Sasimukesh
Administrator
அத்தியாயம் : 29
அதிகாலையில் எழுந்த நாராயணன் குளித்து முடித்து விட்டு அறையை விட்டு வெளியில் வந்தான். நேற்று வரை திருமணத்திற்குப் பின் வரும் நிகழ்வுகள், அது இதுவென்று பிசியாக இருந்தாயிற்று. இன்று முதல் அவன் வேலைக்குச் செல்ல வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் அவன் தேனிலவு பற்றி எல்லாம் யோசித்துக் கூடப் பார்க்க முடியாது. தேனிலவு என்றதும் அவனது மனம் தானாக மனைவியைப் பற்றி யோசிக்கலானது.
அன்று அவன் என்னமோ வில்லன் போன்று அவளிடம் பேசி விட்டான் தான். பேசிய பிறகு தான் அவனுக்குத் தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரிந்தது. 'என்னடா பேசி வச்சிருக்க?' அவன் தன்னைத் தானே கடிந்து நொந்து போனான். மீண்டும் அறை பக்கம் செல்லவே அவனுக்குப் பயமாக இருந்தது. எங்கே மனைவி கோபப்பட்டுக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாளோ? அல்லது சர்வேஸ்வரனிடம் தன்னைப் பற்றிக் குறை கூறி அழுது புலம்புவாளோ? அல்லது தன்னுடன் வாழ மாட்டேன் என்று அவளது தந்தையிடம் புகார் கூறி பிறந்த வீட்டிற்குச் சென்று விடுவாளா? இப்படிப் பல யோசனைகள் அவனுள்...
ஆனால் நாராயணன் நினைத்தது போன்று பத்மினி எதிர்வினை எதுவும் ஆற்றவில்லை. அவள் அமைதியாக இருந்தாள். அவசியம் ஏற்பட்டால் ஒழிய, அநாவசிய பேச்சுகள் கிடையாது. இதில் முக்கியமாய்க் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால்... இருவருக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் இருவீட்டினருக்கும் தெரியாது பத்மினி கவனமாகப் பார்த்து கொண்டாள், நடந்து கொண்டாள். அதுவே அவனுக்குப் பெருத்த நிம்மதியை கொடுத்தது. மனைவி மீது மதிப்பை ஏற்படுத்தியது.
நாராயணன் யோசித்துக் கொண்டே மாடியில் இருந்து கீழிறங்கி வந்தான். இன்னமும் அவனது பெற்றோர் எழுந்து இருக்கவில்லை. வீட்டுப் பெண்கள் மூவரும் தத்தம் கணவரது வீட்டிற்குச் சென்று விட்டனர். நேற்று வரை திருமண வீடு என்பதால் பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே இறைந்து கிடந்தது. ஆனால் இன்று எல்லாம் ஒதுக்கப்பட்டு வீடு சுத்தமாக இருந்தது. அவனது அன்னையால் ஒருவராக இத்தனை வேலைகளைச் செய்ய இயலாது. நிச்சயம் பத்மினி தான் இதை எல்லாம் செய்திருக்க வேண்டும். அதுவும் ஒரே இரவில் இதனைச் செய்து முடித்திருக்க வேண்டும். பத்மினியின் வீட்டில் அவளுக்கு வேலை செய்ய அத்தனை ஆட்கள் இருந்தனர். அப்படிப்பட்டவள் அலட்டல் இல்லாது தனது வீட்டில் பாந்தமாய்ப் பொருந்தி போயிருப்பதைக் கண்டு அவன் பெருமிதம் கொண்டான்.
நாராயணன் சமையலறைக்குள் நுழைந்த போது பத்மினி சமைத்து கொண்டிருந்தாள். அவனது வரவினை உணர்ந்து திரும்பி பார்த்தவள்... ஒன்றும் பேசாது அவனுக்குக் காபி கலந்து கொடுத்துவிட்டு தனது வேலையைத் தொடரலானாள்.
"நீ காபி குடிச்சியா மினி?" அவன் அவளிடம் கேட்டுக் கொண்டே அவள் அருகே வந்தவன்... அங்கிருந்த திண்டில் சாய்ந்து நின்றான்.
கணவனது அருகாமை பத்மினியை மூச்சடைக்க வைத்தது. இருவரது தோள்களும் லேசாக உரசி கொண்டது. காதல் கொண்ட மனதில் சிறு உராய்வு கூடப் பெரும் காதல் தீயை பற்றி எரிய வைத்தது. அவள் அங்கிருந்து நகர்ந்து செல்ல முயல...
"உன் கிட்ட தான் கேட்கிறேன் மினி." அவன் அவளது கரத்தினை அழுத்தமாய்ப் பிடித்துக் கொண்டு கேட்க...
"ப்ச், விடுங்க நானா." அவள் தனது கரத்தினை விடுவிக்கப் போராட...
"பதில் சொல்லு... விடறேன்." அவன் அவளிடம் வம்பு வளர்க்க...
"குடிச்சிட்டேன்." அவள் பதில் சொன்ன பிறகே அவன் அவளது கரத்தினை விடுவித்தான்.
கணவன் அழுத்தி பிடித்ததால் சிவந்து போன தனது கை மணிக்கட்டை பத்மினி தேய்த்து விட்டுக் கொள்ள...
"இதுக்கே இப்படி என்றால்... இன்னும் இருக்கிறதே." அவன் அவளைப் பார்த்துக் கொண்டே முணுமுணுக்க...
அவளது முகம் நாணத்தில் சிவந்து போனது. அதை அவனுக்குக் காட்டாது அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
"என்ன சமையல்? நான் சமைக்கவா? இல்லை காய் எதுவும் வெட்டி தரவா?" அவன் கேட்டுக் கொண்டே அடுப்பினை பார்த்தான்.
"காலையில் தோசை, தக்காளி சட்னி. சட்னிக்கு வதக்கி வச்சாச்சு. அரைக்க மட்டும் செய்யணும். மதியத்துக்குச் சாதம், சாம்பார், கேரட் பொரியல்." அவள் சொல்லவும்...
"சரி, நான் காய்கறிகளை வெட்டுறேன்." என்றவன் மனைவிக்கு உதவியாய் காய்கறிகளை வெட்ட தொடங்கினான்.
நாராயணனின் இந்தப் பண்பு பத்மினிக்கு எப்போதுமே பிடிக்கும். 'நான் ஆண்' என்று அகங்காரம் கொண்டு அவன் என்றுமே நடந்து கொண்டது இல்லை. தங்கைகள் வீட்டில் இருக்கும் போதே அவன் அவர்களை எதிர்பார்க்காது சமைப்பான். இப்போது மனைவி வந்த பிறகும் அவன் மாறவே இல்லை. அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க...
"அதே கண்கள், மூக்கு, வாய் தான் இப்போதும் இருக்கிறது." அவன் கேரட்டை வெட்டி கொண்டே சொல்ல...
அவள் திடுக்கிட்டவளாய் தனது பார்வையைத் திருப்பிக் கொள்ள... அவன் அவள் பக்கமாய் லேசாய் சாய்ந்து,
"நீ ரசித்துப் பார்க்க தான்டி நான். நல்லா பார்த்து ரசி. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை." என்று குறும்பு குரலில் கூற... அவன் சொன்னது கேட்டு அவளது முகம் மாறிப் போனது.
"உங்களை நான் மட்டுமா ரசித்தேன்?" இதைக் கேட்கும் போதே அவளது விழிகள் கலங்கி போனது. கணவன் ஏற்கெனவே ஒருத்தியை காதலித்தவன் என்பதை அவளால் இன்னமும் தாங்கி கொள்ள முடியவில்லை.
"மினி..." அவன் என்ன சொல்வது என்று தெரியாது அவளைப் பார்த்தான்.
பத்மினி பூஜையறையில் வைத்து பூஜிக்க வேண்டிய பெண். அப்படிப்பட்டவளை கண்கலங்க வைத்த தன்னைக் குறித்தே அவனுக்கு அத்தனை கோபம் வந்தது. இந்தக் காதல் தனக்கு வராமலேயே இருந்திருக்கலாம். திருமணத்திற்குப் பின்பு காதலித்துத் தொலைத்திருக்கலாம். இதை நினைத்ததுமே அவன் உள்ளுக்குள் திடுக்கிட்டுப் போனான். அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம்? பத்மினி பக்கம் மனம் சாயத் தொடங்கி விட்டதா? அல்லது மஞ்சள் கயிறு மாயமோ? அவன் குழப்பத்துடன் மனைவியைப் பார்த்தான்.
"இங்கே என்ன பார்வை? வேலையைப் பாருங்க." பத்மினி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு சாதாரண மனைவி மோடுக்கு சென்றவள், அவனை முறைத்து பார்த்தாள்.
நாராயணன் எதுவும் பேசாது காயை வெட்ட தொடங்கினான். அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் இணைந்து சமையலை முடித்து இருந்தனர். அனைத்தையும் உணவு மேசையில் எடுத்து வைத்தனர். நாராயணன் அலுவலகம் செல்வதற்காகத் தங்களது அறைக்குச் சென்று விட்டான். அப்போது பார்த்து கணபதி எழுந்து வந்துவிட்டதால்... பத்மினி அவருக்குக் காபி போட்டு கொடுத்தாள். அடுத்து விஜயாவும் வந்துவிட... அவள் அவருக்கும் சேர்த்து காபி போட்டு கொடுத்தாள்.
பத்மினி அறைக்குள் நுழையும் போது நாராயணன் கிளம்பி தயாராக இருந்தான். பத்மினி தனது உடையை எடுத்து வைத்துக் கொண்டு அவனைப் பார்க்க...
"சீக்கிரம் டிரெஸ் மாத்து. சாப்பிட்டுட்டு கிளம்ப நேரம் சரியா இருக்கும்." என்று அவன் கூற...
"முதல்ல வெளியே போங்க. நீங்க இருந்தால் நான் எப்படி டிரெஸ் மாத்துறது?" அவள் சிடுசிடுக்க...
"நான் இங்கே தான் இருப்பேன்." அவன் சட்டமாகக் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
"ப்ச்..." என்றவள் வேகமாக அவன் அருகே வந்து அவனது கரத்தினைப் பற்றி, "ஒழுங்கா ரூமை விட்டு போங்க நானா. எனக்கு நேரமாகுது." என்று கத்த...
"நான் உன் புருசன்டி. நீ டிரெஸ் மாத்தும் போது நான் வெளியில் போறதை யாராவது பார்த்தால்... தப்பா நினைப்பாங்க."
"நினைச்சா நினைச்சிட்டு போகட்டும். முதல்ல கிளம்புங்க." அவள் கறார் ஆசிரியையாக மாறி சொல்ல...
நாராயணன் விரிந்த புன்னகையுடன் அவளது கரத்தினைச் சுண்டியிழுத்தான். அவனது திடீர் செயலில் அவள் அவன் மீதே விழ... அவன் அவளை அணைத்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்தான். அவள் திகைப்பாய் அவனைப் பார்க்க... அவனோ குறும்பாய் அவளையே பார்த்தான்.
"விடுங்க நானா..." அவள் எழ முயற்சிக்க...
"உன் மனசில் நான் கணவன் என்கிற எண்ணம் இல்லை. அதான் இப்படி எல்லாம் பேசுற. இது ரொம்பத் தப்பாச்சே." என்றவன் அடுத்த நொடி அவளது இதழ்களைச் சிறை செய்திருந்தான்.
பத்மினி முதலில் திகைத்தவள் பின்பு அவளையும் அறியாது கிறங்கி விழிகளை மூடி கொண்டாள். ஆணவன் சாதாரணமாகத் தான் பெண்ணவளின் இதழ்களைக் கொய்தான். அதன் பிறகே பெண்ணவளின் இதழ்கள் அவனைச் சுழல் போன்று இழுத்து கொண்டதை உணர்ந்தான். மீளவே விரும்பாத சுழல் இது. அவன் விரும்பியே அவளது இதழ்களில் புதைந்தான். அவளும் கணவனது கரங்களில் சமத்தாய் அடங்கி இருந்தாள். அந்நேரம் நாராயணனின் அலைப்பேசி அலறியதில் தான் இருவருமே நிகழ்காலத்திற்கு வந்தனர்.
பத்மினி அவசரமாக அவனிடம் இருந்து விலகி எழ... நாராயணனோ நிதானமாய் எழுந்தான்.
"இப்போதும் நான் வெளியில் போகணுமா?" அவன் கேட்கவும்... அவளது முகம் நாணத்தில் சிவந்து போனது.
"ப்ளீஸ் நானா..." அவளது கோபம் எங்கே போனது என்று தெரியவில்லை.
"நீ ப்ளீஸ் சொன்னதால் போகிறேன். ஆனால் சில சமயங்களில் இந்த ப்ளீஸ் உதவாது." என்றவன் அவளது கன்னத்தில் தட்டி விட்டு சென்று விட்டான்.
பத்மினி தாழ்ப்பாள் போட்டு விட்டு உடை மாற்ற தொடங்கினாள். அவளது மனம் கணவன் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தது. 'எந்தச் சமயங்களில் ப்ளீஸ் உதவாது?' என்று தீவிரமாக யோசித்தவளுக்கு மிகவும் தாமதமாகப் பல்ப் எரிந்தது.
"நானா, நீங்க ரொம்ப மோசம்." கோபத்துடன் வரவேண்டிய வார்த்தைகள் என்னவோ சிணுங்கலுடன் வந்தது.
இருவரும் உணவு உண்டுவிட்டு தங்களது வேலைக்குப் புறப்பட்டனர். நாராயணன் வண்டியை உருட்டி கொண்டு வர... பத்மினி நாராயணனுடன் இணைந்து நடந்தாள். அவளது பிறந்த வீட்டின் வாயிலை கடந்து தான் இருவரும் வெளியில் செல்ல வேண்டும். அப்போது நாராயணனையும் அறியாது அவனது விழிகள் அந்த வீட்டின் வாயிலை பார்த்தது. அங்குத் தான் சகுந்தலா நின்று கொண்டு ஏதாவது ஒரு வேலை பார்த்து கொண்டிருப்பாள். அவனைக் கண்டதும் அவள் உற்சாகமாய் 'அண்ணே, டாட்டா' என்று சிறுபிள்ளை போன்று கையாட்டி மகிழ்வாள். தங்கையின் நினைவில் அவனது முகத்தில் சோகம் படர்ந்தது. தீவிற்குத் தனியே சென்ற தங்கை இப்போது எப்படி இருக்கிறாளோ என்று...
"ஹலோ அண்ணா, எப்படி இருக்கிறீங்க? சக்கு எங்கேண்ணா?" மனைவியின் குரலில் நாராயணன் வண்டியை நிறுத்தி விட்டான்.
கணவனது பார்வை சென்ற திசை, அவனது எண்ணம் அனைத்தையும் புரிந்து கொண்ட பத்மினி உடனே தனது அண்ணனுக்கு அழைத்து இருந்தாள். அலைப்பேசி ஒலி கூடக் காதில் விழாதபடி நாராயணன் யோசனையில் மூழ்கி இருந்தான் போலும்.
அந்த நேரம் தான் சகுந்தலா சக்தீஸ்வரனிடம் 'சகி யாரு?' என்று கேட்டு கொண்டிருந்தாள். அவன் பதில் கூறும் முன் பத்மினியின் அழைப்பு வந்து விட்டது. சகுந்தலா தனது கேள்வியை மறந்து விட்டு கணவனது கையிலிருந்து அலைப்பேசியைப் பிடுங்கி,
"மினி, எப்படி இருக்க? நான் நல்லா இருக்கேன்." என்று உற்சாகமாகப் பேச ஆரம்பிக்க... சக்தீஸ்வரன் மனைவியைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்.
"உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது சக்கு. நீ ரொம்பச் சந்தோசமா இருக்கேன்னு..." தோழியின் மகிழ்ச்சியைக் கண்டு பத்மினிக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.
"அப்படியா தெரியுது?" சகுந்தலா அலைப்பேசியில் தனது முகத்தை அப்படி, இப்படித் திருப்பிப் பார்த்தாள்.
"நான் தான் சொன்னேன்ல. அண்ணா உன்னைச் சந்தோசமா வைத்து கொள்வார்ன்னு... இப்போ பார்த்தியா, நான் சொன்னது நடந்திருச்சு." பத்மினி சந்தோசமாய்ச் சொல்ல...
"ஆமா மினி... கேப்டன் காலையிலேயே என்னைய பீச்சுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. இவ்வளவு நேரம் கிளிஞ்சல்கள் பொறுக்கி விளையாண்டுட்டு இருந்தேன். நீயே பாரு... எவ்வளவு கிளிஞ்சல்கள்ன்னு..." சகுந்தலா தன் முன்னே பரத்தி வைத்திருந்த கிளிஞ்சல்களைப் பத்மினியிடம் காட்டினாள். அண்ணனின் மாற்றம், சகுந்தலாவின் மகிழ்ச்சி அனைத்தும் கண்டு பத்மினிக்கு நிம்மதியாக இருந்தது.
"என் கிட்ட மட்டும் பேசினால் போதுமா சக்கு? உனக்காக ஒரு ஜீவன் ஏங்கி துடிக்குது பாரு." பத்மினி அலைப்பேசியை நாராயணன் முன் கொண்டு வந்து காட்டினாள்.
"அண்ணே..." சகுந்தலா உற்சாகக் குரல் எழுப்ப...
"எப்படி இருக்கச் சக்கு?" நாராயணன் விழிகள் கலங்கி போனது. அவனது குரல் தழுதழுத்து ஒலித்தது.
அன்று மனைவி பேசியதில் இருந்து அவனது மனதில் சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. தேவையில்லாது தங்கையின் வாழ்க்கையைத் தான் பணயம் வைத்து விட்டோமோ என்று... இப்போது சகுந்தலாவின் சந்தோச குரலை கேட்டதும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. இருந்தாலும் தங்கை வாய்மொழியாகக் கேட்க அவன் விரும்பினான்.
"நல்லா இருக்கேன் அண்ணே. நீங்க எப்படி இருக்கீங்க? மினிய நல்லா பார்த்துக்கோங்க."
"அதெல்லாம் நல்லா பார்த்துக்கிறேன். நீ எப்போ இங்கே வர்ற? அண்ணனுக்கு உன்னைப் பார்க்கணும் போலிருக்கு. இதோ இப்போ கூட நீ வாசலில் இருந்து டாட்டா சொல்லுவியே... அதைத் தான் நினைச்சிட்டு இருந்தேன். உன் அண்ணி உடனே உனக்கு ஃபோன் போட்டு விட்டாள். மினிக்கு தான் என் மனசில் இருப்பது புரியுது." அவன் சொன்னது கேட்டு சகுந்தலா மகிழ்ந்தாளோ இல்லையோ... பத்மினி மகிழ்ந்து தான் போனாள்.
"டேய் போதும்டா... உன் தங்கச்சி புராணம்..." சக்தீஸ்வரன் அலைப்பேசியை மனைவியிடம் இருந்து வாங்கிக் கொண்டு நாராயணனை கலாய்த்தான்.
"உனக்கு என்னடா தெரியும் எங்க அண்ணன், தங்கை பாசத்தைப் பத்தி..." நாராயணன் எகிறிக் கொண்டு வர...
"எனக்கும் தங்கச்சி இருக்கிறாள்." சக்தீஸ்வரன் வேண்டுமென்றே சொல்ல...
"அப்போ நீ உன் தங்கச்சி கிட்ட பேசு. நான் என் தங்கச்சி கிட்ட பேசுறேன்." நாராயணன் வம்பு வளர்க்க...
"அடேய், நீ வச்சிருக்கிறது மினியோட ஃபோன்டா. முதல்ல ஃபோனை அவள் கிட்ட கொடு." சக்தீஸ்வரன் சொன்னதும்... நாராயணன் அவனை முறைத்துக் கொண்டே மனைவியிடம் அலைப்பேசியைக் கொடுத்தான்.
"மினி, சந்தோசமா இருக்கியா?" சக்தீஸ்வரன் தங்கையைக் கண்டு கேட்க...
"எனக்கு என்ன குறை? நான் நல்லா இருக்கேன் அண்ணா. சக்கு ஹெல்த் எப்படி இருக்கு?"
"இன்னைக்கு வாமிட் பண்ணிட்டாள்."
"இப்போ அப்படித்தான் இருக்கும். ரொம்ப முடியலைன்னா மாத்திரை போட சொல்லுங்க. இல்லைன்னா வேண்டாம். அதிகம் மாத்திரை எடுப்பது குழந்தைக்கு நல்லது இல்லை." அவள் ஒரு மருத்துவராக அறிவுரை கூற...
சக்தீஸ்வரன் சரியென்றவன் மேலே சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
நாராயணன் மனைவியைக் கண்டு, "தேங்க்ஸ்..." என்க...
"தேவையில்லை..." என்ற பத்மினி முகத்தைத் திருப்பிக் கொண்டு தனது வீட்டினை நோக்கி நடந்தாள்.
மனைவியின் செய்கையில் நாராயணன் சிரித்துக் கொண்டே அவளின் பின்னே நடந்தான். அங்குச் சென்று சர்வேஸ்வரன், உதயரேகாவிடம் சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு இருவரும் வேலைக்குக் கிளம்பினர்.
*************************
அதிகாலையில் எழுந்த நாராயணன் குளித்து முடித்து விட்டு அறையை விட்டு வெளியில் வந்தான். நேற்று வரை திருமணத்திற்குப் பின் வரும் நிகழ்வுகள், அது இதுவென்று பிசியாக இருந்தாயிற்று. இன்று முதல் அவன் வேலைக்குச் செல்ல வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் அவன் தேனிலவு பற்றி எல்லாம் யோசித்துக் கூடப் பார்க்க முடியாது. தேனிலவு என்றதும் அவனது மனம் தானாக மனைவியைப் பற்றி யோசிக்கலானது.
அன்று அவன் என்னமோ வில்லன் போன்று அவளிடம் பேசி விட்டான் தான். பேசிய பிறகு தான் அவனுக்குத் தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரிந்தது. 'என்னடா பேசி வச்சிருக்க?' அவன் தன்னைத் தானே கடிந்து நொந்து போனான். மீண்டும் அறை பக்கம் செல்லவே அவனுக்குப் பயமாக இருந்தது. எங்கே மனைவி கோபப்பட்டுக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாளோ? அல்லது சர்வேஸ்வரனிடம் தன்னைப் பற்றிக் குறை கூறி அழுது புலம்புவாளோ? அல்லது தன்னுடன் வாழ மாட்டேன் என்று அவளது தந்தையிடம் புகார் கூறி பிறந்த வீட்டிற்குச் சென்று விடுவாளா? இப்படிப் பல யோசனைகள் அவனுள்...
ஆனால் நாராயணன் நினைத்தது போன்று பத்மினி எதிர்வினை எதுவும் ஆற்றவில்லை. அவள் அமைதியாக இருந்தாள். அவசியம் ஏற்பட்டால் ஒழிய, அநாவசிய பேச்சுகள் கிடையாது. இதில் முக்கியமாய்க் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால்... இருவருக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் இருவீட்டினருக்கும் தெரியாது பத்மினி கவனமாகப் பார்த்து கொண்டாள், நடந்து கொண்டாள். அதுவே அவனுக்குப் பெருத்த நிம்மதியை கொடுத்தது. மனைவி மீது மதிப்பை ஏற்படுத்தியது.
நாராயணன் யோசித்துக் கொண்டே மாடியில் இருந்து கீழிறங்கி வந்தான். இன்னமும் அவனது பெற்றோர் எழுந்து இருக்கவில்லை. வீட்டுப் பெண்கள் மூவரும் தத்தம் கணவரது வீட்டிற்குச் சென்று விட்டனர். நேற்று வரை திருமண வீடு என்பதால் பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே இறைந்து கிடந்தது. ஆனால் இன்று எல்லாம் ஒதுக்கப்பட்டு வீடு சுத்தமாக இருந்தது. அவனது அன்னையால் ஒருவராக இத்தனை வேலைகளைச் செய்ய இயலாது. நிச்சயம் பத்மினி தான் இதை எல்லாம் செய்திருக்க வேண்டும். அதுவும் ஒரே இரவில் இதனைச் செய்து முடித்திருக்க வேண்டும். பத்மினியின் வீட்டில் அவளுக்கு வேலை செய்ய அத்தனை ஆட்கள் இருந்தனர். அப்படிப்பட்டவள் அலட்டல் இல்லாது தனது வீட்டில் பாந்தமாய்ப் பொருந்தி போயிருப்பதைக் கண்டு அவன் பெருமிதம் கொண்டான்.
நாராயணன் சமையலறைக்குள் நுழைந்த போது பத்மினி சமைத்து கொண்டிருந்தாள். அவனது வரவினை உணர்ந்து திரும்பி பார்த்தவள்... ஒன்றும் பேசாது அவனுக்குக் காபி கலந்து கொடுத்துவிட்டு தனது வேலையைத் தொடரலானாள்.
"நீ காபி குடிச்சியா மினி?" அவன் அவளிடம் கேட்டுக் கொண்டே அவள் அருகே வந்தவன்... அங்கிருந்த திண்டில் சாய்ந்து நின்றான்.
கணவனது அருகாமை பத்மினியை மூச்சடைக்க வைத்தது. இருவரது தோள்களும் லேசாக உரசி கொண்டது. காதல் கொண்ட மனதில் சிறு உராய்வு கூடப் பெரும் காதல் தீயை பற்றி எரிய வைத்தது. அவள் அங்கிருந்து நகர்ந்து செல்ல முயல...
"உன் கிட்ட தான் கேட்கிறேன் மினி." அவன் அவளது கரத்தினை அழுத்தமாய்ப் பிடித்துக் கொண்டு கேட்க...
"ப்ச், விடுங்க நானா." அவள் தனது கரத்தினை விடுவிக்கப் போராட...
"பதில் சொல்லு... விடறேன்." அவன் அவளிடம் வம்பு வளர்க்க...
"குடிச்சிட்டேன்." அவள் பதில் சொன்ன பிறகே அவன் அவளது கரத்தினை விடுவித்தான்.
கணவன் அழுத்தி பிடித்ததால் சிவந்து போன தனது கை மணிக்கட்டை பத்மினி தேய்த்து விட்டுக் கொள்ள...
"இதுக்கே இப்படி என்றால்... இன்னும் இருக்கிறதே." அவன் அவளைப் பார்த்துக் கொண்டே முணுமுணுக்க...
அவளது முகம் நாணத்தில் சிவந்து போனது. அதை அவனுக்குக் காட்டாது அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
"என்ன சமையல்? நான் சமைக்கவா? இல்லை காய் எதுவும் வெட்டி தரவா?" அவன் கேட்டுக் கொண்டே அடுப்பினை பார்த்தான்.
"காலையில் தோசை, தக்காளி சட்னி. சட்னிக்கு வதக்கி வச்சாச்சு. அரைக்க மட்டும் செய்யணும். மதியத்துக்குச் சாதம், சாம்பார், கேரட் பொரியல்." அவள் சொல்லவும்...
"சரி, நான் காய்கறிகளை வெட்டுறேன்." என்றவன் மனைவிக்கு உதவியாய் காய்கறிகளை வெட்ட தொடங்கினான்.
நாராயணனின் இந்தப் பண்பு பத்மினிக்கு எப்போதுமே பிடிக்கும். 'நான் ஆண்' என்று அகங்காரம் கொண்டு அவன் என்றுமே நடந்து கொண்டது இல்லை. தங்கைகள் வீட்டில் இருக்கும் போதே அவன் அவர்களை எதிர்பார்க்காது சமைப்பான். இப்போது மனைவி வந்த பிறகும் அவன் மாறவே இல்லை. அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க...
"அதே கண்கள், மூக்கு, வாய் தான் இப்போதும் இருக்கிறது." அவன் கேரட்டை வெட்டி கொண்டே சொல்ல...
அவள் திடுக்கிட்டவளாய் தனது பார்வையைத் திருப்பிக் கொள்ள... அவன் அவள் பக்கமாய் லேசாய் சாய்ந்து,
"நீ ரசித்துப் பார்க்க தான்டி நான். நல்லா பார்த்து ரசி. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை." என்று குறும்பு குரலில் கூற... அவன் சொன்னது கேட்டு அவளது முகம் மாறிப் போனது.
"உங்களை நான் மட்டுமா ரசித்தேன்?" இதைக் கேட்கும் போதே அவளது விழிகள் கலங்கி போனது. கணவன் ஏற்கெனவே ஒருத்தியை காதலித்தவன் என்பதை அவளால் இன்னமும் தாங்கி கொள்ள முடியவில்லை.
"மினி..." அவன் என்ன சொல்வது என்று தெரியாது அவளைப் பார்த்தான்.
பத்மினி பூஜையறையில் வைத்து பூஜிக்க வேண்டிய பெண். அப்படிப்பட்டவளை கண்கலங்க வைத்த தன்னைக் குறித்தே அவனுக்கு அத்தனை கோபம் வந்தது. இந்தக் காதல் தனக்கு வராமலேயே இருந்திருக்கலாம். திருமணத்திற்குப் பின்பு காதலித்துத் தொலைத்திருக்கலாம். இதை நினைத்ததுமே அவன் உள்ளுக்குள் திடுக்கிட்டுப் போனான். அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம்? பத்மினி பக்கம் மனம் சாயத் தொடங்கி விட்டதா? அல்லது மஞ்சள் கயிறு மாயமோ? அவன் குழப்பத்துடன் மனைவியைப் பார்த்தான்.
"இங்கே என்ன பார்வை? வேலையைப் பாருங்க." பத்மினி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு சாதாரண மனைவி மோடுக்கு சென்றவள், அவனை முறைத்து பார்த்தாள்.
நாராயணன் எதுவும் பேசாது காயை வெட்ட தொடங்கினான். அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் இணைந்து சமையலை முடித்து இருந்தனர். அனைத்தையும் உணவு மேசையில் எடுத்து வைத்தனர். நாராயணன் அலுவலகம் செல்வதற்காகத் தங்களது அறைக்குச் சென்று விட்டான். அப்போது பார்த்து கணபதி எழுந்து வந்துவிட்டதால்... பத்மினி அவருக்குக் காபி போட்டு கொடுத்தாள். அடுத்து விஜயாவும் வந்துவிட... அவள் அவருக்கும் சேர்த்து காபி போட்டு கொடுத்தாள்.
பத்மினி அறைக்குள் நுழையும் போது நாராயணன் கிளம்பி தயாராக இருந்தான். பத்மினி தனது உடையை எடுத்து வைத்துக் கொண்டு அவனைப் பார்க்க...
"சீக்கிரம் டிரெஸ் மாத்து. சாப்பிட்டுட்டு கிளம்ப நேரம் சரியா இருக்கும்." என்று அவன் கூற...
"முதல்ல வெளியே போங்க. நீங்க இருந்தால் நான் எப்படி டிரெஸ் மாத்துறது?" அவள் சிடுசிடுக்க...
"நான் இங்கே தான் இருப்பேன்." அவன் சட்டமாகக் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
"ப்ச்..." என்றவள் வேகமாக அவன் அருகே வந்து அவனது கரத்தினைப் பற்றி, "ஒழுங்கா ரூமை விட்டு போங்க நானா. எனக்கு நேரமாகுது." என்று கத்த...
"நான் உன் புருசன்டி. நீ டிரெஸ் மாத்தும் போது நான் வெளியில் போறதை யாராவது பார்த்தால்... தப்பா நினைப்பாங்க."
"நினைச்சா நினைச்சிட்டு போகட்டும். முதல்ல கிளம்புங்க." அவள் கறார் ஆசிரியையாக மாறி சொல்ல...
நாராயணன் விரிந்த புன்னகையுடன் அவளது கரத்தினைச் சுண்டியிழுத்தான். அவனது திடீர் செயலில் அவள் அவன் மீதே விழ... அவன் அவளை அணைத்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்தான். அவள் திகைப்பாய் அவனைப் பார்க்க... அவனோ குறும்பாய் அவளையே பார்த்தான்.
"விடுங்க நானா..." அவள் எழ முயற்சிக்க...
"உன் மனசில் நான் கணவன் என்கிற எண்ணம் இல்லை. அதான் இப்படி எல்லாம் பேசுற. இது ரொம்பத் தப்பாச்சே." என்றவன் அடுத்த நொடி அவளது இதழ்களைச் சிறை செய்திருந்தான்.
பத்மினி முதலில் திகைத்தவள் பின்பு அவளையும் அறியாது கிறங்கி விழிகளை மூடி கொண்டாள். ஆணவன் சாதாரணமாகத் தான் பெண்ணவளின் இதழ்களைக் கொய்தான். அதன் பிறகே பெண்ணவளின் இதழ்கள் அவனைச் சுழல் போன்று இழுத்து கொண்டதை உணர்ந்தான். மீளவே விரும்பாத சுழல் இது. அவன் விரும்பியே அவளது இதழ்களில் புதைந்தான். அவளும் கணவனது கரங்களில் சமத்தாய் அடங்கி இருந்தாள். அந்நேரம் நாராயணனின் அலைப்பேசி அலறியதில் தான் இருவருமே நிகழ்காலத்திற்கு வந்தனர்.
பத்மினி அவசரமாக அவனிடம் இருந்து விலகி எழ... நாராயணனோ நிதானமாய் எழுந்தான்.
"இப்போதும் நான் வெளியில் போகணுமா?" அவன் கேட்கவும்... அவளது முகம் நாணத்தில் சிவந்து போனது.
"ப்ளீஸ் நானா..." அவளது கோபம் எங்கே போனது என்று தெரியவில்லை.
"நீ ப்ளீஸ் சொன்னதால் போகிறேன். ஆனால் சில சமயங்களில் இந்த ப்ளீஸ் உதவாது." என்றவன் அவளது கன்னத்தில் தட்டி விட்டு சென்று விட்டான்.
பத்மினி தாழ்ப்பாள் போட்டு விட்டு உடை மாற்ற தொடங்கினாள். அவளது மனம் கணவன் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தது. 'எந்தச் சமயங்களில் ப்ளீஸ் உதவாது?' என்று தீவிரமாக யோசித்தவளுக்கு மிகவும் தாமதமாகப் பல்ப் எரிந்தது.
"நானா, நீங்க ரொம்ப மோசம்." கோபத்துடன் வரவேண்டிய வார்த்தைகள் என்னவோ சிணுங்கலுடன் வந்தது.
இருவரும் உணவு உண்டுவிட்டு தங்களது வேலைக்குப் புறப்பட்டனர். நாராயணன் வண்டியை உருட்டி கொண்டு வர... பத்மினி நாராயணனுடன் இணைந்து நடந்தாள். அவளது பிறந்த வீட்டின் வாயிலை கடந்து தான் இருவரும் வெளியில் செல்ல வேண்டும். அப்போது நாராயணனையும் அறியாது அவனது விழிகள் அந்த வீட்டின் வாயிலை பார்த்தது. அங்குத் தான் சகுந்தலா நின்று கொண்டு ஏதாவது ஒரு வேலை பார்த்து கொண்டிருப்பாள். அவனைக் கண்டதும் அவள் உற்சாகமாய் 'அண்ணே, டாட்டா' என்று சிறுபிள்ளை போன்று கையாட்டி மகிழ்வாள். தங்கையின் நினைவில் அவனது முகத்தில் சோகம் படர்ந்தது. தீவிற்குத் தனியே சென்ற தங்கை இப்போது எப்படி இருக்கிறாளோ என்று...
"ஹலோ அண்ணா, எப்படி இருக்கிறீங்க? சக்கு எங்கேண்ணா?" மனைவியின் குரலில் நாராயணன் வண்டியை நிறுத்தி விட்டான்.
கணவனது பார்வை சென்ற திசை, அவனது எண்ணம் அனைத்தையும் புரிந்து கொண்ட பத்மினி உடனே தனது அண்ணனுக்கு அழைத்து இருந்தாள். அலைப்பேசி ஒலி கூடக் காதில் விழாதபடி நாராயணன் யோசனையில் மூழ்கி இருந்தான் போலும்.
அந்த நேரம் தான் சகுந்தலா சக்தீஸ்வரனிடம் 'சகி யாரு?' என்று கேட்டு கொண்டிருந்தாள். அவன் பதில் கூறும் முன் பத்மினியின் அழைப்பு வந்து விட்டது. சகுந்தலா தனது கேள்வியை மறந்து விட்டு கணவனது கையிலிருந்து அலைப்பேசியைப் பிடுங்கி,
"மினி, எப்படி இருக்க? நான் நல்லா இருக்கேன்." என்று உற்சாகமாகப் பேச ஆரம்பிக்க... சக்தீஸ்வரன் மனைவியைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்.
"உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது சக்கு. நீ ரொம்பச் சந்தோசமா இருக்கேன்னு..." தோழியின் மகிழ்ச்சியைக் கண்டு பத்மினிக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.
"அப்படியா தெரியுது?" சகுந்தலா அலைப்பேசியில் தனது முகத்தை அப்படி, இப்படித் திருப்பிப் பார்த்தாள்.
"நான் தான் சொன்னேன்ல. அண்ணா உன்னைச் சந்தோசமா வைத்து கொள்வார்ன்னு... இப்போ பார்த்தியா, நான் சொன்னது நடந்திருச்சு." பத்மினி சந்தோசமாய்ச் சொல்ல...
"ஆமா மினி... கேப்டன் காலையிலேயே என்னைய பீச்சுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. இவ்வளவு நேரம் கிளிஞ்சல்கள் பொறுக்கி விளையாண்டுட்டு இருந்தேன். நீயே பாரு... எவ்வளவு கிளிஞ்சல்கள்ன்னு..." சகுந்தலா தன் முன்னே பரத்தி வைத்திருந்த கிளிஞ்சல்களைப் பத்மினியிடம் காட்டினாள். அண்ணனின் மாற்றம், சகுந்தலாவின் மகிழ்ச்சி அனைத்தும் கண்டு பத்மினிக்கு நிம்மதியாக இருந்தது.
"என் கிட்ட மட்டும் பேசினால் போதுமா சக்கு? உனக்காக ஒரு ஜீவன் ஏங்கி துடிக்குது பாரு." பத்மினி அலைப்பேசியை நாராயணன் முன் கொண்டு வந்து காட்டினாள்.
"அண்ணே..." சகுந்தலா உற்சாகக் குரல் எழுப்ப...
"எப்படி இருக்கச் சக்கு?" நாராயணன் விழிகள் கலங்கி போனது. அவனது குரல் தழுதழுத்து ஒலித்தது.
அன்று மனைவி பேசியதில் இருந்து அவனது மனதில் சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. தேவையில்லாது தங்கையின் வாழ்க்கையைத் தான் பணயம் வைத்து விட்டோமோ என்று... இப்போது சகுந்தலாவின் சந்தோச குரலை கேட்டதும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. இருந்தாலும் தங்கை வாய்மொழியாகக் கேட்க அவன் விரும்பினான்.
"நல்லா இருக்கேன் அண்ணே. நீங்க எப்படி இருக்கீங்க? மினிய நல்லா பார்த்துக்கோங்க."
"அதெல்லாம் நல்லா பார்த்துக்கிறேன். நீ எப்போ இங்கே வர்ற? அண்ணனுக்கு உன்னைப் பார்க்கணும் போலிருக்கு. இதோ இப்போ கூட நீ வாசலில் இருந்து டாட்டா சொல்லுவியே... அதைத் தான் நினைச்சிட்டு இருந்தேன். உன் அண்ணி உடனே உனக்கு ஃபோன் போட்டு விட்டாள். மினிக்கு தான் என் மனசில் இருப்பது புரியுது." அவன் சொன்னது கேட்டு சகுந்தலா மகிழ்ந்தாளோ இல்லையோ... பத்மினி மகிழ்ந்து தான் போனாள்.
"டேய் போதும்டா... உன் தங்கச்சி புராணம்..." சக்தீஸ்வரன் அலைப்பேசியை மனைவியிடம் இருந்து வாங்கிக் கொண்டு நாராயணனை கலாய்த்தான்.
"உனக்கு என்னடா தெரியும் எங்க அண்ணன், தங்கை பாசத்தைப் பத்தி..." நாராயணன் எகிறிக் கொண்டு வர...
"எனக்கும் தங்கச்சி இருக்கிறாள்." சக்தீஸ்வரன் வேண்டுமென்றே சொல்ல...
"அப்போ நீ உன் தங்கச்சி கிட்ட பேசு. நான் என் தங்கச்சி கிட்ட பேசுறேன்." நாராயணன் வம்பு வளர்க்க...
"அடேய், நீ வச்சிருக்கிறது மினியோட ஃபோன்டா. முதல்ல ஃபோனை அவள் கிட்ட கொடு." சக்தீஸ்வரன் சொன்னதும்... நாராயணன் அவனை முறைத்துக் கொண்டே மனைவியிடம் அலைப்பேசியைக் கொடுத்தான்.
"மினி, சந்தோசமா இருக்கியா?" சக்தீஸ்வரன் தங்கையைக் கண்டு கேட்க...
"எனக்கு என்ன குறை? நான் நல்லா இருக்கேன் அண்ணா. சக்கு ஹெல்த் எப்படி இருக்கு?"
"இன்னைக்கு வாமிட் பண்ணிட்டாள்."
"இப்போ அப்படித்தான் இருக்கும். ரொம்ப முடியலைன்னா மாத்திரை போட சொல்லுங்க. இல்லைன்னா வேண்டாம். அதிகம் மாத்திரை எடுப்பது குழந்தைக்கு நல்லது இல்லை." அவள் ஒரு மருத்துவராக அறிவுரை கூற...
சக்தீஸ்வரன் சரியென்றவன் மேலே சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
நாராயணன் மனைவியைக் கண்டு, "தேங்க்ஸ்..." என்க...
"தேவையில்லை..." என்ற பத்மினி முகத்தைத் திருப்பிக் கொண்டு தனது வீட்டினை நோக்கி நடந்தாள்.
மனைவியின் செய்கையில் நாராயணன் சிரித்துக் கொண்டே அவளின் பின்னே நடந்தான். அங்குச் சென்று சர்வேஸ்வரன், உதயரேகாவிடம் சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு இருவரும் வேலைக்குக் கிளம்பினர்.
*************************