊஹூம்..."
"ஏன்டா இப்பிடி பண்ற?"
"நீ ஏன் இப்பிடி பண்ற?" மடக்கினான் அவன்...
"ப்ச்...குடுத்துடு அர்வி..ப்ளீஸ்டா"
"முடியாது..."
"ப்ளீஸ் ப்ளீஸ் நீ என்ன சொன்னாலும் பண்ணுவேன்டா"
அவளை கெஞ்ச வைப்பதில் அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம் போலும்...
"என்ன வேணும்னாலும் பண்ணுவியா?"
"ஆமா"
"நா சொல்றத பண்ணா குடுத்துடுவேன்"
"ஓகே சொல்லு"
"எனக்கு ஒரு முத்தம் குடு..." எனவும் அவள் ஆவென வாய் பிளக்க அவள் உதடுகளை திடீரென சிறை செய்தான் அவன்...
((நம்ம அபி இருக்காங்கல்ல.... அவங்க அர்விய தான் கல்யாணம் பண்ணிகிட்டாங்க..
வேற அர்விந்த் இல்ல நண்பா நம்ம அர்விந்தே தான்...
அவங்க அம்மா இவன்கிட்ட இல்ல ஒப்படச்சிட்டு போனாங்க....
அட வருண சொல்றேன் நண்பா....
அவன்தான் அர்விந்த் கிட்ட பேசி ரெண்டு பேரையும் சேத்து வெச்சிட்டான்....
முதல்ல லவ்வெலலாம் இல்லதான்.....அவ அம்மா இறந்ததுனால இவன் அம்மாக்கு எதுவும் ஆகவிடாம பாத்துகிட்டாளா....
துரை டப்புனு லவ்ல விழுந்துட்டாரு....இப்போ மனமொத்த தம்பதிகள்தான்....
புள்ள கூட இருக்கு...
பொம்பள புள்ள தாங்க....
பேரு வர்ஷினி....
நல்லாருக்குல???))
***
"ரிதி...ரிதிமா...." அவன் மேலிருந்து கத்த அவனிடம் அவசரமாக வந்தாள் அவன் மனைவி ரித்திகா...
((அய்யய்யோ...இவங்கள பத்தி மறந்தே பொய்ட்டேன் நண்பா....
இவங்களுக்கும் ஒரு குழந்த இருக்கு...ஆண் குழந்த...
பேரு ரித்விக்...
நம்ம சித்துவும் அஸிஸ்டன்ட் கமிஷ்னர்தான்...
வேற என்ன...
ஹி..ஹி....
அவ்வளவு தான் நண்பா))
"என்ன சித்... ஏதாவது வேணுமா?"
"என் வாட்ச் பாத்தியா... இங்கேதானே வெச்சேன்... எங்க போச்சு..." மீண்டும் தேட அவளும் சேர்ந்து தேடினாள்.
"ஆமா....ரித்வி எங்கடி?" எனவும் இடுப்பில் கை குற்றி முறைத்தவள்
"உங்கள போலவே எல்லாம் லேட்டா எந்திரிச்சு கெளம்புவாங்கன்னு நெனச்சீங்களா...அவன் ஸ்கூல் கெளம்பி அரை மணி நேரமாச்சு"
"ஹி...ஹி...இன்னிக்கு மட்டும் தான் லேட்டுடி"
"யாரு நீங்க...நம்பிட்டேன்"
"நாளக்கு சீக்கிரமா எந்திருச்சுருவேன்டி"
"இதயேதான் அவன் பிறந்ததுல இருந்து சொல்லிகிட்டு இருக்கீங்க...."
"நீ வேணா பாரு"
"சும்மா வெட்டி பேச்சு பேசாம வாட்ச்ச தேடுங்க" என்று விட்டு தேடயவளின் கைகளிலேயே கிடைத்தது அது....
அதை எடுத்துக் கொண்டு அவனருகில் வந்தவள் அதை அவனுக்கு அணிவித்து விட்டு அவனுடைய கேப்பையும் போட்டு விட்டாள்.
அவளையே காதலாய் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து
"வர்றேன்டி...பத்தரமா இருந்துக்கோ...பய்" என்றவன் அவசரமாக வெளியேறி விட்டான்.
ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....
தன் எம்.டி சேரில் அமர்ந்து கொண்டு கணனியில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ரகு....
((நான்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்னு சொன்னேன்ல
இவன் வேணாம்னுதாங்க சொன்னான்... பட் நம்ம ஹீரோதான் நா வரும் வர சரி பாத்துக்கோன்னு ஒப்படச்சிட்டு பறந்துட்டாரு....
தற்காலிகம்னு இவன் நெனக்க ஏழு வருஷமாகியும் அவன் திரும்பி வராததுல ரகுக்கு நம்ம ஹீரோ மேல அப்பிடி ஒரு கடுப்பு...
இப்போவும் ஏதோ அவன் சொன்னானேன்னு தான் வேண்டா வெறுப்பா செஞ்சிகிட்டு இருக்காப்ல....
ஆமா... கதிர் எங்கன்னு நீங்க யோசிக்கிறது புரியுது....
இருங்க அதயும் சேத்தே சொல்லிட்றேன்....
அவரு.... அதாங்க கதிரவன் நம்ம ஹீரோவோட பீ.ஏ... இருக்காருல்ல...
அவன் இன்னும் ரிஷிக்கு பீ.ஏ வாதான் இருக்கான்....
தெளிவா குழப்புறேனா...
ரிஷியோட இந்த கம்பனி இருக்குல்ல.... அதனோட கிளை இருக்குறது லண்டன்ல....
இவ்வளவு நாளா இங்க இருந்தே தான் பாத்துகிட்டு இருந்தான்....
போக வேண்டிய கட்டாயம் வந்ததுல அங்க போயி எம்.டி யா சார்ஜ் எடுத்துகிட்டான்.
கதிர தான் முதல்ல எம்.டி ஆக்க ட்ரை பண்ணான்....பட்...கதிரவன் ஒத்துகல...உங்க கூடவே வர்றேன் சார்னு...லண்டன்லயே அவனும் செட்ல் ஆயிட்டான்....
இப்போ ஆர்.கே இண்டஸ்ட்ரீஸோட பீ.ஏ வா இருக்குறவங்க மிஸ்.வசுந்ரா
இதுதாங்க நடந்துது.....
ஷ்ஷப்பா....முடில))
கதவு தட்டப்பட நிமிர்ந்தவன்
"கம் இன்...." என்க உள்ளே நுழைந்தாள் அவன் பீ.ஏ
"என்ன விஷயம் வசுந்ரா....?"
"இன்னிக்கு இன்டர்வீவ் செலக்ஷன் இருக்கு சார்....அத ஆரம்பிக்கலாமான்னு கேக்கலாம்னு..."
"ஓஹ்....மறந்தே பொய்ட்டேன்....
நீங்க போய் அரேன்ஜ்மண்ட்ஸ் பாருங்க....நா ஆர்.கேக்கு மெயில் அனுப்பிட்டு வந்துட்றேன்...."
என்றவன் அவசரமாக மெயிலை தட்டினான்....
((இவனுக்கு தெரிஞ்சா இவனே சொல்லலாம்னு நீங்க யோசிக்கிறது கரக்ட்...பட் இவன் சொல்ல விட்டாதானேங்க...
பயபுள்ள ரகுகிட்ட சத்தியம் வாங்கி வெச்சிட்டான்....))
அவனுக்கு மெயிலை அனுப்பி விட்டு தன் மொபைலை எடுத்து அவனுக்கு அழைக்க அது துண்டிக்கப்படவும் முக்கியமான வேலையில் இருப்பான் போல என நினைத்தவன் எழுந்து கான்ப்ரன்ஸ் அறை நோக்கி நடந்தான்...
லண்டன்.....
இதே நேரம் இரவு....
ஆடிக் களைத்துப் போய் தன் தோள் மீது தூங்கிக் கொண்டு வரும் தன் மகனின் முடியை அடிக்கடி தடவி விட்டுக் கொண்டிருந்தான் ரிஷிகுமார்....
அவன் டல்லாக இருக்கவும் அவன் மனதை மாற்ற தன் மீட்டிங்களையெல்லாம் கேன்ஸல் செய்து விட்டு அவன் சொன்ன இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றான்....
ஓரளவு தேறியவன் நன்றாக விளையாடி களைத்துப் போய் வந்தும் வராததுமாக படுத்தும் விட்டான்.
மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு இன்று யாதவ் கேட்ட கேள்விகளே மீண்டும் மீண்டும் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
"பர்த்டேக்கு மாம் வந்துடுவாங்கன்னு சொல்லுவீங்கல்ல டாட்..... அப்போ இன்னும் டூ டேஸ்ல மாம் வந்துடுவாங்களா?"
ஏக்கமாய் கேட்டிருந்தான்.
ஆம்....இன்னும் இரு நாட்கள் அவள் பிறந்த நாளைக்கு...
அதுவும் யாதவ்வின் பிறந்த நாள் அன்றே தான் அவளதும்....
ஒவ்வொரு வருடமும் பர்த்டே கேக்கை கட் பண்ண முன் வாசலை பார்க்கும் அவனின் ஏக்கப் பார்வைவில் துடித்துப் போவது என்னவோ அவன் தந்தைதான்.....
அந்த பெரிய வீட்டின் முன் காரை நிறுத்தியவன் இறங்கி வந்து அவனையும் தூக்கிக் கொண்டான்.
நேரே தங்களறைக்குச் சென்று அவனை கட்டிலில் கிடத்தியவனுக்கு தன் மகனின் செய்கையில் தன் மனையாளின் பிம்பம் மின்னி மறைய தலையை உலுக்கி விட்டுக் கொண்டான்.
ஆம் அவன் ரிஷியின் ஷர்ட்டை தன் கைகளால் இறுக்கப் பற்றி இருந்தான்!!!
எப்போதும் நடப்பது தான்....
இவன் இப்படி செய்யும் போதெல்லாம் மின்னி மறையும் அவள் பிம்பத்தை மட்டும் ஏனோ அழிக்கவே முடியவில்லை அவனால்.....
விதி!!!!!
அவனுக்கு போர்வை போர்த்தி
விட்டு தலைவருடி முத்தமிட்டவன் எழுந்து ப்ரஷப்பாக சென்றான்.
கொஞ்ச நேரத்திலெல்லாம் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து தனது லேப்டாப் முன் அமர்ந்தவனால் வேலையை பார்க்கவே முடியாமல் போக எழுந்து பால்கனிக்குச் சென்று விட்டான்.
சிக்கரட் ஒன்றை பற்ற வைக்க நினைத்தவனுக்கு மீண்டும் அவனவளின் பிம்பம்....
அவள் கோபத்துடன் இழுத்து வீசியது நினைவில் படற கோபத்தில் வேண்டுமென்றே புகைக்கப் போனவனால் சத்தியமாய் அதை வாய்க்கு அருகில் கூட கொண்டு செல்ல முடியவில்லை என்பதுதான் நிஜம்!!!
அதை தூக்கிப் போட்டு விட்டு வானத்து நிலவை வெறித்தான் காளை....
ஆறு வருடங்கள் கடந்து விட்டது யாவரையும் பார்த்து....
எல்லோருக்கும் வாழ்க்கை அமைந்து விட்டதென்று தெரியும்....
என்ன அவன் அருகில் இல்லை அவ்வளவே....
அவர்களுடனெல்லாம் பேசக் கூடாதென்று இல்லை....
ஆனால்..... அவள் இருக்கிறாளே....
அதனால் தவிர்த்து விட்டான்.
குழந்தை பிறந்த அன்று அவர்களை விட்டு வந்தவன்தான்...
இதோ இன்றுடன் ஆறு வருடங்கள் கடந்து விட்டன... அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்றெல்லாம் அவனுக்கு தெரியாது....தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை....
இன்னும் இரண்டு நாட்களில் அவன் மகவின் பிறந்தநாள்...
அவளதுவும் கூடவே...
இந்த முறை அவனை சமாளிக்க முடியாதென்றே தோன்றியது அவனுக்கு....
அவள் மீதிருக்கும் கோபத்தில் அவளைப் பற்றி சொல்லாமல் மறைத்து வளர்க்க விரும்பவில்லை அவன்....
என்றாலும் உண்மையையும் கூறிவிட வில்லை...
அம்மா வருவார்கள் என்று சொல்லி வளர்க்க அது அவன் மனதில் ஏக்கமாக மாறும் என்பதை அவன் யோசிக்கவே இல்லையே???
"டாட்...." யாதவ்வின் குரல் கேட்க தன்னை மீட்டவன் சட்டென திரும்பிப் பார்க்க அங்கே கண்ணை கசக்கிக் கொண்டு கொட்டாவி விட்டவாறே தூக்க கலக்கத்தில் நின்றிருந்தான் அவன்....
கீழே மண்டியிட்டு கைகளை விரித்து வா என கண்ணசைக்க ஓடி வந்து தன் தந்தையிடம் அடைக்கலம் புகுந்தவன் அவன் தோளிலேயே தூங்கிப் போனான்.
அவன் முதுகை வருடிவிட கொஞ்ச நேரம் அசையாது இருந்து விட்டு திடீரென எழ
"என்னாச்சுடா....ஏன் எழுந்துகிட்ட?" என்றான் பரிவாக...
"டாட் எனக்கு மாம் வேணும்" எனவும் தூக்கிவாரிப் போட்டது ரிஷிக்கு..
"மாம் வருவாங்க கண்ணா....நீ டாட் கிட்ட சமத்தா தூங்கு" தூங்க வைக்க முயன்றான்.
"இல்ல நீங்க பொய் சொல்லுவீங்க...."
"இந்த பர்த்டேக்கு மாம் தான் உன்னோட பெரிய கிப்ட் சரியா.... கண்டிப்பா வருவா... இப்போ நீ தூங்குறியா?" நடக்கப் போவதில்லை என தெரிந்தே பொய் சொன்னான்.
ஆனால் இந்த தடவை விதியின் விளையாட்டில் அவன் சொன்ன பொய் மெய்யாகப் போகிறதென்று அவன் அறிவானா???
"கண்டிப்பாவந்துடுவாங்கல்ல டாட்...?"
"வந்துடுவா கண்ணா....நீ தூங்கு" மீண்டும் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான் அந்த அன்புத் தந்தை....
இராமநாதபுரம்.....
தன் ஆபிஸ் டேபிளில் தலைசாய்த்தை கண் மூடி இருந்தவளின் கண்களிலிருந்து விடாமல் வழிந்து கொண்டே இருந்தது கண்ணீர்.....
"சாரி தேவ்....ரியலி சாரி....உங்கள பாக்கனும் போல இருக்கு தேவ்... எங்க இருக்கீங்க.... இன்னும் எத்தன நாள் தேவ் காக்க வெப்பீங்க....நரக வேதனயா இருக்கு தேவ்.... நா சாகுறதுக்குள்ள ஒரு தடவ உங்கள பாக்க மாட்டேனான்னு இருக்கு தேவ்.... ப்ளீஸ் வந்துடுங்க நீங்க இல்லாம நானில்லன்னு புரிஞ்சுகிட்டேன் தேவ்... எனக்கு உங்க கூட வாழனும்....நீங்க என் பக்கத்துலேயே இருக்கனும் தேவ்...
என் ஆசய தீத்து வெப்பீங்களா?" பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவளிடமிருந்து....
தன் கையிலிருந்த தன்னவனின் போட்டோ ப்ரேமை வருடிக் கொடுத்துக் கொண்டே
"ஐ மிஸ் யூ தேவ்.... ஐ மிஸ் யூ லாட்...." என்றவள் அவன் நெற்றியில் இதழ் பதித்து
"தேவ்...." என ஆழ்மனதிலிருந்து அழைக்க இங்கே தன் மகனை பக்கத்தில் பொட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான்.
தொடரும்.....
15-05-2021.
உங்களது கருத்துக்களை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பா
ரிஷியின் “உயிரோடு கலந்தவள்!” - கருத்துத் திரி
“உயிரோடு கலந்தவள்!” கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
www.srikalatamilnovel.com
Attachments
-
732.5 KB Views: 3
Last edited: