All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அவளே என் அகராதி..!" - கருத்துத் திரி.

S.Sivagnanalakshmi

Well-known member
அருமையான காதல் கதை.கண்ணைப்பற்றிய விளக்கமும் சூப்பர்.வாழ்த்துகள் . வாழ்கவளமுடன்.
 

V.K.Velvizhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழகான கதை, கண்களில் இவ்வளவு இருக்கிறதா என்று தாங்கள் எழுதியதில் அறிந்தேன்,பெண்களை உயர்தி ,தப்பு செய்யும் ஆணுக்கு தண்டனை வழங்கியும்,பெற்றால் தான் அம்மாவா, வளர்த்தாலும்அம்மா தான் என்று மிகவும் அழகாக கருத்தை எழுதினீர்கள்.கடவுள் அருளால் உங்கள் எழுத்து நடை தொடரட்டும்....என்று வாழ்த்துகிறேன்.
 

thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் சிஸ்,

நான் முதல் முதலாகப் படிக்கும் உங்களுடைய கதை...மிக அருமையாக இருந்தது.👌👌👌

கண்களைப் பற்றி ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் குறிப்புக்களால் விளக்கியது நன்றாக இருந்தது சிஸ்.👏👏👏

இந்தக் கதை நாயகிக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. இவளைப் போலவே திருமணம் என்றால் யாருடன், எப்படி, நம்மால் அனுசரித்துப் போக முடியுமா என்ற பயத்துடன் 22 வது வயதில் இருந்து 27 வரை திருமணத்தைத் தள்ளிப் போட்டவள் நான். கடைசியில் என் பெற்றோர் யாரையாவது காதலித்தால் கூட சொல் முடித்து வைக்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு என்று வையுங்களேன்...😀😀😀

பின் எனக்கென ஒருவர் வந்தார் மனம் மாறியது...மணமும் முடிந்தது.

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் உங்கள் நாயகியை என்னால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது...அதனாலேயே கதையை ஆர்வமாகப் படித்தேன்.

அருமையாகக் கொண்டு சென்று அழகாக முடித்திருந்தீர்கள்... வாழ்த்துக்கள்💐💐💐💐💐🤝🏻🤝🏻🤝🏻👏🏻👏🏻👏🏻
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான காதல் கதை.கண்ணைப்பற்றிய விளக்கமும் சூப்பர்.வாழ்த்துகள் . வாழ்கவளமுடன்.
ஆரம்பத்திலிருந்து அளித்த தொடர் ஆதரவிற்கு நன்றி மா☺
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழகான கதை, கண்களில் இவ்வளவு இருக்கிறதா என்று தாங்கள் எழுதியதில் அறிந்தேன்,பெண்களை உயர்தி ,தப்பு செய்யும் ஆணுக்கு தண்டனை வழங்கியும்,பெற்றால் தான் அம்மாவா, வளர்த்தாலும்அம்மா தான் என்று மிகவும் அழகாக கருத்தை எழுதினீர்கள்.கடவுள் அருளால் உங்கள் எழுத்து நடை தொடரட்டும்....என்று வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி மா☺ ஒவ்வொருவரின் கருத்தும் எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இன்னும் நல்லா எழுதணும்னு தோணுது. தேங்க்ஸ் அ லாட் மா😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சிஸ்,

நான் முதல் முதலாகப் படிக்கும் உங்களுடைய கதை...மிக அருமையாக இருந்தது.👌👌👌

கண்களைப் பற்றி ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் குறிப்புக்களால் விளக்கியது நன்றாக இருந்தது சிஸ்.👏👏👏

இந்தக் கதை நாயகிக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. இவளைப் போலவே திருமணம் என்றால் யாருடன், எப்படி, நம்மால் அனுசரித்துப் போக முடியுமா என்ற பயத்துடன் 22 வது வயதில் இருந்து 27 வரை திருமணத்தைத் தள்ளிப் போட்டவள் நான். கடைசியில் என் பெற்றோர் யாரையாவது காதலித்தால் கூட சொல் முடித்து வைக்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு என்று வையுங்களேன்...😀😀😀

பின் எனக்கென ஒருவர் வந்தார் மனம் மாறியது...மணமும் முடிந்தது.

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் உங்கள் நாயகியை என்னால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது...அதனாலேயே கதையை ஆர்வமாகப் படித்தேன்.

அருமையாகக் கொண்டு சென்று அழகாக முடித்திருந்தீர்கள்... வாழ்த்துக்கள்💐💐💐💐💐🤝🏻🤝🏻🤝🏻👏🏻👏🏻👏🏻
நன்றி தூரிகாமா☺ நிஜமாவே உங்கக் கமெண்ட் பார்த்து, மித்க்கிறேனா? இல்லைபறக்கிறேனா? தெரியலை. நிறைய பேர் இதே பயத்துடன் இருக்கிறாங்க ☺ ஏனோ யாருமே அதை வெளியில் சொல்றதில்லை. ஒரு பொண்ணு திருமணம் வேண்டாமெனச் சொன்னாலே "யாரையாவது லவ் பண்ணுறியா?" அது தான் அடுத்தக் கேள்வியாகிடுது. அதனாலேயே பாதி பேர் வெளியே எதையும் சொல்வதே இல்லை.

பொண்ணு மனசு ஆழம்னு சொல்றாங்களே ஒழிய, புரிஞ்சிக்க முயற்சி செய்றதே இல்லை. நிதுலன் போல உங்க ஹீரோ தான் உங்களை மாற்றியிருக்கிறார்😂😂

உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. நெஞ்சார்ந்த நன்றிகள் தூரிகா மா☺
 
Top