தீரா 58(b)
யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன் யாதவ் ஒரு கோப்பை வைத்துச் செல்ல மீண்டும் கண் மூடி யோசனையில் ஆழ்ந்தான். யாதவ் பின்னேயே ஆர்வமாய் அறையினுள் வந்த ஸ்ரீனிகா அவனைத் தேட மேசையில் இல்லை. ஒரு பக்கம் முழுதும் கண்ணாடி பதிக்கப்பட்டு கட்டிடங்கள் வெளியே தெரியும்படி இருந்த சோபாவில் கண்மூடி நன்றாக சாய்ந்து அமர்ந்திருந்தான்.
அத்தனை நேரமிருந்த புன்னகை விடை பெற எழுந்த பெருமூச்சை சத்தமின்றி விட்டவள் அருகே சென்று அவன் சிகையைக் கோதிக் கொடுத்தாள். சட்டென கண் திறந்து பார்த்தவன் தன் உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் அவள் வயிற்றில் முகத்தைப் புதைத்தான்.
“ஷ்... என்ன இது சிறு பிள்ளைபோல், உங்களுக்கே பேபி வர போகுது” செல்லமாய் கண்டித்தாள்.
அவளிடமிருந்து விலகியவன் “உனக்கு பயமா இல்லையா?” கரகரத்த குரலில் கேட்டான்.
அவனருகே அமர்ந்து கையைக் கட்டிக் கொண்டவள் பின்புறத் தோளில் தலை சாய்த்து “இல்லையே” என்றாள் விளையாட்டாய்.
“எப்படி”
“எப்படி என்றால்... எனக்கு தான் என்னோட வீரர் சூரர் தீரர் என் காதல் தீரன் கௌதம் இருக்கனே அதான்”
அவன் “ச்சு” என்று முகத்தைத் திருப்ப அவன் கன்னங்களைப் பிடித்து வைத்து “உண்மையாதான் சொல்றேன்” என்றவள் கண்ணில் இருந்த தீவிரத்தில் அவளையே பார்த்தபடி இருக்க அவளே தொடர்ந்தாள்.
“ஏன் எப்படி என்று எல்லாம் கேட்டால் எனக்குத் தெரியாது. இங்கே” நெஞ்சை தொட்டுக் காட்டி “ஏதோ சொல்லுது. எனக்கு எதுவும் ஆக நீங்கள் வ்டமாட்டிர்கள். நிச்சயமாய் உங்களுடன் நூறு வருடம் பிள்ளை குட்டி பேரன் பேத்தியுடன் வாழ்வேன் என்று. கடவுள் சிறு வயதிலேயே இல்லாத கஷ்டத்தையெல்லாம் தந்தது இனி வரும் காலம் எல்லாம் உங்களுடன் சந்தோசமாய் இருக்கத்தான்” அவன் கண்களையே ஆழ்ந்து பார்த்து “நல்லதே நடக்கும் என்று நம்புவோம் நல்லதே நடக்கும்” என்று கூற அவள் கண்ணில் தென்பட்ட நம்பிக்கை மெதுவே அவன் கண்ணிற்கும் இடம் பெயர்ந்தது.
சட்டென இறுக்கம் தளர அவள் நெற்றியுடன் நெற்றி முட்டினான். மனம் லேசானது போலிருந்தது. மனம் முழுதும் இதமாய் உணர்ந்தவனுக்கு அன்று தன்னை இதே போல் ஒரு நிலையில் பார்த்து இரவு தலைவலி வந்தது நினைவு வர அவள் மனதை மாற்ற நினைத்தவனாய் குனிந்து வயிற்றில் இதழ் பதித்து “ஹாய் பிரின்சஸ்” என்றான்.
தலையைத் தள்ளிவிட்டவள் “பிரின்சஸ் இல்ல லிட்டில் சம்ப்” முறுக்கிக் கொண்டாள்.
அவள் வயிற்றின் மீதிருந்த கையில் ஏதோ அசைவை உணர்ந்தவனாய் “ஹேய் உள்ள என்னவோ அசையுது” என்றவாறே அவள் அணிந்திருந்த கர்ப்பவதிகள் அணியும் ஆடையின் மேற்புறத்தை விலக்க முயன்றவன் கையைப் பிடித்து மீண்டும் வயிற்றில் வைத்தவள் “பேசுங்கள்” என்றாள்.
“ஆங்” குழப்பமாய் பார்க்க “பேபியோட கதையுங்கள், பிரின்சஸ் சொல்லுங்கோ” என்றாள்.
“பிரின்சஸ்...” மீண்டும் கையின் அடியில் ஏதோ அசைவது போன்ற உணர்வு சட்டென நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் விரிந்தது. “பேபி” சத்தமின்றி உதடுகள் மட்டும் அசைய கண்ணில் சந்தோசக் கண்ணீருடன் தலையாட்டினாள்.
கண்கள் பனிக்க அவள் கழுத்தைச் சுற்றி கையைப் போட்டுக் கட்டிக் கொண்டான். அவன் நெஞ்சுகூடு நடுங்குவது ஸ்ரீனிகாவிற்கு புரிய மெதுவே முதுகை வருடிக் கொடுத்தாள். தன் உதிரத்தை அவள் வயிற்றில் உணரும் இந்தக் கணம் வரை அவனுக்கு ஸ்ரீனியின் உயிர்தான் முக்கியமாய் இருந்தது. இப்போதோ தன் கையில் உணர்ந்த அந்த சின்னஞ்சிறு உயிரின் ஸ்பரிசம் அதுவும் வேண்டும் என்றது. மனித மனமே மாறுவதுதானே. ஆனால் அவள் உயிரைப் பயணம் வைக்கவும் முடியாது. அந்தக் சிறு உயிரை இழக்கவும் முடியாது தவித்தான்.
அவனை சரியாகப் புரிந்து கொண்ட ஸ்ரீனிகா “கௌதம்” சிறு கண்டிப்புடன் அழைத்தாள். அவனோ விலக மறுத்து முனங்கினான் “சாரி”.
“ஷ்.. ஒகே” அவன் அப்போதும் விலக மறுக்க “டேய் கௌதம் கிருஷ்ணா” அழைக்க சட்டென விலகி அவளை வியப்புடன் பார்த்தான். கடந்த இரண்டு மாதமாய் இப்படி அழைக்கத்தான் கெஞ்சிக் கொண்டிருக்கின்றான். அன்று கேரளாவில் நடந்தது மெலிதாய் நினைவில் இருந்தாலும் மீண்டும் ஒருமுறை அவள் வாயால் கேட்கும் ஆசையில் பின்னும் முன்னும் திரிந்தான்.
அவன் முகம் புன்னகையில் விகாசிக்க உதட்டைக் கடித்தவள் “முதலில் சாப்பிடுங்கள் சாப்பிட்டு என் அலுவலகம் போக வேண்டும்” என்றால் கெத்தை விடாமல். புன்னகையுடன் அவள் கன்னம் பற்றி தலையை முட்டினான் கௌதம்.
காரை அவள் அலுவலகத்திற்கு முன் நிறுத்தி விட்டு அவள் புறக் கதவை திறந்தான் கௌதம். அவனேதான் காரை ஒட்டி வந்திருந்தான். அவள் அலுவலகத்தில் காலடி வைக்க வசந்தும் ஜானகியும் அவளிடம் ஓடி வந்தார்கள்.
அன்றிரவு அலுவலகத்தை வந்து பார்த்த கௌதம் முற்றுமுழுதாக தலைகீழாக மாற்றியிருந்தான். ஏசி, பெரிய மேஜை, அவளுக்கென தனியறை, அறையினுளும் வெளியிலும் இருப்பதற்கு சோபா என அமர்க்களபடுத்தியிருந்தான். ஸ்ரீனிகா கூட அவன் அளப்பறையைப் பார்த்து விட்டு “சாரி சாரின் அலுவலகம் கூட இப்படி இல்லையே” சங்கடமாய் கூற “ஜிகே பெண்டாட்டி அலுவலகம் இப்படித்தான் இருக்கும்” என்றுவிட்டான்.
சில கையெழுத்துகளை போட்டு விட்டு வசந்திடம் “கலோஜ் எப்படி போகுது” என விசாரித்தவாறே அடுத்த வேலைக்கான உத்தரவுகளை வழங்கியவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்ணில் மின்னல் மின்ன போனை எடுத்து யாதவிற்கு ஏதோ உத்தரவிட்டான். அவன் உத்தரவைக் கேட்ட யாதவ் சிரிப்புடன் “அப்படியே செய்திருவோம் பாஸ்” என்றான் பதிலுக்கு.
சிறு சிரிப்புடன் அமர்ந்திருந்தவனை சந்தேகமாய் பார்த்தவாறே அருகில் அமர்ந்து கேட்டாள் “என்ன?”.
“யாதவ் போன் எடுத்திருந்தான்” புளுகினான்.
யாதவ் பெயரைச் சொல்ல முகத்தை சுருக்கினாள் ஸ்ரீனிகா. அன்று தெரியாத்தனமாக “ஸ்ரீனிகா மேடத்துக்கும் ஒரு அறை ஏற்பாடு செய்வோமா?” என்று கேட்டுவிட்டான். அதிலிருந்து அவனை எதிரி போல் பார்த்து வைத்தாள் ஸ்ரீனிகா.
அவன் சேர்ட் கையை இரு விரலால் பிடித்து “கௌதம்” குழைவாய் அழைத்தாள்.
அவள் கேட்கப் போவது புரிய சிரிப்பை அடக்கியபடி “ஹ்ம்ம்” என்றான்.
“நான் அலுவலகம் வரல”
“ஏன் இந்த இடம் பிடிக்கலையா?” அவள் எதை சொல்கிறாள் என்று தெரிந்தே தெரியாதது போல் கேட்டான். ஒரு கணம் விழித்தவள் “ச்சு அதில்ல, இந்த வேலை ஒகே... அங்கே அந்த கடன்காரன் ஐ மீன் கார்காரன் கம்பனிக்கு” என்றவளை இடைமறித்துக் கேட்டான் “ஏன் உனக்கு பிடிக்கலையா?”.
“அதில்ல...” என்று தயங்கவே அவள் பயம் புரிந்திருந்தாலும் “அதன் ஐம்பத்தொரு வீதம் பங்கு உன்னுடையது. அப்ப நீதானே பார்க்க வேண்டும். குறைந்தது ஷேர்ஹோல்டேர்ஸ் மீட்டிங்காவாது பங்கு பற்றியே ஆக வேண்டுமே” மென்மையாய் கூற அரைகுறையாய் தலையாட்டி வைத்தாள்.
“சரி அசாமில் உள்ள தேயிலைத் தோட்டம், கம்பனி, கப்பல்களை என்ன செய்ய போகிறாய்?” சிறு யோசனையுடன் கேட்க பதிலுக்கு அப்பாவியாய் கேட்டாள் “ஏன் நீங்கள் பார்க்க மாட்டீங்களா?”
“நானா?” வியப்புடன் கேட்டவன் “ஏற்கனவே இங்கே உள்ளவற்றை பார்க்கவே நேரமில்லை, அன்று போன மால், என் கம்பனி, அப்பாவின் கம்பனி, ஐந்து காலேஜ், எஸ்ஜி மால் இவற்றை பார்க்கவே நேரமில்லை. நான் பாவமில்லையா?” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவனை இடைமறித்தாள் “ஓர் நிமிடம் எஸ்ஜி மோல்”
“ஹ்ம்ம் அதேதான்”
“அதை எப்போது வாங்கினீர்கள்?”
“வாங்கவில்லை, நாம் சந்தித்த நாளில் இருந்தே அது என்னுடையதுதான். தாத்தாவின் பரிசு, இப்போது நம்முடையது” என்றான்.
“எப்படி”
“அன்று பக்கம் பக்கமாய் கையெழுத்து வைத்தாயே?” கேலியாய் கேட்டவன் “சொத்துகளை எழுதி வாங்கினாலும் தெரியாது” கண்டித்தான்
“நானே தாரேன் என்றுதானே சொல்றேன்” கிள்ளையாய் கெஞ்சினாள்.
லேசாய் முறைத்தவன் “காசை விடு, அது உன் தாத்தா பாட்டியின் உழைப்பு இல்லையா?” கேட்கவே அப்படியானால் இத்தனை நாள் லீசிங்கில் விட்டது போலவே விடுவோம்” விறுக்கான் போக்காய் சொன்னாள்.
அவளின் பிடிவாதம் பற்றி அறிந்தவனாய் “இப்போதைக்கு இப்படியே இருக்கட்டும், பேபி வந்த பின்னர் பார்ப்போம்” கை தேர்ந்த வியாபாரியாய் அப்போதைக்கு முடிவைத் தள்ளி வைத்தான்.
“கௌதம் ஸ்ரீம்மா” இருவருமாய் பிரெஷ் ஆகி தேநீர் அருந்தக் கீழே வர யசோதா அழைத்தார்.
“சொல்லுங்கம்மா” என்றவாறே அமர்ந்தவனுக்கு காஃபியும் ஸ்ரீனிகாவிற்கு யூசும் கொடுத்தவர் “ஸ்ரீனிக்கு ஐந்தாம் மாதம் வளைகாப்பு செய்யனும், சாரதாவும் போன் செய்திருந்தார்கள்” என்று ஆரம்பிக்கவே அப்பாவைப் பார்க்கவே அவர் சொல்லு என்பது போல் கண் மூடித் திறந்தார்.
“அம்மா உங்கள் அனைவரிடமும் ஒன்று சொல்ல வேண்டும். அவள் வளைகாப்பு ஒன்பதாம் மாதம் செய்வோம்” என்றான்.
“ஏன் கொழுந்தனாரே அவளை அழைத்துச் சென்று விடுவார்கள் என்றா?” வம்புக்கு இழுத்தாள் வத்சலா.
மெல்லிய முகச் சிவப்புடன் “அது உண்மைதான், ஆனால் அது மட்டும் காரணமில்லை. அவளுக்கு ஒரு ஒபேரேசன் செய்ய வேண்டும். ஏழாம் மாதம்தான் செய்வதாக திட்டம் அதன் பின் வளைகாப்பு செய்வோம்” என்றான் முடிவாய்.
“ஏன்? என்னாச்சு? என்ன ஒபரேசன்” அனைவரும் ஒன்று போல் கேட்டு ஸ்ரீனிகாவை ஆராய்ச்சியாய் பார்த்தார்கள். அருகே வந்தமர்ந்த யசோதா “என்னாச்சுடா? இவன் என்ன சொல்றான்” கன்னம் பற்றிக் கேட்டார்.
“அது வந்து அத்தை, ஒரு சின்ன சத்திர சிகிச்சை அவ்வளவுதான், பயப்பட ஒன்றுமில்லை” என்றவள் கௌதமைப் பார்த்தாள் ‘ஹெல்ப் பண்ணேன்’ என்பது போல். தன் பெரிய வயிற்றை தள்ளிக் கொண்டு வந்த நதியா அண்ணனின் தோளில் ஒரு அடி போட்டு “தள்ளுடா” என்றவள் ஸ்ரீனிகாவின் மறுபுறம் அமர்ந்து அவள் கழுத்து நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.
“என்ன ஒபரசேன் அண்ணி, எங்கே யூஎஸ்சில் போய் செய்வோமா? அத்தை மாமாவிடம் பேசுகின்றேன்” என்று ஆரம்பிக்கவே “ம்ம் அப்படியே ஜெர்மனியிலும் நான் அரேன்ஜ் செய்கிறேன். எந்த இடத்திற்கு விசா கிடைக்கிறதோ அங்கே போவோம்” என்று வத்சலா வர எழுந்து அப்பாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்து தன் குடும்பத்தினரின் அன்பில் திணறிய மனைவியையே ரசித்துப் பார்த்திருந்தான். அவள் விரும்பிய குடும்பம் அன்பு பாசம் அதை தடுக்காது ரசித்திருந்தவன் கண்களில் லேசாய் பொறாமையும் எட்டிப் பார்க்கத்தான் செய்தது. அவளைத் தான் மட்டுமே கொண்டாட வேண்டும்.
தம்பியின் அருகே அமர்ந்த ராகவன் “ஆபத்தா கிருஷ்ணா?” கவலையுடன் விசாரித்தான்.
எழுந்து அமர்ந்தவன் “டொக்டர் ரிச்சர்ட்தான் செய்கிறார், டெல்லி சென்னை இரண்டு இடத்திலும் ஏற்பாடு செய்து இருக்கின்றேன். கிரானியோடோமி (Craniotomy), அறுபது வீதம் சக்சஸ் ரேட்” மெதுவே அவன் காதில் மட்டும் விழும் வண்ணம் கூறியவன் எச்சரிக்கையாய் பெண்களைப் பார்த்தான் கௌதம்.
தலையை அசைத்த ராகவன் தம்பியின் தலையைக் கலைத்துவிட்டான் “யூ ஒகே”.
பெண்களின் கேள்வியை சமாளிக்க முடியாமல் “என்னை விட கௌதமுக்கு தான் நல்லா தெரியும். நான் கேட்க நான் சொல்லும் திகதியில் வந்து ஒபெறேசன் செய்து கொள் என்றுட்டார்” மாட்டி விட்டு யாருமறியாமல் நெளித்துக் காட்டினாள்.
அனைவரும் அவனிடம் திரும்ப “அவளுக்கு பயப்படும் படி ஒன்றுமில்லை. சின்னக் கட்டிதான் கமராவை விட்டு ஊசியாலேயே கரைத்து விடுவார்களாம். அதிகம் டென்சன் ஆகாமல் பார்த்துக் கொண்டாலே போதும்” பாதிப் பொய்யை சொல்லி சமாளித்தான். வேறு விபரங்கள் சொல்லி அவர்களைப் பயமுறுத்த விரும்பவில்லை.
பலதடவைகள் மீண்டும் மீண்டும் கேட்டுத் தெளிவு பெற்றாலும் அனைவர் முகமும் கவலையை பூசியிருக்க அவர்கள் மனநிலையை மாற்றக் கேட்டாள் ஸ்ரீனிகா “வீணை வாசிக்கவா?”
“ஒ..” என்று தொடங்கிய நதியாவின் குரல் பாதியில் நின்றது, காற்றில் வந்த பியானோவின் சத்தத்தில்.
எட்டிப் பார்க்க ஹாலில் இருந்த பியானோவில் கௌதம் தான் வாசித்துக் கொண்டிருந்தான். ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலின் முன் வரும் பியானோ இசை. ஸ்ரீனிகா எட்டிப் பார்க்க தன்னருகே இருந்த கதிரையை நோக்கி கண் காட்டினான்.
அவள் அருகே வந்து அமர கௌதம் பாடத் தொடங்கினான்.
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
ஆச்சரியத்தில் கண்கள் விரிய அருகே அமர்ந்து கன்னத்தில் கைவைத்து பார்த்தவளைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான் கௌதம்.
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து, ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்(2)
இன்னும் ஆச்சரியம் விலகாமல் கன்னத்தில் கை வைத்து மெய் மறந்து பார்த்திருந்தவள் நெற்றியில் ஊதிவிட்டான் கௌதம்.