All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? தலைப்பும் நாயகன் நாயகி பெயர்களும் என்றும் போல் வித்தியாசமாய்...

எப்படி தேர்ந்தெடுக்கறீங்க சிவா?

ஒரு முழு நீள ஆக்‌ஷன் படத்தை பார்த்த உணர்வு.. அதில் கொஞ்சம் விஞ்ஞானமும் துப்பறிதலும் கலந்து எங்களை அடுத்து என்ன நடக்குமோ என்று நிமிர வைத்த ஒவ்வொரு நிகழ்வும் எங்கள் கண்முன் ஓடிக்கொண்டே இருப்பது போலவும் அதை நாங்கள் இரு கன்னத்தில் கை வைத்து கண்ணை கூட சிமிட்ட முடியாமல் ரசித்த ஒவ்வொரு நிகழ்வும் உயிரோட்டமாய்...

ஒரு சிலருக்கு மட்டும் தான் சண்டை காட்சிகளை எழுத முடியும் சிவா.. அதில் நீங்கள் 100% க்கும் மேல்... அற்புதம் சிவா... கூடவே அந்த ரொமான்ஸ் இருக்கே அப்பப்பா கண்ணுக்கு குளிர்ச்சி தான்...

தீரனின் ஒவ்வொரு வீரத்தையும் வர்ணித்தது அழகென்றால் அணாவின் மென்மையை வர்ணித்தவிதம் அழகோ அழகு... அதுவும் முடிவில் அவளின் காதலிற்காகவே அவன் அவனுடைய தொழிலை விட்டு வருவது காதலின் உச்சம்...

அப்பவும் தீரனை விட்டு கொடுக்காமல் முக்கியமானது என்றால் அழைப்பார்கள் என்றது தொழில் பக்தியின் உச்சம்..

மொத்தத்தில் ஆக்‌ஷனும், விஞ்ஞானமும் துப்பறிதலும் காதலும் சேர்ந்த அற்புதமான மன நிறைவான காவியம்...

வாழ்த்துக்கள் சிவா.. நன்றி...
எத்தனை நாளாயிற்று உங்களின் இந்த அற்புதமான பின்னூட்டத்தைப் படித்து, எப்போதும் போலப் படிக்கும் போது நிறைய எழுதவேண்டும் என்கிற உத்வேகம் பேரலையாக வருகிறது, மிக மிக மிக நன்றி சாந்தி. மிக மனமகிழ்வாக உணர்கிறேன், நிஜமாக நெகிழ்ந்து நிற்கிறேன், :love::love::love::love:
 

TM Priya

Well-known member
அநபாயதீரன்-இந்த ஃபயர் பற்றி குறிப்பிட்ட விதம் அழகு...இவனின் காதல்,சண்டை காட்சிகள்,வில்லனை சரியாய் கணித்தது,நாட்டுப்பற்று,ஆளுமை,விவேகம்,அதிரடி எல்லாமே பிரம்மிக்க வைத்தது மலர் சிஸ்.....தீரனின் தேசப்பற்றை அழகாக எழுதியிருந்தீர்கள் மா...அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் ஒவ்வொரு எபியின் இறுதியிலும் எழுந்ததை தடுக்க முடியவில்லை....


சிவார்ப்பணா-இந்த மென்மையான மலரை வர்ணித்த விதமும் அழகு மா...இவள் அறியாமல் இவளைச் சுற்றி நடந்த சதிகள்,தெரிந்த பின் இவளின் முகபாவனைகள்,இவளின் கிங்காங் மற்றும் இல்லையேல் இவளின் நிலை யோசிக்கவே முடியவில்லை..தீரனை வரவழைத்த விதம் சூப்பர்..என்னைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் என்னை டாவடித்ததுதான் அதிகம் என்பது வேற லெவல்😍😍😍😍🤩🤩🤩

ராகவன்-கேடி மா இவன்..தீரன் கேடிக்கு கேடி...ரகுவையே கொல்ல பார்த்தது,ரஷ்யாவில் ஒரு குடும்பம்,டேவிட்சனை கனடா விமானப்படையில் சேர்த்தி எவ்ளோ வேலை பார்த்திருக்கிறான்...நம்ம தீரன் விடுவனா என்ன...

வாமதேவன்-இந்த விஞ்ஞானி கண்டுபிடித்த கிருமிகள் கொண்ட தீங்கான ஆயுதமே கதையின் கருவாக அமைகிறது...

பிஜென் விஷ்வானந்த்-இந்தக் கனடியன் விமானப்படை உனக்குத் தாய்வீடு போல என்று தீரனிடம் கூறியதை ரசித்துப் படித்தேன் மா..எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மகனே அர்ப்பணாவிடம் அடங்கிப் போகும்போது இவரும் அடங்கத்தானே வேண்டும்.

ஸ்டோரி சூப்பர் மா...ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் உங்கள் எழுத்துப் பாணியில் சிறப்பு மா...
 

sivanayani

விஜயமலர்
அநபாயதீரன்-இந்த ஃபயர் பற்றி குறிப்பிட்ட விதம் அழகு...இவனின் காதல்,சண்டை காட்சிகள்,வில்லனை சரியாய் கணித்தது,நாட்டுப்பற்று,ஆளுமை,விவேகம்,அதிரடி எல்லாமே பிரம்மிக்க வைத்தது மலர் சிஸ்.....தீரனின் தேசப்பற்றை அழகாக எழுதியிருந்தீர்கள் மா...அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் ஒவ்வொரு எபியின் இறுதியிலும் எழுந்ததை தடுக்க முடியவில்லை....


சிவார்ப்பணா-இந்த மென்மையான மலரை வர்ணித்த விதமும் அழகு மா...இவள் அறியாமல் இவளைச் சுற்றி நடந்த சதிகள்,தெரிந்த பின் இவளின் முகபாவனைகள்,இவளின் கிங்காங் மற்றும் இல்லையேல் இவளின் நிலை யோசிக்கவே முடியவில்லை..தீரனை வரவழைத்த விதம் சூப்பர்..என்னைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் என்னை டாவடித்ததுதான் அதிகம் என்பது வேற லெவல்😍😍😍😍🤩🤩🤩

ராகவன்-கேடி மா இவன்..தீரன் கேடிக்கு கேடி...ரகுவையே கொல்ல பார்த்தது,ரஷ்யாவில் ஒரு குடும்பம்,டேவிட்சனை கனடா விமானப்படையில் சேர்த்தி எவ்ளோ வேலை பார்த்திருக்கிறான்...நம்ம தீரன் விடுவனா என்ன...

வாமதேவன்-இந்த விஞ்ஞானி கண்டுபிடித்த கிருமிகள் கொண்ட தீங்கான ஆயுதமே கதையின் கருவாக அமைகிறது...

பிஜென் விஷ்வானந்த்-இந்தக் கனடியன் விமானப்படை உனக்குத் தாய்வீடு போல என்று தீரனிடம் கூறியதை ரசித்துப் படித்தேன் மா..எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மகனே அர்ப்பணாவிடம் அடங்கிப் போகும்போது இவரும் அடங்கத்தானே வேண்டும்.

ஸ்டோரி சூப்பர் மா...ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் உங்கள் எழுத்துப் பாணியில் சிறப்பு மா...
என்ன சொல்லன்னு தெரியல. மனம் நெகிழ்ந்திருக்கிறேன். சிறந்த வாசகர்களின் விமர்சனம்தான் ஒரு கதாசிரியருக்கான மகுடம். உங்கள் வார்த்தைகள் ஒவ்வோன்றும் மகுடமாய் என் தலையில் சூடப்பட்‍டிருக்கின்றன. மிக மிக மிக நன்றி. பெருமதத்தில் மிதக்கிறேன் நான்,:love::love::love::love:
 

TM Priya

Well-known member
என்ன சொல்லன்னு தெரியல. மனம் நெகிழ்ந்திருக்கிறேன். சிறந்த வாசகர்களின் விமர்சனம்தான் ஒரு கதாசிரியருக்கான மகுடம். உங்கள் வார்த்தைகள் ஒவ்வோன்றும் மகுடமாய் என் தலையில் சூடப்பட்‍டிருக்கின்றன. மிக மிக மிக நன்றி. பெருமதத்தில் மிதக்கிறேன் நான்,:love::love::love::love:
உங்களுக்கும் என் நன்றி நயனிமா:love::love::love::love::love:அடுத்த கதை எப்போமா
 

sivanayani

விஜயமலர்
உங்களுக்கும் என் நன்றி நயனிமா:love::love::love::love::love:அடுத்த கதை எப்போமா
இன்னும் இரு கிழமைகளில் வந்துவிடுவேன். இப்போதைக்கு பழைய கதை ஒன்று திரும்பப் பதிவிடுகிறேன், நேரமிருந்தால் படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்,
 
Status
Not open for further replies.
Top