Sasimukesh
Administrator
"இன்னும் என்ன யோசனை? போ..." அவன் சொன்னதும்...
சகுந்தலா அவன் வாங்கி வந்த பைகளை உருட்டலானாள். அனைத்து உடைகளையும் எடுத்து பார்த்தவளுக்கு எதைப் போடுவது என்று தெரியவில்லை. அவளது குழப்பத்தைக் கண்டு அவனே,
"அந்தப் பிங்க் கலர் டிரெஸ் உனக்கு அழகா இருக்கும். அதைப் போடு." என்று சொல்ல...
"இல்லை, எனக்கு மஞ்சள் தான் பிடிக்கும்." என்று ஏட்டிக்கு போட்டி பேசியவள் எல்லா உடைகளையும் எடுத்துக் கொண்டு உடை மாற்றும் அறைக்குச் சென்றாள்.
சில நிமிடங்களில் வெளியில் வந்த சகுந்தலாவை கண்டு சக்தீஸ்வரன் இன்ப அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான். ஏனெனில் அவள் அவன் சொன்ன இளஞ்சிவப்பு சுடிதாரை தான் அணிந்து நின்றாள். அவன் வாங்கிக் கொடுத்த உடை அவளது மேனியில் கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. அவன் அவள் அருகே வந்து அவளைச் சுற்றி பார்த்தவன்,
"ரொம்ப அழகா இருக்கு சக்கு." என்று சொல்ல...
அவள் அதற்குப் பதில் சொல்லாது, "போவோமா?" என்று கூற...
"இப்படியேவா? கொஞ்சம் இரு." என்றவன் அலமாரியை திறந்து வைர நகை பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டியபடி, "இதைப் போட்டுட்டு வா." என்க...
"வேண்டாம்..." என்றவளது முகம் வேதனையில் கசங்கியது.
"நீ கேட்டதும்... ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்காம நான் வாங்கிக் கொடுத்த முதல் நகை இது. இதில் என்னோட தூய அன்பு மட்டும் தான் இருக்கு." என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் அன்றைய நினைவில் கலங்கியது.
"இரு, நானே போட்டு விடறேன்." என்றவன் அந்த நகையை அவளுக்கு அணிவிக்கலானான்.
அரசன் இங்கு அரசிக்கு சேவகனாகி போனான். பெண்ணவள் தான் ஆணவனின் சிறு ஸ்பரிசத்தில் நெளிந்தபடி நின்றிருந்தாள். அவனோ காரியம் ஒன்றே கண் என்பது போல் நகையை மாட்டி விட்டுக் கொண்டிருந்தான். அதைக் கண்டும் அவளது மனம் சுணங்கியது. அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்று... பெண் மனம் கடிகாரம் பெண்டுலம் போன்று அங்குமிங்கும் அலைபாய்ந்தது.
"இப்போ எப்படி இருக்கிறன்னு நீயே பார்." அவன் அங்கிருந்த கண்ணாடியை காட்டினான்.
"எனக்கு என்ன? நான் எப்பவும் அழகு தான்." அவள் எப்போதும் போல் அமர்த்தலாய் சொல்ல... அதைக் கேட்டு அவன் வாய்விட்டுச் சிரித்தான்.
கண்ணாடி வழியே தெரிந்த கணவனது சிரிப்பினை கண்டு அவளது காதல் மனம் ஒரு கணம் மயங்கி தான் போனது. அவளது பார்வையை உணர்ந்து அவன் என்னவென்று புருவங்களை உயர்த்த... அதில் சுயம் உணர்ந்தவள் அவனை முறைத்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"சரி, வா... போகலாம்." அவன் அவளது கோபத்தை, வெறுப்பை எதையும் கண்டு கொள்ளவில்லை. எல்லாவற்றையும் சிறுபிள்ளை செயல் என்றெண்ணி புறம் தள்ளினான்.
இருவரும் புறப்பட்டுச் சகுந்தலா வீட்டிற்குச் சென்றனர். அவர்களைக் கண்டதும் கணபதி, விஜயா இருவரும் வாயிலுக்கே வந்து வரவேற்றனர். இது சக்தீஸ்வரனுக்கான மரியாதை என்பதைச் சகுந்தலா உணர்ந்தே இருந்தாள். நாராயணனும், பத்மினியும் புன்னகை முகமாய் இருவரையும் வரவேற்றனர். சஞ்சய் கூட இவர்களை வரவேற்க தான் செய்தான். கன்னிகா மட்டும் அமைதியாக நின்றிருந்தாள். விலையுயர்ந்த சுடிதார், வைர நகை அணிந்து வந்த சகுந்தலாவை கண்டு அவளுக்குப் பொறாமையாக இருந்தது. அதிலும் சக்தீஸ்வரன் சகுந்தலாவின் கரத்தினை விடாது பற்றிக் கொண்டிருந்தது கண்டு அவளுக்கு அப்படியொரு எரிச்சல் வந்தது.
காதலர்களான அவர்கள் கூட விலகி தான் இருந்தனர். அதிலும் சஞ்சய் எல்லோர் முன்னிலையில் அவளது கரத்தினைப் பிடிப்பதற்கு அத்தனை யோசிப்பான். காதலன் சஞ்சய் வேறு, கணவன் சஞ்சய் வேறு என்பதை அவன் அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தான். கன்னிகா அந்தப் பொறாமையில் உள்ளுக்குள் வெந்து கொண்டிருந்தாள். சகுந்தலா தனியே மாட்டினால் அவளை ஒருவிழியாக்க கன்னிகா வஞ்சம் வைத்து காத்து கொண்டிருந்தாள்.
நாராயணன் எப்போதுமே எல்லோர் முன்னிலையிலும் சக்தீஸ்வரனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பான். அது போல் தான் இன்றும் அவன் நடந்து கொண்டான். சஞ்சய்க்குச் சக்தீஸ்வரனை கண்டு பிரமிப்பு கலந்த மரியாதை. அதனால் அவன் சக்தீஸ்வரனிடம் பணிவுடன் பேசி கொண்டிருந்தான். அதைக் கண்டு கன்னிகாவுக்கு எரிச்சலாக வந்தது.
"சக்கு இங்கே வா..." இந்திராணி தங்கையை அழைக்க...
"எதுக்கு இந்துக்கா? சக்கு இங்கேயே இருக்கட்டும்." சக்தீஸ்வரன் மனைவியைத் தன்னுடனே வைத்துக் கொண்டான். அவள் யாரிடமும் காயப்பட்டு விடக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான்.
ஏனோ சகுந்தலாவும் கணவனது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அமைதியாக இருந்தாள். அவளுமே யாரிடமும் சுமூகமாகப் பேசும் மனநிலையில் இல்லை.
மதிய விருந்து தடபுடலாக நடந்தது. உணவு நேரத்தின் போது சர்வேஸ்வரன், உதயரேகா, ஆகாஷ், வித்யா நால்வரும் அங்கு வந்து கலந்து கொண்டனர். சிரிப்பும், சந்தோசமுமாய் விருந்து களை கட்டியது. சகுந்தலாவும் தனது கூட்டில் இருந்து மெல்ல வெளியில் வர தொடங்கினாள். அவளது புன்னகை முகத்தைத் திருப்தியாகப் பார்த்த சக்தீஸ்வரன் இன்று ஒரு பிடி சோறு அதிகம் உண்டான்.
விருந்து முடிந்து எல்லோரும் கிளம்பி தங்களது வீட்டிற்கு வந்து விட்டனர்.
கன்னிகா மட்டும் யோசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். எப்படிச் சகுந்தலாவை காயப்படுத்தலாம் என்று... அதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அவள் காத்து கொண்டிருந்தாள்.
இரவு உணவுக்கு எல்லோரும் சக்தீஸ்வரன் வீட்டிற்கு வந்திருந்தனர். சகுந்தலா வீட்டாளாய் எல்லோரையும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தாள். பெண்கள் அனைவரும் தனியே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். கன்னிகா இது தான் சந்தர்ப்பம் என்று எண்ணியவளாய் விழிகள் பளபளக்க அக்காவை பார்த்தவள்,
"சக்கு, அப்புறம் என்ன? ரொம்பச் சந்தோசமா இருக்கிற போல? நேத்து ஒரே மஜாவோ?" என்று கேலியாய் கேட்டவள் பின்பு தலையில் அடித்துக் கொண்டு, "நான் ஒருத்தி... இதைப் போய் உன் கிட்ட கேட்டுக்கிட்டு... உனக்குத் தான் ஏற்கெனவே எக்ஸ்ப்ரீயன்ஸ் இருக்கே. அதுவும் தாலி கட்டுறதுக்கு முன்னாடியே." என்று அக்காவை ஏளனமாய்ப் பேசி அவமானப்படுத்த...
உதயரேகா, பத்மினி, வித்யா மூவரும் பதில் கூற இயலாது அமைதியாக இருந்தனர். அவர்களது வீட்டுப் பையனிடம் அல்லவா தவறு இருக்கிறது.
"கனி, பேசாம இரு. வந்த இடத்தில் வம்பிழுத்துக்கிட்டு..." இந்திராணி தான் தங்கையை அதட்டினாள்.
"நான் என்ன பொய்யா சொன்னேன்? உண்மையைத் தானே சொன்னேன்." கன்னிகா நொடித்துக் கொண்டவள், "உண்மை என்பதால் தான் சக்குவே அமைதியா இருக்கிறாள். நீங்க எதுக்கு அவளுக்கு வக்காலத்து வாங்கிறீங்க?" என்று விசமமாய்ச் சகுந்தலாவை பார்த்தாள்.
சகுந்தலா கண்கள் கலங்க அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள். மனைவி கண்ணீர் வழிய செல்வதைச் சக்தீஸ்வரன் கண்டு விட்டான். அவன் அவளின் பின்னேயே சென்றான்.
"சக்கு நில்லு..." அவன் சொன்னதும் அவள் நின்றாள். ஆனால் திரும்பி பார்க்கவில்லை.
"எதுக்கு அழுற?"
"என் விதிய நெனச்சு அழறேன். அழுறதுக்குக் கூடச் சுதந்திரம் இல்லையா?" அவள் கோபத்துடன் கத்த...
"ஹேய், குழந்தை உண்டாகி இருக்கும் போது இவ்வளவு கோபம் ஆகாது." அவன் ஆறுதலாய் அவளின் தோள்களில் கை வைத்து அவளை ஆறுதல்படுத்த... அவள் அமைதியாக நின்றாள்.
"என்னாச்சு? யாராவது ஏதாவது சொன்னாங்களா? யாராவது என்ன? கனி எதுவும் சொன்னாளா?" அவன் நேரிடையாகக் கேட்டான். மதியத்தில் இருந்து அவன் தான் கன்னிகாவை கவனித்துப் பார்த்து கொண்டிருக்கிறானே. அவளது பார்வையே சரியில்லையே.
"ஆமா..." என்றவள் அனைத்தையும் அவனிடம் சொல்லிவிட்டு, "உங்களால தான் நான் அசிங்கப்பட்டு நிக்கிறேன்." என்று கூற...
"இதில் என்ன அசிங்கம் இருக்கு? கணவன், மனைவிக்கு இடையில் நடக்கும் தாம்பத்தியம் புனிதம்."
"அப்போ நாம புருசன், பொஞ்சாதி இல்லையே." என்றவளுக்குக் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.
"அதுக்கு முன்னாடியே நாம புருசன், பொஞ்சாதி தான். வா, என் கூட..." என்றவன் அவளது கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.
அவள் திகைப்பாய் பார்த்தபடி அவனுடன் நடந்தாள். அவன் நேரே கன்னிகா முன் வந்து நின்றவன், "நீ சக்குவை பார்த்து என்ன சொன்னியோ... அதை இப்போ சொல்லு." அவன் கோபமாய்க் கேட்க...
முதலில் கன்னிகா பயத்தில் எச்சிலை விழுங்கியவள் பிறகு அவனை மிதப்பாகப் பார்த்துக் கொண்டு, "நான் என்ன பொய்யா சொன்னேன்? உண்மையைத் தானே சொன்னேன். கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தை உண்டானால்... எல்லோரும் இப்படித்தான் பேசுவாங்க." என்று பதிலடி கொடுக்க...
"கனி, அதிகம் பேசுற. அமைதியா இரு." இந்திராணி அப்போதும் தங்கையைக் கண்டு எச்சரித்தாள்.
"இங்கே பார்..." கன்னிகாவை பார்த்து சொன்னவன் பிறகு மற்றவர்களிடமும் திரும்பி தனது அலைப்பேசியை எடுத்து காட்டி, "எல்லோருக்கும் சேர்த்து தான். எல்லோரும் இங்கே பாருங்க. இது எங்களுடைய மேரேஜ் சர்ட்டிபிகேட். இதில் இருக்கும் தேதியை நல்லா பாருங்க. சரியா இரண்டு மாதங்களுக்கு முன்... அதாவது குழந்தை உண்டாவதற்கு முன்... இந்த ஆதாரம் போதுமா?" என்று அவன் கேட்க...
எல்லோரும் ஆச்சிரியமும், திகைப்புமாய் 'எப்புட்றா' என்பது போல் அவனைப் பார்த்தனர்.
"என்னால் எல்லாத்தையும் மாத்த முடியும். மாத்துவேன். சக்குவுக்காக எல்லாத்தையும் மாத்துவேன். அப்படி இருக்கும் போது ஆப்டரால் கல்யாண தேதியை என்னால் மாத்த முடியாதா?" சக்தீஸ்வரனின் சர்வ வல்லமையை உணர்ந்து அனைவரும் வாயடைத்து போயினர்.
சகுந்தலாவின் விழிகள் கலங்கிய போதிலும், அவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை ஒன்று உதித்தது. அவளது காயமும் அவனே! அவளது மருந்தும் அவனே! அவளது எல்லாமும் அவனே! இனி அவன் அதை அவளுக்கு மெல்ல புரிய வைப்பான்.
"இனி எனக்காக அழ வேண்டாம்
இங்குக் கண்ணீரும் விழ வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்"
தொடரும்...!!!
சகுந்தலா அவன் வாங்கி வந்த பைகளை உருட்டலானாள். அனைத்து உடைகளையும் எடுத்து பார்த்தவளுக்கு எதைப் போடுவது என்று தெரியவில்லை. அவளது குழப்பத்தைக் கண்டு அவனே,
"அந்தப் பிங்க் கலர் டிரெஸ் உனக்கு அழகா இருக்கும். அதைப் போடு." என்று சொல்ல...
"இல்லை, எனக்கு மஞ்சள் தான் பிடிக்கும்." என்று ஏட்டிக்கு போட்டி பேசியவள் எல்லா உடைகளையும் எடுத்துக் கொண்டு உடை மாற்றும் அறைக்குச் சென்றாள்.
சில நிமிடங்களில் வெளியில் வந்த சகுந்தலாவை கண்டு சக்தீஸ்வரன் இன்ப அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான். ஏனெனில் அவள் அவன் சொன்ன இளஞ்சிவப்பு சுடிதாரை தான் அணிந்து நின்றாள். அவன் வாங்கிக் கொடுத்த உடை அவளது மேனியில் கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. அவன் அவள் அருகே வந்து அவளைச் சுற்றி பார்த்தவன்,
"ரொம்ப அழகா இருக்கு சக்கு." என்று சொல்ல...
அவள் அதற்குப் பதில் சொல்லாது, "போவோமா?" என்று கூற...
"இப்படியேவா? கொஞ்சம் இரு." என்றவன் அலமாரியை திறந்து வைர நகை பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டியபடி, "இதைப் போட்டுட்டு வா." என்க...
"வேண்டாம்..." என்றவளது முகம் வேதனையில் கசங்கியது.
"நீ கேட்டதும்... ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்காம நான் வாங்கிக் கொடுத்த முதல் நகை இது. இதில் என்னோட தூய அன்பு மட்டும் தான் இருக்கு." என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் அன்றைய நினைவில் கலங்கியது.
"இரு, நானே போட்டு விடறேன்." என்றவன் அந்த நகையை அவளுக்கு அணிவிக்கலானான்.
அரசன் இங்கு அரசிக்கு சேவகனாகி போனான். பெண்ணவள் தான் ஆணவனின் சிறு ஸ்பரிசத்தில் நெளிந்தபடி நின்றிருந்தாள். அவனோ காரியம் ஒன்றே கண் என்பது போல் நகையை மாட்டி விட்டுக் கொண்டிருந்தான். அதைக் கண்டும் அவளது மனம் சுணங்கியது. அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்று... பெண் மனம் கடிகாரம் பெண்டுலம் போன்று அங்குமிங்கும் அலைபாய்ந்தது.
"இப்போ எப்படி இருக்கிறன்னு நீயே பார்." அவன் அங்கிருந்த கண்ணாடியை காட்டினான்.
"எனக்கு என்ன? நான் எப்பவும் அழகு தான்." அவள் எப்போதும் போல் அமர்த்தலாய் சொல்ல... அதைக் கேட்டு அவன் வாய்விட்டுச் சிரித்தான்.
கண்ணாடி வழியே தெரிந்த கணவனது சிரிப்பினை கண்டு அவளது காதல் மனம் ஒரு கணம் மயங்கி தான் போனது. அவளது பார்வையை உணர்ந்து அவன் என்னவென்று புருவங்களை உயர்த்த... அதில் சுயம் உணர்ந்தவள் அவனை முறைத்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"சரி, வா... போகலாம்." அவன் அவளது கோபத்தை, வெறுப்பை எதையும் கண்டு கொள்ளவில்லை. எல்லாவற்றையும் சிறுபிள்ளை செயல் என்றெண்ணி புறம் தள்ளினான்.
இருவரும் புறப்பட்டுச் சகுந்தலா வீட்டிற்குச் சென்றனர். அவர்களைக் கண்டதும் கணபதி, விஜயா இருவரும் வாயிலுக்கே வந்து வரவேற்றனர். இது சக்தீஸ்வரனுக்கான மரியாதை என்பதைச் சகுந்தலா உணர்ந்தே இருந்தாள். நாராயணனும், பத்மினியும் புன்னகை முகமாய் இருவரையும் வரவேற்றனர். சஞ்சய் கூட இவர்களை வரவேற்க தான் செய்தான். கன்னிகா மட்டும் அமைதியாக நின்றிருந்தாள். விலையுயர்ந்த சுடிதார், வைர நகை அணிந்து வந்த சகுந்தலாவை கண்டு அவளுக்குப் பொறாமையாக இருந்தது. அதிலும் சக்தீஸ்வரன் சகுந்தலாவின் கரத்தினை விடாது பற்றிக் கொண்டிருந்தது கண்டு அவளுக்கு அப்படியொரு எரிச்சல் வந்தது.
காதலர்களான அவர்கள் கூட விலகி தான் இருந்தனர். அதிலும் சஞ்சய் எல்லோர் முன்னிலையில் அவளது கரத்தினைப் பிடிப்பதற்கு அத்தனை யோசிப்பான். காதலன் சஞ்சய் வேறு, கணவன் சஞ்சய் வேறு என்பதை அவன் அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தான். கன்னிகா அந்தப் பொறாமையில் உள்ளுக்குள் வெந்து கொண்டிருந்தாள். சகுந்தலா தனியே மாட்டினால் அவளை ஒருவிழியாக்க கன்னிகா வஞ்சம் வைத்து காத்து கொண்டிருந்தாள்.
நாராயணன் எப்போதுமே எல்லோர் முன்னிலையிலும் சக்தீஸ்வரனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பான். அது போல் தான் இன்றும் அவன் நடந்து கொண்டான். சஞ்சய்க்குச் சக்தீஸ்வரனை கண்டு பிரமிப்பு கலந்த மரியாதை. அதனால் அவன் சக்தீஸ்வரனிடம் பணிவுடன் பேசி கொண்டிருந்தான். அதைக் கண்டு கன்னிகாவுக்கு எரிச்சலாக வந்தது.
"சக்கு இங்கே வா..." இந்திராணி தங்கையை அழைக்க...
"எதுக்கு இந்துக்கா? சக்கு இங்கேயே இருக்கட்டும்." சக்தீஸ்வரன் மனைவியைத் தன்னுடனே வைத்துக் கொண்டான். அவள் யாரிடமும் காயப்பட்டு விடக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான்.
ஏனோ சகுந்தலாவும் கணவனது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அமைதியாக இருந்தாள். அவளுமே யாரிடமும் சுமூகமாகப் பேசும் மனநிலையில் இல்லை.
மதிய விருந்து தடபுடலாக நடந்தது. உணவு நேரத்தின் போது சர்வேஸ்வரன், உதயரேகா, ஆகாஷ், வித்யா நால்வரும் அங்கு வந்து கலந்து கொண்டனர். சிரிப்பும், சந்தோசமுமாய் விருந்து களை கட்டியது. சகுந்தலாவும் தனது கூட்டில் இருந்து மெல்ல வெளியில் வர தொடங்கினாள். அவளது புன்னகை முகத்தைத் திருப்தியாகப் பார்த்த சக்தீஸ்வரன் இன்று ஒரு பிடி சோறு அதிகம் உண்டான்.
விருந்து முடிந்து எல்லோரும் கிளம்பி தங்களது வீட்டிற்கு வந்து விட்டனர்.
கன்னிகா மட்டும் யோசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். எப்படிச் சகுந்தலாவை காயப்படுத்தலாம் என்று... அதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அவள் காத்து கொண்டிருந்தாள்.
இரவு உணவுக்கு எல்லோரும் சக்தீஸ்வரன் வீட்டிற்கு வந்திருந்தனர். சகுந்தலா வீட்டாளாய் எல்லோரையும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தாள். பெண்கள் அனைவரும் தனியே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். கன்னிகா இது தான் சந்தர்ப்பம் என்று எண்ணியவளாய் விழிகள் பளபளக்க அக்காவை பார்த்தவள்,
"சக்கு, அப்புறம் என்ன? ரொம்பச் சந்தோசமா இருக்கிற போல? நேத்து ஒரே மஜாவோ?" என்று கேலியாய் கேட்டவள் பின்பு தலையில் அடித்துக் கொண்டு, "நான் ஒருத்தி... இதைப் போய் உன் கிட்ட கேட்டுக்கிட்டு... உனக்குத் தான் ஏற்கெனவே எக்ஸ்ப்ரீயன்ஸ் இருக்கே. அதுவும் தாலி கட்டுறதுக்கு முன்னாடியே." என்று அக்காவை ஏளனமாய்ப் பேசி அவமானப்படுத்த...
உதயரேகா, பத்மினி, வித்யா மூவரும் பதில் கூற இயலாது அமைதியாக இருந்தனர். அவர்களது வீட்டுப் பையனிடம் அல்லவா தவறு இருக்கிறது.
"கனி, பேசாம இரு. வந்த இடத்தில் வம்பிழுத்துக்கிட்டு..." இந்திராணி தான் தங்கையை அதட்டினாள்.
"நான் என்ன பொய்யா சொன்னேன்? உண்மையைத் தானே சொன்னேன்." கன்னிகா நொடித்துக் கொண்டவள், "உண்மை என்பதால் தான் சக்குவே அமைதியா இருக்கிறாள். நீங்க எதுக்கு அவளுக்கு வக்காலத்து வாங்கிறீங்க?" என்று விசமமாய்ச் சகுந்தலாவை பார்த்தாள்.
சகுந்தலா கண்கள் கலங்க அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள். மனைவி கண்ணீர் வழிய செல்வதைச் சக்தீஸ்வரன் கண்டு விட்டான். அவன் அவளின் பின்னேயே சென்றான்.
"சக்கு நில்லு..." அவன் சொன்னதும் அவள் நின்றாள். ஆனால் திரும்பி பார்க்கவில்லை.
"எதுக்கு அழுற?"
"என் விதிய நெனச்சு அழறேன். அழுறதுக்குக் கூடச் சுதந்திரம் இல்லையா?" அவள் கோபத்துடன் கத்த...
"ஹேய், குழந்தை உண்டாகி இருக்கும் போது இவ்வளவு கோபம் ஆகாது." அவன் ஆறுதலாய் அவளின் தோள்களில் கை வைத்து அவளை ஆறுதல்படுத்த... அவள் அமைதியாக நின்றாள்.
"என்னாச்சு? யாராவது ஏதாவது சொன்னாங்களா? யாராவது என்ன? கனி எதுவும் சொன்னாளா?" அவன் நேரிடையாகக் கேட்டான். மதியத்தில் இருந்து அவன் தான் கன்னிகாவை கவனித்துப் பார்த்து கொண்டிருக்கிறானே. அவளது பார்வையே சரியில்லையே.
"ஆமா..." என்றவள் அனைத்தையும் அவனிடம் சொல்லிவிட்டு, "உங்களால தான் நான் அசிங்கப்பட்டு நிக்கிறேன்." என்று கூற...
"இதில் என்ன அசிங்கம் இருக்கு? கணவன், மனைவிக்கு இடையில் நடக்கும் தாம்பத்தியம் புனிதம்."
"அப்போ நாம புருசன், பொஞ்சாதி இல்லையே." என்றவளுக்குக் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.
"அதுக்கு முன்னாடியே நாம புருசன், பொஞ்சாதி தான். வா, என் கூட..." என்றவன் அவளது கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.
அவள் திகைப்பாய் பார்த்தபடி அவனுடன் நடந்தாள். அவன் நேரே கன்னிகா முன் வந்து நின்றவன், "நீ சக்குவை பார்த்து என்ன சொன்னியோ... அதை இப்போ சொல்லு." அவன் கோபமாய்க் கேட்க...
முதலில் கன்னிகா பயத்தில் எச்சிலை விழுங்கியவள் பிறகு அவனை மிதப்பாகப் பார்த்துக் கொண்டு, "நான் என்ன பொய்யா சொன்னேன்? உண்மையைத் தானே சொன்னேன். கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தை உண்டானால்... எல்லோரும் இப்படித்தான் பேசுவாங்க." என்று பதிலடி கொடுக்க...
"கனி, அதிகம் பேசுற. அமைதியா இரு." இந்திராணி அப்போதும் தங்கையைக் கண்டு எச்சரித்தாள்.
"இங்கே பார்..." கன்னிகாவை பார்த்து சொன்னவன் பிறகு மற்றவர்களிடமும் திரும்பி தனது அலைப்பேசியை எடுத்து காட்டி, "எல்லோருக்கும் சேர்த்து தான். எல்லோரும் இங்கே பாருங்க. இது எங்களுடைய மேரேஜ் சர்ட்டிபிகேட். இதில் இருக்கும் தேதியை நல்லா பாருங்க. சரியா இரண்டு மாதங்களுக்கு முன்... அதாவது குழந்தை உண்டாவதற்கு முன்... இந்த ஆதாரம் போதுமா?" என்று அவன் கேட்க...
எல்லோரும் ஆச்சிரியமும், திகைப்புமாய் 'எப்புட்றா' என்பது போல் அவனைப் பார்த்தனர்.
"என்னால் எல்லாத்தையும் மாத்த முடியும். மாத்துவேன். சக்குவுக்காக எல்லாத்தையும் மாத்துவேன். அப்படி இருக்கும் போது ஆப்டரால் கல்யாண தேதியை என்னால் மாத்த முடியாதா?" சக்தீஸ்வரனின் சர்வ வல்லமையை உணர்ந்து அனைவரும் வாயடைத்து போயினர்.
சகுந்தலாவின் விழிகள் கலங்கிய போதிலும், அவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை ஒன்று உதித்தது. அவளது காயமும் அவனே! அவளது மருந்தும் அவனே! அவளது எல்லாமும் அவனே! இனி அவன் அதை அவளுக்கு மெல்ல புரிய வைப்பான்.
"இனி எனக்காக அழ வேண்டாம்
இங்குக் கண்ணீரும் விழ வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்"
தொடரும்...!!!