காதல் 1 :
சென்னையில் வசிக்கும் பெரும் புள்ளிகள் தங்களின் வீட்டு விசேஷங்களுக்கும் திருமணத்திற்கும் தேர்வு செய்யப்படும் மிக பிரமண்டபமான திருமணமண்டபங்களில் ஒன்றான மண்டபம் வடபழனி முருகன் கோயிலில் இருந்து சற்றே தள்ளி மிகவும் பிரமண்டபமாக அமைத்திருந்தனர்.
இந்த மண்டபம் இங்கு அமைந்துள்ள முக்கிய காரணமே எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் வடபழனி முருகன் சன்னிதானத்தில் தங்கள் வீட்டு திருமணங்களை நடத்த விரும்புவர்.அவ்வாறு கோயிலில் திருமணம் முடித்து மண்டபத்திற்கு தான் செல்வர்.அங்கு இதே பூல் நிறைய மண்டபங்கள் இருந்தாலும் சற்று மெய்னில் தான் இருக்கும்.இது மெய்னில் இருந்து தள்ளி அமைத்துள்ளதால் வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் மிக பிரமண்டபமாக அமைத்திருந்தனர்.
அந்த மண்டபத்தின் வெளியில் கார்களும்,இரு சக்கர வாகனங்களும் வந்து பார்க்கிங் ஏரியாவில் அலைமோதி கொண்டும்,சலசலத்துக்கொண்டும் இருந்தது என்றால் மண்டபத்தின் உள்ளே பெரியவர்களின் பேச்சு குரல்களும்,சிறுவர்கள் ஒரு கவலையும் இன்றி பட்டாம்பூச்சிகளாய் சந்தோஷத்துடன் சுற்றி கொண்டும்,மண்டபத்தின் ஒலிபெருக்கியில் ஒலிபரப்ப பட்ட பாடல்கள் அந்த மண்டபத்தை மட்டும் அல்லாது சுற்று வட்டாரத்தையும் அதிர செய்து கொண்டு இருந்தது.
ஆனால் அந்த விழா நாயகன் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பு என்ற ஒன்றே இல்லாது,( இல்லாது என்று சொல்வதை விட சிரிக்க மறந்திருந்தான் என்று சொல்வதே பொருத்தமானது.) முகம் மட்டும் அல்லாது உடம்பும் இரும்பை போன்று இறுக காட்சியளித்து கொண்டிருந்தது.தன் முன் அமர்ந்து மந்திரத்தினை ஓத சொல்லியும்,திருமண சடங்குகளை செய்ய சொல்லியும் படாதபாடு படுத்தி கொண்டிருந்தார் ஐயர். வெளியில் பார்ப்பவர்களுக்கு அவனின் இறுக்கமான முகம் தெரிந்தாலும் உள்ளுக்குள் கண்ணாடி போல் சுக்கு நூறாக உடைந்த வேதனையுடன் அமர்ந்திருந்தான். அனாலும் அவனின் வாயும் கைகளும் மந்திரத்தை ஓதி கொண்டும்,சடங்குகளை செய்து கொண்டும் முனைப்பாய் இருந்தது.அவனின் மன வேதனையை அறிந்த மூன்று நபர்கள் தன் உடன் பிறந்த தங்கை,தன் உயிர் தோழனும் மாமன் மகனும்,மணப்பெண்ணின் தோழியும்.
மணமகன் கோலத்தில் அமர்ந்திருந்த மாப்பிளையை மண்டபம் முழுவதும் இருந்த இளம் பெண்கள் ஏக்க பெருமூச்சு விடும் அளவு சிக்கச் சிவேலென்று சிவந்த மேனியும்,கத்தி முனைகளை ஒத்த கூரிய பார்வையை தாங்கிய விழிகளும், கூர் நாசியும்,சிரிப்பை மறந்த வலிய உதடுகளும்,முகத்திற்கு ஏற்ப கத்தரித்த அளவான மேசையும்,பிரெஞ்சு பியர்ட் வைத்தும், ஆறடி அங்குலத்தை தாண்டிய அவனின் உயரமும் உள்ள ஒருவன் தங்கள் கண்முன் இருந்தால் ஏக்க பெருமூச்சு விடாது என்ன செய்ய இயலும் . ஆண்மைக்கே உரிய கம்பீரத்தின் இலக்கணமாக வெள்ளை பட்டு வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்தான் ரித்தேஷ் கண்ணன். (ஒரு வருடத்திற்கு முன்பு வரை ரித்தேஷ் கண்ணன்,ஆனால் தன் தந்தையின் செயலில் அவரின் பெயரினை கூட தன் பெயரில் சேர்த்து கொள்ள விரும்பாது ரித்தேஷ் என்று மாற்றிய படு ரோஷக்காரன்.
ரித்தேஷ் ஏதேதோ நினைத்து கொண்டு இருக்கும் பொழுது "பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ" என்ற ஐயரின் குரலில் ரித்தேஷின் கவனம் மணப்பெண்ணின் அறையின் வாயிற்புறம் திரும்பியது. உடல் முழுவதும் தங்க ஜரிகையினால் ஆனா அடர் மெரூன் கலர் பட்டிற்கு தோதாக காதில்,கையில்,கழுத்தில் என்று தங்கமும்,வைரமும் மின்னி கொண்டும்,கூட்டத்தினை கண்டு எழுந்த பயத்தினால் தன் தங்கை சாத்விகாவின் கையினை ஒருபுறம் இறுக பற்றியும்,மறுபுறம் அவளின் உயிர் தோழியான அனந்திகாவின் கையினை இறுக பற்றியும் தீட்டப்பட்ட ஓவியம் போல் நடந்து வந்தவளை கண்டு தன் கோபம் அனைத்தையும் மறந்தவன் வைத்த கண் வாங்காது பார்த்து கொண்டு இருந்தான். தன் அண்ணனின் அருகில் இன்னும் சில மணி துளிகளில் தன் அண்ணியாக வர போகும் தேஜாஸ்ரீயை அமரவைத்தாள் சாத்விகா.
கூட்டத்தினை கண்டு வெளிப்படையாக கைகள் நடுங்க தன் அருகில் அமர்ந்த தன் உயிரில் கலந்தவளின் கையினை ஆறுதலாக இறுக பற்றினான்.அதில் மேலும் மிரண்டவளை கண்டவனின் உள்ளம் துடித்து போனதில் தன் பெற்றோரை உச்சகட்ட கோபத்தில் பார்த்தான். அவனின் கண் முன் ஓராண்டுக்கு முன்பு தன்னவள் பேசிய வார்த்தைகள் அலைமோதியது. அப்பொழுதும் கூட்டத்தில் தன்னவனின் அருகாமை கொடுத்த தைரியத்தில் பயம் நீங்க அனைவரையும் எதிர்கொண்டவள் கூறிய வார்த்தைகள் இதுவே "நூறு பேர் என்ன, லட்சம் பேரு இருந்தாலும் நீங்க கூட இருக்கும் போது எனக்கு என்ன பயம் வந்துரும் ரித்து,என்னோட பயத்தின் மருந்தே நீங்க தான?" என்றவள் அவனின் பரந்த மார்பில் வாகாய் சாய்ந்து கொண்டாள்.