அத்தியாயம் 10:
தனிமையில்
தவிப்போடு புலம்புகிறேன்.......
தாபங்கள்
கொண்டு உயிர் சிதைகிறேன்....
தலைவனின்
ஸ்பரிசங்கள் தனிமையில் உயிரை நெருங்க...
உருகுகிறேன்
ஊன் மறந்து ...
கலங்குகிறேன்
கண்ணீர் கொண்டு..
தீண்டும் பொருள்களிலெல்லாம்
தன்னவனின் ஞாபகங்கள்.....
பார்க்கும் பார்வைகளிலெல்லாம்
ஸ்பரஸ்பர நெருக்கங்கள்.......
இரவிலும் அவனின்
இன்ப வேதனையில் மறப்பது கொஞ்சம் உறக்கத்தை..
தென்றல் கொஞ்சம்
தேகம் தொட்டால் தீயாகிறது உடல்.....
கொண்டவனின் பிரிவு
மாற வழியில்லையோ....
மயங்குகிற மாலைப்பொழுதில்
வாடுகிறது என் மனம்.......
பிரியமானவனின் நினைவுகள் நில்லாமல் காதல் வன்முறை ஏற்படுத்த
காயமுற்றவளாய் கண் கலங்கினேன்...
உணர்வுகளின் கொடுமையில் உயிர் கருக காத்திருக்கிறேன் காதலனுக்காக...
அவனை கண் கொண்டு பார்க்க முடியவில்லை சந்தோஷால். தன் குழந்தையின் வாழ்க்கையிலும் தன் நண்பனின் வாழ்க்கையிலும் அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்று யூகிக்க முடியவில்லை.
விஸ்வாதன் தன் தேனுக்குட்டியின் இந்த நிலைமைக்கு காரணம் அவன் புறக்கணிப்பு அவளின் பூ மனதை நோக செய்திருக்கும் என சந்தோஷ் நினைத்துக்கொண்டிருக்க ...அதற்கு மாறாக முகம் முழுக்க வேதனையுடன் தன் முன்னே அமர்ந்திருக்கும் தன் நண்பனை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
எது எப்படியோ இவர்கள் இருவரையும் நேரில் சந்திக்க வைத்தால்தான் என்ன நடந்ததென்று உண்மை தெரியும் என்று விஸ்வாவை கை தாங்களாக தூக்கி "ஹாஸ்பிடல் போகலாம் " என்றான்.
விஸ்வாவோ முகத்தில் வழிந்த ரத்தத்தை பொருட்படுத்தாமல் “ இல்லை எனக்கு ஒன்னும் வலி இல்லை நான் அம்முகுட்டிய பார்த்துவிட்டு ஹாஸ்பிடல் போய்க்கிறேன் டா” என சிரித்துக்கொண்டே சொல்ல சாந்தோஷிற்கு சொல்ல முடியாத வேதனை வந்துவிட்டது.
சரி என்று அழைத்துக்கொண்டு அலுவலகத்தின் பின்வாசல் வழியாக கார் பார்க்கிங் சென்றான்..
**********
அங்கே கழுத்தில் இப்பொழுதுதான் கட்டப்பட்டதற்கான அடையாளமாய் தன் மஞ்சள் நிறம் மாறாமல் பார்த்தால் கண்களையும் மனதையும் ஒரு நேரத்தில் குளிர்ச்சி அடைய செய்யும் தன் தெய்வீக தன்மையோடு அகலியின் கழுத்தை அலங்கரிதுக்கொண்டிருந்தது அந்த மாங்கல்யம்.
அதற்கு மாறாக கண்கள் முழுக்க கண்ணீரோடு இரு கைகளையும் கூப்பி கொஞ்சிக்கொண்டிருந்தாள் தன் கணவன் விஸ்வாவை பிடித்துக்கொண்டிருக்கும் நான்கு அடியாட்களையும் , அவனை நோக்கி கத்தியை கொண்டுபோகும் ஒருவனிடமும்.
“ அய்யோ மாமாவ விட்டுடுங்க அவர எதும் செய்யாதிங்க நான் போய்டுறேன் அவர் எனக்கு வேண்டாம் அவரை உயிரோட விட்டுருங்க எனக்கு தாலி வேண்டாம் என தன் தாலியை அறுத்து எறிந்துவிட்டு, அவரோட கல்யாண வாழ்க்கை வேண்டாம்...
மாமா கண்ணுக்கு தெரியாம நான் எங்கேயாவது தொலைஞ்சி போய்விடுகிறேன் உங்களுக்கு உயிர்தான் வேணும்னா என்னை கொன்னுடுங்க என் மாமாவை விட்டுருங்க” என அவள் கத்தி கத்தி அழ
அவள் கத்துவதை கேட்க அங்கே யாரும் இல்லை “ அது எப்படி உன் கழுத்துல தாலி கட்டிட்டு இவன் உயிரோடு இருப்பானா” என ஏலனக்குரலில் சொன்னவன் .
அவளின் கண் முன்னே விஷம் தடவிய கத்தியை விஷ்வாவின் வயிற்றில் சொருகி, சொருகிய வண்ணமே கத்தியை மேல் நோக்கி தூக்கி அவன் கொடலையும் அறுத்தான்.
தன் கண்முன்னே தான் உயிரோடு இருக்கும் போதே தன் உயிர் போவதை தடுக்க முடியாமல் தன் மாமானின் உடலோடு உடலாக மயங்கி சரித்தாள்.
திடீரென்று கனவில் இருந்து விழித்த அகலி உடல் முழுக்க நடுங்க வியர்த்து வழிய...இதய துடிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்க “ மாமா மாமா என ஜெபம் போல் ஜெபித்துக்கொண்டே வெறி பிடித்தவள் போல் ரூமை விட்டு வெளியே வரவும் கவி கதவை திறக்கவும் சரியாக இருக்க
அங்கே தன் மாமனை உடல் முழுவதும் ரத்தத்தோடு பார்த்தவள் தூக்கி வாரி போட "மாமா" என்ற பெரும் கேவளோடு அவனை கட்டிக்கொண்டவள் இன்னும் கனவில் இருந்து மீளாமல் தன் மாமன் உயிர்த்தெழுந்து வந்துவிட்டான் என நினைத்துக்கொண்டு அவன் அணைப்பிலேயே அவன் நெஞ்சிலுருந்து தன் முத்தத்தை தொடங்கி அவன் முகம் முழுக்க தன் முத்தத்தால் இல்லை இல்லை தன் காதலால் அவனை நனைத்தாள்.
அவன் முகத்தில் வழியும் ரத்தத்தை பொருட்படுத்தாமல் அவன் கண் ,மூக்கு.வாய்,காது ,முடி என ஒவ்வொரு பாகமாய் மெதுவாக தடவியவள் தன் உயிரை பாதுகாக்கும் வேகத்தோடு அவனை இன்னும் இன்னும் அவளோடு இறுக்கி கொண்டாள் அவளின் இறுக்கம் விஸ்வாவிற்கே வலியை கொடுக்கும் அளவுக்கு இருந்தது..
“ தேனுக்குட்டி” என்ற சந்தோஷின் தழுதழுத்த அழைப்பில் தன் கனவு உலகத்திலிருந்து வெளியே வந்தவள் சடாரென்று விஸ்வாவின் அணைப்பிலுருந்து வெளிவந்து
அவன் ரத்தம் கொட்டும் முகத்தை பார்க்க அசரீரி போல் ஒரு கொடூர குரல் அவள் மனதின் உள்ளே கேட்டது.
வேகமாக யாரும் இல்லாத சுவற்றின் பக்கம் திரும்பியவள்
“ மாமாவ ஒன்னும் பண்ணாதீங்க ..நான் நான் தெரியாம மாமாவை பார்க்கில் பார்த்துட்டேன், இனி பார்க்க மாட்டேன் அவரை அடிகாதிங்க நான் நான்.....இப்பவே சந்தோஷட ஊருக்கு போயிடுறேன் “
சந்தோஷ் அவளை கைகளை பிடித்து தடுக்க அதை எல்லாம் கேட்கும் நிலையில் அவள் இல்லை.அவன் கையை உருவிக்கொண்டு அவள் மீண்டும் மீண்டும் அதையே செய்தாள்
( தான் பார்க்கில் விஸ்வாவை பார்த்தது தான் அவனின் இந்த ரத்தம் கொட்டும் முகத்திற்கு காரணம் என அவளின் மனம் முழுதாக நம்பியது)
யாரும் இல்லாத அங்கே யாரோ இருப்பது போல் காலில் விழுவது போல் விழுந்து விழுந்து எழுந்தாள்.
இன்னும் ஏது ஏதோ பேசிக்கொண்டும் அழுதுக்கொண்டும் இருந்தவள் ஒரு கட்டத்தில் அப்படியே மயங்கி சரிந்தாள்.
உடல் பலம் இல்லாமல் மயங்கினாலும் ..அவள் ஆழ் மனம் முழித்துக்கொண்டுதான் இருந்தது.
அப்பொழுதும் அவள் வாய் ஓயாமல் மாமா மாமா என்று உளறிக்கொண்டே தன் ஒரு கையும் காலும் வெட்டு வந்தது போல் இழுக்க அவளின் கரு விழி இரண்டும் மேலே சொருகி வெள்ளை முழி மட்டும் அரை மயக்கத்தில் தெரிந்தது.
அவளின் அசாத்திய நடவடிக்கையில் அப்படியே சிலை என உறைந்தான் விஸ்வா.
சந்தோஷ் “ விஸ்வா அகலிய தூக்கு நான் போய் கார் ஸ்டார்ட் பண்றேன்”
ஏற்கனவே இது போல் ஒருமுறை நடந்திருப்பதால் சந்தோஷ் அவளை மருத்துவமனை அழைத்துப்போவதின் முக்கியத்துவத்தை உணர்ந்து விரைந்து செயல்பாட்டான்.
விஸ்வாவிடம் சொல்லிவிட்டு வாசல் வரை சென்றும் கூட விஸ்வா அவன் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை.
அவனின் மூளை மரத்து சந்தோஷின் வார்த்தைகள் அவன் காதில் விழுந்தாலும் அவனால் உடனே செயல் படமுடியவில்லை.
அவனின் உலகம் “ மாமாவை எதும் பண்ணாதீங்க என்ற அவளின் வார்தையிலேயே உறைந்து விட்டது.
அவனின் நிலை உணர்ந்த சந்தோஷ் வேகமாக அருகில் வந்து அவன் கன்னத்தில் வேகமாக ஒரு அறைவிட்டான்.
அதில் தெளிந்தவன் “ குட்டிமா' என்று வேகமாக அகலியிடம் சென்றவன் அவளை கைகளில் ஏந்தி கொண்டு வேகமாக காரை நோக்கி சென்றான் .
அவளின் வெட்டும் உடலும் அவள் பேசுவதையும் கேட்க முடியாமல் “சந்தோஷ் வேகமாடா” என்று நண்பனிடம் சொல்லிக்கொண்டே வந்தான்..
அவனிற்கு கொஞ்சமும் குறையாத தவிப்போடு இருந்த சந்தோஷ் ” கவியிடம் சொல்லி தமிழை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் வர சொன்னவனின் கையில் கார் மின்னல் வேகத்தில் சீறி சென்று ஜனனி வேலை பார்க்கும் மருத்துவமனை வாசலில் நின்றது.
அதற்குள்ளே அகலி உடம்பில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவன் கைகளிளே துவண்டு விட்டாள்
அவளை தூக்கிக்கொண்டு “ பாப்பு” என கத்திக்கொண்டே ஓடினான்.அவன் குரலை கேட்டு வெளிய வந்தவள் தன் அண்ணனையும் ...அவன் கையில் இருக்கும் தன்னவனின் குழந்தையும் ,. பக்கத்தில் நீர் நிறைந்த கண்களோடு நிற்கும் தன்னவனையும் பார்த்தவள் வேகமாக சிகிச்சை அளிக்க ஆரம்பித்துவிட்டாள்.
ஓரளவு அகலியின் உடம்பும்..அவளின் சுவாசமும் கட்டுக்குள் வரவே அந்த அறையை விட்டு வெளியே வந்தவளிடம் “ பேபி தேனுக்குட்டி எப்படி இருக்கா “ என சந்தோஷ் அவளின் கையை பிடித்திக்கொண்டு கேட்க
வெகு சில வருடங்களுக்கு பிறகு தன்னவனின் பிரத்தயோக அழைப்பு.... அதை ரசித்து சொல்லும் நிலையில் அவனும் இல்லை அதை ரசித்து கேட்கும் நிலையில் அவளும் இல்லை.
அவன் மேல் உள்ள கோபம் அப்படியே இருந்தாலும் அவன் கையை ஆறுதலாக பிடித்து “ இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை உங்க தேனுக்குட்டி இல்லை உங்க மூத்த பொண்ணு தூங்கிட்டு இருக்கா” என இதமான சிரிப்புடன் சொன்னாள்.
அவனும் சிறு சிரிப்புடன் உள் வாங்கிக்கொண்டான்.
பிடித்த கையை விடாமலே “ விச்சு எங்கே” என்று கேட்டாள்.
“அகலியை பார்த்துவிட்டு தான் போவேன்” என்று அமர்ந்து இருந்த விஸ்வாவை சந்தோஷ்தான் திட்டி அவன் காயத்திற்கான ட்ரீட்மெண்டீர்காக பக்கத்து அறையில் கொண்டு விட்டு வந்தான்.
ஜனனி கேட்டதும் அவளை அங்கே அழைத்துச் சென்றான்
அங்கே கையில் ஒரு கட்டுட்டுடன் தலையில் ஒரு கட்டுடன், முகத்தில் உள்ள காயத்திற்க்கு மருந்து போட அங்கு உள்ள நர்ஸிடம் முகத்தை காட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு கட்டிலில் முகம் முழுவதும் வேதனையோடு படுத்திருந்தான் விஸ்வா.
அந்த அறைக்கு உள்ளே வந்தவள் ” விச்சு அண்ணா “ என கூற அவன் கண் திறப்பதற்குள்ளவே ” அகலி நல்லா இருக்கா, தூங்கிக்கிட்டு இருக்கா இன்னும் 3 மணி நேரம் கழிச்சு கண் முழிச்சோன நீ பார்க்கலாம் “ என்றாள்.
” பாப்பு(பேபி) என் மல்லி பூக்கு ( தேனுகுட்டி)என்ன டா ஆச்சி ஏன் அவள் இப்படியெல்லாம் நடந்துக்குறா “ என சந்தோஷ் ,விச்சு இருவரும் கவலையோடு கேட்க ..
அய்யோ இவன் ஏன் விச்சுக்கு முன்னாடி இப்படி கூப்பிடுறான் என ஒரு மாறி ஆகிவிட்டது ஜனனிக்கு .
அதை கவனிக்கும் நிலையில் விச்சு இல்லை என நிம்மதியாய் உணர்ந்தவள் ,
“அவளுக்கு இப்ப எந்த பிரச்சனையும் இல்லை விச்சு அண்ணா,இப்ப எதைப்பற்றியும் பேச வேண்டாம் .. உன் மல்லி பூ மாமா மாமானு மயக்கத்துல கூட யாரையோ ஏலம் போட்டுக்கிட்டு இருக்கா அவரை அழைச்சிட்டு வந்து அவள் பக்கத்தித்துலயே இருக்க சொல்லு ” என்றவள்
சந்தோஷின் புறம் திரும்பி “ உங்க தேனுக்குட்டியோட மாமா யாரு “ என்று தெரிந்து கொண்டே கேட்டாள்.
அவனும் சிறு முறுவளுடன் தன் புருவத்தை தூக்கி எதிரில் இருக்கும் விஸ்வாவை காட்டினான்..
விஸ்வாவிருக்குமே அவளின் கிண்டலில் லேசான வெட்கம் வந்து விட்டது.
அதை பார்த்த ஜனனி “அண்ணா உனக்கு வெட்கமெல்லாம் வேற வருமா” என்றாள்.
என்னதான் ஜனனியின் பேச்சில் சிறிது இறுக்கம் தளர்ந்தாலும் “ சந்தோஷிருக்கும்,விஸ்வாவிற்கும் தங்களுக்கு தெரியாமல் தங்கள் தேவதையின் கடந்த காலத்தில் ஏதோ கருப்பு பக்கம் இருக்கிறது என்று தோன்றியது..
அதை கலைந்து தங்கள் தேவதையை பழைய படி மாற்ற வேண்டும் என சபதம் எடுத்தனர் இருவரும்..
வருவாள்..
மிளாணி ஸ்ரீ
தனிமையில்
தவிப்போடு புலம்புகிறேன்.......
தாபங்கள்
கொண்டு உயிர் சிதைகிறேன்....
தலைவனின்
ஸ்பரிசங்கள் தனிமையில் உயிரை நெருங்க...
உருகுகிறேன்
ஊன் மறந்து ...
கலங்குகிறேன்
கண்ணீர் கொண்டு..
தீண்டும் பொருள்களிலெல்லாம்
தன்னவனின் ஞாபகங்கள்.....
பார்க்கும் பார்வைகளிலெல்லாம்
ஸ்பரஸ்பர நெருக்கங்கள்.......
இரவிலும் அவனின்
இன்ப வேதனையில் மறப்பது கொஞ்சம் உறக்கத்தை..
தென்றல் கொஞ்சம்
தேகம் தொட்டால் தீயாகிறது உடல்.....
கொண்டவனின் பிரிவு
மாற வழியில்லையோ....
மயங்குகிற மாலைப்பொழுதில்
வாடுகிறது என் மனம்.......
பிரியமானவனின் நினைவுகள் நில்லாமல் காதல் வன்முறை ஏற்படுத்த
காயமுற்றவளாய் கண் கலங்கினேன்...
உணர்வுகளின் கொடுமையில் உயிர் கருக காத்திருக்கிறேன் காதலனுக்காக...
அவனை கண் கொண்டு பார்க்க முடியவில்லை சந்தோஷால். தன் குழந்தையின் வாழ்க்கையிலும் தன் நண்பனின் வாழ்க்கையிலும் அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்று யூகிக்க முடியவில்லை.
விஸ்வாதன் தன் தேனுக்குட்டியின் இந்த நிலைமைக்கு காரணம் அவன் புறக்கணிப்பு அவளின் பூ மனதை நோக செய்திருக்கும் என சந்தோஷ் நினைத்துக்கொண்டிருக்க ...அதற்கு மாறாக முகம் முழுக்க வேதனையுடன் தன் முன்னே அமர்ந்திருக்கும் தன் நண்பனை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
எது எப்படியோ இவர்கள் இருவரையும் நேரில் சந்திக்க வைத்தால்தான் என்ன நடந்ததென்று உண்மை தெரியும் என்று விஸ்வாவை கை தாங்களாக தூக்கி "ஹாஸ்பிடல் போகலாம் " என்றான்.
விஸ்வாவோ முகத்தில் வழிந்த ரத்தத்தை பொருட்படுத்தாமல் “ இல்லை எனக்கு ஒன்னும் வலி இல்லை நான் அம்முகுட்டிய பார்த்துவிட்டு ஹாஸ்பிடல் போய்க்கிறேன் டா” என சிரித்துக்கொண்டே சொல்ல சாந்தோஷிற்கு சொல்ல முடியாத வேதனை வந்துவிட்டது.
சரி என்று அழைத்துக்கொண்டு அலுவலகத்தின் பின்வாசல் வழியாக கார் பார்க்கிங் சென்றான்..
**********
அங்கே கழுத்தில் இப்பொழுதுதான் கட்டப்பட்டதற்கான அடையாளமாய் தன் மஞ்சள் நிறம் மாறாமல் பார்த்தால் கண்களையும் மனதையும் ஒரு நேரத்தில் குளிர்ச்சி அடைய செய்யும் தன் தெய்வீக தன்மையோடு அகலியின் கழுத்தை அலங்கரிதுக்கொண்டிருந்தது அந்த மாங்கல்யம்.
அதற்கு மாறாக கண்கள் முழுக்க கண்ணீரோடு இரு கைகளையும் கூப்பி கொஞ்சிக்கொண்டிருந்தாள் தன் கணவன் விஸ்வாவை பிடித்துக்கொண்டிருக்கும் நான்கு அடியாட்களையும் , அவனை நோக்கி கத்தியை கொண்டுபோகும் ஒருவனிடமும்.
“ அய்யோ மாமாவ விட்டுடுங்க அவர எதும் செய்யாதிங்க நான் போய்டுறேன் அவர் எனக்கு வேண்டாம் அவரை உயிரோட விட்டுருங்க எனக்கு தாலி வேண்டாம் என தன் தாலியை அறுத்து எறிந்துவிட்டு, அவரோட கல்யாண வாழ்க்கை வேண்டாம்...
மாமா கண்ணுக்கு தெரியாம நான் எங்கேயாவது தொலைஞ்சி போய்விடுகிறேன் உங்களுக்கு உயிர்தான் வேணும்னா என்னை கொன்னுடுங்க என் மாமாவை விட்டுருங்க” என அவள் கத்தி கத்தி அழ
அவள் கத்துவதை கேட்க அங்கே யாரும் இல்லை “ அது எப்படி உன் கழுத்துல தாலி கட்டிட்டு இவன் உயிரோடு இருப்பானா” என ஏலனக்குரலில் சொன்னவன் .
அவளின் கண் முன்னே விஷம் தடவிய கத்தியை விஷ்வாவின் வயிற்றில் சொருகி, சொருகிய வண்ணமே கத்தியை மேல் நோக்கி தூக்கி அவன் கொடலையும் அறுத்தான்.
தன் கண்முன்னே தான் உயிரோடு இருக்கும் போதே தன் உயிர் போவதை தடுக்க முடியாமல் தன் மாமானின் உடலோடு உடலாக மயங்கி சரித்தாள்.
திடீரென்று கனவில் இருந்து விழித்த அகலி உடல் முழுக்க நடுங்க வியர்த்து வழிய...இதய துடிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்க “ மாமா மாமா என ஜெபம் போல் ஜெபித்துக்கொண்டே வெறி பிடித்தவள் போல் ரூமை விட்டு வெளியே வரவும் கவி கதவை திறக்கவும் சரியாக இருக்க
அங்கே தன் மாமனை உடல் முழுவதும் ரத்தத்தோடு பார்த்தவள் தூக்கி வாரி போட "மாமா" என்ற பெரும் கேவளோடு அவனை கட்டிக்கொண்டவள் இன்னும் கனவில் இருந்து மீளாமல் தன் மாமன் உயிர்த்தெழுந்து வந்துவிட்டான் என நினைத்துக்கொண்டு அவன் அணைப்பிலேயே அவன் நெஞ்சிலுருந்து தன் முத்தத்தை தொடங்கி அவன் முகம் முழுக்க தன் முத்தத்தால் இல்லை இல்லை தன் காதலால் அவனை நனைத்தாள்.
அவன் முகத்தில் வழியும் ரத்தத்தை பொருட்படுத்தாமல் அவன் கண் ,மூக்கு.வாய்,காது ,முடி என ஒவ்வொரு பாகமாய் மெதுவாக தடவியவள் தன் உயிரை பாதுகாக்கும் வேகத்தோடு அவனை இன்னும் இன்னும் அவளோடு இறுக்கி கொண்டாள் அவளின் இறுக்கம் விஸ்வாவிற்கே வலியை கொடுக்கும் அளவுக்கு இருந்தது..
“ தேனுக்குட்டி” என்ற சந்தோஷின் தழுதழுத்த அழைப்பில் தன் கனவு உலகத்திலிருந்து வெளியே வந்தவள் சடாரென்று விஸ்வாவின் அணைப்பிலுருந்து வெளிவந்து
அவன் ரத்தம் கொட்டும் முகத்தை பார்க்க அசரீரி போல் ஒரு கொடூர குரல் அவள் மனதின் உள்ளே கேட்டது.
வேகமாக யாரும் இல்லாத சுவற்றின் பக்கம் திரும்பியவள்
“ மாமாவ ஒன்னும் பண்ணாதீங்க ..நான் நான் தெரியாம மாமாவை பார்க்கில் பார்த்துட்டேன், இனி பார்க்க மாட்டேன் அவரை அடிகாதிங்க நான் நான்.....இப்பவே சந்தோஷட ஊருக்கு போயிடுறேன் “
சந்தோஷ் அவளை கைகளை பிடித்து தடுக்க அதை எல்லாம் கேட்கும் நிலையில் அவள் இல்லை.அவன் கையை உருவிக்கொண்டு அவள் மீண்டும் மீண்டும் அதையே செய்தாள்
( தான் பார்க்கில் விஸ்வாவை பார்த்தது தான் அவனின் இந்த ரத்தம் கொட்டும் முகத்திற்கு காரணம் என அவளின் மனம் முழுதாக நம்பியது)
யாரும் இல்லாத அங்கே யாரோ இருப்பது போல் காலில் விழுவது போல் விழுந்து விழுந்து எழுந்தாள்.
இன்னும் ஏது ஏதோ பேசிக்கொண்டும் அழுதுக்கொண்டும் இருந்தவள் ஒரு கட்டத்தில் அப்படியே மயங்கி சரிந்தாள்.
உடல் பலம் இல்லாமல் மயங்கினாலும் ..அவள் ஆழ் மனம் முழித்துக்கொண்டுதான் இருந்தது.
அப்பொழுதும் அவள் வாய் ஓயாமல் மாமா மாமா என்று உளறிக்கொண்டே தன் ஒரு கையும் காலும் வெட்டு வந்தது போல் இழுக்க அவளின் கரு விழி இரண்டும் மேலே சொருகி வெள்ளை முழி மட்டும் அரை மயக்கத்தில் தெரிந்தது.
அவளின் அசாத்திய நடவடிக்கையில் அப்படியே சிலை என உறைந்தான் விஸ்வா.
சந்தோஷ் “ விஸ்வா அகலிய தூக்கு நான் போய் கார் ஸ்டார்ட் பண்றேன்”
ஏற்கனவே இது போல் ஒருமுறை நடந்திருப்பதால் சந்தோஷ் அவளை மருத்துவமனை அழைத்துப்போவதின் முக்கியத்துவத்தை உணர்ந்து விரைந்து செயல்பாட்டான்.
விஸ்வாவிடம் சொல்லிவிட்டு வாசல் வரை சென்றும் கூட விஸ்வா அவன் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை.
அவனின் மூளை மரத்து சந்தோஷின் வார்த்தைகள் அவன் காதில் விழுந்தாலும் அவனால் உடனே செயல் படமுடியவில்லை.
அவனின் உலகம் “ மாமாவை எதும் பண்ணாதீங்க என்ற அவளின் வார்தையிலேயே உறைந்து விட்டது.
அவனின் நிலை உணர்ந்த சந்தோஷ் வேகமாக அருகில் வந்து அவன் கன்னத்தில் வேகமாக ஒரு அறைவிட்டான்.
அதில் தெளிந்தவன் “ குட்டிமா' என்று வேகமாக அகலியிடம் சென்றவன் அவளை கைகளில் ஏந்தி கொண்டு வேகமாக காரை நோக்கி சென்றான் .
அவளின் வெட்டும் உடலும் அவள் பேசுவதையும் கேட்க முடியாமல் “சந்தோஷ் வேகமாடா” என்று நண்பனிடம் சொல்லிக்கொண்டே வந்தான்..
அவனிற்கு கொஞ்சமும் குறையாத தவிப்போடு இருந்த சந்தோஷ் ” கவியிடம் சொல்லி தமிழை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் வர சொன்னவனின் கையில் கார் மின்னல் வேகத்தில் சீறி சென்று ஜனனி வேலை பார்க்கும் மருத்துவமனை வாசலில் நின்றது.
அதற்குள்ளே அகலி உடம்பில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவன் கைகளிளே துவண்டு விட்டாள்
அவளை தூக்கிக்கொண்டு “ பாப்பு” என கத்திக்கொண்டே ஓடினான்.அவன் குரலை கேட்டு வெளிய வந்தவள் தன் அண்ணனையும் ...அவன் கையில் இருக்கும் தன்னவனின் குழந்தையும் ,. பக்கத்தில் நீர் நிறைந்த கண்களோடு நிற்கும் தன்னவனையும் பார்த்தவள் வேகமாக சிகிச்சை அளிக்க ஆரம்பித்துவிட்டாள்.
ஓரளவு அகலியின் உடம்பும்..அவளின் சுவாசமும் கட்டுக்குள் வரவே அந்த அறையை விட்டு வெளியே வந்தவளிடம் “ பேபி தேனுக்குட்டி எப்படி இருக்கா “ என சந்தோஷ் அவளின் கையை பிடித்திக்கொண்டு கேட்க
வெகு சில வருடங்களுக்கு பிறகு தன்னவனின் பிரத்தயோக அழைப்பு.... அதை ரசித்து சொல்லும் நிலையில் அவனும் இல்லை அதை ரசித்து கேட்கும் நிலையில் அவளும் இல்லை.
அவன் மேல் உள்ள கோபம் அப்படியே இருந்தாலும் அவன் கையை ஆறுதலாக பிடித்து “ இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை உங்க தேனுக்குட்டி இல்லை உங்க மூத்த பொண்ணு தூங்கிட்டு இருக்கா” என இதமான சிரிப்புடன் சொன்னாள்.
அவனும் சிறு சிரிப்புடன் உள் வாங்கிக்கொண்டான்.
பிடித்த கையை விடாமலே “ விச்சு எங்கே” என்று கேட்டாள்.
“அகலியை பார்த்துவிட்டு தான் போவேன்” என்று அமர்ந்து இருந்த விஸ்வாவை சந்தோஷ்தான் திட்டி அவன் காயத்திற்கான ட்ரீட்மெண்டீர்காக பக்கத்து அறையில் கொண்டு விட்டு வந்தான்.
ஜனனி கேட்டதும் அவளை அங்கே அழைத்துச் சென்றான்
அங்கே கையில் ஒரு கட்டுட்டுடன் தலையில் ஒரு கட்டுடன், முகத்தில் உள்ள காயத்திற்க்கு மருந்து போட அங்கு உள்ள நர்ஸிடம் முகத்தை காட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு கட்டிலில் முகம் முழுவதும் வேதனையோடு படுத்திருந்தான் விஸ்வா.
அந்த அறைக்கு உள்ளே வந்தவள் ” விச்சு அண்ணா “ என கூற அவன் கண் திறப்பதற்குள்ளவே ” அகலி நல்லா இருக்கா, தூங்கிக்கிட்டு இருக்கா இன்னும் 3 மணி நேரம் கழிச்சு கண் முழிச்சோன நீ பார்க்கலாம் “ என்றாள்.
” பாப்பு(பேபி) என் மல்லி பூக்கு ( தேனுகுட்டி)என்ன டா ஆச்சி ஏன் அவள் இப்படியெல்லாம் நடந்துக்குறா “ என சந்தோஷ் ,விச்சு இருவரும் கவலையோடு கேட்க ..
அய்யோ இவன் ஏன் விச்சுக்கு முன்னாடி இப்படி கூப்பிடுறான் என ஒரு மாறி ஆகிவிட்டது ஜனனிக்கு .
அதை கவனிக்கும் நிலையில் விச்சு இல்லை என நிம்மதியாய் உணர்ந்தவள் ,
“அவளுக்கு இப்ப எந்த பிரச்சனையும் இல்லை விச்சு அண்ணா,இப்ப எதைப்பற்றியும் பேச வேண்டாம் .. உன் மல்லி பூ மாமா மாமானு மயக்கத்துல கூட யாரையோ ஏலம் போட்டுக்கிட்டு இருக்கா அவரை அழைச்சிட்டு வந்து அவள் பக்கத்தித்துலயே இருக்க சொல்லு ” என்றவள்
சந்தோஷின் புறம் திரும்பி “ உங்க தேனுக்குட்டியோட மாமா யாரு “ என்று தெரிந்து கொண்டே கேட்டாள்.
அவனும் சிறு முறுவளுடன் தன் புருவத்தை தூக்கி எதிரில் இருக்கும் விஸ்வாவை காட்டினான்..
விஸ்வாவிருக்குமே அவளின் கிண்டலில் லேசான வெட்கம் வந்து விட்டது.
அதை பார்த்த ஜனனி “அண்ணா உனக்கு வெட்கமெல்லாம் வேற வருமா” என்றாள்.
என்னதான் ஜனனியின் பேச்சில் சிறிது இறுக்கம் தளர்ந்தாலும் “ சந்தோஷிருக்கும்,விஸ்வாவிற்கும் தங்களுக்கு தெரியாமல் தங்கள் தேவதையின் கடந்த காலத்தில் ஏதோ கருப்பு பக்கம் இருக்கிறது என்று தோன்றியது..
அதை கலைந்து தங்கள் தேவதையை பழைய படி மாற்ற வேண்டும் என சபதம் எடுத்தனர் இருவரும்..
வருவாள்..
மிளாணி ஸ்ரீ