All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
super 3 uds serththu padiththean ganamana paythivukal uravukkul ezhum chikkal kadai vegu arumai azhuththamana kadaiyaaha irukkum enna ninaikirean
superb mam aduththa pathivuiku aavaludan waiting mam(viji)
 

Ramyasridhar

Bronze Winner
ராணியம்மாவின் வரவிற்காக ஏங்கிக்கொண்டிருந்த அந்த உயிர், அவர் தன்னை காண மறுத்துவிட்டார் என விஷ்ணு கூறியபோதும் அவர் தன்னை குறித்து அப்படி கூறியிருக்க மாட்டார் என சரியாகவே கணிக்கிறது, அவ்வளவு ஆழமான நட்பு !!
மகவை ஈன்றாள் தான் தாயா !! அவனை தன் வயிற்றில் சுமக்காவிட்டாலும் மனதில் சுமந்த இவரும் அன்னையே ! அத்தகைய அவரின் ஆசையை நிறைவேற்ற முடியாததின் ஆதங்கம் அவர் மேலே கோபமாக வெடிக்க வைக்கிறது மகனை.. பிள்ளை கோபமெல்லாம் அன்னைக்கு ஒரு பொருட்டாகுமா.... கடைசி நிமிடங்களில் தன் மகன் எல்லா சந்தோஷத்தையும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்திவிட்டே விடைபெறுகிறார்.அவரின் கரம் அவனை வருடியதில் முகமலர்ந்து அவரிடம் தஞ்சம் புக நினைத்தவனின் மலர்ந்த முகம் கதறலாக மாறிய நிலை அந்தோ பரிதாபம் 😭😭😭

' உலகில் பிரியமானவர்கள் பக்கமிருந்தால் குறை கூட நிறையாகவே தெரியுமாம் '
அற்புதமான வரிகள் சிஸ் 👌😍

அவனிடம் சண்டையிட வந்த ஈஸ்வர் மனதினை கூட மென்மையாக்கி விடுகிறது இவனின் இரணம்.

'உணர்வுகள் உண்மையானால் எதிரியாக இருப்பவருக்கும் உதவி செய்ய முடியுமா? '

முடியும் என நிரூபித்திருக்கிறான் ஈஸ்வர். இல்லையேல் அவனுள் இருக்கும் மனிதம் அல்லவா மறித்து போயிருக்கும்.

அன்பிற்கு ஏங்கும் தேவகி ராஜனிடம் பேசுவதில் ஆச்சர்யமில்லை. 'எனக்கு என் அப்பா வேணும், இது ஒரு மகளோட கண்ணீர் உனக்கு புரியாது ' என்பதில் அவரின் ஏக்கம் அப்பட்டமாக தெரிகிறது.

கஜாவின் மரணம் ராணி பாட்டியை நிலைகுலைய செய்கிறது. தோழியை வழியனுப்ப அவர் மிதிக்க விரும்பாத வாசற்படியை கூட மிதிக்கிறார். தன் தோழியை நினைத்து அவர் பாடும் பாடல் மனதை உறுக்கிவிட்டது 😭

துக்க வீட்டில் செல்வம் தொடங்கி வைத்த குத்தல் பேச்சு, ராணி பாட்டி, ஈஸ்வர், விஷ்ணு இவர்களை மாறி மாறி பேச வைத்து, ராணி பாட்டி மற்றும் விஷ்ணுவின் மனதில் உள்ள வடுவை கீறிவிட்டுவிட்டது. அதோடு மட்டுமில்லாமல் தன் தாய் குறித்த தவறான பேச்சில் எந்த மகனுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் வயதையும் பொருட்படுத்தாமல் அவனை கை உயர்த்த வைத்து விட்டது. வர்ணா மட்டும் இடைபுகாமல் இருந்திருந்தால் அங்கே சூழல் இன்னும் மோசமாக மாறியிருக்கும். நிதானமடைந்த பின் தான் அவன் செய்ய துணிந்த காரியம் எத்தனை கீழானது என குமைகிறான்.


வலி ஒரு நொடியில்
அவனின் இயல்பை மாற்றி,
நிதானத்தை இழக்க செய்து,
அறத்தையும் மீற துணிந்ததெனில்
அந்த வலி எத்தகையதாக இருக்கும்.... !!!


நூலிழையில் அவள் இடைபுகாமல் இருந்திருந்தால் அந்த அறத்தையும் மீறி இருப்பான்.

வலிக் கொண்டு அவன்,
நேர்மையாக அவர், இடையில்
பெண்ணவள்.......

👌👌😍😍


டிஸ்லிபிடீமியா குறித்த தகவல் உடல் எடை அதிகம் உள்ளவர்களை தங்கள் உடல் நலனை குறித்து கவனம் கொள்ள வைக்கும் சிஸ் 👌😍
 
Top