All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Thilagamarul's Short stories

Status
Not open for further replies.

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1. மனிதம்



ட்ரிங் ட்ரிங்......

பச் இது ஒன்னு வேலைக்கு நடுவுல......

ஹலோ சொல்லுப்பா....

குழந்தையோட ஆட்டோகாரர் தவறிட்டாராம் மா...

அட கடவுளே ....அப்போ குழந்தையை யார் கூட்டிகிட்டு வருவது?????

***********************************************************************************


2. அனுபவம்

என்னங்க குழந்தைக்கு உடம்புல அங்கங்கே கட்டி இருக்கு பக்கத்தில இருக்க டாக்டர் சின்ன வயசுனாலும் நல்லா பாக்குறாராம் பிளாட்ல எல்லாரும் சொல்ராங்க கொஞ்சம் போய் காமிச்சுட்டு வாரீங்களா?

சரி என்று பாப்பாவுடன் கிளம்பினேன்..அங்கே பெரிய கியூ , டோக்கன் வாங்கி 2 மணி நேரம் காத்திருந்து உள்ளே நுழைந்தேன்.

டாக்டர் குழந்தைக்கு இந்த மாதிரி சூடு கட்டி வருது கைல பெருசா இருக்கு பாருங்களேன்....

ம்ம் ....ஒரு மினி ஆபரேஷன் பண்ணி இந்த கட்டிய எடுத்துடலாம். அனெஸ்தீஸியா கொடுக்கணும், அதுக்கு ஸ்பேசியலிஸ்டு வரவைக்கணும், நம்ம கிளினிக்ல ஆபரேஷன் தியேட்டர் வசதி இல்ல அதுனால எனக்கு தெரிஞ்ச ஹாஸ்பிடல் பேசி நீங்க ஓகே சொன்ன பிறகு தேதி பிக்ஸ் பண்ணலாம். செலவு ஒரு 40 லிருந்து 50 ஆயிரம் ஆகும். சீக்கிரம் ஒரு தேதி சொல்லுங்க ரொம்ப நாள் தள்ளாதீங்க கட்டி பெருசா இருக்கு பாப்பாக்கு கஷ்டம் என்று முடித்தார் டாக்டர்.

இரண்டரை வயசு குழந்தைக்கு ஆப்பரேஷனலாம் வேணுமா டாக்டர்...மருந்து இன்ஜெக்ஷன்ல சரி பண்ண முடியாத??

எனக்கு தெரிஞ்சு இதுதான் சிம்பிள் வழி....என்று முடித்து கொண்டார்

consultation பீஸ் 200 செலுத்திவிட்டு மனவருத்தத்துடன் வீட்டிற்கு வந்தேன்.

என்னங்க உங்களுக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்றது....ஊர்ல இருந்து போன் பாட்டிக்கு ரொம்ப உடம்பு முடியல உடனே கிளம்புங்க என்றவுடன் மற்றது மறந்து கிளம்பினோம்.

ஊரில் நாங்கள் போய் சேர்வதற்குள் பாட்டி ஓரளவு தேறிவிட்டார். சூழ்நிலை சற்று சரியானவுடன் குழந்தை ஞாபகம் வந்தது. என்ன கண்ணு பாட்டி ரொம்ப படுத்துறேனா ரொம்ப வாடி தெரியுற என்றார் பாட்டி வாஞ்சையுடன்.

அதெல்லாம் இல்ல பாட்டி பாப்பாவுக்கு சூடு கட்டி உடம்புல அங்ககங்க இருக்கு கைல கொஞ்சம் பெருசா இருக்கு அதோட வேர் எடுக்க ஆபரேஷன் பண்ண சொல்லி டாக்டர் சொல்லறாரு அதுதான் பயமா இருக்கு என்றேன்

அட இதுதானா என்பது போல பார்வை பார்த்தவர் குழந்தையை கூப்பிட்டு மஞ்சள் வேப்பிலை அரைத்து உடம்பில் போட்டு விட்டார்.

கைல இருக்குற கட்டி பெருசா இருக்கு சாயங்காலம் நம்ம 50 ரூபா டாக்டர் பாத்துட்டு வந்துடு ரொம்ப கைராசிகாரரு..இதுக்கெல்லாம் வெசனப்படாத அப்பு எல்லாம் சரி ஆகிடும்..

டாக்டர் போய் பார்க்காமல் பாட்டியிடம் தப்பிக்க முடியாது இன்னும் அம்மா அப்பாவே பாட்டி சொல் படி தான் நடக்கிறார்கள். சரி சும்மா பாத்துடுவோம் இல்ல பாட்டி கிட்ட பேச்சு வாங்க முடியாது.

என் நல்ல நேரம் டாக்டரிடம் கூட்டம் சற்றே குறைவாக இருந்தது.

டாக்டருக்கு எப்படியும் 70 வயதிற்கு மேல் இருக்கும், சாந்தமான முகம், கூரிய பார்வை, நரைத்த முடி என்று ஒரு டாக்டரின் அனைத்து லட்ஷணத்துடன் இருந்தார்.

உள்ளே நுழைத்தவுடன்...வாப்பா பாட்டி சுகமா? அப்புறம் என்ன ஆச்சு குழந்தைக்கு? என்றார்.

நானும் பிரச்சனையை கூறினேன்...உடனே பக்கத்தில் இருந்த டேபிள் மீது குழந்தையை படுக்க வைக்க சொன்னார், உதவியாளரை அழைத்து தேவையான உபகரணங்களை எடுத்து வர சொல்லி குழந்தையிடம் பேச்சு கொடுத்தார்...

பாப்பா என்ன படிக்குறீங்க??

இன்னும் ஸ்கூல் போகல என்றேன்.

சரி குழந்தையை இறுக்கி அசையாம பிடிச்சுக்கோங்க என்றார்.

ம்ம்ம் அப்போ சரி பாப்பாவுக்கு மிக்கி மௌஸ் பிடிக்குமா? டோரா பிடிக்குமா?

குழந்தை யோசித்து கொண்டிருக்கும் போதே கையை பிடித்து கட்டியை கீறி வேறை எடுத்து விட்டார், வீறிட்டு அழுத குழந்தையை அதற்கேற்றார் போல் பேசி சமாதானம் செய்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் முடித்து விட்டார், உதவியாளர் தயாராக வைத்திருந்த உபகரணங்களை வைத்து சுத்தம் செய்து கட்டு கட்டி விட்டார்.



அவ்ளோ தான் பாப்பா ஹாப்பி....டாக்டர் ஹாப்பி என்று இருவரும் ஹை பை கொடுத்து கொண்டனர்.



பீஸ் என்றேன் தயக்கமாய் 50 ரூபா கொடுப்பா என்று சந்தோசமாக திருப்தியாக வாங்கி கொண்டார்.



சரிப்பா முடிஞ்சது கிளம்பு என்றார்.


***********************************************************************************



3. நம்பிக்கை

டாக்டர் சார்... குழந்தைக்கு நாலு நாளா காய்ச்சல் கை வைத்தியம் எதுவும் கேக்கல உங்க கை பட்டாலே சரி ஆகிடும் அது தான் தூக்கிட்டு வந்தேன் ...

வெள்ளந்தியாய் தாய் கூறியதை கேட்டு கொண்டே குழந்தையை பரிசோதித்து முடித்து மருந்து கொடுத்து அனுப்பினேன்.....'ஒண்ணுமில்லமா சீசன் மாறுதுல்ல அது தான்'.....சரிங்கய்யா உங்க கிட்ட வந்தா சரியாகிடும் அது இந்த ஊருக்கே தெரியுமே ...

வீட்டிற்குள் நுழைந்ததும் மனைவி...என்னங்க குழந்தைக்கு சின்ன மரு இருக்கு முருகருக்கு உப்பு மிளகு கொட்டினா சரி ஆகிடும் உடனே கோவிலுக்கு கிளம்புங்க...


************************************************************************


4. அக்கரை பச்சை



காலையில எழுந்து சமைத்து, குழந்தைகளை பள்ளி அனுப்பி, மூச்சு விட நேரம் இல்லாம நடுநடுவில் போன் பார்த்து (eeee இப்போ இந்த வேலையும் நமக்கு சேந்துடுச்சு ) வீட்ல அக்கடான்னு உட்கரலாம்னு பார்த்தா இன்னைக்குன்னு எங்கயோ பேங்க் போகணும் நீயும் வான்னு இம்சை (இம்சை சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க ......ரொம்ப நல்லவர் ......என் புருஷனில்ல அதனால இனிய இம்சை....)



இதோ அவரோட பைக் ல கிளம்பியாச்சு இந்த வெயில்ல பைக்ல சென்னைல போறதும் அதுல சிக்னல் ல நிக்குறது எவ்ளோ கொடுமைன்னு தமிழ் கூறும் நல்லுலகம் அறியும் மக்களே....அப்படி நிற்கும் போது ஒரு சைரன் வச்ச வண்டி அதுல ஒரு பெண் ஆஃபீஸ்ர் சும்மா கெத்தா உட்கார்ந்து இருக்காங்க.....எனக்கு ஒரே பீலிங் ஆயிடுச்சு நாமளும் ரொம்ப நல்லா படிக்கலானாலும் ஓரளவு படிச்சோம் நல்லா முயற்சி செய்து படிச்சு இருந்தா இவங்கள மாதிரி இல்லனாலும் ஒரு நல்ல வேலைல இருந்து இருக்கலாம் வாழ்க்கை இன்னும் நல்லா இருந்திருக்குமோ......ஒரே பீலிங்......



அதே நேரம் காருக்குள் இருந்த ஆஃபீஸ்ர்....இந்த மீட்டிங் டைம் ஆச்சு ஒருத்தனுக்கு அதைபத்தி கவலை இருக்காது நாம போய் ஆரம்பத்தில இருந்து இவங்களுக்கு விளக்கி இவங்களுக்கு புரிய வச்சு வேலை வாங்கி......கடவுளே ஒரு லட்சியத்தோடு படிச்சுட்டு ஏதாவது செய்யலாம்னு வேலைக்கு வந்தா..... புருஷன் குழந்தைங்க கூட நேரம் செலவிட முடியாம கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு, பேசாம படிச்சு வேலைக்கு எல்லாம் போகாம வீட்ல இருந்து புருஷன் குழந்தைன்னு பாத்துக்கிட்டு இருந்து இருக்கலாமோ . இதோ இந்த பெண் போல புருஷன் கூட பைக்ல போய் இருக்கலாமோ...வாழ்க்கை நல்லா இருந்திருக்குமோ ......ஒரே பீலிங்


************************************************



5. வசதி


என் வீடு கிரஹப்பிரவேசம்...


பங்களா மாதிரி வீடு, நீச்சல் குளம், வீட்டை சுற்றி தோட்டம், காலை நடை பயிற்சிக்கு தனி இடம், நிறைய செடிகள், பார்த்து பார்த்து கட்டிய வீடு வாழ்நாள் கனவு...

அப்பாவின் நிலம் விற்று, மனைவி குழந்தைகளை தனியே விட்டு வெளிநாடு சென்று நேரம் காலம் பார்க்காமல் உழைத்து சேர்த்து இன்று நிறைவேற்றி விட்டேன் எனது கனவை .....மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் .........வீட்டை சுற்றி வரும் பொழுது......என் தந்தையின் நண்பர்களின் உரையாடல்:

ஏலேய் வீடு நல்லா இருக்குல்ல....

ம்ம் நல்லா இருக்கு ஆனா யோசிச்சு பாரேன் நம்ம சின்ன வயசுல நம்ம ஊரே இந்த வீடு மாதிரி தானே இருந்தது....நமக்குன்னு சுத்தமான குளம், நம்ம கோவில், நம்ம சாமி, நம்ம நிலம், நம்ம பயிர், நம்ம வீடு , நம்ம தோட்டம், நம்ம காய்கறி, நல்ல விளையாட்டு, சுத்தி சொந்தங்கள் சந்தோஷமா இருந்தோம் .....

நம்ம குழந்தைகளை நாம தனியா நினைச்சதே இல்ல .....நிறைய நாளு நான் உன் புள்ளய வேலை வாங்கி இருக்கேன் அதுங்களும் எந்த விகல்பமும் இல்லாம நமக்கு வேலை செய்யுங்க

எல்லாமே பொதுவுல இருக்கும் நாம சந்தோஷமா பகிர்ந்துக்கிட்டோம்

இப்போ எல்லாரும் படிச்சுட்டாங்க ......எல்லாமே தனியா கேக்குறாங்க...

யாரோடையும் ஒத்து போக முடியல........

படிப்பு அப்படித்தான் இவங்களுக்கு சொல்லி கொடுக்குது போல.....நல்ல வேலை நாம படிக்கலை..

அவ்வளவு நேர மகிழ்ச்சி காணாமல் போக உண்மை நெஞ்சை சுட விக்கித்து நின்றேன்.

***********************************************************
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குப்பை தொட்டி



11.30 மணி வழக்கம் போல் நான் நிற்கும் இடத்திற்கு வந்து நின்றேன். இன்று யாராவது நல்ல கிராக்கி வர வேண்டும். நாளை மகனின் ஸ்கூல் பீஸ் கட்டபணம் வேண்டும். என் வாழ்க்கையின் சுவடு தெரியாமல் அவனை வளர்க்க நான்படும் பாடு கடவுள் அறிவார்..ஆனால் கடவுள் இருக்கிறாரா? மனதிற்குள் ரொம்பநாளாக இந்த கேள்வி உண்டு வெளியில் சொன்னதில்லை.




என் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது கட்டிய கணவனால் வஞ்சிக்கப்பட்டு பிறந்துவளர்ந்த ஊரை விட்டு, குடும்பத்தை விட்டு, உறவை விட்டு, வெகு தூரம் வந்துவிட்டேன். இனி திரும்பி செல்வதால் பலன் இல்லை புதைகுழியில் சிக்கிய வாழ்க்கை மூச்சு இருக்கும் வரை இதுதான்.




என் மகனின் கார்டியன் நான், அப்படி என்றால் தான் அந்த ஆஸ்ரமத்தில் சேர்த்துகொள்வார்கள். பிற்காலத்தில் இந்த சமூகம் அவனை ஒரு சொல் சொல்லிவிடகூடாது அல்லவா? நான் பணம் தரும் வரை அவனை நல்ல பள்ளிக்குஅனுப்புவதாக சொன்னார்கள் அதற்காகத்தான் இந்த IT கம்பெனி அருகில்நிற்கிறேன்.


இதற்கு நீ எங்காவது வீட்டு வேலை செய்து கௌரவமாக வாழலாமே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. ஆனால் ஒரு முறை இந்த சகதியில் தெரிந்தோ தெரியாமலோ விழுந்தவர்கள் எழும்ப முடியாது. ஏனெனில் இவர்களது நெட்ஒர்க் மிக பெரியது எப்படியும் பிடித்து விடுவார்கள்.நிறைய என்னை பற்றியும் என் கடந்தகாலத்தையும் சொல்லிவிட்டேன், இனியாவது என் வேலையை பார்க்கிறேன்.


அரைகுறை வெளிச்சத்தில் அப்பட்டமான அலங்காரத்துடன் நின்றுகொண்டேன்..என்னை பற்றி நானே வர்ணிக்க கூடாது ஆனாலும் சொல்கிறேன் பால் போன்ற நிறம், வட்ட முகம், அழகிய கரும் விழிகள், பவளசெவ்வாய் அனைத்தையும் சேர்த்து அதீத அலங்காரம் என பூலோக ரம்பை.



இன்னும் அரைமணி நேரத்தில் பக்கத்து IT கம்பெனி ஆட்கள் வேலை முடித்து வரஆரம்பித்து விடுவார்கள், அவர்களில் யாராவது இன்று கிடைத்தால் தேவலாம் ரொம்ப படுத்த மாட்டார்கள் பணமும் சுலபமாக கிடைக்கும் பிரச்சனை இருக்காது என வேண்டியபடி நின்றிருந்தேன்.


கம்பெனி வாசலை பார்த்த பொழுது ஷிஃப்ட் முடிய நேரம் இருக்க ஒரு பெண்மட்டும் தனியே வெளியே வந்தாள். அவள் முகம் சரியில்லை யாரிடமோ சண்டையிட்டு வந்திருப்பாள் போல, ஏதோ வேகமாக மெயின் ரோட்டிற்கு செல்லும் கிளைரோட்டிற்குள் புகுந்தாள் மனம் உந்த அவளை பின் தொடர்தேன்.


சரியாக சொல்லி வைத்தது போல் நான்கு பேர் முழு போதையுடன் அவளை வழிமறித்தனர்.அவள் திடுக்கிட்டு திரும்பி வந்த வழியே ஓடி வர பெரிய மரத்தின் பின்நின்ற நான் அவளை என்னுடன் இழுத்துக்கொண்டேன். எதுவும் பேசாதே என்று சைகை செய்தேன். அவளது முகம் மரண பயத்தில் வெளுத்திருந்தது. மெதுவாக எனது பூ அலங்காரம் அனைத்தையும் கலைத்தேன்.அவளது ID கார்டு வாங்கி போட்டு கொண்டு, அந்த பெண்ணை உள்ளே தள்ளி நிற்க வைத்து விட்டு வெளியே லேசாக தெரிவது போல் நின்று கொண்டேன்.




துரத்தி கொண்டு வந்தவன் கண்ணில் பட்டதும் மெதுவாக மற்றவர்களை அழைத்து என்னை பிடித்து வாயை மூடி பாதி கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு இழுத்து சென்று தங்கள் வெறியாட்டத்தை நடத்தி முடித்தனர்.




என்னால் எழுந்திரிக்க கூட முடியவில்லை.அப்படியே மயங்கி விட்டேன். யாரோ என்னை தொடர்ந்து எழுப்புவது போன்று தோன்றவும் கண்களை லேசாக திறக்க அங்கே ஒரு பெண் நின்றிருந்தாள். நேற்று பார்த்த பெண்ணாக இருக்க வேண்டும் என யூகித்தேன்.



டாக்டர் அவங்க கண் முழிச்சுட்டாங்க என கூப்பிடவும் டாக்டர் வந்து பார்த்துவிட்டு, இனி பயமில்லை இன்னும் 2 இல்ல 3 நாளில் சரியாகிடுவாங்க, என்னால்முடிந்த எந்த ஹெல்பும் பண்றேன் என்று கூறி சென்றார்.



டாக்டர் சென்றவுடன் என் காலை பிடித்து கொண்டு குலுங்கி குலுங்கி அழதொடங்கினாள் அந்த பெண். என்னால் தான் உங்களுக்கு இப்படி என்று சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி அழுது கொண்டு இருந்தாள், பக்கத்தில்இருந்த இளைஞன் இவளை பரிதவிப்புடன், பாசத்துடன், காதலுடன் விடாமல் பார்த்து கொண்டு இருந்தான்.


இது போன்ற பாசம் நமக்கு கிடைக்கவில்லையே என்று என்னை மீறி எழுந்த ஏக்கத்தை தடுக்க முடியவில்லை.



என் ஏக்கத்தையும் அவளது அழுகையை மாற்ற எண்ணி அவளிடம் பேச்சு கொடுத்தேன்.

உன் பேர் என்னம்மா?

ஸ்ருதி அக்கா

இப்ப ஏம்மா அழகை?

அக்கா என்னாலதான் உங்களுக்கு என மேல பேச முடியாமல் விம்மினாள்

அவர் யாரும்மா?

பரத், எனக்கும் அவருக்கும் அடுத்த மாசம் கல்யாணம், நாங்க ஒண்ணா வேலைசெய்யிறோம், நேத்து ஒரு சின்ன சண்டை அதான் அவருக்கு தெரியாம கிளம்பிட்டேன்.


இனிமே அவர் கூட இப்படி நடக்காதே, அவர் சொல்வதை கேள் என்றேன்.



ஏதோ தெய்வவாக்கு போல கேட்டு கொண்டாள்.

அக்கா உங்க வீட்ல யாருக்கு சொல்றது போன் நம்பர்? என்று பரத் முதன் முதலாய்வாய் திறந்தான். யாருக்கு சொல்வது என்று யோசித்தேன்.

சரோஜா அக்கா நம்பர் டயல் செய்தவுடன் சொல்லுடி என்னாச்சு என்றார் அதட்டலாக பரத் குரலை கேட்டு பயந்தே போனான்.

அக்கா ஹாஸ்பிடல இருக்கேன் வரியா?

உனக்கு மட்டும் ஏண்டி இப்படி சாவுகிராக்கிகளா மாட்றானுங்க என்றாள் எரிச்சலாக

கொஞ்சம் வாக்கா என்றேன் கெஞ்சலாக

சரி என்று ஹாஸ்பிடல் அட்ரஸ் வாங்கி கொண்டு போனை வைத்து விட்டாள்.

அக்கா போலீசில் சொல்லலை, சொல்லலாமான்னு தெரியலை, உங்க பேமிலிகிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று சொன்னவளின் கண்கள் விடாதுபொழிந்த கண்ணீர் என்னை என்னவோ செய்தது.

இது தெரிஞ்ச ஹாஸ்பிடல் டாக்டர் என் அண்ணாவோட நண்பன் நமக்கு என்ன மாதிரி ஹெல்ப் என்றாலும் செய்வதாக சொல்லி இருக்கிறார் என்றான் பரத்.

அவளை அருகில் அழைத்தேன்.. “கவலைப்படாதே நீ இவ்வளவு வருத்தப்படும்அளவு எனக்கு மோசமாக எதுவும் நிகழ்ந்து விட வில்லை.என் வாழ்வில் நடந்த பலமோசமான சம்பவங்களில் இதுவும் ஒன்று அவ்வளவுதான். நான் சந்தித்தித்தவர்களில் யாராவது ஒருத்தர் நல்வழி காட்டி இருந்தால் கூட இந்தஇழிநிலை வந்திருக்காது. இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் நான் தனியாக என்னசெய்து விட முடியும்? நான் இந்த சமூகத்தின் குப்பைமனசுக்காரர்களால்உருவாக்கப்பட்டவள். மனிதர்களின் மன வக்கிரங்களால் வஞ்சிக்கப்பட்டவள், எங்களை போன்ற குப்பை தொட்டிகள் இது போன்ற குப்பை மனம்கொண்டவர்களுக்கு நிச்சயம் தேவை. அதனால் என்னை பற்றி கவலை படாமல் நீபோய் உன் கல்யாண வேலையை பார்” என்று மெதுவாக கூறி விட்டு என்னைபார்த்து திரு திரு வென முழித்தவளை பொருட்படுத்தாமல் கண்களை மூடிகொண்டேன்.மனதிற்குள் மகனது உருவம் நிழலாட ஸ்கூலில் பீஸ் கட்ட ஒருவாரம் டைம் கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டு மன கண்ணையும் இறுக்க மூடி கொண்டேன்.
 
Status
Not open for further replies.
Top