அத்தியாயம் 18:
எனக்கே தெரியாமல் எனக்குள்ளே வந்தவனே....
கணக்கே தெரியாமல் காயங்கள் நூறு தந்தவனே...
ஏறெடுத்தும் நீ பார்க்காமல் என் ரத்தம் உறையுதடா....
என் நரம்பே என்னை இன்று கட்டிப்போட்டு சிரிக்குதடா.....
நான்கு அறையில் நான் மாட்டியே நாளுக்கு நாள் சாகுறேனே..
உன் அன்பில் நான் மாட்டியே உயிர் போக வேண்டுகிறேனே....
ஆசையோடு நான் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும்..
அசையாமல் நீ நின்னு ஒத்துழைப்பு கொடுக்கணும்....
கூண்டுக்கிளியாய் இருந்த என்னை கவ்விப்போனாய் பூனையாய்...
சாகடித்தாலும் பரவாயில்லை கூட்டிப்போ கணவனாய்.....
விஸ்வாவின் வீட்டிற்கு வந்ததிலிருந்து அமைதியை கடன் வாங்கிக்கொண்டாள் ரீனா.
அப்படி இருக்க வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை ஆனால் அவளுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை.
அழுக்காகவே பிறந்து,அழுக்கிலையே வளர்ந்து அவள் செய்த பாவங்கள் ஒன்றா இரண்டா....?
இப்பொழுது கூட அவள் செய்த விஷயங்கள் சரியா தவறா என்று அவளுக்கு சொல்ல தெரியவில்லை...
அது சராசரி வாழும் பெண்களிலிருந்து,மனிதர்களிலிருந்து வித்யாசமாக இருந்திருக்கிறது,அடுத்தவர்களை நரகத்தில் தள்ளியிருக்கிறது,பலரின் கண்ணீருக்கு காரணமாக இருக்கிறது,பலரின் இறப்பிற்கு திறப்பு விழா செய்திருக்கிறது
அது மட்டுமே அவள் இப்பொழுது உணர்வது அதுவும் தனக்கு நடந்த அந்த நிகழ்விலிருந்துதான்.அதற்கு முன் அவள் மனநிலை தான் மிகவும் அதிருஷ்டசாலி தான் கேட்டது அனைத்தும் தனக்கு கிடைத்துவிடும்,எனக்கு விருப்பம் உள்ளதை நான் எடுத்துக்கொள்வேன், அதில் அடுத்தவர்களுடனான விருப்பம் ,வாழ்க்கை,எதுவும் அவளுக்கு தேவை இல்லை
தேவை இல்லை என்று சொல்வதை விட தெரியவில்லை என்றேதான் சொல்லவேண்டும்.
நியாயங்கள் ,அநியாயங்கள் எல்லாமே தான் வளர்க்க பட்ட விதம்,சூழ்நிலை , சுற்றி உள்ளவர்களை வைத்தே நம் மூலையியிலும் ,செயலிலும் வார்க்கப்படுகின்றன.
அதனால் தான் குழந்தைகள் முன் சண்டைபோடுவதையோ, கொச்சை வார்த்தைகள் பேசுவதையே நம் முன்னோர்கள் ஆதரிப்பது இல்லை.
மீன்,கோழி, ஆடு இன்னும் சில கடல் வாழ் உயிரினங்களை நாக்கை சுழற்றி வித விதமாக சமைத்து சாப்பிடும் நாம் மாட்டு கறி தின்பவர்களையும், வெளிநாடுகளில் பாம்பு கறி, பண்ணி கறி தின்பவர்களையும்,இன்னும் சில காட்டு பகுதிகளில் மனித மாமிசத்தை தின்பவர்களையும் அருவருப்பாகவும், கொடியவர்களாகவும் கொலைகாரர்களாக பார்ப்பது
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை..
இதில் வெஜ் பிரியர்களும் அடக்கம் அவர்களின் நியாயம் லெதர் ஷூ,லெதர் பேக் என்றும் ,ஆயிரம் தேனீக்களை அழித்து “நாங்கள் மலைத்தேன் தான் சாப்பிட்டுவோம் “ என்ற பெருமையிலும், பிரசவம் முடிந்து 4 நாட்களே ஆன பசுவின் காம்பை அது சிவக்கும் வரை கறந்து சுத்தமான பால்,சுத்தாமன நெய் என்று அவர்கள் சுத்தம் பேசுவதிலும் அநியாயங்களாக மாற்றப்படுகிறது..
நம்மை கடிக்கும் ஒரு கொசுவை கொன்றாலும் அதுவும் ஒரு உயிர் இழப்புதான்.....ஒரு மனிதனை கொன்றாலும் அது உயிர் இழப்புதான்
நல்லது,கெட்டது, சரி ,தவறு எல்லாம் நம் சாதகமான நிலை(comfortable zone) மற்றும் நமக்காக எழுதிக்கொண்ட ரூல் புக்கின் அடிப்படையில் இடத்தை பொறுத்து மாறுபடுகிறது.
அதே போல் அநீதியின் பக்கத்திலையே வளர்ந்த ரீனா இப்படி இருப்பது பெரிய ஆச்சரியம் இல்லை என்றே தோன்றுகிறது...
மகாபாரத போரின் பெரும் மனித இழப்பில் கண்ணனை பார்த்து ஒரு சாமானியன் “எதற்கு இவ்வளோ பெரிய போர் ,இவ்வளவு பெரிய மனித இழப்பு , நீயோ இயக்குபவனாய் இருக்கையில் “ என்று கோபமாக கேட்டானாம்.
அதற்கு கண்ணன் சிரித்துக்கொண்டே “ பூமியில் மனிதத் தொகை அதிகமாகி விட்டது இப்படி ஏதாவது போர் வைத்தால் தான் அதை குறைத்து சரி செய்ய முடியும்” என்றானாம்...
(என்ன ஒரு வில்லத்தனம் உனக்கும் ,சகுனிக்கும் பெரிய வித்தியாசம் இல்லைனு சரியதான் எல்லோரும் சொல்றாங்க)
கொஞ்சம் யோசித்து பாருங்கள் யாரும் சாகவில்லை ,எந்த உயிர்களும் சாகவில்லை நம் உலகின் நிலைமையை
இருக்க இடமில்லாமல் நிரம்பி வழிவதோடு மட்டும் இல்லாமல் எல்லாவற்றிலும் பற்றாக்குறை ஏற்படும்.
உலகில் எல்லோரும் வெஜ் மட்டும் சாப்பிட்டால் உலகின் உணவு பற்றாகுறையின் அளவும், மற்ற உயிர்களின் உற்பத்தியும் நினைக்கவே நம்மால் முடியவில்லை அது மட்டும் நடந்தால் ...?
அதனால் தான் ஆறு அறிவு உள்ள மனித இனத்தை அழிப்பதை கடவுள் வேலையாகவும், நம்மை விட குறைந்த அறிவுடைய மற்றவற்றை அழிக்க நம்மையும் படைத்திருக்கிறான் போல இறைவன் ....
அவரின் சேவகர்களாக முன் ஜென்ம கர்மாவின் அடிப்படையில் கே, ஆர்( ரீனாவின் அண்ணன்), ரீனா போன்றவர்களை படைத்து அவரின் தேவையோ, அல்ல அவர்களின் கர்மாவின் தண்டனை காலம் ஏதோ ஒன்று முடித்த பிறகு அவர்களை யாரோ ஒருவரை வைத்து அழிப்பதோ இல்லை ,அவர்களை திருந்த செய்யும் வேலையையும் செய்து விடுகிறார்.
( இப்ப என்னமா உனக்கு ....ரீனா கெட்டவளா இருக்குறதுக்கு, அவளோட சூழ்நிலையும்,ஏற்கனவே விதிக்க பட்டதும் தான் காரணம் அவ்வளோதான.. புரிஞ்சிடிச்சு...நீ கிளம்பு ......எப்ப பாரு பத்து பக்கத்துக்கு பிலாசபி பேசிக்கிட்டு....)
ரீனாவின் மனநிலை பிறந்த குழந்தையின் மன நிலையில் இருந்தது, இந்த மனிதர்களின் உலகம் புதிதாக இருந்தது ,அதில் வாழ வேண்டும் என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை குறைந்த பட்சம் அதை புரிந்து கொள்ளவேண்டும்..
தான் இதுவரை செய்தது பாவம் என்று அறிந்ததற்க்கே அவள் தன்னை அழித்துக்கொள்ள முடிவு செய்து விட்டாள்.
ஆனால் அது ஒரு நொடி வலியல்லவா,அது அவளுக்கு வேண்டாம் என்று நினைத்தவள் தான் உயிருடன் வாழ்வதுதான் தனக்கான சரியான தண்டனை என்று அவள் வாழ ஆரம்பித்தாள்.
அது அவ்வளவு சுலபாமாக இல்லை..கொஞ்சம் கொஞ்சமாக. தன் பாவத்தின் வீரியமும் ,அதனால் வாழ்க்கை இழந்தவர்களை பார்க்கும் போது அவளின் வலியை அவளால் தங்க முடியவில்லை...
இருந்தும் இந்த தண்டனை தனக்கு வேண்டும் என்று அனுபவித்து கொண்டிருக்கிறாள்.
மற்றவர்களை விட அவள் அகலிக்கு கொடுத்த வலி சாதாரணம் தான்.
அதற்கே அவள்படும் துன்பங்களை அன்று விஸ்வா சொன்னதை கேட்டவள் “ஒரு பூ மனதுகாரியை பிய்த்து எரிந்து விட்டோமே “என்று அவள் அன்று வரை தூங்கவில்லை...
அதுவும் நேற்று தான் வந்ததிலிருந்து அவள் தன் கூடவே இருந்து தன்னை” அக்கா அக்கா” என்று அழைத்து உயிரை விடுவது
அப்பொழுது அவள் அடைந்த உணர்வை அவளால் சொல்ல முடியவில்லை...
விஸ்வாவின் தோழி என்றே ஒரே காரணத்திற்க்காக அவர்கள் வீட்டார்கள் காட்டும் அன்பு இதுவரை
அவள் அறிந்து இருக்கிறாளா என்றால் கண்டிப்பாக இல்லைதான்..
எல்லாவற்றையும் யோசித்து கொண்டு அமர்ந்தவளை “ மாமா வலிக்கும், வேண்டாம் வேண்டாம் பிளீஸ்” என்று கெஞ்சும் அகலியின் குரல் கலைத்தது.
அவள் நிமிர்ந்து பார்க்கும் போது ப்ளூ கலர் 3 4த் பேண்ட் ,வைட் கலர் டீசேர்ட்டில் ஓடிவரும் அகலி கண்ணில்பட்டாள்...
அந்த உடையில் மிகவும் குட்டி பெண்ணாக இருந்தவளை பார்க்க மீண்டும் நொந்து போனாள்..
அவளை துரத்திக்கொண்டு விஸ்வாவின் குடும்பமே வர அகலி ரீனாவின் அருகில் வந்ததும் கண்ணன் அவளை நோக்கி பிடிக்குமாறு கண்ணை காட்ட
அவளுக்கு எங்கே அதெல்லாம் புரியும்.அவள் அப்படியே நிற்க மீண்டும் சத்தமாக சொல்லவும் அவளை பிடித்துவிட்டாள்.
கையில் ஒரு “மெடிக்கல் கிட்” டுடன் நிற்கும் அகலி ரீனாவை நோக்கி “ அக்கா பிளீஸ் அக்கா விடுங்க என்று கண்ணீரோடு சொல்ல அவள் கண்ணீர் ஒரு மாதிரி ஆக அவள் பிடியை தளர்த்த அந்த கேப்பில் அவள் கையில் உள்ளதை அந்த வீட்டின் பின் உள்ள கிணற்றில் போட்டு வந்தவள்...
“அப்பாடா” என்று அங்கு உள்ள சோபாவில் அமர,
அவள் குடும்பமே அவளை முறைத்துக்கொண்டு நின்றது.விஸ்வா மட்டும் அசதியான சிரிப்புடன் அவள் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.
காரணம் இதுதான் விஸ்வாவிருக்கு தொடர் அலைச்சலால் உடம்பு வலி ,காய்ச்சல்,தலை வலி வந்துவிட்டது
காலையில் டாக்டர் வந்து அவனை பரிசோதித்து” ஒரு இன்ஜெக்க்ஷன் போட்டால் சரியாகிவிடும்” என்று சொல்லி அவர் ஊசியை போட வர
ஒரே எட்டில் அவர் அருகில் சென்றவள் “ ஊசியை பிடிங்கி ஜன்னல் வழியே வெளியே எறிந்தவள்
“ ஊசியெல்லாம் போடாதீங்க ,மாமக்கு வலிக்கும் அப்பறம் கை வீங்கி போயிடும், கசக்காத டானிக் கொடுங்க அதுலயும் சரியா போகலானா மாத்திரை கொடுங்க “என்றாள்,
( அவனுக்கு போட்டு அந்த ஊசிக்கு வலிக்காம இருந்தா சரி...வானத்து அளவு வளர்ந்து நிக்கிறான்..வலிக்குமா வலிக்கும் )
தான் அவனுக்காக ஹாஸ்ப்பிட்டலில் பட்ட துயரங்கள் , இரண்டு வருடமாக தான் பட்ட கஷ்டம் எல்லாவற்றையும் விட தன் மாமானின் இந்த வலி அவளுக்கு பெரியதாய் தெரிவதை பெருமை படுவதா வேதனை படுவதா என்று அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க
டாக்டர் கடமையே கண்ணாக” இது என்ன சின்ன புள்ளை தனமா” என்று மீண்டும் ஒரு ஊசியை எடுக்க போக நொடியில் அவரின் மெடிக்கல் கிட்டை அபேஷ் செய்து கொண்டு
“ குட்டிமா” என்ற விஸ்வாவின் குரலில் இப்போது திரும்பி அவன் கண்களை பார்த்தால் கண்டிப்பாக அவன் சொல்வதை செய்ய தோன்றும் என்று தெரியவே
“மாமா வலிக்கும் “ என்று திரும்பி பார்க்காமல் சொன்னவள் ரீனாவின் கையில் மாட்டிக்கொண்டாள்.
“ அய்யோ மாமாவிற்கு ஊசி போட்டுடிவங்களோ “என்று கண்கள் கண்ணீருடன் அவளுடன் மன்றாடி அதை டிஸ்போஸ் செய்துவிட்டே ஓய்ந்தாள்..
தன் அருகில் அமரும் தன் மாமனை பார்த்தவள் “அய்யோ திட்ட போறங்களே “என்று பயம் வர
“ஊசி வலிக்கும் மாமா “என்று தலையை குனிந்து கொண்டே சொல்ல அங்கு உள்ள எல்லோரும் விஸ்வா உட்பட அனைவரும் சிரிக்க
நடந்ததை முருகன் ரீனாவிடம் சொன்னார்
அதை கேட்ட ரீனாவிற்கு சிரிப்பிற்கு பதில் அழுகை வந்தது “ அய்யோ குழந்தை” என்று..
சுந்தரி ”அப்பறம் உன் மாமனுக்கு எப்படிமா காய்ச்சல் சரியாகும்” என்க
அகலி “ அத்தம்மா அம்மா சின்ன வயசுல எங்கயாவது விழுந்து எனக்கு அடிப்பட்டுட்டுனா எனக்கு எங்க அடிப்பட்டதோ அங்க ஒரு கிஸ் கொடுப்பாங்க சரியாகிடும்” என்று சொன்னவள்
விஸ்வாவின் இரண்டு கண்ணகளையும் பிடித்து இரண்டு நெத்தி பொட்டுகளிலும் முத்தம் கொடுத்தாள்.
( தலை வலிய சரி பணரங்களாம்..... கருமம் கருமம்)
சுந்தரிக்கு வெட்கம் வந்துவிட கல்யாணம் என்று ஒன்று ஆனது தெரிந்தாலாவது அம்மா என்ற முறையில் அவளுக்கு எதுவும் சொல்லி கொடுக்கலாம்
இப்ப அதற்கும் வழி இல்லை என்று தன்னை நொந்து கொண்டவர் அந்த இடத்தை தன் கணவனோடு காலி செய்ய
உள்ளே அழுதுக்கொண்டு வெளியே மரம் போல் நின்றவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கண்ணனும் அந்த இடத்தை காலி செய்தான்.
அவன் கையை இழுத்ததும் சுயம் திரும்பியவள் எதுவும் பதில் சொல்லாமல் அவனிடம் இருந்து கையை உருவியவள் நிதர்சனமான முகத்தோடு
அந்த இடத்தை விட்டு காலி செய்தாள். அவள் சென்ற திசையையே பார்த்து கொண்டு நின்றான் கண்ணன்.
இங்கே விஸ்வாவோ அகலியை சீண்டி கொண்டிருந்தான்
“குட்டிமா தலை வலி சரியாயிட்டி அப்படியே அந்த உடம்பு வலியையும் ,காய்ச்சலையும் சரி பண்ணிடு” என்று விசமமாக சிரிக்க
( நீ இப்படியே குடும்பம் பண்ணு விளங்கிடும்)
அது புரிந்தாள் இது நம் அகலி இல்லையே அவனிடம் “ம்ம்ம்ம் “என்றவள், தலைவலிக்கு தலையில முத்தம் கொடுத்தோம் உடம்பு வலிக்கு தனக்கு தானே பேசிக்கொண்டவள்.
“மாமா எங்கே வலிக்குது “என்றாள் அவன் தன் தலை முதல் கால்வரை தன் கைகளால் காட்டினான்.
அவன் முகத்தை இரு கைகளால் பிடித்துக்கொண்டவள் அவன் நெத்தி,கண்,காது, கன்னம் என்று தன் முத்திரையை பதித்துக்கொண்டே வர
அது அவனுக்கு பொக்கை வாய் உள்ள பல் இல்லாத அறு மாத குழந்தை முத்தம் கொடுக்கிறேன் பேர்வழி என்று முகத்தை எச்சில் பண்ணுமே அது போல் தான் இருந்தது..அதில் அவனின் அந்தரங்க உணர்வுகள் எதுவும் தூண்ட படவில்லை ,
மாறாக என்னவள் கள்ளம்,கபடம் இல்லாமல் தூய்மையானவள் என்றே தோன்ற “போதும் டா இப்ப வலி போய்டிச்சி “என்றவன்
அவளை தன் நெஞ்சோடு இறுக்க அணைத்துக்கொண்டான்,அவளும் சொகுசு பூனையாய் அவனின் பொசு பொசு மார்பு முடிகள் உரச அவனுக்குள் புதைந்து கொண்டாள்..
விஸ்வாவின் அருகில் அவளின் கவலைகள் துயரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது..ஒருவேளை விஸ்வாவிருக்கு அவளின் நிலை முன்னமே தெரிந்திருந்தாள் அப்பவே அவளுக்கு விமோச்சனம் கிடைத்திருக்குமோ என்னவோ..
அன்று மாலை விஸ்வாவின் வீட்டின் முன் உள்ள ஆற்று மணலில் ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டியபடி தன் கைகளால் மணலை நீள வாக்கில் குவித்து அதில் ஒரு சின்ன குச்சியை ஒழித்து வைத்து பக்கத்து வீட்டு குட்டி பெண்ணோடு விளையாடி கொண்டிருக்க அவள் விளையாடுவதை விஸ்வா நிறைவோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
கண்ணன் தன் தம்பி மனைவியை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான் தன் குழந்தை போல என்பதை தவிர வேறு ஒரு கோணத்தில் பார்க்க முடியவில்லை அவ்வளவு குழந்தைத்தனம் அவள் முகத்தில்..
இந்த குழந்தையை வைத்துக்கொண்டு தன் தம்பி எப்படி குடும்பம் நடத்த போகிறான் என்ற கவலையும் இல்லாமல் இல்லை
அவளை பார்த்துக்கொண்டே பார்வையை திருப்பியவனின் கண்ணில் வெறுமையாக அமர்ந்திருக்கும் ரீனா பட்டாள்.
அது அமைதியா ,சோகமா என்று அவனுக்கு தெரியவில்லை வந்ததிலிருந்து அவள் பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
அது அவள் பேசக்கூடாது என்பதை போல் அல்லாமல் பேசத் தெரியாத நிலையாகவே அவனுக்கு தெரிந்தது தனிமையின் கொடுமை அவனுக்கு தெரியுமே அவன் அனுபவித்த நரகம் ஆயிற்றே..
அவளை பார்க்கும் போதெல்லாம் தன்னை பார்ப்பதை போல் தான் அவனுக்கு தெரியும்..
அவள் ஒரு முறை சிரித்தால் அழகாக இருக்கும் என்று அவன் மனம் சொன்னது
( அந்த ஆணவ சிரிப்பை நீ பார்த்தே ஆகனுமா டா தம்பி வேண்டாம் அவள் பிளாஷ்பேக் கேட்ட நீ காலி...)
அவர்கள் அவர்கள் எண்ணத்தில் எல்லோரும் மூழ்கி இருக்க அங்கே ஒரு கார் நின்றது..
அதில் ராஜா ,சந்தோஷ், ஜனனி மூன்று பேரும் இறங்கினார்கள்...
சந்தோஷை பார்த்ததும் அவளின் சொந்த உணர்வு தோன்ற வேகமாக அவனை அருகில் சென்று பக்கவாட்டில் நின்று கொண்டு அவன் இடுப்பை பிடித்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..
கண்ணீரோடு அவளை தன் வலக்கையால் அவளை அணைத்துக்கொண்டான்.
அவன் இறங்கியதும் அவளை பார்த்துவிட்டான் உடல் முழுவதும் மண்ணோடு அவளின் வெள்ளை சட்டை முழுவதும் அழுக்கு கலரில் இருக்க
“இவள் என் தேனுகுட்டி , இரண்டு வருடமாக தொலைந்து போன என் குழந்தை, தொலைத்தவனாளையே கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டிருக்கிறாள்” என்ற நிறைவு தந்த கண்ணீர் அது.
நன்றி உணர்வோடு தன் நண்பனை பார்த்தான்.
அருகில் உள்ள ராஜாவை பார்த்து “ டேய் தம்பி எப்படி இருக்கு “ என்க
ரொம்ப நாட்களுக்கு பிறகு அவளின் தன்னை சீண்டும் அழைப்பு அவனுக்கும் கண்களில் கண்ணீரே “ உன்னை விட நான் ஒரு வயசு பெரியவன் டீ என்றான் குரலில் கரா கரப்புடன்
அவளும் “ சாந்தோஷிற்கு தம்பினா எனக்கு தம்பித்தான்” என்று எப்பொழுதும் சொல்லும் பதிலை சொல்லிக்கொண்டு சந்தோஷி அழைத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
சந்தோஷ்” தேனுகுட்டி நீ இன்னும் சின்ன புள்ளை இல்லை ,இந்த மாறி சின்ன புள்ளை விளையாட்டலாம் விளையாட கூடாது,அப்பறம் எப்பொழுதும் புடவை கட்ட முடியாலனாலும் சுடிதார் போட்டுகனும்,இந்த மாறி ட்ரெஸ்ல்லாம் போட கூடாது என்று பெண் வீட்டானாய் அவளுக்கு அறிவுரை வழங்கினான்.
திடிரென்று ஏன் இதெல்லாம் சொல்கிறான் என்று அவளின் குட்டி மூளை யோசிக்காமல் சந்தோஷ் சொன்னாள் அது சரியே என்ற மனநிலையில் பிறந்ததிலிருந்து இருந்தவள்
“ சரி சந்தோஷ்” என்றவள் உடனே உடை மாற்ற உள்ளே சென்றாள்
“ குட்டிமா எல்லோருக்கும் வேலைக்கார அக்காட சொல்லி குடிக்க எடுத்துட்டு வா” என்ற விஸ்வாவின் குரலில் “சரி மாமா” என்று சொல்லி உள்ளே சென்றாள்.
“ அவள் இஷ்டத்துக்கு இருக்கட்டும் அவளை இப்படி இரு அப்படி இருன்னு தொல்லை பண்ணதா டா,எனக்கு இவள்ட பிடிச்சதே இந்த குழந்தைதனம் தான்” என்றான்.
சந்தோஷ்” அது இல்லை டா மச்சான், கட்டிக்கிட்டு வந்த வீட்டில இப்படி இருக்குறது தப்பு அதான் “ என்றான்.
விஸ்வா “ அப்ப ஜனனி உங்க வீட்டுக்கு வந்தாலும் அவளை இப்படி எல்லாம் இருக்க சொல்லி கட்டாயப்படுத்துவியோ” என்றான் சற்று காட்டமாக
இந்த காரணத்தால் ஜனனியை தனக்கு திருமணம் செய்து கொடுக்காமல் போய் விடுவானோ என்ற எண்ணம் மட்டும் மனம் முழுவதும் ஆக்கிரமிக்க
தலையில் கைவைத்து நின்ற ஜனனியோ, “அண்ணா மாட்டிக்கிட்டானே “ என்ற முழித்துக்கொண்டு நிற்கும் ராஜாவையோ ,நமட்டு சிரிப்புடன் நிற்கும் கண்ணனையோ அவன் கவனிக்காமல்
சந்தோஷ்” இல்லை டா விச்சு,தக்காளி எங்க வீட்டில எப்படி வேணுன்னா இருக்கலாம், எங்க வீட்டில் யாரும் எதுவும்சொல்ல மாட்டாங்க,
அகலிய நான் இனி எதும் சொல்ல மாட்டேன் நீ எதும் விபரீதமா முடிவு எடுக்காத “ என்று மூச்சு விடாமல் சொன்னவன் எல்லோரும் தன்னை வித்யாசமாக பார்த்த பின்னே தான் உளரியது புரிய நாக்கை கடித்து கொண்டான்.
தான் சொல்லாமல் அவனுக்கு தெரிந்து விட்டதே என்று குற்ற உணர்வோடு தன் நண்பனை பார்க்க அவன் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட விஸ்வா அவனை அணைத்துக்கொண்டு
“உன்னை விட ஒரு நல்ல அடிமை என் தங்கச்சிக்கு தேடினாலும் கிடைக்க மாட்டான் டா, அதனால நீ என்னிடம் சொல்லனு வருத்த படாத,நான் உன் தேனுக்குட்டிக்கு பண்ணத விட இதெல்லாம் கம்மி தான்” என்றான் துயரம் அப்பிய குரலில்
அவனின் துயரத்தை கேட்டு தன்னை தெளிந்து கொண்ட சந்தோஷ்
” அதெல்லாம் இல்ல டா நான் உடனே உன்னிடம் வந்து பேசிருந்தா இவ்வளோ நாள் ஆகிருக்காது,என் மேலே தான் எல்லாம் தப்பும்” என்றான்.
உண்மையில் இந்த பிரச்சனைக்கு காரணம் ஆனவள் அவர்களின் இந்த பாசத்தை ஏதோ ஒரு புது உலகத்தை பார்ப்பது போல் பார்த்தாள்.
இது வரை அவளுக்கு இது மாதிரி ஒரு நிகழ்வு நடந்திருக்கா என்று யோசித்தால் அவளின் பதில் இல்லை என்றே இருந்தது.
தன் அண்ணன் இறந்த போது கூட தனக்கு அழுகை வர வில்லை ,மாறாக தன் கூட இருக்கும் ஒரு நபர் இனி இல்லை என்ற லேசான வருத்தம் மட்டுமே இருந்தது.
அதை நினைத்து இன்று பார்ப்பவளுக்கு கஷ்டமே “ சராசரி மனிதனுக்கு உள்ள சாதரண உணர்வுகள் கூட எனக்கு மறுக்கபட்டது ஏன் என்று குழம்பி போனாள்.
இப்பொழுதுதான் சந்தோஷ் ரீனாவை கவனித்தான்
ரீனாவை பற்றி அவனுக்கு நன்கு தெரியும் அவளின் குணம் என்றுமே அவனுக்கு பிடிக்காது.
இருந்தாலும் தனக்கு தெரிந்தவளை கண்டு அவனுக்கு முகம் திருப்பவும் மனம் இல்லாமல் “ ரீனா நீங்க என்ன இங்க , எப்படி இருக்கீங்க” என்றான்.
அவனின் கேள்விக்கு “ ம்ம் இருக்கேன்” என்ற பதிலோடு அவள் அங்கிருந்து சென்றுபவிட்டாள்.
அவளின் மாற்றம் அவன் கண்களிலும் தப்பாமல் விழுந்தது..
சந்தோஷ் விஸ்வாவை கேள்வியாக பார்க்க சொல்கிறேன் என்பதோடு நிறுத்திக்கொண்டான்.
ஜனனி சந்தோஷமாக தன் அண்ணனின் அருகில் வந்தவள் “ விச்சு உனக்கு எப்படி தெரியும் “ என்று கேட்டாள்.
விஸ்வா” நீங்க அன்னைக்கு ஹஸ்ப்பிட்டலில் முழிச்சு முழிலையே எனக்கு லேசா சந்தேகம் வந்தது, அதுக்கு அப்புறம் உன் பிரண்ட் நிம்மிட போன் பண்ணி கேட்டப்ப அவள் எல்லாத்தயும் சொல்லிட்டாள்.
அகலி பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்பறம் இதை பத்தி பேசிக்கலாம்னு நானும் விட்டுட்டேன்,அம்மா ,அப்பாட்ட எப்பவோ பெர்மிஷன் வாங்கியாச்சி,
அம்மா இனி என் பசங்களோட விருப்பம்தானு சொல்லிட்டாங்க ,ஆனால் அண்ணன் கல்யாணம் என் கல்யாணம் எல்லாம் அவசரகதில முடிஞ்சதால கொஞ்சம் நாள் ஆனாலும் ரொம்ப சிறப்பாக செய்யணும் என்று மட்டும் சொன்னார்கள் “ என்றான்
கல்யாணம் என்றதும் சந்தோசம் என்றாலும் எல்லோருடைய நினைவும் அகலியை நோக்கி செல்லவே அதை புரிந்து கொண்ட விஸ்வா “ குட்டிமா ட நான் பேசிக்கிறேன்” என்றான்.
அவர்களின் எண்ணத்தின் நாயகி சாக்கலேட் கலர்முழு கை சுடிதாரில் அவர்களை நோக்கி வந்து கொண்டிருக்க அவர்களின் பேச்சு தடைப்பட்டு போனது.
விஸ்வா சந்தோஷின் காதில் “ டேய் இப்ப பாரு உன் தேனுகுட்டி உன் பக்கத்துல வந்து உட்காருவா பாரு”, நீ வந்தா அவளுக்கு என் நியாபகமே வரவே வராது பாரு” என்க
அவன் வாக்கை காப்பாற்றுபவள் போல் அவள் சந்தோஷின் அருகே போக
விஸ்வா “ அம்மு இங்க என் பக்கத்துல வந்து உட்காரு டி, அவன் கருப்பு உனக்கு ஒட்டிக்க போகுது “என்றான் விளையாட்டாய் .
ஜனனி தன் அண்ணனை பார்த்து பொய்யாக முறைக்க அவன் சும்மா என்று கண்ணை காட்ட அவளும் சிரித்துக்கொண்டே எதுவும் சொல்லவில்லை.
அகலியும்” சரி “ என்று அவன் அருகில் சென்று அமர்ந்து அவன் காதில் மெதுவாக “ மாமா பக்கத்துல உடகார்ந்தலாம் கலர் ஒட்டிக்காது”,என்று ஏதோ அவனுக்கு தெரியாததை சொல்வது போல் கண்ணை உருட்டி உருட்டி சொல்ல
அவனும்” அப்படியா டி அய்யோ எனக்கு தெரியாதே” என்றான்.
எல்லோரும் அவர்களின் சிரிப்பை தொண்டைக்குள்ளையே முழுங்கினர்.
அதன் பின் வெளியில் சென்ற முருகனும் ,சுந்தரியும் வந்து எல்லோரும் சந்தோசத்துடனும் ,ரீனா சொல்ல முடியாத ,சொல்ல தெரியாத உணர்வுடன் இரவு உணவை முடித்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு எல்லாம் அவர்கள் அவர்கள் அறையில் நுழைய
அகலியும் , விஸ்வாவும் தங்கள் அறைக்கு சென்றனர்.
ஆம் அன்று விஸ்வா முத்தம் கொடுத்ததிலிருந்தது இருவரும் ஒரு அறையில் தான் தூங்குகிறார்கள்.
அதற்கு தான் தன் அன்னையிடம் போட்ட குட்டிக்காரணம் எல்லாம் நினைவு வந்து தானே சிரித்துக்கொண்டான்.
அவரும் கண்டிப்பான வார்த்தைகளை அவனுக்கு அறிவுரை சொல்லியே அதற்கு ஒத்துக்கொண்டார்.
இயல்பான பெண்களுக்கே உள்ள மறுப்பு,கூடாது என்ற உள்ளுணர்வு அகலிக்கும் வந்தது.
ஆனால் அவை எல்லாம் தன் மாமன் ,தன் வீர் என்ற நிலையில் பின்னுக்கு தள்ள தன் தாய் தந்தை,அப்பத்தா மாதிரி அவனும் தன் குடும்பம் என்று நினைத்து ஒத்துக்கொண்டாள்.
அவள் உள்ளே சென்றதும் கதவை மூடியவன் தன் இரு கைகளையும் அகல விரித்து “ குட்டிமா மாமாவை கட்டிக்கோ” என்றான்.
அவளும் சந்தோசமாக அவனை அணைத்துக்கொண்டு அவனின் நெஞ்சு வரை மட்டுமே இருப்பவள் அவன் இடுப்பை கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் தன் தாடையை வைத்து அண்ணாந்து அவன் முகத்தை பார்த்து கண்களை விடாமல் நான்கு சிமிட்டு சிமிட்டவும் அந்த அழகில் தன்னை தொலைத்தவன் அவள் கண்களில் இரு முத்தம் வைத்து அவளை இறுக்கி கொண்டான் இன்னும் நன்றாக
“குட்டிமா நான் உன்னிடம் ஒன்னு சொல்ல போறேன் அதுக்கு முன்னாடி மாமா எப்பொழுதும் உன் கூட இருப்பேன் ,உனக்கு சின்ன கஷ்டம்னா கூட நான் துடிச்சு போய்ட்டுவன்,எனக்கு நீ மட்டும்தான் எல்லாம் “ என்றான்.
“தெரியும்” என்றவள் அவனை நன்கு கட்டிக்கொண்டாள்
அவனும் அவளை பாதுகாப்பாக பிடித்துகொண்டு “ அம்மு ஜனனியும் , சந்தோசும் ஒருத்தவங்க ஒருத்தவங்களை விரும்புறாங்க , நம்ம வீட்டுல எல்லோருக்கும் ஓகே ,அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கணும் “ என்று
சொன்ன தாமதத்தில் அவள் உடல் ஒரு முறை நடுங்க அவளை இன்னும் இறுக்கி பிடித்துக்கொண்டான்
வருவாள்
மிளாணி
ஹாய் பிரண்ட்ஸ்
காதலன் நெக்ஸ்ட் ud போட்டுட்டேன்..படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..
தாமதத்திற்க்கு மன்னிக்கவும்..
Office வேலை வீட்டிலும் தொடர்வதால் தொடர்ந்து ud போட முடியவில்லை ...
ஒரு கதையே எழுத்துகிட்டு நீ போடுற சீன் தாங்கலை என்று நீங்கள் தலையில் அடித்து கொள்வது எனக்கு தெரிகிறது..
முடிந்த வரை சரியாக ud கொடுக்க முயற்சி செய்கிறேன்...
கடைசி பதிவிற்கு choo சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..
என்னை புரிந்து கொண்டு காத்திருந்த அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்
மிளா
அத்தியாயம் 18:
எனக்கே தெரியாமல் எனக்குள்ளே வந்தவனே....
கணக்கே தெரியாமல் காயங்கள் நூறு தந்தவனே...
ஏறெடுத்தும் நீ பார்க்காமல் என் ரத்தம் உறையுதடா....
என் நரம்பே என்னை இன்று கட்டிப்போட்டு சிரிக்குதடா.....
நான்கு அறையில் நான் மாட்டியே நாளுக்கு நாள் சாகுறேனே..
உன் அன்பில் நான் மாட்டியே உயிர் போக வேண்டுகிறேனே....
ஆசையோடு நான் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும்..
அசையாமல் நீ நின்னு ஒத்துழைப்பு கொடுக்கணும்....
கூண்டுக்கிளியாய் இருந்த என்னை கவ்விப்போனாய் பூனையாய்...
சாகடித்தாலும் பரவாயில்லை கூட்டிப்போ கணவனாய்.....
விஸ்வாவின் வீட்டிற்கு வந்ததிலிருந்து அமைதியை கடன் வாங்கிக்கொண்டாள் ரீனா.
அப்படி இருக்க வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை ஆனால் அவளுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை.
அழுக்காகவே பிறந்து,அழுக்கிலையே வளர்ந்து அவள் செய்த பாவங்கள் ஒன்றா இரண்டா....?
இப்பொழுது கூட அவள் செய்த விஷயங்கள் சரியா தவறா என்று அவளுக்கு சொல்ல தெரியவில்லை...
அது சராசரி வாழும் பெண்களிலிருந்து,மனிதர்களிலிருந்து வித்யாசமாக இருந்திருக்கிறது,அடுத்தவர்களை நரகத்தில் தள்ளியிருக்கிறது,பலரின் கண்ணீருக்கு காரணமாக இருக்கிறது,பலரின் இறப்பிற்கு திறப்பு விழா செய்திருக்கிறது
அது மட்டுமே அவள் இப்பொழுது உணர்வது அதுவும் தனக்கு நடந்த அந்த நிகழ்விலிருந்துதான்.அதற்கு முன் அவள் மனநிலை தான் மிகவும் அதிருஷ்டசாலி தான் கேட்டது அனைத்தும் தனக்கு கிடைத்துவிடும்,எனக்கு விருப்பம் உள்ளதை நான் எடுத்துக்கொள்வேன், அதில் அடுத்தவர்களுடனான விருப்பம் ,வாழ்க்கை,எதுவும் அவளுக்கு தேவை இல்லை
தேவை இல்லை என்று சொல்வதை விட தெரியவில்லை என்றேதான் சொல்லவேண்டும்.
நியாயங்கள் ,அநியாயங்கள் எல்லாமே தான் வளர்க்க பட்ட விதம்,சூழ்நிலை , சுற்றி உள்ளவர்களை வைத்தே நம் மூலையியிலும் ,செயலிலும் வார்க்கப்படுகின்றன.
அதனால் தான் குழந்தைகள் முன் சண்டைபோடுவதையோ, கொச்சை வார்த்தைகள் பேசுவதையே நம் முன்னோர்கள் ஆதரிப்பது இல்லை.
மீன்,கோழி, ஆடு இன்னும் சில கடல் வாழ் உயிரினங்களை நாக்கை சுழற்றி வித விதமாக சமைத்து சாப்பிடும் நாம் மாட்டு கறி தின்பவர்களையும், வெளிநாடுகளில் பாம்பு கறி, பண்ணி கறி தின்பவர்களையும்,இன்னும் சில காட்டு பகுதிகளில் மனித மாமிசத்தை தின்பவர்களையும் அருவருப்பாகவும், கொடியவர்களாகவும் கொலைகாரர்களாக பார்ப்பது
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை..
இதில் வெஜ் பிரியர்களும் அடக்கம் அவர்களின் நியாயம் லெதர் ஷூ,லெதர் பேக் என்றும் ,ஆயிரம் தேனீக்களை அழித்து “நாங்கள் மலைத்தேன் தான் சாப்பிட்டுவோம் “ என்ற பெருமையிலும், பிரசவம் முடிந்து 4 நாட்களே ஆன பசுவின் காம்பை அது சிவக்கும் வரை கறந்து சுத்தமான பால்,சுத்தாமன நெய் என்று அவர்கள் சுத்தம் பேசுவதிலும் அநியாயங்களாக மாற்றப்படுகிறது..
நம்மை கடிக்கும் ஒரு கொசுவை கொன்றாலும் அதுவும் ஒரு உயிர் இழப்புதான்.....ஒரு மனிதனை கொன்றாலும் அது உயிர் இழப்புதான்
நல்லது,கெட்டது, சரி ,தவறு எல்லாம் நம் சாதகமான நிலை(comfortable zone) மற்றும் நமக்காக எழுதிக்கொண்ட ரூல் புக்கின் அடிப்படையில் இடத்தை பொறுத்து மாறுபடுகிறது.
அதே போல் அநீதியின் பக்கத்திலையே வளர்ந்த ரீனா இப்படி இருப்பது பெரிய ஆச்சரியம் இல்லை என்றே தோன்றுகிறது...
மகாபாரத போரின் பெரும் மனித இழப்பில் கண்ணனை பார்த்து ஒரு சாமானியன் “எதற்கு இவ்வளோ பெரிய போர் ,இவ்வளவு பெரிய மனித இழப்பு , நீயோ இயக்குபவனாய் இருக்கையில் “ என்று கோபமாக கேட்டானாம்.
அதற்கு கண்ணன் சிரித்துக்கொண்டே “ பூமியில் மனிதத் தொகை அதிகமாகி விட்டது இப்படி ஏதாவது போர் வைத்தால் தான் அதை குறைத்து சரி செய்ய முடியும்” என்றானாம்...
(என்ன ஒரு வில்லத்தனம் உனக்கும் ,சகுனிக்கும் பெரிய வித்தியாசம் இல்லைனு சரியதான் எல்லோரும் சொல்றாங்க)
கொஞ்சம் யோசித்து பாருங்கள் யாரும் சாகவில்லை ,எந்த உயிர்களும் சாகவில்லை நம் உலகின் நிலைமையை
இருக்க இடமில்லாமல் நிரம்பி வழிவதோடு மட்டும் இல்லாமல் எல்லாவற்றிலும் பற்றாக்குறை ஏற்படும்.
உலகில் எல்லோரும் வெஜ் மட்டும் சாப்பிட்டால் உலகின் உணவு பற்றாகுறையின் அளவும், மற்ற உயிர்களின் உற்பத்தியும் நினைக்கவே நம்மால் முடியவில்லை அது மட்டும் நடந்தால் ...?
அதனால் தான் ஆறு அறிவு உள்ள மனித இனத்தை அழிப்பதை கடவுள் வேலையாகவும், நம்மை விட குறைந்த அறிவுடைய மற்றவற்றை அழிக்க நம்மையும் படைத்திருக்கிறான் போல இறைவன் ....
அவரின் சேவகர்களாக முன் ஜென்ம கர்மாவின் அடிப்படையில் கே, ஆர்( ரீனாவின் அண்ணன்), ரீனா போன்றவர்களை படைத்து அவரின் தேவையோ, அல்ல அவர்களின் கர்மாவின் தண்டனை காலம் ஏதோ ஒன்று முடித்த பிறகு அவர்களை யாரோ ஒருவரை வைத்து அழிப்பதோ இல்லை ,அவர்களை திருந்த செய்யும் வேலையையும் செய்து விடுகிறார்.
( இப்ப என்னமா உனக்கு ....ரீனா கெட்டவளா இருக்குறதுக்கு, அவளோட சூழ்நிலையும்,ஏற?