All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீரா செந்திலின் "உன் விழிகளில் நான் தொலைந்தேன்" - கதைத் திரி

Status
Not open for further replies.

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -11



தன்னுடைய மன கட்டுப்பாட்டையும் மீறி.... தன்னோட அக்கா தன்னை விட மூத்தவள் என்பதையும் மறந்து.... வித்யாவை கன்னத்தில் அறைய வைத்து இருந்தது.. வித்யா சொன்ன வார்த்தைகள் .... அதுவரை தங்கையாக நடந்து கொண்டு இருந்த விதுசா.. வித்யா கேட்ட கேள்வியால்.....சட்டென்று தங்களது அன்னை யாழினியாக மாறி அவளை தன்னை மறந்து அடித்து இருந்தாள்.....




மேலும் அதே கோபத்தில்.....தன்னையும் மீறி வந்த ஆத்திரத்தில் அறிவை இழந்தவளாக...விட கூடாத வார்த்தைகளை விட்டாள் “ உனக்கு அந்த பொண்ணோட மோசமான நிலைமையை பார்த்த பின்னும் அவளோட இடத்தில் நீ இருந்தா எப்படி இருக்குமுன்னு கேட்க்குற..... சரி இப்ப உனக்கு அந்த மாதிரி உனக்கு நடந்தால்.... அந்த நிலையில் நீ இருந்தால் நான் என்ன செய்யவேணு தெரிஞ்சுக்கணும் அவோளோ தானே....


அந்த பொண்ணு இடத்தில் நீ இருந்தால்......கண்டிப்பாக உன்னை கொன்னுடுவேன்....உன்னை அப்படி ஒரு நிலைமைக்கு காரணமான, உன்னை ஏமாற்றியவனையும் கொன்னுடுவேன்.... ஏன்னா நான் யாழினி அம்மா வளர்த்த பொண்ணு..... நான் எப்பொழுதும் நல்ல காதலுக்கு எதிரி இல்லை ஆனால் காதல் என்ற பேருல இப்படி அந்த பொண்ணு மாதிரி அசிங்கம் பண்ணுறவுங்கள சும்மா விட மாட்டேன்.. காதலால் நம்ம அம்மா பட்ட கஷ்டம் போதும் நீ இன்னொரு யாழினியா உருவாக வேண்டாம்.... .என்றாள் சற்று ஆவேசமாக....


இது எல்லாமே நான் மட்டும் பேசுற பேச்சு இல்லை இது நம்ம அம்மா யாழினி உயிரோட இருந்து இருந்தால் இதை தான் சொல்லி இருப்பாங்க.....அதுவும் இல்லாம இது உனக்கு மட்டும் இல்லை எனக்கும் சேர்த்து தான் சொல்லுறேன்.. ஆனால் அந்த அளவு நிலைமைக்கு நாம போக மாட்டோம் என்று நான் நினைக்கிறேன்....ஏன்னா அந்த அளவு நம்ம அம்மா நம்மள வளர்க்கவில்லை..... என்று தான் சொல்ல வேண்டிய பதிலை சொல்லிமுடித்தவள் சற்றே ஆவேசம் குறைத்தவளாக.....







அப்பொழுது தான் தனது அக்காவை கவனித்தாள்...தான் இவ்வளவு நேரம் ஆவேசமாக பேசியும்... அதற்கு முன்பு அறைந்த அறைக்கும் தன்னோட அக்காவிடம் இருந்து இதுவரை எந்த ஒரு எதிர்வினையும்.....எந்த ஒரு பதிலும் வராததையும்...








ஆனால் அங்கு தனது தங்கை கையால் அடி வாங்கியவளோ.... தன்னுடைய தங்கையின் ஆவேச பேச்சையும்...கேட்ட பின்பும் எந்த ஒரு பதிலும்... எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல்.... அமைதியாக எதையோ மனதிற்குள் யோசித்து கொண்டு தலை குனிந்து நிற்க....




விதுஷாவோ தன்னோட அக்காவின் இந்த மௌனத்தை பார்த்து...தலை குனிவை பார்த்து.... அப்பொழுது தான் சுயநினைவு வந்தவளாக..... ஒரு வேளை நாம் தான் ஏதோ தவறாக பேசிவிட்டோம் போல... என்று தனது தவறை உணர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல்... அக்காவை அடித்துவிட்டு ஆத்திரத்தில் வேறு தன்னை மறந்து பேசிய முட்டாள் தனமான பேச்சுக்களை நினைத்து.... குற்ற உணர்ச்சியில் ...இனி அக்காவை எப்படி சமாதான படுத்துவது என்று தெரியாமல் கலங்கி நிற்க.....






அங்கு சிறிது நேரம் இருவருக்கும் இடையே ஒரு மௌன போராட்டம் நடந்து கொண்டு இருந்தது....




முதலில் பேசியவள் விதுஷா தான்..... தன்னுடைய தவறை உணர்ந்து.... விதுகா என்ன வார்த்தை சொல்லிடக்கா.... உன்னை பத்தி நீயே இப்படி தப்பா பேசலாமா.... .... உன்னை நீயே தவறாக யோசிக்கலாமா..... அந்த மாதிரியா நம்ம அம்மா நம்மள வளர்த்தாங்க..... சாகும் பொழுது கூட ஒழுக்கமா வாழணுமுன்னு தானே சொன்னாங்கக்கா நம்ம அம்மா.... சத்தியம் கூட வாங்கினங்களே.... அப்படிப்பட்ட அம்மாவுக்கு பெறந்துட்டு இப்படி யாரோ ஒரு பொண்ணு தெரியாம பண்ண தப்பை நீயும் பண்ணினால் எப்படி இருக்குமுன்னு என்கிட்டயே கேள்வி கேட்க்குற..... இப்பவரை அந்த பொண்ணோட நிலைமையவே நினைச்சாலே என்னால தாங்க முடியல....... இப்போ என்னடானா நீயே அந்த பொண்ணு இடத்தில் இருந்தால் எப்படி இருக்குமுன்னு கேட்க்குற..... மனசு வலிக்குதுக்கா........ நம்மள நம்ம அம்மா எப்படி எல்லாம் வாழ வைக்க நெனைச்சாங்கன்னு தெரியாதா என்ன.... சாகும் போது கூட அன்றைக்கே சொன்னாங்களே... அப்படி இருக்கும் பொழுது நீ இப்படி ஒரு தப்பான வழிக்கு போனால் எப்படி இருக்குமுன்னு என்கிட்டவே கேட்டேனே எனக்கு எப்படி இருக்கும் சொல்லு ... அப்படியே மனசு வலிக்குதுகா.... இப்படியே உயிரு போயிடாதான்னு இருக்கு கா...... உன்னை அந்த பொண்ணு மாதிரி பார்க்கவா அம்மா இவ்வளவு நாளா நம்மள கஷ்ட்டப்பட்டு வளர்த்தாங்க சொல்லு..... அதனால் தான் வார்த்தைகளை பொறுக்க முடியாமல் என்னை அறியாமல் உன்னை இப்படி அடிச்சுட்டேன்....அதுவும் இல்லாம ஆத்திரத்தில் அறிவு இல்லாம பேசிட்டேன்..... என்னை மன்னிச்சுடுகா... என்னால தாங்க முடியலக்கா..... என்று விசும்பி விசும்பி அழுக ஆரம்பிக்க.. .



அதுவரை விதுஷா பேச்சை... அவள் அடித்த காரணத்திற்காண விளக்கத்தை அமைதியாக தலை குனிந்து கேட்டு கொண்டு இருந்தவள்.... சட்டென்று தனது தங்கையின் அழுகையை கேட்டு தலை நிமிர்ந்தவள்..... அவளது தங்கையின் அழுகையை தாங்க முடியாமல்...அவள் அருகில் சென்று அவளை அணைத்து ஆறுதல் சொன்னாள்.....



ஏய் விது குட்டி இதுக்கு போய் ஏன்டா அழகுற அக்கா சும்மா இப்படி சொன்னால் நீ என்ன சொல்லுறேன்னு பார்ப்போமுனு சொன்னேன்..... ஆனால் நீ இப்படி அம்மாவா மாறி சட்டென்று இப்படி ஒரு அறை விடுவேன்னு தெரிஞ்சு இருந்தால் சும்மா கூட சொல்லி இருக்க மாட்டேன்.... ஆத்தாடி ஒரு அறை என்றாலும் செம அறை.... ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன் பா என்று தனது அறை வாங்கிய கன்னத்தை தட வியவள் .... மேலும் அப்படியே அம்மாவாவே மாறிட்ட போல அடிக்கிறப்ப..... பேச்சு கூட அம்மா மாதிரி தான்.... எவ்வளவு நாளா இப்படி என்னை அடிக்கனுமுனு ஆசை பட்டியோ தெரியல ... இப்போ நானாகவே வந்து உன்கிட்ட வாய கொடுத்து வாங்கி கட்டிகிட்டேன் போல..... என இயல்பாக பேசி சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்ய........





ஆனால் அடித்தவளால் தான் அதை அவ்வளவு எளிதில் ஏற்று கொள்ள முடியாமல் திணறினாள்....அய்யோ அக்கா என்னை தயவுசெய்து செய்து மன்னித்து விடு....நான் வேண்டும் என்று உன்னை அறையவில்லை... . உன்னை கற்பனையில் கூட அந்த நிலைமையில் வைத்து பார்க்க முடியாமல்....மனசு தாங்காமல் தான் அடித்து விட்டேன் என்று மீண்டும் கதற ஆரம்பிக்க......


அதற்குள் வித்யாவோ தன்னுடைய அன்பு தங்கையை மீண்டும் அணைத்து அவளது கன்னங்களில் முத்த மழை பொழிந்தவள்.... ஏய் விது குட்டி இப்போ என்ன நடந்து போச்சுன்னு இவ்வளவு வருத்தப்பட்டு கதறி அழுகுற..... நான் சும்மா தான் உன்னை சீண்டி பார்க்க நெனைச்சு சொன்னேன்....நீ எப்படி நடந்துக்கிறேன்னு தெரிஞ்சுக்க தான் அப்படி பேசினேன்....இனிமே அந்த மாதிரி பேச மாட்டேன்.... இந்த அக்காவை மன்னிச்சுடும்மா.....




என்மேல நீ வச்சு இருக்க பாசத்தை நினைக்கும் போது எனக்கே ரொம்ப சந்தோசமா இருக்கு தெரியுமா...எனக்கு இப்படி ஒரு தங்கச்சியை கொடுத்த நம்மோட யாழினி அம்மாக்கு தான் நான் நன்றி சொல்லுவேன்... உன்னோட கோபத்தில்.... நீ உரிமையோடு அடிச்ச அடில..... நீ பேசுன பேச்சுல கூட கூட உன்னோட உண்மையான பாசத்தை நான் பார்த்தேன்.... என்றாள் வித்யா...





தன்னோட அக்காவின் பேச்சை கேட்டு நிமிர்ந்த விதுசா..... உண்மையிலே நானும் தான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் கா.... இந்த மாதிரி அக்கா கிடைக்க.....உன்னை விட வயசுல சின்னவ தப்பே பண்ணாத உன்னை திட்டுனதுக்கு.. அடிச்சதுக்கு நியாயமா நீயும் கோபபட்டு என்னை திருப்பி அடிச்சு, திட்டி இருக்கலாம்.. .ஆனால் நீ அப்படி எதுவுமே செய்யாம நான் அடிச்சதுக்கு நீயே நியாயம் சொல்லி கிட்டு சந்தோசமா எனக்கும் சேர்த்து சமாதானம் சொல்லுறியேக்கா..... எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்றாள் விதுஷா....





அதற்கு மேல் பேச்சை வளர்க்க நினைக்காத விதுஷா... இதற்கு மேல பேசினால் தேவை இல்லாத பிரச்சனை வந்து விடுமோ என பயந்து......
சரி சரி இப்படியே நாம ரெண்டு மாற்றி மாற்றி பெருமைபட்டு சந்தோசப் பட்டது போதும்........ இப்போவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு நாளைக்கு வேற நீ ஊருக்கு போகணும்ல..... சீக்கிரம் சாப்பிடுட்டு தூங்கலாம் என்றாள் வித்யா. .



ஆமாம் நீ சொல்லுறது சரி தான் நாளைக்கு ஊருக்கு போறதையே மறந்துட்டேன்..... என்று சொல்லி விட்டு தன்னோட அக்கா கையால் சமைத்த உணவை உண்டு விட்டு அக்கா மடியிலேயே தூங்கினாள்.....


விதுஷா தூங்கும் வரை அமைதியாக இருந்த வித்யா..... தனது தங்கையை மெதுவாக தலையணையில் படுக்கவைத்து விட்டு மெதுவாக எழுந்து...... வாசல் கதவை திறந்து வெளியே வந்தவள்..... வீட்டுக்கு வெளியே இருக்கும் திண்ணை போன்ற அமைப்பில் அமர்ந்து எதையோ யோசிக்க அவளது கண்களில் இருந்து தானாக கண்ணீர் வந்தது... .


வித்யா எதற்காக அழுக வேண்டும்....அதற்கு யாரு காரணம்..... விதுஷாவிடம் வித்யா ஏன் எதையோ மறைக்க வேண்டும் என்பதை விதி தான் சொல்ல வேண்டும்...


இவ்வாறு அன்று தனக்கும் தனது அக்காவுக்கும் நடத்த கடைசி சந்திப்பை நினைவு கூர்ந்தாள் விதுஷா.... ஒருவேளை அன்று நாம் பேசிய வார்த்தைகள் எதுவும் அவளை காயப்படுத்தி விட்டதா? இல்லையே அக்கா கூட எதுவும் கோப படலையே சாதாரணமாக தானே இருந்தாள்..... வேற எதுவும் சொல்ல நெனைச்சுட்டு... நாம எதுவும் சொல்லிடுவோமுனு பயந்து மறைச்சலானு தெரியலையே.... .என்று குழப்பினாள்... .ஆனால் அப்படினா மொத்தத்தில் அக்காவை பாத்து ரெண்டு மாசமா ஆகிடுச்சு.... போனில் பேசி ஒரு மாசம் ஆச்சு..... அவள் தங்கி இருந்த அறையை காலி செய்து அவள் சென்னைக்கு போய் 10 நாள் ஆகிடுச்சு.....


இப்படி என்கிட்டே சொல்ல முடியாத அளவுக்கு என்ன பிரச்சனை அவளுக்கு.... ஏன் இப்படி சென்னைக்கு திடிர்னு போனாள்... அங்க யாரு இருக்காங்க.....ரெண்டு மாசமா என்னை வந்து பார்க்க தோணல முடியல ஆனால் இப்ப சென்னை போய் இருக்கின்றாள் என்றாள் என்ன அர்த்தம் என்று யோசித்தவள்... .


சரி இப்போ யோசிச்சு ஒன்னும் பயன் இல்லை இன்னும் ரெண்டு நாட்களில் கல்லுரி இறுதி தேர்வு வருது.... அதை முடிச்சுட்டு அடுத்து என்ன பண்ணலாமுன்னு யோசிக்கலாம்..... என்று தனக்குள் சொல்லி கொண்டாள்.......


மேலும் அவள் அக்கா வேறு அவள் தங்கி இருந்த அறை உரிமையாளரிடம் சென்னைக்கு வேலை கிடைத்தபடியால் செல்வதாக தெளிவாக காரணம் சொல்லி இருந்ததால்... அவளுக்கு கொஞ்சம் பயம் நீங்கி இருந்தது.......

மேலும் அவள் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் அவளுடன் பணிபுரிந்த பெண்களிடம் கேட்டதில் அவள் எங்கு சென்று இருப்பாள் என்ற ஒரு யூகம் கிடைத்தது......



அவளது அக்காவின் அறை தோழி கவிதாக்கு மீண்டும் அழைத்து அக்காவுடன் பணி புரிந்த பெண்கள் சொன்ன விவரங்களை கேட்டு உறுதி செய்தவள்... மேலும் ஒரு சில விவரங்களும் அவளுக்கு ஒரு நம்பிக்கை தர....அது வரை பொறுமையாக ஒரு மனதாக தேர்வு முடிந்த பின்பே சென்னை போக முடிவு செய்தாள்...


அவள் உடனே சென்று இருந்தாள் கூட அவள் அக்காவை பார்த்து இருக்க வாய்ப்பு கிடைத்து இருக்கலாம் ஆனால் அவள் தேர்வு முடிந்து சென்ற பொழுது அவள் நினைத்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை..... இதோ அவள் சென்னைக்கு வந்து மூன்று மாதம் ஆகி விட்டது....பார்வதி மகளிர் விடுதியில் சேர்ந்து மூன்று மாதம் முடிந்து விட்டது.... அக்காவை பார்த்து 5 மாதம் ஆகி இருந்தது....

அவள் கல்லூரி படிக்கும் பொழுது துணி தைத்து சேர்த்த சேமிப்பும் கரைந்து கொண்டு இருக்கிறது.... யாழினி வங்கி கணக்கில் இருந்த பணம் ஏற்க்கனவே படிப்பு செலவுக்கு செலவு ஆகி இருந்தது... இனி வேலைக்கு போகவில்லை என்றால் சாப்பாடுக்கு மற்றும் ஹாஸ்டல் செலவுக்கு என்ன செய்வது என்று அவள் நினைக்கும் பொழுது தான்.....





அவள் அன்றைய செய்தி தாளில் பார்க்கும் பொழுது அந்த குறிப்பிட்ட.... அவள் இது வரை சேர நினைத்த நிறுவனத்தில் இருந்து ஆட்கள் தேவை என்ற விளம்பரம் வந்து இருந்தது...



அந்த விளம்பரத்தை பார்த்தவளுக்கு ஒரே ஆச்சரியம்.... மற்றும் அதிர்ச்சியாக இருந்தது..... இப்படி கூட விளம்பரம் கொடுக்க முடியுமா என்று யோசித்தாள் அவள்.....
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -12


விதுஷாவும் கடந்த மூன்று மாதங்களாக தனக்கு இது வரை கிடைத்த வித்யா பற்றிய தகவல்களை வைத்து, வித்யா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க அவளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்து பார்த்து விட்டாள்.... பலன் தான் பூஜ்யம்.... பாவம் அவளால் வித்யா இருக்கும் இடத்தை ஒரு துளி கூட நெருங்கவும் முடியவில்லை.... வேற எதுவுமே அவளால் செய்ய முடியவில்லை ......



இதற்கு இடையில் அவளிடம் இருந்த கையிருப்பு பணமும் குறைந்து கொண்டே வந்தது...... இதில் சிறிது நாட்களாகவே அவளது அக்காவை பற்றிய கெட்ட கனவுகள் வேறு வந்து அவளை பயமுறுத்தி.... அதனால் அவள் நள்ளிரவில் எழுந்து அலறி... அவளுடன் தங்கிய மற்ற . ஹாஸ்டல்வாசிகளை எல்லாம் எழுப்பி கலவர படுத்தி இருந்தாள்.....




மேலும் அகிலாண்டேஸ்வரி அம்மா இவளது நிலைமையை பார்த்து இரக்கப்பட்டு.... அவளது வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது...உன்னோட அக்கா எங்கே அவளுக்கு என்னாச்சு...நீ ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என்று அவளுக்கு உதவும் மனப்பான்மையில் கேட்டதற்கு கூட அவளால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை... ஏன்னெனில் உண்மையாகவே அவளுக்கே அவள் அக்காக்கு என்ன நடந்தது என்று சரியாக தெரிந்து இருக்க வில்லை.... எனவே முழுவதும் தெரியாமலே தனது அக்காவை காணவில்லை என்று சொல்வது அக்காவை பற்றிய தவறான எண்ணங்களை மற்றவரது மனதில் உருவாக்கும் ..... அதனால் தான் அவள் அக்காவை பற்றி இதுவரை யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை.... அவளால் ஒன்று மட்டுமே செய்ய முடிந்தது.... அவளது இயலாமையை எண்ணி எண்ணி அவள் அக்காவை நினைத்து நினைத்து அழுக தான் முடிந்தது....



தன்னுடைய அம்மா உயிருடன் இருந்து இருந்தால் தங்களை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் விட்டு இருக்க மாட்டார் என்று நினைக்கும் பொழுது அவளால் அதை தாங்கவே முடியவில்லை..... மேலும் தான் கோபத்தில் கூறிய வார்த்தை தான் இப்படி அக்கா நடக்க காரணமோ.. .என்று குற்ற உணர்வு வேறு அவளை வாட்ட.... தெரியாத ஊரில் இப்படி வந்து மாட்டி கொண்டு.... யாரிடமும் அவளால் எதுவுமே சொல்ல முடியவில்லை.... யாரையும் அவளால் நம்ப கூட முடியவில்லை.....எந்த உதவியும் வாய் விட்டு கேட்க கூட முடியவில்லை....




அதனால் பொறுமையாக யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தாள்.. . இப்படியே போனால் சரி வராது..... இனி ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்தால் தான் இனி வாழ்க்கையை ஓட்ட முடியும்.... தன்னோட அக்காவையும் தேட முடியும்..... இவை அனைத்திற்குமே பணம் வேண்டும்....கையில் பணம் இன்றி ஒன்றும் இயலாது என்று முடிவு செய்தவள்.....



தினமும் தான் தங்கி இருக்கும் ஹாஸ்டல் க்கு வரும் முன்னணி நாளிதழை தொடர்ந்து வாசித்து.... அதில் வரும் வேலைகளுக்கு விண்ணப்பம் அனுப்பி கொண்டு இருந்தாள்.....



அப்படி தான் அவள் எதார்த்தமாக அந்த குறிப்பிட்ட கம்பெனி கொடுத்த விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது.....

அதில் அவர்கள் கொடுத்த விளம்பரம் ஒரு விதத்தில் அவளுக்கு ஆச்சரியத்தையும்... ஒரு விதத்தில் இப்படியும் விளம்பரம் கொடுப்பார்களா என்று தோன்றியது.....


அந்த விளம்பரத்தின் சாரம் இது தான்.... பிரபலமான AAA பேஷன் மேக்கிங் & ஆடை வடிவமைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் பணி புரிய ஆடை வடிவமைப்பாளர்கள் தேவை......


அதில் கூறி இருந்த எதிர்பார்க்கும் தகுதி என்னவென்றால் “வேலை பார்க்க பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மேலும் அந்த பெண்களுக்கு படிப்பு, திறமை மட்டும் போதாது என்றும் மிகவும் ஒல்லியான, உயரமான உடல் அமைப்பும் மிகவும் அழகான தோற்றம் உள்ள திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், சம்பளம் அழகையும் திறமையை பொறுத்து நிர்ணயிக்கபடும் என்று இருந்தது...

பின் குறிப்பு என்று மிகவும் கவர்ச்சியான அழகான உடல் அமைப்பு கொண்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என்று வேறு போட்டு இருந்தது......


இதை பார்த்த பொழுது விதுஷாக்கு தலையில் அடித்து கொள்ள தான் தோன்றியது......இப்படியும் சில மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.. பேஷன் டிசைனர் பணிக்கு அழகு எதற்கு? கவர்ச்சியான உடல் அமைப்பு எதற்கு? இவர்கள் என்ன டிசைனர்க்கு ஆளு எடுக்கிறார்களா இல்லை அவர்களது கம்பெனி விளம்பர மாடல்க்கு ஆளு எடுக்கிறார்களா என்று தான் சந்தேகம் வந்தது... .




மேலும் இதை பற்றி விவரம் தெரிந்து கொள்ள அவளது அறை தோழி ரம்யாவை அணுகி விவரம் கேட்டாள்...





அதற்கு ரம்யாவோ “ என்னடி அழுகுணி அமுக்கனி சொல்லுடி என்ன விஷயம் இன்னைக்கு என்ன உன்னோட காற்று பலமா வீசுது இந்த பக்கம்.. வையெல்லாம் திறந்து பேசுற... என்ன எதுவும் உதவி வேணுமா? இல்லைனா மேடம் எங்கள தேடி வர மாட்டீங்களே....எங்க கிட்ட கூட பேச மாட்டிங்களே... அதான் கேட்க்குறேன் என்று அவளுக்கே உரிய நக்கல் பேச்சில் கேட்க.....




அதற்கு விதுஷாவோ அவளது நக்கலை சிறிதும் கண்டுகொள்ளாமல்..அந்த கம்பெனி விளம்பரத்தை காட்டி..... இந்த மாதிரி விளம்பரம் பண்ணி இருக்கங்களே.....இது உண்மை தானா? ஏன்னா நான் படிக்கும் போதே இந்த கம்பெனி பத்தி கேள்விபட்டு இருக்கேன்..... இது ரொம்ப பிரபலமான கம்பெனி என்றும் இது இந்தியாவில் மட்டும் இல்லாம உலகம் முழுவதும் டாப் கம்பெனி என்றும்.... இதுல வேலை கெடைக்குறது ரொம்ப கஷ்டமுன்னு..... ஒரு தடவை இங்க வேலைக்கு போய்டா வாழ்க்கையில் செட்டில் ஆன மாதிரின்னு என்னோட தோழிகள் சொல்லுவாங்க.. என்னோட தோழிகளின் லட்சியம் கூட அது தான்.. .





எனக்கு வேற சின்ன பிள்ளையில் இருந்தே சிறந்த பேஷன் மேக்கர் ஆகி பிரபலம் ஆகணும்.....நிறைய சாதிக்கணும் என்ற ஆசை லட்சியம் இருக்கு...நான் கூட படிப்பை முடிச்சுட்டு எப்படியாவது இங்க வேலைக்கு சேரலாமுன்னு நெனைச்சு இருந்தேன்.... ஆனால் இவுங்க கொடுத்த விளம்பரத்தை பார்த்தால் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு..... இந்த கம்பெனி மேல ஒரு நல்ல அபிப்ராயம் வர மாடுது.... இப்படி எல்லாமா விளம்பரம் கொடுப்பாங்க.. . ஒருவேளை இங்க பொண்ணுகளுக்கு நல்ல பாதுகாப்பு இல்லையோ...இப்படி அழகு... கவர்ச்சினு இந்த வேலைக்கு தேவை இல்லாததை கேட்டு விளம்பரம் பண்ணி இருக்கங்களே . என்று தனது சந்தேகத்தை கேட்க.....





ரம்யாவோ “ வாடி வா மகளே நல்லா மாட்டுனீயா என்று நினைத்தவள்..... ஏய் லூசு எந்த காலத்துல டி நீ இருக்க..... சரியான பழைய பஞ்சாங்கமா இருப்ப போல..... ஏண்டி அவுங்க எப்படி பிரபலமான கம்பெனி அவுங்க இப்படி விளம்பரம் கொடுக்குறாங்கன்னா அதுல ஏதாவது உள்ளர்த்தம் இருக்கலாமுன்னு கொஞ்சமாது யோசிச்சியா டி..நீயே இவோலோ யோசிக்கிறப்ப... அவுங்க கம்பெனி பேரு கெடுறதை பத்தி அவுங்களே யோசிக்காமையா இப்படி ஒரு விளம்பரம் கொடுப்பாங்க....
உண்மைலயே இதுல ஏதாவது தவறு இருந்தால் இப்படி கொடுப்பார்களா? இது உங்கள மாதிரி பொண்ணுக தைரியத்தை டெஸ்ட் பண்ண கொடுத்த விளம்பரம்.. .யாரு யாரு பயப்படுறாங்களோ அவுங்க வேலைக்கு வர மாட்டாங்க அந்த விளம்பரத்தை பார்த்து தப்பா புரிஞ்சுக்கிட்டு.....

இதுவே தைரியம் இருக்க பொண்ணுக எல்லாம் துணிந்து என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்று வேலைக்கு வருவாங்க.... அந்த கம்பெனி அவுங்களோட நல்ல பேர அவுங்களே எப்படி கெடுப்பாங்க.... இதெல்லாம் புதுமை மதவுங்கள கவர பண்ற யுக்தி என்றாள் ரம்யா...


மேலும் ஒழுங்கா கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி வேலையில் சேர பாரு பட்டிக்காடு மாதிரி யோசிக்காம நாளைக்கு போய்டு இன்டெர்வியூ அட்டென்ட் பண்ண பாரு.... அப்போ தான் நீ வாழ்க்கைல நினைச்சதை சாதிக்க முடியும்.... நல்ல ஒரு பிரபலமான பேஷன் மேக்கர் ஆகி புகழ் அடையாளம்....மேலும் எவ்ளோ நாளு தான் அக்காவை தேடுறேன் ஆட்டுக்குட்டியை தேடுறேனு தெரு தெரு வா சுத்துவ...காசை செலவு பண்ணுவ.... உனக்குன்னு ஒரு லைப் இருக்கு.... அதுக்கு கண்டிப்பா நல்ல வேலை வேணும்.... அதனால கண்ணை மூடிட்டு இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணு என்று உசுப்பேத்தி விட்டாள்....



அவள் சொன்ன அனைத்தையும் விதுஷா நம்பவில்லை என்றாலும் அவள் இருக்கும் சூழ்நிலையில் அவளுக்கு கண்டிப்பாக ஒரு மாற்றம் தேவைப்பட்டது..... அவள் இப்படியே இருப்பது அவள் வாழ்க்கையில் ஒரு வெறுமையை கொடுத்தது..அவள் சென்னைக்கு வந்தது அக்காவை தேடி தான் என்றாலும் அவள் வித்யாவை தேடி தேடி ஓய்ந்து விட்டாள்...... அதனால் அவளுக்கே அவள் ஒரு சிறு இடைவேளை அல்லது ஒரு மாற்றம் கொடுக்க எண்ணியவள் தேர்ந்தெடுத்த வழி தான் வேலை இதில் அன்றாட வாழ்க்கையை நடத்த பணம் வேற தேவை பட்டதால் வேலைக்கு செல்ல முடிவு செய்தாள்.. .


மேலும் அவள் இந்த குறிப்பிட்ட கம்பனிக்கு வேலைக்கு போக நினைத்துக்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது...ஏன்னெனில் அவளது அக்கா பற்றி அவள் அக்கா முன்பு பணி புரிந்த இடத்தில் கேட்டதற்கு வித்யா சிறிது நாட்களாக இந்த கம்பெனியில் சேர்வது பற்றி தான் பேசி கொண்டதாக சொன்னார்கள்...

அதனால் தான் விதுஷாவும் கடந்த மூன்று மாதங்களாக அந்த கம்பெனியில் வித்யா பற்றிய விவரங்களை சேகரிக்க நினைத்தாள்..... ஆனால் அவள் நினைத்தது போல அது அவோளோ சுலபமாக இருக்க வில்லை அவளால் ஒரு கடுகளவு விவரம் கூட பெற முடியவில்லை..... அந்தளவு அந்த கம்பெனியில் பாதுகாப்பு அமைப்பு இருந்தது..... அதனால் தான் அவள் அங்கே எப்படியாவது வேலைக்கு சேர முயற்சி செய்தாள்.. .மேலும் அங்கு யாரோட சிபார்சுளும் பணி அமர முடியாது...கம்பனியின் நேரடி விளம்பரம் வரும் பொழுது மட்டுமே அதன் மூலம் சேர முடியும் என்று அறிந்தவள் அதற்காக தினமும் செய்தி தாள் விளம்பரம் பார்க்க ஆரம்பித்தாள். .


அதன் பலனாக தான் இந்த விளம்பரம் அவள் கண்ணில் சிக்கியது.... ஆனால் அதில் இருந்த விஷயங்கள் கொஞ்சம் தயக்கத்தை கூட்டினாலும் வேறு வழி இல்லை..... அவள் அங்கே உள்ளே வேலைக்கு சென்றாள் தான் வித்யா பற்றி தகவல் கிடைக்கும் இந்த வாய்ப்பை நகர விட கூடாது என்று முடிவு செய்தாள்....... இயற்கையிலே தைரியம் அதிகம் உள்ள பெண் என்பதால் அங்கு என்ன நடந்தாலும்... எதையும் சமாளித்து வித்யா பற்றிய விவரங்களை சேகரித்து. .அவளை கண்டுபிடுக்க வேண்டும் என்ற முடிவுடனே மறுநாள் நடக்க இருக்கும் நேர்முக தேர்வுக்கு தயார் ஆனாள்...












ஆனால் இது தெரியாத ரம்யாவோ தன்னுடன் இருந்த இன்னொரு தோழியிடம் “ பார்த்தியடி இவள எங்க போய் வேலைக்கு போறேன்னு சொல்லுறா..... இனி இவள யாருமே காப்பாத்த முடியாது டி..... அங்க எவ்ளோ அழகு இருக்கோ அவ்ளோ ஆபத்து இருக்கு... இது தெரியாம அங்க வேலைக்கு போறேனுட்டு வந்து நிக்கிறா.... அய்யோ பாவம் என்று போலியாக உச்சு கொட்ட...



அவளது பேச்சை கேட்ட அந்த தோழியோ “ஏண்டி ரம்யா அங்க அவோலோ பிரச்சனை இருக்கும் பொழுது அங்க ஏண்டி இவளை வேலைக்கு அனுப்புற அங்க சரி இல்லைனு தெரிஞ்சும் போக சொல்லுறேனா அவள் மேல உனக்கு என்னடி அப்படி வன்மம் என்றாள்.....



அதற்கு ரம்யாவோ “ ஏண்டி பிரியா இவள் ஹாஸ்டல் வந்ததில் இருந்தே தேவை இல்லாத பிரச்சனை தான்.... இதுல இவள அந்த வார்டன் அம்மா தூக்கி வச்சு ஆடுது... இவளுக்காக நம்மள திட்டுது..... இவளும் அமுக்கினி மாதிரி இருந்து கிட்டு ஒரு வார்த்தை பேசினாளா நம்ம கிட்ட...... சரி பேசாட்டினாலும் பரவாயில்லை அந்த வார்டன் நம்மள திட்டுறப்ப வேண்டாமுன்னு சொல்லி தடுக்க கூட இல்லை. அப்படியே அழுது அழுது நடிச்சு நல்ல பேரு வாங்கிகிட்டு நம்ம நிம்மதியை கெடுக்குறா......
அதுவும் இல்லாம இப்ப மட்டும் தேவைக்கு பேசுறாள் அதான் நல்லா மாட்டிவிட்டேன்... .போகட்டும் நல்லா பட்டா தான் எனக்கு அவ மேல உள்ள ஆத்திரம் போகும் என்றாள் கண்ணில் குருதத்துடன்.....





அப்படி என்ன தான் டி ரம்யா அங்க இருக்கு... ஆபத்துனு சொல்லுற.... மாட்டிவிட்டேனு சொல்லுற..... வேலை அதிகமாக இருக்குமா என்ன,? அப்படி என்னடி இருக்கு அங்க பயப்படுற மாதிரி? என்று கேட்டாள் பிரியா அவளுடன்...



அதுவா அங்க அவளோட மன்மத மச்சான் இருக்காண்டி....அவன் கண்ணில் சிக்குனா அவோளோ தான்.... அங்க வேலைக்கு போன எந்த ஒரு அழகான பொண்ணும் நல்ல படியா திரும்பி வந்ததா சரித்திரமே இல்லை டீ..... அந்தளவு ஆபத்து இருக்கு.... இந்த விளம்பரத்தை பார்த்தாலே தெரியலையா.... அழகு கவர்ச்சினு கேட்டு கொடுத்து இருக்கனே இதுலயே தெரியலையா அவன் லட்சணமும்.... அவன் கம்பெனி லட்சணமும்....பேஷன் டிஸைனர்க்கு எதுக்கு டி அழகு.. கவர்ச்சி.... எல்லாம் அவனோட மன்மத லீலையை காட்ட தான்.... என்றாள் ரம்யா...


அடியே ரம்யா உனக்கு இவோலோ கெட்ட எண்ணம் ஆகாது டீ... பாவம் ஒரு


பொண்ணு மேல இன்னொரு பொண்ணு இரக்க படமா இப்படி புதைகுழிக்குள்ள தள்ளி விடுற...என்ற பிரியா இனி இங்கு இருப்பது சரி இல்லை என்று அங்கு இருந்து நகர்ந்தாள்.... ப்ரியாக்கு ரம்யா தான் நெருங்கிய தோழி என்பதால் அவளால் அவளை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை..... அவளுக்கு இவள் நெறைய நன்றி கடன் பட்டு இருந்தாள்.... மேலும் அவளால் “இனி ஆண்டவன் தான் விதுஷாவை காப்பாற்ற வேண்டும் என்ற கடவுளிடம் மனதார வேண்ட தான் முடிந்தது ... “அந்தளவு ரம்யாவின் மேல் ஒரு பயம் இருந்தது... அவளை எதிர்த்து ப்ரியாவால் எதுவுமே செய்ய முடியாது... இவள் ரம்யா சொன்னதை பற்றி விதுஷாவிடம் ஏதாவது சொன்னால் இவளுக்கு அவள் என்ன தண்டனை கொடுப்பாள் என்று யாருக்குமே தெரியாது.. .




விதுசா இது எதுவுமே தெரியாமல் மறுநாள் தான் செல்ல இருக்கும் நேர்காணலுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களை எடுத்து வைத்து விட்டு... நாளைய இன்டெர்வியூவில் எப்படியாது தேர்வாகி விட வேண்டும்......அங்கு எதற்காக உள்ளே போகிறோமோ அதை சரியாக செய்து அக்காவை பற்றி அறிந்து அவளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் தூங்க சென்றாள்.. .

தொடரும்
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -13







காலை 10 மணி அளவில் விதுஷா அவள் செல்ல வேண்டிய கம்பெனிக்கு சரியான நேரத்தில் சென்று அடைந்தாள்...





அது சென்னையில் உள்ள மிக பெரிய பேஷன் மேக்கிங் கம்பெனி, இந்திய மட்டும் இல்லை உலக அளவில் பல டாப் மாடல்கள் பலரை உருவாக்கிய பெருமை அவர்களுக்கே “AAA பேஷன் மேக்கிங் மற்றும் ஆடை வடிவமைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி, நிறுவனம் ஆகும் ...



பேஷன் டிசைனிங் படிக்கும் ஓவருவருக்கும் இங்கே சேர்ந்து பணி புரிவது ஒரு வாழ்க்கை கனவுனு, லட்சியம் கூட சொல்லலாம்..

அந்த அளவு பெருமை, சிறப்பு வாய்ந்த கம்பெனி அது... அப்படிப்பட்ட கம்பெனி க்கு தான் விதுஷா நேர்காணலுக்கு வந்தது...அங்கே இவளை போல 20000 பெண்கள் வரை வந்து இருந்தனர்...... ஆனால் வேலைக்கு தேவையான ஆட்கள் 20 மட்டும் தான்... அந்த அளவு வேலைக்கு போட்டி இருந்தது..... அந்த அளவு பெயர் பெற்ற கம்பெனி அது....




அந்த கூட்டத்தை பார்த்த விதுஷாக்கு ரொம்ப ஆச்சரியம் அளித்தது..... தான் நேற்று இங்கு வர பயந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது...... இவ்வளவு பேரும் அப்படி ஒரு விளம்பரம் பார்த்தும் வந்து இருக்காங்க என்றால் அப்பறம் யாருக்குமே ஆச்சரியம் தான் அளிக்கும்.... அப்படி என்றால் இங்கு ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது என்று தானே அர்த்தம்..... ஒருவேளை ரம்யா சொன்ன மாதிரி தான் போல .ஏதோ ஒரு புதுமை காக அப்படி ஒரு விளம்பரம் கொடுத்து இருக்கிறார்கள் என்று முடிவு செய்தவள்.






சரி முடிந்த வரை முயற்சி செய்து வேலையில் சேர பார்க்கலாம்.... நமக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும் என்று அவள் நினைத்து கொண்டாள்......





அப்பொழுது அங்கு பல கோடிகள் செலவு செய்து ஒரு விளம்பர படம் எடுக்கம் வேலை நடந்து கொண்டு இருந்தது ...





அவர்களது கம்பெனியை சேர்ந்த பேஷன் டிசைனர் வடிவமைத்த மணபெண்களுக்கான பிரத்யோகமான ஆடைகளுகான, போட்டோ சூட்டிங் நடக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்கள்....



அதில் நடிக்க இந்தியாவில் உள்ள டாப் 10 மாடல்களில் ஒருத்தியான நேகாவுடன் ஒப்பந்தம் செய்ய பட்டு இருந்தது...


விளம்பர படத்தில் பெரும்பான்மையான பகுதி வெளிஊருக்களில் எடுத்து முடித்து இருக்க,
இதற்கு முந்தைய சூட்டிங் கூட ஊட்டியில் நடந்து முடிந்து இருந்தது..
அதனால் மீதம் இருந்த கடைசி பகுதி மட்டும் அன்று அவர்களுடைய கம்பெனில் எடுத்து முடிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க,
அப்பொழுது அங்கு வந்தாள், மும்பை மாடல் அழகி நேகா....நல்ல உயரம், நல்ல உடல் அமைப்பு...நல்ல நிறம்...
ஒரு டாப் மாடல்களுக்கே உரிய அனைத்தும் இருந்தது அவளிடம்...

மொத்தத்தில் ஆளை அசரடிக்கும் ஆள் மயக்கும் அழகு... கவர்ச்சி பாவை.. கர்வம், ஆணவம் நிறைந்த அழகி..


அவள் தான் இன்றைய நடக்கும் சூட்டிங் கில் நடிக்க வேண்டியது ஆனால் அவள் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்தாள்..


அந்த கம்பெனி முதலாளியின் உதவியாளர் (PA) உடன், பிடிவாதமாக, நடிக்க மாட்டேன், குழந்தை போல அடம் பிடித்தாள்...


, ஹலோ மிஸ்டர், நீங்க என்ன சொன்னாலும் இந்த விளம்பரத்தில் இப்ப நான் நடிக்க மாட்டேன், கூப்பிடுங்க உங்கள் அருமை பாஸ, அவரு வராம நான் நடிக்க மாட்டேன், அவருகிட்ட நான் கொஞ்சம் பேசணும் என்று தாம்தூம் குதித்து கத்தி கொண்டு இருந்தாள்... சுற்றி கூடி இருந்து தங்களை வேடிக்கை பார்க்கும் யாரையும் கவனிக்காமல், பிரச்சனை செய்து கொண்டு இருந்தாள்...என்று கூட சொல்லலாம்...



ஹலோ மேடம் கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறத கேளுங்க, நீங்க இப்படி பிரச்னை பண்றது எங்க பாஸ் க்கு மட்டும் தெரிஞ்சா என்ன பண்ணுவாருனு தெரியல,


உங்களுக்கு இன்னும் பணம் எவ்வளவு வேணும்னாலும் வாங்கிக்கங்க ஆனால் சத்தம் இல்லாமல் இந்த விளம்பரத்தை நடிச்சு கொடுத்துருங்க, பாருங்க இங்க எவ்ளோ பேரு நம்மள வேடிக்கை பார்க்குறாங்க...
எங்க பாஸ் க்கு கூட்டமானாலே பிடிக்காது, அதுவும் அவரு முன்னாடியே சொல்லிட்டாரு இன்னைக்கு இந்த சூட்டிங் முடிச்சு இருக்கணும்னு...
இப்ப முடிகளைனா... அவரு என்ன செய்வாருன்னு தெரியல....
உங்களுக்கு ஏற்கனவே உங்க சம்பளம் பல கோடி செட்டில் பண்ணியாச்சு, இருந்தாலும் பரவாயில்ல, நீங்க கேட்க்குற பணத்தை பாஸ் தருவாரு... என்று அவளிடம் பொறுமையாக சொல்லி கொண்டு இருந்தான்... அந்த கம்பெனி முதலாளியின், வலது கையாக இருக்கும் “ கவ் பாய் “ என்று அவனது பாஸ் ஆல் செல்லமாக அழைக்கப்படும் நம்ம கவ்தம்..
அது தான் நம்ம பார்வதி மகளிர் விடுதி வார்டன் அகிலாம்மா பையன் .. “ கவ்தம்...





ஹலோ மிஸ்டர் கவ்தம் “ யாரை பார்த்து என்ன சொல்லுறீங்க “ எவ்ளோ பணம்னாலும் தரீங்களா “ என்னை பார்த்த எப்படி தெரியுது உங்களுக்கு “ என்கிட்டே இல்லாத பணத்தையா நீங்க கொடுக்க போறீங்க...


எனக்கு இப்போது பணம் பிரச்சனை இல்லை, உங்க பாஸ் தான்.... பிரச்சனை, என்று வாய்க்குள்ள முனகியவள்..
சாரி “உங்க பாஸ் தான் என்கிட்டே நான் எதிர்பார்த்த மாதிரி நடக்கவில்லை “ அது அவருக்கே தெரியும் என்று அழுத்தி சொன்னாள்...
இதை கேட்க்கும் விவரம் தெரியாதவர்களுக்கு அவள் மிக சாதாரணமாக சொன்னதாக தெரியும் ஆனால் இதில் உள்ள உள்ளர்த்தம் மற்றும் அவளது நோக்கம் புரிந்த “ கவ்தம்” மனசுக்குள் இன்று இவள் எதிர்பார்க்கும் நபர் வந்த பின்னர், பாவம் “என்ன நடக்குமோ” என்று பயந்தான்.. ( அவன் யாருக்காக பாவம் பார்த்து பயப்படுகிறான் என்று போக போக புரியும் )



அவனும் எவ்வளவோ அவளுக்கு எடுத்து சொல்லி போராடி பார்த்தான் அவள் கொஞ்சம் கூட காதில் வாங்கவே இல்லை, சொன்னதயே சொல்லி கத்தி கொண்டு இருந்தாள் .

ஆஹா... இந்த பொண்ணு “ நம்ம பாஸ் குணத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டே அவருகிட்ட வம்பு பண்ண பார்க்குதே...
.
சிங்கதோட குகைக்குள்ள போய்ட்டு “ சிங்கத்தை பார்த்து “ ஹொவ் ஆர் யூ னு “ கேட்க்குறாளே இந்த பொண்ணு,...என்று நினைத்து மனதுக்குள்ள புலம்பியவன்,
தன்னோட பாஸ் நம்பர் க்கு அழைக்க அது எடுக்க படாமல் ரிங் ஆனது...
அய்யயோ இவரு வேற போன் எடுக்க மாட்டேன் என்கிறாரே... என்று நினைத்து கொண்டு இருக்க .
அவள் போட்ட சத்தம் என்பதை விட காட்டு கத்தலில் “ அந்த கம்பெனியில் வேலை பார்ப்பவர் முதல் புதிதாக வேலைக்கு சேர வந்து இருந்த எல்லாருமே அங்கு கூடி வேடிக்கை பார்க்க.... அதை பார்த்த கவ்தம் “ செத்தான் டா சேகர் “ சும்மாவே திட்டுவரு இப்போது பார்த்த கொல்ல போறாரு... என்று நினைத்தான்
அப்பொழுது அந்த கம்பெனில வாசலில் சத்தம் இல்லாமல் ஒரு கார் ஒன்று வந்து நின்றது...
அதில் வந்து இறங்கியவனை சின்ன குழந்தை கூட பார்த்த உடனே சொல்லிவிடும் “இவன் தான் இந்த கம்பெனி முதலாளி என்று” அப்படி ஒரு தோற்றம்... லுக்குனா லூக்கு அப்படி ஒரு ராயல் லூக்கு...
பேரழகிகளை கூட மயக்கும் பேரழகன் அவன்....
ஹீரோவோட அழக பற்றி இன்னொரு நாள் சொல்லுறேன்....
காரில் இருந்து இறங்கியவன் , காவளா ளிக்கிட்ட காரை பார்க் செய்ய சொன்னவன்...
அங்கு கூடி இருக்க கூட்டத்தை பார்த்து கொண்டே மிக நிதானமாக கெளதம் அருகே சென்றான்..
என்ன கவ்தம் இங்க என்ன பிரச்சனை “ ஏன் எல்லாரும் இங்க கூட்டமா நிக்கிறிங்க என்று கேட்டான்...





தன்னோட பாஸ்ஸின் கவ்தம் என்ற அழைப்பிலும்..
நிதானமான நடையிலே , பாஸுன் தற்போது உள்ள மனநிலையை, குணத்தை, புரிந்து கொண்டவன்,


இப்பொழுது இங்கு என்ன நடக்க போகுது என்று புரிந்து கொண்டவன்.. விஷம சிரிப்புடன் வேடிக்கை பார்க்க தயார் ஆனான்..அந்த கடமை தவறாத PA கவ்தம்....



( தன்னோட பாஸ் எப்ப எப்படி நடப்பாரு, பேசுவருனு என்று எல்லாதையும் ரொம்ப நல்லா தெரிஞ்சு வச்சு இருபவன் தான் ஒரு நல்ல PA வா இருக்க முடியும் “ இதை சொன்னவர் வேறு யாருமல்ல நம்ம கவ் பாய் தான் )



அது வந்து பாஸ் என்று... இழுத்தவன், நடக்கும் பிரச்சனையை தனது பாஸ் க்கு மட்டும் கேட்க்கும் படி தெளிவாக சுருக்கமாக சொல்ல..


.
என்ன நடந்து இருக்கும் எதனால், இந்த மாடல் நேஹா எந்த நோக்கத்துடன் இப்படி நடந்து கொள்கிறாள், இவள் இப்படி செய்வதன் நோக்கம் என்ன என்பதை சட்ரென்று புரிந்து கொண்டவன்...


அவளிடம் வந்து “ ஹாய் மிஸ்.....உங்க பேரு சரியா தெரியல... ம்ம்ம் ஹான் என்று யோசித்தவன், சாரி உங்க பேரு நேஹா தானே என்று அவளை தெரியாது போல கேட்க... ஓகே வாங்க நேஹா எதுனாலும் என்னோட MD ரூம்ல போய் பேசலாம்...


எதுக்கு இவ்வளவு பேருக்கு முன்னாடி பிரச்சனை பண்றிங்க என்றான் ...



இதை கேட்ட நேஹா சற்று முகம் சுருங்கியவள், தன்னோட முகத்தை சட்டென்று அழகான பாவனையில் மாற்றியவள், ஓ ஓ சாருக்கு என்னோட பேரு கூட நியாபகம் இல்லைல.... ஆமா நீங்க எப்போவும் என்னை பேரு சொல்லி கூப்பிட்டது இல்லைல அதான் மறந்துடிங்க போல..



நீங்க எப்பவும் நாம ஒண்ணா இருக்கப்ப ஆசையா கூப்பிடிங்களே, நாம அன்னைக்கு ஊட்டில ஒண்ணா ஒரே ரூம்ல நெருக்கமாக இருக்கப்ப “பேபி” “அழகி” னு கூப்பிடுங்களே அதை நெனைச்சு கிட்டே என்னோட பெயரை மறந்துடிங்க போல...என்றவள்
அவனுடைய காதருகில் “அவளது உதடுகள் உரசும் படி “ ஒரு நைட் குள்ள என்னை மறந்துடியா “ டார்லிங்”, நான் அதுக்குள்ள உனக்கு போர் அடிச்சுட்டேனடா” என்று கேட்டாள் மயக்கும் ஹஸ்கி குரலில்...



தன்னை சுற்றி இருக்கும் கூட்டத்தை மறந்து, தான் ஒரு பெண் என்பதை மறந்து...தான் ஒரு ஆணுடன் இருந்த அந்தரங்கத்தை இவ்வளவு பேரு மத்தியில் போது இடத்தில் சொல்லும் இவள் எப்படிபட்ட பெண்ணாக இருப்பாள் என்பதை யோசித்தவன், அவள் இப்படி பேசுவதின் நோக்கம் புரிய....


அவள் அருகில் நெருக்கமாக சென்றவன், அவளை மேலும் கீழும் அளவிட்டவன்.. அவள் அணிந்து இருந்த ஆடை அவளது ஒவ்வொரு உடல் அழகையும், அமைப்பையும் தெளிவாக காட்ட,


அவளும் அவனை ஒரு மயக்கும் பார்வை பார்க்க, பதிலுக்கு அவளை, அவளது நோக்கம் புரிந்தவன் போல,
அவளை ஒரு வசீகரமான பார்வை பார்த்தவன், முதலில் அவளது நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கி விட்டான்... அவனுடைய பரிசதில் தன்னையே மறந்து நின்றவளது, தோல்பட்டைகளை தன்னுடைய இரும்பு கரங்களால் அழுத்தி பிடித்தவன் அவளுடைய இதழ் நோக்கி குனிந்தான்...
சுற்றி தங்களை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை மறந்து...
அவளும் அவனது இதழ் ஓட்டறலுக்கு எதுவாக கண்களை மூடி, அவனிடம் வந்த பிரத்தியோக நறுமணத்தில் மயங்கி நின்றாள்... அந்த பாவை...


விழிகள் தொலையும்......












 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -14


அவன், அவள் இதழ் நோக்கி குனிய... . அவளும் அவனுக்கு ஏதுவாக......அவனது செய்கைகளுக்கு தான் உடன்படுவதாக அறிவிப்பது போல... தான் ஒரு பெண் என்ற, வெட்க்கதை விட்டு, தங்களை சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை கூட மறந்து... அவளுடைய இரு கைகளை கொண்டு அவனது கழுத்தை சுற்றி எவ்வளவு நெருக்கமாக நின்று அணைக்க முடியுமா அந்தளவு அவனிடம் மயங்கி அணைத்து இருந்தாள்.... அந்த மும்பை மாடல் நேஹா..





அவள் எதிர்பார்த்த எல்லாம் இதோ நடக்க போகிறது... அவள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தருணம்...
திட்டம் பொட்டு காத்து இருந்த தருணம் இது தான்...


எதற்க்காக இவ்வளவு நாளாக ஏங்கினாலோ.... அதற்க்கான அர்த்தம் கிடைக்க போகிறது....


இவ்வளவு நாட்களாக தங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசிய உறவுக்கு இப்பொழுது ஒரு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க போகிறது....


தன்னுடன் யார்க்கும் தெரியாமல் “ தனது இரவுகளில் தன்னுடன் கூடி கழித்து, தன்னோடு கலந்து அவளது அந்தரங்கங்களை அலசி ஆராய்ச்சி செய்தவன், அவளது இளமைக்கு சவால் விட்டு.... அவளை அடக்கி ஆண்டவன்.... தன்னை ஒவ்வொரு முறையும் சொர்க்கத்துக்கு அழைத்து சென்றவன்.... அவளை அணுஅணுவாக துடிக்க விட்டு அவளை சந்தோசத்தில் திளைக்க வைத்து அவளை ஆட்க்கொண்டவன்.. அவளது உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் அவனது ஒரே ஒரு முத்தத்துக்கு ஏங்கியது அவள் மட்டுமே அறிவாள்....



அவன் இல்லாத இரவுகளை அவளுக்கு இம்சை இரவுகளாக... தூங்காத இரவுகளாக மாற்றியவன்.... அவளது உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் அவனை எங்கே என்று தேடியது....



.அவள் அவனுடன் கூடி கழித்த முடிவில்லா இரவை எல்லாம் எண்ணி எண்ணி ஏக்கம் கொள்ள செய்த கள்வன் .... மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தோன்ற செய்தவன்....

இந்த உலகத்தில் உள்ள கோடானகோடி அழகிகளை எல்லாம் தன்னோட ஒற்றை கன்னக்குழி சிரிப்பால் அடிமை ஆக்க கூடிய ஆணழகன்.....


கோடான கோடி சொத்துக்களின் அதிபதி... பேஷன் உலகத்தின் முடி சூடா மன்னன்....


பேஷன் உலகத்தில் உள்ள அனைவராலும் “பேஷன் மேக்கிங் கிங் “ என்று அழைக்கபடுபவன்.....




பல சிறப்புகளை ஒன்றாக குத்தகைக்கு எடுத்த “ பேரழகன் “...
ஆண்களே ஒரு நிமிடம் திருப்பி பார்க்க வைக்கும் வசீகரன்.... உலக கோடிஸ்வரிகள் எல்லாம் இவனோட ஒரு நாளாவது வாழ மாட்டமோ... என்று எங்கும் பேரழகன்....



அப்படிபட்டவனின் இதழ் முத்தம்.... தனக்கு இப்படி பல பேர் முன்னிலையில், கிடைப்பது என்றால் சும்மாவா.... தான் போட்ட பல நாள் திட்டம் பலிக்க போவதை நெனைத்து “ நேஹானா கொக்கா “... என்று தன்னை தானே மெச்சினால் அந்த பாவை...



ஆஹா... என்ன ஒரு நறுமணம்... இவனது மேல் இருந்து வரும் பிரத்யோக வாசனை நாளுக்கு நாள் மாறி கொண்டே இருக்கிறதே.... என்ன தான் மாறினாலும் ஒவ்வொன்றும் ஒரு விதம் தான்...... என்று நினைத்து கொண்டு அவனது இதழ் ஒற்றலை எண்ணி இவள் மயங்கி நிற்க்க....



அவனோ... அவளை தனது இரு கைகளால் அழுத்தி பிடித்து...அவனது இதழ்களை... அவளது இதழ் அருகில் கொண்டு சென்று... அவனது மூச்சுகாற்றை அவள் முகத்தில் செலுத்தியவன்....


அவனை இருக்கமாக கட்டிக்கொண்டு.... தன்னை மறந்து அவன் இதழ் முத்தத்தை எண்ணி மயங்கி... குலைந்து.... இருந்த...நேஹாவை யாருமே எதிர்பார்க்காத நேரம் சட்டென்று... பிடித்து தன்னிடம் இருந்து பிரித்து கீழே தள்ளினான்...


ஏய் லுக்... நீ எல்லாம் ஒரு பொண்ணாடி... எந்த பொண்ண இருந்தாலும், எப்படி பட்ட பெண்ணா இருந்தாலும், தப்பான பொண்ணா இருந்தாலும்... சரி... தனக்கும் ஒரு ஆணுக்கும் அந்தரங்கமா நடந்த விஷயத்த... அவுங்க கணவன், மனைவியா இருந்தாலும் கூட இப்படி பப்ளிக்கா எல்லாருகிட்டயும் சொல்ல மாட்டாள் ..



ஆனால் நீ வெட்கமே இல்லாம ஒரு படி மேல போய்.....
உன்னோட அந்தரங்கதை, வெளிய சொல்லுறது இல்லாம.....என்னை கட்டிபுடிச்சு எல்லார் முன்னாடியும் என்கிட்டே கிஸ் கேட்டுட்டு மயங்கி நீக்குற...



சரி நான் தான் உனக்கு இவுங்க எல்லாரும் முன்னாடி உன்னை தொட்டு கிஸ் கொடுக்க வந்தேன்.... ஒத்துகிறேன்... ஆனால் நீ நல்லா பொண்ணா இருந்திருந்தால்.... சாரி தப்பா சொல்லிட்டேன்... உன்கிட்ட போய் நான் நல்ல பொண்ணுக்கு உரிய குணத்தை எதிர் பார்க்க கூடாது மறந்துட்டேன்...


ஒரு சராசரி பொண்ணா இருந்த கூட... அவள் என்ன பண்ணி இருப்ப ... நான் அவ பக்கதுல வந்து நினைப்பாவே தள்ளி நின்னு இருப்பாள் ... அவளை இவ்வளவு பேருக்கு முன்னாடி என்னை தொட விட்டு இருக்க மாட்டாள்...


அதுவே ஒரு நல்ல பொண்ணா இருந்தாள்... என்ன செஞ்சு இருப்பாள் தெரியுமா “ இந்நேரம் அவகிட்ட “பளார்”என்று ஒரு அறை வாங்கி .... நீ எப்படி கீழே விழுந்து கெடக்குறியோ.. அது மாதிரி என்னை விழ வச்சு இருப்பாள்..


அப்படினா நீ நல்லா பொண்ணும் இல்லை... சராசரி பொண்ணும் இல்லை.... ஏன்னா நீ எப்ப உன்னை தொட்டு என்னை கிஸ் பண்ண...இவ்வளவு பேருக்கு முன்னாடி மயங்கி நின்னியோ.... அப்பவே நீ ஒரு பொண்ணு இல்லைனு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும்...



எங்களோட விளம்பரத்துக்கு நடிக்க எங்களுக்கு பொண்ணு தான் வேணும்.... இப்போது நடந்த விஷயங்கள் மூலமா நீ ஒரு பொண்ணு இல்லைனு நிரூபணம் ஆகிடுச்சு....


அதனால் உன்னோட எங்க கம்பெனி உன்கூட போட்ட ஒப்பந்தம் இப்போவே இந்த நிமிஷமே ஒரு முடிவுக்கு வருது....


அதனால் நீ இங்க ஒரு நிமிஷம் இருக்க கூடாது..... வெளிய போடி...


உன்னை கழுத்தை புடிச்சு வெளிய தள்ளுறதுக்குள்ள, என்று விட்டு நகர்ந்தவனை....


ஒரு நிமிஷம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் .. நேஹா...



இவள் இன்னும் இங்க இருந்து வெளிய போகலையா... கௌத ம்.... என்று அவனை கூப்பிட....திருப்பினான்.
நேஹாவோ “ஒரு நிமிஷம் நான் சொல்லுறத கொஞ்சம் கேளுங்க... என்றவள்...

அவன் அனுமதி அளிக்கும் முன்பே...
நீங்க நெனைச்சா கூட என்னை வெளிய அனுப்ப முடியாது...


அப்படி ஒரு அக்ரீமெண்ட் போட்டு இருக்கேன்... அப்படி ரத்து பண்றத இருந்தா எனக்கே நஷ்ட்ட ஈடு பல கோடி கொடுக்கணும்..


அப்பறம் பல கோடி செலவு பண்ணி இந்த விளம்பரம் ஒரு அளவு என்னை வச்சு எடுத்தாச்சு... இன்னும் கொஞ்சம் தான் பாக்கி...


இனிமேல் நீங்க புதுசா மாடல் பொட்டு எடுத்தாலும் மேல பல கோடி செலவு ஆகும்....



அப்படியே எடுக்குறதா இருந்தாலும்... என்னோட அளவுக்கு.....அழகா, திறமையா, அமைப்பாக.....யாரும் கிடைக்க மாட்டாள் அது உங்களுக்கே நல்லா தெரியும்... என்ற ஒரு விஷம சிரிப்புடன் சொன்னாள்...


அதனால் இப்ப நீ என்ன சொல்ல வர அதை சீக்கிரம் சொல்லிட்டு... மரியாதையா போய்டு....
அதனால் என்ன சொல்ல வரேன்னா.....
காதல் என்றால் ஊடல், கூடல் ரெண்டுமே இருக்கும்.... நீங்க இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன பேசினதை நான் பெரிசாகவே எடுத்துக்க மாட்டேன்....ஏதோ கோபத்துல டென்ஷன்ல பேசினதா நெனைச்சுகிறேன்...



எனக்கு தேவை நீங்களும், உங்க காதலும், உங்க அன்புடன் மட்டும் தான்.. என்னை நானே வெறுப்பேனே கூட உங்களை நான் வெறுக்க மாட்டேன் டார்லிங்.... அதனால நானே இந்த விளம்பரத்த நடிச்சு கொடுத்துடுறேன்.... என்று கொஞ்சினாள்..

ஓஓஓஓ என்ன ஒரு அன்பு அக்கறை என்மேல... என்மேல நீ வச்சு இருக்கேன்னு சொல்லுற உன்னோட உண்மையான காதல் மேல....



எல்லாம் ஓகே தான்.நான் இவ்வளவு பேசியும், அசிங்க படுத்தியும், திரும்ப நானே விளம்பரத்துல நடிக்கிறேன் என்று சொல்லிட்டு இன்னும் வெட்கம் இல்லாம... வெளிய போடினு சொல்லியும்... போகம இருக்கியே....உன்னை எல்லாம் என்ன பண்ணுறதுனே எனக்கு தெரியலடி....



இப்ப என்ன உனக்கு கவலை.... எனக்கு உன்னை மாதிரி, உன்னோட அளவு அழகான ஒரு மாடல் கிடைக்க மாட்டாள்...என்பது... அப்படி தானே.... என்று சொல்லி விட்டு தன்னை சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை ஒரு நிமிடம் நோட்டம் விட்டவன்.... .



ஹேய் யூ... கம் ஹியர் .... என்று தங்களை இதுவரை வேடிக்கை பார்த்த கூட்டத்தில் ஒருத்தியை நோக்கி ஒரு விரல் நீட்டி அழைத்தான்.... அந்த பெண்னோ... யாரையோ அழைக்கிறான்... எனக்கு என்ன வந்தது என்பது போல நின்றவள்....
மீண்டும் அவன்.... அவள் பக்கம் கைகாட்டி வா என்று கூப்பிட... அப்பொழுது அவள் பக்கதில் இருந்த பெண் “சார் என்னையவா கூப்பிடுங்க என்று முன்னாடி போக...
ஓ ஓ சாரி மிஸ்... நான் உங்கள கூப்பிடவில்லை... உங்க பக்கத்துல இருக்காங்களே.... அவுங்கள... என்றவன்... ஹேய் ரெட் கலர் சுடிதார்... உன்னை தான் கூப்பிட்டேன்.... இங்க வா என்று கூப்பிட...அது வேறு யாருமல்ல நம்மோட கதையின் நாயகி விதுஷா தான்.....



அவளோ அதுவரை மனதுக்குள் “அவன் என்னடானா “ அந்த மாடல் கூட ஊரு முழுசும் சுத்திட்டு அவளை யாருன்னே தெரியதுனு சொல்லுறான்..அந்த மாடல் நேஹா என்னடானா அவனோட காதலி நான் தான்னு சொல்லிட்டு நீக்கிறாள்... அய்யோ கடவுளே இன்னும் ரெண்டு பேரும் என்னென்ன கொடுமை செய்ய காத்து இருக்கங்களோ தெரியலையே .....


இது எல்லாம் தெரியாமல்
நான் வேற தெரியாத்தனமா இங்க இன்டெர்வியூ நடக்குதுன்னு....ஏதோ ரம்யா சொன்னாள் ரம்பா சொன்னான்னு.... நல்ல கம்பெனி என்று புத்தி கெட்டு வந்தது ரொம்ப தப்பா போச்சே..... அடியே ரம்யா உன்னை வந்து வச்சுகிறேன்....என்று கூட்டத்தில் புலம்பி கொண்டு இருந்தாள் விதுஷா ....

இன்னும் என்ன என்ன கொடுமையை இங்க இன்னைக்கு பார்க்க போறமோ.... என்று...மனதுக்குள் திட்டினாள்...
அப்பொழுது வரை அவள் மனதுக்குள் திட்டி அர்ச்சனை செய்து கொண்டு இருந்தவனே. .. திடீரென்று அவள் இருந்த பக்கம்.திரும்பி ..அவன் யாரையோ கை நீட்டி அழைக்க... கடைசியில் அவன் அதுவரை கூப்பிட்டது தன்னை தான் என்றும், அங்கு கூடி இருந்த கூடத்தில் இருந்த பெண்களில் அவன் கை காட்டிய இடத்தில் தான் மட்டுமே ரெட் சுடிதார் பொட்டு இருந்ததை அப்பொழுது தான் கவனித்தாள் நம்ம விதுஷா ...



அய்யயோ ஆத்தாடி மாரியாத்தா... இப்ப இவன் எதுக்கு நம்மள கைய காட்டி கூப்பிட்றான் “ ஒரு வேளை அந்த மாடல் நேஹாவை எதுவும் நாலு அடி போட்டு விரட்ட சொல்லி என்ன கூப்பிடுறனோ....
என்னை பார்த்த அடியாள் மாதிரியா இருக்கு.... என்று யோசித்து கொண்டே நின்ன இடத்திலேயே விதுஷா அசையாமல் இருக்க...


அவன் அவ்வளவு நேரம் கூப்பிடும் வராமல் நிற்பவளை பார்த்து.... ஏய் பொண்ணு உன்ன தான்... உனக்கு காது கேட்கத்தோ... இவளோ தடவ கூப்பிடுறேன் வர மாட்டுற... இப்போது இங்க நீ வரியா இல்லை நான் வந்து உன்னை தூக்கிட்டு வரவா.... என்று மிரட்ட..


அய்யயோ இவன் செஞ்சாலும் செய்யவான்... என்று பயந்து அவன் அருகில் போய் விதுஷா நிற்க ..



இங்க பாருங்க எல்லாரும்... இப்போ இனிமேல் நாங்க எங்க கம்பெனில எடுக்க போற விளம்பரத்துக்கு இவுங்க தான் மாடல்...இனிமே எங்களுக்கும் எங்க பழைய மாடல் நேஹா கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.... என்று அறிவித்தவன்....


பிறகு நேஹாவிடம் திரும்பி,.... ஓகே மிஸ்... நேஹா... இப்போது உங்க பெரிய கவலை அதான்... உங்களுக்கு பதிலா உங்க அளவு ஒரு மாடல், எங்க கம்பெனி விளம்பரத்துல நடிக்க மாடல் கெடைக்காது என்று சொன்னிகளே அந்த கவலை இப்போது தீர்ந்து இருக்குன்னுனு நான் நினைக்குறேன்.... வேணும்னா எங்க மாடல் எப்படி இருக்காங்கனு? உங்க அளவு அழகா இருக்கங்களானு கொஞ்சம் நல்லா பாருங்க.. என்று சொல்ல...
அப்பொழுது தான் தனக்கு பதிலாக நடிக்க அப்படி அவ்வளவு எளிதாக மாடல் கெடைக்காது என்றும், அப்படி கிடைச்சாலும் என்னோட அழகுக்கு யாரு இருக்க போறாளுக... கடைசியா இவன் என்கிட்டே தான் வர போறான் என்று அவள் நினைத்து...
அந்த புது மாடல் என்று அவன் தேர்ந்து எடுத்த விதுஷாவை பார்த்து... நேஹா மயங்கி விழாத குறை தான்....


அய்யயோ இப்படி கூட அழகிகள் இருக்கங்களா? வேர்ல்ட் லெவல் டாப் மாடல் நான்... நானே மேக் அப் போட்ட தான் ரொம்ப அழகா இருப்பேன்... இவ என்னோடனா எந்த ஒரு மேக் அப் இல்லாமலே என்னையவே மையக்குற... இவன் மயங்குறதுல என்ன ஒரு ஆச்சிரியம் இருக்க போகுது...


இனி இவ கிட்ட யாருமே போட்டி போடுறது கஷ்டம் தான்... அந்த அளவு பேரழகி இவள்..


இவனுக்கு மட்டும் கழுகு கண்ணு போல.. இவ்வளவு பேரு இருக்க கூட்டத்துல.. எப்படி இவள பார்த்தான்... கண்டுபிடிச்சான்...



இனி அவன் வெளிய போடின்னு சொல்லுறதுக்கு முன்னாடி ஓடிடனும் என்று நேஹா நினைக்க...



நேஹாவை சொடக்கு போட்டு அழைத்தவன்...
ஓகே.... நேஹா நீங்க வந்த வேலை முடிஞ்சு போச்சு... இப்போது நிம்மதியா நீங்க கவலை இல்லாம வெளிய போகலாமே... என்று வாசலை காட்ட.... உன்னை என்ன பண்றேன் பாரு என்பது போல அவனை முறைத்து விட்டு கோபத்துடன் வெளியேறியது அந்த அடிபட்ட பாம்பு நேஹா...



காவ்தம்... நம்ம வக்கீலுக்கு போன் பண்ணி நேஹா வோட போட்ட அக்ரீமெண்ட் கான்செல் பண்ண சொல்லு இதனால் எவ்ளோ பணம் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை சொல்லு... அப்படியே புது மாடல் இவங்களோட பேருக்கு அக்ரீமெண்ட் ரெடி பண்ண சொல்லு.. குயிக்... இன்னும் ஒன் ஹவர்ல...சூட்டிங் ஸ்டார்ட் பண்ணனும்... என்று அவனை விரட்டினான்...


அப்பொழுது காவ்தம் நகராமல் இருக்க... என்ன என்பது போல இவன் பார்க்க...


பாஸ்... அவுங்க பேரு வேணும்.... அக்ரீமெண்ட் போட... வக்கீல் சார் கேட்டாரு...



ஓஓஓஓ என்று நியாபகம் வந்தவள்... சாரி மிஸ்... நீங்க மிஸ் தானே... என்று கேட்க......


ம்ம்ம்ம் இப்போதுவது என்னை கேட்கனுமுன்னு தோணுச்சே உங்களுக்கு.... ஓகே இப்ப யாரை கேட்டு என்னை உங்க விளம்பர மாடல்னு எல்லாருகிட்டயும் சொன்னிங்க....என்று விதுஷா கேட்க...



அதற்கு அவன்... எதுக்கு உங்க கிட்ட கேட்கணும்.... நீங்க இங்க வேலைக்கு தானே வந்திங்க... இப்போது வேலை கிடைச்சதுக்கு... நீங்க தான் எனக்கு நன்றி சொல்லணும்... ஏன்னா இங்க வேலை கெடைக்குறது அவோளோ ஈசி இல்லைனு இங்க கூடி இருக்கங்களே அந்த கூட்டத்தை பாருங்க தெரியும்...


அவன் சொல்லுவது உண்மை தான்... அங்கு இருக்கும் காலி இ டம் 20 தான்.. ஆனால் இன்டெர்வியூக்கு வந்தது 20000 பேர் ... அவ்வளவு முக்கியமான வேலை அது.... அப்படிப்பட்ட பெயரும் புகழும் கொடுக்க கூடிய கம்பெனி அது...


ஓகே நீங்க சொல்லுறது புரியுது எனக்கு... ஆனால் நான் இன்டெர்வியூக்கு வந்தது “ FASHION DESIGNER “ வேலைக்கு...


நீங்க என்னை செலக்ட் பண்ணது உங்க கம்பெனி விளம்பர மாடல் க்கு... என்னால எல்லாம் அதெல்லாம் முடியாது...என்னை விட்டுடுங்க ப்ளீஸ்...

.
நான் போறேன்.... உங்க கம்பெனி வேலையும் வேணாம், ஒன்னும் வேண்டாம் எனக்கு.... என்று வெளியே கெளம்பியவளது கையை பிடித்து நிப்பாட்டி.... நீ நடிக்கிற அவோளோ தான்....

.

என்றவனை.... கண்களில் மிரட்சியுடன் பார்த்தாள்...விதுஷா
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -15




ஏதோ பண பிரச்சனை தீரும் என்று நினைத்து வேலைக்கு வந்தால் இங்கே அதை விட பெரிய பிரச்சனை அல்லவா இவன் உருவாக்க பார்க்கிறான்.... என்று நினைத்தவள்... இனி ஒரு நிமிடம் கூட இங்க இருக்க கூடாது என்று நினைத்த விதுஷா....


அவனிடம் நீங்க என்ன சொன்னாலும் நான் இதுல நடிக்க மாட்டேன்...முடியாது என்று சொல்லிவிட்டு.... திருப்பி பார்க்காமல் விறு விறு என்று வாசலை நோக்கி நடத்தவள்....





வாசல் கதவு அடைக்க பட்டு இருப்பதை பார்த்து அப்படியே சிலை என நின்றாள்....





அது ஒரு ஆட்டோமேட்டிக் கதவு.... சற்று முன்பு வரை நன்றாக இயங்கி கொண்டு இருந்தது...





இப்பொழுது அவளை பார்த்தவுடன் இயங்க மறுத்தது எதனால் என்று யோசித்தவள்.... எல்லாம் அவனோட வேலைய தான் இருக்கும் என்று கோபமாக நினைத்தவள் சட்டென்று திருப்பினாள் ..




அங்கே அதுவரை எதுவுமே நடக்காதது போல, இவளை சிறிதும் கவனிக்காமல் வேண்டும் என்றே... தன்னுடைய PA கௌதம்மிடம்... சிரியஸாக எதை பற்றியோ பேசிக்கொண்டு இருந்தான்....





இங்கு இந்த கதவு அருகில் நின்று கொண்டு இருப்பதால்.... இனி எந்த ஒரு பலனும் இல்லை என்று நினைத்தவள்....





அவன் அருகில் வேகமாக சென்று... ஹலோ மிஸ்டர்...நான் தான் கண்டிப்பாக உங்க கம்பெனி விளம்பரத்துல நடிக்க முடியாதுனு சொல்லிட்டேன்ல.... நீங்க இப்போ எதுக்கு இப்படி எல்லாம் பண்றிங்க..... என்றாள் மிகவும் கோபத்துடன்..





ஹலோ மிஸ்... கூல் இப்ப என்ன நடந்து போச்சுனு நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகுறிங்க.....



நான் என்னோட PA கௌதம் கிட்ட எங்க கம்பெனி விஷயமா டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்..... நீங்க என்னடானா, இப்படி ஒரு கேள்வி கேட்ட, நான் என்னங்க பதில் சொல்லுறது...




என்ன ரொம்ப புத்திசாலிதனமா பேசுறதா நினைப்பா உங்களுக்கு... என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுதாம்.... என்றாள்...அவள்



அதுவரை ஏதோ கம்பெனி விஷயமாக பேசிக்கொண்டு இருந்த அவனும், கௌதமும் அப்பொழுது, அவளை ஒரே நேரத்தில் இருவரும் நிமிர்ந்து பார்த்தனர்....



கௌதமோ.. தன்னுடைய மனதிற்குள்ளவே ... அவளை ரசிக்க ஆரம்பித்தான்... வாவ் சூப்பர் பிகர்... எவ்வளவு அழகா இருக்கா இந்த பொண்ணு... நான் ஒரு சரியான வுட் ஹெட் (மரமண்டை)தான் போல அம்மா சொல்லுற மாதிரி... இந்த பாஸ் கூட இருக்கப்ப...நான் ஒரு யூத் என்பதே மறந்து போயிடுது....ஏதோ என்பது கிழவன் மாதிரி தோணுது.... சே.... இவ்வளவு அழகான பொண்ணா இப்பூடு நேரமா கவனிக்காம இருந்து இருக்கேனா.. என்று தன்னை தானே நொந்துகொண்டு.... சட்டென்று தன்னுடைய பாஸ் பக்கம் கவனிக்க......




அவனுடைய பாஸ்ஸோ... அவளை அப்பொழுது தான் கவனிப்பது போல உச்சி முதல் பாதம் வரை ஒரு ஆளை மயக்கும் ரசனையான பார்வை பார்த்து விட்டு..






ஓகே... மிஸ்.... நீங்க கேட்க்குறீங்கன்னு சொல்லுறேன்..... உங்களுக்கு என்னங்க “ அப்படியே உங்கள பார்த்தால் .. என அவன் தனக்கே உரிய ஆளை மயக்கும் வசீகர புன்னகையுடன் அவளை பற்றி பேச ஆரம்பிக்க.....



அவன் ஏதோ தன்னை பற்றி வர்ணிக்க போவதை தெரிந்து கொண்ட அவளோ... சட்டேன்று... “ஹலோ சார் கொஞ்சம்..என்னை பற்றிய உங்க வர்ணனையை நிறுத்துறீங்களா.... நான் பார்க்க எப்படி இருப்பேனு உங்கள விட எனக்கு நல்லாவே தெரியும்....








அவன் அதுவரை பார்த்த பார்வைக்கு வேறு ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால், கண்டிப்பாக வெட்கதில் தலைகுனிந்து இருப்பாள்..... அதை தான் அவனும் எதிர்பார்த்தான்... ஆனால் அவள் தான் சாதாரண பெண் இல்லையே.... உண்மையான அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவாள்... மற்ற படி இந்த மாதிரி விஷயங்களுக்கு அடி பணிய மாட்டாள்....





அவளை தான் பார்க்கும் பார்வையிலே வெட்கபட வைத்து...அவளை அவன் முன்பு கிறங்கி கிடக்க வைத்து.... அவனது ஆண்மை முன்பு அவளது பெண்மை தோற்க வேண்டும் என்றும் .... அவன் முன்பு அவள் மயங்கி கிடக்க வேண்டும் என்று.. . நினைத்தே தான் அவனும், அவளை பார்த்து ஒரு ரசனை பார்வையும்... வசீகர சிரிப்பும் சிரித்தான்....





ஆனால், இவளோ நான் உன்னைவிட சளைத்தவள் அல்ல.... என்பதை அவனுக்கு நிரூபிக்கும் விதமாக.... சற்றும் தலைகுனியாமல்... நிமிர்ந்து நின்று... அவனை நேருக்கு நேராக...அவனது கண்களை பார்த்து தைரியமாக பேசினாள்....




இங்க பாருங்க மிஸ்டர்... நீங்க மயக்கும் பார்வை பார்த்த உடனே... உங்கள பார்த்து மயங்கவோ... இல்லை உங்க வசீகர சிரிப்பை பார்த்து உங்க பின்னாடியே கிறங்கி ஓடி வர..... நான் உங்க அத்தை மகளோ... இல்ல மாமன் மகளோ இல்லைங்க...

.


நாங்கல்லாம் வேற மாதிரி ஆளுங்க...நீங்க நினைக்குற இதுக்கெல்லாம் நாங்க சரி பட்டு வர மாட்டோம்...ஓகே வா....அதுக்கெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க மேல விழுந்து கிறங்கி... மயங்கி... கெடந்தாளே உங்க அருமை மாடல் நேஹா மாதிரி ஆளுக தான் சரிபட்டு வருவா... என கூற....


அவள் இப்படி அவனுடைய அழகை கண்டுகொள்ளாமல் பேசுவதை பார்த்து....அவனுக்கே.....”.என்னுடைய அழகான தோற்றம் கூட இவளை சிறிதும் பாதிக்கவில்லையா.... என நினதவனுக்கு.....
இதுநாள் வரை கர்வமுடன் நினைத்த அவனது வசீகரமான அழகின் மீதே சிறிது சந்தேகம் வந்தது....




அவன் பேச மாட்டேனா ...ஒரு பார்வை அவர்களை பார்க்க மாட்டேனா என்று இவளை விட மேலான அழகிகள் காத்துக்கிடக்க..



இவள் இதை எல்லாம் தெரிந்து செய்கின்றாளா.... இல்லை தெரியாமல் செய்கிறாளா... அப்படி அவனை பற்றி முழுதும் தெரியாமல் தான் பேசுகிறாள்.... என வைத்துக்கொண்டாலும்...
.



இவளுக்கு ..... தான் பணியில் சேர போகும் கம்பெனி முதலாளிகிட்ட கொஞ்சம் கூட இப்படி பேசக்கூடாது... என்று தோன்றவில்லையே ..... என தனக்குளே யோசிக்க தவறவில்லை அவன்



இருந்தாலும் அவளது செய்கைகள் அவனுக்கு புதிதாகவே தோன்ற.... போகும் இடம் எல்லாம் மரியாதைகளை மட்டுமே பெற்றவன்... இந்த சிறு பெண்ணின் உதாசீன பேச்சில் அவனை அறியாமல் கவரப்பட்டு..... அவள் இன்னும் என்ன செய்கிறாள் என்று பார்ப்போம் என்ற சுவாரஷ்யதுடன் .... இன்னும் கொஞ்ச நேரம் வம்பு இழுக்க முடிவு செய்தவன்...



அவளது பேச்சுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்..... அதை தாங்க நானும் சொல்லவரேன்.... உங்கள பார்த்தால்... எங்க அத்தை மகள் அருக்காணி மாதிரி தான் இருக்கீங்க... அதை சொல்ல வந்தா இவ்வளவு கோப படுறிங்களே....என்றான்...


இதை எல்லாம் பார்த்த கௌதமக்கு தான் கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது..... உண்மையிலே நம்ம பாஸ் தானா இல்லை வேற யாருமா..... ஆளு எதுவும் மாறி வந்துடறா...



காலையில் இருந்தே ஒரு மாதிரி நடந்துகிறாரே.... நேஹா கிட்ட நடந்த கொண்ட விதமும், இந்த பொண்ணு கிட்ட நடத்துகிற விதமும்.... இவரோட குணமே இல்லையே.... ஒருவேளை நமக்கு தான் தப்பா தெரியுதோ என்னவோ... என நினைத்தான்




மேலும்....கௌதம் யோசிப்பதில் தவறு எதுவுமே இல்லை... அவனுடைய பாஸ் இப்படி நடந்து கொண்டு இதுவரை அவன் பார்த்ததே இல்லை..... உலகம் முழுவதும் தனது தொழில் சாம்ராஜ்யத்தில் கொடி கட்டி பறப்பவன் ... . பல கோடிகளுக்கும் பல கம்பனிகளுக்கும் சொந்தக்காரன்.... இவனுடன் தொழில் சந்திப்புக்காக ஏங்கி நிற்கும் தொழில் அதிபர்கள் பட்டியல் தான் அதிகம்... இவனை ஒரு நிமிடம் சந்தித்து பேசியவர்கள் வாழ்நாள் சாதனையாக நினைத்து கொண்டு இருக்க... இவனுடன் தொழில் புரிய மட்டுமோ எவ்ளோ பேர் கனவு கண்டு காத்து கொண்டு இருக்க.... அவர்களுடன் பேச கூட நேரம் இன்றி ஓடி கொண்டு இருபவன்...




ஒரு பக்கம் இவனை திருமணம் செய்ய உலக கோடீஸ்வரர்களின் புதல்விகள் தவம் இருக்க... இவனுக்கு காதலியாக ஒரு நாள் கூட வாழ மாட்டோமோ என பல பிரபன்ச அழகிகள் ஏங்க......






அந்த அளவு பேரும் புகழும், பணமும், மதிப்பும், மரியாதையும் கொண்ட.... ஆண்மை ததும்பும் பேரழகன்..... ஆள் மயக்கி... வசீகரன்....




அப்படிப்பட்டவன் இந்த சிறு பெண்ணுடன் பேச்சுக்கு பேச்சு கிண்டல் பண்ணி... வம்பிழுப்பது அவனுக்கு மேலும் மேலும் ஆச்சரியத்தை தான் அளித்தது.... மேலும் இந்த பொண்ணும் அவரை பற்றி முழுதும் தெரிந்தோ இல்லை தெரியமாலோ.....இப்படி பதிலுக்கு பதில் பேசுகிறதே......
என்று கேள்வி தோன்ற தான் செய்தது.... இருந்தாலும் இன்னும் என்ன தான் பாஸ் பன்றாருனு பார்ப்போம் என நினைத்தவன் மீண்டும் அவர்கள் பேச்சை கவனித்தான்....




அவன் சொன்ன அருக்காணி என்ற வார்த்தைக்கு சற்றும் கோபப்படாமல்.... உண்மை தான் சார்... உங்க அத்தை பொண்ணு அருக்காணி மாதிரி வேணும்னா பார்க்க நான் இருக்கலாம்.... ஆனால் உங்க அத்தை பொண்ணு நான் இல்லை... அதை முதலில் புரிஞ்சுக்கோங்க..... என்றவள்



இப்போ என்ன சொல்ல வரீங்க.... உங்க கிட்ட நின்னு பேச எனக்கு நேரம் இல்லை... நான் இப்போ வெளியே போயாகணும்... கொஞ்சம் அந்த கதவை திறக்க சொல்ல முடியுமா முடியாதா சொல்லுங்க.... என்றாள்...


ஓஓஓஓ அப்படியா... அதெல்லாம். திறக்கவே முடியாது... உங்களால முடிஞ்சதை பார்த்துக்கங்க என பிடிவாதமாக அவன் சொல்ல....


இவனிடம் விவாதம் பண்ணுவது என்று முடிவுக்கு வந்தவள்... அவனிடம்....சரி இப்போ என்ன பண்ணனும் நான் சொல்லுங்க.... என அவள் கேட்க....




எங்க கம்பெனி விளம்பரத்துல நான் சொல்லுற மாதிரி நடிங்க.... அவ்வளவு தான்.... என அவன் சொல்ல...


நீங்க என்னை கட்டாயப்படுத்தி....மிரட்டி... என்னை உங்க விளம்பரத்துல நடிக்க சொல்லுறிங்கனு....
நான் போலீஸ்க்கு புகார் கொடுக்க போனால்....

ம்ம்ம்ம்ம் நல்ல தரலாமா போங்க.... நோ ப்ரோப்ளேம்... நானே கமிஸ்னரை இங்க வர சொல்லுறேன் பேசுறியா என அவன் கேட்க...



இனி இவனிடம் பேசி ஒரு பயனும் இல்லை... இவன் போலீஸ்க்கு கூட பயப்பட மாட்டான் போல தெரிகிறது.... இனி இவனை பகைத்து கொண்டாலும் தான் இங்கு வந்த காரியம் கெட்டு விடும்..ஏற்கனவே மூன்று மாதங்கள் வீணாக போய் விட்டது...இன்னும் அக்காவை பற்றி எதுவுமே தெரியவில்லை..... கையில் வேற காசு இல்லை அதனால் இப்பொழுது தான் ஒரு வாய்ப்பு கெடைச்சு இருக்கு அதை நழுவ விட கூடாது என்று நினைத்தவள், மேலும் இவன் சொல்லுவதை கேட்பது போல கேட்டால் தான் நமக்கு நல்லது... நாம் வந்த காரியம் சீக்கிரம் முடியும்....எப்படியாவது அக்காவை பற்றி இங்கு வேலை பார்த்தால் மட்டுமே அவளை கண்டுபிடிக்க முடியும்....கிடைத்த இந்த வேலையும் வேண்டாம் என்று சென்று விட்டால் மிகவும் கஷ்டம் என நினைத்தவள்..



என்ன மிஸ் நீங்க யோசிக்கிறத பார்த்தால்,.... என்னமோ உங்களை என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டதுக்கு யோசிக்கிற மாதிரி இருக்கு....
ஒரு சின்ன விளம்பரத்துல நடிக்க இவ்வளவு யோசிக்கிறீங்க... இந்த வாய்ப்புக்கு எவ்ளோ பேரு வரிசைல நிக்கிறாங்க தெரியுமா.... என்றான்...


அப்பொழுது தான் இவளை தவிர அங்கே கூடி இருந்த பெண்கள் கூட்டத்தை பார்த்தவள்.... இதுல யாரை இவன் கைய நீட்டி இல்லை இல்லை இவனுக்கு இருக்குற அழகுக்கும், அந்தஸ்துக்கும் ஒரு விரல் நீட்டி கூப்பிட்டால் கூட ஓடி வந்து இவன் மேல விழுந்து நடிச்சு கொடுக்க ரெடியா இருக்காளுக.... இப்போ நாம வேற பிகு பண்ண கண்டிப்பா இவன் வேற யாரையும் கூப்பிட்டு நாம வந்த காரியத்தை கெடுத்து விட போறான் என்று யோசித்தவள் ...




சட்டென்று அவனிடம் அய்யயோ உங்களை போய் கல்யாணம் பண்றதா... அதுவும் நானா... அது தான் உங்க அத்தை பொண்ணு அருக்காணி இருக்காங்க... உங்க அழகு மாடல் நேஹா இருக்காங்க..... என்று அவள் ஆரம்பிக்க.....



நேஹா பெயரை கேட்டவுடனே சட்டென்று கோபம் ஆனவன்.... இப்ப நீங்க விளம்பரத்துல நடிக்கிறத பற்றி மட்டும் பேசுங்க....மற்றபடி தேவை இல்லாம பேச வேண்டாம் என்றான். சற்று கோபமாகவே.....




இவன் என்ன இப்படி இருக்கான்...இவ்ளோ நேரமா நம்மள கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தான்... அதுவும் நாம மட்டும் உண்மையை சொன்னால் மட்டும் மூக்கு மேல கோபம் வருதே இவனுக்கு..... என்று மனதுக்குள் திட்டியவள்...
சரி நமக்கு என்ன வந்தது இவன் கோபப்பட்டால் நாம் வந்த வேலையை பார்ப்போம்... என நினைத்து.... அவனிடம்..



ஓகே.... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் நடிப்பேன்... ஏன்னா...என்னை நம்பி....என் திறமை மீது நம்பிக்கை வைத்து.... என்னிடமே அனுமதி கேட்க்காமல்...என்னை உங்கள் மாடல் என்று வேறு எல்லாருக்கும் அறிவித்து விட்டிர்கள்... அப்படி நான் நடிக்கவில்லை என்றால் உங்களது கம்பனிக்கு தான் கெட்ட பெயர்.... ஆனால் ஒரு கண்டிஷன்..என்றாள்




நான் மாடர்ன் டிரஸ் எல்லாம் போட்டு நடிக்க மாட்டேன்.... சுடிதார், சேலை மட்டும் தான் உடுத்தி தான் நடிப்பேன்.... அந்த உடைகளும் மிக கண்ணியமானதாக இருக்க வேண்டும் .... என்றாள்


ஓகே அருக்காணி... என்று சொல்ல வந்தவன் சட்டென்று.... மிஸ்....உங்க பேரு என்ன என்றான்.....


என்னோட பேரு விதுஷா யாழினி... என்றாள்



விதுஷா உங்க பேருனா..... யாழினி.... யாரு பேரு.....


ம்ம்ம் அது எங்க அம்மா பேரு என்றவள்...

இந்த பெயரை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கே.... என அவன் யோசிக்க ...

அவள் உடனே... ஹலோ சார் உங்க யோசனையை கொஞ்சம் அப்பறம் வச்சுக்கங்க.... இப்ப நான் விளம்பரத்துல நடிக்க கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க.... என்றாள் படபட என்று...



அப்படி என்ன ஒரு வாய் டா இந்த பொண்ணுக்கு... நம்ம பாஸ் கூடவே மல்லு காட்டுது.... அவரையே லெப்ட் அண்ட் ரைட் வாங்குதே.... இவ அழகை பார்த்து மயங்கி கிட்ட போறவன்... இவ வாய பார்த்து ஓடிடுவான்.... நல்ல வேலை இவ அழகை பார்த்து நான் கூட நம்ம அகிலாம்மாக்கு மருமகள் ஆக்க நெனைச்சேன்.... ஆனாலும் என்ன இருந்தாலும் இவ ஒரு தேவதை தான்... இவளை விடவும் மனசு வரலை.... என்று அவனது அடி மனது ஜொள்ளு விட்டது.... சரி பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு ...... என யோசித்து கொண்டு இருந்த கௌதம்....






கௌதம்......என்ற அவனது பாஸ் ஸின் அழைப்பில்.... சட்டென்று சுயநினைவுக்கு வந்தவன்....




சொல்லுங்க பாஸ் என்றான்.....


இவ்வளவு நேரம் எங்க போய் இருந்த..... என்று கேட்க



இங்க தான் பாஸ் நின்னுகிட்டு நீங்களும் இந்த பொண்ணும் பேசுறத கவனிச்சுகிட்டு இருந்தேன்....


நல்ல கவனிச்ச நீ ...... ஆஆ னு வாய தெறந்து வச்சுக்கிட்டு ... அப்படி கவனிச்சு இருந்தனே இந்நேரம் இவனுங்களுக்கு மேக்அப் போட... நம்ம கம்பெனி மேக்கப் வுமன் இருகாங்களை..... அவுங்கள இந்நேரம் கூட்டி வந்து இருப்ப.... என்றவன்...


இதுல வேற.... இவரு பாஸ் மனசை எப்பவும் புரிஞ்சு நடக்குற PA னு வேற வெளியில பெருமையா சொல்லிக்கிட்டு அலைகிறாரு....




போ.....சீக்கிரமா கூட்டிட்டு வந்து இவுங்கள ரெடி பண்ண சொல்லு..... என்றான்...



இவ்வளவு நேரம் இந்த பொண்ணு கூட வம்பு அளந்த போது எல்லாம் இவருக்கு தெரிய வில்லையாம்.. இப்போ மட்டும் நேரமாகுதுனு என்னை மிரட்ட வந்துட்டாரு... என்று மனதுக்குள் கருகியவன்......


ஓகே இதோ 5 நிமிஷம் பாஸ்... அவுங்கள கூட்டிகிட்டு வரேன்... என்று சென்றான் கௌதம்....


அந்த மேக்கப் வுமன்னை உடனே கௌதம் அழைத்து வர... அவளிடம், விதுஷாக்கு என்ன என்ன மேக்கப் செய்யணும்...எந்த மாதிரி உடை உடுத்த வேண்டும் என எல்லாம் சொல்லிவிட்டு... இவுங்களுக்கு மேக்கப் எல்லாம் முடிஞ்சு ரெடி ஆன உடனே என்னை கூப்பிடுங்கள் என கூறிவிட்டு விறு விறு என திரும்பி பார்க்காமலே சென்று விட்டான்......



அவன் சொன்ன மாதிரியே... விதுஷாக்கு மேக்கப் போட்ட மேக்கப் வுமன்.... முடித்த உடனே.... கௌதம் க்கு தெரிவிக்க.....



கௌதம் தன்னுடைய பாஸை அழைத்து கொண்டு... விதுஷா இருக்கும் அறைக்கு சென்று.... இருவரும் ஒரே நேரத்தில் அவளை பார்க்க...

அங்கே அவளோ , மணப்பெண்களுக்காகவே.... விசேஷமான முறையில் வடிவமைக்கபட்ட சேலை அணிந்து... அதற்கு ஏற்றார் போல நகைகள் அணிந்து... மிதமான ஒப்பனையில்.....திருமணத்திற்காக தங்கள் வருகைக்காக காத்திருக்கும் மணமகளாகவே....இப்பொழுதே என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்பது போல தெரிந்தாள்......அவளை இமை கொட்ட மறந்து பார்த்த அந்த இரு மணமகன்களின் கண்களுக்கு..... ஒருவன் கௌதம்.... மற்றொருவன் கௌதமின் பாஸ் & பேஷன் மேக்கிங் கிங் என்று அனைவரும் அழைக்கும் “ ஆரியன்”....


விழிகள் தொலையும்...
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -16


மணப்பெண்ணுக்காகவே பிரத்யோக முறையில் வடிவமைக்கபட்ட புடவையை அணிந்து, அதற்கு பொருத்தமான மிதமான மேக்கப் போட்டு கொண்டு வந்து நின்ற விதுசாவை இமை கொட்ட மறந்து பார்த்தனர்.... ஆரியன் மற்றும் கெளதம் ஆகிய இருவரும்.....



அவர்கள் இருவரால் அவள் மீது வைத்த கண்ணை சிறிது கூட எடுக்க முடியவில்லை அவ்வளவு அழகாக ஜொலித்தாள் அந்த வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வந்த அழகு தேவதை.....




ஆரியனோ அவள் மீது இருந்த பார்வையை எடுக்காமலே, தன்னோட மனதுக்குள் ஒரு நிமிடம் இவள் பக்கத்தில் மணமகனாக நாம் நின்றால் எப்படி இருக்கும் என்று கற்பனைக்கு செல்ல.....



கௌதமோ “ ஆஹா என்னா ஒரு அழகு இந்த பொண்ணு... இப்படியே இவள தூக்கிட்டு போய்... நம்ம அகிலா அம்மாகிட்ட... இந்தாங்க உங்க மருமக, இவளை எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைங்கன்னு காட்டனும் என்று தோன்ற.... அவனும் அவளை அப்படியே முழுங்கும் பார்வையிடுடன் பார்த்து நிற்க......


அதுவரை அந்த ஆண் அழகன்கள் இருவரும் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை கவனிக்காமல் ..... தன்னுடைய சேலை மடிப்பை குனிந்து சரி செய்து கொண்டு இருந்தவள்.... சட்டென்று எதார்த்தமாக நிமிர அப்பொழுது தான் அந்த இருவரும் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை கவனித்தவள்....


அய்யோடா இது வேறையா..... இந்த பக்கி ரெண்டும் இப்ப எதுக்கு இப்படி நம்மளை இப்படி ஒரு லுக்கு விட்டுடு இருக்குதுக......முன்ன பின்ன யாரும் சேலை கட்டி பார்த்தது இல்லையோ இதுக.... இல்லை பொண்ணுகளையே பார்த்தது இல்லையோ..... அட ஆண்டவா இதுல இந்த கொடுமை வேறையா..... வந்த எடத்துல வம்பு தேடி வந்து இல்ல நம்மள வட்டம் போடுது...... அடேய் முறை முறை பையன் மாதிரி பார்க்குற முட்டாள் பயலுகளா.... இந்த விதுஷா நீங்க நினைக்குற சாதாரண பொண்ணு இல்லடா..... நான் ஒரு காட்டாறுடா எனக்கு தேவை இல்லடா மோட்டாரு..... என்னை இப்படி பார்த்து காதல் என்ற அணைய போட்டு என்னை தடுக்க நெனைச்சீங்கனா சேதாரம் உங்களுக்கு தாண்ட மட சாம்புராணிகளா..... என்று மனதுக்குள் திட்டியவள்.... அவர்களை முறைக்க தவறவில்லை....



விதுஷாவின் முறைப்பையும் மீறி அவளை சட்டை செய்யாமல் அவளையே விழுங்குவது போல் பார்த்த இருவரும்....... சார் கேமரா ரெடி போட்டோ எடுக்கலாமா என்று தங்களுது பக்கத்தில் ஒலித்த குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தவர்கள்......


ஓஓ கேமரா ரெடியா ஓகே.... கெளதம் எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு.... ஒரு முக்கியமான மீட்டிங் போகணும்.... நீ இவுங்கள வச்சு இன்னைக்கே சூய்ட்டிங் எல்லாத்தையும் முடிச்சுடு.... இன்னைக்கு கண்டிப்பா இந்த விளம்பரம் எல்லா மீடியாவிலும் வரணும்..... அதுக்கு முன்னாடி எனக்கு ப்ரூப் அனுப்பு நான் பார்த்துட்டு ஓகே சொன்ன பின்னாடி மீடியாக்களுக்கு அனுப்பலாம்..... என்று சட்டென்று தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு ... அங்கு அதுவரை தான் விழுங்கும் பார்வை பார்த்த விதுஷாவை கூட சற்றும் கண்டு கொள்ளாமலே வேகமாக சென்றவன்.....


சட்டென்று ஏதோ நியாபகம் வந்தவனாக திரும்பி விதுஷாவிடம் “ ஓகே மிஸ்.... “உங்க பேரு.... வேண்டும் என்றே இழுக்க

ம்ஹ்ம் என் பேரு விதுசா.... என்று இவள் நொடிக்க .....


அவளது நொடிப்பை கூட கண்களால் மனதுக்குள் படம் எடுத்தவன்... அதை வெளிக்காட்டாமலே... ஓகே மிஸ் விது.... சா என்று இழுத்து.... நீங்க சூட் முடிச்சுட்டு பேமேன்ட் வாங்கிட்டு கிளம்புங்க......
என்று சொல்லிட்டு அவள் பதிலை கூட எதிர் பார்க்காமல் அவசரமாக கிளம்ப......


சார்..... என்று அவள் அழைக்க.... எஸ் என்று அவன் திரும்ப.... இல்லை.... பேஷன் டிசைனர் வேலை..... இன்டெர்வியூ..... என்னாச்சு என்று கேட்க....



அதுவா நான் கொஞ்சம் யோசிச்சு சொல்லுறேன்..... நீங்க கொஞ்சம் நாளைக்கு இதே டைம் வர முடியுமா..... நாளைக்கு என்னனு டீடைலா பேசலாம்..... என்று சொன்னவன்.... அவளை மீண்டும் சட்டை செய்யாமல் செல்ல...



எருமை மாட்டு பய எவளோ கொழுப்பு அவனுக்கு....யோசிக்கிறானாம் பெரிய இவன் பாரு.... எல்லாம் நேரம் டா.... உன்னை எல்லாம் சாரு... மோரு... என்னை கொஞ்சம் பாருன்னு கூப்பிடனும் என்று..... இருடா இங்க வேலை மட்டும் கெடைக்கட்டும் உன்னை எப்பூடி வச்சு செய்யறேன்னு நீ பார்க்க தானே போற.... என்று கருவ...


அதற்குள் அவள் அருகே வந்த கெளதம்.... மிஸ் விதுஷா கேமரா ரெடி வாங்க போகலாம் என்று அழைக்க....

இவன் ஒருத்தன் பாஸு... ஜூஸ் ... முட்டை கொசுனுடு.... அவன் ஜாடினா இவன் மூடி.... அவன் அடுப்பு னா இவன் துடுப்பு....சாரி எடுப்பு... அய்யோ இப்ப எனக்கு வருது கடுப்பு என்று மனதுக்குள் தீட்டிய படி அவனுடன் சென்றாள் .....



ஒருவழியாக அவர்கள் எடுக்க வேண்டிய போட்டோ அனைத்தும் நன்றாக வர..... போட்டோ கிராபர் எடுத்த ஒவ்வொரு போட்டோவும் போட்டி போட்டு கொண்டு விதுஷா அழகை பறை சாற்ற..... ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு மாதிரி அழகு....அதை எல்லாம் பார்த்த கெளதம் ஒரு நிமிடம் சொக்கி தான் போனான்.....

அப்படியே அவளை கட்டி அணைத்து அவளது இதழை சிறை செய்ய நினைத்த மனதை கடிவாளம் மிட்டு தடுத்தவன்......

அவளது ஒவ்வொரு, அழகையும்.... அசைவையும்.... சிரிப்பையும்.... தனது மனதில் படம் பிடித்து.... அப்படியே அவனது இதயத்தில் அழிக்க முடியாத இடத்தில் சேமித்தான்.....


ஓகே மிஸ் விதுஷா....சொல்லுடா எடுப்பு பையா... என்று மைண்ட் வாய்ஸ் உடன் அவனை பார்த்தவள்.... என்ன என்று தானோட புருவத்தை உயர்த்தி அழகான பச்சை விழிகளால் கேட்டாள்......


அவள் விழி அசைவில் சொக்கி போனவனோ.... சட்டென்று தன்னை சுதாரித்து கொண்டவன் .... இன்னைக்கு உங்க வேலை முடிஞ்சு போச்சு..... அப்பறம் பாஸ் சொன்ன மாதிரி நீங்க நாளைக்கு வாந்தால் போதும்... அப்பறம் ரெசிபிஷன்ல உங்க பேய்மென்ட் செக் கொடுப்பாங்க வாங்கிக்கங்க.... என்றவன்


மேலும் அவள் ஒன்றும் பேசாமல் தயங்கி நிற்பதை பார்த்து.... உங்களுக்கு வேற எதுவும் விவரம் தெரிஞ்சுக்கணுமா என்று கேட்க....



அது வந்து நான் வந்தது பேஷன் டிசைன்னர் இன்டெர்வியூ.... அது என்னாச்சு.... என்று கேட்க......




அது இன்னைக்கே முடிஞ்சு தேவையான ஆளு எல்லாம் எடுத்தாச்சு..... அது என்ன ஏதுன்னு பாஸ்க்கு தான் விவரம் தெரியும்..... நீங்க நாளைக்கு பாஸ் கிட்ட கேளுங்க.... என்று சொன்னவன்... அவளை பார்த்து சின்ன புன்னகை உடனே.... சாரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க இந்த கம்பெனி ட்ரெஸ் எல்லாதையும் செஞ்சூ பண்ணிடு கிளம்புங்க..... நாளைக்கு வாங்க பார்க்கலாம்.... பாய்..... என்று சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர் பார்க்காமல் அவனும் சென்று விட்டான்....


அவன் போவதையே பார்த்தவள்..... என்னடா இது இவுங்க ரெண்டு பேருமே நாம கேட்க்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்களே.... இவிங்க சொல்லுறத மட்டும் நான் கேட்டுட்டு அப்படியே செய்யணும் போல..... எல்லாம் நம்ம நேரம்...இப்படி இவுங்க கிட்ட வந்து வேலை கேட்டு கஷ்டபடனும் என்று நம்ம தலையெழுத்து..... என்று தன் விதியை நொந்தவள்....

தன்னுடைய உடைகளை மாற்றி விட்டு.... வரவேற்பு அறைக்கு சென்றவள்... அங்கே அவர்கள் கொடுத்த வங்கி காசோலை அடங்கிய கவரை வாங்கியவள் அதை பிரித்து கூட பார்க்க மனம் இன்றி ..... போகும் வழி எல்லாம் இன்று நடந்த அனைத்தையும் ஒரு முறை யோசித்து பார்த்தாள்..... ......அவள் அங்கே சென்றது வேலையில் சேர ....ஆனால் அங்கு நடந்தது வேறு..... இனி நாளைக்கு வேறு அங்கே செல்ல வேண்டும்... அங்கே போனால் என்ன நடக்குமோ என்று கொஞ்சம் நினைத்து பார்த்தவள் ....


ஒரு வழியாக தன்னுடைய ஹாஸ்டல் அறையை அடைந்தவள்......அந்த காசோலை அடங்கிய உரையை அப்படியே அங்கே இருந்த மேஜை மீது போட்டவள்.... அப்படியே பயண களைப்பில்....சோர்வில் அப்படியே உறங்கி விட்டவள்.....

அவளது அறை தோழி ரம்யா தட்டி எழுப்பிய பொழுது கண் விழிதவள்.....தூக்கம் கலந்த கண்களுடன் என்ன என்று ரம்யாவிடம் கேட்க.....

ரம்யாவோ “ ஏண்டி காலையில இன்டெர்வியூனு போனியே, அது என்னாச்சுன்னு ஏதாவது சொன்னியா? நானும் நீ எந்திரிச்சி சொல்லுவேன்னு பார்த்தால் நீ எந்திரிக்குற மாதிரி தெரியல, அதான் பொறுமையை இழந்து எழுப்பினேன்.... என்றாள்


அதுவா.... அடி போடி நீ வேற... என்று சலித்து கொண்டவள்..... அங்கு நடந்த அனைதையும் சொன்னவள்....ஆனால் அந்த இரண்டு ஆண்கள் பற்றி மட்டும் சொல்லவில்லை ஏனெனில் ரம்யா சும்மாவே இவளை வம்பு பண்ணுவாள் இதில் இதை கேட்டு ஏதாவது கிண்டலுக்கு கூட தவறாக சொன்னாள் என்றால் இவளால் அதை தாங்க முடியாது என்று நினைத்து மறைத்தாள்.....


அது வரை பொறுமையாக கேட்டவள்..... ஏய் அங்கே ஆரியன் என்று ஒருத்தர் இருந்து இருப்பாரே அவரை எதுவும் பார்த்தியா என்று போட்டு வாங்கினாள்.....


ஆரியன்னா யாருடி அது.... உண்மையாவே எனக்கு தெரியாதுடி.... இந்த பேரு கூட நீ சொல்லி தான் தெரியும் எனக்கு.... அந்த மாதிரி அங்கே யாரும் யாரையும் பெயர் சொல்லி கூப்பிடலையே என்றவள், மேலும் தனது மனதுக்குள் மட்டும் ஒருவேளை கவுதம் கூட இருந்தனே திமிரு பிடிச்சவன் அவன் பேரு தான் ஆரியன் போல என்று எண்ணினாள் விதுஷா....

அடியே உன்னை என்னடி பண்றதுனு தெரியல டி.... ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போனால் அதோட MD யாருனு கூட தெரிஞ்சு வச்சுக்க மாட்டியா.... ஒரு MD பெயரை எப்படி டி அங்க வேலை பார்க்குற ஒர்க்கர்ஸ் கூப்பிடுவாங்க? உன்னை எல்லாம்.... என்ன சொல்லி என்ன பிரயோஜனம்.... என்று கோபப் பட்டவள்...


அது எப்படி ஒரு பொண்ணு இருந்தாலே விட மாட்டான் அவன்... இப்போ 20000 பொண்ணு இருக்க இடத்துக்கு எப்படி வராம இருந்து இருப்பான்.... அவன் வரணும் இவளை பார்க்கணும்....அப்ப தானே நல்லா இருக்கும்.... அதை நெனைச்சு தானே நானும் இவளை நல்ல கம்பெனினு சொல்லி அங்கே அனுப்பி வச்சேன்... கடைசியா பார்க்க வேண்டியவனை இவள் பார்க்கல போல.... வேலை வேற கெடைக்கலனு சொல்லுறாளே..... என்று மனதுக்குள் நினைத்தவள்....



ஓகே இப்போ நாளைக்கு வர சொல்லி இருக்காங்கனு சொன்னாலே.... நீ நாளைக்கு போய்டு வேலை என்ன ஆச்சுன்னு சொல்லு என்று சொன்னவள்... உனக்கு ஏதோ காசோலை கொடுத்ததா சொன்னியே...இப்ப அது எங்க? எவ்ளோ சம்பளம் கொடுத்தாங்க உன்னோட நடிப்புக்கு என்று கேட்க....

அது என்னனு தெரியல டீ....நான் அதை திறந்து பார்க்கவே.... அதோ அந்த மேஜையில் கெடக்கு பாரு என்று விதுஷா சொல்ல....

அந்த காசோலையை எடுத்து பிரிக்க போன ரம்யாவிடம் இருந்து சட்டென்று காசோலையை வாங்கியவள்.....


ரம்யா விடம் “ இது நான் எங்க அக்காவை விட்டு பிரிஞ்சு கஷ்டப்பட்ட காரணத்தால், இங்க சென்னை க்கு அக்காவை தேடி வந்து சம்பாதித்தது... அவ்வளவு தான்.... .இதனால் எனக்கு எந்த ஒரு சந்தோஷமும் கிடைக்க போறது இல்லை.. எனக்கு ஒரே சந்தோசம் எங்க அக்காவை பார்க்கணும் அவோளோ தான்... அதுக்கு முன்னாடி இது எனக்கு தேவை இல்லை... எனக்கு என்னோட பேஷன் டிசைனர் தொழில் மூலமா சம்பாதிக்கிற காசு போதும்.....உழைச்சு சம்பாதிக்கிற காசு தான் நல்லது.. நான் சாகும் வரை என்னோட தொழில், உழைப்பு, திறமை எனக்கு சம்பாதிச்சு கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.... இது என்னோட அழகாலா வந்தது ... இது என்னோட அழகு இருக்கும் வரை தான் என்னோட அழகு போனால் இதுவும் போய்டும்... இது சம்பாத்தியம் நிரந்தரம் இல்லை...தேவையும் இல்லை.... . வேண்டாம்.... என்றாள் விதுஷா...


ஓஓஓஓ அப்படினா அங்கையே வேணாமுன்னு சொல்லிட்டு திருப்பி கொடுத்துட்டு வர வேண்டியது தானே...அப்புறம் இங்க எதுக்கு டி இதை கொண்டு வந்த....இப்படி எனக்கு என்னனு வேற தூக்கி போட்டு இருக்க... முதலில் எதுக்கு இப்படி பண்ணேன்னு காரணம் சொல்லு... என்றாள் ரம்யா....



அது ஏன்னு, எதுக்குன்னு நாளைக்கு வந்து சொல்லுறேன்... இப்போ எனக்கு ரொம்ப அசதியா இருக்கு நான் தூங்குறேன்.... நாளைக்கு பேசிக்கலாம்.... என்ற விதுஷா அவளது பதிலை கூட என்ன என்று கேட்க்காமல் மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்.....


இவள எல்லாம் திருத்தவே முடியாது... இப்படி ஒரு அருமையான வாய்ப்பு கெடைச்சும் அதை பயன்படுத்த தெரியாத முட்டாள் இவள்...கொடுத்த காச கூட வேணாமுன்னு சொல்லுறா இந்த முட்டாள் என்று நினைத்தவள்.... அங்கே இருந்து அகன்றாள் ரம்யா.....




தன்னோட வேலைகள் அனைத்தையும் முடித்த கவுதம், கடைசி வேலையாக தன்னோட பாஸ்க்கு விதுஷாவின் போட்டோ அனைதையும் அனுப்பி வைத்தான்.... ஏற்கனவே அவனது பாஸ் சொல்லி தான் சென்று இருந்தான்.....விதுஷாவின் போட்டோக்களை பார்த்த ஆரியனோ..... அதில் சில மாற்றங்கள் செய்து விட்டு மீடியாகளுக்கு அனுப்ப சொன்னனவன்.... மேலும் கவ்தமிடம் சில விவரம்கள் சொல்லி போனை வைத்தான்.....



போனை வைத்தவன் தன்னோட மெயில்க்கு வந்து இருந்த விதுஷாவின் போட்டோவை தன்னோட பர்சனல் கம்ப்யூட்டர் திரையில் வைத்து கண் சிமிட்டாமல் பார்த்தவன்.....

என்னுள் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...... என்று அழகாக பாடியவன்..... அப்படியே தனக்குளே சிரித்து கொண்டே...... தன்னோட போனை எடுத்து அவனது அருமை தாத்தாக்கு போன் செய்து...அவனது வழக்கமான செயலான இன்று நடந்த அனைதையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு தான் நிம்மதியாக உறங்க சென்றான்.....

அவன் சொன்ன அனைதையும் கேட்ட அவனது தாத்தா தனக்கே உரிய குறும்பு சிரிப்புடன் “டேய் பேராண்டி மாட்டி கிட்டியா டா “ நீ பொண்ணுங்களோட பழகுறப்ப எல்லாம் ஏதாவது பொண்ண பிடிச்சா சொல்லு கல்யாணம் பண்ணி வைக்குறேன்னு சொன்னப்ப மாட்டேன்னு சொன்ன.... இப்போ என்னடானா நீயா வந்து ஒரு பொண்ண பத்தி ரொம்ப நேரமா பேசுறியா.... இதுவரை நீ பழகுற பொண்ணுகளை பற்றி என்ன தான் என்கிட்ட சொல்லி இருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு ஈடுபாட்டோட சொன்னது இல்லையேடா என் செல்ல பேரா என்று நினைத்தவர்..... சரி பொறுத்து இருந்து பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு என்று நினைத்தார் அவனது அன்பு தாத்தா ஆதீஸ்வரர்......





காலையில் கவ்தம் சொன்ன சரியான நேரத்துக்கு விதுஷா சென்றாள்..... அங்கே வரவேற்பு அறையில் இருந்த ரிசப்னிஸ்ட் பெண் விதுசாவை பார்த்த உடனே யாருக்கோ போனில் தகவல் சொல்ல.... அங்கே இருந்து என்ன பதில் வந்ததோ.... விதுஷாவை காத்திருக்கும் படி ரிசப்னிஸ்ட் சொல்லி விட்டு சென்று விட ..... அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தாள் விதுஷா ...... அவளை மாடியில் இருந்த தன்னோட அறையில் இருந்தே ஏதோ யோசனையுடன் கவனித்தான் அவளை காத்திருக்கும் படி சொன்ன ஆரியன் ....


இன்று என்னவோ நேற்றை விட மிக அழகாகவே இருந்தாள்.....இவனும் இதுவரை எவ்வளவோ அழகிகளுடன் பழகி இருக்கிறான் தான்.... இவளை விட சிறப்பான அழகிகளை பார்த்தவன் தான் ஆனால் இவளிடம் மட்டும் ஏதோ ஒரு தனி சிறப்பு இருக்கிறது.... என்பதை உணர்ந்தான்....



அது என்ன என்று தான் தெரியவில்லை...... அவள் உட்க்கார்ந்து இருப்பது ..உதட்டை அவ்வப்பொழுது சுளிப்பதும்...... கண்ணை சிமிட்டுவதும்.....எதையோ யோசிப்பதும்.... அவள் தலையை ஆட்டும் பொழுது அவள் போட்டு இருந்த ஜிமிக்கி அவனை அருகே வா என்று அழைக்கும் படி தோன்றியது..... அவளுடைய நேர்த்தியான உடை, எளிமையான தோற்றம் அதையும் மீறி தெரியும் பேரழகு...... எது அவனை அவள் கவர்ந்தது என்று அவனுக்கே தெரியலவில்லை....



அதை விட அவளது கண்கள் அவனை அவள் மீது வைத்த அவனது கண்களை எடுக்க விடாமல் இம்சை செய்தது.....



அப்பொழுது தான் எதார்த்தமாக கவனித்தான்.... அவனுடைய PA கவ்தமும் அங்கே விதுஷாவிடம் இருந்து பத்தடி தூரத்தில் நின்று கொண்டு அவளை கண் கொட்டாமல் பார்ப்பதை.....அப்பொழுது தான் அவனுக்கு நியாபகம் வந்தது அவனது PA கவ்தம் இன்னும் தன்னோட அறைக்கு காலையில் இருந்து வரவில்லை என்பதை..... உடனே அவனை இங்கே இருந்து கவனித்து கொண்டே...


அவனுக்கு போனில் அழைத்தான்.... தன்னோட பாஸுன் எதிர்பாராத அழைப்பை பார்த்த கவுதம் தூக்கிவாரி போட்டவனாக....

சட்டென்று அதுவரை தான் பார்த்து கொண்டு இருந்த விதுஷாவை சைட் அடிக்கும் வேலையை விட்டுவிட்டு....

சொல்லுங்க பாஸ்....


ஹலோ கவுதம் எங்க இருக்க.... என்று கேட்க....


இதோ நம்ம ஆபீஸ் வரவேற்பு அறையில் தான் இருக்கேன் பாஸ்..... உங்க ரூம்க்கு தான் வரேன் என.....


அங்க என்ன பண்ற... வந்த உடனே இங்க வராம...

இல்லை பாஸ் அது வந்து... என்று திணற....


தான் போன் செய்தது முதல் இப்பொழுது வரை அவனுடைய முக மாறுதல்களை கவனித்தவன்....அவன் பொய் சொல்லுகிறான் என்பதை தெரிந்து கொண்டு . ஏதோ இவனது நடவடிக்கைகள் விதுஷா வந்ததில் இருந்தே சரி இல்லை என்று எண்ணியவன்.....

கௌமிடம், ஓகே நீ எங்கையோ இரு அது எனக்கு தேவை இல்லை..... இப்போ நீ நிற்கிற இருந்து பத்தடி தூரத்தில் உட்க்கார்ந்து இருக்கங்களே... மிஸ் விதுஷா அவுங்கள கொஞ்சம் என்னோட ரூம்க்கு கூட்டிட்டு வா ... என்று கட்டளை இட்டுவிட்டு அவனது பதிலை கூட எதிர்பார்க்காமல் போனை வைத்தான் ஆரியன்...




என்ன மனுஷன்டா இவரு எப்படி தான் என்னை கவனிச்சாருனு தெரியல....நானே தப்பி தவறி இவரு கண்ணுல படக்கூடாதுனு நெனைச்சு ஒளிந்து நின்னு பாரத்தால்... எனக்கு பத்தடி தூரத்தில் இருக்க விதுஷா வை கூட்டிட்டு வான்னு கரெக்டா சொல்லுறாரு.....எப்படி தான் கவனிப்பாரோ கழுகு கண்ணு தான் போல.... நல்லவேளை அவரு நான் அவளை சைட் அடிச்சத பார்க்கல போல இல்லைனா கொன்னே போட்டு இருப்பாரு.... இவரு மட்டும் பொண்ணுக கூட பேசலாம்... பழகலாம்..... ஆனால் நான் மட்டும் இப்படியே பொண்ணுகள பாக்காம பேசாம சாமியாரா இருந்து இவரு கம்பனிக்கு சேவை செய்ய சொல்லுறாரு.... நானே இப்போ தான் என்னோட பேபி கேர்ள் ளை பார்த்து இருக்கேன்....அவளை அப்படி இப்படி லுக் விட்டு கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ளை குட்டிய பெத்துக்க விட மாட்டாரு போல மனுஷன் ....இன்னைக்கு நைட் எப்படியாவது அம்மா கிட்ட இவளை பத்தி சொல்லி... சீக்கிரமா இவ கிட்ட பேச சொல்லணும்.... என்று மனதில் எண்ணியவன்....


தன்னுடைய பாஸுன் அடுத்த அழைப்பு வரும் முன்பு... விதுஷாவை கூட்டி கொண்டு தன்னுடைய பாஸுன் அறைக்கு சென்றான்.....
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -17


கவ்தம் வந்து கூப்பிட உடனே அவனுடன் அவனுடைய பாஸ் ஆர்யனின் ரூம்க்கு சென்றாள்... அந்த அறையின் உள்ளே நுழைந்த உடனே அங்கே இருந்த ஆரியன் மற்றும் கெளதம் இருப்பதையே மறந்து அந்த அறையின் பிரமாண்டத்தை பார்த்து அப்படியே அசந்து விட்டாள் விதுஷா...... அந்த அறை அவ்வளவு அழகாக நேர்த்தியாக வடிவமைக்க பட்டு இருந்தது......அங்கே இல்லாத வசதிகளே இல்லை என்று சொல்லலாம்......

அவளது கண்கள் சென்ற இடங்கள் சேர்த்து அவளையும் ரசிக்க தவறவில்லை அங்கே இருந்த அந்த நான்கு கண்கள் அது ஆரியன் மற்றும் கவ்தமின் கண்கள் தான்...


அந்த அறையை ஒவ்வொரு அங்குலமாக ரசித்து கொண்டு வந்தவள் அந்த அறையில் இருந்த இன்னொரு அறை செல்வதை கவனிக்க தவறவில்லை.....அந்த கதவின் மேலே பர்சனல் ரூம் என்று எழுதி இருந்தது...... அந்த பர்சனல் ரூம் உள்ளே இருந்த ஒரு சில புகைப்படங்களை பார்த்து இருந்தால் கண்டிப்பாக அதிர்ச்சி அடைந்து இருப்பாள்......அங்கே அப்படி ஒரு பூகம்பம் காத்து இருந்தது..... ஆனால் அதை பார்க்கும் வாய்ப்பு அந்த அறையின் சொந்தகாரன் உடன் நெருக்கமாக பழகினால் மட்டுமே முடியம்...ஏன் என்றால் அந்த அறையின் சொந்தகாரன் தன்னுடன் நெருக்கமாக பழகுபவர்களை மட்டுமே உள்ளே செல்ல அனுமதிப்பான்....... நெருங்கி செல்வாளா இல்லை விலகி கொள்வாளா? காலம் தான் பதில் சொல்லும்.....


அப்படியே அவனது அறையை ரசித்து வந்தவள் திடிரென்று ஒலித்த அவனது குரல் கேட்டு தான் திருப்பி பார்த்தாள்.... அங்கே தன்னோட சுழலும் நாற்காலியில் அமர்ந்த படி... அவளை பார்த்து கேட்டான்...
என்ன விதுஷா என்னோட ரூம் எல்லாம் சுத்தி பார்த்துட்டிங்களா? இல்லை இன்னும் பார்க்கணுமா நான் வேணும்னா கொஞ்சம் வெளியே நிற்கவா.... நீங்க மெதுவா பொறுமையா சுத்தி பார்த்துட்டு என்னை கொஞ்சம் கூப்பிடுறிங்களா என்று அவன் கொஞ்சம் நக்கல் கலந்த குறும்புடன் கேட்க....


அய்யோ சாரி சார் தப்பு என்மேல தான் எனக்கு கொஞ்சம் இன்டெரியர் டெக்கரேஷன் மேல ஈடுபாடு அதிகம் அதான் உங்க ரூம் வேற ரொம்ப அழகா வித்தியாசமா வடிவமைக்க பட்டு இருந்துச்சு அதன் என்னையே மறந்து... நீங்க இந்த ரூம்ல இருப்பதை மறந்து ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்..... என்றாள்..

ஆமா நீ ரூமை ரசி.... இங்க நீக்கிறானே இந்த கெளதம் தடி மாட்டு பையனும் நானும் உன்னை ரசிக்கிறோம்.... ஏண்டி எங்களுக்கு நடுவுல வந்து இப்பூடி உன் அழகால இம்சை பண்ற என்று மனசுல நினைச்சவன்....

அவனையும் அவளையும் நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த கவுதம் பக்கம் பார்வையை திருப்பியவன்..... என்ன கவுதம் முக்கியமான வேலை எல்லாம் முடிச்சுட்டியா இல்லை பாக்கி எதுவும் இருக்கா என்று கண்கள் இடுங்க கேட்டான்....


அவனது கேள்வியின் அர்த்தம் உணர்ந்தவனோ.... அவனை ஒன்றும் சொல்ல முடியாத பார்வை பார்த்தவன்.... பிறகு சொல்லுங்க பாஸ் இப்ப நான் என்ன பண்ணனும் என்றான்...


பரவாயில்லையே என்னோட பார்வைகாண அர்த்தத்தை கூட நல்லா புரிஞ்சு வச்சு இருக்க....உன்னை மாதிரி PA என்று அழுத்தி சொன்னவன் கிடைக்க நாங்க சாரி நான் புண்ணியம் பண்ணி இருக்கணும் ... குட்.... இப்போ நீ ஒரு இடத்துக்கு அவசரமா இப்பவே போகணும்....





கௌதம் நீ அவசரமா நம்மோட இன்னொரு பெங்களூரு பிராஞ்சுக்கு போக வேண்டி இருக்கு..... அங்க கொஞ்சம் ஏதோ ஒர்க்கர்ஸ் குள்ள சண்டை போல போலீஸ் கேஸ் ஆகிடும் போல .... இப்போ தான் அங்க இருந்த மேனேஜர் போன் பண்ணாரு... நீ இப்போ போய்ட்டு அங்க இருக்க நிலைமை சரி ஆன உடனே வந்தால் போதும் என்றவன்.... அவனிடம் மீண்டும் இப்போவே நீ கிளப்பினால் தான் சரியாக இருக்கும்.....ம்ஹ்ஹ்ஹ சீக்கிரம் சீக்கிரம் இன்னும் 1 மணி நேரத்தில் பிலைட் உனக்கு.... டிக்கெட் நம்மோட ஆபீஸ்ல மிஸ்டர் ராஜா கிட்ட இருக்கு வாங்கிட்டு கிளம்பு என்றவன்....
கௌதமின் பதிலை கூட கேட்க்காமல்.... அதுவரை தங்களை கவனித்து கொண்டு இருந்த விதுஷாவை தன்னோட எதிரில் இருந்த இருக் கையில் அமர சொன்னவன்....


அங்கே இவன் போக சொன்ன உடன் போகாமல் ஆணி அடித்தது போல இவர்களை நின்று வேடிக்கை பார்த்த கௌதம்மை கவனிக்கவும் தரவில்லை ...

அப்படி கவனிக்க தவறினால் அவன் ஒரு நல்ல பிசினஸ் மேன் என்ற கூற்று தவறாக அல்லவா ஆகிவிடும்.....



ஹேய் என்ன மேன் நான் இவ்வளவு சொல்லியும் போகாம நிக்குற.... எதுவும் கேட்கணுமா என்கிட்ட என்று புருவம் உயர்த்தி கேட்டான்....


இல்லை பாஸ் இதுக்கு நீங்க போனால் தானே சரியா இருக்குமுன்னு தோணுச்சு....அதான் கேட்டேன்.....



என்னது நான் போகணுமா? என்று கேட்டுகிட்டு தான் அமர்ந்து இருந்த சுழலும் நாற்காலியில் இருந்து கோபமாக எழுந்தவன்.... சட்டென்று கௌதம்மை நோக்கி கையை ஓங்கியவன்.... விதுஷா கவனிப்பதை நினைத்து.... இது என்ன புது பழக்கமாக இருக்கு... என்னையே எதிர்த்து பேசுற..... யாரு கொடுத்த தைரியம் இது உனக்கு.... நேத்து வரை ஒழுங்கா தானே இருந்த... என் பேச்சை எப்பவுமே மீற மாட்டியே.... என்றவன்....

இப்ப நீ பெங்களூரு போகல இனி இந்த கம்பெனி பக்கமே வரக்கூடாது..... உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..... இதோட எல்லாம் முடியுது என்றான்....



அது வரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த கெளதம்.....இவனது பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தவன் .மேலும் இங்கு இன்னும் நின்றால் பிரச்சனை பெரிதாககூடும் என்று எண்ணியவன்....


சாரி பாஸ் நானே போறேன் என்று சொல்லி விட்டு விறு விறு என்று அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்...


இவர்களுக்குள் நடந்த சண்டையை எல்லாம் அப்படியே ஆச்சரியமாக... இமை மூட மறந்து பார்த்து கொண்டு இருந்த விதுஷா முகத்திற்கு முன்பு சொடுக்கு போட்டு அவளை நடப்புக்கு கொண்டு வந்தவன்......


என்ன மிஸ். விதுஷா இதெல்லாம் எங்களுக்குள்ள ரொம்ப சாதாரணம்.... நாங்க இப்படி தான் செல்லமாக சண்டை போடுவோம் அப்பறம் சேர்ந்துக்குவோம்.... இதெல்லாம் பாஸ் மற்றும் PA குள்ள ரொம்ப சாதாரணம் நீங்க இதெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள் என்றவன்....


எங்க விஷயத்தை விடுங்க.. இப்போ கொஞ்சம் வேலை விஷயமாக பேசலாமா...... என்றவன்... தன்னுடைய மேஜையில் இருந்த ட்ராயரை திறந்து அதில் இருந்த ஒரு கவர் ஒன்றை அவள் முன்பு நீட்டியவன்....

அதை அவளை திறந்து பார்க்க சொன்னான்.... அதில் அவளை அவனது கம்பெனி இல் பேஷன் டிசைனராக நியமித்த கடிதம் இருந்தது..... அத்துடன் அவளை அந்த கம்பெனி மாடல் பதவியில் இருந்து ஒப்பந்த ரத்து செய்வதாக வேறு இருந்தது....அதை பார்த்த அவளால் அதை நம்பவே முடியவில்லை.... நேற்று போட்ட ஒப்பந்தத்தை இன்று ரத்து செய்து இருக்கிறான்... நேற்று அவன் பேசிய விதம்.... நடந்து கொண்ட விதமே வேறு... இப்பொழுது இப்படி பேசுகிறான்... என்று எண்ணினாள்....



பிறகு அவனே அதற்கான விளக்கமும் கொடுத்தான் .... சாரி நேத்து அந்த நேஹா..... என்று பல்லை கடித்தவன்... அவுங்க முன்னாடி அவுங்க போட்ட சவாலுக்கு தோற்க கூடாது... என்று தான் நான் உங்கள நடிக்க வச்சது... மத்தபடி உங்கள கட்டாய படுத்தி இருக்க கூடாது தான்..... விருப்பம் இல்லாத யாரையும் கட்டாயபடுத்தி எதுவும் செய்ய சொல்லுறது தப்பு ஆனால் எனக்கு வேற வழி இல்லை.. அவளை ஜெய்கனும் என்ற வெறி தான் அப்படி உங்கள நடிக்க வைக்க சொல்லிடுச்சு அவோளோ தான்.... என்றவன்..


எனி வே தேங்க்ஸ் பார் ஆல்... நீங்க செஞ்ச உதவிய நான் மறக்க மாட்டேன் என்றவன்... ஓகே உங்களுக்கு இங்க பேஷன் டிசைனேரா வேலை பார்க்க சம்மதம் தானே.... என்று கேட்டான்....



அவன் பேசிய அனைத்தையும் பொறுமையாக கேட்டவள்... ஓகே நேத்து நடந்த எல்லாத்துக்கும் நீங்க சொல்லுற காரணம் சரி தான்...ஏற்று கொள்கிறேன் ஆனால் நான் இங்க வேலைக்கு சேரணுமுனா... நீங்க ஒரு கண்டிஷன்க்கு ஒதுக்கிரனும்...


அது என்னனா இனி மேல என்னை உங்க கம்பெனி விளம்பரத்துல எக்காரணம் கொண்டு நடிக்க சொல்ல கூடாது...என்றவள் அப்பறம் நீங்க எனக்கு நான் தேடி வந்த வேலையை கொடுத்ததே பெரிய உதவி மாதிரி... என்னை என்னோட பேஷன் டிசைன் பண்ற வேலையை எந்த தொந்தரவும் இல்லாம பார்க்க விட்டாலே போதும்.... வேற எந்த உதவியும் வேண்டாம் என்றவள்
பிறகு நியாபகம் வந்தவளாக.... அவனிடம் தான் கொண்டு வந்து இருந்த அந்த காசோலை கவரை நீட்டினாள் ...அவள் கொடுத்த காசோலை கவரை முதலில் புரியாமல் பார்த்தவன் பின்பு அதை வாங்கி பார்த்தான் .... அதன் உரை பிரிக்கபடாமல் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டவன்... உடனே அவளிடம் என்னங்க விதுஷா இது... கவர் உள்ளே என்ன இருக்குனு பிரிச்சு கூட பார்க்கல போல ... இது என்னனு தெரியும்ல உங்களுக்கு...தெரிஞ்சுமா பிரிக்கல....இது உங்க நடிப்புக்கான சம்பளம் என்றான்...

ஓஓ அது நல்லா தெரியுமே எனக்கு, எதுக்காக குடுதிங்கனு கூட தெரியும்... அதுவும் இல்லாம அந்த பணம் மேல எனக்கு உரிமையே இல்லாத பொழுது .. அதை எதுக்கு பார்க்கனுமுனு பார்க்கல.... எனக்கு என்னோட சொந்த உழைப்பில் சம்பாதிக்கிற பணம் தான் பிடிக்கும்....இந்த மாதிரி உழைப்பே இல்லாம சொகுசா நடிச்சு சம்பாதிக்கிறது பிடிக்காது...அதனால் என்னை தப்பா நெனைச்சுக்காம இந்த பணத்தை நீங்களே வச்சுக்கங்க... எனக்கு தேவையில்லை.... என்றாள்



சரிங்க பணம் தான் வேண்டாம்னு நெனைச்சீங்க...ஆனால் அதுல உங்க நடிப்புக்கு எவ்ளோ சம்பளம் கொடுதோம் என்று கூடவா தெரிஞ்சுக்க நினைக்கல நீங்க ... என்றவன்.... சட்டென்று கவரை பிரித்து காசோலை தொகையை அவளிடம் காட்ட நினைத்து பிரிக்க போனவனின் கையை விதுஷாவின் மென்மையான கைகள் பிடித்து தடுத்து இருந்தது.....

அவளது கையின் ஸ்பரிசத்தில் நிமிர்ந்தவன்..... ஒரு நொடி ஏதோ ஒரு மாய உலகத்துக்கே சென்று வந்தவன் அதை அவளிடம் வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க.. சற்றே தலையை அசைத்து சம நிலைக்கு வந்தவன்....அவளை என்ன என்பது போல பார்க்க...


அவளும் தன்னை மறந்து அவனை தடுக்க அவனது கையயை பிடித்ததை நினைத்து சட்டென்று கையை எடுத்தவள்... சாரி சாரி நீங்க அதை என்கிட்ட காட்ட வேண்டாமே ப்ளீஸ்... அதை பத்தி நான் தெரிஞ்சுக்க விரும்பல அதான் உங்கள தடுக்க நெனைச்சு உங்க கைய பிடிச்சுட்டேன் என்று தன்னோட செயலுக்கு விளக்கம் கொடுத்து நின்றாள் அந்த பாவை...
அவளை வியப்புடன் பார்த்தவன்... இந்த உலகத்தில் பணம் மட்டுமே முக்கியம் என்று நினைப்பவர்கள் மத்தியில்...சொந்த உழைப்பில் சம்மதிக்காத பணமே வேண்டாம் என்று சொல்லும் இந்த பெண்ணை பார்த்து மனதிற்குள் எண்ணியவன் ...

இட்ஸ் ஓகே விதுஷா... உங்களுக்கு விருப்பம் இல்லைனா பரவாயில்ல.....என்றவன் அந்த காசோலை அடங்கிய கவரை சுக்கு...நூறாக கிழித்து அருகில் இருந்த குப்பை கூடையில் போட்டவன் .... பிறகு அவளிடம் உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்க நெனச்சேன்... என்று சொல்ல நினைத்தவன் பின்பு வேண்டாம்.... என்று முடிவெடுத்து விட்டு விட்டான்..
(ஒரு வேளை அவன் தான் கேட்க நினைச்ச கேள்வியை அப்பொழுதே கேட்டு இருந்தால்..... அவனும் அவளும் பின்னாளில் வருந்தும் அவசியம் வந்து இருக்காது... என்ன செய்வது விதியின் முடிவை யாரால் தான் மற்ற முடியும்.... )

பிறகு தன்னோட வாட்சை பார்த்து விட்டு இப்ப எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு....இப்ப நீங்க கிளம்புங்க.... இன்னைக்கு ரொம்ப டைம் ஆகிடுச்சு.... அதனால நாளைக்கு ஷார்ப்பா 10 மணிக்கு வந்துடுங்க..... நீங்க நாளைல இருந்து உங்க வேலை பார்க்க ஆரம்பிக்கலாம்... என்றவன்...அவள் சென்று விட்டாளா என்பதை கூட கவனிக்காமல் தன்னுடைய மடி கணினியை எடுத்து தனக்கு வந்த மெயில்களை செக் செய்ய ஆரம்பித்தான்....

இப்போ வரை நன்றாக தன்னுடன் பேசி கொண்டு இருந்தவன்... இப்பொழுது தான் அங்கு இருந்து சென்று விட்டோமா என்று கூட கவனிக்காமல்...தனது வேலையை பார்ப்பவனை பார்க்க பிடிக்காமல்... சட்டென்று அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்....

அவள் கோபதோடு கதவை திறந்து கொண்டு வெளியேறுவதை பார்த்தவன்...மனதுக்குள் சிரித்து கொண்டவன்..... அவள் அங்கே இருந்து சென்றதை உறுதி செய்தவன்...


அவனது மொபைல் போனில் இருந்த அவளது போட்டோ அனைதையும் ரசிக்க ஆரம்பித்தவன் .... அவளது கண்களை பார்த்து மயங்கியவன் அது ஆபீஸ் என்பதை மறந்து தன் அறையில் பேசுவது வெளியே யார்க்கும் கேட்க்காது என்ற தைரியத்தில் “ உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் அன்பே.... தூரத்தில் தோன்றிடும் வானவில் போலவே நான் உன்னை பார்க்கிறேன் அன்பே “ என்றே பாடியபடி.... அப்பொழுது தான் கவனித்தான் தனது தாத்தா விடம் இருந்த வந்த தவறிய அழைப்புகளை....




இந்த நேரத்தில் கூப்பிட மாட்டாரே என்னவாக இருக்கும் என்று நினைத்தவர்.....

அவரோட எண்ணுக்கு திரும்ப அழைக்க அது ரிங் போய்ட்டு கட் ஆனது....
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,
உன் விழிகளில் நான் தொலைக்கிறேன் அத்தியாயம் 16 மற்றும் 17 போட்டுட்டேன்... படிச்சுட்டு எல்லாரும் கண்டிப்பா கருத்து சொல்லுங்க... இது முதல் கதை அதனால் நிறைய தவறுகள் இருக்கலாம்... நீங்க சொன்னால் மாற்றி கொள்கிறேன்...
நன்றி
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -18


தன்னுடைய தாத்தாவிடம் இருந்து மறுபடியும் அழைப்பு வர....

கம்ப்யூட்டர் திரையில் தெரிந்த தனது மனம் கவர்ந்த தேவதை விதுஷாவின் போட்டோவை பார்த்து கொண்டே ..... எடுத்து பேசினான்


சொல்லுங்க தாத்தா என்றான்..... நிறுத்தி நிதானமாக.... அவர் தன்னிடம் எதை பற்றி கேட்க போகிறார் என்பதை முன்பே அறிந்தவனாக.......

ஆனால் அவனது தாத்தாவோ எடுத்தவுடன் பொறுமை இழந்தவராக அவனிடம் கேள்வி கேட்டார்...


டேய் ஆர்யா.... நீ பண்றது எல்லாம் சரியா சொல்லு? ஏன்டா இப்படி பண்ற ? என்றார் தாத்தா.... (தாத்தா கோபத்தில் இருக்கும் பொழுது ஆர்யா என்று தான் அவனை கூப்பிடுவார் )

என்ன தாத்தா போனை எடுத்த உடனே ஏன் இப்படி பண்ண? ஏன்டா இப்படி பண்ணணு தான் கோபமாக கேள்வி கேட்க்குறீங்களே தவிர .....அப்படி உங்களுக்கு கோபம் வர மாதிரி நான் என்ன பண்ணேன்னு சொல்ல மாட்டேங்கிறீங்க....

ஏன்டா உன்னை பற்றி தெரியாதா ஆளா நானு... அதெல்லாம் நல்லா விவரமா ஒண்ணுமே தெரியாத மாதிரி தான் கேட்ப.... என்ன பண்ணேன்... ஏது பண்ணேன்னு..... நான் இப்ப உன்கிட்ட என்ன கேட்க போறேன்னு உனக்கு நல்லா தெரியும்னு எனக்கும் தெரியும்.... டா... எல்லாம் தெரிஞ்சு கிட்டே தெரியாத அப்பாவி மாதிரி ஆக்ட்டிங் போடாத டா... அது உனக்கு செட் ஆகாது....




மீண்டும் தாத்தாவை சீண்டி பார்க்க நினைத்து.... உண்மையாவே எனக்கு நான் பண்ணேன்னு தெரியாது மை டியர் தாத்தா..... என்று இழுக்க....






டேய் நீயெல்லாம் கேள்வி கேட்க வந்த என்னையேவே கேட்க வந்த விஷயத்தையே மறக்க வச்சுடுவ .... ஓகே இப்போ நீ என்ன பண்ணேன்னு உனக்கே தெரியல தான் அதையும் நான் முழுசா நம்பிடேன் ..... அதனால் இப்ப நானே சொல்லுறேன் தெரிஞ்சுக்க.....என்ன ஏதுன்னு....



நீ இன்னைக்கு எதுக்காக நம்ம கௌதம பெங்களூர் ஆபீஸ்க்கு அனுப்பி வச்ச அதை சொல்லு....

ஏன் தாத்தா அவனை அங்கே அனுப்ப கூடாதா என்ன? அவன் என்னோட BA னு உங்களுக்கு தெரியாதா என்ன? இந்த மாதிரி அனுப்ப தான் அவனை சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சு இருக்கேன்.... என்றான்

அவனை அனுப்புனது தப்பு இல்லை ஆனால் அங்கே அனுப்புனது தான் தப்பு......எந்த ஒரு தேவையும் இல்லாம....எந்த ஒரு காரணமும் இல்லாம எதுக்கு அவனை அங்கே அனுப்புன சொல்லு ....

காரணம் இல்லைனு யாரு சொன்னது தாத்தா காரணம் எல்லாம் என் பக்கம் நல்லா ஸ்ட்ராங்கா தான் இருக்கு..... அதான் அவனை பெங்களூருக்கு அனுப்பி வச்சேன். . இனி அவன் இங்க வர வேண்டாம் அப்படி வந்தனா நான் மறுபடியும் லண்டன் போய்டுவேன் திரும்பி வர மாட்டேன்.... பார்த்துக்கங்க.... அப்பறம் என்னை பிரிஞ்சு வருதப்படுவீங்க...... சொல்லிட்டேன்....


மேலும் உங்களுக்கு இந்த விவரம் யாரு சொல்லி இருப்பானு எனக்கு நல்லா தெரியும்.. அந்த கவ்தம் கௌ பையன் தானே சொன்னான் .. அவன் இங்க மட்டும் வரட்டும் இங்க வச்சுகிறேன் பொடி பய.... உங்க கிட்ட போன் பண்ணி சின்ன பிள்ளை மாதிரி அழுது புலம்பி போட்டுவிட்டனா என்ன? அவனை என்று பல்லை கடிக்க ......

இப்போ அவனை ஏண்டா திட்டுற... அவன் ஒன்னும் என்கிட்ட சொல்லல... அங்க பெங்களூர் கம்பெனி GM மிஸ்டர். சீனிவாசன் இன்னைக்கு எனக்கு போன் பண்ணி இருந்தரு கொஞ்சம் எஸ்ப்போர்ட் விஷயமா பேச.... அப்போ தான் சொன்னாரு கெளதம் அங்க வந்து இருக்கான் என்றும் ஏதோ ஒர்க்கர்ஸ்குள்ள பிரச்னை என்றும் அதை சரி பண்ண சொல்லி நீ தான் அவனை அவசரமா அனுப்புனதா வேற சொல்லி இருக்கான்.....


ஏன்டா பெங்களூர் கம்பெனி முழுசும் என்னோட கட்டுப்பாட்டில் தான் இருக்கு.... அங்க என்ன நடந்தாலும் எனக்கு தான் முதலில் தகவல் வரும்.... அப்படி இருக்கும் பொழுது நீ எப்படி இன்னைக்கு கவுதம்ஐ அங்க அனுப்புன என்கிட்ட கேட்கமா?


அவனும் நீ சொன்னதை உண்மைனு நம்பி அங்க போய் இருக்கான்.... போனதும் இல்லாம ஒரு வார்த்தை கூட என்கிட்ட நடந்த எதையுமே சொல்லல அவன்....நான் சீனிவாசன் சொன்ன பின்னாடி அவன் கிட்ட போன் பண்ணி கேட்க்குறேன்... எனக்கு தெரியாது எதுனாலும் பாஸ் கிட்ட கேளுங்கன்னு சொல்லுறான்.... நானும் விடாம டேய் அவன் சொன்னான்னு அங்க எதுக்கு டா போன என்கிட்ட கேட்கமானு கேட்ட... பதில் சொல்லமா அமைதியா இருக்கான் டா.... சரி போனது தான் போன அங்க என்ன ஏதுன்னு தெரியாம...... இப்ப தான் அங்க எந்த ஒரு பிரச்சனையும் இல்லைனு தெரிஞ்சு போச்சுல...இன்னும் எதுக்குடா அங்க இருக்க.... ஒழுங்கா திரும்ப வாடனா.... அதுக்கும் என்னோட பாஸ் சொல்லட்டும் வரேன்னு சொல்லுறான்....திமிரா என்கிட்டவே


டேய் என்ன தாண்ட நெனைக்கிறிங்க ரெண்டு பேரும்... உங்களுக்குள்ள என்ன தாண்ட நடக்குது.... எனக்கும் என் பொண்டாட்டிக்கும் கூட இவோலோ அண்டர்ஸ்டாண்டிங்
இருந்தது இல்லை டா உங்க அளவுக்கு..... அப்படி எப்பூடி டா நீங்க இவ்வளவு கிளோஸ்சா இருக்கீங்க....

அய்யோ தலை வலிக்குதுடா... உங்கள பற்றி யோசிச்சாலே அவன் தான் வாத்து மடையன், முட்டாள் மாதிரி நீ சொன்னதை கேட்டுட்டு அப்படியே என்ன ஏதுன்னு என்கிட்ட கூட கேட்க்காம போய்ட்டான்.... இப்போ நீ சொல்லுடா எதுக்குடா அவனை அங்க அனுப்பி வச்ச? டென்ஷன் ஏற்றமா அவனை திரும்பி வர சொல்லுடா.....


அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது... அதெல்லாம் என்னோட பர்சனல் மேட்டர் தாத்தா.... அவன் எனக்கு கொஞ்சம்...இல்லை இல்லை நிறையவே ஒரு விஷயத்தில் இடைஞ்சலா இருந்தான் அதான் பொய் சொல்லி அனுப்பி வச்சேன் அவோளோ தான்... அவன் இருந்தால் எதுவும் எனக்கு எதுவும் சரிப்பட்டு வராது.... செட் ஆகாது போல....

என்னது பர்சனல் மேட்டரா.... அது என்னடா எனக்கு தெரியாத பர்சனல் மேட்டர் உன்கிட்ட இருக்க போகுது....உனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து என்கிட்ட நீ சொல்லாத விஷயம் இல்லை... உன் வாழ்க்கைல எது நடந்தாலும் என்கிட்ட சொல்லாம நீ தூங்கினது இல்லியே கடைசியா நீ பழகுனா பொண்ணு பத்தி கூட வரி வரியா சொன்னியே டா... அவ பேரு கூட.....அய்யோ மறந்து போச்சே நல்ல பேரு அது கூட.... ம்ம்ம்ம்ம் கண்டுபுடுச்சுட்டேன்.... தியாவோ கியாவோனு கூட சொன்னியே டா என்று இழுக்க....


யோ தாத்தா நீ தாத்தா மாதிரியா பேசுற...ஒரு பேரன் கிட்ட பேசுற பேச்சை பாரு... . ஒரு பேரனோட பர்சனல் பத்தி நீ பேசலாமா... அறிவு இருக்கா உனக்கு... என்று கேட்க.. .


டேய் பேச்சை மாத்த பார்க்குறியா ராஸ்கல்....நானா டா கேட்டேன் உன்னோட பர்சனல் விஷயங்களை நீயா தானடா “தாத்தா தாத்தா நீ என்னோட பெஸ்ட் பிரின்ட்டு உன்கிட்ட என் பர்சனல் விசயத்தை சொல்லுறது தான் என்னோட ட்ரெண்டுனு... “அப்பறம் அன்னைக்கு ஒரு பாட்டு கூட பாடினியே டா.... சமந்தா பொண்ணு கூட புறா வோட நிக்குமே அந்த பாட்டுல “ உன்னை விட்டால் யாரும் எனக்கில்லை பாரு பாரு தாத்தா தாத்தான்னு சொன்னேயே டா....இப்போ என்னை அறிவு இருக்கானு கேட்க்குற வாய் கூசாம... அன்னைக்கே சொன்னா என்னோட அன்னலகஷ்மி “மாமா சின்ன பய கூட சேராதிங்கோ அவன் ஒருநாள் அவனோட புத்திய கட்டிப்புடுவான் என்று சொன்னாளே ”அப்போ அவ பேச்சை ஒழுங்கா காது கொடுத்து கேட்டு இருந்தால் இப்போ உன்கிட்ட பேச்சு வாங்கி இருக்க மாட்டேன்.... என்று போலியா கண்ணீர் சிந்தியவர்

இங்க பாருடா இப்போ என்கிட்ட நீ சொல்லாடினாலும் அவனை பெங்களூர் எதுக்கு அனுப்பி வச்சேன்னு எனக்கு நல்லாவே தெரியுமே....ஏன்னா நீ என்னோட பேரன் டா... நீ இப்படி நடக்க காரணம் அந்த பொண்ணு தானே ... நேத்து ரொம்ப நேரமா பேசுனியே அவளை பத்தி... அவ பேரு கூட ஏதோ சா னு முடியுமே ....



அவ மேல உனக்கு இருக்க விருப்பம் போல கெளதமுக்கும் இருக்கு போல அதை நீ தெரிஞ்சுக்கிட்டு அவனை நைசா கழட்டி விட பார்க்குற.... ஒருவேளை அந்த பொண்ணு அவன்கிட்ட மயக்கிடுவாள்னு நெனைக்குற ... அவன் உன் பக்கதில் இருக்குறது உனக்கு இடைஞ்சல்... ஏன்னா கவுதம் உன்னை மாதிரியே அழகு, திறமை இருக்க பையன்.... அதனால் அவனை பார்த்து பயப்படுற நீ என்று சரியான காரணத்தை சொன்னவர்....


அவன் பக்கம் இருந்து அப்படி ஒன்றும் இல்லை தாத்தா என்ற மறுத்து பதில் வரவில்லை என்பதை மனதிற்குள் உறுதி செய்தவர்....





மேலும் தொடர்ந்தார்.... டேய் செல்லம் அது ரொம்ப தப்பு டா... உனக்கு எப்பூடி ஒரு பொண்ண பார்க்க ரசிக்க பேச உரிமை இருக்கோ அந்தளவு அவனுக்கும் இருக்கு..... அதை நீ எதுக்கு தடுக்கனும் ..... அவனை எதுக்கு போட்டியா எதிரியா நினைக்கிற... என்ன இருந்தாலும் அந்த பொண்ணு நேத்து வந்தவ அவளுக்காக உன்னோட உண்மையான நண்பனை இழந்து விடாதே...அவன் உனக்கு எத்தனை வருட பழக்கம்.... எப்பூடி பட்ட பழக்கமுன்னு நான் சொல்லி தான் உனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லைனு நினைக்குறேன்....




அதுவும் இல்லாம எப்போவுமே தனியா நீயா ரேஸ்ல ஓடி ஜெய்கிறது தான் வெற்றி என்று நெனைக்குற ஆனால் அது இல்லைபா வெற்றி... நம்மள மாதிரி தகுதி இருக்க மத்தவுங்க கூட சேர்ந்து ஓடி அவுங்க கிட்ட போட்டி போட்டு ஜெய்கனும்... அது தான் உண்மையான வெற்றி...
அது மாதிரி தான் நம்ம வாழ்க்கையும் அதனால் அவன் உரிமையை அவன் கிட்ட கொடு.... நீயும் அந்த பொண்ணு கிட்ட உனக்கு பிடிச்ச மாதிரி...அவளை கவரும் படி பேசு பழகு நடந்துக்க ... அவனையும் பழக பேச விடு....எப்போ அவளுக்கு உங்க ரெண்டு பேதுல யாரை பிடிக்குதோ அவனை அவள் விரும்புவாள்.... ஒருவேளை உன்னை கூட பிடிக்க வாய்ப்பு இருக்கு அவளே உன்னை விரும்பவும் வாய்ப்பு இருக்கு....இல்லை ரெண்டு பேரையும் பிடிக்காம போகலாம்... போட்டி இருக்குறது நல்லது தான் அது ஆரோக்கியமான போட்டியா இருக்கணும்... ஆனால் இந்த மாதிரி ஏமாற்று வேலை பண்ண கூடாது... இப்போ அவன் உன்னை நம்பி பெங்களூர் போய் இருக்கான்.... நாளைக்கு நீ பொய் சொல்லி அனுப்பி வச்சேன்னு தெரிஞ்சா அவன் ரொம்ப வருத்தப்படுவான் டா.... அதுவும் நேத்து வந்த பெண்ணுக்காகனு தெரிஞ்சா அவன் மனசு எவ்ளோ பாடுபடும் சொல்லு.... அதனால் அவன் வந்த உடனே ஏதாவது சொல்லி சமாளி....



இன்னொரு நீ நேத்து அவளை பத்தி பேசுன பேச்சுளையே தெரிஞ்சு போச்சு நீ எவ்ளோ விரும்புறனு.... அதனால் அவ கிட்ட உன்னோட விளையாட்ட காட்டிடாத..... அவளுக்கு நீ எப்போவும் உண்மையா இருக்கணும்.... நீ லண்டன்ல இருக்கப்ப பழகுவியே அந்த மாதிரி கேத்ரினாவை வர சொல்லிட்டு கரீனா கூட டேட்டிங் போவியே அந்த கதை எல்லாம் இங்க செல்லு படி ஆகாது....


குறிப்பாக சொன்னா நம்ம தமிழ் பொண்ணுக கிட்ட இந்த மாதிரி பண்ண ஜென்மத்துக்கும் உன்னை ஏத்துக்க மாட்டாங்க பா....அவுங்களுக்கு அவுங்க கிட்ட பழகுற ஆண் அவுங்க கிட்ட கடைசி வரை உண்மையா இருக்கணும்...வேற பொண்ண நினைக்காத உத்தமனா இருக்கணும் அவோளோ தாண்டா பேராண்டி . பார்த்துக்கோ பா

இதுக்கெல்லாம் நீ ஒத்து வருவேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை டா... ஆனால் நம்ம கெளதம் ஒத்து வருவான்... ஏன்னு கேட்டேனா அவனோட குணம் அப்படி....ஒரு வரில சொன்னா அவன் நூறு சதவீதம் ஒரு நல்ல ஆண் மகன்..... என்றவர்



அந்த பொண்ணு விஷயத்தில் எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டேன் ஒரு தாத்தா என்ற முறையில்... இனி உன்னோட முடிவு தான்...


ஓகே தாத்தா நீங்க சொன்னதை ஒத்துகிறேன் நீங்க சொன்ன மாதிரி தான் நான்... ஆனால் என்னோட உண்மையான குணத்தை வச்சே ஒரு பொய் கூட அவகிட்ட சொல்லாம.... நான் நானாகவே நடந்து அவளை என்னை விரும்ப வைக்கிறேன்.... போதுமா....


அது போல கௌதமை கூட இனிமேல் எனக்கு இடைச்சலாக நெனைக்க மாட்டேன்.... அவனும் அவளோட பேசட்டும்... பழக்கட்டும்.... நான் தடை போட மாட்டேன்....


ஆனால் கடைசியா ஜெயிக்க போறது நான் தான்.... எனக்கு நம்பிக்கை இருக்கு.... அவள் எனக்கு தான்... அவளை என்னை காதலிக்க வச்ச பின்னாடி தான் உங்கள பார்க்க கூடிடு வருவேன் அதுவரை நீங்க அவளை போட்டோல கூட பார்க்க நினைக்க கூடாது ஓகே...



அப்பறம் இந்த போட்டியில் எனக்கு யாரு ஜெயிச்சாலும் ஓகே தான்...எனக்கு நீ வேற... கெளதம் வேற இல்லை... ரெண்டு பேருமே எனக்கு பேரன் தான்.... ஆனால் நேர்மையான வழியில் ஜெயிக்கணும்.... என்றவர்... மேலும் சில விஷயங்களை பேசி விட்டு போனை வைத்தவர்... இறைவா இது எங்கு போய் முடியும் என்றே தெரியவில்லை... தயவுசெய்து என்னோட ரெண்டு பேரன்களுக்கு இடையில் எதுவும் பிரச்சனை வரலாம் பார்த்துக்கோ... என்று மணமுருக வேண்டினார்... ஏன் என்றால் ஆர்யனின் குணம் அப்படி.... தனக்கு பிடித்த ஒன்று கிடைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ஆனாலும் செய்ய கூடியவன்... அது தான் அவரை பயம் கொள்ள வைத்தது... இறைவனை வேண்ட வைத்தது...

ஆனால் வர போகும் நாட்களில் அந்த இறைவன் கூட அவரை காப்பாற்ற போவதில்லை என்பதை தெரியாமல்... அந்த வயதான மனிதர் நிம்மதியாக உறங்க சென்றார்...

விழிகள் தொடரும்...
 
Status
Not open for further replies.
Top