All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் பாரு சிஸ்,

எண்ணங்களே மழைச்சாரலாய் கதை மிக அருமையாக இருந்தது. உங்கள் எழுத்து நடை சிறப்பு.👏👏👏

சக்கரவர்த்தினி, செம்பவளன், ராயன், சந்தனநிலவன்,இலக்கியா, ஷாந்தனு என வித்யாசமான பெயர்கள்...வனஜா மட்டும் கொஞ்சம் வழக்கமான பெயராகி விட்டது என்றாலும் பாத்திரங்கள், அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், வில்லன்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என அனைத்தும் நன்றாக இருந்தது.👍👍👍

சக்கரவர்த்தினியின் கதாபாத்திரத்தின் நிமிர்வுக்கு அவள் சந்தனநிலவனைத் திருமணம் செய்ய எடுத்த முடிவுக்கு சொல்லும் காரணம் கொஞ்சம் குறைவாக தெரிந்தது. தந்தையின் கட்டாயமெல்லாம் அவளுக்குத் தூசு...அவர் என்ன முயன்றாலும் அதிரடியாகத் தாலியே கட்ட வைத்தாலும் வாழப் போவது அவள்தானே...மறுக்க அவளால் முடியுமே... ஆனால் செம்பவளன் இன்னொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டான்...தானும் அவன் முன் இன்னொரு துணையுடன் நிற்க வேண்டும் என ஈகோ காரணமாக அவள் முடிவெடுத்திருந்தால் அதுவும் அவள் கதாபாத்திரத்துக்கு கொஞ்சம் immatured ஆக தோன்றியது. இதில் சந்தனநிலவன் இறக்காமல் இருந்திருந்தாலாவது அவள் எடுத்த முடிவு அத்தனை முக்கியம் இல்லாததாகப் போயிருந்திருக்கும்...அவன் இறந்தது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.🙁🙁🙁

மொத்ததில் கதை நன்றாக இருந்தது. 👌👌👌

இந்தக் கதைக்குப் பொங்கல் வரும் வரை மாலினி ராஜா தான் பார்வதி வெங்காசலம் என்பதை நான் அறிந்து கொள்ளவேயில்லை...உங்கள் முந்தைய கதைகளைப் படித்ததும் இல்லை. இனி வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகப் படிக்கிறேன்.

மென்மேலும் நல்ல படைப்புக்களைப் படைத்து சிறந்திட வாழ்த்துக்கள் சிஸ்
:smile1::smile1::smile1:

நலம் நாடும் தோழி
தூரிகா
மிக்க நன்றி தூரிகாமா 🙏🙏🙏 உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். வர்த்தினி மாறியதன் காரணம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும். அடுத்த கதை எழுதும்பொழுது இன்னும் கவனமாக இருக்கிறேன் தூரிகாமா... நான் உங்களின் வெளிப்படையான கருத்தை படித்ததில் மிகவும் மகிழ்கிறேன் தூரிகாமா... உங்கள் நலம் விரும்பும் அக்கறையில் மூழ்கினேன் தோழி... மிக்க நன்றி🙏🙏🙏😍😍😍💖💖💖😘😘😘
 
Top