All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
ஈஸ்வரின் கேள்விகளுக்கு ஜீவின் பதிலடி அருமை. மான்வி குறித்த பேச்சு வந்தவுடன் அவள் உடனே செல்பேசியை அவனிடமிருந்து பறித்து ஈஸ்வரிடம் கோபம் பொங்க தொடுத்த வார்த்தை கணைகள் அனைத்தும் அவனை சரமாரியாக தாக்கியது. இவனுடைய ஒழுக்கக்கேடே அவளையும் அவ்வாறு பேச தூண்டுகிறது. தன் தவறை மறைக்க அவள் மேல் பலி போடுகிறான். இவனின் ஒழுக்கமின்மையே அவளை சந்தேகிக்கிறது. ஜீவ் மான்வியின் மேல் பயங்கர மேட் டாக ஆகிகொண்டே போகிறான், அவளையும் அவளறியாமல் மேட் ஆக்கிக்கொண்டிருக்கிறான். அவள், ஈஸ்வர் என்று நினைத்து கொள்ள போகிறார்கள் என்பதும், இவன் பதிலுக்கு அப்போது அவன் செய்தால் தவறா என்பதும், இருவரின் அழைப்பிலும் சிரஞ்ஜீவ் - ஜீவ் ஆனது, மான்வி - மானு ஆகியதிலிருந்தே தெரிகிறது. மேலும் மான்வியிடம் காதல் கொண்ட உன் மனம் அலைபாயுது, என்னிடம் உறுதியை எதிர்பார்க்கிறது.... என தொடங்கும் பத்தியில் அவள் மனதை அப்படியே உணர்த்திவிட்டான். ஆனால் அவள் அதை உணர்ந்து கொண்டாளா என்பது ஐயமே. வெங்கட்டிற்கு ஆபத்து என்றவுடன் மிக துரிதமாக செயல்பட்டு தான் இருந்த நிலையிலும் அம்மூவரையும் வீழ்த்தி அவனை காத்து ஈஸ்வரின் திட்டத்தை தவிடுபொடி ஆக்கிவிட்டான். மான்வியையும் கோவிலுக்கு அனுப்பி அங்குள்ளவர்களையும் செயல்பட முடியாதவாறு செய்துவிட்டான். இவன் ரவீந்தரை வெளிப்படையாகவே அவனிடம் அனுப்பிவைத்தான், ஆனால் அவன் முதுகிற்கு பின்னாலே ஒவ்வொன்றும் செய்கிறான். வெங்கட்டை காப்பாற்றி அவனிடம் மான்வியை இனி ஈஸ்வர் மனைவி என்று சொல்லாதே என்று சொல்லியது, பாபுவை கண்ணசைவில் வேலை வாங்கியது, பின் ஈஸ்வரிடம் இதுவும் பெய்லியர் தான் என சொல்லி சிரிப்பது என அனைத்து செய்கைகளிலும் அவன் மிடுக்கு கூடி கொண்டே போகிறது. வாவ் வாவ் பதிவுகள்.
 
Top