All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா.... - கதை திரி

Status
Not open for further replies.

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா🎻 57

“இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் அநியாயங்களுக்கு அளவு கணக்கு இல்லமால் போகுது. இருங்கள் ஒரு நாள் இருவருக்கும் சேர்த்துத் தாரேன். இப்ப காரை எடு” என்றவாறே யாதவின் அழைப்பும் வர காதில் வைத்தவாறே ஏறியவன் முகம் தீவிரத்தை தத்தெடுக்க கேட்டான் “அப்போயின்மென்ட் எத்தனை மணிக்கு?” ஒரு பிரபல மருத்துவமனையின் பெயரைச் சொல்லி “இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு இருக்க வேண்டும்” என்றான். அஜாவிடம் திரும்பி “ஒரு மணி நேரத்தில் மருத்துவமனை போக வேண்டும், முடியும்தானே” சந்தேகமாய் கேட்க “ஹைவே போட்டு போயிறலாம்” என்றான் அவன்.

இன்று அமெரிக்காவின் பிரபல மூளை அறுவை சிகிச்சை நிபுணர் ரிச்சார்டுடன் வீடியோ கால் மூலமாய் இங்கிருக்கும் மூளை சத்திர சிகிச்சை மருத்துவர் பேசுவாதாக ஏற்பாடு. உலகின் தலை சிறந்த மூளை சத்திர சிகிச்சை நிபுணர், அவரைத்தான் ஸ்ரீனிகாவின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருந்தான். அவரிடம் பேசண்டை பார்க்க வேண்டுமா என்று கேட்டதற்கு “இப்போது தேவையில்லை, முதலில் ரிபோர்டை பார்ப்போம்” என்றுவிட்டார். அவரிடம் பேசன்ட் பேச முடியாது முதலில் மருத்துவர் உரையாடி அதன் பின் அவர் சம்மதித்தால் மட்டுமே பேசன்டை பார்ப்பது எல்லாம். நாளில் முக்காவாசி நேரமும் தியோட்டரில் தான் நேரம் கழியும். அவரிடம் அப்போயின்மென்ட் கிடைப்பதே பிரம்ம பிரயத்தனம். எனவே அந்த சமயத்தில் கௌதமும் உடனிருக்க விரும்பினான். சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடத்திற்கு முதலே வந்துவிட்டவன் குறித்த நேரத்தில் வீடியோ காலில் வந்த ரிச்சர்டை பார்த்தான். அமெரிக்கர்களுக்கே உரிய ஆறடி உயரத்தில் கண்ணோரம் சுருக்கங்கள், கண்ணாடி சால்ட் அண்ட் பேப்பர் தலையுடன் அக்மார்க் மருத்துவராய் புன்னகைத்தார்.

ஸ்ரீனிகா வயது, அவள் கருவுற்ற நிலை அனைத்தையும் கேட்டு அறிந்தவர். முப்பது நிமிடத்திற்கு மேல் அவருக்கு அனுப்பப்பட்ட ரிபோர்டை புரட்டினார். அந்த முப்பது நிமிடமும் மூச்சு விடும் சத்தமும் வெளியே கேட்காமல் கௌதம் ஊசி முனையில் இருந்தான்.

நிமிர்ந்தவர் கண்களில் பட்டது கௌதமின் டென்சன் நிறைந்த முகம் “ஹூ இஸ் திஸ்” புருவத்தை உயர்த்தினார்.

“பெசன்ட் ஹஸ்பன்ட் ஹி வுட் நாட் டிஸ்ராப் அஸ்”

“லுக் ஹொவ் ஹி டென்ஸ் திஸ் இஸ் வை ஐ டிடின்ட் அல்லோவ் ரிலேசன் டு திஸ் மீட்” மெலிதாய் கடிந்தவர் “ஹேய் மன், அஸ் யூ ஆர் ஹியர்” என்று ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

“நீங்க இங்கே வந்ததால் உங்களிடமே சொல்கிறேன். அவர்கள் கருவைக் கலைக்க தயாரா?”

உதட்டைக் கடித்தவன் “ஒரு உயிரைக் கொன்று எப்படி தன்னோட உயிரைக் காப்பதிறது என்று ஃபீல் பண்ணுறாங்க” என்றான்.

ஒரு கணம் அவர் கண்ணில் ஆச்சரியம் வந்து போக “இது சத்திர சிகிச்சை மூலம்தான் அகற்றப்பட வேண்டும். வேறு வழியில்லை. இருக்கும் இடம் கொஞ்சம் அபயாமானது. சற்று நிதானித்தவர் “ரிசன்டா இதே இடத்தில் சத்திர சிகிச்சை செய்தேன். பட் அவர்கள் ஏஜ் கண்டிஷன் எல்லாம் மோசம் சோ” அவர் சொல்லிக் கொண்டே வர கௌதம் முகம் காகிதமாய் வெளுத்தது.

 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻 58


அவன் முகத்தைப் பார்த்து தயங்கினாலும் “அறுபது வீதம்தான் சக்சஸ் ரேட். மூளை தொடர்பான சத்திர சிகிச்சையில் அறுபது என்பதே பெரிய அமௌன்ட்தான்” என்றார் ரிச்சார்ட்.

“செய்யாமால் விட முடியாதுதானே” கௌதம் கேட்கவே “யெஸ் செய்யாமல் விட்டால் அதிகம் ஒரு வருடம் அதுவும் கட்டி வளரும் வேகத்தை பொறுத்து. முதலில் இருந்த அளவும் இப்போது உள்ள அளவையும் ஒப்பீட்டுப் பார்த்தால், என் கணிப்பின் படி ஒன்பதாம் மாதம் முடிய முன்னர் இந்த ஒபரேசன் செய்தே ஆக வேண்டும்”.

சற்று நேரம் சிந்தித்தவன் கேட்டான் “நீங்கள் எப்போது செய்யலாம் என்று சொல்கின்றீர்கள்? நாங்கள் எப்போது வரட்டும்?”

“நான் ஒரு மருத்துவராய் இரு பக்கத்தையும் அலசி ஆராய்ந்துதான் இந்த முடிவைச் சொல்றன். இனி எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீங்கள் பேபி வேண்டும் என்று சொல்கின்றீர்கள். சிலவேளை சிகிச்சை செய்யும் போது பேபிக்கு ஏதாவது நடந்தால் அவர்களின் ரிகவேர் பாதிப்படையும். அதே நேரம் அவர்களுக்கு ஏதாவது” என்று சொல்லவே கௌதமின் கை முஷ்டியாய் இறுகியது “நடந்தால் பேபியையும் காப்பாற்ற முடியாது”

“இரு உயிருக்கும் ஆபத்து. அதே நேரம் ஒன்பதாம் மாதம் வரை காத்திருப்பது நல்லதில்லை. மூளைக்குள் அழுத்தம் ஏற்படக் கூடும். ஏழாம் மாதம்தான் சரி, குறைந்தது ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும். உங்களுக்கே தெரியும் எக்ஸ்பெக்ட் ஃபொர் பெஸ்ட் பிரிபாயார் ஃபொர் ரோஸ்ட். இப்பொது மூன்றாம் மாதம் முடிகிறது. இன்னும் நான்கு மாதத்தில் ஒரூ கருத்தரங்கிற்காய் இந்தியா வருவேன். பத்து நாட்கள் அங்கேதான். டெல்லி அல்லது சென்னையில் வைத்து செய்யலாம். சில மருத்துவமனைகளின் பெயரை அனுப்புகிறேன் எது என்று நீங்களே சொல்லுங்கள்”.

“இரண்டு இடத்திலும் அரேஞ் செய்கின்றேன்” என்பதோடு முடித்துக் கொண்டான் கௌதம். மேலும் சில நிமிடங்கள் மருத்துவர்கள் இருவரும் ஸ்ரீனிக்கு கொடுக்க வேண்டிய மருந்து தொடர்பாய் பேசினார்கள்.

“ஹேய் யங் மன் தைரியாமாய் இரு” என்பதுடன் விட பெற்றார்.

அதன் பிறகு அவளை கண்ணுக்குள் வைத்துதான் தாங்கினான். சென்னையில் அவளது சிகிச்சைக்கான மருத்துவமனையை ஏற்பாடு செய்தவன் அடுத்து டெல்லி சென்று அங்கேயும் ஒன்றுக்கு இரண்டு இடமாய் தயார் செய்தான். இதற்கிடையில் கம்பனி வேலைகளும் இழுக்கவே அவளிடமும் டெல்லி சென்னை என்று சதா ஓடிக் கொண்டிருந்தவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது.

இன்றுதான் டெல்லியில் இருந்து வந்தவன் அவள் விளையாட்டாய் தள்ளிவிட்டதில் சிரித்தவாறே எழுந்து அமர்ந்தான். இன்னும் அவளிடம் மருத்துவர் ரிச்சார்ட் சொன்ன எதையும் சொல்லியிருக்கவில்லை சொல்வதாகவும் இல்லை.

இந்த இரு மாதத்திலேயே அவன் தடை எலும்பு துருத்திக் கொண்டு நின்றதைப் பார்த்த ஸ்ரீனிகா “இன்று அலுவலகம் போகின்றீர்களா?” யோசனையுடன் கேட்டாள்.

“இல்லை ஏன்?” ஆச்சரியமாய் கேட்க பதிலின்றி எழுந்து சென்றுவிட்டாள். அவள் போன திசையேயே வியப்பாய் பார்த்தவன் லப்பை எடுத்து வைத்து சில வேலைகளை செய்ய வள்ளியுடன் திரும்பி வந்திருந்தாள் ஸ்ரீனிகா.

“இங்கே வையுங்கள்” என்று அவன் முன்னிருந்த மேஜையைக் காட்ட, அதில் ஒரு பெரிய சாப்பாட்டுத் தட்டை வைத்துச் சென்றார் வள்ளி.

“என்ன இது?” ஆச்சரியத்துடன் கேட்டவனுக்கு இடக்காய் பதில் சொன்னாள் “ஹ்ம்ம் சாப்பாடு, இதில் ஒரு துளி கூட மிச்சம் வைக்கக் கூடாது” மிரட்டியவளையே நாடியில் கையூன்றிப் பார்த்தான் கௌதம்.

“அப்படியே மகாராணி” என்றவனுக்கும் மனைவி பரிமாறியதில் பசி வயிற்றைக் கிள்ள அனைத்தையும் காலி செய்து கை கழுவி விட்டுத் தான் கேட்டான் “நீ சாப்பிட்டாயா?”. அவன் கேள்வியில் கலீரென சிரித்தவள் “நல்லவேளை இப்போதாவது கேட்டீங்களே” என்று அவனை பரிகாசம் செய்தவள் “மூன்று மணி வரை நான் சாப்பிடமால் இருந்தாலும் மாமா, அத்தை, வள்ளி, வேலன், என்று நீங்கள் கீ கொடுத்து வைத்திருக்கும் ஒருவரும் விட மாட்டார்களே” என்றாள்.

இத்தனை நாள் மறைந்திருந்த கன்னக் குழி அழகாய் கன்னக் கதுப்பில் குழிய ஒரு விரலால் அதை நிமிண்டினான். ஸ்ரீனிகா பற்றி உண்மை தெரிந்ததும் அவன் நண்பன் சரணை கேள்வியால் துளைத்து எடுத்துவிட்டான். கன்னக் குழி எப்படி வருது? எப்படி போகுது? பிறப்பில் இல்லாமல் இடையில் கன்னக் குழி வருமா?

பதிலுக்கு சரண் “கன்னக் குழி என்பது உண்மையில் ஒருவித குறைபாடு, தசைகளுக்கு இடையே ஏற்படும் இடைவெளி. சில பேர் மெலிந்து மீண்டும் உடம்பு வைக்கும் போது அவர்களுக்கு கன்னக் குழி காணமாலே போயிரும். சிலருக்கு இடையில் வரும். இன்னும் சிலர் பென்சிலை வைத்து நிதமும் அழுத்தி தசைகளிடையே இடைவெளியை ஏற்படுத்தி அதானாலும் கன்னக் குழியை செயற்கையாய் உருவாக்குகின்றார்கள்” என்று விம் டிடர்ஜன்ட் போட்டு விளக்காத குறையாய் விளக்கியிருந்தான்.
🎻🎻🎻🎻🎻

கண் மூடிப் திறப்பதற்குள் மூன்று மாதம் முடிந்திருக்க ஸ்ரீனியை விட கௌதம்தான் தவித்துப் போனான். முடிந்த அளவு வேலைகளை வீட்டில் இருந்தே பார்ப்பவன் மிகமிக அத்தியாவசியம் என்றால் தவிர அவளைத் தனியே விட்டு வெளியில் செல்வதே கிடையாது. அன்று அந்த கார் கம்பனிகாரன் உங்களை சந்திக்க வேண்டும் என்று யாதவ் அழைக்க “கடன்காரன் பெரிய தொல்லையா இருக்கிறானே” எரிச்சல்பட்டான் கௌதம்.

பொங்கி வந்த சிரிப்பை அடக்கிய ஸ்ரீனிகா அவன் கையைக் கட்டி கொண்டு தோளில் தலை சாய்த்து அவனை சமாதானப்படுத்தினாள் “சரி கொஞ்ச நேரம்தானே, பேபி வந்த பிறகு பெரிய லீவா எடுப்போம், ஹ்ம்ம்” சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

அவனை அனுப்பி விட்டு குட்டி போட்ட பூனையாய் வீட்டை சுற்றியவள் கையில் சாப்பாட்டை கொடுத்து அலுவலகம் அனுப்பிவிட்டார் யசோதா.

அலுவலகம் வந்தவள் கண்ணில்பட்டான் ரௌத்ரமாய் நின்ற கௌதமும் நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்டிருந்த மனேஜரும். அவளை வாசலிலேயே கண்டு அழைத்து வந்த யாதவ் கௌதமிடம் அவள் வந்திருப்பதை சொல்லப் போக தடுத்துவிட்டாள் ஸ்ரீனிகா.

“உங்கள் பாஸ்க்கு இவ்வளவு கோபம் வருமா?” கையைக் கட்டிக் கொண்டு புன்னகையுடன் கேட்டவளுக்கு ஒரு உண்மை புரிந்தது. அவனுக்கு தன்னிடம் கோபப்படவே தெரியவில்லை. கண்ணாடியூடே பார்த்தவள் விழிகள் அவனை விழுங்கிக் கொண்டன. மனேஜரிடம் கோபப்பட்டவன் கணத்தில் மாறி புன்னகையுடன் உள்ளே வந்த வெளிநாட்டினரை வரவேற்றான். அவன் அசைவை, அவர்களுடன் அமர்ந்திருந்து பேசுவதை என ரசித்து அவனில் முழ்கியவளை யாதவின் கனைப்பு நிகழ்காலத்திற்கு கொண்டு வர “இதை உள்ளே வைத்து விடுங்கள்” சாப்பாட்டு கூடையை யாதவின் கையில் கொடுத்து விட்டு ஓடிவிட்டாள்.

அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து சில வேலைகளை செய்து கொண்டிருந்தவள் போனில் மெசஜ் வர எடுத்தப் பார்த்தாள். யதாவ்தான் ‘மீட்டிங் முடிந்துவிட்டது. ஒரு பத்து தரம் நீங்கள் இங்கே வந்தீர்களா என்று கேட்டுட்டார்’ என மெசேஜ் அனுப்பியிருந்தான்.
🎻🎻🎻🎻🎻

களைப்புடன் வந்து அமர்ந்தான் கௌதம் உடல் ரீதியாக களைப்பின்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்ய அவனால் முடியும். ஆனால் மனம் களைத்திருந்தது. வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் அவளிடம் தன் கவலையைக் காட்டமால் நடித்துக் கொண்டே இருப்பது அவன் சக்தியை பெரிதும் உறிஞ்சியிருந்தது.

காரணம் சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது. அன்று தன்னை ஜிம்மில் வைத்துப் பார்த்ததை எதிரே இருந்த கண்ணாடியில் கௌதமும் பார்த்திருந்தான். ஆனால் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. அன்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு பின்னால் திரிந்தவளைக் காண இதயத்தில் இதமாய்தான் உணர்ந்தான். ஆனால் அன்றிரவே அவளுக்கு தலைவலி வர கௌதம்தான் துடித்துவிட்டான். இரவு முழுதும் வலியில் மார்புக்குள் கன்றுக் குட்டியாய் முட்டி மோதியவளை பிடித்து வைப்பதற்குள் அந்தப் பாடுபட்டுவிட்டான். அடுத்த நாள் முழுதும் உடல் வலியில் அடித்துப் போட்டது படுத்து இருந்தவள் கண்கள் அவனை விட்டு நகரவில்லை.

மருத்துவரிடம் தொடர்பு கொள்ள “அவளை என்ன டென்சன் படுத்தினீர்கள்” என்று கடிந்து கொண்டவர் “அஜாவை அனுப்பி வை மருந்தை அனுப்பிவிடுகிறேன். ஆனால் அவள் உடல் நிலைக்கு எல்லா நேரமும் இதுபோல் கொடுக்க முடியாது. டென்சன் ஆகாமல் பார்த்துக் கொள்” என்றுவிட்டார்.

கண்ணோரமாய் நீர் வழியப் படுத்திருந்தவளை நெருங்கித் துடைத்துவிட்டவன் “என்னடி செய்யுது வலிக்குதா? உன்னை என்னாலா இப்படிப் பார்க்க முடியல” என்றவன் கையைப் பிடித்து கன்னத்தில் வைத்து “என்னால்தானே உங்களுக்கு மனகஷ்டம். இதுக்குத்தான் எல்லாம் செய்திட்டு சரி வந்தால் உங்களிடம் சொல்லுவோம் என்று இருந்தேன். அதற்குள் நானே உளறிட்டேன் இல்லையா?” வருத்ததுடன் கேட்டவளைக் கண்டு ஸ்தம்பித்து நின்றான் கௌதம்.

‘அவர்களை அதிகம் யோசிக்கவிடாதீர்கள். ஸ்ட்ரெஸ் இல்லாத லைவ் ஸ்டைலில் இருந்தால் நல்லது’ மருத்துவரின் குரல் அவன் காதில் எதிரொலிக்க “நேற்றில் இருந்து இதையா யோசிக்கின்றாய்?” மெதுவே கேட்டான்.

கையினுள் தலையாட்டியவள் இதழ்களை நொடியில் சிறையெடுக்க “பாப்பாக்கு மூச்சு முட்டும்” என்று விலக முயன்றவளை தடுத்தவன் “இன்று ஒரு நாள் மூச்சு முட்டினால் பரவாயில்ல விடு” இதழ்களுள் முணுமுணுத்தவன் அவள் நிஜமாகாவே மூச்சுக்கு ஏங்கும் வரை விடவேயில்லை.

“நீ அப்படி தனியாக போய் எல்லாம் செய்திட்டு வந்திருந்தா செத்தே போயிருப்பேன் புரியுதா?” அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து கேட்க உதட்டைப் பிதுக்கி அழகாய் தலையாட்டினாள்.

“எனக்கு ஒன்று என்றால் நீ யோசிக்க மாட்டியா? அது போலதானே நானும் இதுக்கெல்லாம் வருத்தப் படுவார்களா?” மெல்லிய கண்டிப்புடன் கேட்க அவனையே இமைக்காது பார்த்திருந்தாள் ஸ்ரீனிகா. “இப்போதைய என்னுடைய தேவையெல்லாம் நீ சுகமாகி வரனும் அவ்வளவுதான். எனக்கு வேறு எதுவும் பொருட்டில்லை, போதுமா?” நெஞ்சோடு அணைத்து கொண்டான். “இதையெல்லாம் மண்டைக்குள் போட்டு குழப்பிக் கொள்ளாதே”.

சற்று நேரம் இனிமையான மௌனத்தில் கரைய “ஸ்ரீனி” அழைத்தான்.

“ம்ம்ம்”

“அதை சொல்லேன்” அவன் குரல் கெஞ்சி கொஞ்சியது.

“எதை” களைத்து போயிருந்த முகத்தில் குறும்பு சோபையாய் முகாமிட புன்னகைத்தாள்.

“ச்சு” சற்று விலகியவன் “உனக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும் ப்ளீஸ்” குரல் கெஞ்ச அவள் மிஞ்சினாள்.

“சொல்லமாட்டனே” சலுகைக் குரலில் கூறியவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ஏண்டி” ஆதங்கமாய் கேட்டவனுக்கு பதிலாய் “என்னை முதல்ல கண்டு பிடிக்கல இல்ல அதலா.... இப்ப சொல்ல முடியாது போடா” என்றுவிட்டாள்.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻 58(b)


யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன் யாதவ் ஒரு கோப்பை வைத்துச் செல்ல மீண்டும் கண் மூடி யோசனையில் ஆழ்ந்தான். யாதவ் பின்னேயே ஆர்வமாய் அறையினுள் வந்த ஸ்ரீனிகா அவனைத் தேட மேசையில் இல்லை. ஒரு பக்கம் முழுதும் கண்ணாடி பதிக்கப்பட்டு கட்டிடங்கள் வெளியே தெரியும்படி இருந்த சோபாவில் கண்மூடி நன்றாக சாய்ந்து அமர்ந்திருந்தான்.

அத்தனை நேரமிருந்த புன்னகை விடை பெற எழுந்த பெருமூச்சை சத்தமின்றி விட்டவள் அருகே சென்று அவன் சிகையைக் கோதிக் கொடுத்தாள். சட்டென கண் திறந்து பார்த்தவன் தன் உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் அவள் வயிற்றில் முகத்தைப் புதைத்தான்.

“ஷ்... என்ன இது சிறு பிள்ளைபோல், உங்களுக்கே பேபி வர போகுது” செல்லமாய் கண்டித்தாள்.

அவளிடமிருந்து விலகியவன் “உனக்கு பயமா இல்லையா?” கரகரத்த குரலில் கேட்டான்.

அவனருகே அமர்ந்து கையைக் கட்டிக் கொண்டவள் பின்புறத் தோளில் தலை சாய்த்து “இல்லையே” என்றாள் விளையாட்டாய்.

“எப்படி”

“எப்படி என்றால்... எனக்கு தான் என்னோட வீரர் சூரர் தீரர் என் காதல் தீரன் கௌதம் இருக்கனே அதான்”

அவன் “ச்சு” என்று முகத்தைத் திருப்ப அவன் கன்னங்களைப் பிடித்து வைத்து “உண்மையாதான் சொல்றேன்” என்றவள் கண்ணில் இருந்த தீவிரத்தில் அவளையே பார்த்தபடி இருக்க அவளே தொடர்ந்தாள்.

“ஏன் எப்படி என்று எல்லாம் கேட்டால் எனக்குத் தெரியாது. இங்கே” நெஞ்சை தொட்டுக் காட்டி “ஏதோ சொல்லுது. எனக்கு எதுவும் ஆக நீங்கள் வ்டமாட்டிர்கள். நிச்சயமாய் உங்களுடன் நூறு வருடம் பிள்ளை குட்டி பேரன் பேத்தியுடன் வாழ்வேன் என்று. கடவுள் சிறு வயதிலேயே இல்லாத கஷ்டத்தையெல்லாம் தந்தது இனி வரும் காலம் எல்லாம் உங்களுடன் சந்தோசமாய் இருக்கத்தான்” அவன் கண்களையே ஆழ்ந்து பார்த்து “நல்லதே நடக்கும் என்று நம்புவோம் நல்லதே நடக்கும்” என்று கூற அவள் கண்ணில் தென்பட்ட நம்பிக்கை மெதுவே அவன் கண்ணிற்கும் இடம் பெயர்ந்தது.

சட்டென இறுக்கம் தளர அவள் நெற்றியுடன் நெற்றி முட்டினான். மனம் லேசானது போலிருந்தது. மனம் முழுதும் இதமாய் உணர்ந்தவனுக்கு அன்று தன்னை இதே போல் ஒரு நிலையில் பார்த்து இரவு தலைவலி வந்தது நினைவு வர அவள் மனதை மாற்ற நினைத்தவனாய் குனிந்து வயிற்றில் இதழ் பதித்து “ஹாய் பிரின்சஸ்” என்றான்.

தலையைத் தள்ளிவிட்டவள் “பிரின்சஸ் இல்ல லிட்டில் சம்ப்” முறுக்கிக் கொண்டாள்.

அவள் வயிற்றின் மீதிருந்த கையில் ஏதோ அசைவை உணர்ந்தவனாய் “ஹேய் உள்ள என்னவோ அசையுது” என்றவாறே அவள் அணிந்திருந்த கர்ப்பவதிகள் அணியும் ஆடையின் மேற்புறத்தை விலக்க முயன்றவன் கையைப் பிடித்து மீண்டும் வயிற்றில் வைத்தவள் “பேசுங்கள்” என்றாள்.

“ஆங்” குழப்பமாய் பார்க்க “பேபியோட கதையுங்கள், பிரின்சஸ் சொல்லுங்கோ” என்றாள்.

“பிரின்சஸ்...” மீண்டும் கையின் அடியில் ஏதோ அசைவது போன்ற உணர்வு சட்டென நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் விரிந்தது. “பேபி” சத்தமின்றி உதடுகள் மட்டும் அசைய கண்ணில் சந்தோசக் கண்ணீருடன் தலையாட்டினாள்.

கண்கள் பனிக்க அவள் கழுத்தைச் சுற்றி கையைப் போட்டுக் கட்டிக் கொண்டான். அவன் நெஞ்சுகூடு நடுங்குவது ஸ்ரீனிகாவிற்கு புரிய மெதுவே முதுகை வருடிக் கொடுத்தாள். தன் உதிரத்தை அவள் வயிற்றில் உணரும் இந்தக் கணம் வரை அவனுக்கு ஸ்ரீனியின் உயிர்தான் முக்கியமாய் இருந்தது. இப்போதோ தன் கையில் உணர்ந்த அந்த சின்னஞ்சிறு உயிரின் ஸ்பரிசம் அதுவும் வேண்டும் என்றது. மனித மனமே மாறுவதுதானே. ஆனால் அவள் உயிரைப் பயணம் வைக்கவும் முடியாது. அந்தக் சிறு உயிரை இழக்கவும் முடியாது தவித்தான்.

அவனை சரியாகப் புரிந்து கொண்ட ஸ்ரீனிகா “கௌதம்” சிறு கண்டிப்புடன் அழைத்தாள். அவனோ விலக மறுத்து முனங்கினான் “சாரி”.

“ஷ்.. ஒகே” அவன் அப்போதும் விலக மறுக்க “டேய் கௌதம் கிருஷ்ணா” அழைக்க சட்டென விலகி அவளை வியப்புடன் பார்த்தான். கடந்த இரண்டு மாதமாய் இப்படி அழைக்கத்தான் கெஞ்சிக் கொண்டிருக்கின்றான். அன்று கேரளாவில் நடந்தது மெலிதாய் நினைவில் இருந்தாலும் மீண்டும் ஒருமுறை அவள் வாயால் கேட்கும் ஆசையில் பின்னும் முன்னும் திரிந்தான்.

அவன் முகம் புன்னகையில் விகாசிக்க உதட்டைக் கடித்தவள் “முதலில் சாப்பிடுங்கள் சாப்பிட்டு என் அலுவலகம் போக வேண்டும்” என்றால் கெத்தை விடாமல். புன்னகையுடன் அவள் கன்னம் பற்றி தலையை முட்டினான் கௌதம்.

காரை அவள் அலுவலகத்திற்கு முன் நிறுத்தி விட்டு அவள் புறக் கதவை திறந்தான் கௌதம். அவனேதான் காரை ஒட்டி வந்திருந்தான். அவள் அலுவலகத்தில் காலடி வைக்க வசந்தும் ஜானகியும் அவளிடம் ஓடி வந்தார்கள்.

அன்றிரவு அலுவலகத்தை வந்து பார்த்த கௌதம் முற்றுமுழுதாக தலைகீழாக மாற்றியிருந்தான். ஏசி, பெரிய மேஜை, அவளுக்கென தனியறை, அறையினுளும் வெளியிலும் இருப்பதற்கு சோபா என அமர்க்களபடுத்தியிருந்தான். ஸ்ரீனிகா கூட அவன் அளப்பறையைப் பார்த்து விட்டு “சாரி சாரின் அலுவலகம் கூட இப்படி இல்லையே” சங்கடமாய் கூற “ஜிகே பெண்டாட்டி அலுவலகம் இப்படித்தான் இருக்கும்” என்றுவிட்டான்.

சில கையெழுத்துகளை போட்டு விட்டு வசந்திடம் “கலோஜ் எப்படி போகுது” என விசாரித்தவாறே அடுத்த வேலைக்கான உத்தரவுகளை வழங்கியவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்ணில் மின்னல் மின்ன போனை எடுத்து யாதவிற்கு ஏதோ உத்தரவிட்டான். அவன் உத்தரவைக் கேட்ட யாதவ் சிரிப்புடன் “அப்படியே செய்திருவோம் பாஸ்” என்றான் பதிலுக்கு.

சிறு சிரிப்புடன் அமர்ந்திருந்தவனை சந்தேகமாய் பார்த்தவாறே அருகில் அமர்ந்து கேட்டாள் “என்ன?”.

“யாதவ் போன் எடுத்திருந்தான்” புளுகினான்.

யாதவ் பெயரைச் சொல்ல முகத்தை சுருக்கினாள் ஸ்ரீனிகா. அன்று தெரியாத்தனமாக “ஸ்ரீனிகா மேடத்துக்கும் ஒரு அறை ஏற்பாடு செய்வோமா?” என்று கேட்டுவிட்டான். அதிலிருந்து அவனை எதிரி போல் பார்த்து வைத்தாள் ஸ்ரீனிகா.

அவன் சேர்ட் கையை இரு விரலால் பிடித்து “கௌதம்” குழைவாய் அழைத்தாள்.

அவள் கேட்கப் போவது புரிய சிரிப்பை அடக்கியபடி “ஹ்ம்ம்” என்றான்.

“நான் அலுவலகம் வரல”

“ஏன் இந்த இடம் பிடிக்கலையா?” அவள் எதை சொல்கிறாள் என்று தெரிந்தே தெரியாதது போல் கேட்டான். ஒரு கணம் விழித்தவள் “ச்சு அதில்ல, இந்த வேலை ஒகே... அங்கே அந்த கடன்காரன் ஐ மீன் கார்காரன் கம்பனிக்கு” என்றவளை இடைமறித்துக் கேட்டான் “ஏன் உனக்கு பிடிக்கலையா?”.

“அதில்ல...” என்று தயங்கவே அவள் பயம் புரிந்திருந்தாலும் “அதன் ஐம்பத்தொரு வீதம் பங்கு உன்னுடையது. அப்ப நீதானே பார்க்க வேண்டும். குறைந்தது ஷேர்ஹோல்டேர்ஸ் மீட்டிங்காவாது பங்கு பற்றியே ஆக வேண்டுமே” மென்மையாய் கூற அரைகுறையாய் தலையாட்டி வைத்தாள்.

“சரி அசாமில் உள்ள தேயிலைத் தோட்டம், கம்பனி, கப்பல்களை என்ன செய்ய போகிறாய்?” சிறு யோசனையுடன் கேட்க பதிலுக்கு அப்பாவியாய் கேட்டாள் “ஏன் நீங்கள் பார்க்க மாட்டீங்களா?”

“நானா?” வியப்புடன் கேட்டவன் “ஏற்கனவே இங்கே உள்ளவற்றை பார்க்கவே நேரமில்லை, அன்று போன மால், என் கம்பனி, அப்பாவின் கம்பனி, ஐந்து காலேஜ், எஸ்ஜி மால் இவற்றை பார்க்கவே நேரமில்லை. நான் பாவமில்லையா?” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவனை இடைமறித்தாள் “ஓர் நிமிடம் எஸ்ஜி மோல்”

“ஹ்ம்ம் அதேதான்”

“அதை எப்போது வாங்கினீர்கள்?”

“வாங்கவில்லை, நாம் சந்தித்த நாளில் இருந்தே அது என்னுடையதுதான். தாத்தாவின் பரிசு, இப்போது நம்முடையது” என்றான்.

“எப்படி”

“அன்று பக்கம் பக்கமாய் கையெழுத்து வைத்தாயே?” கேலியாய் கேட்டவன் “சொத்துகளை எழுதி வாங்கினாலும் தெரியாது” கண்டித்தான்

“நானே தாரேன் என்றுதானே சொல்றேன்” கிள்ளையாய் கெஞ்சினாள்.

லேசாய் முறைத்தவன் “காசை விடு, அது உன் தாத்தா பாட்டியின் உழைப்பு இல்லையா?” கேட்கவே அப்படியானால் இத்தனை நாள் லீசிங்கில் விட்டது போலவே விடுவோம்” விறுக்கான் போக்காய் சொன்னாள்.

அவளின் பிடிவாதம் பற்றி அறிந்தவனாய் “இப்போதைக்கு இப்படியே இருக்கட்டும், பேபி வந்த பின்னர் பார்ப்போம்” கை தேர்ந்த வியாபாரியாய் அப்போதைக்கு முடிவைத் தள்ளி வைத்தான்.
🎻🎻🎻🎻🎻

“கௌதம் ஸ்ரீம்மா” இருவருமாய் பிரெஷ் ஆகி தேநீர் அருந்தக் கீழே வர யசோதா அழைத்தார்.

“சொல்லுங்கம்மா” என்றவாறே அமர்ந்தவனுக்கு காஃபியும் ஸ்ரீனிகாவிற்கு யூசும் கொடுத்தவர் “ஸ்ரீனிக்கு ஐந்தாம் மாதம் வளைகாப்பு செய்யனும், சாரதாவும் போன் செய்திருந்தார்கள்” என்று ஆரம்பிக்கவே அப்பாவைப் பார்க்கவே அவர் சொல்லு என்பது போல் கண் மூடித் திறந்தார்.

“அம்மா உங்கள் அனைவரிடமும் ஒன்று சொல்ல வேண்டும். அவள் வளைகாப்பு ஒன்பதாம் மாதம் செய்வோம்” என்றான்.

“ஏன் கொழுந்தனாரே அவளை அழைத்துச் சென்று விடுவார்கள் என்றா?” வம்புக்கு இழுத்தாள் வத்சலா.

மெல்லிய முகச் சிவப்புடன் “அது உண்மைதான், ஆனால் அது மட்டும் காரணமில்லை. அவளுக்கு ஒரு ஒபேரேசன் செய்ய வேண்டும். ஏழாம் மாதம்தான் செய்வதாக திட்டம் அதன் பின் வளைகாப்பு செய்வோம்” என்றான் முடிவாய்.

“ஏன்? என்னாச்சு? என்ன ஒபரேசன்” அனைவரும் ஒன்று போல் கேட்டு ஸ்ரீனிகாவை ஆராய்ச்சியாய் பார்த்தார்கள். அருகே வந்தமர்ந்த யசோதா “என்னாச்சுடா? இவன் என்ன சொல்றான்” கன்னம் பற்றிக் கேட்டார்.

“அது வந்து அத்தை, ஒரு சின்ன சத்திர சிகிச்சை அவ்வளவுதான், பயப்பட ஒன்றுமில்லை” என்றவள் கௌதமைப் பார்த்தாள் ‘ஹெல்ப் பண்ணேன்’ என்பது போல். தன் பெரிய வயிற்றை தள்ளிக் கொண்டு வந்த நதியா அண்ணனின் தோளில் ஒரு அடி போட்டு “தள்ளுடா” என்றவள் ஸ்ரீனிகாவின் மறுபுறம் அமர்ந்து அவள் கழுத்து நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

“என்ன ஒபரசேன் அண்ணி, எங்கே யூஎஸ்சில் போய் செய்வோமா? அத்தை மாமாவிடம் பேசுகின்றேன்” என்று ஆரம்பிக்கவே “ம்ம் அப்படியே ஜெர்மனியிலும் நான் அரேன்ஜ் செய்கிறேன். எந்த இடத்திற்கு விசா கிடைக்கிறதோ அங்கே போவோம்” என்று வத்சலா வர எழுந்து அப்பாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்து தன் குடும்பத்தினரின் அன்பில் திணறிய மனைவியையே ரசித்துப் பார்த்திருந்தான். அவள் விரும்பிய குடும்பம் அன்பு பாசம் அதை தடுக்காது ரசித்திருந்தவன் கண்களில் லேசாய் பொறாமையும் எட்டிப் பார்க்கத்தான் செய்தது. அவளைத் தான் மட்டுமே கொண்டாட வேண்டும்.

தம்பியின் அருகே அமர்ந்த ராகவன் “ஆபத்தா கிருஷ்ணா?” கவலையுடன் விசாரித்தான்.

எழுந்து அமர்ந்தவன் “டொக்டர் ரிச்சர்ட்தான் செய்கிறார், டெல்லி சென்னை இரண்டு இடத்திலும் ஏற்பாடு செய்து இருக்கின்றேன். கிரானியோடோமி (Craniotomy), அறுபது வீதம் சக்சஸ் ரேட்” மெதுவே அவன் காதில் மட்டும் விழும் வண்ணம் கூறியவன் எச்சரிக்கையாய் பெண்களைப் பார்த்தான் கௌதம்.

தலையை அசைத்த ராகவன் தம்பியின் தலையைக் கலைத்துவிட்டான் “யூ ஒகே”.

பெண்களின் கேள்வியை சமாளிக்க முடியாமல் “என்னை விட கௌதமுக்கு தான் நல்லா தெரியும். நான் கேட்க நான் சொல்லும் திகதியில் வந்து ஒபெறேசன் செய்து கொள் என்றுட்டார்” மாட்டி விட்டு யாருமறியாமல் நெளித்துக் காட்டினாள்.

அனைவரும் அவனிடம் திரும்ப “அவளுக்கு பயப்படும் படி ஒன்றுமில்லை. சின்னக் கட்டிதான் கமராவை விட்டு ஊசியாலேயே கரைத்து விடுவார்களாம். அதிகம் டென்சன் ஆகாமல் பார்த்துக் கொண்டாலே போதும்” பாதிப் பொய்யை சொல்லி சமாளித்தான். வேறு விபரங்கள் சொல்லி அவர்களைப் பயமுறுத்த விரும்பவில்லை.

பலதடவைகள் மீண்டும் மீண்டும் கேட்டுத் தெளிவு பெற்றாலும் அனைவர் முகமும் கவலையை பூசியிருக்க அவர்கள் மனநிலையை மாற்றக் கேட்டாள் ஸ்ரீனிகா “வீணை வாசிக்கவா?”

“ஒ..” என்று தொடங்கிய நதியாவின் குரல் பாதியில் நின்றது, காற்றில் வந்த பியானோவின் சத்தத்தில்.

எட்டிப் பார்க்க ஹாலில் இருந்த பியானோவில் கௌதம் தான் வாசித்துக் கொண்டிருந்தான். ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலின் முன் வரும் பியானோ இசை. ஸ்ரீனிகா எட்டிப் பார்க்க தன்னருகே இருந்த கதிரையை நோக்கி கண் காட்டினான்.

அவள் அருகே வந்து அமர கௌதம் பாடத் தொடங்கினான்.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

அன்பெனும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்


ஆச்சரியத்தில் கண்கள் விரிய அருகே அமர்ந்து கன்னத்தில் கைவைத்து பார்த்தவளைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான் கௌதம்.

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்

பாஷைகள் எதுவும் தேவையில்லை

சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்

மலையின் அழகோ தாங்கவில்லை



உந்தன் கைகள் பிடித்து போகும் வழி

அது போதவில்லை இன்னும் வேண்டுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி



ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

அன்பெனும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்



தூரத்து மரங்கள் பார்க்குதடி

தேவதை இவளா கேக்குதடி

தன்னிலை மறந்து பூக்குதடி

காற்றினில் வாசம் தூக்குதடி



அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?

உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி




ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்




உன் முகம் பார்த்தால் தோணுதடி

வானத்து நிலவு சின்னதடி

மேகத்தில் மறைந்தே பார்க்குதடி

உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி




அதை கையில் பிடித்து, ஆறுதல் உரைத்து

வீட்டுக்கு அனுப்பு நல்லபடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி




ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்(2)




இன்னும் ஆச்சரியம் விலகாமல் கன்னத்தில் கை வைத்து மெய் மறந்து பார்த்திருந்தவள் நெற்றியில் ஊதிவிட்டான் கௌதம்.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻 59


பாலாய் நிலவு பொழிய அமைதின்றி நிலவை வெறித்துக் கொண்டிருந்தான் கௌதம். இன்னும் ஐந்து நாளில் ஸ்ரீனிக்கு மூளையில் அறுவை சிகிச்சை. அவள் என்னோவோ தைரியமாய்தான் இருகின்றாள் கௌதமுக்கு தான் நித்திரை என்பது அவன் திசையைக் கூட எட்டிப் பார்க்க மாட்டேன் என்று நின்றது.

‘நான் டென்சன் ஆகுவேன் என்று நடிக்கிறாளா?’ என்று கூட யோசித்து சோதித்து கூட பார்த்தான். அவள் சாதாரணமாய் தான் இருந்தாள். இரவு வேளையில் பசியிலோ அல்லது பேபி உள்ளே விளையாடுவதிலோ எழுந்தால் கூட அவனை எழுப்ப மாட்டாள். அவளுக்கும் தெரியும், அவன் தன்னை மறந்து கண்ணயர்வது தவிர உறங்க மாட்டான் என்று. ஆனால் அவள் மெலிதாய் அசைந்தாலே எழுந்து விடுவான்.

ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தால் நன்றாகவே வெளியே தெரிந்த ஏழு மாத கருவின் மேல் கைவைத்தவாறே கதவில் சாய்ந்து நின்று அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா. அன்று அவன் மெலிவைக் கவனித்த பின்னர் ஒவ்வொரு நாளும் அவள்தான் சாப்பாடு கொடுக்கிறாள், இன்னுமும் சரியாக் சொன்னால் ஊட்டி விடுகிறாள். இருந்தும் அவன் மெலிந்து கொண்டுதான் போகிறான். உள்ளே அரிக்கும் கவலை உடலையும் அரிக்கின்றதோ! வேகமாக அருகே வந்தவன் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு அழைத்துச் சென்று ஊஞ்சலில் வசதியாய் அமர வைத்துக் “யு ஒகே! பசிக்குதா? உள்ளே பூட்பால் நடக்குதா?” சிறு முறுவலுடன் கேட்டான்.

அவன் கேள்விகளைக் காற்றில்விட்டவள் “உறங்கவில்லை” கூர்ந்து பார்த்துக் கேட்க சிறிது நேரம் அசைவின்றி வானத்தை வெறித்தவன் தன் சந்தேகத்தை வாய்விட்டே கேட்டுவிட்டான். “உனக்கு பயமாய் இல்லையா?” இத்தனை நாள் அவளைக் குழப்பக் கூடாது என்று கேட்கவில்லை இன்றோ கேட்காமல் முடியவில்லை.

தளிர் விரல்களால் அவன் தலைகோதிக் கொடுக்க கண் மூடி உள்வாங்கியவன் கண்களை மட்டும் திருப்பி கேள்வியாய் நோக்கினான்.

பரிதாபமாய் பார்த்தாள் ஸ்ரீனிகா. எல்லாத்திற்கும் பயந்தவள்தான் ஆனால் அவன் அருகில் இருந்தாலே பயம் அவள் பக்கத்தில் வராது இப்போதோ கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ள அவளுக்கு பயம் பக்கத்தில் என்ன கண்ணுக்கு எட்டிய தொலைவிலேயே இல்லை.

‘இல்லை’ என்று தலையாட்டினாள்.

“எப்படி” ஆவேசமாய்க் கேட்டவனை எப்படி சமாதானப் படுத்த என்று தெரியாமல் விழித்தவள் கன்னத்தை அழுத்தமாய் பற்றினான். முன்பெல்லாம் தசையின்றி எலும்பாய் இருந்த அவள் உடல் இப்போது அவனின் முழுதான அன்பிலும், தாய்மையிலும், குடும்பத்தினர் கவனிப்பு என மெருகேறி தளதளவென்று இருக்க அவன் உள்ளங்கையில் அவள் கன்னம் அல்வா துண்டாய் அமுங்கியது.

“எனக்கு நீங்கள் மூவருமே வேண்டும் புரியுதா?” அவளை வலிக்க பிடிப்பதைக் கூட உணரமால் கேட்க தலையாட்டினாள். அவளுக்கு கருவில் இரட்டையர்கள்தான். அதிலும் கௌதமின் குரல் கேட்டுவிட்டால் போதும் இருவரும் உள்ளே போடும் ஆட்டத்தில் இவளால் இருக்கவே முடியாது. அதனால் சிலவேளைகளில் கௌதம் ஏதாவது பேச வந்தால் “இப்போது தான் இருவரும் சற்று அடங்கினார்கள் உங்கள் சத்தம் கேட்டால் மீண்டும் தொடங்கிவிடுவார்கள்” என்று அவன் வாயை மூடிவிடுவாள். வீட்டில் எல்லோரும் விளையாட்டாய் ‘பூட்பால் நடக்குதா?’ என்றே கேட்க தொடங்கிவிட்டார்கள்.

“ப்ரோம்மிஸ்” குழந்தையாய் கைகளை நீட்டினான். அவன் உள்ளங்கையில் இதழ் பதித்து “ப்ரோம்மிஸ், எங்கள் மூவருக்குமே நீங்கள் வேண்டும். நிச்சயமாய் பிழைத்து வருவேன் போதுமா?” என்றாள் பதிலுக்கு.

சிவந்திருந்த கண்கள், மூன்று நாள் தாடியுடன் சோர்ந்திருந்த முகம், தளர்ந்திருந்த உடல் என அனைத்தையும் பார்த்தவள் உதட்டைக் கடித்தாவாறே அவனிடமிருந்து ஏழ “எங்கே?” தானும் எழுந்தான்.

அவன் தோளைப் பிடித்து அழுத்தி இருத்தி ஏதோ சொல்ல வந்தவன் உதட்டில் கை வைத்து தடுத்து “ஷுப் சத்தம் வரக் கூடாது” என்று அதட்டி இருத்திய அழகில் அவனையும் அறியாமல் சிறுபுன்னகை மலர அவளைப் பார்த்தான்.

கீழே இறங்கி வந்தவள் நேரே கிட்சின் சென்று அவனுக்கு பிடித்த விதத்தில் தேநீர் ஊற்றி விட்டு கையை விரித்துப் பார்த்தாள். சிறிது தயங்கி விட்டு மேலே பார்த்தவள் முகம் இறுக அதையும் தேநீரில் போட்டுக் கலக்கினாள். மேலே ஏறி வர மாடிவளைவில் அவளுக்காய் காத்திருந்தான்.

கீழே அவளின் அசமானத்தில் வெளியே வந்த அசோகன் “என்னம்மா தனியா இங்கே என்ன செய்யுறாய்? கௌதம் எங்கே? உள்ளே பூட்பால் நடக்குதா?” கேட்டவரைப் பார்த்து செல்லாமாய் உதட்டை பிதுக்கியவள் நெருங்கிச் சென்று அவர் காதில் ஏதோ சொன்னாள்.

கவலையையும் மீறிய சிறு சிரிப்புடன் மேலே நின்ற கௌதமைப் பார்த்தவர் “சரிம்மா ஏதாவது அவசரம் என்றால் கூப்பிடு வருவேன்” அவள் தலையை வருடி உள்ளே சென்றுவிட்டார்.

மேலே ஏறி வர பாதி வழியிலேயே இறங்கி வந்து அவள் கையிலிருந்த தேநீரை வாங்கியவன் அவள் ஏற உதவியவாறே “அப்பாவிடம் என்ன சொன்னாய்? ஏன் சிரித்தார்?” வினாவினான். கடந்த மூன்று மாதமாகவே அவனைக் கேலி செய்வதையே தலையாய பணியாய் கொண்டிருந்தனர் அவன் குடும்பத்தினர்.

அதிலும் வத்சலாவும் நதியாவும் அடக்கவே முடியாது.

“ஹ்ம்ம்... எதையோ சொன்னேன். முதலில் இதைக் குடியுங்கள்” தேநீரைக் குடிக்க வைத்தாள்.

குடித்தவனுக்கு சில நிமிடங்கள் கடந்தே வித்தியாசம் புரிய “ஏஏய் என்னத்தடி கலந்தாய்” கண்ணைச் சுற்றிக் கொண்டு வர தலையை குலுக்கியவாறே கேட்டான்.

“இரண்டே இரண்டு ஸ்லீப்பிங்க் டப்லேட்” கையில் அபிநயம் காட்டியவளை முடிந்த வரை முறைத்தவன் “உனக்கு ஏதாவது அவசரம் என்றால் எப்படி எழும்புவேன் அறிவில்லை” கோபமாய்தான் சொன்னான். ஆனால் வார்த்தைகள் உறக்கத்தில் முணுமுணுப்பாய் கேட்டது.

அருகே அமர்ந்து சரியாய் படுக்க வைத்தவள் நெற்றில் முத்தமிட்டு “மாமாவிடம் சொல்லிவிட்டேன் முழித்துதான் இருப்பார். இப்ப நேரம் மணி நான்கு நீங்கள் முதலில் நன்றாக உறங்குங்கள். நாளையில் இருந்து மருத்துவமனை அது இது என்று நேரம் போகும்” அவனிடம் கெஞ்சினாள்.

அவள் அமர்ந்திருக்க அவளை நெருங்கிப் படுத்தவன் ஒரு கையை அவளை சுற்றிப் போட்டவாறே “இப்படியே இருக்க முடியாது நீயும் படு” உறக்கத்தில் முனங்கினான். திரும்பிப் பார்க்க அப்போதும் ஆழ்ந்த உறக்கமின்றி விழிகள் அங்குமிங்கும் ஓடிக் கொடிருப்பது புரிய பெருமூச்சை சத்தமின்றி விட்டவள் அவனருகே தலை வைத்துப் படுத்து மெதுவே ஹ்ம் செய்யதபடியே பாடத் தொடங்கினாள்.

ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நேர் இவரோ ஒ... ஒ...

தாயான தாய் இவரோ தங்கரத தேர் இவரோ ஒ... ஒ...

மூச்சு பட்ட நோகுமேன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்

நிழலுபட்ட நோகும்மேன்னு நிலவடங்க முத்தமிட்டேன்

தூங்க மணி விளக்கே தூங்கமா தூங்கு கண்ணே

ஆசை அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே

ஆராரோ ஆரிரரோ ஆரீரரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ ஆரீரரோ ஆரிரரோ


பாடியாவாறே அவன் தலையைக் கோதிக் கொடுக்க வழமை போல் முகத்தில் தென்பட்ட அமைதியின்மை மறைந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்.

நன்றாக உறங்கி எழுந்திருந்தவளுக்கு நித்தரை வர மறுக்க அவன் முகத்தைப் பார்த்தவாறே வெகு நேரம் படுத்திருந்தவள் வானம் வெளிக்கவே திரைச்சீலைகளை இழுத்து வெளிச்சம் வரமால் மூடினாள். பேபிஸ்க்காக பாதி பின்னியிருந்த சொக்ஸ்சை எடுத்துக் கொண்டு சோபாவில் அமரப் போனவள் அவன் அவளைத் தேடி படுக்கையில் புரண்டு படுக்க அருகே வந்து அமர்ந்து “பக்கத்திலேயேதான் இருக்கின்றேன், தூங்குங்கள்” செல்லமாய் கோபப்பட்டாள்.

உறக்கத்திலேயே திரும்பி அவள் மீது கையைப் போட்டு பக்கவாட்டில் முகம் புதைத்து மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான் கௌதம்.

🎻🎻🎻🎻🎻

பெட்டில் அமர்ந்து சோம்பல் முறித்தவன் முதலில் தேடியது ஸ்ரீனிகாவைத்தான். “ஸ்ரீனி” அவசரமாய் எழுந்தவன் வாஷ்ரூமில் சத்தம் கேட்க போய்க் கதவைத் தட்டினான். குளித்து பெரிய பாத் டவலுடன் சொட்ட சொட்ட ஈரத்துடன் முறைத்துக் கொண்டு நின்றாள் அவள். பின் கழுத்தை அழுத்தி விட்டவன் அசட்டு சிரிப்புடன் “அது” என்று தொடங்கவே வயிற்றில் லேசாய் குத்தி “வழியுது போய்க் குளித்து விட்டு வாருங்கள் சாப்பிட்டு செக்கிங் போகணும்”

“என்ன நேரம் இப்ப” இன்னும் தூக்கம் வழியும் குரலில் கேட்க கபோர்டில் இருந்து போட வேண்டிய ஆடையை எடுத்தவாறே சாதரணமாய் சொன்னாள் “காலை பத்து”.

“ஒ” என்றவன் குளிக்க செல்ல “அடுத்தநாள் காலை” சிறு சிரிப்புடன் சொல்ல “என்ன?” அதிர்ச்சியில் கத்திவிட்டான்.

அவன் சத்தத்தில் எடுத்த ஆடை கீழே விழுந்திருக்க “அதை எடுத்து தாருங்கள்” என்றவாறே முகத்தை துடைத்தாள்.

குனிந்து எடுத்தவன் தன் போனைத் தேடி எடுத்து திகதியைப் பார்த்தான். அது அவள் சொன்னது சரி என்றது. ‘முப்பது மணி நேரமா உறங்கினேன்’ தன்னைத் தானே கேட்டுக் கொண்டவன் “ஏன் என்னை எழுப்பவில்லை?” டென்சனாகி போய் “இன்றிரவு ஹோச்பிடல் போக வேண்டும் இல்லையா?” முகத்தை உள்ளங்கையில் அழுத்தித் தேய்த்தவாறே கேட்டான்.

“ம்க்கும்... ஏற்கனவே இரண்டு நாளாய் உறங்கவே இல்ல. இதில் ஹோச்பிடல் போனால் நீங்கள் படுக்கவே மாட்டீர்கள். இப்போது எடுப்பது தான் ரெஸ்ட். மருத்துவமனை போவது இரவு பத்து மணிக்கு இன்னும் முழுதாய் பன்னிரண்டு மணி நேரம் இருக்கு. முதல்ல போய் குளிச்சிட்டு வாங்கோ. இன்னும் எதுவும் சாப்பிடவில்லை” கண்டிப்பாய் கூறி முதுகில் கை வைத்து தள்ளினாள்.

“உடை மற்ற ஹெல்ப்” இழுக்கவே “கவுன்தான் நானே போட்டுக் கொள்வேன்” போகும்படி சைகை செய்ய நெற்றியை தேய்த்தவாறே குளிக்க சென்றான்.

🎻🎻🎻🎻🎻

அவள் சொன்னது போலவே அடுத்தடுத்த நாட்கள் முழுதும் கௌதமுக்கு இருக்கவே நேரம் கிடைக்கவில்லை. அவளுடனே அவள் தேவைகளைக் கவனித்தபடி செக்கிங் ஸ்கானிங் என்று சுற்றியவன் இடையிடையே அலுவலக வேலைகளையும் பார்க்கவே வேண்டியிருந்தது. பெரும்பான்மையான வேலைகளை ராகவனும் அசோகனும் பார்த்துக் கொண்ட போதும் சில இன்றியையாத வேலைகளை கௌதமே மேற்பார்வை செய்ய வேண்டி இருந்தது. அவற்றை மருத்துவமனைக்கு வரவழைத்தே கையெழுத்துக்களை இட்டு கட்டளைகளை பிறப்பித்தவன் சிகிச்சைக்கு முதல் நாள் யாதவ் ஜிஎம் இருவருக்கும் தான் திரும்ப சொல்லும் வரை தன்னை தொல்லை செய்யக் கூடாது என்றுவிட்டான்.

அன்று ஸ்ரீனியை ஒரு அண்டி பயோடிக் ஷாம்பூ மூலம் தலை குளிக்க வைத்து தலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் இடமான காதுக்கு பின்புறமாய் ஐந்து சென்டிமீட்டர் வட்டத்தில் ஷேவ் செய்து அடுத்ததாய் தியோட்டருக்குள் போக தயாராய் இருந்தாள் ஸ்ரீனிகா.

“மாமா...” என்றவளை ஆதூரத்துடன் அசோகன் நோக்க “பேசாமல் இவருக்கும் அனஸ்தீசியா போட்டு விடுவோமா?” முழுப் பதட்டத்துடன் நின்றவனைப் பார்த்துக் கேட்டாள் ஸ்ரீனிகா.

அவள் பிரசரை பரிசோத்தித்த தாதி “காலையில் பார்க்கும் போது குறைவாய்தானே இருந்தது. இப்போது என்ன நடந்தது” கண்டிப்புடன் கேட்டவர் “கொஞ்சம் ரிலாக்ஸாய் இரும்மா” என்றவாறே வெளியேறினார்.

அவள் கண்களோ தந்தையின் அருகே பதட்டத்தின் மொத்த உருவமாய் நின்றவனையே கவலையுடன் பார்க்க அவளின் சலனத்தைக் கவனித்த ராகவன் கௌதமை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்

“கிருஷ்ணா அவளுக்கு உன்னைப் பதட்டமாக பார்க்க ப்ரெஷர் ஏறுது கொஞ்சம் காட்டிக் கொள்ளாமல் இருக்கப் பார்” அவன் எச்சரிக்க அவனோ சட்டென அருகே போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.

“எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்” என்றவன் தலையில் கை வைத்து செல்ல தன் உள்ளங்கையில் முகத்தைப் புதைத்தான் கௌதம். எழுந்து சென்று மறுபுறம் இருந்த பல்கனி வழியே வெளியே பார்க்க எதிரே கடல் சத்தமின்றி தென்பட்டது. ஏனோ கடலைப் பார்க்க மனது அமைதியடைய வெகுநேரம் வரை பார்த்துக் கொண்டே நின்றான், திரும்ப ராகவன் வந்து அழைக்கும் வரை.

“கிருஷ்ணா ஸ்ரீகுட்டி உன்னைத் தேடுகிறாள்”

“வாரேன்” திரும்பியவன் முகம் அமைதியாய் இருக்க யோசனையுடன் பார்த்தான் ராகவன்.

அறையில் அவள் மட்டும்தான் இருந்தாள். அனைத்தும் தயார் செய்யப்பட்டு இன்னும் ஒரு மணி நேரத்தினுள் தியோட்டரினுள் எடுத்து விடுவார்கள். அனஸ்தீசிய கொடுப்பது எல்லாம் தியேட்டரினுள் உள்ள அறையில் வைத்துதான். அதன் பின்னர் சிகிச்சை முடிந்த பின்னர் தான் பார்க்க முடியும்.

அறையினுள் சென்று அவள் முகம் பார்த்தவனுக்கு நொடியில் புரிந்தது, பயந்துவிட்டாள். இத்தனை நாள் எப்படியோ சமாளித்துவிட்டான். ஸ்டூலை அருகே இழுத்துப் போட்டு அமர அவளோ பெட்டில் விலகி படுத்தாள். ‘இங்கே இரு’ என்பது போல்.

அவள் விருப்பபடி அருகே அமர்ந்து முகம் நோக்கிக் குனிய கன்னங்களை பற்றிக் கொண்டவள் “பயமா இருக்கு கௌதம்” பயம் நிறைந்த பெரிய கண்களால் அவனை பார்த்தாள்.

“ஷ்...” அவள் கண்களில் இதழ் பதித்து நிமிர “இத்தனை நாள் உங்களைப் பார்த்ததில் எனக்கு என் பயம் தெரியல” சொன்னவள் கண்கள் இன்னும் பெரிதாய் விரிய அவனைப் பார்க்க அவனோ கண்விழியை மட்டுமாய் அசைத்து வேறுபுறம் பார்த்தான். அன்று ஒருநாள் தன்னை மீறி பயத்தை வெளிக்காட்டி விட அவனைத் தேற்றுவதில் தன் பயத்தை மறந்ததை கவனித்துவிட்டானே! இல்லாவிட்டால் அவன் பயத்தை அப்படி வெளிப்படையாக காட்டியிருக்கமாட்டனே.

ஆனால் அதன் பிறகு இந்தக் கணம் வரை அவள் உண்மையில் பயத்தை மறந்து தான் போனாள். தனக்காக ஒருவன் உயிராய் உருகுகின்றறான் என்ற என்னமோ இல்லை அவனின் காதல் தந்த நம்பிக்கையோ இந்தக் கணம் வரை பயம் அவளருகே கூட வரவில்லை.

“இதுதான் நீங்கள்...” நடுங்கும் உதடுகளைக் பற்களால் கடிக்க பெருவிரலால் வருடி அவள் உதடுகளை விடுவித்து லேசாய் இதழ் ஒற்றி நிமிர்ந்தவன் அவள் கண்ணை ஆழ்ந்து பார்த்து கேட்டான் “என் மீது நம்பிக்கை இருக்கா?”.

அவன் கண்ணில் தென்பட்ட ஏதோ ஒன்றிற்கு கட்டுப்பட்டவளாய் “இருக்கு” தலையசைத்தாள்.

அவள் ஒரு கை அவன் பெரிய கையினுள் நெஞ்சோடு சிறைபட்டிருக்க அவளை நோக்கிக் குனிந்திருந்தவன் “உனக்கு எதுவும் நடக்காது நடக்க விடமாட்டேன்” அவன் குரலில் இருந்த உறுதியில் மனம் அமைதியுற மெலிதாய் புன்னகைத்தாள்.

குனிந்து அழுத்தமாய் கன்னத்தில் இதழ் பதிக்க அன்று மோலில் வைத்து கன்னத்தில் முத்தமிட்டது ஞாபகத்தில் நிழலாட புன்னகையுடன் ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்றாள் ஸ்ரீனிகா.

விலக அப்போதும் புன்னகையுடன் இருந்தவள் முகத்தைப் பார்த்தவனுக்கு தொண்டை கரகரக்க “சீக்கிரம் வந்துருடி” என்று எழுந்தவன் அருகே நின்ற அனஸ்டியடிக் (Ananstiatic) இனைப் பார்த்து “தேங்க்யூ” என்று சிறு நன்றியை உதிர்த்தவன் அப்போதும் தன் கையில் இருந்த அவள் கையில் இதழ் பதித்து விடுவித்தான்.

எப்படியும் அவளுக்கு கடைசி நேரம் ஒரு பயம் வரும் என்பதை அனுமானித்தவனாய் அனஸ்டியடிக் கொடுப்பவரிடம் அவளின் பயந்த சுபாவத்தை எடுத்துச் சொல்லி அறையில் வைத்தே அனஸ்தீசியா கொடுக்க சம்மதிக்க வைத்திருந்தான்.

பூப் போல தூக்கில் ஸ்டேச்சரில் படுக்க வைத்தவன் கன்னத்தை அவள் தலையில் வைத்து அழுத்த தொண்டைக் குழி ஏறி இறங்கியது. உணர்ச்சியற்று இறுகிப் போன முகத்துடன் தியேட்டர் வரை சென்றவன் அவளை உள்ளே எடுத்து கதவைச் சாற்ற முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

உணர்ச்சியற்று இறுகியிருந்த முகத்தைப் பார்த்துவிட்டு யோசனையுடன் அருகே வந்தான் ராகவன் “கிருஷ்ணா நீ...” மேற் கொண்டு என்ன கேட்க என்று தெரியாமல் தடுமாற “பேப்பர்ஸ் கொஞ்சம் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் அண்ணா” என்றவன் முழங்காலில் முழங்கையூன்றி நெற்றியை உள்ளங்கையில் தாங்கியவன் அறுவை சிகிச்சை நடை பெற்ற அந்த பன்னிரண்டு மணி நேரமும் அசையக் கூட இல்லை. அவசரமாய் கையெழுத்து போட மட்டும் எழுந்தவன் மீண்டும் அதே இருக்கையில் போய் இருந்துவிட்டான்.

🎻🎻🎻🎻🎻

பன்னிரண்டு மணி நேரம் நூறு ஆண்டுகளைப் போல் கடந்திருந்தது.

சிவப்பு விளக்கு அணைந்து சத்திர சிகிச்சை பிரிவு கதவைத் திறந்து கொண்டு இன்னொரு பத்து டாக்டர்ஸ் புடை சூழ வந்த ரிச்சர்ட்டை உணர்ந்தவன் போல் சட்டென எழுந்து நிற்க அத்தனை நேரம் ஒரே நிலையில் இருந்த கால்கள் அவனின் பேச்சைக் கேட்க மறுக்க தள்ளாட இரு பக்கமும் பிடித்துக் கொண்டானர் அசோகனும் ராகவனும்.

சிவந்திருந்த கண்களும் கலைந்திருந்த தலையும் தாடியுமாய் அவனைப் பார்த்த ரிச்சர்ட் ஆதூரத்துடன் அவன் தோளில் தட்டி “கட்டியை வெற்றிகரமா அகற்றியாகிவிட்டது. அதனால் இனிப் பயமில்லை. ஆபத்தான இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை அதனால் இன்னும் மூன்று நாட்களுக்கு மயக்கத்தில்தான் இருக்க வேண்டும். இதுவரை உடல் ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை” தொடந்து ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு வந்தவர் சிறிது நிறுத்தி அருகே நின்ற இருவரையும் பார்த்து “மூளை தொடர்பான விடயங்களை இலகுவில் இப்படித்தான் என்று யாராலும் சொல்ல முடியாது. இதுவரைக்கும் அவர் உயிருக்கு எந்த விதத்திலும் ஆபத்தில்லை” சொல்லி முடிப்பதற்குள் அடைத்திருந்த தொண்டையில் இருந்து கரகரத்த சத்தம் மட்டும் வரக் கேட்டான் “பேபிஸ்”.

அந்த மருத்துவர் குழாமில் நின்ற சென்னையின் மிகச் சிறந்த கைனொலோஜிஸ்ட்டும் பீரியடிசனும் “பேபிஸ் ஆரோக்கியமா இருக்கிறாங்க. எந்தப் பிரச்சனையும் இல்ல” புன்னகையுடன் கூறினார்கள். அவர்களிடம்தான் மாதாமாதம் செக்கிங்கிற்காக அழைத்துச் செல்வான். அவருக்கு ஸ்ரீனிகா தொடர்பான முழு விடயங்களும் அத்துப்படியாகியிருந்தது. அத்தனை நேரமிருந்த இறுக்கம் தளர அப்படியே நாற்காலியில் சரிந்துவிட்டான் கௌதம்.

அசோகனும் ராகவனும் திடிரென சரிந்ததில் பயந்து போய் பார்க்க ரிச்சர்ட் அவன் பல்சைப் பரிசோதித்து விட்டு “ஹி இஸ் ஒல்ரைட், ஜஸ்ட் ஸ்ட்ரெஸ் ரிலீவ்” புன்னகையுடன் கூறியவர் “கெட் அப் ஜங் மேன், கெட் பிரெஷ் அண்ட் வெல்கம் பாக் யுவர் லவ். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பேசண்டை ஐசியு மாற்றிவிடுவார்கள். அதன் பிறகு டிஸ்ட்ரப் செய்யாம உள்ளே போய் பார்க்கலாம். நான் நாளை வந்து பார்க்கிறேன்” தோளில் தட்டி விட்டு சென்றார்.

மறுபுறம் இருந்த ஐசியு யூனிட்டுக்கு தியோட்டரில் இருந்து உள் புறமாகவே மாற்றி விட ஒவ்வொருவராக சென்று ஸ்ரீனிகாவைப் பார்த்து விட்டு வர உடையவனோ இத்தனை நேர அழுத்தம் விடை பெற்றதில் அசைய முடியாது இருந்தான். உள்ளே சென்று பார்க்கத்தான் வேண்டும், ஆனால் அசையவே முடியவில்லை.

ஒவ்வொருவராய் வந்து அழைத்துப் பார்த்துவிட்டார்கள் கல்லுள்ளி மங்கன் போல் அசையாமல் இருந்தான் கௌதம். கடைசியாய் மீண்டும் ஒரு முறை “தம்பி எவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை, இப்போது நினைவு இல்லாவிட்டாலும் அவள் ஆழ்மனம் உங்களைத் தானே தேடும்” எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயன்றாள் வத்சலா.

அவனுக்குமே புரிந்துதான் இருந்தது. ஆனால் அவனால் அசைய முடியும் போல் தோன்றவில்லை. கிட்டத்தட்ட ஏழு மாதமாய் உள்ளே அடக்கி வைத்திருந்தது. உடல் பஞ்சு போல் பாரமேயின்றி இருக்க எழுந்து ஐஸியூ வரை செல்ல முடியம் போல் தோன்றவில்லை. ரிச்சர்ட் சும்மாவெல்லாம் சொல்ல மாட்டார் அன்றே அவ்வளவு கறாராய் பேசியவர். எனவே அவள் உயிருக்கு ஆபத்தில்லை என்றால் ஆபத்தில்லைதான். அவள் உயிரோடு இருக்கும் வரை வேறு எந்தப் பிரச்சனை வந்தாலும் அவனால் சமாளிக்க முடியும்.

மெல்லிய முறுவலுடன் “இல்ல அண்ணி அது... என்னால்...” அவன் இழுக்கவே “நான் அவரை இல்ல மாமாவை வர சொல்லட்டுமா?” அவன் நிலை புரிந்து கேட்க “வேண்டாம் அண்ணி கொஞ்ச நேரத்தில் நானே போய்ப் பார்க்கிறேன்” என்ற கௌதம் அடுத்த பத்து மணி நேரம் வரை அந்த இருக்கையை விட்டு அசையவில்லை.

அவன் நிலையை ஓரளவு புரிந்து கொண்ட குடும்பத்தினரும் அவனை அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.

“அண்ணா அண்ணிக்கு எல்லாம் ஒகே தானே” ஐசியுவில் ஸ்ரீனிகாவை பார்த்து விட்டு வெளியே வந்த நதியா அவனருகே தன் பெரிய வயிற்றை தள்ளிக் கொண்டு அமர்ந்தவாறே கேட்டாள்.

“ஹ்ம்ம்” சோபையாய் தலையாட்டியவன் இருட்டி நடுசமாத்தை நெருங்கியிருக்க மென்மையாய் கடிந்தான் “ஏன் இந்த நேரம் வந்தாய் நாளை காலையில் வந்திருக்கலாம் தானே?”.

“பரவாயில்ல அம்மா இப்பதான் வீட்டிற்கு வந்தார்கள். அண்ணியை பார்க்கனும் எ..” சொல்லிக் கொண்டே வந்தவள் திடிரென நிறுத்த வத்சலா கேட்டாள் “என்னம்மா எங்காவது வலிக்குதா?” கௌதம் தன் கையைப் பிடித்த அழுத்தத்தின் அளவில் அவள் வலியை உணர்ந்தவன் கீழே பார்க்க அவள் காலின் கீழே நீர் குளம் கட்டியிருந்தது.

“நர்ஸ்” சத்தமாய் அழைத்தான்.

அடுத்த நொடி பொறுப்பை கையில் எடுத்தவனாய் நதியாவை அதே மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தான். கூடவே வேறு பேசண்டை பார்த்துவிட்டு அப்போது தான் பார்கிங்கிற்கு சென்றிருந்த கைநோலோஜிஸ்டை திரும்ப அழைத்து நதியாவைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டவன் ஐசியுவின் கண்ணாடி வழியே ஸ்ரீனியை பார்த்தான். மயக்கத்தில் கருவிகளின் துணையோடு மூச்சு விட்டவளை காண நெஞ்சுக்குள் ஏதோ பிசைந்தது.

அவளை இப்படிப் பார்க்க தைரியம் இல்லாமல் தானே வெளியே பழியாய் கிடக்கின்றான்.

‘இதற்கு மேல் அவளை வேறு எந்த துன்பமும் அவளை அணுகக் கூடாது என்று கடவுளே’ மனதினுள் நினைத்தவனாய் அந்த இடத்தை விட்டு செல்லவதற்கு காலெடுத்த கௌதம் நின்று “யாதவ் அஜா நீங்கள் இருவரும் இங்கேயே இருக்க முடியும் தானே” தயக்கமாய் கேட்டான். ஏனெனில் அவர்கள் இருவரும் நேற்றில் இருந்து இங்கேயேதான் இருக்கின்றார்கள்.

“நோ ப்ரோப்லேம் பாஸ், நீங்கள் மேடத்தை பாருங்கள்” என்று யாதவ் கூற “ஜிகே முதலில் போய் தங்கச்சியை பார் பிறகு தங்கச்சி மேடத்தை பார்த்து விட்டு வந்து கதை” என்றான் அஜா.

நதியாவை அட்மிட் செய்திருந்த இடத்தை அடைந்த போது அவளை உள்ளே எடுத்திருந்தார்கள். அவர்களுடன் வெளியே நின்றவனை அனைவரும் முறைக்க “இல்ல நதியை பார்த்திட்டு போறேன்” அப்பாவியாய் சொன்னான். கிட்டத்தட்ட சிகிச்சை முடிந்தும் பத்து மணி நேரத்திற்கு மேல் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தவனை வீட்டிற்கு அல்லது அதே மருத்துவமனையில் இருந்த அறைக்குச் சென்று பிரெஷ் ஆகி வர சொல்ல மறுத்து இருந்தவன் இப்போது எழுந்து வந்திருந்தான்.

அதிக நேரமேடுக்காமல் நதியா சுரேஷின் செல்வன் சுகப் பிரசவமாய் அடுத்த அரை மணி நேரத்தில் பூமிக்கு வர அவனை கையில் ஏந்திக் கொண்டு வெளியே வந்தான் சுரேஷ். சுரேஷின் கையில் கண்ட சிறு உருவம் தன் மனைவியின் கருவில் இருக்கும் தன் வாரிசுகளை ஞாபகப்படுத்த குனிந்து குழந்தையின் நெற்றியில் முத்தம் வைக்க தாடி குத்தியதில் அது சிணுங்கியது. கன்னத்தை வலிக்காமல் கிள்ளி விட்டு அங்கிருந்து நேரே ஐஸியூ சென்றுவிட்டான்.

ஸ்ரீனி கையை தன் கையில் எடுத்து வைத்து கொண்டு “உடனே பார்க்க வரல நதியாவைப் பார்க்க போய்ட்டான் என்று கோபிக்கதேடி, இப்படி வயர் தலையில் கட்டு பார்க்க முடியல என்னால் அதான் வரல. நதியின் பேபி கூட கையில் தூக்கல, தூக்கவும் முடியல. ஆனா ஆனா நதியின் குட்டி பேபி பார்த்தும்... இவர்கள் இருவரையும் எப்போ கையில்” அவள் வயிற்றில் கைவைக்க அவன் கையை உணர்ந்து உதைத்தார்கள். அவளின் ஹோச்பிடல் கௌனின் மேலாய் வயிறு அசைவது தெரிய “ஷ்... அம்மா பாவம், இன்னும் ஒரு இரண்டு வாரம் அம்மாவை கரைச்சல் கொடுக்க கூடாது” செல்லமாய் கண்டித்தான்.

அவன் சொன்னது கேட்டது போல் அதற்கு மேல் அசையவில்லை அவனின் பிரின்சஸ்சும் லிட்டில் சம்ப்பும். கண்டடூலா போடாத கையை தன் கைகளுக்குள் பொத்தி வைத்தவாறே அவள் புருவ மத்தியைப் பார்த்தவாறே வெகு நேரம் அசையாது அமர்ந்திர்ந்தான் கௌதம்.

உள்ளே வந்த தாதி அவன் நிலையைப் பார்த்து தலையை குறுக்கே ஆட்டி “இது ஐசியு நிறைய நேரம் இருக்க முடியாது. போய்க் குளித்து பிரேஷ் ஆகி வாருங்கள் இல்லை அவர்களுக்கு இன்ஃபேக்ஷேன் ஆக்கிரும்” அவர் அனுபவம் அவனைக் கையாள துணை வந்தது. மறுபேச்சின்றி எழுந்தவன் வெளியே வர அவனை எதிர் கொண்டார் அசோகன்.

“அப்பா” சட்டென அனைத்து அவர் தோளில் முகம் புதைக்க அவன் உடல் குலுங்கியது. சற்று நேரம் அழவிட்டவர் மெல்லத் தட்டிக் கொடுத்தார் “அதுதான் இப்போது அவளுக்கு ஒன்றுமில்லையே”

சிறு வெட்கத்துடன் விலகியவனை “போய் குளித்து பிரெஷ் ஆகி வா. வீட்டிற்கு போவதாய் இருந்தால் அஜாவை அழைத்துச் செல்” தலையைக் கலைத்துவிட்டார். இன்னும் அவன் உடல் அடித்துப் போட்டது போல்தான் இருந்தது.

திரும்பி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவனுக்கு ஸ்ரீனிகா சொன்னது ஞாபகம் வந்தது. அவன் நெஞ்சில் கையூன்றி “ஒப்பரேசன் முடிந்து என்னைப் பார்க்க வரும் போது இந்த தாடி எல்லாம் எடுத்து தலைமுடி வெட்டி ஹன்ட்சம்மா வரணும். அப்பத்தான் உங்களிடம் பேசுவேன்” அதற்கு அவன் பதில் பேசமால் நெற்றியில் ஊதி தன்னுடன் அணைத்திருந்தான்.

ஐசியு கண்ணாடியின் ஊடே அவள் தெரிய கண்ணாடியில் பிரதிபலித்த தன் பிம்பத்தை கண்டவன் முகத்தில் இருந்த பத்து நாள் தாடியை தடவ அவன் இதழ்களில் மில்லி மீட்டர் புன்னகை அரும்பியது “அஜா” என்றவாறே முன்னே செல்ல நிம்மதி பெருமூச்சுடன் பின்தொடர்ந்தான் அஜா.

🎻🎻🎻🎻🎻

ஏற்கனவே ரிச்சர்ட் கொடுத்த கெடுவில் இரண்டு நாட்கள் கழிந்திருக்க இன்று மூன்றாவது நாள். அம்மா அப்பாவை வீட்டிற்கு போய் ரெஸ்ட் எடுத்து விட்டு மருத்துவர் வரும் நேரமான இரவு பத்து மணியின் பின்னர் வர சொல்லி விட்டு ரகாவனும் வத்சலாவும் கெளதமுடன் மருத்துவமனையில் நின்றார்கள்.

நதியாவும் இன்னும் வீட்டிற்கு சென்றிருக்கவில்லை. ஸ்ரீனிகா கண் விழிப்பதை பார்த்து விட்டு செல்வோம் என முடிவாய் சொல்லிவிட்டாள். எப்படியும் அனைவரும் அதிக நேரம் மருத்துவமனையில் நிற்கும் போது வீட்டில் தனியாக பாப்பாவை பார்த்துக் கொள்வது கடினம் என்று யாசோதாவும் அங்கேயே இருக்கட்டும் என்றுவிட்டார்.

பிள்ளைகளுக்காக யசோதா இரவில் போய்த் தங்கி வர பிரச்சனையின்றி சென்றது. கூடவே ஸ்ரீனிகா நிலா தீப் இருவரிடமும் சொல்லியிருந்தாள் “ஸ்ரீமா கொஞ்ச நாள் வெளியே போவேன் அந்த டைம் நீங்கள் இருவரும் குழப்படி இன்றி இருக்க வேண்டும், சரியா?” என்று ஸ்ரீமாவின் வார்த்தைகள் அவர்களுக்கு வேதம், அதை அப்படியே பின்பற்றினார்கள்.

அனைவரையும் மூன்று நாட்கள் விதவிதமாய் தவிக்க விட்டு ரிச்சர்ட் வந்திருந்த நேரம் கண்விழித்தாள் ஸ்ரீனிகா.

அவர் சில பரிசோதனைகளை மேற்கொண்டு விட்டு கௌதமை உள்ளே அழைக்க இறுகியிருந்த அவன் முகத்தைப் பார்த்துவிட்டு ராகவனும் கூடவே சென்றான்.

கௌதமை ஸ்ரீனிகாவின் முன் நிறுத்திய ரிச்சர்ட் கேட்டார் “இவரை உங்களுக்கு தெரியுமா?”

அறிமுகமற்ற பார்வையுடன் கௌதமைப் பார்த்த ஸ்ரீனிகா புருவத்தை சுருக்கிக் கேட்டாள் “யார் நீங்கள்?”
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻60(a)


கௌதமை ஸ்ரீனிகாவின் முன் நிறுத்திய ரிச்சர்ட் உதட்டுக்குள் ஒளித்து வைத்த புன்னகையுடன் கேட்டார் “இவரை உங்களுக்கு தெரியுமா?”

அறிமுகமற்ற பார்வையுடன் கௌதமைப் பார்த்த ஸ்ரீனிகா புருவத்தை சுருக்கிக் கேட்டாள் “யார் நீங்கள்?”

கௌதம் மொத்தமாய் அதிர்ந்து ரிச்சர்டை பார்க்க அவளோ ஒரு விரல் நீட்டி விரலால் கௌதமை அழைத்தாள் “ஹேய் ஹன்ட்சம்”.

யாரை அழைக்கிறாள் என்பது போல் பார்க்க “உன்னைத்தான் ஹன்ட்சம் மேன்” என்றவள் மீண்டும் அருகே அழைத்தாள் “இங்கே வா”.

கௌதம் திகைப்பிலிருந்து மீளாமல் ரிச்சர்டைப் பார்க்க அவளை அவதானித்தவர் அவனை அருகே போகும்படி தலையாட்டினார்.

அருகே வந்து குனிந்து நிற்க அவன் முக வடிவை ஒரு விரலால் அளந்தவள் உதட்டைக் குவித்து “ஒ.... ரெம்ப ஹன்ட்சம்” இருபுறமும் உதடு இழுபட சிரித்தவாறே கேட்டாள் “உன் பெயர் என்ன மேன்?”.

தன்னைத்தானே சுட்டிக் காட்டிய கௌதம் “என் பெயரா?” உறுதிப்படுத்திக் கொள்ள கேட்க அவன் சட்டையின் நுனியை இரு விரலால் பிடித்து இழுத்தாள்.

“ஏன் மேன் பெயர் சொல்ல மாட்டியா?” உதட்டைப் பிதுக்கி முகத்தை சோகமாய் தூக்கி வைத்துக் கொள்ள அச்சு அசல் டிஸ்னி பிரின்சஸ் போலவே இருந்தது.

தன்னையே யாரென்று கேட்டதில் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த கௌதம் “கௌ கௌதம்” வாழ்கையில் முதல் முறையாய் தடுமாறினான்.

“ஹாய் ஹன்ட்சம் கௌதம்! என்னை கல்யாணம் செய்யுரியா?” கண்களை சுழற்றி கேட்க கௌதமுக்கு தலையோடு சேர்ந்து உலகமும் சுற்றும் போலிருந்தது. மூளையில் ஒப்பரேசன் என்று தன்னை மறந்து போவதைக் கூட எதிர் பார்த்தான். ஆனால் இது என்ன வகை தன்னைக் கல்யாணம் செய்யக் கேட்கிறாள். ஆனால் தன்னைத் தெரியவில்லை. கண்களில் மயக்கத்துடன் முகம் மலர பார்த்தவள் நிலை என்ன என்பதே அவனுக்கு புரியவில்லை.

“டொ டொக்டர் ஷி” கையை ஸ்ரீனிகாவை நோக்கி நீட்டி “ஹேர் ஹப்பென்ட்” வார்த்தைகள் கோவையாய் விழ மறுக்க ரிச்சர்டையும் அவருடன் நின்ற மருத்துவர்களையும் பரிதபமாய் பார்த்தான்.

ராகவனுக்கு தம்பியைக் காண சகிக்கவில்லை. அவன் தோளில் ஆதரவாய் கை போட்டவன் பதிலை எதிர் நோக்கி மருத்துவர்களைப் பார்க்க அதற்கு மேல் தாங்காது என்பது போல் அனைவரும் சத்தமாய் நகைத்துவிட்டனர்.

அண்ணன் தம்பி இருவருக்குமே தலைகால் புரியாமல் நிற்க ஸ்ரீனிகா ஒரு கையை நீட்டி கௌதமின் கையைப் பிடித்தாள். ‘என்ன?’ என்பது போல் பார்க்க அருகே அழைத்தாள்.

குனிய உதட்டின் அருகே கையை வைத்து ரகசியமாய் “ஓடிப் போவோமா?”என்று கேட்க எச்சில் புரையேற இருமினான் கௌதம்.

“அச்சோ பாத்து” கன்னத்தை தட்டிக் கொடுத்து வில்லங்கத்திற்கு வெட்கப்பட்டு புன்னகைத்தாள். ஒரு கணம் அவளைப் பார்த்தவன் மறுகையால் அவள் கையை தட்டிக் கொடுத்தவாறே “வாட் ஹப்பன்ட் டு ஹேர்? வை ஆர் யூ ஆல் லவ்பிங்?” அடக்கிய சினத்துடன் கேட்டான்.

அவர்களில் ஒருவர் அவன் தோளில் தட்டிக் கொடுக்க, ஸ்ரீனிகாவையே கவனமாய் கவனித்த ரிச்சர்ட் “நோதிங் ராங் வித் ஹேர். ஷி இஸ் டோட்டலி பைன்” என்று அவனுக்கு ஆறுதலளித்தார்.

“அவளுக்கு ஒன்றுமில்லை அனஸ்தீசிய எபக்ட் அவ்வளவுதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பூரண நினைவு வந்திரும். சிலர் அனஸ்தீசிய கொடுத்து நினைவு திரும்பும் போது இப்படித்தான் நடப்பார்கள். உங்களில் ஒருவர் அருகே இருக்கலாம். அதிகம் தலையை அசைக்க விடாதீர்கள். வொமிட் வர வாய்ப்பு இருக்கு அது நல்லதில்லை. லக்கி மேன் நீ, அவளுக்கு நினைவே இல்லை ஆனாலும் உங்களை காதலிக்கின்றாள்” சொன்னவர் குரலில் லேசாய் பொறமை கூட எட்டிப் பார்த்தது.

“நான் பாட்டுப் பாடவா?” அவன் கையைப் பிடித்துக் கேட்க சற்று விலகி நின்று ரிச்சர்ட் சொன்னதை கிரகித்தவனுக்கு கண்ணில் நீர் சுழன்றது.

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்” அவனை நோக்கி கையை நீட்டிப் பாட்டுப் பாட அருகே நின்ற ஒருவர் அவள் பாடும் பாட்டின் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் ரிச்சர்ட்க்கு கூற மீண்டும் ஒரு சிரிப்பலை பரவியது.

வேகமாய் அவளருகே வந்தவன் “யெஸ் உன்னை கல்யாணம் செய்கின்றேன்” என்றான் அவளருகே குனிந்து. அவள் “ஒ” என்று உதட்டைக் குவிக்க தன்னைக் கட்டுபடுத்த முடியாமல் சட்டென குனிந்து அவள் இதழில் ஆழ்ந்த முத்தம் ஒன்றைப் பதித்தான் கௌதம்.

அவன் விலக “ஒ... யு கிஸ் மீ” இரு கைகளையும் ஆனந்த ஆச்சரியத்துடன் வாயில் வைத்தாள்.

“நானும், உன்னை கிஸ்” என்று எழ முயல “அசையாதேடி, தலையில் ஐந்து சென்டிமீட்டர் நீளத்திற்கு தையல்” தோளைப் பிடித்து படுக்க வைத்தான் கௌதம்.

படுக்க வைக்க முயன்றதில் அருகே வர ஒரு விரலால் கண்களை நோண்டி “காபூல் திரட்சை போன்ற கண்கள் பிடிக்கும். காஷ்மீர் அப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்” சத்தமாய் பாட காதுமடல் வரை சிவந்தவன் “கொஞ்சம் சும்மா இரேன்டி” கெஞ்சினான்.

அவனிடம் வருகிறேன் என்று எழ முயன்றவளைத் தடுத்து நிறுத்தி “சொல் கேட்கவிட்டால் நான் போய் விடுவேன்” மிரட்டவே அழுவது போல் உதட்டைப் பிதுக்கினாள்.

“இம்சைடி” வாய்க்குள் முனங்கியவன், மறுகையால் பின் தலையைக் கோதி அவளிடமிருந்து தள்ளி நிற்க “ஹி இஸ் சோ கியூட், ஹி இஸ் சோ ஸ்வீட், ஹி இஸ் சோ ஹன்ட்சம்” திரும்பவும் பாடத் தொடங்க இந்த முறை அவர்களுக்கு மொழிபெயர்ப்பு தேவையின்றி மீண்டுமொரு சிரிப்பலை பரவியது.

நெற்றியை அழுந்த்தத் தேய்த்து விட்டவன் அருகே வந்து அவள் இதழ்கள் மேல் ஒரு விரலை வைத்து நெற்றியில் இதழ் பதிக்க ஏதோ ஞாபகம் வந்தது போல் கண்ணைச் சுருக்கினாள். மென்மையாய் உதடு அதிர அழைத்தாள் “கௌதம்”

“ஹ்ம்ம் நானேதான் தூங்கும்மா” என்றான் கௌதம்.

“நீ இங்கே தானே இருப்ப மேன்” கண்ணைச் சுருக்கிக் கேட்க “ஹ்ம்ம் இங்கேயே தான் இருப்பேன்” அவள் கையை இறுகப் பற்றிச் சொல்ல “அப்ப சரி” என்றவாறே அவன் கையை கன்னத்தோடு வைத்து கண் மூடினாள்.

கௌதம் ரிச்சர்டை நிமிர்ந்து கேள்வியாய் பார்க்க “எல்லா விதத்திலும் ஒகே, இனி நோர்மல் டெலிவரி கூட ட்ரை பண்ணலாம். நான் இன்று நைட் சிங்கபூர் போகிறேன். மீதியை இங்கே உள்ள நீயுரோலோஜிஸ்ட் பார்த்துக் கொள்வார்கள்” புன்னகையுடன் சொன்னவர் “இந்த லவ்வை எப்போதும் விட்டு விடாதே யங் மேன் கெட்டியாய் பிடித்துக் கொள்” என்று ஸ்ரீனிகாவைக் காட்டியவர் தோளில் தட்டி விடை பெறவே அவரை வழியனுப்ப கௌதமும் எழுந்திருந்தான்.

அசைய முடியாது அவன் கை ஸ்ரீனிகாவின் இறுகிய பிடியில் கையிருக்க ராகவன் முன் வந்து “நான் உங்களை ட்ராப் செய்கிறேன்” என்று அழைக்க சிறு மன்னிப்பு வேண்டும் பார்வையுடன் “தேங்க்ஸ் எ லோட்” என்றான்.

ராகவன் அவரை அழைத்துச் செல்ல ஸ்ரீனிகாவிடம் திரும்பியவன் “இம்சைடி நீ, கொஞ்ச நேரத்தில் என்ன பாடுபடுத்திட்ட?” செல்லமாய் கடிந்தவனை கண்ணில் மயக்கத்துடன் ரசித்தாள்.

அவளின் ரகளைகள் அத்துடன் நிற்கவில்லை ஐசியுவே அமர்க்களப்பட்டது. நர்ஸ் செக்கிங் செய்ய வந்து போகும் மருத்துவர் என அனைவரையும் தன் அலப்பறையில் சிரிக்க வைத்து அன்று முழுவதும் கௌதமை சிவக்க வைத்தாள் ஸ்ரீனிகா.

🎻🎻🎻🎻🎻

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து கண் விழித்தவளுக்கு காதருகே பின்புறத் தலையில் பயங்கரமாய் வலித்தது. ‘எங்கே இருக்கிறேன்’ தன்னைத்தானே கேட்டுக் கொண்டவளுக்கு கடைசியாய் கௌதம் முத்தமிட்டது நினைவு வர கண்ணைத் திறத்து பார்த்தாள்.

சுற்றிலும் மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவமனையில் இருப்பது புரிந்தாலூம் ‘இப்போது தானே மயங்கினேன் அதற்குள் எப்படி இங்கே’ குழப்பமாய் இருக்க சுற்றும் முற்றும் பார்க்க தலையசைத்து விட்டு “ஒஹ்” வலியில் தன்னையும் அறியாமல் லேசாய்க் கத்தி விட சட்டென எழுந்திருந்தான் கௌதம்.

“ஸ்ரீனி” அவன் கையை அவள் கன்னத்திற்கு கொடுத்து விட்டு அவளருகே கட்டிலில் தலை சாய்த்து ஏதோதோ யோசனையில் அமர்ந்திருந்தவன் அவள் சத்ததில் எழுந்து நேராய் அமர்ந்தான்.

“யு ஒகே” கேட்டவன் சந்தேகமாய் பார்த்தான் இன்னும் அனஸ்தீசிய பக்க விளைவு இருக்கின்றாதா என்பது போல்.

நீண்ட புருவத்தை சுருக்கி யோசித்தவள் “வோர்டில்தானே இருந்தோம்” கனத்து போயிருந்த குரலால் கேட்டு அவனை அப்போதுதான் நன்றாகப் பார்த்தாள்.

சிகையை அழகாய் ஓட்ட வெட்டி ஒரு நாள் தாடியுடன் கண்களில் இருந்த அந்தக் களைப்பும் சோர்வும் இல்லையென்றால் ஆணழகன்தான், இன்னும் ரசித்துக் கொண்டே இருப்பாள். “யூ ஒகே” பரிவுடன் அவன் சிகை கோதிய கையைப் பிடித்து நெற்றியில் அழுத்திக் கொண்டவன் வேகமாய் தலையாட்டினான் “ஹ்ம்ம்”.

அவள் எழுந்ததுமே முன் போல் ஏதாவது குறும்புத்தனம் செய்வாளோ என்று யோசனையாய் பார்த்தவன் ‘யு ஒகே’ என்று கேட்டதில் நினைவு திரும்பிவிட்டது புரிய கவலையுடன் கேட்டான் “வலிக்குதா?” அவள் பதில் சொல்வதற்குள் ரவுன்ட் வரும் மருத்துவர் உள்ளே வர அவரை செக் செய்ய விட்டு வெளியே செல்ல முயன்றவன் கை ஸ்ரீனிகாவின் இறுகிய பிடியில் இருந்தது.

அவள் முகத்திலிருந்த கலக்கத்தைப் பார்த்து தயங்கியவாறே மருத்துவரை நோக்க அவரோ சிறு முறுவலுடன் அவனை இருக்கும்படி தலையசைத்தார். அவளிடம் சில பரிசோதனைகளை மேற் கொண்டவர் இருவரையும் பார்த்து “ஷி இஸ் பெர்பாக்ட்லி பைன். தையல் பிரிக்கத் தேவையில்லை தானே கரைந்து விடும். நாளை நோர்மல் வோர்ட்க்கு மாத்திடலாம். ஒரு நான்கு நாளின் பிறகு பிசிகல் அக்டிவிட்டி தொடர்பாய் பார்த்து விட்டு டிஸ்சார்ஜ் செய்யாலாம்” கோப்பில் கையெழுத்திட்டவர் “ஆஹ் அடுத்த ஒரு செவென் வீக்ஸ் முழுமையான பெட் ரெஸ்ட் கொடுங்க அதிக வேலை செய்யக் கூடாது பாரம் தூக்க கூடாது. பேபி செக்கப் போங்க. சுகப் பிரசவம் என்றால் நோர்மல் டெலிவரி செய்யலாம். அப்படியில்லை என்றால் சீசர் நல்லது.” என்றவாறே அவர் வெளியே செல்ல அவன் கையை பிடித்து இழுத்தாள் ஸ்ரீனிகா.

“என்னம்மா” என்றவனிடம் உதடு பிதுக்கிச் சொன்னாள் “வலிக்குது”. உடல் இறுக ஒரு கணம் கணங்களை இறுக முடித் திறந்தவன் சத்திர சிகிச்சையில் அதைத்திருந்த முகத்தை கனிவுடன் வருடிவிட்டான் “கொஞ்ச நேரத்தில் குறைந்திரும்”

“உண்மையாவா?” அப்பாவியாய் கேட்க கன்னத்தை கடித்தபடி தலையாட்டினான். ஏற்கனவே அவனிடம் மருத்துவர் தனிப்பட்ட ரீதியில் எச்சரித்திருந்தார். சத்திர சிகிச்சையின் பின்னர் எப்படியும் இரண்டு மாதங்களுக்கு தலையிடி இருக்கக் கூடும்

அருகே அமர்ந்து அவள் முகத்தின் அருகே முகம் வைத்து நுனி விரலால் மென்மையாய் வருடிவிட்டான்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top