All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் புத்தகங்கள் மற்றும் அமேசான்

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34929
ஹாய் டியர்ஸ்

"அலைபாய்வதே மனமல்லவா..!!"

எங்கும் இது வரை பதிவிடாத நேரடி கதை.. இப்போது அமேசானில் நீங்கள் படிக்கலாம்..

ஏப்ரல் மாதம் பதிவிட நினைத்து எழுதிய கதை.. அதன் பின் அப்படியே நேரம் கிடைக்காமல் தள்ளி வைத்து இப்போது தான் எழுதி முடிக்க நேரம் வந்தது.

பதிவிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது.. லிங்க் கொடுக்கவே மறந்து விட்டேன்..









படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னோடு ரேட்டிங் மற்றும் ரிவ்யூ மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்..

இப்போதைக்கு இந்த கதை ப்ரீ இல்லை..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34937

ஹாய் டியர்ஸ்


வணக்கம்.. ஒரு சிறு விளக்கம்..


“அலைபாய்வதே மனமல்லவா..!!” என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு முன் நான் ஒரு கதையை பதிவிட்டிருந்தேன்.. ஆனால் அதே பெயரில் வேறு ஒரு கதை இருப்பது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது..


எப்போதுமே ஒரு கதைக்கு தலைப்பை முடிவு செய்வதற்கு முன் கூகுளில் அந்த பெயரை போட்டு சர்ச் செய்து அப்படி வேறெதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே நான் அந்த தலைப்பை வைப்பேன்..


அதே போல் இந்த முறையும் நான் செய்த போதும் எனக்கு அப்படி ஒரு தலைப்பு கூகுளில் காண்பிக்கவில்லை.


ஏனெனில் இரண்டு எழுத்துக்கள் வேறுபாடு அந்த தலைப்பில் இருந்தது தான் காரணம்..


ஆனாலும் தெரியாமல் வைப்பது வேறு தெரிந்த பின் அப்படியே விடுவது வேறு தானே.. அதனால் என் தலைப்பை மாற்ற நான் முடிவு செய்து விட்டேன்.. இதற்கு முன் “அலைபாய்வதே மனமல்லவா..!!” என்று பதிவிட்டிருந்த அதே கதையை இனி “சதிராடுதே மனமே..!!’ என்ற தலைப்பில் பதிவிடுகிறேன்..


முன்பு பதிவிட்டிருந்த கதையிலேயே தலைப்பை மட்டும் மாற்றி பதிவேற்றம் செய்ய தான் நான் நினைத்தேன்.. ஆனால் அமேசான் கிண்டில் அதற்கு அனுமதிக்கவில்லை. தலைப்பில் ஒரு சில மாற்றங்களை செய்யலாமே தவிர, முழுதாக தலைப்பையே மாற்றக் கூடாது என்று அவர்கள் சொல்வதால், புதிதாகவே மீண்டும் அந்த கதையை பதிவேற்றம் செய்கிறேன்..


















சிரமத்திற்கு மன்னிக்கவும், அதோடு முன்பு இந்த கதையை படித்து நீங்கள் கொடுத்திருந்த ரேட்டிங் அண்ட் ரிவ்யூ அனைத்தும் இப்போது அந்த கதையோடே இல்லாமல் போய் விட்டது..


உண்மையிலேயே இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் மீண்டும் ஒருமுறை ரேட்டிங் அண்ட் ரிவ்யூ கொடுத்து உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..


இது ஒரு சின்ன கதை தான்.. கிட்டத்தட்ட ஆறு மாதமாக இதை எழுதி முடிக்க நேரம் கிடைக்காமல் ஒவ்வொரு எபியாக அவ்வப்போது எழுதி முடித்தேன்..


ஆனால் அப்போதும் கூட இந்தரும் யமுனாவும் உங்கள் மனதில் இப்படி ஒரு இடத்தை பிடிப்பார்கள் என நான் நினைக்கவில்லை..


முதல் இரண்டு நாட்களுக்குள் அத்தனை மெசேஜ் அண்ட் ரிவியூ கொடுத்து என்னை திக்கு முக்காட செய்து விட்டீர்கள்.. உங்கள் அன்புக்கு நன்றி❤️


அப்படி நான்கு நாட்களுக்குள் வந்த 70+ ரேட்டிங் இப்போது இல்லாமல் போய் விட்டதை எண்ணி தான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது..


புரிதலுக்கு நன்றி.


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 34960
ஹாய் டியர்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க..? நான் நலம்.

ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயத்தோடு உங்களை எல்லாம் சந்திக்க நான் வந்து இருக்கேன்..

என் இருபத்து ஐந்தாவது நாவல் இப்போ நேரடி புத்தகமா வெளியாகி இருக்கு..

ஏழு வருடம்.. இருபத்து ஐந்து நாவல் என்பது என்னை பொறுத்தவரை மிக பெரிய விஷயம்.. ஒவ்வொரு கதையையும் எழுதி முடிப்பதற்குள் எத்தனை பிரச்சனைகள்..? எவ்வளவு இடைஞ்சல்கள்..? அதையெல்லாம் மீறி இதை செய்து முடித்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது..

எனக்கு வாய்ப்பளித்து இன்று வரை வழி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ அக்காவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..

இந்த புத்தகத்திற்கு நான் கேட்டதும் முன்னுரை எழுதி கொடுத்ததற்கு நன்றி கா..

உங்க பர்சனல் ஒர்க்கில் நீங்க எவ்வளவு பிஸின்னு எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனாலும் எனக்குன்னு நேரம் ஒதுக்கி நீங்க செய்த இந்த உதவிக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை..

இந்த ஏழு வருட பயணத்தில் பல அன்பு உள்ளங்களை நான் சம்பாதித்து இருக்கேன்..

என் ஒவ்வொரு அடியிலும் உடன் நின்று ஊக்குவித்த என் நெருங்கிய நட்புகள், வாசக தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

நீங்கள் எல்லாம் இல்லையென்றால் நான் இல்லை.. என்னால் இத்தனை கதைகளை என்னால் எழுதி இருக்கவே முடியாது.. அனைவருக்கும் நன்றி.. நன்றி..

சரி இப்போ கதையை பற்றி பார்ப்போமா..?

கதையின் தலைப்பு : “எனை தான் அன்பே மறந்தாயோ..!!”

நாயகர்கள் : ஷியாம் வினோதன், தீரஜ் ராகவன்

நாயகி : சஞ்சுயுக்தா

இப்போ கதையில் இருந்து ஒரு குட்டி டீசர்..

ஷியாமும் யுக்தாவும் தேன்நிலவுக்கு வந்த இடத்தில் உலகத்தையே மறந்து அவர்கள் இருவர் மட்டுமே உலகம் என்பது போல் காதல் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தனர்.

வழக்கம் போலவே தன் காதலை ஷியாம் அவனின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அசைவிலும் அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தான்.

அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் தன் காதலின் அளவை யுக்தாவும் ஷியாமிற்கு புரியும்படி நடந்துக் கொண்டிருந்தாள்.

இந்தத் தருணத்திற்காக வருடக் கணக்காக காத்திருந்த ஷியாமின் காத்திருப்பு கொஞ்சமும் வீண் போகவில்லை அவனின் காதல் அவளின் மனதையும் அவன்பால் மொத்தமாக சாய்த்து இருந்தது.

ஒரு மாலை நேரம் படகு சவாரி செய்ய இருவரும் கிளம்பினர். யுக்தாவின் இடையில் கை பதித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஷ்யாம் நடக்க, விரும்பியே அவனோடு இணைந்து இழைந்து நடந்து கொண்டிருந்தாள் யுக்தா.

இவர்களின் இணக்கமும் நெருக்கமும் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்க.. சிலரை அதுவே பொறாமை கொள்ள செய்து கொண்டிருந்தது. அப்படி ஒரு அன்னியோன்யம் அவர்களிடையே இருவரின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

அதே மனநிலையோடு திகட்டத் திகட்ட காதலோடும் சிலபல கொஞ்சல்களோடும் தங்கள் படகு சவாரியை முடித்து விட்டு கரை வந்து சேர்ந்தார்கள் இருவரும்.
முதலில் ஷியாம் இறங்கி கை கொடுக்க அவனின் கைகளைப் பற்றிக் கொண்டு இறங்கியவள் தன் நடையை தொடர இருந்த நொடி, எதிரில் நின்று கொண்டிருந்தவனைக் கண்டு அதிர்ந்து “தீரஜ்ஜ்ஜ்...” என்ற அலறலோடு மயங்கி சரிந்தாள் யுக்தா.

யுக்தாவின் அலறலை கேட்டு அதிர்ந்தவன், அவள் மயங்கிச் சரியவும் “யுகி..” என்று பதற்றத்தோடு அவளை தாங்க.. அவனுக்கு கொஞ்சமும் குறையாத பதட்டத்தோடு “சஞ்சு...” என்ற அலறலோடு ஓடிவந்து அவளை தாங்கி இருந்தான் தீரஜ்.

ஷியாம் ‘யார் இவன்..?’ என்பது போல் பார்த்தாலும் அப்போது இருந்த பதட்டத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லாமல் தன் மனைவியை காப்பாற்றுவதே ஒரே நோக்கமாக அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் என்று மருத்துவர் கூறிவிட.. ஆனாலும் கண் விழிக்காமல் படுத்து கிடந்தவளை எண்ணி தீரஜ் ஒரு பக்கமும், ஷியாம் ஒரு பக்கமுமாக துடித்து தவித்து காத்துக் கிடந்தனர்.

இருவரையும் சில மணி நேரங்கள் துடியாய் துடிக்க வைத்துவிட்டு யுக்தா கண் விழிக்க.. அதற்காகவே அவளின் இரு புறமும் காத்துக் கிடந்தவர்கள் பதட்டத்தோடு ஆவலாக நெருங்கி அவள் முகம் பார்த்தனர்.

கண்விழித்ததும் முதலில் ஷியாமை கண்டு ஒரு அன்னியப் பார்வையை பார்த்து விட்டு தன் விழிகளை அறை முழுவதும் சுழற்றியவள் இடது பக்கம் நின்றிருந்த தீரஜை கண்ட நொடி முகம் பூவாய் மலர தன் ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி “தீரஜ்...” என்று அழைத்தாள் சஞ்சு.

**********************

மேலே இருக்கும் காட்சியை எங்கேயோ பார்த்தது போல இருக்கா..? வேற எங்கேயும் இல்லை.. நான் தான் 2019ல் இந்த கதைக்கான டீசரை போட்டேன்..

அதற்கு பின் எழுதவே முடியாமல் தள்ளிப் போய் இப்போது நேரடி புத்தகமாக வெளி வந்திருக்கிறது.

புத்தகம் நம் நிவிதா டிஸ்டிரிபூஷனில் 10% தள்ளுப்படி விலையில் கிடைக்கும்..

விலை : ரூ – 360
தள்ளுப்படி விலை : ரூ – 320

புத்தகம் வாங்கிப் படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ளே அலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு முன் பதிவு செய்துக் கொள்ளுங்கள்..

99940 47771 / 99623 18439

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்..

கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியில் என்னோடு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

kavichandrastory2018@gmail.com
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

"எனை தான் அன்பே மறந்தாயோ..!!"

கதையை இனி அமேசான் கிண்டிலில் படிக்கலாம்..

இதோ கதையில் இருந்து ஒரு குட்டி டீசர்..

******

ஷியாமும் யுக்தாவும் தேன்நிலவுக்கு வந்த இடத்தில் உலகத்தையே மறந்து அவர்கள் இருவர் மட்டுமே உலகம் என்பது போல் காதல் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தனர்.

வழக்கம் போலவே தன் காதலை ஷியாம் அவனின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அசைவிலும் அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தான்.

அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் தன் காதலின் அளவை யுக்தாவும் ஷியாமிற்கு புரியும்படி நடந்துக் கொண்டிருந்தாள்.
இந்தத் தருணத்திற்காக வருடக் கணக்காக காத்திருந்த ஷியாமின் காத்திருப்பு கொஞ்சமும் வீண் போகவில்லை அவனின் காதல் அவளின் மனதையும் அவன்பால் மொத்தமாக சாய்த்து இருந்தது.

ஒரு மாலை நேரம் படகு சவாரி செய்ய இருவரும் கிளம்பினர். யுக்தாவின் இடையில் கை பதித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஷ்யாம் நடக்க, விரும்பியே அவனோடு இணைந்து இழைந்து நடந்து கொண்டிருந்தாள் யுக்தா.

இவர்களின் இணக்கமும் நெருக்கமும் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்க.. சிலரை அதுவே பொறாமை கொள்ள செய்து கொண்டிருந்தது. அப்படி ஒரு அன்னியோன்யம் அவர்களிடையே இருவரின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

அதே மனநிலையோடு திகட்டத் திகட்ட காதலோடும் சிலபல கொஞ்சல்களோடும் தங்கள் படகு சவாரியை முடித்து விட்டு கரை வந்து சேர்ந்தார்கள் இருவரும்.

முதலில் ஷியாம் இறங்கி கை கொடுக்க அவனின் கைகளைப் பற்றிக் கொண்டு இறங்கியவள் தன் நடையை தொடர இருந்த நொடி, எதிரில் நின்று கொண்டிருந்தவனைக் கண்டு அதிர்ந்து “தீரஜ்ஜ்ஜ்...” என்ற அலறலோடு மயங்கி சரிந்தாள் யுக்தா.

யுக்தாவின் அலறலை கேட்டு அதிர்ந்தவன், அவள் மயங்கிச் சரியவும் “யுகி..” என்று பதற்றத்தோடு அவளை தாங்க.. அவனுக்கு கொஞ்சமும் குறையாத பதட்டத்தோடு “சஞ்சு...” என்ற அலறலோடு ஓடிவந்து அவளை தாங்கி இருந்தான் தீரஜ்.

ஷியாம் ‘யார் இவன்..?’ என்பது போல் பார்த்தாலும் அப்போது இருந்த பதட்டத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லாமல் தன் மனைவியை காப்பாற்றுவதே ஒரே நோக்கமாக அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் என்று மருத்துவர் கூறிவிட.. ஆனாலும் கண் விழிக்காமல் படுத்து கிடந்தவளை எண்ணி தீரஜ் ஒரு பக்கமும், ஷியாம் ஒரு பக்கமுமாக துடித்து தவித்து காத்துக் கிடந்தனர்.

இருவரையும் சில மணி நேரங்கள் துடியாய் துடிக்க வைத்துவிட்டு யுக்தா கண் விழிக்க.. அதற்காகவே அவளின் இரு புறமும் காத்துக் கிடந்தவர்கள் பதட்டத்தோடு ஆவலாக நெருங்கி அவள் முகம் பார்த்தனர்.

கண்விழித்ததும் முதலில் ஷியாமை கண்டு ஒரு அன்னியப் பார்வையை பார்த்து விட்டு தன் விழிகளை அறை முழுவதும் சுழற்றியவள் இடது பக்கம் நின்றிருந்த தீரஜை கண்ட நொடி முகம் பூவாய் மலர தன் ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி “தீரஜ்...” என்று அழைத்தாள் சஞ்சு









படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னோடு ரேட்டிங் மற்றும் ரிவ்யூ மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்..

இப்போதைக்கு இந்த கதை ப்ரீ இல்லை..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்..
1000191536.jpg
மீண்டும் ஒரு சந்தோஷமான விஷயத்தோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்..

"சதிராடுதே மனமே..!!"

நேரடியாக அமேசான் கிண்டிலில் வந்த கதை இப்போது புத்தகமாக வெளி வந்திருக்கிறது..

இந்தர் - யமுனா ஜோடியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. நிறைய பேருக்கு இவங்களை பிடித்து இருந்ததாக சொன்னீங்க.. இவர்களைப் பிடித்த அளவுக்கு சீதாலட்சுமியையும் இங்கே பலருக்கு பிடித்திருந்தது..

இவர்கள் இப்போது புத்தக வடிவில் உங்களை சந்திக்க வந்திருக்கிறார்கள்.. 10% தள்ளுபடி விலையில் புத்தகம் கிடைக்கும்.. விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்..

விலை - ₹330
தள்ளுபடி விலை - ₹300

நிவிதா டிஸ்ட்ரிபியூசனில் ஐந்து புத்தகங்களை சேர்த்து வாங்கினால் கொரியர் சார்ஜ் இலவசம்..

மேலும் தகவலுக்கு கீழே உள்ள whatsapp சேனலை பாருங்கள்..


புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:

99940 47771 / 99623 18439

@highlight

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top