Sasimukesh
Administrator
சர்வேஸ்வரன் பால்கனியில் அமர்ந்தபடி ஏதோ யோசனையில் வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது அவனது அறை கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவு தட்டும் ஒலியிலேயே வந்திருப்பது யாரென்று அவனுக்குத் தெரிந்தது. அவன் புன்னகையுடன், "கம்மின்..." என்று உரக்க குரல் கொடுக்க... அடுத்த நொடி உதயரேகா விரைந்து வந்து அவன் முன் மூச்சிரைக்க நின்றாள்.
"ஓடி வந்தியா?" அவன் அவளைக் கண்டு கேட்க... அவள் பேச இயலாது ஆமென்று தலையை ஆட்ட... அவன் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான்.
"இல்லை வேண்டாம்." என்றவள் அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தாள். அவன் இரு விழிகளைச் சுருக்கியபடி அவளையே பார்த்திருந்தான்.
உதயரேகா கையிலிருந்த புகைப்படத்தை எடுத்து அவனது முகத்திற்குப் பக்கவாட்டுப் பகுதியில் வைத்து அவனையும், புகைப்படத்தையும் மாறி மாறி பார்த்தாள். அவனுக்கோ அவளது செய்கை புரியவில்லை. ஏனெனில் அவனுக்கு அந்தப் புகைப்படத்தில் இருப்பது யாரென்று தெரியவில்லை.
"ஏய், லூசு... என்னடி பண்ணிட்டு இருக்க?" அவன் கோபத்தோடு கேட்க...
"ஜோடி பொருத்தம் சூப்பர்." அவள் வலக்கை ஆள்காட்டி விரல், கட்டை விரலை சேர்த்து மகிழ்ச்சியோடு தலையை ஆட்டி சொல்ல... அவளைப் புரியாது பார்த்தவன் வெடுக்கென்று அவளது கரத்தில் இருந்த புகைப்படத்தைப் பறித்தான். அதைப் பார்த்ததும் தான் அவள் சொன்னதன் அர்த்தம் அவனுக்குப் புரிந்தது. அவனையும் அறியாது அவனது உதடுகள் புன்னகைத்தது.
"இதற்குத் தான் இத்தனை ஆர்ப்பாட்டமா?" அவன் அவளைக் கண்டு கேட்க...
"இல்லையா பின்னே... எத்தனை முக்கியமானவங்க அவங்க." என்றவள் அவனிடம், "அந்த ஃபோட்டோவை எனக்குக் கொடுங்களேன். நான் வச்சிக்கிறேன்." என்று கேட்க... அவன் ஒன்றும் பேசாது அந்தப் புகைப்படத்தை அவளிடம் திருப்பிக் கொடுத்தான். அவளும் அதைப் பத்திரமாக வாங்கி வைத்து கொண்டாள்.
"வாழ்த்துகள் பிரின்ஸ். உங்களுக்கு ஏத்த இளவரசி கிடைத்து விட்டாள்." என்றவளை அவன் பார்த்தபடி அமர்ந்திருந்தவன் பதில் பேசவில்லை. அது அவளுக்குத் தேவையும் இல்லை போலும்.
"எவ்வளவு நிறமா இருக்காங்க பாருங்க. சுண்டினால் ரத்தம் வரும் போலிருக்கு. அழகுன்னா அப்படி ஒரு அழகு." என்று அவள் சொல்லி கொண்டே போக... அவள் சொன்னதை மனக்கண்ணில் நினைத்து பார்த்தவனின் புன்னகை விரிந்தது. ஆமென்பது போல் அவன் தலையசைத்தான்.
"சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிட்டு வீடு நிறையக் குழந்தைகளைப் பெத்து போடுங்க பிரின்ஸ்." என்றவளை ஒரு மார்க்கமாய்ப் பார்த்தவன்,
"ஏன் நர்சரி நடத்த போறியா?" என்று கேட்க...
"ச்சேச்சே... அன்னைக்கு நான் உங்க கிட்ட சொன்னனேல்ல. நான் உங்க குழந்தைகளைக் கவனிச்சுக்குவேன்னு. அதைத் தான் செய்யப் போகிறேன்." அவளது வார்த்தைகளில் அத்தனை ஆனந்தம்.
"அப்போ பரணியை என்ன பண்ணுவதாய் உத்தேசம்?" அவன் கதை கேட்பது போன்று நாடியில் கையைப் பதித்து அவளைப் பார்த்திருந்தான்.
"ஏன் பரணி சாருக்கு என்ன?" அவள் புரியாது பார்க்க...
"நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டால்... என் குழந்தைகளை நீ எப்படிப் பார்த்துக் கொள்ள முடியும்?" அவன் அழுத்தம் திருத்தமாய் ஒரு மாதிரி குரலில் கேட்க... அதைக் கேட்டு அவள் வாய்விட்டு சிரித்தாள். அவன் சிரிக்காது அவளையே பார்த்திருக்க... அவளது சிரிப்பு சட்டென்று நின்றது.
"மன்னிச்சுக்கோங்க பிரின்ஸ்." என்றவள், "பரணி சார் இங்கே தான் டிரைவரா இருக்கப் போகிறார். நானும் இங்கே தான் வேலை பார்த்துக்கிட்டு இருக்கப் போகிறேன். அப்புறம் என்ன?" அவள் விளக்கம் கொடுக்க...
"காலம் முழுவதும் இங்கேயே வேலைக்காரியா இருக்கப் போறேன்னு சொல்லுற... அப்படித்தானே?"
"ஆமா பிரின்ஸ்... நான் உங்க குழந்தைகளைப் பத்திரமா பார்த்துக்கிறேன். நீங்க எந்தக் கவலையும் இல்லாம உங்க மனைவி கூட உலகத்தைச் சுத்தி வாங்க." அவள் மலர்ந்த முகத்துடன் கூற... அவன் அவளையே பார்த்தபடி எதையோ வாய்க்குள் முணுமுணுத்தான்.
"என்ன பிரின்ஸ்?" அவள் புரியாது அவனைப் பார்த்தாள்.
"உன் அன்பை கண்டு எனக்குப் புல்லரிச்சு போச்சு." என்றவன் புன்னகைத்தான்.
"எனக்குக் கல்யாணமானாலும் நான் அதே உதயரேகா தான். அதே உங்கள் அன்பு அடிமை உதயரேகா தான்." அவள் வலக்கையை மடக்கி நெஞ்சில் வைத்து தலைகுனிந்து பணிவுடன் சொல்ல...
சர்வேஸ்வரனின் கரம் அவளை நோக்கி நீண்டது. பின்பு என்ன நினைத்தானோ தனது கரத்தினைப் பின்னால் இழுத்துக் கொண்டான்.
"அப்போ காலையில் எனக்குப் பெட்காபி கொடுப்பதில் இருந்து... ராத்திரி எனக்குத் தண்ணீர் பாட்டில் எடுத்து வைக்கும் வேலை வரை... நீ எனக்குச் செய்யும் வேலைகளை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்னு சொல்லு." அவன் அவளைக் கேலி செய்ய...
"அது எனது பிறப்புரிமை." என்று அவள் பெருமையாக மார்தட்ட...
"உன் பக்தியை கண்டு யாம் மெச்சினோம் பக்தையே." அவன் குறும்புடன் ஆசிர்வதிப்பது போன்று கையை வைத்துக் கொண்டு சொல்ல... அவனை நிமிர்ந்து பார்த்தவள் கலகலவெனச் சிரிக்க... அவளது புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது.
"அப்புறம் உன்னோட வீரன், ஜூலி, ஜூலி பெத்த ஆறு குட்டிங்க எல்லாம் நல்லாயிருக்கா?" அவன் சன்னச்சிரிப்புடன் கேட்க...
"உங்களுக்கு ஞாபகம் இருக்கா பிரின்ஸ்?" அவளது விழிகள் வியப்பில் விரிந்தது.
"மறக்குமா?" என்றவனது புன்னகை அத்தனை வசீகரமாக இருந்தது.
"அவங்க எல்லாம் ரொம்ப நல்லா இருக்காங்க." என்றவள் ஐந்தறிவு கொண்ட அன்பு ஜீவன்களைப் பற்றிப் பக்கம் பக்கமாய்ப் பேச தொடங்க... அவன் புன்னகை மாறாது அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"பாருங்க, பேசி பேசியே உங்களைக் கொல்றேன். நீங்க ரெஸ்ட் எடுங்க." என்ற உதயரேகா எழுந்து செல்ல போக...
"பப்ளிமாஸ்..." அவனது குரலில் அவள் திரும்பி பார்த்தாள்.
"இந்தா... உனக்குத் தான்." அவன் பால்கனி ரோஜா செடியில் இருந்து ஒரு ரோஜாவை பறித்து அவளிடம் கொடுத்தான். அதைக் கண்டதும் அவளது விழிகள் ஆச்சிரியத்தில் விரிந்தது. தனது பால்கனி பூக்களைப் பறிக்க யாரையும் விடாதவன் இப்போது பறித்து அதுவும் தனக்காகப் பறித்துக் கொடுப்பது ஏன்?
"நன்றி பிரின்ஸ்." என்றபடி அவள் சந்தோசமாய் வாங்கிக் கொண்டாள்.
"ரோஸ் கலர் பிடிச்சிருக்கா?" அவனது கேள்வியில் அவள் ரோஜாப்பூவை பார்த்தாள். நல்ல சிவப்பு நிறத்தில் ரோஜாப்பூ அழகாக இருந்தது.
"நிறத்தில் என்ன இருக்கிறது பிரின்ஸ். பூவை கொடுத்தது நீங்க. எனக்கு உங்களைப் பிடிக்கும். அதே போல் நீங்க கொடுத்த பூவையும் பிடிக்கும்." என்றவளை அவன் இமைக்காது பார்த்தான்.
"தலையில் வச்சுக்கோ." அவன் சொன்னதும் அதை அவள் தட்டாது செய்தவள் அங்கிருந்து சென்றிருந்தாள். அவள் தலையில் இருக்கும் பூவை பார்த்தபடி அவன் அமர்ந்திருந்தான்.
**************************
சில நாட்கள் கழித்து ஒருநாள் மாலை வேளையில் சர்வேஸ்வரன் வழக்கம் போல் வீட்டிற்கு வந்த போது அவனுக்கு உதயரேகா காபி, டிபன் கொடுத்துவிட்டு செல்ல... அவனும் உண்டு விட்டு தனது அறைக்கு வந்தவன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு பால்கனியில் வந்து நின்றான். அங்கிருந்த ரோஜா பூக்களைக் கண்டவன் அதன் இதழ்களை மென்மையாக வருடி கொடுத்தான். அப்போது கீழே பேச்சு குரல் கேட்டது. அவன் என்னவென்று நிமிர்ந்து பார்த்தான். அங்கே உதயரேகா வீட்டின் முன் பரணி, பரணியின் பெற்றோர் நின்றிருந்தனர். எதற்காக வந்திருக்கிறார்கள்? என்று தெரியாது அவனுக்குத் தலை வெடிப்பது போலிருந்தது. அப்போது பட்டம்மாள், ரேகா இருவரும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். இந்தக் காட்சியைக் கண்டு சர்வேஸ்வரனின் முகம் இறுகி போனது.
சிறிது நேரம் சென்று பரணி மட்டும் வீட்டில் இருந்து வெளியில் வந்தான். சர்வேஸ்வரன் அவனைக் கூர்மையாகப் பார்க்க... பரணியும் இவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். பிறகு பரணி தனது அலைப்பேசியை எடுத்து வேண்டுமென்றே உரக்க கத்தி பேசலானான்.
"டேய், உனக்கு ஒரு விசயம் தெரியுமாடா? எனக்குக் கல்யாணம் முடிவு பண்ணியிருக்கோம். இப்போ தான் தேதி குறிச்சோம். ஆமான்டா, எல்லாம் பொண்ணு வந்த அதிர்ஷ்டம். சாதாரண டிரைவரா இருந்த நான் இப்போ பேங்க் மானேஜர் வேலைக்குத் தேர்வாகி இருக்கேன். அது அப்படி இல்லைடா. இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை எக்சாம் எழுதி இருக்கிறேன். ஆனா ஒரு தடவை கூட நான் தேர்வானது இல்லை. இப்போ தேர்வாகி இருக்கிறேன் என்றால்... அதுக்கு முழுக்காரணம் ரேகா தான்டா. அவள் தேவதை, என்னோட அதிர்ஷ்ட தேவதை." பரணி வேறு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினான்.
பரணி சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த சர்வேஸ்வரனின் முகம் உணர்வுகளை இழந்து இறுகி போனது.
அதேநேரம் சர்வேஸ்வரனின் பெற்றோர் மற்றும் தாரிகாவின் பெற்றோர் பிரபல சோதிடர் முன்னே அமர்ந்து இருந்தனர். தாமோதரனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் நடேசனுக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இருக்கின்றது. இந்தச் சோதிடர் அவரது ஆஸ்தான சோதிடர். அதனால் தான் நடேசன் தாமோதரனை இங்கே அழைத்து வந்துவிட்டார். மகள் மற்றும் வருங்கால மாப்பிள்ளையின் ஜாதகப் பொருத்தத்தைக் கண்டறிய வேண்டியே அவர் அனைவரையும் இங்கே அழைத்து வந்தது. நடேசனும், அவரது மனைவியும் பயபக்தியுடன் அமர்ந்து இருந்தனர்.
"என்னங்க இது? இந்தக் காலத்தில் போய் ஜோசியம் பார்க்கிறது நல்லாவா இருக்கு. சுத்த ஹம்பக்கா இல்லை. சோசியர் பொருத்தம் இல்லைன்னு சொன்னால் நம்ம சர்வாவை வேண்டாம்ன்னு சொல்லிருவாங்களா? சர்வாவை விட நல்ல மாப்பிள்ளையை அவங்களால் பார்க்க முடியுமா?" மந்தாகினி மகனது பெருமை பாட...
"வாயை மூடு மந்தாகினி. ஏதாவது அபசகுனமா பேசாதே." தாமோதரன் மனைவியைக் கடிய...
"சம்பந்தி காற்று இந்தப் பக்கம் வீசுது போலையே." மந்தாகினி நக்கலாய் சொல்ல... தாமோதரன் மனைவியை முறைத்தார். அதைக் கண்டு மந்தாகினி வாயை மூடி கொண்டார்.
சோதிடர் சர்வேஸ்வரன், தாரிகா இருவரது ஜாதகங்களையும் முன்னே வைத்து பார்த்துக் கொண்டு இருந்தார். இருவரின் ஜாதகத்தையும் தனித்தனியே எடுத்துப் பார்ப்பதும் பின்னே கீழே வைப்பதுமாய் இருந்தார். பிறகு அவர் விழிகளை மூடி தீவிர ஆலோசனையில் ஆழ்ந்தார். திடுமென விழிகளைத் திறந்தவர் அங்கிருந்த கடவுளின் படத்தை வெறித்துப் பார்த்தார். அவரது செயல்கள் எதுவும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. எல்லோருமே குழம்பி போயினர்.
"எதுவும் பிரச்சினையா?" தாமோதரன் தைரியமாகக் கேள்வி கேட்டுவிட... சோதிடர் அவரைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். அப்படியே தாமோதரன் அடங்கி விட்டார்.
"எதுவாக இருந்தாலும் சொல்லுங்க சாமி." நடேசன் பயபக்தியுடன் கேட்டார்.
"ரெண்டு பேரோட ஜாதகமும் ஆமோகமா பொருந்தி இருக்கிறது." சோதிடர் சொன்னதும் எல்லோரின் மனதிலும் நிம்மதி பரவியது.
"ஆனா ஒரு சின்னச் சிக்கல்..." என்றவரை கண்டு,
"என்ன சிக்கல் சாமி?" நடேசன் கவலையுடன் கேட்டார்.
"பையனுக்கு இரு தாரம் தோசம் இருக்கு. அவனுடைய முதல் மனைவி அல்ப ஆயுசில் போயிருவாள். இரண்டாவது மனைவி தான் நிலைத்து இருப்பாள்."
"ஐயோ, இதற்குப் பரிகாரம் இல்லையா?" நடேசனின் மனைவி கலக்கத்துடன் கேட்டார். தாமோதரன், மந்தாகினிக்கும் உள்ளுக்குள் சற்றுக் கலவரமாகத் தான் இருந்தது.
"வாழை மரத்துக்குத் தாலி கட்டி பரிகாரம் பண்ணுவாங்களே. அது மாதிரி பண்ணலாமா?" நடேசன் யோசனை சொல்ல...
"ம்ஹூம், அதுக்கு எல்லாம் அடங்கும் தோசம் இது இல்லை. வேணும்ன்னா ஒண்ணு செய்யலாம். தோசம் பத்தி வெளியில் சொல்லாமல் வேறு ஒரு பொண்ணைப் பார்த்து அவருக்குத் திருமணம் செய்து வையுங்கள். தோசத்தின் படி அவள் இறந்ததும் உங்க மகளை அவருக்கு இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வையுங்கள்."
"அதுக்காக ஒருத்தி எப்போ சாவாள்ன்னு காத்துக்கிட்டு இருக்கச் சொல்றீங்களா?" மந்தாகினி வெடுக்கென்று கேட்டு விட்டார். அவருக்குக் கோபம் வந்தது. என்ன இது என்று...
"நான் சொல்றது சொல்லிட்டேன். அதுக்கு மேல் உங்கள் விருப்பம்." என்ற சோதிடர் ஜாதகத்தை மூடி வைத்து விட்டார்.
பெற்றோர் நால்வரும் திகைப்பு நீங்காது அமர்ந்திருந்தனர்.
தொடரும்...!!!
"ஓடி வந்தியா?" அவன் அவளைக் கண்டு கேட்க... அவள் பேச இயலாது ஆமென்று தலையை ஆட்ட... அவன் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான்.
"இல்லை வேண்டாம்." என்றவள் அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தாள். அவன் இரு விழிகளைச் சுருக்கியபடி அவளையே பார்த்திருந்தான்.
உதயரேகா கையிலிருந்த புகைப்படத்தை எடுத்து அவனது முகத்திற்குப் பக்கவாட்டுப் பகுதியில் வைத்து அவனையும், புகைப்படத்தையும் மாறி மாறி பார்த்தாள். அவனுக்கோ அவளது செய்கை புரியவில்லை. ஏனெனில் அவனுக்கு அந்தப் புகைப்படத்தில் இருப்பது யாரென்று தெரியவில்லை.
"ஏய், லூசு... என்னடி பண்ணிட்டு இருக்க?" அவன் கோபத்தோடு கேட்க...
"ஜோடி பொருத்தம் சூப்பர்." அவள் வலக்கை ஆள்காட்டி விரல், கட்டை விரலை சேர்த்து மகிழ்ச்சியோடு தலையை ஆட்டி சொல்ல... அவளைப் புரியாது பார்த்தவன் வெடுக்கென்று அவளது கரத்தில் இருந்த புகைப்படத்தைப் பறித்தான். அதைப் பார்த்ததும் தான் அவள் சொன்னதன் அர்த்தம் அவனுக்குப் புரிந்தது. அவனையும் அறியாது அவனது உதடுகள் புன்னகைத்தது.
"இதற்குத் தான் இத்தனை ஆர்ப்பாட்டமா?" அவன் அவளைக் கண்டு கேட்க...
"இல்லையா பின்னே... எத்தனை முக்கியமானவங்க அவங்க." என்றவள் அவனிடம், "அந்த ஃபோட்டோவை எனக்குக் கொடுங்களேன். நான் வச்சிக்கிறேன்." என்று கேட்க... அவன் ஒன்றும் பேசாது அந்தப் புகைப்படத்தை அவளிடம் திருப்பிக் கொடுத்தான். அவளும் அதைப் பத்திரமாக வாங்கி வைத்து கொண்டாள்.
"வாழ்த்துகள் பிரின்ஸ். உங்களுக்கு ஏத்த இளவரசி கிடைத்து விட்டாள்." என்றவளை அவன் பார்த்தபடி அமர்ந்திருந்தவன் பதில் பேசவில்லை. அது அவளுக்குத் தேவையும் இல்லை போலும்.
"எவ்வளவு நிறமா இருக்காங்க பாருங்க. சுண்டினால் ரத்தம் வரும் போலிருக்கு. அழகுன்னா அப்படி ஒரு அழகு." என்று அவள் சொல்லி கொண்டே போக... அவள் சொன்னதை மனக்கண்ணில் நினைத்து பார்த்தவனின் புன்னகை விரிந்தது. ஆமென்பது போல் அவன் தலையசைத்தான்.
"சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிட்டு வீடு நிறையக் குழந்தைகளைப் பெத்து போடுங்க பிரின்ஸ்." என்றவளை ஒரு மார்க்கமாய்ப் பார்த்தவன்,
"ஏன் நர்சரி நடத்த போறியா?" என்று கேட்க...
"ச்சேச்சே... அன்னைக்கு நான் உங்க கிட்ட சொன்னனேல்ல. நான் உங்க குழந்தைகளைக் கவனிச்சுக்குவேன்னு. அதைத் தான் செய்யப் போகிறேன்." அவளது வார்த்தைகளில் அத்தனை ஆனந்தம்.
"அப்போ பரணியை என்ன பண்ணுவதாய் உத்தேசம்?" அவன் கதை கேட்பது போன்று நாடியில் கையைப் பதித்து அவளைப் பார்த்திருந்தான்.
"ஏன் பரணி சாருக்கு என்ன?" அவள் புரியாது பார்க்க...
"நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டால்... என் குழந்தைகளை நீ எப்படிப் பார்த்துக் கொள்ள முடியும்?" அவன் அழுத்தம் திருத்தமாய் ஒரு மாதிரி குரலில் கேட்க... அதைக் கேட்டு அவள் வாய்விட்டு சிரித்தாள். அவன் சிரிக்காது அவளையே பார்த்திருக்க... அவளது சிரிப்பு சட்டென்று நின்றது.
"மன்னிச்சுக்கோங்க பிரின்ஸ்." என்றவள், "பரணி சார் இங்கே தான் டிரைவரா இருக்கப் போகிறார். நானும் இங்கே தான் வேலை பார்த்துக்கிட்டு இருக்கப் போகிறேன். அப்புறம் என்ன?" அவள் விளக்கம் கொடுக்க...
"காலம் முழுவதும் இங்கேயே வேலைக்காரியா இருக்கப் போறேன்னு சொல்லுற... அப்படித்தானே?"
"ஆமா பிரின்ஸ்... நான் உங்க குழந்தைகளைப் பத்திரமா பார்த்துக்கிறேன். நீங்க எந்தக் கவலையும் இல்லாம உங்க மனைவி கூட உலகத்தைச் சுத்தி வாங்க." அவள் மலர்ந்த முகத்துடன் கூற... அவன் அவளையே பார்த்தபடி எதையோ வாய்க்குள் முணுமுணுத்தான்.
"என்ன பிரின்ஸ்?" அவள் புரியாது அவனைப் பார்த்தாள்.
"உன் அன்பை கண்டு எனக்குப் புல்லரிச்சு போச்சு." என்றவன் புன்னகைத்தான்.
"எனக்குக் கல்யாணமானாலும் நான் அதே உதயரேகா தான். அதே உங்கள் அன்பு அடிமை உதயரேகா தான்." அவள் வலக்கையை மடக்கி நெஞ்சில் வைத்து தலைகுனிந்து பணிவுடன் சொல்ல...
சர்வேஸ்வரனின் கரம் அவளை நோக்கி நீண்டது. பின்பு என்ன நினைத்தானோ தனது கரத்தினைப் பின்னால் இழுத்துக் கொண்டான்.
"அப்போ காலையில் எனக்குப் பெட்காபி கொடுப்பதில் இருந்து... ராத்திரி எனக்குத் தண்ணீர் பாட்டில் எடுத்து வைக்கும் வேலை வரை... நீ எனக்குச் செய்யும் வேலைகளை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்னு சொல்லு." அவன் அவளைக் கேலி செய்ய...
"அது எனது பிறப்புரிமை." என்று அவள் பெருமையாக மார்தட்ட...
"உன் பக்தியை கண்டு யாம் மெச்சினோம் பக்தையே." அவன் குறும்புடன் ஆசிர்வதிப்பது போன்று கையை வைத்துக் கொண்டு சொல்ல... அவனை நிமிர்ந்து பார்த்தவள் கலகலவெனச் சிரிக்க... அவளது புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது.
"அப்புறம் உன்னோட வீரன், ஜூலி, ஜூலி பெத்த ஆறு குட்டிங்க எல்லாம் நல்லாயிருக்கா?" அவன் சன்னச்சிரிப்புடன் கேட்க...
"உங்களுக்கு ஞாபகம் இருக்கா பிரின்ஸ்?" அவளது விழிகள் வியப்பில் விரிந்தது.
"மறக்குமா?" என்றவனது புன்னகை அத்தனை வசீகரமாக இருந்தது.
"அவங்க எல்லாம் ரொம்ப நல்லா இருக்காங்க." என்றவள் ஐந்தறிவு கொண்ட அன்பு ஜீவன்களைப் பற்றிப் பக்கம் பக்கமாய்ப் பேச தொடங்க... அவன் புன்னகை மாறாது அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"பாருங்க, பேசி பேசியே உங்களைக் கொல்றேன். நீங்க ரெஸ்ட் எடுங்க." என்ற உதயரேகா எழுந்து செல்ல போக...
"பப்ளிமாஸ்..." அவனது குரலில் அவள் திரும்பி பார்த்தாள்.
"இந்தா... உனக்குத் தான்." அவன் பால்கனி ரோஜா செடியில் இருந்து ஒரு ரோஜாவை பறித்து அவளிடம் கொடுத்தான். அதைக் கண்டதும் அவளது விழிகள் ஆச்சிரியத்தில் விரிந்தது. தனது பால்கனி பூக்களைப் பறிக்க யாரையும் விடாதவன் இப்போது பறித்து அதுவும் தனக்காகப் பறித்துக் கொடுப்பது ஏன்?
"நன்றி பிரின்ஸ்." என்றபடி அவள் சந்தோசமாய் வாங்கிக் கொண்டாள்.
"ரோஸ் கலர் பிடிச்சிருக்கா?" அவனது கேள்வியில் அவள் ரோஜாப்பூவை பார்த்தாள். நல்ல சிவப்பு நிறத்தில் ரோஜாப்பூ அழகாக இருந்தது.
"நிறத்தில் என்ன இருக்கிறது பிரின்ஸ். பூவை கொடுத்தது நீங்க. எனக்கு உங்களைப் பிடிக்கும். அதே போல் நீங்க கொடுத்த பூவையும் பிடிக்கும்." என்றவளை அவன் இமைக்காது பார்த்தான்.
"தலையில் வச்சுக்கோ." அவன் சொன்னதும் அதை அவள் தட்டாது செய்தவள் அங்கிருந்து சென்றிருந்தாள். அவள் தலையில் இருக்கும் பூவை பார்த்தபடி அவன் அமர்ந்திருந்தான்.
**************************
சில நாட்கள் கழித்து ஒருநாள் மாலை வேளையில் சர்வேஸ்வரன் வழக்கம் போல் வீட்டிற்கு வந்த போது அவனுக்கு உதயரேகா காபி, டிபன் கொடுத்துவிட்டு செல்ல... அவனும் உண்டு விட்டு தனது அறைக்கு வந்தவன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு பால்கனியில் வந்து நின்றான். அங்கிருந்த ரோஜா பூக்களைக் கண்டவன் அதன் இதழ்களை மென்மையாக வருடி கொடுத்தான். அப்போது கீழே பேச்சு குரல் கேட்டது. அவன் என்னவென்று நிமிர்ந்து பார்த்தான். அங்கே உதயரேகா வீட்டின் முன் பரணி, பரணியின் பெற்றோர் நின்றிருந்தனர். எதற்காக வந்திருக்கிறார்கள்? என்று தெரியாது அவனுக்குத் தலை வெடிப்பது போலிருந்தது. அப்போது பட்டம்மாள், ரேகா இருவரும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். இந்தக் காட்சியைக் கண்டு சர்வேஸ்வரனின் முகம் இறுகி போனது.
சிறிது நேரம் சென்று பரணி மட்டும் வீட்டில் இருந்து வெளியில் வந்தான். சர்வேஸ்வரன் அவனைக் கூர்மையாகப் பார்க்க... பரணியும் இவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். பிறகு பரணி தனது அலைப்பேசியை எடுத்து வேண்டுமென்றே உரக்க கத்தி பேசலானான்.
"டேய், உனக்கு ஒரு விசயம் தெரியுமாடா? எனக்குக் கல்யாணம் முடிவு பண்ணியிருக்கோம். இப்போ தான் தேதி குறிச்சோம். ஆமான்டா, எல்லாம் பொண்ணு வந்த அதிர்ஷ்டம். சாதாரண டிரைவரா இருந்த நான் இப்போ பேங்க் மானேஜர் வேலைக்குத் தேர்வாகி இருக்கேன். அது அப்படி இல்லைடா. இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை எக்சாம் எழுதி இருக்கிறேன். ஆனா ஒரு தடவை கூட நான் தேர்வானது இல்லை. இப்போ தேர்வாகி இருக்கிறேன் என்றால்... அதுக்கு முழுக்காரணம் ரேகா தான்டா. அவள் தேவதை, என்னோட அதிர்ஷ்ட தேவதை." பரணி வேறு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினான்.
பரணி சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த சர்வேஸ்வரனின் முகம் உணர்வுகளை இழந்து இறுகி போனது.
அதேநேரம் சர்வேஸ்வரனின் பெற்றோர் மற்றும் தாரிகாவின் பெற்றோர் பிரபல சோதிடர் முன்னே அமர்ந்து இருந்தனர். தாமோதரனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் நடேசனுக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இருக்கின்றது. இந்தச் சோதிடர் அவரது ஆஸ்தான சோதிடர். அதனால் தான் நடேசன் தாமோதரனை இங்கே அழைத்து வந்துவிட்டார். மகள் மற்றும் வருங்கால மாப்பிள்ளையின் ஜாதகப் பொருத்தத்தைக் கண்டறிய வேண்டியே அவர் அனைவரையும் இங்கே அழைத்து வந்தது. நடேசனும், அவரது மனைவியும் பயபக்தியுடன் அமர்ந்து இருந்தனர்.
"என்னங்க இது? இந்தக் காலத்தில் போய் ஜோசியம் பார்க்கிறது நல்லாவா இருக்கு. சுத்த ஹம்பக்கா இல்லை. சோசியர் பொருத்தம் இல்லைன்னு சொன்னால் நம்ம சர்வாவை வேண்டாம்ன்னு சொல்லிருவாங்களா? சர்வாவை விட நல்ல மாப்பிள்ளையை அவங்களால் பார்க்க முடியுமா?" மந்தாகினி மகனது பெருமை பாட...
"வாயை மூடு மந்தாகினி. ஏதாவது அபசகுனமா பேசாதே." தாமோதரன் மனைவியைக் கடிய...
"சம்பந்தி காற்று இந்தப் பக்கம் வீசுது போலையே." மந்தாகினி நக்கலாய் சொல்ல... தாமோதரன் மனைவியை முறைத்தார். அதைக் கண்டு மந்தாகினி வாயை மூடி கொண்டார்.
சோதிடர் சர்வேஸ்வரன், தாரிகா இருவரது ஜாதகங்களையும் முன்னே வைத்து பார்த்துக் கொண்டு இருந்தார். இருவரின் ஜாதகத்தையும் தனித்தனியே எடுத்துப் பார்ப்பதும் பின்னே கீழே வைப்பதுமாய் இருந்தார். பிறகு அவர் விழிகளை மூடி தீவிர ஆலோசனையில் ஆழ்ந்தார். திடுமென விழிகளைத் திறந்தவர் அங்கிருந்த கடவுளின் படத்தை வெறித்துப் பார்த்தார். அவரது செயல்கள் எதுவும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. எல்லோருமே குழம்பி போயினர்.
"எதுவும் பிரச்சினையா?" தாமோதரன் தைரியமாகக் கேள்வி கேட்டுவிட... சோதிடர் அவரைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். அப்படியே தாமோதரன் அடங்கி விட்டார்.
"எதுவாக இருந்தாலும் சொல்லுங்க சாமி." நடேசன் பயபக்தியுடன் கேட்டார்.
"ரெண்டு பேரோட ஜாதகமும் ஆமோகமா பொருந்தி இருக்கிறது." சோதிடர் சொன்னதும் எல்லோரின் மனதிலும் நிம்மதி பரவியது.
"ஆனா ஒரு சின்னச் சிக்கல்..." என்றவரை கண்டு,
"என்ன சிக்கல் சாமி?" நடேசன் கவலையுடன் கேட்டார்.
"பையனுக்கு இரு தாரம் தோசம் இருக்கு. அவனுடைய முதல் மனைவி அல்ப ஆயுசில் போயிருவாள். இரண்டாவது மனைவி தான் நிலைத்து இருப்பாள்."
"ஐயோ, இதற்குப் பரிகாரம் இல்லையா?" நடேசனின் மனைவி கலக்கத்துடன் கேட்டார். தாமோதரன், மந்தாகினிக்கும் உள்ளுக்குள் சற்றுக் கலவரமாகத் தான் இருந்தது.
"வாழை மரத்துக்குத் தாலி கட்டி பரிகாரம் பண்ணுவாங்களே. அது மாதிரி பண்ணலாமா?" நடேசன் யோசனை சொல்ல...
"ம்ஹூம், அதுக்கு எல்லாம் அடங்கும் தோசம் இது இல்லை. வேணும்ன்னா ஒண்ணு செய்யலாம். தோசம் பத்தி வெளியில் சொல்லாமல் வேறு ஒரு பொண்ணைப் பார்த்து அவருக்குத் திருமணம் செய்து வையுங்கள். தோசத்தின் படி அவள் இறந்ததும் உங்க மகளை அவருக்கு இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வையுங்கள்."
"அதுக்காக ஒருத்தி எப்போ சாவாள்ன்னு காத்துக்கிட்டு இருக்கச் சொல்றீங்களா?" மந்தாகினி வெடுக்கென்று கேட்டு விட்டார். அவருக்குக் கோபம் வந்தது. என்ன இது என்று...
"நான் சொல்றது சொல்லிட்டேன். அதுக்கு மேல் உங்கள் விருப்பம்." என்ற சோதிடர் ஜாதகத்தை மூடி வைத்து விட்டார்.
பெற்றோர் நால்வரும் திகைப்பு நீங்காது அமர்ந்திருந்தனர்.
தொடரும்...!!!