All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.​

நிலா ஶ்ரீதரின் "உன்...
 
Notifications
Clear all

நிலா ஶ்ரீதரின் "உன்னில் சரணடைந்தேன்...!" - கதை திரி

Page 2 / 2
 

(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 3 months ago
Posts: 42
Topic starter  
அத்தியாயம் - 8
 
இன்னும் ஒரு பத்து நாட்கள் சென்றிருந்தது. பெரும்பாலான வீட்டில் ஆண் வீட்டு செலவிற்கு பணம் தருவான், பெண் அதை வைத்து குடும்பம் நடத்துவாள்.
 
இங்கோ வித்தியாசம். வர்ணிகா பணம் கொடுக்க, சரண் அதை வைத்து வீட்டு பொறுப்பை பார்த்துக் கொண்டான்.
 
சரணுக்கு இதில் ஒருமாதிரி இருந்தாலும் அவனுக்கு வேறு வழியில்லை. அதற்காக அவன் அமைதியாகவும் இருந்து விடவில்லை. காலையிலேயே சமைத்து வைத்துவிட்டு தினமும் ஏதாவது ஒரு வாக் இன்னிற்கு சென்று கொண்டு தான் இருந்தான்.
 
சில நேரங்களில் தந்தைக்கு உதவ அவர் கடைக்கும் செல்வான். அவரோ மகன் வீட்டிற்கு கிளம்பும் நேரம், அவன் கேட்காமலே சில நூறு ரூபாய்களை அவன் சட்டை பையில் வைத்துவிட்டு “வச்சிக்கோ.. பெட்ரோல் போட தேவைப்படும்” என்பார்.
 
அதனால் கடைக்கு செல்வதையே குறைத்துவிட்டான்.
 
சுசியை பார்த்துவிட்டு வரலாம் என்று அவள் வீட்டிற்கு சென்றால் அவளும் அதையே தான் செய்வாள்.
 
“வேலை கிடைக்கிற மாதிரி தெரியல சுசி. நான் தான் வண்டி வச்சிருக்கேனே. ஃபுட் டெலிவரி கம்பெனில கூப்பிடுறாங்க. மாசம் பத்தாயிரம் பிளஸ் இன்சென்டிவ் தர்றாங்களாம். ஒரு டச் ஃபோன் வாங்குனா போதும். போகட்டுமா?” என்று அக்காவிடம் சிறுபிள்ளை போல் கேட்டான்.
 
“இதுக்கா சரண் உன்னை கஷ்டப்பட்டு எம்சிஏ படிக்க வச்சேன்?” என்று அவள் தம்பியை முறைத்தாள்.
 
சுசி தான் தன் இளங்கலை படிப்பை முடித்தவுடன் வேலைக்கு சென்று சரணின் இளங்கலை படிப்பின் பின் இரண்டு வருடமும், முதுகலை படிப்பிற்கான முழுபொறுப்பையும் ஏற்றுக் கொண்டாள்.
 
இல்லையென்றால் அவர்கள் வீட்டு நிதிநிலைக்கு சரண் ஒரு டிகிரியுடன் நிறுத்தி கொண்டு வேலைக்கு சென்றிருப்பான்.
 
அமைதியாக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த தம்பியின் தலையை வருடி, “எதோ ஒரு வேலைக்கு போய் காசு பார்த்துட்டேனா, அப்புறம் அதுவே பழகிடும். கொஞ்சம் பொறுமையா ட்ரை பண்ணு, நிச்சயம் நல்ல ஐடி கம்பெனியிலேயே நல்ல சம்பளத்துக்கே வேலை கிடைக்கும்” என்று அறிவுறுத்தினாள்.
 
அத்தோடு தன் கைப்பையில் இருந்த பணத்தை எடுத்து தம்பி கையிலும் திணித்தாள்.
 
அவன் வேண்டாம் என்று மறுக்க “வாங்கிக்கோ. மாமா என் சம்பளத்தை நீயே வச்சிக்கோனு சொல்லிட்டார். வட்டி கட்ட அம்மாவுக்கு கொடுத்தது போக, மீதியை நான் தான் வச்சிருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா அசலும் கொடுக்க ஆரம்பிச்சிடலாம்” இன்னொரு வீட்டிற்கு வாக்கப்பட்டு சென்றிருந்தாலும் பொறுப்பான தலைமகளாக சொல்லிக் கொண்டே போனாள்.
 
ஏற்கனவே வீட்டின் ஆண் பிள்ளையாக தாய், தந்தையை உடனிருந்து பார்த்துக் கொள்ள முடியவில்லை. இதில் அவர்களது பணத்திற்கான ஓட்டத்திலும் பங்குபெற முடியவில்லையே என்று கண்கள் கலங்கிவிட்டே அங்கிருந்து கிளம்பினான்.
 
நண்பன் வினோத்திடம் அது போன்ற தயக்கம் இல்லாமல் இருக்க, அவனை சந்தித்த போது கடனாக பணம் கேட்கலாம் என்று தான் எண்ணியிருந்தான்.
 
அவனோ “பெரியவீட்டு மாப்பிள்ளை ஆயிட்ட. இனி எனக்கு எதாவது பணம் தேவைப்பட்டா உன்னை தான் கேட்கணும் மச்சான்” என்று இவனை புகழ்ந்து சொல்ல, அதற்கு மேல் அவனிடம் பணம் கேட்பதற்கு தன் தன்மானம் இடம் கொடுக்காமல் போக, அம்முடிவை கைவிட்டான்.
 
வர்ணிகாவிற்கு சரணின் நிதி நிலைமை அவர்கள் தனியாக வந்த அடுத்த நாளே புரிந்துவிட்டது.
 
அவன் கேட்காமலே வீட்டு செலவிற்கு பணம் தருபவள் “டோன்ட் வொர்ரி சரண், இந்தியன் கரென்சி இல்லனா என்ன. என்கிட்ட பௌண்ட்ஸ் இருக்கு. மணி எக்ஸ்சேஞ் பண்ணிக்கலாம். அப்படி இல்லனாலும் ஐ ஹேவ் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு. வி கேன் யூஸ் இட்” என்பாள்.
 
இவ்வாறே பெண் சிங்கமும் ஆண் சிங்கமும் சேர்ந்து அந்த வீட்டை நடத்தி கொண்டிருந்தது.
 
மகளுக்கு பலமுறை அழைத்து பார்த்த ரகுவரன் அவள் தனது ஒரு அழைப்பையும் ஏற்காத வருத்தத்தில் இருந்தார்.
 
பொறுத்து பொறுத்து பார்த்தவர் அவளது உடமைகளை எடுத்து வந்து தருகிறேன் என்று மனைவியையும் அழைத்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார்.
 
நேராக மகளது வீட்டிற்கு வந்தவர் “வரு.. எப்படிடா இருக்க? அப்பா கூட பேசமாட்டியா?” என்று மகளின் தலையை வருட, அவளோ எதிர்செயலாற்றாமல் கல் போல் நின்றிருந்தாள்.
 
இருவரையும் அமருங்கள் என்று கூட சொல்லாமல் தங்களறைக்கு போக போனவளை “உன் திங்ஸ்ஸெல்லாம் கொண்டு வந்திருக்கோம் வரு. உன் செர்டிஃபிகேட்ஸும்” என்று மூன்று பெரிய டிராலியை காட்டியவர், தன் பையில் இருந்த அவளது சான்றிதழ்களை எடுத்து மேசையில் வைத்தார்.
 
“அண்ட் யுவர் ஃபேவரேட் டெடி. இது இல்லாம என் பிரின்சஸ் தூங்கமாட்டாளே..” என்று அவளது கரடி பொம்மையை அவள் முன் நீட்ட..
 
“எனக்கு எதுவும் வேண்டாம். எல்லாத்தையும் திரும்ப கொண்டு போங்க. நான் கஷ்டப்படணும்னு தானே எனக்கு சரணை கல்யாணம் பண்ணி வச்சீங்க. போங்க.. நான் கஷ்டப்பட்டுக்கிறேன்” என்று அடிக்குரலில் சத்தமிட்டு விட்டு திரும்ப, சரண் வாசலில் காய்கறி பையோடு உணர்வுகள் துடைத்த முகத்தோடு நின்றிருந்தான்.
 
அவனை பார்த்தும் பார்க்காதது போல் தந்தை கையிலிருந்த கரடி பொம்மையை பிடுங்கிக் கொண்டு, தங்களறைக்குள் சென்று கதவை அடைத்தாள்.
 
மகள் சென்ற பின்னே காய்கறி பையுடன் உள்ளே வந்த சரணை இருவரும் கவனித்தனர். வரு பேசியதை கேட்டிருப்பானோ என்று திகைத்துவிட்டவர்கள், தயங்கி கொண்டே அங்கிருந்து கிளம்பப் பார்த்தனர்.
 
செல்லும் அவர்களை “ஒரு நிமிஷம்" என்று நிறுத்தியவன், “ப்ளீஸ் உட்காருங்க” என்றான்.
 
இருவரையும் உட்கார வைத்து, அவர்களுக்கு குடிக்க கொண்டு வந்து கொடுத்தவன், நேராக அவர்கள் அறைக்குள் செல்ல, அங்கே வர்ணிகா தன் பொம்மையை கட்டிப்பிடித்து கொண்டு கோபமாக அமர்ந்திருந்தாள்.
 
“இப்போ என்னாச்சுன்னு இவ்ளோ சீன் போடுற? எனக்கும் தான் உன்னை கட்டிக்கிறது பிடிக்கல. எங்க அம்மா காலுல விழாத குறையா தான் சம்மதிக்க வச்சாங்க. அதுக்காக அம்மாகிட்ட சண்டையா போடறேன். டெய்லி ஃபோன்ல பேசறேன். ரெண்டு நாளைக்கு ஒருமுறை போய் பார்த்துட்டும் வரேன்” என்று சர்வசாதாரணமாக சொல்ல, அவள் அவனை முறைத்திருந்தாள்.
 
“வா, வந்தவங்களை வாங்கனு கூப்பிட்டு பேசு” என்றான்.
 
அவன் பேசியது பிடிக்காமல் போக “டேய்.. வெஜிடெப்ல்ஸ் வாங்கிட்டு வந்துட்டல, போய் சமைக்கிற வேலைய பாரு” என்று எரிச்சலாக பதிலளித்தாள்.
 
“ஏத்தம்டி உனக்கு” என்றெண்ணியவன், முகத்தில் கடுமை குறைக்காது “இது சரி இல்ல வர்ணிகா. எங்களுக்கு அவர் நல்லவரா இல்லாம இருக்கலாம், உன்னை பொறுத்தவரைக்கும் நல்ல அப்பா. உனக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கவங்களை இப்படி நடத்தறது சரி இல்ல” என்று அழுத்தமாகவே பதிவு செய்தான்.
 
அதற்கும் வீம்பாக இருந்தவள் “சொன்னா புரியாதா? கெட் அவுட் ஆஃப் மை சைட்” என்று கத்த ஆரம்பித்து பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் படபடவென பொரிந்து தள்ளினாள்.
 
அவள் பேசியதனைத்தையும் பொறுமையாக கேட்டவன், காதை குடைந்துவிட்டு “ஹி ஹி.. வழக்கம் போல ஒன்னும் புரியல” என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அவ்வறையைவிட்டு வெளியேறினான்.
 
இது இந்த பத்து நாட்களாக நடக்கும் ஒன்று தான். கோபம் வந்தால் அவள் ஆங்கிலத்தில் சத்தமிடுவதும், இவனும் புரியாததால் துடைத்து போட்டுவிட்டு செல்வதும் அவர்களுக்குள் சகஜம். ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி இல்லையே. மைதிலி உங்களால் தான் என்று ரகுவை சாடினார். ரகுவும் மகளை எண்ணி மன குழப்பத்தில் உழன்றார்.
 
வெளியே வந்த சரணோ “இருங்க சமைச்சிடுறேன்” இருவரையும் எந்த உறவுமுறை வைத்தும் கூப்பிடாமல், பொதுவாக சொல்லிவிட்டு தன் சமையல் வேலையை துவங்கினான்.
 
மைதிலிக்கு, போய் உதவி செய்யலாம் என்று இருந்தாலும் சரணுடன் அத்தனை பழக்கம் இல்லாததால் அமைதியாக அமர்ந்துக் கொண்டார்.
 
சிறிது நேரத்தில் சமையலறையிலிருந்து நல்ல வாசம் கிளம்ப, அடுத்த கால் மணிநேரத்தில் அனைத்தையும் எடுத்து வந்து உணவு மேசையில் வைத்தவன் தங்களறை கதவை திறந்து “வர்ணிகா” என்று குரல் கொடுத்தான்.
 
அவளும் அவனை புரிந்தவள் போல் நாற்காலியில் வந்தமர்ந்து, தனக்கு தேவையானதை எடுத்து வைத்து சாப்பிட துவங்க, அவளை முறைத்துவிட்டு ரகுவையும் மைதிலியையும் அழைத்து உணவை பரிமாறினான் சரண்.
 
தன்னெதிரே அமர்ந்திருப்பவர்களை சிறிதும் கண்டு கொள்ளாது “சரண் வா, நீயும் உட்கார்ந்து சாப்பிடு” என்றாள் ஓரக்கண்களால் தந்தையை பார்த்து கொண்டே.
 
அதுமட்டுமா அவனுக்கு பரிமாறுகிறேன் என்று வேறு கொடுமை செய்தாள்.
 
நால்வரும் சாப்பிட்டு கொண்டிருக்க “அப்புறம் சரண், மிஸ்டர் அண்ட் மிஸஸ். ரகுவரன் கிளம்பிடுவாங்க தானே..” என்றதும் மூவரும் ஒரே நேரத்தில் அவளை நிமிர்ந்து பார்க்க, “நம்ம வீட்டுல ஸ்டே பண்ணலாம் தான். ஆனா இங்க இருக்குறதே ஒரு ரூம் தான” என்று பாவமாக மிச்சு கொட்டி சொல்லிவிட்டு கைகழுவ எழுந்து சென்றுவிட்டாள்.
 
அதை பார்த்திருந்த சரணோ ‘அடங்க மாட்டேங்கறாளே’ என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் எண்ணிக் கொண்டான்.
 
மகளின் செயலில் அவளுக்கு தன் மேலிருக்கும் கோபம் வெளிப்படையாக தெரிந்தாலும், அவர்கள் இருவருக்குள் இருக்கும் நெருக்கமும் புரிய புன்னகையை அடக்கி கொண்டு ரகுவரனும் அங்கிருந்து நகர்ந்தார்.
 
மகள் வீட்டிலிருந்து நேராக தங்கை வீட்டிற்கு வந்து, தாங்கள் பயந்தது போல் இல்லை என்று இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கத்தை பற்றி சொல்லி சந்தோசமும் பட்டு கொண்டார். அண்ணன் சொன்னதை கேட்டு கனியும் உள்ளம் குளிர்ந்து தான் போனார். அதற்கு ஆயுட்காலம் மூன்று மாதம் என்பதை தான் அவர் அப்போது அறியாமல் போனார்.
 
அன்றிரவு சரண் சமையலறையில் அனைத்தையும் ஒதுக்கிவைத்து விட்டு படுக்கையறைக்கு வந்து பார்த்தால், வர்ணிகா தன் கரடி பொம்மையை கட்டிப்பிடித்து கொண்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
 
அதை பார்த்தவனுக்கு கோபம் கோபமாக வர, அறையிலிருந்து வேகமாக வெளியேறிவிட்டான். வெளியே வந்தும் மனது நிலை கொள்ளாமல் தவிக்க, வரவேற்பறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தான்.
 
“இந்த அம்மாவோட நொண்ணன் அவர் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்காரு. வற்புறுத்தி கல்யாணமும் பண்ணி வைக்கறாரு. இப்ப என் பிரின்சஸ் அவ ஃபேவரேட் டெடி இல்லாம தூங்கமாட்டானு அவ்ளோ தொலைவுல இருந்து எடுத்துட்டு வந்தும் கொடுக்கறாரு. அதுவும் ப்ளைட்ல. ச்சே, இவர் என்ன தான் எதிர்பார்க்கிறார்னே தெரியல” என்று மனதாறாமல் பொருமிக் கொண்டிருந்தான்.
 
அப்போது ‘எனக்கும் நீ என்ன எதிர்பார்க்கிறனு தான் புரியல?’ அவனுள் இருந்து எகிறி குதித்து வெளியே வந்த அவனது மனசாட்சி, எதிரிலிருந்த சோஃபாவில் அமர்ந்தப்படியே அவனை எள்ளி நகையாட..
 
‘இப்போ நீ எதுக்குடா வெளிய வந்த?’ என்று சரண் அதை முறைத்தான்.
 
‘என்ன சரணு, எல்லார் வாழ்க்கையிலயும் கரடி போல எவனாவது வருவான். உனக்கோ கரடி பொம்மையே குறுக்க வந்திடுச்சா..?’ என்று கைக்கொட்டி சிரிக்க, சரண் பல்லை கடித்தான்.
 
‘வர்ணி பொம்மையை கட்டுபிடிச்சி தூங்கிறத பார்த்தா, நீ இருக்க வேண்டிய இடத்துல அது இருக்கேனு பொறாமையா இருக்கா?’ என்று குரலில் நக்கல் தோய்த்து வேறு கேட்டது.
 
‘அடி செருப்பால. நானே அவளை வர்ணினு கூப்பிடறதில்ல. மனசாட்சி நீ, கொஞ்சிட்டா இருக்க. அவ எத கட்டிபிடிச்சி தூங்கினா எனக்கென்ன’
 
‘எல்லாம் நீ மனசுக்குள்ள சொல்றது தான்’ என்று அது சொல்லவும், சரண் அதை முறைக்க ‘சரி சரி, அப்ப நீ வர்ணிகா மேல லவ்ல குறுக்கும் மடுக்கும் நடக்கல. அப்படி தான?’ என்று மீண்டும் அவனை சீண்டியது.
 
‘அந்த லவ்வெல்லாம் என்னைக்கு என் அக்கா நிச்சயத்தை நிறுத்த அவ அண்ணன்கிட்ட பேசிட்டு இருந்தாளோ அப்பவே போச்சு’
 
‘அதுல அவ தப்பு இல்லன்னு தெரிஞ்சிடுச்சில. சொல்லப்போனா, அவ சொன்னமாதிரி நிச்சயத்தன்னைக்கே நிறுத்தியிருந்தா, கல்யாணம் வரைக்கும் வந்து அவ்ளோ களேபரம் நடந்திருக்காதே’
 
‘கரெக்ட் தான். இருந்தாலும் அத என்னால அவ்ளோ ஈசியா எடுத்துக்க முடியல’
 
‘அப்புறம் எதுக்கு நடந்திட்டு இருக்க. போய் அவ பொம்மையை கட்டிப்பிடிச்சு தூங்கிற அழகை ரசிச்சிக்கிட்டே ஒரு ஓரமா கட்டைய சாய்’ என்று அவனை வம்பிழுக்க, சரணுக்கு கோபத்தில் கண்கள் சிவந்தது.
 
‘இப்போ போறியா, இல்ல வர்ணிகாவை இங்கிலீஷ்ல திட்ட சொல்லவா?’ என்றதும்
 
‘ஆத்தி’ என்று நியாயம் கேட்க வந்த மனசாட்சி ஓடியேவிட்டது.
 
‘வர்ணியாம் வர்ணி.. இவளால இந்த மனசாட்சியெல்லாம் என்னை கேள்வி கேக்குது. இரு, அந்த கரடியை தூக்கி தூரம் வீசுறேன்’ என்று வேகமாக அறைக்குள் வந்தவன், அவள் அணைத்திருக்கும் கரடி பொம்மையை அசைவு தராமல் அவளிடமிருந்து பிரித்தெடுத்து, காலால் எட்டி உதைத்தான்.
 
பின் இதுவே தினசரி கதையாகி போனது. அவள் தூங்கும் வரை உறங்காமல் காத்திருப்பவன், அலுங்காமல் அவள் அணைத்திருக்கும் பொம்மையை எடுத்து கீழே போட்டு விடுவான். காலையில் எழும் வர்ணிகாவும் இதுவரை தனியாக உறங்கியவள் இப்போது சரணும் உடன் உறங்குவதால், இடப்பற்றாகுறையால் தான் தான் தூக்கத்தில் பொம்மையை கீழே தள்ளிவிட்டு விடுகிறோம் என்று நினைத்துக் கொள்வாள்.  
 
தந்தை முன் அவரை வெறுப்பேற்ற தங்களுக்குள் நெருக்கம் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உண்மையில் அப்படி ஒன்றுமில்லையே. இன்னமும் இது அவளுக்கு பிடிக்காத திருமணம் தானே. ஒரே வீட்டில் இருக்கிறார்கள். இவள் பணம் தருகிறாள், அவன் சமைத்து போடுகிறான். இது தானே இருவருக்குள் இருக்கும் சம்மந்தம்.
 
தன் வாழ்க்கையை பற்றி எண்ண எண்ண வர்ணிகாவிற்கு பெரிதாக தோற்றுவிட்டதாகவே தோன்றியது.
 
மனதை திசை திருப்ப ஒரு பேட்மிண்டன் கிளப்பில் சேர்ந்தாள். அத்தோடு நீச்சல் பயிற்சிக்கும், ஜூம்பா வகுப்பிற்கும் சென்றாள். இதற்கெல்லாம் முதலில் வாடகை வண்டியில் சென்று வந்திருந்தவள், தன்னிடமிருந்த சேமிப்பை வைத்து ஒரு காரையும் வாங்கினாள்.
 
இப்படியே தன் போக்கில் சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு மனம் இருப்பு கொண்டதோ என்னவோ, கையிலிருந்த பணமிருப்பு குறைந்துப் போனது.
 
இனியும் பொழுது போக்கில் நிம்மதி தேடுவது முட்டாள்தனம் என்பதை புரிந்தவள், மீண்டும் வேலையில் மூழ்க முடிவு செய்தாள். அதேநேரம் தந்தையின் அலுவலகத்தில் சேரவும் மனமில்லை. அன்று ரகுவரன் கொண்டு வந்து கொடுத்த அவளது சான்றிதழ்கள் இங்கே தான் இருக்க, வெளியில் வேலைக்கு செல்லும் முடிவை எடுத்தாள்.
 
இவள் ஒரு பக்கம் என்றால், சரண் இன்னொரு பக்கம். அவனால் இவளை போல் பணம் கட்டி நிம்மதி தேடமுடியாதே.. அதனால் வர்ணிகா இப்படி சென்றவுடன், இவனும் தன் அம்மா வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்திற்கு சென்றுவிடுவான். அங்கே வொர்க் அவுட் செய்து, தன் உடம்பையும் மெருகேற்றி, மனதையும் திசை திருப்பிக் கொண்டிருந்தான்.
 
அதுபோல் அவனும் எத்தனை நாள் தான் வர்ணிகாவின் பணத்தில் சாப்பிடுவது. வெளியிலும் வேலை தேடிக் கொண்டு தான் இருக்கிறான். அவனது நேரம், வேலை தான் கிடைத்தபாடில்லை.
 
ஒருநாள் சரண் தன்னிடம் இருக்கும் விசை அட்டையை கொண்டு வீட்டை திறந்து கொண்டு உள்ளே வர, இவனை நோக்கி ஓடி வந்தாள் வரு.
 
இது அவள் வழக்கமாக ஜூம்பா வகுப்பிற்கு செல்லும் நேரம். தப்பி தவறி சரண் வீட்டிலிருந்து விட்டாலும், உடலை பிடித்திருக்கும் டிராக்ஸ் மற்றும் டி-ஷர்ட்டை அணிந்தே அவனுக்கு முன் வலம் வருவாள். இன்றோ பார்மல் பழுப்பு நிற ஷர்ட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தாள்.
 
வேகமாக வாசல் வரை வந்து, “வா சரண்” என்று கணவனை வரவேற்றவள், “ஆஃப்டர் அவர் மேரேஜ், மை மைன்ட் காட் ஸ்டெக் வித் தட் இன்சிடென்ட். தட்ஸ் வை, எனக்கு எது சந்தோஷம் கொடுக்கும்னு கூட தெரியாம, ஐ வாஸ் வான்டெரிங் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சென்னை” என்றவள், அவன் எதிர்பாராத நேரத்தில் அவனை அணைத்து விடுத்து “ஐ காட் எ ஜாப் ஆஸ் கஸ்டமர் சக்ஸஸ் மேனேஜர். பேஸ்கேல்(Payscale) கம்மி தான். பட் வி கேன் மேனேஜ் அவர் எக்ஸ்பென்டீசர்ஸ்” என்று கடகடவென அனைத்தையும் மகிழ்ந்து கூறினாள்.
 
அதை கேட்டவனோ “எங்கயாவது எட்டாயிரத்துக்கோ பத்தாயிரத்துக்கோ வேலையில சேர்ந்துட்டாளோ..” என்று நெற்றியை நீவி கொண்டிருந்தவன் நல்லவேளையாக அதை அவளிடம் கேட்கவில்லை.
 
அவளே “மன்திலி இந்தியன் கரென்சில 80K தரேன்னு சொன்னாங்க. கம்மி தான். பட், தட்ஸ் அப்சலூட்லி ஓகே” இயல்பாக தன் சுருட்ட கேசம் தோள் தொட்டு நடனமாட, தலையை ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள்.
 
அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்த சரண் ‘எண்பதாயிரம் ரூபாயா..? ஏன்டா நானும் தானே எட்டு மாசமா வேலை தேடிட்டு இருக்கேன். ஒருத்தன் கொடுத்தானா? அது என்ன இவ தேடினதும் கிடைச்சிடுச்சு. எல்லாம் வெள்ளை தோலை பார்த்து மயங்கிருப்பாங்க. ஐயோ.. இவகிட்ட அதுவும் இல்லயே’ என்று தனக்கு தானே புலம்பியிருந்தான்.
 
“சரண்.. சரண்” அவன் தோளை தொட்டசைத்தவள், “வாட் ஆர் யு திங்கிங்?” என்று கேட்க,
 
“ஹாங்.. அது எப்படி, நானும் தான் எட்டு மாசமா வேலை தேடிட்டு இருக்கேன். நீ ரெண்டு நாள் முன்னாடி தான தேடப்போறேன்னு சொன்ன. இன்னைக்கு வேலையே கிடைச்சிடுச்சுனு சொல்ற. அதுவும் எண்பதாயிரம் ரூவா. எனக்கு தெரியாதுன்னு கதை விடுறீயா?” தன் மனதிலிருந்த அனைத்தையும் கேட்டுவிட்டான்.
 
அவன் பேச்சில் அவளுக்கிருந்த நல்ல மனநிலையெல்லாம் அடியோடு போய்விட, “நான் என்ன உன்னை மாதிரி தட்டி தட்டி பாஸ் ஆனேனா.. ஐ ஹோல்ட் மை மாஸ்டர் டிகிரி ஃப்ரம் தி பிரெஸ்டீஜியஸ் லண்டன் பிசினஸ் ஸ்கூல்” என்றாள் அவனை முறைத்து கொண்டே.
 
அவள் பேசியது தன் தன்மானத்தை தீண்டி பார்க்க “நான் தட்டி தட்டி பாஸ் ஆனதை நீ பார்த்தியா? நானும் டிஸ்டிங்ஷன்ல தான் பாஸ் ஆனேன். என்ன பண்றது உங்கிட்டலாம் பேச்சு வாங்கறதா இருக்கு” என்று கோபமாக ஆரம்பித்தவன், தன் இயலாமையை சொல்லி முடித்தான்.
 
“ஹேய் சரண்.. சாரி.. டோன்ட் டேக் இட் ராங். சில். கம், லெட்ஸ் கோ அவுட். டூடே இஸ் மை ட்ரீட்” என்று அவனை இழுத்து சென்றாள். சரணுக்கு தான் அவள் பேசியதில் மனதிற்கு இன்னமும் என்னவோ போல் இருந்தது.
 
ஒருநாள் கணவர் இல்லாத நேரத்தில் மகனை வீட்டிற்கு அழைத்திருந்த கனி, “இன்னைக்கு வருவை பார்க்க வீட்டுக்கு வந்திருந்தேன் சரண். மூணாம் மாசம் தாலி பிரிச்சி கோர்க்கலாம்னு கேட்டா, எனக்கு நானே தாலி பிரிச்சி கோர்த்துக்கிட்டேன்னு சொல்லிடுச்சு பா” என்று அழாத குறையாக சொன்னவர்,
 
“அது என்ன பேசுதுன்னு புரியாம பார்த்தா, கழுத்துல மெல்லிசா ஒரு செயின் போட்டிருக்கு. அதுல தங்க கம்பில தாலிய போட்டு முடுக்கி வச்சிருக்கு" என்றவருக்கு இப்போதும் அவர் கண்ட காட்சியை எண்ணி மயக்கம் வருவது போல் இருந்தது.
 
அதை கேட்டு ஒரு விரக்தி புன்னகையை உதிர்த்த சரண், “நீங்க எதிர்பார்க்கற மாதிரி அவ இல்லம்மா. வீட்டுல உரிச்சி வச்ச கோழி மாதிரி தான் இருப்பா. அந்த தாலியை மட்டும் அவங்க அப்பாவுக்காக போட்டிருக்காளா, இல்ல எனக்காக போட்டிருக்காளானு தெரியல. ஆனா போட்டுட்டு தான் இருக்கா” தங்கள் வீட்டு கடைக்குட்டி பெரிய மனிதன் போல் பேசுவதை வியந்து பார்த்த கனி, முதல் முறையாக அக்கேள்வியை கேட்டார்.
 
மகனின் கன்னம் தாங்கி, “நீ சந்தோஷமா இருக்கியா சரண்” என்று குழப்பமாக கேட்டார்.
 
சரணும் வர்ணிகாவும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று அண்ணன் சொன்ன திருப்தியில் இருந்த கனிக்கு, இது தான் முதல் அடி. இப்போது மகனின் வாழ்க்கை குறித்த கலவையான எண்ணத்தில் அவ்வாறு கேட்டார்.
 
அவனோ “அண்ணன் உறவு தான் கிடைச்சிடுச்சே. இனி என் வாழ்க்கையை பத்தி என்ன” என்று விட்டேற்றியாக பதிலளித்தான்.
 
“ஏன் சரண் இப்படியெல்லாம் பேசற.. அம்மாவுக்கு உன்மேல பாசம் இல்லையா.. நல்லா இருப்பீங்கனு தான கல்யாணம் பண்ணிவைச்சோம்” மகனின் வார்த்தைகளை தாளமுடியாமல் கதறி விட,
 
“உங்கள குத்தி காட்ட சொல்லல. வேலைக்கு போற பொண்ணு, மஞ்சள் கயிறு அசிங்கமா இருக்கும்னு கூட மாத்தியிருக்கலாம். தாலியை கழட்டி வச்சிடலயே. அதோட நீங்க ஒண்ணு புரிஞ்சிக்கணும். இது எங்களுக்கு பிடிக்காத கல்யாணம். இதுக்கப்புறம் விருப்பம் வரலாம். இல்ல, வர்றாம இப்படியே கூட போய்டலாம். எது எப்படியோ, ரெண்டு பேரும் ஒண்ணா சண்டை போடாம இருக்கோம். அதுவே பெருசு” என்று எந்த நேரத்தில் சொன்னானோ, இருவருக்கும் சண்டையை உண்டு செய்ய அந்த நாளும் வரத்தான் இருந்தது.
 
 
தொடரும்...

   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 3 months ago
Posts: 42
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 3 months ago
Posts: 42
Topic starter  
அத்தியாயம் - 9
 
வீட்டிற்கு வந்த போதே தலைவலி மண்டையை பிளக்க, சரணிடம் தனக்கு பால் காய்ச்சி தர சொல்லவேண்டும் என்ற எண்ணத்தோடே வீட்டினுள் நுழைந்தாள் வர்ணிகா.
 
அன்று பார்த்து சரணோ வீட்டிலில்லை. அவன் எண்ணுக்கு அழைத்து பார்த்தால், அதையும் அவன் தொடர்ந்து நிராகரித்துக் கொண்டே இருந்தான்.
 
ஒருபுறம் காலையிலிருந்து மாலை வரை கிளையண்டுடன் தொடர்ந்து மீட்டிங்கில் ஈடுபட்ட வேலை சுமை, இன்னொரு புறம் தலைவலி உயிர் போக, அயர்வாக அங்கிருந்த சோபாவிலேயே படுத்துவிட்டாள்.
 
இப்படியே நேரம் இரவை தொட்டுவிட, அப்போதே தன்னிடம் இருக்கும் விசை அட்டையை கொண்டு வீட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தான் சரண். வந்தவன் முகத்திலும் அசதியும் விரக்தியும் ஒன்றற கலந்திருந்தது.
 
அதை கவனிக்காதவளோ கணவன் உள்ளே வந்ததும் “எங்க சரண் போயிருந்த? ஃபோன் பண்ணாலும் எடுக்கமாட்டற. சரி, போறது தான் போற, அட்லீஸ்ட் குக் பண்ணிட்டு போயிருக்கலாம்ல. காலையில இருந்து ஆபீஸ்ல அவ்ளோ வொர்க்லோட். வீட்டுக்கு வந்தா, எதுவும் செஞ்சு கொடுக்க நீயும் இல்ல” என்று அவனை அங்கேயே நிறுத்தி கேள்வி கேட்டாள்.
 
“சாரி வர்ணிகா, நான் இன்டர்வியூல இருந்தேன். அதான் காலை கட் பண்ணேன். இன்னைக்கு ஒருநாள் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கலாமா?” என்றான் சோர்ந்த மனமும் அயர்ந்த உடலுமாக.
 
“அத எப்போ சொல்ற. நான் டூ ஹவர்ஸா தலைவலில இருக்கேன். ஒரு பால் கொடுக்க கூட நீ இல்ல. எப்பவும் நீ தான இதெல்லாம் கரெக்ட்டா பார்த்து செய்வ” என்றாள்.
 
அவள் பேச்சில் உரிமை இருந்தது. அவன் தன் அழைப்பை நிராகரித்த கோபம் இருந்தது. எப்போதும் தன் முகத்தை வைத்தே தனக்கு தேவையானவற்றை செய்பவன், இன்று இல்லையே என்ற ஏமாற்றம் இருந்தது. ஏனோ அதை இருவரும் உணரத்தான் இல்லை.
 
ஏற்கனவே நேர்கானல் சென்ற இடத்தில் காலையிலிருந்து காத்திருக்க செய்துவிட்டு, இரவு எட்டு மணிக்கே இறுதி சுற்றை எடுத்து, கடைசியாக சம்பளத்தை பற்றியும் பேசி, இறுதியாக வேலையில்லை என்று சொல்லி அனுப்பிய கடுப்பில் அவன் இருந்தான். இதில் வாசலிலேயே நிறுத்தி கேள்வி கேட்டதும் அல்லாமல், தன் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் தன்னையே குற்றம் சொல்கிறாள் என்ற கோபம் வேறு சேர்ந்துக் கொண்டது.
 
“வர்ணிகா.. குழந்தையா நீ? பால் கொடுக்க வரல, சோறு ஊட்ட வரலன்னு. நானே இந்த இன்டர்வியூலயும் வேலை கிடைக்கலன்னு கடுப்புல இருக்கேன்” என்று அவன் குரலை உயர்த்த..
 
“நான் என்ன நீ வேலைக்கு போனா தான் ஆச்சுனு சொன்னேனா. நீ தான் எப்பவும் இன்டர்வியூ, வாக் இன்னு சுத்துற. சரி, உனக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் லெட் மீ கிவ் ஒன் ஐடியா. பேசாம நீ இங்க டெய்லி குக் பண்றதுக்கு நான் உனக்கு சேலரி தந்திடுறேன். உன்னோட சேட்டீஸ்ஃபேக்ஷனுக்கு வேணா எனக்கு குக் பண்ணி வச்சிட்டு இருக்குற ஃப்ரீ டைம்ல எதாவது இன்டர்வியூக்கு போ” என்று தனக்கு தெரியாமலே அவன் என்னை செய்ய வேண்டும் என்பதை ஆணையாக பிறப்பித்தாள்.
 
அதை கேட்டவனின் இரத்தம் கொதிக்க, நரம்புகள் புடைக்க, தன் உள்ளங்கையை இறுக மூடி கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்றிருந்தான். இருந்தும் அவளை எதிர்த்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. தனக்கு வேலை கிடைக்க விடாமல் நிந்திக்கும் தன் விதியை தான் திட்டி கொண்டிருந்தான்.
 
அவனது அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்டவள் “சரண்.. எனக்கு இங்க என்ன சேலரி கொடுப்பாங்கயெல்லாம் தெரியாது. உங்க அம்மாவும் வேலைக்காரி தான. அவங்களுக்கு தெரியும்ல இதுக்கு என்ன சேலரி தருவாங்கனு. கேட்டு சொல்றியா? அதையே உனக்கும்..” சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவளிடம் புயலென வந்தவன், அவள் கையை அழுந்த பிடித்தெழுப்பி மற்றொரு கையால் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான். அதில் அவளது மீதி வார்த்தைகள் வெளிவராமல் போனதோடு, அவன் அடித்த வேகத்தில் சுருண்டு போய் சோபாவில் விழுந்தாள் வர்ணி.
 
சோபாவில் விழுந்திருந்தவள் “யு இடியட்.. ஹவ் டேர் யு மோரான்?” என்று கத்திக் கொண்டே எழுந்து திரும்பி பார்க்க, அவளது வார்த்தைகள் அனைத்தும் காற்றிலேயே கரைந்திருந்தது. ஆம், அவளை அறைந்த மறுநொடி வீட்டை விட்டு வெளியேறியிருந்தான் சரண்.
 
அவனுக்கு அவளை அறைந்த பின்னும் ஆத்திரம் தீரவில்லை. தன் தாயை பற்றி என்ன வார்த்தை சொல்லிவிட்டாள். அவனுக்கிருந்த கோபத்திற்கு இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால், அவள் கழுத்தை நெரித்து கொன்றிருந்தாலும் ஐயமில்லை.
 
அவர்களது அடுக்குமாடி குடியிருப்பின் அடி தளத்திற்கு வந்தவன், கோபத்தில் தன் காலை அங்கிருந்த தூணில் உதைத்து, கையை மடக்கி ஓங்கி ஓங்கி அதில் குத்தி கொண்டிருந்தான். அப்போதும் அவனது ஆத்திரம் குறைந்ததாக தெரியவில்லை.
 
இனி தனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவோடு, வண்டியை எடுத்துக் கொண்டு நேராக தன் வீட்டிற்கு வந்துவிட்டான்.
 
அப்போதே கனியும் பாலனும் இரவு உணவை முடித்திருந்தனர். பாலன் தன் மூட்டு வலிக்கு தரையில் கால் நீட்டி அமர்ந்து, தைலம் தேய்த்துக் கொண்டிருந்தார். கனியோ சமையலறையில் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு பாத்திரம் துலக்கி கொண்டிருந்தார்.
 
இந்நேரத்தில் மகனை பார்த்த பாலனோ “கனி.. சீக்கரம் வாயேன். கொழந்தை இந்த டைம்ல வர்றான்” அதிர்ந்து மனைவிக்கு செய்தி சொன்னார்.
 
அங்கிருந்தே எட்டி பார்த்த கனியும் தன் கைகளை கழுவிக்கொண்டு வெளியே வருவதற்குள், உள்ளே வந்த சரண் பாலனை ஒரு அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு நேராக அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டான்.
 
ஒன்றும் புரியாமல் கனி அறை வாசலிலேயே நின்றிருக்க, கதவை திறந்த சரண் கைலியும், உள் பனியனும் அணிந்து வெளியே வந்தான்.
 
மகனை பார்த்தவருக்கு எதுவோ நடந்திருக்கிறது என்பது புரிந்தாலும் “என்ன சரண், இந்த நேரத்துல வந்திருக்க? வரு அங்க தனியாவா இருக்கு. எங்களை பார்க்கணும்னா காலையில வந்திருக்கலாமே” முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் மகனது கன்னத்தை தாங்கி இயல்பாகவே கேட்டார்.
 
அவரையும் ஒரு அழுத்தமான பார்வை பார்த்தவன், தோளில் துண்டோடு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.
 
மகன் வெளியே வரும் வரை கனியும் பாலனும் ஒருவரை ஒருவர் குழப்பமாய் பார்த்திருக்க, வெளியே வந்தவன் சமையலறைக்கு சென்று ஒரு சொம்பு தண்ணீரை ஒரே மடக்கில் குடித்து விட்டு, அறைக்குள் சென்று கட்டிலில் குப்புற படுத்துவிட்டான்.
 
இங்கே வர்ணிகாவிற்கு அவன் தன்னை அடித்துவிட்டான் என்பதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. இது அவளுக்கு மிகவும் புதிது. இதுவரை அவளை யாரும் அறைந்ததில்லை. தன் கன்னத்தில் கைவைத்து பார்த்தவளுக்கு அவள் விரல் பட்ட இடம் வலித்தது.
 
கண்கள் கண்ணீரை உகுக்க, சிறிதும் தாமதிக்காது தன் மடிக்கணினியை எடுத்திருந்தவள், நகரத்தின் பெயர் போன வழக்கறிஞரின் எண்ணை தேடி எடுத்தாள். அதோடு லண்டனுக்கு செல்ல டிக்கெட்டும் பதிவு செய்துவிட்டவள், தன் உடமைகள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.
 
விமானத்திற்கு இன்னும் ஆறு மணிநேரம் இருக்க, இருப்பு கொள்ளாமல் தவித்தவள் நான்கு மாதங்களுக்கு பிறகு தன் அன்னைக்கு அழைத்தாள்.
 
அழைப்பை ஏற்ற மைதிலியோ, மகளது சூழ்நிலை புரியாமல் “ஹலோ, மிஸஸ். ரகுவரன் ஸ்பீக்கிங். மிஸஸ். சரண் கால் பண்ணிருக்காங்க. வாட் ஏ மிராக்கல்” என்று மகளை கேலி செய்ய, அதில் கடுப்பானவள்,
 
“மாம்.. ப்ளீஸ். ஐ ஆம் இன் டிஸ்ரெஸ்” என்றாள் பல்லை கடித்துக் கொண்டு.
மகளின் வலி தோய்ந்த குரலை கேட்டவர் “என்னாச்சு வரு..? ஏதா..” என்று அவர் முழுதாக முடிப்பதற்குள்..
 
“அந்த இடியட் என்னை அடிச்சிட்டான் மாம். ஐ ஆம் நோ லாங்கர் கோன்ன லிவ் வித் தட் மோரான். அவனை டிவோர்ஸ் பண்ண போறேன். அண்ட், நாளைக்கு மார்னிங் நான் அங்க இருப்பேன்” என்று படபடவென பொரிந்தாள்.
 
சரண் அடித்துவிட்டான் என்று கேட்டதுமே ஒரு தாயாக மனது துடித்தாலும், அவனை பார்த்தமட்டும் அவன் அப்படி சட்டென்று நடந்து கொள்பவன் இல்லை என்றே மைதிலிக்கு தோன்றியது. அதோடு இருவருக்கும் ஒத்து வரவில்லையென்றால் வர்ணிகாவும் இத்தனை நாட்கள் அவனோடு இருந்திருக்க மாட்டாளே.
 
“வரு, காம் டௌன். டேக் யுவர் பிரீத்” மகளை நிதானப்படுத்தியவர், முதலில் என்ன நடந்ததென்று தெரிந்துக் கொள்ள “பர்ஸ்ட் ஆஃப் ஆல் என்ன நடந்ததுன்னு சொல்லு” என்றார்.
 
மகளும் நடந்த அனைத்தையும் கூற, பொறுமையாக கேட்ட மைதிலி “சரண் அறைஞ்சது சரினு சொல்லல. ஆனா தப்பு யார் மேல வரு” மகளாயினும் நியாயத்தின் பக்கம் நின்றார்.
 
அவர் கேட்ட தொனியிலேயே அது புரிந்து விட “என் மேல தப்புனு சொல்றீங்களா மாம்?” என்று ஏமாற்றமாக கேட்டாள்.
 
“கண்டிப்பா. நான் கனி கூட பழகினதில்ல. இருந்தும் சொல்றேன். உங்க அப்பாவுக்கு அவ மேல இருக்க பாசம் தெரிஞ்சும், அத ஒருநாளும் அட்வான்டேஜா எடுத்துக்கிட்டதில்ல. இந்த மேரேஜை கூட அவ அண்ணனோட ரிலேஷன்ஷிப் போயிட கூடாதுனு தான் கேட்டா. அப்படியிருக்கப்போ, நீ அவளை பத்தி இப்படி ஒரு வார்த்தை சொன்னது ரொம்ப தப்பு” மகளுக்கு நல்லதையே எடுத்துரைத்தார் மைதிலி.
 
“மாம்.. நான் ஒண்ணும் அவங்கள இன்சல்ட் பண்ண சொல்லல. சரண் வேலை கிடைக்காம கஷ்டப்பட்டான். இன்ஃபேக்ட், நான் அவனை நல்லா தான் பார்த்துக்கிறேன். அப்பவும் வேலை வேலைனு அலைஞ்சு ஹர்ட் ஆகுறான். அதான் சொன்னேன். அண்ட், அவன் மாம்ம நான் தப்பா எதுவும் சொல்லல. அவங்க அந்த வேலை தான செய்றாங்க. அத தான் சொன்னேன். அதுக்கு என்னை அடிப்பானா. ஐ ஹேட் ஹிம் மாம்”
 
“அப்படியில்ல வரு. யு ஆர் லீடிங் எ டீம். யு ஸுட் பி வெரி கேர்ஃபுல் வென் யூசிங் வேர்ட்ஸ். ஒண்ணு புரிஞ்சிக்கோ, கனி பெரிய பொசிஷன்ல இருந்து அத நீ மென்ஷன் பண்ணிருந்தா தப்பா தெரிஞ்சிருக்காது. அதுவே வேலைக்காரிங்கற வார்த்தை நிச்சயமா அவளை இன்சல்ட் பண்றதா தான் இருக்கும். ஒரு பையனா, சரண் அதுக்கு அப்படி தான் ரியாக்ட் பண்ணுவான். ஏன் உன் அப்பா இத கேட்டாலும் உன்மேல கோபம் தான் படுவார். ஐ நோ மை கேர்ள். தப்புனு தெரிஞ்சா ஷி வில் நெவர் ஹெசிடேட் டு சே சாரி. சரண் திரும்ப வந்ததும் சாரி கேளு” என்றும் அறிவுறுத்தினார்.
 
“அவன் மாம்ம நான் சொன்னது தப்பா மீன் ஆகியிருந்தா, ஐ ஆம் ரெடி டு ஆஸ்க் சாரி டு ஹர். பட் ஐ வில் நாட் சே சாரி டு சரண். என் தப்பை பொறுமையா எடுத்து சொல்லாம, ஹி ஸ்லாப்ட் மீ. ஐ வில் நெவர் ஃபர்கீவ் ஹிம்” என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.
 
மைதிலிக்கு அதை கேட்டு வருத்தமாக இருந்தாலும் மகளது குணத்தை நன்கு அறிந்தவர் “அது உங்க ஹஸ்பென்ட் அண்ட் வைஃப் ப்ராப்ளம். யாரும் தலையிட முடியாது. யு போத் நீட் டு சால்வ் இட். ஆனா, லாயரை பார்க்கறேன், டிவோர்ஸ் பண்றேன், லண்டன் கிளம்பி வரேனுலாம் சொல்லக் கூடாது. லண்டன்ல வளர்ந்திருந்தாலும் பேமிலி வேல்யூஸ் சொல்லி தந்து தான் உங்கள வளர்த்திருக்கோம். நான் மிஸஸ். ரகுவரனா வாழணும்னு தான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீ அப்படியில்ல. யுவர் மேரேஜ் வாஸ் அன்எக்ஸ்பெக்டட். இருந்தும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழனும். எனக்கு சரண் மேல நம்பிக்கை இருக்கு. நீயும் என் நம்பிக்கையை காப்பாத்துவேனு நம்பறேன்” என்றுவிட்டே அழைப்பை துண்டித்திருந்தார்.
 
இப்போது வர்ணிகாவிற்கு தான் பேசியது தவறென்று புரிந்தது. அதேநேரம் அவன் அன்னையை பேசியது தவறென்று உணர்ந்தவள், அவனை அது எந்தளவிற்கு காயப்படுத்தியிருந்தால் அறைந்திருப்பான் என்பதை புரிந்துக் கொள்ள தயாராக இல்லை.
 
புரியாமலே அவன் மீது கோபமாகவும் இருந்தாள். அந்த கோபத்தில் மீண்டும் அவனை காயப்படுத்தப் போகிறோம் என்பதை அறியாமலே, அவன் வருகைக்காக காத்துக் கொண்டும் இருந்தாள்.
 
குப்புற படுத்துவிட்ட மகனிடம் பால் குவளையுடன் வந்தார் கனிமொழி. அவன் ஒரே மட்டில் தண்ணீரை குடித்ததிலிருந்தே, ஒன்றும் சாப்பிடவில்லை என்பதை புரிந்து தான் எடுத்து வந்திருந்தார்.
 
“சரண்.. வெறும் வயித்தோட படுக்க கூடாது. இந்த பாலை குடிச்சிட்டு படு” என்றார்.
 
அந்த பாலை பார்த்ததும் என்ன தான் அவள் மீது சொல்லிலடங்கா கோபமிருந்தாலும், வீட்டினுள்ளே நுழைந்ததும் தலைவலி என்று அவள் அவனிடம் பால் தானே கேட்டாள். அதில் மனம் உழல, வேண்டாம் என்று மறுத்து விட்டான்.
 
அத்தோடு பொறுமையாக சென்றுவிடுவாரா கனி. காலையில் கேட்டு கொள்ளலாம் என்றால் அதுவரை அங்கே அண்ணன் மகள் தனியாக இருப்பாளே. “சரி, நைட் பசிச்சிதுன்னா எடுத்து குடி” என்றவர் “ஆமா, என்ன இந்த டைம்ல வந்திருக்க? அங்க வரு தனியா இருக்காதா..” என்று விஷயத்திற்கும் வந்தார்.
 
“இருக்கட்டுமே. எனக்கென்ன” என்றான் படுத்துக் கொண்டே.
 
“அப்படி சொல்லாத சரண். பாவம் ப்பா சின்ன பொண்ணு. தனியா இருக்க பயந்துக்க போகுது. நீ முதல்ல கிளம்பு” என்றார்.
 
“எனக்கு போக இஷ்டமில்ல. இனி எப்பவும் இங்க தான்” கண்களை மூடிக் கொண்டே சொல்ல, கனியின் தலையில் இடியே இறங்கியது.
 
இவர்களுக்குள் அப்படி என்ன தான் பிரச்சனை என்று மனது உழன்றாலும் “என்ன சரண் சொல்ற.. விளையாட்டா இருக்கா? என்ன பிரச்சனைனாலும் அத ஒரே வீட்டுல இருந்து தான் சரி செய்ய பார்க்கணும். இப்படி கிளம்பி வர்றது என்ன பழக்கம். முதல்ல கிளம்பு” என்று குரலை உயர்த்தியே இருந்தார்.
 
அதற்கெல்லாம் அசையாது கண்களை மூடியிருந்த மகனை பார்த்து, இப்போது கோபம் தலைதூக்க “நீ போறியா, இல்ல நான் போகவா?” என்று தீர்க்கமாக கேட்டார்.
 
அதில் சட்டென எழுந்தவன் “என்னம்மா இப்படி பண்றீங்க. அவ உங்கள..” ஒரு வேகத்தில் ஆரம்பித்துவிட்டவன், மீதி வார்த்தைகளை தனக்குள்ளேயே விழுங்கி தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்த கட்டிலின் கைப்பிடியை அழுத்தமாக பிடித்தான்.
 
“போப்பா.. வரு அங்க தனியா இருக்கும்” என்று மீண்டும் கெஞ்சுதலாய் சொல்ல,
 
“ஒருநாள் கூட நான் இங்க தங்க கூடாதா?” என்றான் ஆற்றாமையாய் அன்னையை பார்த்து.
 
“தங்க கூடாதுனு இல்ல, ஆனா வருவுக்கு இந்த இடம் செட் ஆகாதே. நீ அத விட்டுட்டு இங்க தங்க முடியாதே” நிதர்சனத்தை சொல்கிறேன் என்று அவனுக்கு கோபத்தை மூட்டி இருக்க..
 
“என்னம்மா.. உங்க அண்ணன் பொண்ணுக்கு என்னை வித்துட்டீங்களா? அப்போ சரி, நான் என்னை வித்துட்ட முதலாளிகிட்டயே கொத்தடிமையா இருந்துக்கிறேன்” என்று அங்கு மாட்டியிருந்த கால் சட்டையை எடுத்து மாட்டியவன், சட்டையையும் அணிந்துக் கொண்டு விறுவிறுவென கிளம்பிப் போனான்.
 
சரண் வீட்டிற்கு வரும் போது நள்ளிரவு ஒன்று. அதுவரை தன் கரடி பொம்மையை அணைத்து பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவள், அவன் அறைக்குள் வருவதை பார்த்ததும் தன் பொம்மையை கட்டிக் கொண்டு கண் மூடி படுத்துக் கொண்டாள்.
 
அவனும் அவளை சிறிதும் கண்டுகொள்ளாது தன் பக்க கட்டிலில் படுத்துக் கொண்டான்.
 
அடுத்த நாள் காலை எழுந்த வர்ணிகா, பல் துலக்கி வந்து உணவு மேசையில் அமர்ந்து “சரண், பால் கொண்டு வா” என்றாள்.
 
அவனோ, ஒன்றும் பதிலளிக்காமல், அமைதியாக சோபாவில் அமர்ந்து நேர்காணலுக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
 
தான் சொன்னதற்கு பதில் வராமல் போகவே “சரண், நான் உங்கிட்ட பால் கேட்டேன்” என்றாள் இம்முறை அழுத்தமாக.
 
“அத ஏன் எங்கிட்ட கேக்கற? நான் என்ன உனக்கு வேலைக்காரனா.. என் கை சோத்தை சாப்பிட்ட கொழுப்புல தான என் அம்மாவை திமிரு பிடிச்சி பேசின. இனி இந்த வீட்டுல நான் சமைக்கமாட்டேன்” என்றான் தீர்மானமாக.
 
அதில் நேற்றிரவு மைதிலி பேசியதில் சற்று தணிந்திருந்தவள், வேகமாக அவனெதிரே வந்து “நேத்து நீ என்னை அறைஞ்ச சரண். அதுக்கு இன்னும் ஒரு சாரி கூட கேக்கல. இதுல குக் பண்ணமாட்டேன்னு சொல்ற” மூக்கு விடைக்க கேட்டாள்.
 
“நீ பேசினதுக்கு ஒரு அறையோட விட்டதே தப்பு. ரெண்டு கன்னமும் சிவக்க கொடுத்திருக்கணும்” கண்கள் கோபத்தை தத்தெடுக்க, பற்களை கடித்து சொன்னான்.
 
“ஓ.. என்னை இன்னும் அடிப்பியா சரண்..? ஹஸ்பென்ட்ங்கிற திமிரா? டொமஸ்டிக் வயலன்ஸ்ன்னு கேஸ் தருவேன். இந்தியால என்ன பனிஷ்மெண்ட்ன்னு தெரியும் தானே”
 
“ஹேய், முதல்ல அத போய் கொடுடி. உன் கூட இருக்குறதுக்கு ஜெயில்ல கல்லுடைச்சி களி திண்ணுக்கிறேன்”
 
தன்னோடு இருப்பதை சிறையில் இருப்பதோடு ஒப்பிட்டதில் அவளுக்கு கோபம் கொப்பளிக்க “ஓ.. நீ சமைச்சி தரலைனா நான் கஷ்டப்படுவேன்னு நினைச்சியா. ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன். இல்ல, உன்னைவிட பெட்டர் சர்வன்ட்ட வேலைக்கு வைப்பேன்” என்றாள் ஆங்காரமாய்.
 
“சர்வன்ட்” நான்கு மாதங்களாக ஒன்றாக இருந்தும் சமைத்து போடும் ஒரு வேலைகாரனாக தான் அவளுக்கு தான் தெரிந்திருக்கிறேனா என்று ஏமாற்றமாக கேட்டவன் “ரொம்ப நல்லது. என்னை விட நல்ல சர்வன்ட் வச்சிக்கோ” என்றுவிட்டு அவள் முகத்திற்கு நேராக கதவை அறைந்து சாற்றிவிட்டு சென்றிருந்தான்.
 
 
தொடரும்...
 

   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 3 months ago
Posts: 42
Topic starter  
சாரி டியர்ஸ், அடுத்த எபி கொடுக்க ரொம்ப லேட்டாகி விட்டது. இனிமேல் லேட்டாகாம பார்த்து கொள்கிறேன்..
 
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
This post was modified 2 weeks ago by Nila Sridhar

   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 3 months ago
Posts: 42
Topic starter  
அத்தியாயம் - 10
 
இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை என்பதே இல்லாமல் போனது. வருவின் கரடி பொம்மையும் இப்போதெல்லாம் இரவில் அவள் எப்படி கட்டிப்பிடித்து உறங்குகிறாளோ, அப்படியே இருந்தது. அதிலிருந்தே இதுவரை பொம்மையை தரையில் தள்ளியது சரணின் வேலை என்பதை புரிந்து கொண்டாள்.
 
சரண் சமைப்பதை நிறுத்தியதால் தினமும் உணவு செயலியில் ஆர்டர் செய்து சாப்பிட தொடங்கினாள் வர்ணிகா. சரணின் சமையலுக்கு நாக்கை பழக்கிவிட்டவள், பாதி சாப்பிடுவாள், மீதியை குப்பையில் கொட்டுவாள்.
 
இவ்வாறே சாப்பிட்ட தட்டையும் கழுவாமல், மீதமிருந்த உணவையும் எடுத்து வெளியே போடாமல் வைத்திருக்க, சமையலறையிருந்து துர்நாற்றமே வர தொடங்கிவிட்டது.
 
எதுவானாலும் இனி அந்த வீட்டில் எந்த வேலையும் செய்ய கூடாது என்ற தீர்மானத்துடன் இருந்தான் சரண்.
 
இப்படியே ஒரு வாரம் சென்றிருக்க, அன்றிரவு சரண் வீட்டிற்குள் நுழையும் போது சமையலறையிருந்து தினமும் வரும் வாடை இன்று வரவில்லை. வீடும் சுத்தமாக கூட்டிப் பெருக்கி இருந்தது.
 
படுக்கையறையை கடந்து சென்ற போது, வரு மெத்தையில் கால் மேல் கால் போட்டமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டு இருப்பதை பார்த்தான்.
 
இருந்தும் சமையலறையில் சத்தம் கேட்கவே, வேலைக்கு ஆள் வைத்துவிட்டாள் போல் என்று எண்ணிக் கொண்டே உள்ளே சென்றவனுக்கு பேரதிர்ச்சி.
 
கனி தான் அனைத்தையும் ஒதுக்கி போட்டு பாத்திரங்களை விலக்கி கொண்டிருந்தார். கடமையே கண்ணென இருந்தவரோ மகனை கவனிக்கவில்லை.
 
அங்கே அன்னையை பார்த்த சரணின் நெஞ்சம் துடிக்க, கண்கள் சிவக்க கோபத்தில் தன் சட்டையின் கைகளை மடித்துக் கொண்டே படுக்கையறைக்கு சென்றான்.
 
சரண் உள்ளே வருவதை பார்த்த வரு, அவனை ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு மீண்டும் புத்தகத்தில் தன் பார்வையை செலுத்த, அவளருகில் வந்தவன் கையிலிருந்த புத்தகத்தை தூக்கி தூரம் வீசினான்.
 
அவனது செயலில் அதிர்ந்தவள், கோபத்தில் மூக்கு விடைக்க “வாட் ஆர் யு டூயிங் சரண்?” என்று சத்தமிட, அவளது கையை அழுத்தமாக பிடித்தவன் தரதரவென சமையலறைக்கு இழுத்து வந்தான்.
 
வழியெங்கும் அவள் “வாட் ஆர் யு டூயிங், சரண்? கையை விடு.. வலிக்குது” என்றெல்லாம் கத்தியது அவன் காதில் விழ கூட இல்லை.
 
வருவின் சத்தம் கேட்டு கனி சுதாரிப்பதற்குள், சரண் அவளை சமையலறைக்கே இழுத்து வந்து விட்டிருந்தான்.
 
தான் கண்ட காட்சியில் பதறிவிட்ட கனி “என்ன பண்ற சரண்?” என்று குரலை உயர்த்த..
 
அதேநேரம் வரு “யு ஆர் அட்ராஸியஸ். யு இடியட், மை ஹேண்ட் இஸ் இன் பெயின்” என்று கண்கள் கலங்க..
 
சரணோ “அன்னைக்கு வாங்கினது பத்தல இல்ல. அவங்க என்ன உன் வேலைக்காரியா. எங்க வீட்டு மகாராணிடி” என்று உறுமினான்.
 
அப்போதே வருவிற்கு விஷயம் என்னவென்று புரிய “டிட் ஐ டெல் யு டு டூ திஸ்?” என்று மாமியாரிடம் சீறினாள்.
 
“ஹேய் லண்டன் காரி.. தமிழ் தெரியும் தானே. தமிழ்ல பேசு. படிச்ச படிப்பு யார் கிட்ட எந்த மொழில பேசணும்னு தெரிஞ்சிக்கவும் உதவனும்” அவளிடம் சீறிப் பாய்ந்தான் சரண்.
 
உடனே வரு “நான் சொன்னேனா உங்களை பண்ண சொல்லி?” என்று கனியிடம் கேட்டாள்.
 
உண்மையில், மகனை சமாதானப்படுத்தி அனுப்பியதிலிருந்து அவனிடமிருந்து ஓர் அழைப்பும் வரவில்லை, நேரிலும் வந்து பார்க்கவில்லை என்று அவனை காண வந்த கனி, வீடு இருந்த நிலையை கண்டு தானே அனைத்து வேலையும் எடுத்து போட்டு செய்தார்.
 
பொதுவாக வயதில் பெரியவர்கள் வேலை செய்துக் கொண்டிருந்தால், ஒன்று நாம் வாங்கி செய்யவேண்டும், இல்லை அவர்களையாவது வேண்டாமென்று தடுக்கவேண்டும். வரு இரண்டையும் செய்யவில்லை.
 
படுக்கையறையை கூட்ட வந்த போதும் அவள் அமைதியாக இருந்துவிட்டதே இப்போது தவறாக போய்விட்டது.
 
“பண்றதையும் பண்ணிட்டு அவங்களை கேள்வியா கேக்கற” சரண் அவளிடம் எகிறிக் கொண்டு போக..
 
மகனை தடுத்த கனி “என்ன சரண் நீ, வரு எதுவும் சொல்லல. ரெண்டு பேரும் நாலு இடத்துக்கு போயிட்டு வர்றவங்க. வீட்டுல இருக்குற குப்பையை கொட்ட கூட நேரமில்லனு நானே தான் செஞ்சேன்” என்றார்.
 
உடனே பார் என்று சரணை எரிக்கும் பார்வை வரு பார்த்திருக்க, “நீங்க ஏன்மா இதெல்லாம் செய்யறீங்க. உங்க பையன் வீடு இது. அதுவும் அவன் வாழ்க்கைய வித்து வாங்கினது. நல்லா கால் மேல கால் போட்டு சோபால உட்கார்ந்துட்டு அதிகாரம் செய்யறதை விட்டுட்டு வேலை செஞ்சிட்டு இருக்கீங்க. கிளம்புங்க, நான் உங்களை வீட்டுல விடறேன்” என்று அவளை முறைத்துவிட்டு அன்னையை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
 
அங்கேயே நின்றுவிட்ட வரு தான் “மேனர்ஸ் தெரியாதவன். ஒரு டைமாவது சாரி கேக்கறானா பாரு. ஐ ஹேட் யு சரண்” என்று கத்திக் கொண்டிருந்தாள்
 
அடுத்தநாள் காலை வர்ணிகா நட்சத்திர விடுதியில் பழச்சாறு பருகிக் கொண்டிருந்தாள்.
 
அப்போது “வரு..” என்றொரு குரல் ஒலிக்க, அது வந்த திசை நோக்கி திரும்பி பார்த்தவள் மனோஜ் நின்றிருப்பதை கண்டாள்.
 
அதற்குள் அவனும் அவளருகில் வர, “மனு..” என்று அண்ணனை அணைத்துக் கொண்டாள்.
 
தங்கையின் தலையை வருடி கொடுத்தவனும் “நீ என்மேல கோவமா இருப்பேனு நினைச்சேன். நான் கூப்பிட்டதும் வந்ததுக்கு தேங்க்ஸ்” என்று முறுவலித்தான்.
 
“கோவம் இருக்கு. உன்னால தானே என் லைஃப்பே மாறி போச்சு. எத்தனை டைம் டேட்கிட்ட பேசு, நல்லா திங்க் பண்ணி முடிவெடுனு சொன்னேன். எதையும் கேக்காம கடைசியில நான் சரணை..” என்று சொல்லியிருந்தவள் பாதியில் நிறுத்தி “லீவ் இட்” என்றாள்.
 
“சாரி வரு. என்னால தான் எல்லாம்” என்று மனோஜ் வருத்தப்பட
 
“லீவ் இட்னு சொன்னேன்ல. ஹவ் ஆர் யு மனு?” என்று அண்ணனை நலம் விசாரித்தாள்.
 
“ஐ ஆம் நாட் குட் வரு. டேட் என்னை வீட்டுல சேர்த்துக்கல. ஹி டெர்மினேட்டட் மீ ஃப்ரம் தி ஆபீஸ். என்னோட ஷேர்ஸை கூட எதுவும் செய்யமுடியாத மாதிரி ஹோல்ட் பண்ணி வச்சிருக்கார். நான் இப்போ வெளில ஜாப் போயிட்டு இருக்கேன். மாமாவும் மித்துவ வீட்டுல சேர்த்துக்கல. வி ஆர் லிவ்விங் இன் எ ரெண்டெட் ஹவுஸ் நவ்” என்றான்.
 
ஆம், மைதிலியின் அண்ணனுக்கு எங்கே ரகுவை பகைத்துக் கொண்டால், அவர் மூலமாக தன் தொழிலுக்கு கிடைக்கும் நன்மைகள் நின்றுவிடுமோ என்ற பயத்தில் “முதல்லயே சொல்லிருந்தா நானும் ரகுவுமே உங்க கல்யாணத்தை நடத்தி வச்சிருப்போம். இப்போ ஒரு கல்யாணத்தை நிறுத்திட்டு வந்த உங்களுக்கு இங்க இடமில்ல” என்று மகளையும் மருமகனையும் நிர்தாட்சண்யமாக வீட்டை விட்டு அனுப்பிவிட்டார். மனோஜும் மும்பையிலிருந்து மித்ராவை அழைத்துக் கொண்டு லண்டன் வந்துவிட்டிருந்தான்.
 
அனைத்தையும் கேட்ட வரு “ஃபீல் பண்ணாதே மனு. எல்லாம் சரியாகும்” என்று அண்ணனின் கையை ஆதூரமாய் அழுத்திக் கொடுத்தாள்.
 
“சரி, நீ எப்படி இருக்க? சரண் உன்னை நல்லா பார்த்துக்கிறானா?” என்று தங்கையின் வாழ்க்கையை குறித்து மனோஜ் விசாரிக்க
 
“சரணா.. ஹான் நல்லா பார்த்துக்கிறான்” என்றவள், அவன் நேற்று செய்த செயலை எண்ணி ‘ரோக்’ என்று வாய்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள்.
 
சரண் மீதிருந்த கோபத்தில் தன் அண்ணனுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாதென்று அவன் சொல்லியிருந்ததை மீறியிருந்தாள் வரு. இது தன்னவனிடம் இருந்து தன்னை ஒரேடியாக பிரிக்கும் சக்தி வாய்ந்தது என்பதை அவள் அன்று அறியாமல் போனாள்.
 
இன்னும் இரண்டு நாட்கள் சென்றிருந்தது. அவளாவது ஆர்டர் செய்து சாப்பிடுகிறாள். இந்த பத்து நாட்களாக அவனது உணவு, காலையில் ஒரு டீ, மதியம் ஒரு டீயும் பன்னும், இரவிற்கோ இரண்டு வாழைப்பழமும் தண்ணீரும் மட்டுமே.
 
அவள் அவ்வளவு பேசியதற்கு பிறகு அவள் பணத்தில் சாப்பிட அவனுக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
 
அன்றும் வழியிலேயே இரண்டு வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டு எப்போதும் போல் இரவு தாமதமாகவே வீட்டிற்குள் நுழைந்தான் சரண்.
 
அறைக்குள் நுழையும் போதே குளியலறையில் வர்ணிகா வாந்தி எடுத்துக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. மனம் பதைத்தாலும் அவளை போய் பார்க்கலாமா, வேண்டாமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவளே கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.
 
அவளை பார்க்கவே மிகவும் சோர்வாக தெரிந்தாள். அதற்கு மேலும் என்னவென்று கேட்காமல் தன் வேலையை பார்க்க அவனுக்கு மனம் வரவில்லை.
 
“என்னாச்சு வர்ணிகா, ஏன் வாந்தி எடுக்கிற? உடம்புக்கு எதாவது முடியலயா? மெடிகல்ஸ் எதாவது போகணுமா?” என்று அக்கறையாக கேட்டான்.
 
அவளோ “எல்லாத்துக்கும் நீ தான்டா காரணம்” என்று அவனை முறைத்தாள்.
 
அதை கேட்டவனுக்கு புறக்கை ஏற “இத வெளிய சொல்லாதடி. எல்லாம் என்னை தான் தப்பா நினைப்பாங்க” என்று படப்படத்தவன் “என்னாச்சுன்னு சொல்லு” என்று கனிந்த குரலில் கேட்டான்.
 
“நீ அன்னைக்கு ஒரு பிரியாணி செஞ்சல. அது எனக்கு சாப்பிடணும் போல இருந்துச்சு. அதான் ஆர்டர் பண்ணேன். அவன் எப்படி செஞ்சான்னு தெரியல. இட் வாஸ் வெரி ஸ்பைசி. சாப்பிட்டதுல இருந்து ஃபோர் டைம்ஸ் வாமிட் பண்ணிட்டேன். புட் பாயிசன் ஆயிடுச்சு நினைக்கிறேன் சரண்” என்று பரிதாபமாக சொன்னாள்.
 
அதை கேட்டவனுக்கு ஏனோ சிரிப்பை அடிக்கமுடியாமல் போக, அவன் வாய் பொத்தி சிரித்தான்.
 
“என்ன சரண் சிரிக்கிற?” என்று பாவமாக கேட்டவள், தன் பொம்மையின் மீதே சாய்ந்து விட்டாள்.
 
‘என்ன இவ.. பொம்மையவே தலைகாணி ஆக்கி சாஞ்சிட்டா’ என்று நெற்றியை தேய்த்தவன், சமையலறைக்கு சென்று குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்தால், அங்கே பழமோ, பாலோ எதுவும் இல்லை.
 
அறைக்கு வந்தவன் “வர்ணிகா” என்று அவளை அழைக்க, வர்ணிகா இப்போது கண்களை கூட திறக்கவில்லை. அவளை தன் மடியில் போட்டுக்கொண்டு அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்து “வர்ணி.. வர்ணி..” என்று அவள் கன்னத்தில் தவிப்போடு தட்ட, கண்களை திறந்தவள்
 
“என்..னா..ல.. முடி..ய..ல ச..ர..ண்” என்றுவிட்டு மீண்டும் மயக்கத்திற்கு சென்றுவிட்டாள்.
 
அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன் “ராங்கி.. உன் திமிரு எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாரு” என்று அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு, அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
 
அங்கே வர்ணிகாவிற்கு மருத்துவம் பார்த்து, உடல் வலு பெற சலைனும் மருந்துகளும் ஏற்றினர். அன்றிரவு அவளை அங்கேயே கண்காணிப்பில் வைத்து விட, சரண் வெளியே தவிப்புடன் அமர்ந்திருந்தான்.
 
அடுத்தநாள் காலை மருத்துவர் வந்து பார்த்துவிட்டு அவளை வீட்டிற்கு செல்லலாம் என்று சொல்ல, இருவரும் வீட்டிற்கு கிளம்பினர். சரண் தான் வர்ணிகாவின் காரை இயக்க, அவளோ சோர்வாக அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
 
“அதான் என்னை விட நல்ல சர்வன்ட்டா வச்சிக்கிறேன்னு சொன்னியே, வச்சிக்க வேண்டியது தானே? எதுக்கு இப்படி உடம்பை கெடுத்துகிட்ட?” எரிச்சலின் மிகுதியில் கேட்டான் சரண். தன் உடம்பை இப்படி கெடுத்துக் கொண்டாளே என்ற கோபம் அவனுக்கு.
 
“நீதான் என்னை நல்லா பார்த்துக்கிட்ட. எனக்கு என்ன வேணும்னு நான் சொல்லாமலே உனக்கு தெரியும் சரண். அப்புறம் ஏன் குக் பண்ணமாட்டேன்னு சொன்ன. அதான் வெளியில சாப்பிட்டேன்” என்றவள் ஜன்னல் பக்கம் திரும்பி கைகளை கட்டிக் கொண்டாள்.
 
வண்டியை ஓரம் நிறுத்தியவன் “புருசன்னு பார்க்கல. பரவாயில்ல, சொல்லப்போனா நானும் அத விரும்பல. ஏன் ப்ரண்ட்டா கூட வேண்டாம். அட்லீஸ்ட், ஒரே ரூமை ஷேர் பண்ற ஒரு ரூம்மெட்டா பார்த்திருக்கலாம். ஆனா, உனக்கு நான் வெறும் சர்வன்ட்டா தானே தெரிஞ்சேன்” என்று இறுக்கமாக கேட்டாலும் அவனது குரலில் அத்தனை வலி.
 
அதில் தன் தலை தானாக கவிழ “ஐ ஆம் சாரி சரண். அன்னைக்கு நீ என்கூட இருக்குறதுக்கு ப்ரிசன்னே பெட்டர்னு சொன்னியா. அதான் நானும் கோவத்துல அப்படி பேசிட்டேன். அப்புறம், உன் மாம்மயும் அப்படி பேசியிருக்க கூடாது. நான் அவங்க ஆக்குபேஷனை தான் சொன்னேன். அது தப்பாகும்னு எனக்கு தெரியாது. ஒன்டே அவங்களை மீட் பண்றப்போ சாரி கேட்டுடறேன்..” அவனிடம் மன்னிப்பை வேண்டி சொன்னாள்.
 
“ப்ச்..” என்று அதிருப்தியாய் தலையாட்டியவன் “யாருடைய உயிரோ கிளில இருக்க மாதிரி இப்ப எங்க அம்மா உயிர், வருல இருக்கு. வரு என்ன சாப்பிடும், வருவுக்கு எப்படி இங்க செட்டாகும், வரு எப்படி தனியா இருக்கும்னு எப்படியாவது என்னை உங்கிட்ட அனுப்பி வச்சிடுவாங்க” என்று விரக்தியாய் புன்னகைத்தவன்..
 
“உனக்கு ஒண்ணு தெரியுமா வர்ணி.. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவங்க உனக்கு அத்தை இல்ல. நீ பொறந்ததுல இருந்தே அவங்க உன் அத்தை.. அவங்களுக்கு நான், எங்க அப்பா, அக்கா எல்லாரையும் விட ஒருத்தர் மேல பாசம் அதிகம். வேற யாரும் இல்ல, அது உங்க அப்பா தான். அந்த பாசத்தை மதிச்சு நடந்தது தான்” தன்னையும் அவளையும் மாற்றி மாற்றி காட்டி “நம்ப கல்யாணம்” என்றதும் அவள் அமைதியாக அவனையே பார்த்திருக்க..
 
“போய் சாரி கேட்கறேன்னு எதுவும் பண்ணி வைக்காத. வெளியில சொல்லிக்கலனாலும் நம்ப அண்ணன் பொண்ணு நம்பள இப்படி ஒரு வார்த்தை சொல்லிடுச்சேனு வருத்தப்படுவாங்க” என்றும் சொன்னான்.
 
உடன் “நேத்தே உங்கிட்ட பேசணும் தான் இருந்தேன். அதுக்குள்ள உனக்கு உடம்பு முடியாம போய்டுச்சு. இனி நானே சமைக்கிறேன்” என்றதும் அவள் முகம் மலர “அப்போ இனி நீயே எனக்கு காரம் இல்லாம பிரியாணி குக் பண்ணித்தருவியா சரண்.. அவ்.. இட் வாஸ் யம்மி” என்று நாக்கால் உதட்டை எச்சில் செய்து கண்களை மூடி மெய் மறக்க..
 
“இரு நான் பேசிடுறேன்” என்றவனை அவள் நிமிர்ந்து பார்க்க “அதே நேரம் நீயும் எனக்கு சும்மா சாப்பாடு போட வேண்டாம், நானும் உனக்கு சும்மா சமைச்சி போட வேண்டாம். உழைச்சி சாப்பிடற எந்த வேலையும் தப்பில்ல. இனி மாசா மாசம் எனக்கு போடுற சாப்பாட்டுக்கு போக மிச்ச பணம் என்னோட சம்பளம். அப்புறம் எனக்கு ஒரு ரெண்டு லட்ச ரூபாய் கடனா தர்றீயா?” என்றதும் அவள் அவனை கேள்வியாக பார்க்க..
 
“அது, சுசி கல்யாணத்துக்குனு அப்பா ஒரு இடத்துல கடன் வாங்கியிருந்தார். அது மீட்டர் வட்டின்னு இப்ப தான் தெரிஞ்சது” என்றதும் அவள் அப்படியென்றால் என்னவென்று தெரியாமல் விழி விரிக்க, “இன்ட்ரெஸ்ட் ரொம்ப அதிகம். அதான் நீ பணம் தந்தா, சமைக்கிறதுக்கு எனக்கு சம்பளம் தருவயில்ல, அத அப்படியே எடுத்துக்கோ.. அப்புறம் நான் வேலைக்கு போய் சம்பாதிக்கறதையும் உங்கிட்டயே தந்திடுறேன்” என்றான்.
 
அவனை ஒரு மாதிரி பார்த்தவள் “டாடி தான் அன்னைக்கே மணி தரேன்னு சொன்னார்ல சரண். அத ஏன் வேண்டாம்னு சொன்னீங்க” என்று வினவினாள்.
 
“உங்க அப்பா காசு எனக்கு வேண்டாம். நீ தரேனா சொல்லு, உடம்பு சரியானதும் உனக்கு பிரியாணி செஞ்சித்தரேன்” என்று ஒப்பந்தம் பேசினான். அதற்கு மேலும் அவள் இல்லையென்றா சொல்வாள். சரியென்று தலையாட்டிவிட்டாள்.
 
சரண் வேலையில் சேர்ந்து ஒருமாதமாகி விட்டது. இது அவன் படிப்பிற்கு ஏற்ற வேலையில்லை. இனியும் ஏற்ற வேலைக்கு தான் செல்வேன் என்று காத்திருப்பது முட்டாள் தனம் என்பதை உணர்ந்தவன், மாதம் பதினைந்தாயிரத்திற்கு ஒரு வேலையில் சேர்ந்துவிட்டான்.
 
எங்கே சுசியிடம் சொன்னால் அவள் திட்டுவாள் என்று சொல்லாமலே இருந்துவிட்டான். இருந்தும் அதை கண்டு பிடித்துவிட்டவள், அவனை கடிய “அவமானமா இருக்கு சுசி. காசில்லாதவனுக்கு எதுக்கு கல்யாணம்” என்று மேம்போக்காக பதிலளித்தவன், அவளுக்கு தெரியாமல் தன் கண்ணின் ஓரம் நின்ற கண்ணீரையும் துடைத்தான்.
 
தனக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனின் முன்பு வந்த சுசி “வருவுக்கும் உனக்கும் எதாவது பிரச்சனையா?” என்று அவன் கன்னம் தாங்கி கேட்டாள்.
 
“அதெல்லாம் இல்ல. அவளும் பாவம் சுசி. எப்படியோ வாழணும்னு நினைச்சிருப்பா. இப்போ அவளுக்கு பிடிக்காத இடத்துல, அவ தகுதிக்கு நிகரே இல்லாத என் கூட இருக்கா” விட்டேற்றியாய் சொன்னவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
 
தன் முதல் மாத சம்பளத்தில் அன்னைக்கு நாலாயிரத்தில் பட்டு புடவையும், தந்தைக்கு கைக்கடிகாரமும், சுசிக்கு நல்ல தரத்தில் டிஷ்யூ சேலையும் எடுத்திருந்தான் சரண்.
 
அனைத்தையும் எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றவன் “அம்மா, இது உங்களுக்கு.. பிடிச்சிருக்கா..? இது அப்பாவுக்கு.. அப்புறம் இது சுசிக்கு.. நான் கொடுத்தா, ஏன்டா இந்த வேலைக்கு போனனு காதுல ரத்தம் வரும் அளவுக்கு பேசும். நீங்களே கொடுத்திடுங்க” என்றான்.
 
கை கடிகாரத்தை ஆசையாக கையில் கட்டிக் கொண்ட பாலன் மகனை பெருமையாக பார்த்திருக்க, கனியும் தன் புடவையை தோளில் போட்டு பார்த்து மகிழ்ந்திருந்தார்.
 
இருந்தும் “எதுக்கு சரண் இவ்ளோ விலைல?” என்றும் கேட்க, அவரது மகன் அவரை சமாதானம் செய்கிறேனென்று செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
 
“ஆமா, வருவுக்கு என்ன வாங்கின?” என்று கனி கேட்ட போதே, வர்ணிகாவிற்கு எதுவும் வாங்காதது சரணின் புத்திக்கு எட்டியது.
 
மகனின் முகத்தை வைத்தே அதை புரிந்த கனியும் “இந்தா.. இத கொண்டு போய் கொடு” என்று தன் புடவையை மகனிடம் நீட்ட
 
‘ஆமா, அவ கட்டிட்டாலும்’ என்றெண்ணி சிரித்துக் கொண்டவன் “நான் காசு வச்சிருக்கேன் ம்மா. அவளுக்கு போறப்போ வாங்கிட்டு போறேன்” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
 
வெளியே வந்தவன் தனக்கு வேலை கிடைத்துவிட்டதை வர்ணியிடம் சொன்ன போது நிகழ்ந்ததை நினைவு கூர்ந்தான்.
 
“கங்கிராட்ஸ் சரண், யு மேட் இட்” என்று மனதிலிருந்து மகிழ்ந்து கை கொடுத்தவள் “சரி ட்ரீட் எப்போ?” என்றும் கேட்டாள். அவனோ ட்ரீட்டா என்று விழிக்க “நான் கொடுத்தேன்ல” என்று முறைத்தாள்.
 
“நீ பணக்காரி. வேலை கிடைச்சதுமே ட்ரீட் வைப்ப. நான் அப்படியா. உங்கிட்ட வாங்கின பணத்தை கொடுக்க வேண்டாம்” என்று நியாயம் பேசினான்.
 
அவள் ஆசையாக கேட்டும் அவளுக்கு ஒன்றும் வாங்கி தரவில்லையே என்று தோன்ற, இம்முறை அவளுக்கு சிறந்த பரிசையே வாங்க கடைக்கு சென்றவன், தன் வங்கியின் செயலியை திறந்து பார்க்க, அதில் தன் கை செலவிற்கென்று சிறிது பணத்தை எடுத்து வைத்துவிட்டு பார்த்தால், ஐந்தாயிரமே மீதமிருந்தது. அதை அவளிடம் வாங்கிய கடனிற்கு கொடுக்க வேண்டுமல்லவா?
 
மானமா? காதலா? என்று பார்த்தால் மானமே பெரிதாக பட, கையிலிருந்த சில்லறை பணத்தில் அவளுக்கும் அந்த பரிசுகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
 
 
தொடரும்...

   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 3 months ago
Posts: 42
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 3 months ago
Posts: 42
Topic starter  
அத்தியாயம் - 11
 
வீட்டிற்கு வந்த சரண் சோபாவில் அமர்ந்திருந்த வர்ணிகாவின் முன் வந்து நிற்க, அவள் என்ன என்பதாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
 
“அது சேலரி போட்டாங்க. அதான் என் முதல் மாச சம்பளத்துல உனக்கு எதாவது வாங்கி தரலாம்னு” என்றவன் தன் பையிலிருந்து ஒரு ஜோடி தோடும், இரண்டு முழ மல்லிகைப்பூவையும் எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
 
அதை அவனிடமிருந்து வாங்கியவள், இலையில் சுற்றியிருந்த பூவை சோபாவில் வைத்து விட்டு, தோடை கையில் எடுத்து பார்த்தவள் “இட்ஸ் பியூட்டிஃபுல் சரண்..” என்று மலர்ந்த முகமாக சொன்னதோடு, தான் அணிந்திருந்த தோடை கழற்றி டீப்பாயின் மீது வைத்துவிட்டு அவன் வாங்கி கொடுத்ததை அணிந்துக் கொண்டாள்.
 
“ஹவ் இஸ் இட், சரண்?” என்று கேட்டவளுக்கு அவன் தன்னை மறந்து நன்றாக இருக்கிறது என்று தலையாட்ட, அவளும் அது தனக்கு எப்படி இருக்கிறதென்று பார்க்க ஆசையாக படுக்கையறைக்கு போனாள்.
 
அப்போதே அவள் அணிந்திருந்த தோடை இங்கேயே விட்டு சென்றதை கவனித்தவன் “வர்ணி.. இங்க பாரு, கம்மலை விட்டுட்டு போற. வெள்ளி விக்கிற விலைக்கு எடுத்து பத்திரமா வை” என்று குரல் கொடுத்தான்.
 
அதை கேட்டவள் அவனை திரும்பி பார்த்து “என்ன சரண் நீ, அது ஒயிட் கோல்ட். சேஃப்பா எடுத்து வை” என்றுவிட்டு தனக்கந்த தோடு எப்படி இருக்கிறதென்று பார்க்க ஆர்வமாக அறைக்குள் நுழைந்தாள்.
 
‘தங்கமா இது?’ என்று அப்போதே சரண் அதை கையில் ஏந்தி பார்க்க, வெள்ளையாக எல்லாம் தங்கம் வருகிறதா என்று ஆச்சர்யப்பட்டுப் போனான். அதோடு அதிலிருக்கும் ஒற்றை வெள்ளை கல்லும் வைரமாக தான் இருக்க கூடும் என்றும் அனுமானித்தான்.
 
தான் வாங்கி தந்த ஐம்பது ரூபாய் பொருளுக்காக விலையுயர்ந்த பொன் கம்மலை இங்கே கழற்றி வைத்துவிட்டு சென்றிருப்பவளை எண்ணி அவன் மனம் குளிர்ந்துப் போனது.
 
அதன் பின்னே அங்கிருந்த பூவை பார்த்தவன் “அவளுக்கு பூ வாங்கினது உன் தப்பு” என்று தலையை இடதும் வலதுமாய் ஆட்டி சிரித்துக் கொண்டவன், தானும் குளிக்க அறைக்குள் சென்றான்.
 
சரண் குளித்து முடித்து இடையில் துண்டோடு வெளியே வர, அவனிடம் வந்த வரு “இத வச்சு விடேன் சரண்” என்று தன் கையிலிருந்த பூவை அவனிடம் கொடுத்துவிட்டு, தன் சுருண்ட அடர் கேசத்தை காட்டி திரும்பி நின்றாள்.
 
இதை சற்றும் எதிர்பாராதவன் தடதடத்த மனதோடு அதை வாங்கினாலும் வெளியில் எதையும் காட்டி கொள்ளாது “ஹேர்பின் எங்க?” என்று அவள் முன் கையை நீட்டினான்.
 
“ஐயோ.. ஐ டோன்ட் ஹேவ் இட், சரண்” என்றாள் பாவமாக.
 
“அப்புறம் தலையில ஆணி அடிச்சா மாட்ட முடியும்” என்று தலையை அதிருப்தியாக ஆட்டிக் கொண்டவன், “இரு, வரேன்” என்றுவிட்டு தன் பையிலிருந்து மூன்று ஹேர்பின்களை எடுத்து வந்து அவளிடம் காட்டி,
 
“பூ வாங்கிறப்பவே அந்த பாட்டி ஹேர்பின் வச்சிருக்கியான்னு கேட்டு கொடுத்து விட்டாங்க” என்று புன்னகைக்கவும் செய்தான்.
 
உடனே சரியென்று தலையாட்டி விட்டு வர்ணிகா மீண்டும் திரும்பி நிற்க, அவள் கேசத்தை பார்த்தவனுக்கு அவளது தலைவிரி கோலத்தை கண்டு யோசனையாய் போனது. இதில் எப்படி பூ சூட்டமுடியும் என்று சிந்தித்தவன், பூவை கட்டிலின் மீது வைத்துவிட்டு அவளுக்கு ஜடை போட எண்ணினான்.
 
அப்போது “வச்சிட்டியா சரண்” என்று அவள் கேட்க “எங்க வைக்கிறது” என்று அதட்டியவன் “முதல்ல தலையை கட்டனும். அதான், மேல் முடியை எடுத்து பின்னல் போட்டுட்டு இருக்கேன்” என்றான்.
 
அவளோ சரியென்பது போல் அமைதி காக்க, அவளது பட்டு கூந்தலில் கை வைத்தவனுக்கு உணர்ச்சி தன் வசத்தில் இல்லை. இங்கேயே, இப்படியே குடி கொண்டு விடலாமா என்று கிறங்கிப் போனான். அவளது காதருகே இருக்கும் கூந்தலை விலக்கிவிட்டு, அங்கே ஒரு முத்தம் வைக்கவேண்டும் என்று மனம் தூண்டியது. அவள் பின்கழுத்தின் பூனைமுடிகளை ஊதி நாட்டியமாட வைக்க அவன் துடித்தான்.
 
இப்படி எண்ணற்ற எண்ணங்களின் பிடியில் அவன் சிக்கி தவிக்க, அது எதையும் அறியாதவளோ “இவ்ளோ நேரம் என்னடா பண்ற?” என்று கேட்டாள்.
 
“அதுவா.. அது.. பெண்களோட கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் இருக்கானு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்” என்று தன் எண்ணங்கள் அனைத்தையும் அவளை சுற்றியே வைத்திருந்தவன் அவள் மீது பித்தம் கொண்டு பிதற்றினான்.
 
அதை கேட்டவள் சட்டென்று அவன் புறம் திரும்பி “சரண்..” என்று அவனை முறைக்க
 
“அது.. அது ஒரு செய்யுள்.. நீ துரையம்மால. உனக்கு தெரியாது. திரும்பு திரும்பு பூ வைக்கணும்” என்று சொல்லியும் அவள் திரும்பாமல் அவனை முறைத்து நிற்க, “திரும்பு டி, ப்ளீஸ்” என்று தானே அவளை திருப்பினான்.
 
பூவை தலையில் சூட்டியவன் அதை அப்படியே பார்த்திருக்க, அப்போது அனிச்சை செயலாய் வருவும் தலையை ஆட்டியதில் பூவோடு சேர்ந்து அவள் சுருள் கேசமும் அசைந்தாட, அதில் மீண்டும் சிறைப்பட்டு போனவன் அவளை இன்னும் நெருங்கி “என்ன ஷாம்பு யூஸ் பண்ற வர்ணி?” என்று கரைந்த குரலில் கேட்டான்.
 
அவன் பேச்சு செல்லும் திசை புரிந்தவள் அவனை சத்தமிட வேகமாக திரும்ப, அது அவளால் முடியாமல் போனது. அவன் தான் அவளை பின்னிருந்து அணைத்திருந்தானே.
 
அவனது கிடுக்கு பிடியிலிருந்து விலக முயற்சித்தவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் “உன் சுருட்டை முடியால என்னை வாரி சுருட்டிக்கிறடி” என்று அங்கே ஓர் முத்தமும் வைத்தான்.
 
அதுவரை எதிர்ப்புகளை காட்டிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது தன் ஹார்மோன்கள் அதன் வேலைகளை காட்ட துவங்க, அவளும் அதை அனுபவிக்க தொடங்கியிருந்தாள். அவன் அணைப்பில் இருந்தபடியே திரும்பி அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அத்தோடு அவன் வெற்று மார்பில் ஒரு முத்தமும் வைத்துவிட்டு அவனை இன்னும் இன்னும் இறுக அணைத்தாள்.
 
இந்நேரம் இருவருக்கும் தங்களை தவிர வேறெதுவும் நினைவில் இல்லை. எத்தனை நேரம் நிமிடங்களை நொடிகளாய் கரைத்து அப்படியே இருந்தார்கள் என்று தெரியவில்லை.
 
அவன் வாசத்தை உள்ளிழுத்து தன் நுரையீரல் வரை நிரப்பியிருந்தவள் “நீ எந்த பாடி லோஷன் யூஸ் பண்றடா? செம்ம ஸ்மெல்” என்று கிணத்திற்குள் இருந்து வரும் சத்தம் போல் அவள் குரல் அவன் மார்பிற்குள் இருந்து வெளிவந்தது.
 
அப்போதே அவர்கள் இருக்கும் நிலையை உணர்ந்த சரண் நொடியும் தாமதிக்காது அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தியிருந்தான். அவளோ ஒன்றும் புரியாமல் அவனை திகைத்துப் பார்த்திருக்க, தன் இரவு உடையை எடுத்து அணிந்தவன் அங்கிருந்து விறுவிறுவென சென்றுவிட்டான்.
தன்னை கட்டுக்குள் கொண்டு வர சிறிது நேரம் மொட்டை மாடியில் நடை பயின்றவன் கீழே இறங்கி வர, அங்கே வர்ணிகா மெத்தையில் கால் நீட்டி அமர்ந்திருந்தாள்.
 
“இரு டின்னர் பண்ணிடுறேன்” அவள் முகத்தையும் பார்க்காது சொன்னவன் ‘இனி இவளுக்கு பூவே வாங்கி கொடுக்க கூடாது. பேய் புகுந்தா மாதிரி என்னென்னமோ பண்ணிட்டேன்’ என்று உதட்டை குவித்து மூச்சை வெளியிட்டவன், தலையை வேகமாக ஆட்டிக் கொண்டு அங்கிருந்து நகர போனான்.
 
அதற்குள் கட்டிலில் இருந்து வேகமாக இறங்கியவள், அவனிடம் ஓடிவந்து “சரண், இந்தமாதிரி ஃப்ரீக்வன்ட்டா வாங்கிட்டு வர்றீயா” என்று தன் தலையில் அவன் சூடியிருந்த பூவை காட்டி கேட்டாள்.
 
அதில் தன் கண்களை மூடி திறந்தவன் “முதல் மாசம் சம்பளம் வாங்கினதுக்கு தான் வாங்கி தந்தேன். அடிக்கடி வாங்கிட்டு வரணுமாம். போடி” என்றுவிட்டு சமையலறைக்கு சென்றிருந்தான்.
 
உண்மையில் அவளிடம் அப்படி நடந்து கொண்டதில் தன்னிடமே அவனுக்கு கோபம். அதை அவளிடம் காட்டியிருந்தான்.
 
இருவருக்குள்ளும் காதல் இருந்தது. அவனோ, தனக்கு அது இப்போது இல்லை என்று வீம்பு பிடித்துக் கொண்டிருந்தான். அவளோ, தான் காதல் வயப்பட்டுவிட்டோம் என்பதை உணராமல் இருந்தாள்.
 
அன்றிலிருந்து சரண் வர்ணிகாவிடம் இணக்கம் காட்டுவதை நிறுத்தியிருந்தான். பேச்சுகள் இருந்தாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே முடித்துக் கொள்ள தொடங்கினான்.
 
இப்படியே ஒரு மாதம் சென்றிருக்க, வருவிற்கு தன் காதலை உணரும் நாளும் வந்தது. வழக்கமாக இரவு ஒன்பதரை மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து, அவளுக்கு இரவு உணவை தயார் செய்து கொடுப்பவன் இன்று பதினோரு மணியாகியும் வரவில்லை.
 
அவன் எண்ணுக்கு அழைத்தால் அவனது கைபேசி அணைக்கப்பட்டுள்ளதாக தகவல் சொன்னது.
 
எங்கே, என்னவென்று தேடுவாள். இரவெல்லாம் “சரண். எங்க போன நீ” என்று கவலையே சொரூபமாக தன் கரடி பொம்மையை அணைத்து பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தாள். 
 
அப்படியே விடிந்தும் விட, உறக்கமென்பதே இல்லாமல் அன்றைய இரவை கழித்திருந்தாள் வர்ணிகா. கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தவளுக்கு ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்துப் பார்க்க, சரண் தான் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
 
அவன் வந்துவிட்டான் என்பதை தவிர வேறெதுவும் மனதில் பதியாமல் போக, “எங்க போன சரண்? நான் பயந்துட்டேன் தெரியுமா” என்று படப்படத்தவள், அவன் சிறிதும் எதிர்பார்க்காத வண்ணம் ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டாள்.
 
“என்ன சரண் ஆச்சு, நான் எந்த தப்பும் பண்ணலயே? அப்புறம் ஏன் என்னை விட்டுட்டு உன் அம்மா வீட்டுக்கு போன? ஃபோன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. உன்னை உங்க வீட்டுல இருந்து கூட்டிட்டு வந்திடலாம்னு கிளம்பிட்டேன். ஆனா, எனக்கு அட்ரஸ் தெரியல. அதான் என்ன பண்றதுனு யோசிச்சிட்டு இருந்தேன்” என்றும் சொல்ல..
 
“புருஷன் வீட்டுக்கு அட்ரஸ் தெரியாத ஒரே பொண்டாட்டி நீ தான்” உணர்ச்சிகள் துடைத்த குரலில் சொன்னவன் “நான் எங்க அம்மா வீட்டுக்கு போனேன்? முதல்ல உன் மாமியார் என்னை அங்க தங்க விட்டிடுவாங்களா. எதாவது சொல்லி துரத்தி விட்ருவாங்க” என்றான் விரக்தியாக.
 
“ஓ, அப்போ ப்ரண்ட் வீட்டுக்கு போயிருந்தியா.. சொல்லிட்டு போயிருக்கலாம்ல”
 
“ப்ச்.. ப்ரண்ட் வீட்டுக்கும் போகல. நான் ஆபீஸ் போயிருந்தேன் வர்ணி” என்றான்.
 
“ஆபீஸா.. எதாவது க்ரிட்டிகல் இஷ்யூவா?”
 
“ஹேய், இந்த மாசம் என்னோட வேலையே நைட் தான்” என்று அவன் சொன்ன நொடி அவள் கண்களில் களுக்கென்று கண்ணீர் நின்றுவிட்டது.
 
“என்ன சொல்ற சரண், நைட் ஷிப்ட்டா..? ஈவ்னிங் வீட்டுல இருந்ததை பார்த்துட்டு உனக்கு இன்னைக்கு வீக் ஆஃப்னு தான நினைச்சேன்” என்றவள் அவனிடம் சொல்லாமல் விட்ட வார்த்தைகள் ‘ஒன் மந்த் நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் சரண்’ அதை அவனை ஏக்கமாக பார்த்து தன் மனதில் சொல்லிக் கொண்டாள்.
 
அவனுக்கோ வேலைக்கு சென்று வந்த அசதி. “உள்ள வா வர்ணி.. பால் வேணுமா, டிபன் சாப்பிடுறியா? செஞ்சி கொடுத்துட்டு போய் படுப்பேன். ரொம்ப டயர்ட்டா இருக்கு. தூக்கம் வேற கண்ணை கட்டுது” என்றவன், தன் வேலையை பார்க்க சென்றுவிட கோபத்தில் கொந்தளித்த வர்ணிகா..
 
“ஆமா, நைட்ல இருந்து சாப்பிடல.. இப்போ வந்து சீன் போடறான்” என்று அவனுக்கு கேட்கவேண்டும் என்றே சத்தமாக முணுமுணுத்தாள்.
 
“ஏன் சாப்பிடல.. அதுக்கு தான் கிச்சன் பக்கம் சும்மாவாவது போகணும்னு சொல்றது. எல்லாத்தையும் செஞ்சி பிரிட்ஜ்ல வச்சிட்டு, நைட் அவேன்ல சூடு பண்ணி சாப்பிடுன்னு நோட் எழுதி வச்சிருந்தேன்” என்றான் புருவம் உயர்த்தி.
 
“சரி சரி.. உனக்கு என்மேல அக்கறைனு புரியுது” என்றவள் ‘எனக்கும் உன்மேல லவ்னு புரிஞ்சிடுச்சு சரண்’ என்று தனக்குள்ளேயே சொல்லி சிரித்துக் கொண்டாள்.
 
அன்று சரணுக்கு வார விடுமுறை. பெரும்பாலானோருக்கு சனி, ஞாயிறு தான் விடுமுறையாக இருக்கும். ஆனால் இது போன்ற சேவை பிரிவில் வேலை செய்பவர்களுக்கு 24*7 எனப்படும் ஏழு நாட்களும், இருபத்திநான்கு மணிநேரமும் சேவைகளை தொடரவேண்டும். அதனால் வாரத்தில் ஏதாவது இரண்டு நாட்கள் விடுமுறை கொடுப்பார்கள். அப்படி தான் சரணுக்கும் அந்த வாரத்தின் செவ்வாய் மற்றும் புதன் விடுமுறை.
 
விடுமுறையன்று ஓய்வெடுக்காமல் தன் மடிக்கணினியை திறந்து வைத்துக் கொண்டு எதையோ எண்ணி மனம் உழன்றுக் கொண்டிருந்த சரணிடம் வந்த வர்ணிகா “ஏன் சரண் டல்லா இருக்க? இன்னைக்கு உனக்கு வீக் ஆஃப் தான, அப்புறம் ஒர்க் பண்ணிட்டு இருக்க” அவனை புரிந்து கேட்க, அவளை சட்டென திரும்பி பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் தன் மடிக்கணினியில் பார்வையை செலுத்தினான்.
 
முன்பிருந்த வர்ணிகாவாக இருந்திருந்தால் சிறிது நேரம் கேட்டுவிட்டு தன் வேலையை பார்க்க சென்றிருப்பாள். இப்போதோ அவன் மனதை படிக்க தொடங்கியிருந்தாள். அவனுக்கு ஏதோ பிரச்சனை என்பதை அவன் முகத்திலிருந்தே படித்திருந்தவள், அவனருகில் அமர்ந்து அவன் கையை எடுத்து தன் விரல்களுக்குள் கோர்த்து “என்னாச்சு சரண். எனி ப்ராப்ளம்.? ஃபீல் ஃப்ரீ டூ ஷேர்” என்றாள்.
 
அவனுக்கும் இது போன்ற ஆறுதல் இப்போது தேவைப்பட்டதால் “அது.. இன்னைக்கு மேனேஜர் கூப்பிட்டு ரொம்ப திட்டிட்டார்” என நடந்த அனைத்தையும் கூறினான்.
 
தினமும் செயலியில் வரும் வினவல்களை ஏற்று அவர்கள் கேட்பதற்கு பதில் அனுப்புவது தான் சரணின் வேலை. சில சமயம் உடனடியாக பதில் கொடுக்க முடியவில்லை என்றால் அவர்களது மின்னஞ்சல் முகவரியை வாங்கிக் கொண்டு கேட்ட தகவல்களை மின்னஞ்சலாக அனுப்பவேண்டும். இப்படி சரண் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு வாடிக்கையாளரிடம் இருந்து புகார்கள் வந்திருந்தது. அதுவும் காலை மற்றும் மதிய நேர வேலையை விட இரவு நேரத்தில் பளு அதிகமாகவே இருக்க, அதன் காரணமாக நிறைய புகார்கள் சரணின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க அவனது மேலாளர் அவனை அழைத்து எச்சரித்திருந்தார். இப்படியே சென்றால் வேலை போகும் அபாயமும் இருந்தது.
 
சரண் தான் அனுப்பிய மின்னஞ்சல்களை அவளிடம் காட்டினான். அதை படித்து பார்த்தவள் “என்ன சரண் இப்படி மெயில் அனுப்பியிருக்க. நான் மட்டும் உன் மேனேஜரா இருந்திருந்தா வார்ன் பண்ணிட்டு இருக்கமாட்டேன், ஃபையர் பண்ணிருப்பேன்” என்றாள் நிர்தாட்சண்யமாய்.
 
அதை கேட்டவன் கோபமாக “உங்கிட்ட சொன்னது என் தப்பு” என்றான்.
 
அவளோ “ஹேய் சாரி சரண். நீ அனுப்பின மெயில்ஸ் அப்படி தான் இருக்கு. இங்கிலீஷ்ல ஒரு மெயில் கம்போஸ் பண்ண தெரியாது உனக்கு. ஃபுல்லா கிராமர் மிஸ்டேக். ஒன்னு ரெண்டு இடத்துல ஸ்பெல்லிங் மிஸ்டேக்கும் இருக்கு” என்று நக்கிரன் போல் குறை கூறினாள்.
 
“நான் என்ன உன்னை மாதிரி லண்டன்ல படிச்சவனா. இங்க நான் டுவெல்த் வரைக்கும் தமிழ் மீடியத்துல தான் படிச்சேன். காலேஜ்ல தான் இங்கிலீஷே. அதுலயும் எப்படியோ மனப்பாடம் பண்ணி எழுதிட்டேன். ஜாப் இன்டர்வியூ போனப்போ தான் மாட்டிகிட்டேன். என்னால ஒரு இன்டர்வியூலயும் வேலை வாங்க முடியல. சரி இப்போ இருக்க வேலையாவது நிலைக்கும்னு பார்த்தேன். அதுவும் இப்போவோ அப்போவோ ஊசலாடிட்டு இருக்கு” என்று விட்டேற்றியாக சொன்னான்.
 
அவனது கவலை தன்னையும் பாதிக்க, அவன் கன்னம் பற்றி “ஹ்ம்ம்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல சரண். இங்கிலீஷ் தானே, வி கேன் லேர்ன் இட்” என்று ஆதூரமாய் சொன்னாள்.
 
“அது உனக்கு. எனக்கு சுட்டு போட்டாலும் வராது. உனக்கு புரியாது வர்ணி.. தமிழ் பேசற தான். அதுக்காக எழுத சொன்னா திணறுவ தானே. அப்படி தான் எனக்கும் இங்கிலீஷ்” என்றான்.
 
“எனக்கு தமிழ் எழுத தெரியாதுன்னு உங்கிட்ட சொன்னேனா. நான் தமிழ்ல எழுதுவேன், பேசுவேன், படிப்பேன். யு நோ, கல்கியோட எல்லாம் புக்ஸ்ஸும் மை ஃபேவரேட். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் எல்லாம் எத்தனை டைம் படிச்சிருக்கேன் தெரியுமா. ஐ லவ் ரீடிங் தமிழ் நாவல்ஸ்” என்று அவள் ஆர்வமாக சொல்ல, அவன் வாய் பிளந்துக் கேட்டிருந்தான்.
 
“லண்டன்ல நாங்க தமிழ் சங்கத்துல மெம்பர்ஸ். நான், மனு, டேட்னு எல்லாம் ஸ்பீச் கொடுத்திருக்கோம்” என்றதும் “ஓ.. பட்டிமன்ற கோஷ்ட்டியா” என்று தன்னை மீறி அவனுக்கு நக்கல் வெளிப்பட்டது. அவன் மனநிலை மாறியதே போதும் என்றெண்ணியவளும் அதை பெரிதுப்படுத்தி கொள்ளவில்லை.
 
அதோடு “நான் கூட நம்ப முனியம்மா ஆயா ஜாடைல இருந்துட்டு தஸ்புஸ்ன்னு இங்கிலீஷ்ல தாக்கறாளேன்னு பார்த்தேன். பரவாயில்ல தமிழும் வரும் போலயே” என்று அவளை அவன் நக்கல் செய்ய
 
“வு இஸ் முனியம்மா?” என்று புருவம் சுருக்கி கேட்டாள்.
 
“அடிப்பாவி. அப்பாவை பெத்த ஆயா பேரு தெரியாதா உனக்கு. ஆயா அப்படியே நீ தான்” என்றதும் அவள் நம்பாமல் விழி சுருக்க “இரு போட்டோ காட்டறேன். உங்க டாடி ஆயா ஜாடை. நீ அவர் ஜாடை” என்று தன்னுடைய கைபேசியை எடுத்து அவர்களது பாட்டியின் நிழற்படத்தை காட்டினான்.
 
வர்ணிகாவிற்கு புடவை கட்டி, தலையை எண்ணை வைத்து படிய வாரி, கொண்டை போட்டு பெரிய பொட்டும் வைத்தால் முனியாம்மாளே தான். நிறமும் அவள் அவர்களை போல் தான். என்ன தான் அந்த படத்தை பார்த்தாலும் “யு ஆர் லையிங் சரண். இது ஏஐல(AI) ஜெனெரேட் பண்ண என்னோட இமேஜ் தானே” என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.
 
“இந்த பட்டன் ஃபோன்ல ஏஐ(AI) வருதா. உனக்கு அனுப்பறேன். உங்க டாடிக்கு அனுப்பி கேளு. சொல்வார்” என்றிருந்தான்.
 
அவனது மனநிலை மாறியிருப்பதை புரிந்து “சரண்.. நாம ட்ரை பண்ணலாம். நான் உனக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் அண்ட் ஹவ் டு கம்போஸ் மெயில்னு சொல்லி தரேன்” என்றாள்.
 
அவனுக்கு தான் அவளிடத்தில் எப்போதும் ஈகோ இருந்ததில்லையே. அவன் சரியென்பதாய் தலையாட்ட அவள் மனதில் உற்சாகம் பிறந்தது.
 
அவனருகில் இன்னும் நெருக்கமாய் அமர்ந்து “நான் இப்ப சொல்றதை ப்ளீஸ் டோன்ட் டேக் இட் இன் தி ராங் சென்ஸ். எனக்கு உன்மேல இருக்குற அட்மோஸ்ட் கேர்ல தான் சொல்றேன். நாட் டு இன்ஸல்ட் ஆர் டீமோடிவேட் யு” என்று டிஸ்க்ளைமர் போட்டுவிட்டே பேச்சை தொடங்கியவள்,
 
“இப்படி டே அண்ட் நைட் ஒர்க் பண்ற ஜாப் தேவை தானா சரண்” என்றதும் முகம் இறுக அவளை விட்டு விலக முயன்றவனை இழுத்துப் பிடித்து “ப்ளீஸ், சொல்றத கேளு. நான் உன்னை நல்லா தானே பார்த்துக்கிறேன். ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் நல்லா ஏர்ன் பண்ணா போதாதா. அதான் நான் பண்றேனே. நீ டென்ஷன் எடுத்துக்காம உன் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸை இம்ப்ரூவ் பண்ணிக்கோ. தென், உன் படிப்புக்கு ஏத்த ஜாப் செர்ச் பண்ணு. யு கேன் ஈவென் ஸ்டார்ட் எ ஸ்டார்ட்அப் சரண். அதுவரைக்கும் நான் உன்னை பார்த்துக்கிறேன்” என்றாள்.
 
ஏனோ இன்று அவள் தன்னை அவமானப்படுத்துவதாக தோன்றவில்லை. மாறாக சுசியின் ஞாபகம் தான் வந்தது. அந்த நிமிடம் தன் அன்னை, அக்காவிற்கு அடுத்த இடத்தில் அவளை வைத்தான்.
 
சிரித்துக் கொண்டே அவள் கையை பிடித்தவன் “ஏன்டி உங்க ஊருல புருஷன் பொண்டாட்டியாவும், பொண்டாட்டி புருஷனாவும் இருப்பாங்களா. நான் பேச வேண்டியதை எல்லாம் நீ பேசிட்டு இருக்க” என்று கேட்டவனின் வார்த்தையிலோ, மனதிலோ துளியும் ஈகோ இல்லை. அவளை எண்ணி மெச்சுதல் மட்டுமே இருந்தது.
 
“ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப்ங்கறது டெசிக்னேஷன் இல்ல சரண், இவங்க இந்த ரோல் தான் ப்லே பண்ணனும்னு நினைக்கறதுக்கு. இட்ஸ் ஜஸ்ட் நேம் ஃபார் தட் ரிலேஷன்ஷிப். தட்ஸ் இட். எனக்கு நீ, உனக்கு நான்னு சப்போர்ட் பண்ணிக்கணும். எனக்கு குக் பண்ண தெரியாதுன்னு நீ என்னை ஒருநாளும் கேள்வி கேட்கலயே. என்னை நீ நல்லா தானே பார்த்துக்கிற. அதேமாதிரி நானும் உனக்கு எப்பவும் இருப்பேன்” என்று அவன் கையில் அழுத்தம் தந்தாள்.
 
எத்தனை அழகாக கணவன், மனைவிக்கான இலக்கணத்தை கூறிவிட்டாள் என்று அவளை வியந்து பார்த்தான் சரண்.
 
இருவருக்குள்ளும் ஓர் அழகிய உறவும், உணர்வும் எப்போதும் இருக்க தான் செய்தது. இன்றோ, தான் என்ற அகந்தை இல்லாத தூய்மையான கணவன், மனைவி பந்தமாக மாறியிருந்தது.

தொடரும்...


   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 3 months ago
Posts: 42
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 3 months ago
Posts: 42
Topic starter  
அத்தியாயம் - 12

இன்னும் இரண்டு மாதங்கள் சென்றிருக்க, இப்போது அவர்களுக்கு திருமணமாகி ஒன்பது மாதங்களாகி இருந்தது. சரணும் வர்ணிகாவின் துணைக் கொண்டு தன் மொழி திறனை வளர்த்திருக்க, அதனால் வாடிக்கையாளரிடமிருந்து அவனை பற்றி வரும் குறைகள் அறவே குறைந்திருக்க, அவனது மேலிடத்திலிருந்தும் இப்போது எந்த பிரச்சனையும் வருவதில்லை.
 
அத்தோடு விட்டாளா அவனவள். அவனை மீண்டும் நேர்காணலில் பங்குபெற செய்து, இப்போது சரணுக்கு ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல ஊதியத்துடன் வேலையும் கிடைத்திருக்க, அடுத்த மாதத்தில் அதில் சேரவும் உள்ளான்.
 
அன்று காலை எழுந்த வரு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்து பார்க்க, அங்கு சரண் முகமூடி கொள்ளைக்காரனை போல் துணியால் முகத்தை மூடியிருந்தான். தலையிலும் ஒரு துண்டு கட்டி இருந்தான். அங்கிருந்த சோபா, டிவி மற்றும் பிற உபகரணங்களை துணி கொண்டு மூடியும் இருந்தான்.
 
அவனருகில் வந்த வரு “என்ன சரண் பண்ணிட்டு இருக்க?” என்று புரியாமல் விசாரிக்க
 
“ஒட்டடை அடிச்சி வீட்டை சுத்தம் பண்ணிட்டு இருக்கேன். ஆயுத பூஜை வருதுல, நீ வீட்டுல இல்லாதப்பவே நம்ம ரூமை க்ளீன் பண்ணிட்டேன். இப்போ ஹாலை சுத்தம் பண்ணிட்டா, பெருக்கி மாப் போட்டிடலாம்” என்றான்.
 
‘அப்படியா’ என்று அனைத்தையும் கேட்டுக் கொண்டவள் “நானும் ஹெல்ப் பண்றேன்” என்று அவனருகில் வர
 
“நீ இங்க வராத வர்ணி.. தூசா இருக்கு. நீ தூங்கிட்டு இருக்கப்பவே முடிச்சிடணும்னு நினைச்சிருந்தேன். வேலை இழுத்திடுச்சு. ப்ரஷ்(Brush) பண்ணிட்டீயா. உள்ள பிளாஸ்க்ல பால் வச்சிருக்கேன். ஹாட்பேக்ல இட்லியும் வச்சிருக்கேன். போய் சாப்பிட்டுட்டு உள்ளேயே இரு” என்றான் தன் வேலையை பார்த்து கொண்டே.
 
வேலை நேரத்திலும் தன்னை பற்றி யோசித்து அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும் தன்னவனை எண்ணி மெய்சிலிர்ந்துப் போனவள் “நான் இங்கயே நீ பண்றதை பார்த்துட்டு இருக்கேனே சரண்..” என்று ஆசையாக கேட்டாள்.
 
அதில் அவளை விசித்திரமாக பார்த்தவன், “சரி இரு” என்று அவள் அமர சோபாவின் மேலிருந்த துணியை அகற்றி உட்கார சொன்னான். அவளும் உட்கார்ந்து கொண்டு அவனிடம் கதையளந்துக் கொண்டிருந்தாள்.
 
“நீ ஏன் இதெல்லாம் செஞ்சிட்டு இருக்க. இதுக்கெல்லாம் ஆள் இருப்பாங்களே” என்று அவனிடம் வரு கேட்க
 
“அத ஏன் கேக்குற. இந்த பிளாட்காரங்க இதுக்கெல்லாம் என்னென்ன ரூல்ஸ் வச்சிருக்கானுங்க தெரியுமா. இந்த க்ளீனிங் வேலை பண்றதுக்கு ஏஜென்சி இருக்காம். முதல்ல அசோசியேஷன்ல சொல்லணுமாம். அவங்க ஏஜென்சிகிட்ட சொல்லிட்டாங்கனா அங்க இருந்து ஆள் அனுப்புவாங்கலாம். ஒரு வீட்டை துடைக்க ஏஜென்சி, அதுக்கு அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் பண்ணா தான் வருவாங்களாம். இதுல வெளில இருந்து நாமளே ஆளையும் கூட்டிட்டு வர கூடாதாம். இங்க இருக்கிறவங்களோட சேஃப்டி முக்கியமாம். அதான் போங்கடா நீங்களும் உங்க அசோசியேஷனும், என் வீட்டை நானே சுத்தம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன்” என்று சிரித்தவனை அவள் ஆர்வமாக பார்த்திருந்தாள்.
 
அப்போது “ஆஆ.. சரண் கண்ணுல டஸ்ட்(Dust) விழுந்திடுச்சு” என்று கண்ணை கசக்கினாள் வரு.
 
மர ஸ்டூலில் ஏறி நின்று மின்விசிறியை சுத்தம் செய்துக் கொண்டிருந்தவன் “இதுக்கு தான்டி உன்னை உள்ள போக சொன்னேன். நான் என்ன சேட்டலைட்டா விட்டுட்டு இருக்கேன் பக்கத்துல இருந்து வேடிக்கை பார்க்கறதுக்கு” என்று கடிந்துக் கொண்டே அவளருகில் வந்து “காட்டு” என்று அவள் கண்ணில் இருந்த தூசியை ஊதிவிட்டான்.
 
அப்போதும் அவள் கண்ணை கசக்கிக் கொண்டே இருக்க, வேறுவழியில்லாமல் தன் நாக்கால் அவள் கண்ணில் இருந்த தூசியை எடுக்க, வர்ணிகாவின் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது. அதில் அவனை பார்க்க முடியாமல் அவள் தலை குனிந்து அமர்ந்திருக்க, சரண் அவளை உள்ளே போக சொன்னான்.
 
அவளோ எவ்வளவு வற்புறுத்தியும் உள்ளே செல்லாமல் இங்கேயே இருப்பதாக கெஞ்சி, கொஞ்சி அங்கேயே சட்டமாக அமர்ந்துக் கொண்டாள்.
 
ஒட்டடை அடித்து முடித்தவன் வீட்டை கூட்டி பெருக்கி கொண்டிருக்க, “யு நோ வாட், என்ன தான் டெய்லி சர்வன்ட்ஸ் வீட்டை துடைச்சி க்ளீனா வச்சிருந்தாலும் இயர்லி ட்வைஸ் எங்க வீட்டுல இன் அண்ட் அவுட் க்ளீனிங் ஒர்க் நடக்கும். அப்போ நானும் மனுவும் வீட்டுலயே இருக்கமாட்டோம். எங்கயாவது ட்ரிப் போயிடுவோம்” என்று பேச்சு ஓட்டத்தில் அண்ணனின் பேச்சை எடுத்துவிட்டாள்.
 
அதுவரை அவள் சொல்லியிருந்த கதைகளை அமைதியாக கேட்டிருந்தவனின் முகம் மனோஜின் பேச்சு எழுந்ததும் நொடி பொழுதில் இறுகிவிட்டது. அவளை முறைத்துக் கொண்டே அவன் நின்றிருக்க, அவளோ அதை கவனிக்காதவளாய் “மனு என்னை ரொம்ப நல்லா பார்த்துப்பான். உன்னை மாதிரியே வெரி ப்ரொடெக்ட்டிவ். ஹி லவ்ஸ் மீ எ லாட். எங்களுக்குள்ள சண்டையே வராது தெரியுமா” என்று மனதின் ஆழத்தில் இருந்த தன் அண்ணனை பற்றி எண்ணங்களை எல்லாம் அவனிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்.
 
அதில் தன் பொறுமையை முற்றிலுமாக இழந்திருந்த சரண் “ஹேய் எழுந்து உள்ள போடி” என்று சத்தமிட்டவன் ‘இவ அண்ணன் பாசக்காரன், ப்ரொடெக்ட்டிவாம். கல்யாண மண்டபத்தை விட்டு ஓடி போனவன் தான’ என்று தனக்குள்ளேயே முணுமுணுத்தும் கொண்டான்.
 
சரணின் இந்த திடீர் மாற்றத்தில் திகைத்த வர்ணி “ஏன்டா என்னை ஷௌட் பண்ற?” என்று எதிர்வாதம் புரிய
 
“உன்னை உள்ள போனு சொன்னேன்” என்று கத்தியிருந்தான்.
 
அதில் அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட, வேகமாக அங்கிருந்து எழுந்து செல்லப் போனவள் வழியில் வீட்டை துடைப்பதற்காக சரண் வைத்திருந்த தண்ணீர் வாளியை கவனிக்காமல் மோதி, தண்ணீரையும் கீழே கொட்டி தானும் கீழே விழுந்தாள்.
 
அதை பார்த்த சரண் பதறியடித்து கொண்டு அவளிடம் ஓடிவந்து “பார்த்து நடக்கமாட்டியாடி” என்றவனுக்கு இங்கே இருந்தவளை உள்ளே செல்ல சொல்லி தான் தான் கீழே விழ வைத்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு.
 
“டேட்.. ஆ.ஆ. சரண் ரொம்ப வலிக்குது” அவள் வலியில் துடிக்க, அவளை கைகளில் ஏந்திக் கொண்டு போய் படுக்கையில் கிடத்தியவன், அவளது காயங்களை ஆராய்ந்தான்.
 
நல்லவேலை பெரிய காயம் எதுவும் இல்லை. சில பல சிராய்வுகள் மட்டுமே. விழுந்ததில் கால் தான் வலிக்கிறது என்று அவள் அழ, அதையும் பார்த்தவன் “ஸ்வெல்லிங் எதுவும் இல்ல வர்ணி..” என்றவன் அவளுக்கு இட்லியை ஊட்டினான்.
 
அவள் உண்டு முடித்ததும் “நீ ரெஸ்ட் எடு. பசிச்சா பால் குடி. நான் வீட்டை துடைச்சிட்டு வந்திடுறேன். வலி இருந்தா டாக்டர்கிட்ட போகலாம்” என்றிருந்தான்.
 
தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவனை எண்ணி அவளது கண்கள் தன்னையறியாமல் கலங்கிவிட்டது.
 
அந்த வார இறுதியில் சரணின் கைபேசி வெகுநேரமாக ஒலித்திருக்க, அவனோ அதை வீட்டிலேயே வைத்து விட்டு கடைத்தெருவுக்கு சென்றிருந்தான்.
 
பொறுத்து பார்த்த வரு முக்கியமான அழைப்பாக இருக்கலாம் என்று கைபேசியை எடுத்து பார்க்க, அதில் ‘வினு பேபி’ என்றிருந்தது. யார் இந்த வினு, எதற்கு சரணுக்கு அழைக்கிறாள் என்று தன்னவன் மீது உரிமை உணர்வு பொங்க, அழைப்பை ஏற்றாள் வரு.
 
அம்முனையில் கமலி ‘ஹலோ சரண் அண்ணா’ என்று முழுதாக சொல்லி முடிப்பதற்குள், வரு இங்கே “ஹலோ” என்று சொல்லியிருக்க, அதில் பயந்துவிட்ட கமலி அழைப்பை துண்டித்திருந்தாள். அதில் வருவிற்கு கேட்டதெல்லாம் “ஹலோ சரண்” என்ற பெண்ணின் குரல் மட்டுமே. அத்தோடு அப்பெண் இவளது குரலை கேட்டதும் அழைப்பை துண்டித்துவிட்டாள் என்று வேறு நினைத்துக் கொண்டாள்.
 
அங்கே தன் தங்கையின் திருமணத்திற்கு அழைக்க நண்பனின் வீட்டிற்கு வர வழி கேட்க சொல்லி, தன் பின்னால் அமர்ந்திருந்த கமலியிடம் கைபேசியை கொடுத்திருந்த வினோத் “அறிவிருக்காடி. பொண்ணு குரல் கேட்டா கட் பண்ணிடுவியா.. அவன் வைஃப் தான் எடுத்திருப்பாங்க. அவங்க தப்பா நினைக்கமாட்டாங்க” என்று நொந்துக் கொண்டான்.
 
வீட்டில் கோபத்தில் நடந்திருந்த வர்ணி, சரண் உள்ளே நுழைந்ததும் “யார் வினு.. உன் கேர்ள்ப்ரண்ட்டா. அவகிட்ட சொல்லலயா உனக்கு மேரேஜ் ஆகிடுச்சுனு” என்று எரிந்து விழுந்தவள், அவன் கைபேசியை சோபா மீது வீசிவிட்டு கோபமாக அறைக்குள் சென்றுவிட்டாள்.
 
அதை பார்த்த சரணுக்கு அவளுக்கு தன் மீதிருக்கும் உரிமை உணர்வை எண்ணி “அட என் லண்டன் காரி.. உனக்கு கூட பொசசிவ்னெஸ் வருமா” என்று சிரித்துக் கொண்டான்.
 
சிறிது நேரத்தில் அவர்களது வீட்டிற்கு வந்த வினோத்தும் கமலியும் அழைப்புமணியை அடிக்க, வர்ணிகாவை சிரமப்பட்டு வெளியே அழைத்து வந்து அவளுடனே கதவை திறந்த சரண் “வாங்க.. வாங்க” என்றுவிட்டு “வர்ணி, இதான் நீ பார்க்கனும்னு கேட்ட வினு.. ஐ மீன் வினோத். என் ப்ரண்ட். அது கமலி, அவன் ஆளு. அவ தான் அவன் நம்பரை என் ஃபோன்ல அப்படி சேவ் பண்ணி வச்சிருக்கா” என்றதும் வினு என்பது ஆணா என்பதில் வருவிற்கு அப்படியோர் நிம்மதி.
 
மலர்ந்த முகமாக “வாங்க.. வாங்க.. ப்ளீஸ் சிட்” என்று வந்தவர்களை உபசரித்து சோபாவில் அமர வைத்தவள்,
 
“காஃபி சாப்பிடுறீங்களா? சரண் நல்லா காஃபி போடுவான்” என்றதும் சரண் அவளை முறைக்க, வினோத்தோ இதழில் நக்கலை தோய்த்து சிரித்தான்.
 
அவள் அதை கண்டுகொண்டாள் தானே.. “இல்லல்ல.. இட்ஸ் ப்ரேக்பாஸ்ட் டைம்.. ப்ரேக்பாஸ்ட் சாப்பிடுறீங்களா..? சரண் நல்லா குக் பண்ணுவான்" என்றுவிட்டு எதையோ சாதித்துவிட்டது போல் கணவனை வேறு பார்க்க, இவளை கண்டு கொள்ளாமல் நண்பர்களுக்கு சாப்பிட எடுத்துவர சமையலறைக்குள் சென்றான் சரண்.
 
தன் வேலை முடிந்ததென வினோத், கமலியுடன் அமர்ந்து வரு பேச தொடங்கி விட, உள்ளிருந்தே சரண் “வர்ணி..” என்று குரல் கொடுத்தான்.
 
அதை கேட்டவள் “ஒன் செக்(sec)” என்றுவிட்டு உள்ளே எழுந்து செல்ல, அங்கே சரண் இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்திருந்தான்.
 
அவள் என்ன என்பதாய் அவனை பார்க்க, “கொழுப்பு தானே உனக்கு. அங்க இருந்துட்டு சரண் காப்பி நல்லா போடுவான், டிபன் நல்லா செய்வான்னு சொல்லிட்டு இருக்க” என்று எரிந்து விழுந்தான்.
 
“நீதானே சரண் வீட்டுக்கு யாராவது வந்தா வாங்க, என்ன சாப்பிடுறீங்கன்னு கேக்கணும்னு சொன்ன. அப்புறம் பால் கொண்டு வானு சொன்னாலும் ஆர்டர் போடறேன்னு சொன்னீயே. அதான் சாஃப்ட்டா சொன்னேன். அன்னைக்கு சுசித்ரா வீட்டுக்கு வந்தப்போ எதுவும் கேட்கலனு எவ்ளோ திட்டின” என்று அசராது பதிலளித்தாள்.
 
“அடிங்க.. எங்க அக்காவை பேர் சொல்லியா கூப்பிடற”
 
“நீயும் தான் பேர் சொல்லி கூப்பிடற”
 
“நான் கூப்பிடுவேன். அது பாசம். ஒழுங்கா அண்ணினு கூப்பிடு”
 
“நான் மனு அவங்கள மேரேஜ் பண்ணிக்க இருந்தப்பவே அண்ணினு கூப்பிடல. இப்போ போய் கூப்பிட போறேனா. போ சரண்” என்றுவிட்டு சிரிக்க
 
அதுவரை அவளிடம் தர்க்கம் செய்துக் கொண்டிருந்தாலும் ஒருவித இதமான சூழலே நிலவியிருக்க, இப்போது சட்டென முகம் மாறினான் சரண்.
 
“உங்க அண்ணனோட வைஃப்ப என்ன வேணா கூப்பிடலாம். என் வைஃப் என் அக்காவை அண்ணினு தான் கூப்பிடணும்” என்று முகத்தில் கடினம் காட்டி சொல்ல, அவள் அமைதியாக அவனையே பார்த்திருந்தாள்.
 
வெளியே வினோத் “இதுக்கு தான் கல்யாணமாகி தனியா இருக்கற புருஷன், பொண்டாட்டி வீட்டுக்கு வர கூடாதுன்னு சொல்றது. காப்பி சாப்பிடறீங்களா, டிபன் சாப்பிடறீங்களானு கேட்டுட்டு உள்ள போச்சுங்க. இன்னும் காணலையே” என்று புலம்பியிருந்தான்.
 
“நான் வேணும்னா போய் பார்த்துட்டு வரவா வினு” என்று கேட்டாள் கமலி..
 
“போயிடாத.. உள்ள அவங்க எந்த நிலையில இருக்காங்களோ” என்று எச்சரிக்க
 
“சரண் அண்ணா அப்படியெல்லாம் பண்ணமாட்டான். அவன் தான் வேற ஒரு பொண்ண லவ் பண்ணானே. அப்புறம் எப்படி” என்று அவள் அப்பாவியாய் பேசிக் கொண்டே போக
 
“அடியேய். ஷட்டரை சாத்து. நல்லா போயிட்டு இருக்குற அவன் வாழ்க்கைல கும்மி அடிச்சி விட்டுடாத” என்று கடிந்தான்
 
அத்தோடு “சரண்.. எங்களுக்கு எதுவும் வேண்டாம்டா. ரெண்டு பேரும் வந்தீங்கனா பத்திரிக்கையை கொடுத்துட்டு கிளம்பிடுவோம்” என்று அவர்களுக்கும் குரலும் கொடுத்தான்.
 
இங்கே சரணின் இறுகிய முகத்தையே வர்ணிகா பார்த்திருக்க, திடீரென வந்த வினோத்தின் குரலில் கலைந்து, வரவேற்பறைக்கு செல்ல நகர்ந்தவளின் கையை அழுத்தமாக பிடித்து நிறுத்திய சரண் “என்ன, இப்போலாம் உன் அண்ணன் பேச்சு அதிகமா வருது. இனி மனுங்கிற வார்த்தை கூட உன் வாயில வர கூடாது. அவனுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இருக்க கூடாதுனு சொல்லி தான் உன்னை கல்யாணமே பண்ணிருக்கேன்” என்று அலுங்காமல் அவளை அதிர வைத்தான்.
 
அதில் அவள் மனம் சில்லு சில்லாக உடைந்து நொறுங்க, சரணோ இறுகிய முகத்துடன் அவளை கடந்து வெளியே சென்றுவிட்டான். இவளும் அவன் பேச்சில் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு அவனை பின் தொடர்ந்தாள்.
 
இருவரும் வெளியே வர, வினோத் அவர்கள் கையில் பத்திரிக்கையை கொடுத்து “அம்மா, அப்பாவையும் வீட்டுக்கு போய் கூப்பிட்டுட்டேன்டா. நீங்களும் கண்டிப்பா வரணும்” என்று அழைத்தான்.
 
அதற்கு சரண் “என் தங்கச்சி கல்யாணம். நான் தான் முன்ன நின்னு எல்லாம் பண்ணுவேன்” நொடியில் இறுக்கத்தை விடுத்து சிரித்த முகமாக நண்பனுக்கு பதிலளித்தான்.
 
அடுத்து வர்ணிகாவை பார்த்து “நீங்களும் வந்திடுங்க சிஸ்டர்” என்று சொல்ல, சரியென்று தலையசைத்தவள், சரணின் முகம் பார்க்க இன்னும் இறுக்கம் குறையாமல் தான் இருந்தது.
 
அப்போதே தன் அண்ணனை பற்றிய பேச்சுகள் அவனுக்கு பிடித்தமில்லை என்பதை உணர்ந்தாள் வரு. இதனால் தான் அன்று கோபமாக உள்ளே செல்ல சொல்லியிருக்கிறான் என்பதையும் புரிந்தவள், இனி கவனமாக இருக்கவேண்டும் என்றும் முடிவெடுத்தாள்.
 
சரணும் வர்ணிகாவும் வினோத்தின் தங்கை திருமணத்திற்கு கிளம்பி கொண்டிருந்தனர். அவன் நண்பன் எடுத்து கொடுத்த வேட்டி சட்டையை அணிந்து அவள் தயாராகி வர வரவேற்பறையில் காத்திருக்க, முட்டிக்கு சற்று கீழே இருந்த ஸ்கர்ட்டும் ஷர்ட்டும் அணிந்து வெளியே வந்தாள் வர்ணிகா.
 
மனைவியை பார்த்து அதிர்ந்த சரண், “என்ன டிரஸ்டி இது? போய் மாத்திட்டு வா” என்று ஆத்திரப்பட
அவளோ “இதுக்கு என்ன. என் ப்ரண்ட் மேரேஜுக்கு இது மாதிரி ஒரு டிரஸ் தான் வேர் பண்ணேன். ஆல் ப்ரைஸ்ட் மீ சேயிங் தட் ஐ லுக் கார்ஜியஸ். இந்தியால மேரேஜை தான் கிராண்ட்டா பண்றீங்கனா மேரேஜுக்கு போறவங்களும் கிராண்ட்டா தான் போகனுமா” என்று பதில் வாதம் புரிந்தாள்.
 
அதில் இவளுக்கு புரியவைப்பது வீண் என்று தோன்ற, கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்தான். ஏற்கனவே நேரமாகி இருந்தது. தன் அக்காவின் திருமணத்தில் முன் நின்று அனைத்தையும் செய்தவனின் தங்கை திருமணத்திற்கு நேரத்தில் செல்லவேண்டாமா?
 
கண்களை மூடி திறந்தவன் “அட்லீஸ்ட் ஜீன்ஸ் போட்டுட்டு வா” என்றான். அவளுக்கும் அதற்கு மேல் தர்க்கம் செய்ய தோன்றாமல் அவன் சொன்னதை செய்ய, அவன் வேட்டி சட்டையுமாய், அவள் ஜீன்ஸ் ஷ்ர்ட்டுமாய் அந்த மண்டபத்திற்குள் நுழைந்தனர்.
 
திருமணமும் நல்லபடியாக நடந்து முடிய, வினோத்துடன் சேர்ந்து பந்தியை பார்க்க முடிவு செய்த சரண், வருவிடம் வந்து “இங்க நான் பொண்ணு, மாப்பிள்ளை கிளம்பினதும், அவங்க சீர்வரிசையை வண்டியில ஏத்தி அனுப்பிட்டு தான் வருவேன். நீ கிளம்பு” என்று தன்னிடமிருந்த கார் சாவியை அவளிடம் நீட்டினான்.
 
“நீ எப்படி வருவ சரண். நான் கேப்ல போயிக்கிறேன்” என்றாள்.
 
“இல்லல்ல.. நான் பஸ்ல வந்துப்பேன். நீ கிளம்பு” என்று அவன் சொன்னதும், மறந்தும் ஆட்டோவிலோ, வாடகை காரிலோ வரமாட்டான் போல என்று எண்ணியவள் “நான் இங்கயே இருக்கேன். நீ உன் வேலையை முடிச்சிட்டு வா. இங்க உட்கார்ந்துட்டு இருக்கேன்” என்றுவிட்டாள்.
 
சரண் இங்கும் அங்கும் நடந்து வேலை செய்துக் கொண்டிருக்க, வர்ணிகா முதல் வரிசையில் அமர்ந்து திருமண சடங்குகளை பார்வையிட்டு கொண்டிருந்தாள். அதை பார்த்தவனுக்கு “யார் வீட்டு கல்யாணத்துலயோ எப்படி முதல் வரிசைல உட்கார்ந்துட்டு இருக்குறத பாரேன்” என்று சிரிப்பு வந்தது.
 
மதியமும் அங்கேயே சாப்பிட்டுவிட்டு இருவரும் வீட்டிற்கு கிளம்ப, வழியில் வண்டியை சிக்னலில் நிறுத்தினான் சரண். அப்போது அங்கு ஒரு பெண்மணி தன் குழந்தையை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். இவர்களது கார் கண்ணாடியையும் தட்டி காசு கேட்க, கண்ணாடியை இறக்கிய சரண் பத்து ருபாய் தாள் ஒன்றை அவளிடம் கொடுத்தான்.
 
இவையனைத்தையும் பார்த்திருந்த வரு “யக்.. திஸ் இஸ் வாட் ஐ டோன்ட் லைக் அபௌட் இந்தியா” என்று முகம் சுளித்தாள்.
 
அவள் என்ன சொல்கிறாள் என்பதை புரிந்தவன் “ஏன்.. உங்க ஊருல இல்லாதவங்களே இல்லையா. உலகம் முழுக்க இல்லாதப்பட்டவங்க இருக்க தான் செய்யறாங்க. உங்கள மாதிரி பணக்காரங்களுக்கு தான் அவங்களை கண்ணுக்கு தெரியறதில்ல” என்று சுள்ளென்று உரைத்தான்.
 
அத்தோடு “யாரும் இப்படி ஆகணும்னு விரும்பறதில்ல. சூழ்நிலை தான் அவங்களை அப்படி மாத்திடுது. உங்க அப்பன் மாதிரி யாரோ அண்ணனோ, புருஷனோ, இல்ல மகனோ நிர்கதியா விட்டுட்டு போயிருப்பாங்க. அதான் இப்படி கையேந்தறாங்க” என்றும் சொல்லிவிட்டான்.
 
அதில் அவளுக்கு சுருக்கென்று ஆக “அது என்ன எப்பவும் என் டேடை எதாவது சொல்லிட்டே இருக்க. அது என்ன ரெஸ்பெக்ட் இல்லாம என் அப்பன்.. என்ன வேர்ட் சரண் அது” என்றவள் “நீ என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டதால அவர் உனக்கு மாமா இல்ல. நீ பொறந்ததுல இருந்தே அவர் உன் மாமா. யு ஹேவ் ஆல் தி ரைட்ஸ் டு ஃபயிட் வித் ஹிம். உனக்கு என்ன வேணுமோ அத அவர்கிட்ட கேக்கலாம். சன் இன் லான்னு இல்ல, அவர் நெஃப்யூக்காகவே செய்வார்” என்றுவிட்டு ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
 
“உங்க அப்பா எனக்கு எதுவும் செய்ய தேவையில்ல. ரகுவரன் கனிக்கு செஞ்சார்னு இருக்கவேண்டாம். கனி ரகுவரனுக்கு செஞ்சதாவே இருந்துட்டு போகட்டும்” அவனிடமிருந்து அலட்சியமாய் வார்த்தைகள் வந்து விழ, வர்ணிகாவிற்கு கோபம் பொத்திக் கொண்டு வந்தது.
 
“அப்படி என்ன உன் மாம் என் டேட்க்கு செஞ்சிட்டாங்க?” என்று அவளும் பதிலுக்கு பேச, அங்கே சூடான வாக்குவாதம் தொடங்கியது.
 
காரை ஓரமாக நிறுத்தியவன், அவள் முகத்தை வலிய தன் புறம் திருப்பி “எங்க அம்மா என்ன பண்ணாங்கனா கேக்கற. உன் அப்பாவுக்காக எங்க அம்மா தான் படிப்பை விட்டாங்க. படிக்கலனாலும் பரவாயில்லன்னு அவங்கள கட்டிக்க வந்த சம்மந்தமும் உன் அப்பா ஓடி போனவுடனே போய்ட்டாங்க. அதனால எங்க அப்பா ஒண்ணுமில்லாதவர்னு சொல்லல. நல்ல வரன் தான் அவங்களுக்கு அமைஞ்சது. ஆனா பணத்துக்கு திண்டாட்டமாவே அவங்க வாழ்க்கை ஓடிடுச்சு” என்று கோபமாக ஆரம்பித்து தங்கள் நிலையை சொல்லிமுடித்தவன்,
 
“எங்க அம்மா மட்டும் நானும் படிப்பேன்னு அன்னைக்கு அடம்பிடிச்சிருந்தா, உங்க அப்பா காலேஜுக்கு போயிருப்பாரா, உங்க அம்மாவை பார்த்திருப்பாரா, இல்ல நீ தான் திமிரெடுத்து பேசுவியா” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு காரைக் கிளம்பினான்.
 
அதை கேட்டவளுக்கு என்னவோ போல் ஆகிவிட “சாரி சரண்” என்றிருந்தாள். அவனோ அதை சிறிதும் கண்டுகொள்ளாது வண்டியை இயக்கினான்.
 
இதை மகனிடமும் மகளிடமும் ரகுவரன் முன்பே சொல்லியிருந்தாலும் அப்போதெல்லாம் புரியாத அவர்களது வலி, தன்னவனின் வாயால் கேட்டபோது புரிந்து, அது அவள் மனதையும் தைத்தது. அதன் விளைவாக தன்னவனுக்கு பிடிக்காது என்று உணராமல் தன் குடும்பத்திற்காக தந்தையிடம் பேசும் முடிவை எடுத்தாள் வரு.

தொடரும்...

 
 

   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 3 months ago
Posts: 42
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
Page 2 / 2
Scroll to Top