Ramyasridhar
Bronze Winner
அம்மு அபாரம்அய்த்தை!!!!!!!!!!!
என் ஆதியில் (முதலில்) அடைக்கலம் கொடுத்தவளே ,உன் அந்தத்தை(முடிவு) விரைந்து முடித்தது ஏனோ ??
அன்னையில்லாமல் அல்லோல்பட வேண்டியனை அண்ணமிட்டு ஆதரித்தவளே!!!
உன்னை அடக்கம் செய்து பாவியாகிப் போனேன் நான்...
அன்று துற்றுவோர் துற்றலில் துணை நின்றவளே!!!!
இன்று நீ இவ்வுலகை விட்டு துறந்து சென்று என்னை துயரச்செய்வது
ஏனோ???
உன் நிலை அறிந்தும் உன்னை துரத்தினார்களே!!!!உயிர் துறக்கையிலும் அவர்களை உயரச் செய்து உயர்வாகியவளே!!!
உயிர்நீத்துப் போனதேனோ???
ஒய்யாராமாய் நீ அமர்ந்திருக்க, உனக்கு சேவகம் செய்திட நினைத்த என்னை ஒப்பாரி வைத்து ஓலமிடச் செய்துவிட்டாயே!!!
வாய்க்கு ருசியாய் உனக்கு உணவிட எண்ணிய என்னை,வாய்க்கரிசி இட வைத்து வக்கத்தவன் ஆக்கிவிட்டாயே!!!
வாழ்வுக் காத்த தெய்வமே!!
உன் வாழ்வு காக்காமல் பிழையாகிப் போனேன் நான்...
காப்பானாக என்னை காத்தவள் இன்று கரிக்கட்டையில், கையாலாகாதவனாகிப் போனேன் நான்....
காலத்தின் சூழ்ச்சியில் நீ தவறாகிப்போனது ஏனோ??உன் உயிர் மூச்சாகிய ராணி, உன்னை பேணிக் காக்காமல் போனதன் காரணம் என்னவோ???
ஈடேட்ற முடியுமா உன் இழப்பை...
ஈமக்காரியங்கள் முடிவுற்றும் உன்னிடம் ஒரு ஈகை(உதவி) பேனுகிறேன்..
ஜனனம் எடுத்துவிடு!!!!
என் கை சேர்ந்துவீடு!!!!
விரைவில் அம்முவிடம் இருந்து கதையை எதிர்பார்க்கலாம் போல