ஶ்ரீகலா
Administrator
இன்றிரவு 10.30 மணிக்க எபியோடு வருகிறேன். அதற்கு முன் சின்ன முன்னோட்டம்
"கெட்டி மேளம், கெட்டி மேளம்..." என்று அய்யர் சொல்லவும்...
சக்தீஸ்வரன் மங்கலநாணை கரங்களில் எடுத்து அதைச் சகுந்தலா முகத்துக்கு முன்னே விரித்து அவளைப் பார்த்தான். அவளோ முகம் இறுகி போய் அமர்ந்து இருந்தாள். அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அதற்காக அவள் தலைகுனிந்தும் இருக்கவில்லை. அவளது உணர்வுகளைத் தான் அவன் தனது வார்த்தைகளால் கொன்று விட்டானே! அவளது இறுகிய பாவனையைக் கண்ட சக்தீஸ்வரன் ஒரு பெருமூச்சுடன் அவளது கழுத்தில் மங்கலநாணை அணிவித்துத் தனது மனைவியாக்கி கொண்டான்.
அதன் பிறகு நடந்த சம்பிரதாயங்கள் எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்தது. அடுத்து மூன்று மணமக்களையும் அவரவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். கன்னிகா தனது புகுந்த வீட்டினரோடு செல்ல... மற்றவர்கள் தங்களது வீட்டிற்குச் சென்றனர். வீட்டிற்கு வந்ததும் நேரே பத்மினி நாராயணனுடன் தனது புகுந்த வீட்டிற்குச் செல்ல... சகுந்தலா சக்தீஸ்வரன் கரம் பற்றி அவனது வீட்டிற்குச் சென்றாள். அங்கு உதயரேகா, வித்யா இருவரும் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
வீட்டினுள் அழைத்துச் சென்ற மணமக்களை நேரே பூஜையறைக்கு அழைத்துச் சென்றனர். உதயரேகா சகுந்தலாவை விளக்கு ஏற்ற பணிக்க... அவளும் விளக்கேற்றி வணங்கினாள். சக்தீஸ்வரன் முகம் இறுக அனைத்தையும் பார்த்திருந்தான். பின்பு மணமக்களுக்குப் பால், பழம் கொடுத்தனர். சகுந்தலா சக்தீஸ்வரனின் எச்சிலை மறுக்கவில்லை. மறுத்தால் அது பெரும் கேலிக்கூத்துக்கு ஆளாகி விடும் என்றெண்ணி அவள் அமைதியாக இருந்தாள்.
"ரொம்ப டயர்டா இருக்கச் சக்கு. போய் ரெஸ்ட் எடு." உதயரேகா சகுந்தலாவிடம் கூறியவள் பின்பு மகன் புறம் திரும்பி, "உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ." என்று கட்டளை போல் கூற...
சக்தீஸ்வரன் ஒன்றும் பேசாது எழுந்தான். சகுந்தலாவும் அமைதியாக எழுந்தாள். இருவரும் மாடிப்படியேறி மேலே போக... சகுந்தலா உடல் தடுமாற அப்படியே பின்னுக்குச் சாயப் போனாள். ஒற்றைக் கையால் அவளைப் பிடித்து நிறுத்தியவன் அடுத்த நொடி அவளைத் தனது கரங்களில் ஏந்தி இருந்தான்.
"என்னை விடுங்க." அவள் அவனது பிடியில் இருந்து திமிற... அவளை முறைத்து பார்த்தவன் ஒன்றும் பேசாது தூக்கி செல்ல... அவள் தான் வாயை மூடி கொண்டாள்.
அறைக்குள் சென்றதும் சகுந்தலாவை இறக்கி விட்ட சக்தீஸ்வரன் அங்கிருந்த சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவன் ஆயாசமாக விழிகளை மூடி கொண்டான். சகுந்தலா என்ன செய்வது? என்று தெரியாது தரையில் அமர்ந்து உடலை சுவற்றில் சாய்த்து கொண்டாள். தனது முழங்காலில் முகம் புதைத்தவள் அதன் பிறகு நிமிரவே இல்லை.
இருவரது எண்ணங்களும் இன்று காலை நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தது.
"கெட்டி மேளம், கெட்டி மேளம்..." என்று அய்யர் சொல்லவும்...
சக்தீஸ்வரன் மங்கலநாணை கரங்களில் எடுத்து அதைச் சகுந்தலா முகத்துக்கு முன்னே விரித்து அவளைப் பார்த்தான். அவளோ முகம் இறுகி போய் அமர்ந்து இருந்தாள். அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அதற்காக அவள் தலைகுனிந்தும் இருக்கவில்லை. அவளது உணர்வுகளைத் தான் அவன் தனது வார்த்தைகளால் கொன்று விட்டானே! அவளது இறுகிய பாவனையைக் கண்ட சக்தீஸ்வரன் ஒரு பெருமூச்சுடன் அவளது கழுத்தில் மங்கலநாணை அணிவித்துத் தனது மனைவியாக்கி கொண்டான்.
அதன் பிறகு நடந்த சம்பிரதாயங்கள் எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்தது. அடுத்து மூன்று மணமக்களையும் அவரவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். கன்னிகா தனது புகுந்த வீட்டினரோடு செல்ல... மற்றவர்கள் தங்களது வீட்டிற்குச் சென்றனர். வீட்டிற்கு வந்ததும் நேரே பத்மினி நாராயணனுடன் தனது புகுந்த வீட்டிற்குச் செல்ல... சகுந்தலா சக்தீஸ்வரன் கரம் பற்றி அவனது வீட்டிற்குச் சென்றாள். அங்கு உதயரேகா, வித்யா இருவரும் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
வீட்டினுள் அழைத்துச் சென்ற மணமக்களை நேரே பூஜையறைக்கு அழைத்துச் சென்றனர். உதயரேகா சகுந்தலாவை விளக்கு ஏற்ற பணிக்க... அவளும் விளக்கேற்றி வணங்கினாள். சக்தீஸ்வரன் முகம் இறுக அனைத்தையும் பார்த்திருந்தான். பின்பு மணமக்களுக்குப் பால், பழம் கொடுத்தனர். சகுந்தலா சக்தீஸ்வரனின் எச்சிலை மறுக்கவில்லை. மறுத்தால் அது பெரும் கேலிக்கூத்துக்கு ஆளாகி விடும் என்றெண்ணி அவள் அமைதியாக இருந்தாள்.
"ரொம்ப டயர்டா இருக்கச் சக்கு. போய் ரெஸ்ட் எடு." உதயரேகா சகுந்தலாவிடம் கூறியவள் பின்பு மகன் புறம் திரும்பி, "உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ." என்று கட்டளை போல் கூற...
சக்தீஸ்வரன் ஒன்றும் பேசாது எழுந்தான். சகுந்தலாவும் அமைதியாக எழுந்தாள். இருவரும் மாடிப்படியேறி மேலே போக... சகுந்தலா உடல் தடுமாற அப்படியே பின்னுக்குச் சாயப் போனாள். ஒற்றைக் கையால் அவளைப் பிடித்து நிறுத்தியவன் அடுத்த நொடி அவளைத் தனது கரங்களில் ஏந்தி இருந்தான்.
"என்னை விடுங்க." அவள் அவனது பிடியில் இருந்து திமிற... அவளை முறைத்து பார்த்தவன் ஒன்றும் பேசாது தூக்கி செல்ல... அவள் தான் வாயை மூடி கொண்டாள்.
அறைக்குள் சென்றதும் சகுந்தலாவை இறக்கி விட்ட சக்தீஸ்வரன் அங்கிருந்த சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவன் ஆயாசமாக விழிகளை மூடி கொண்டான். சகுந்தலா என்ன செய்வது? என்று தெரியாது தரையில் அமர்ந்து உடலை சுவற்றில் சாய்த்து கொண்டாள். தனது முழங்காலில் முகம் புதைத்தவள் அதன் பிறகு நிமிரவே இல்லை.
இருவரது எண்ணங்களும் இன்று காலை நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தது.