All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

அருமையான பதிவு சகோ
ரித்வியை எப்படியோ நித்து புரிந்து கொண்டள் இனி அவன் வாழ்க்கையை சரி செய்வாளா சகோ
🤔🤔🤔🤔
 

vijirsn1965

Bronze Winner
enn saanthapatta vishayam enilunnidam solla thayakkam illai athe veru oru pen sambanthapatta vishayam ennum pothu unnidam solla thayakkamaaha irukkirathu entru solkiraan athariku nittthu yetho sollumpothu plane athuthaane enkiraan ud romba romba super mam rithvick kodukkum velakkam avvalavu arumai evanai maathiri unmaiyaana oruvanai koodiyil oruvaraithaan paarka mudiyum muruthulavirkkum b paathu kaavalanakathaan irukka ninaikiraan ithanaal thannudaiya peyar kedum entru therinthirunthum super mam ennai porutthavarai muranpadaana manithan illai rithvick rombavum unmaiyaana than manatheriku sari ennru pattathai martravarkalukkaaha nadikkaamalseikiraan arputhamana manithan rithvick super super kadai semma mam(viji)
 

Ramyasridhar

Bronze Winner
அழைப்புமணியை அடித்தவுடன் அவன் கதவை திறந்து ஆச்சரியமாக பார்க்கையிலேயே தெரிகிறது இது வரை அவனை தேடி யாரும் அங்கு வந்ததில்லையென்றும், நித்துவின் வரவையும் அவன் எதிர்பார்க்கவில்லை என்பதும். பின் அவளை உள்ளே அழைத்து சென்று அவன் பாட்டிற்கு அவன் உறக்கத்தை தொடரும் அந்த காட்சி இரசிக்க வைக்கிறது.அவன் வேலைகளை அவனே செய்து கொள்கிறான். அவன் சொல்வது போல மற்றவர்களுக்கு அவனை பற்றி தெரியாது, ஆனால் அவனை பெற்றவர்கள் அவன் மேல் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். நண்பர்களின் இரக்க பார்வையையும் விரும்பவில்லை, உண்மையில் அப்படி பார்க்கும் போது தான் நம் துயர் இன்னும் அதிகரிப்பது போல் இருக்கும்.நித்துவை குறித்து அவனுடைய குற்றவுணர்வு, எல்லாம் சேர்த்து அவனை லண்டனுக்கு பயணிக்க வைக்கிறது. தாய்நாடு திரும்பியபின் தான் அவன் நிலை முன்பிலும் மோசமாகி போனது. பெற்றவர்கள் இருந்தும் இல்லாமல் இருப்பது போன்று இருப்பது கொடுமையிலும் கொடுமை. பிஸினெஸ்ஸிலும் அவன் கூற்று சரியாக இருந்தபோதும் அதை ஏற்காமல் நஷ்டமே ஏற்பட்டது. பின் அவனை விடுத்து வேறொருவரை மேற்பார்வையிட சொல்லும்போது அவன் விரக்தி அடையாமல் இருந்தால் தான் ஆச்சர்யம். இந்த இடைப்பட்ட காலத்தில் நித்துவின் நிலைக்கும் ரித்வின் நிலைக்கும் எத்தனை மாற்றம். அவளை தேற்றி அனுப்பியவன் தன்னை கவனியாமல் விட்டது ஏனோ? அவள் வெற்றியை பெருமையாக கருதிய அவனால் அவளுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் அவளை பார்க்க முடியவில்லை. உண்மையில் காதல் வந்திருந்தால் அனைத்தையும் மீறி வந்திருப்பான்தான் அவன். தனியே வந்து தொழில் மேற்கொண்டு குறைந்த லாபம் வந்தாலும் ஸ்பான்ஸர்சிப்பை நம்பியிருப்பவர்களை ஏமாற்றமால் உதவுது அவனின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது. கிடைத்தற்கரிய பொக்கிஷம் தான் அவன். உண்மையில் அவன் உள்ளத்தில் உதிப்பதை அப்படியே வெளிபடுத்தி விடுகிறான். உள்ளும் புறமும் ஒன்றே அவனுக்கு, பொதுவாக நம் மனது நம்மை பற்றி நம் முன் நன்றாகவும் நம் பின் தவறாக பேசுபர்களையே விரும்புகிறது. ரித்வியை போல் உள்ளவர்களை விரும்புவதில்லை, அதனால் தான் நாம் அவனை முரண்பாடானவன் என்கிறோம். உண்மையில் அவன் தான் இயல்பானவன். நாம் தான் முரணானவர்கள். அவனை போன்றோர் கோடியில் ஒருவர் தான் இருப்பர். தேனீரை பகிர்வதை போல அவளிடம் தான் அவனால் தன் மனதில் உள்ளதை இலகுவாக பகிர முடிந்தது . மிருதுளாவை பற்றி கேட்கும் போது, என்னை பற்றி என்றால் சொல்வதில் தயக்கம் இல்லை, ஒரு பெண்ணை பற்றி எனும்போது தயக்கமாக இருக்கிறது என்கிறான், இதுவல்லவா நீ ரித்வி !! (ரித்வி மட்டுமல்ல நாமும் நமக்கு நெருக்கமானவர்கள் நாம் சொல்லாமலே நாம் குற்றமற்றவர் என்று எண்ண வேண்டும் என்று தான் விரும்புவோம் )அவளுக்கு பாதுக்காப்பாக இருக்கிறேன், எனக்கும் மற்றவர்கள் போல் காதல், திருமணம் என்று செட்டிலாக ஆசை இருக்கிறது என்று நித்துவுக்கு விளக்கும் போது அவன் தனிமை உணர்வு நம்மையும் வாட்டுகிறது.( இதை சொல்லும்முன் அவன் சிகையை கோதி கொள்வது கூட அழகு தான்) நித்து புரிந்து கொள்ளாமல் விட்டதாக அவன் சொல்ல மறுத்தது : நீ விட்ட சாபம் தானோ நித்து எனக்கு லவ்வும், திருமணமும் செட்டே ஆகவில்லை என்று முதலில் சொல்கிறானே அதுவோ 🤔அதனால் தனக்கும் ஒரு உறவு இருக்கிறது என்று அவனுக்கும் சமூகத்துக்கும் ஒரு பிம்பத்தை உருவாக்க நினைக்கிறானோ. இதன் மூலம் அவன் தனிமையும் தவிர்க்க நினைக்கிறானோ? நீங்கள் தான் நான் கணித்தது சரியா என்று சொல்லவேண்டும்.
என்னை பொறுத்தமட்டில் அவன் காதலிலும் சரி திருமணத்திலும் சரி தோற்கவில்லை, நித்துவின் மேல் காதல் இல்லாமல் அந்த உறவை தொடர்ந்திருந்தாலும் , சஞ்சீஷ்வினியும், அவனும் கடமைக்காக திருமணம் புரிந்திருந்தாலும் தான் அவன் உண்மையாக தோற்றிருப்பான்.அவனுக்கு ஆழ்மனதில் நித்து அவன் மேல் கொண்ட காதலை போல் வேறு எந்த பெண்ணிடமும் உணரமுடியவில்லை, நித்துவின் பால் அவனுக்கு இருக்கும் குற்றவுணர்வு, அவள் திருமணம் செய்து கொண்டால் ஒருவேளை நீங்கலாம். இவை இரண்டும் தான் அவனை திருமணத்தை நோக்கி பயணிக்க தடுக்கிறது என்று நினைக்கிறன். படித்து விட்டு சொல்லுங்கள் ராஜீ, சரியா இல்லை ரொம்ப அதிகமாக யோசித்து விட்டேனா என்று...
 

varshika

Active member
Hai rajikka
Mudiyala.avvalavu pressuraa irukku intha rithuva ninaithu.neenga eppadithan avanoda charactera ezhuthareengalo.romba kastam.nallaave theriyuthu.seekiram intha storya ezhuthi mudithu neenga veliya vanthudunga rajikka.next kandippa neenga easy going story thaan choose pannanum.rithukku thani dictionary thaan podanum.puriyuthu aanaa puriyala stage than avanai pattri.antha maraiporulai neengale sollidunga rajikka.ovvoru visayathilum rithuvin vilakkamaaga neenga ezhuthiyiruppathu super.eppadi ippadi ovvoru visayathaiyum neenga gnabagam vaithu atharkku vilakkamum koduthu arumai rajikka.super continuty power rajikka.engayum ethayum missaagaama appadi arumaiyaa ezhuthi irukkeenga.rombave menakkadanum atharkku.ud seekiram kodungannu ketkave yosikka vaikkareenga.enna solrathunne theriyala.avvalavu arumai intha story.keep rocking akka.
 

PriyaPraveen

Bronze Winner
ரித்வி ... உன்னை பற்றி நண்பர்கள் சொன்ன செய்திகள் எல்லாம் நித்துவை போல நம் மனதையும் பிழிகிறது. நம்பவே முடியவில்லை......... இந்த நிதர்சனத்தை புரிந்து கொள்ள கொஞ்சம் அவகாசம் கண்டிப்பாக வேண்டும். ஏனென்றால் ரித்வியின் குணாதிசயம் அப்படி. மனம் ஏற்கவே மறுக்கிறது. நித்து அவனை பார்த்தே ஆக வேண்டும் என்று நண்பர்களிடம் சொல்கிறாள். அது சரி தான் எப்படி அவளால் அவன் இப்படி இருக்கும் போது நிம்மதியாக இருக்க முடியும். நாற்காலியில் அமர்ந்திருந்த நித்து ரித்வியை தேடியது போல நாமும் ரித்வியின் வரவுக்காக தான் காத்திருத்தோம். இது தேவையில்லாத வேலையோ என்ற அவளின் மனசாட்சியின் கேள்விக்கு அவள் ஆம் என்று சொல்லவேயில்லை, எப்படி சொல்வாள் அவன் அவளுக்கு எவ்வளவு முக்கியமானவன். ரித்வியின் குரலை கேட்டவுடன் நாமும் அவனை திரும்பி பார்த்தால், நிச்சயமாக இப்படியொரு ரித்வியை எதிர்பார்க்கவில்லை, எங்கே ரித்வி உன்னுடைய அந்த சுறுசுறுப்பும், துடிப்பும், துருதுருவென்று குறும்பு மின்னும் கண்களும், உன் உடையிலும் தோற்றத்திலும் கூட எத்தனை மாற்றம். உன்னை இப்படி பார்க்கவே முடியவில்லை ரித்வி, மிகவும் கஷ்டமாக உள்ளது. அவன் நித்துவை தவிர்த்து விட்டு செல்வதும், இவள் விடாமல் அவனை எப்படியோ பிடித்து பேச, அவன் ஒரு அந்நியத்தன்மையுடன் பேசி செல்வது, திரும்ப பேச முயலும் போது, அவளை பத்திரிகையாளர்கள் தவறாக சித்தரித்து விட கூடாது என்று ஒதுக்குவது எல்லாமே அவளின் மேல் அவன் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் என்றுமே மாறாது என்பதன் சான்று. ரித்வியை பற்றி அவர்கள் தவறாக பேசும்போது, அவன் சண்டையிட்டு சட்டை கசங்கியதை போல் நம் மனதும் கசங்கியது. ஏன் அவனுக்கு இப்படியொரு நிலை என்றே தோன்றியது. அவள் எப்படியோ விடாப்பிடியாக காரில் ஏறி அமர்ந்து அவனுடன் மிருதுளா வீட்டிற்க்கானாலும் வருகிறேன் என்று சொல்வதும் இவனும் பதிலுக்கு சூப்பர் என்று சொல்லும் போது அவள் அருகாமையில் அவன் துடுக்குத்தனம் மீண்டுவிட்டது. அவன், என் ஞாபகம் திடிரென்று உனக்கு எப்படி வந்தது என்று கேட்டதற்கு திருமணமானவனை நினைக்ககூடாது என்றும், நீ சந்தோசமாக இருக்கிறாய் என்று எண்ணியிருந்தேன் என்று கூறும் பதில் அருமை. திரும்பவும் குத்தி கிழிக்கும் கேள்வி அவனிடமிருந்து, அவள் பதிலோ அவன் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாய். நித்து ஒரு தோழியாக ஆறுதல் சொல்ல நினைக்கையில் காதலியாக தோள் சாய வேண்டும் என்கிறான். வழக்கமாக அவன் பேசுவதை இவள் பேசுகிறாள் இவன் பேசுவதை அவள் பேசுகிறாள். காதலியாக வருவாயா என கேட்கும் போது கூட, அவன் அவளை விரும்பவில்லை, எனக்கு பொய்சொல்லவும் நடிக்கவும் தெரியாது என்று உண்மையை சொல்லிவிடுகிறான். இது தான் அவனின் குணம், எப்போதும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவன். சரியோ தவறோ போலியான நம்பிக்கையை யாருக்கும் தர மாட்டான். அவன் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறான்.அவன் முரண்பாட்டின் மொத்த உருவாக இருந்தாலும் அவனுடைய குணத்தால் நம்மை ஈர்க்கவே செய்கிறான். முரண்பாடே உன்னிடம் பாடம் கற்றாலும் அதன் முழு இலக்கணத்தை நீ ஒருவனே அறிவாய் ரித்வி.
wow amazing comments Rithvi Nithya semmaya admire panni eluthirikinga...
 

PriyaPraveen

Bronze Winner
ரித்வி, அவளை உன்னை அறைய சொல்கிறாயே, எப்படி முடியும் அவளால் , உன் மீது அவள் கொண்ட பேரன்பு அவளை நீ வெறுத்தாலும் இப்படியொரு செயலை செய்ய விடாது. யாரிடமும் காரணம் சொல்லாத நீ நித்துவிடம் சொல்ல விளையும்போதே தெரியவில்லையா உனக்கு அவளிடம் இருக்கும் நெருக்கம். அதிலும் திருமணம் நின்றதற்கு நீ சொல்லும் காரணம், ஆஹா 😲 நித்துவின் பார்வை உன்னை எந்தளவு பாதித்திருந்தால் சஞ்சீஷ்வினி மீது அவளை காதலிப்பவன் செலுத்தும் பார்வையை வைத்தே புரிந்துகொண்டாயே !! அது அறிந்தபின் அவளிடம் தெளிவுபடுத்தி அவள் பெற்றோரிடமும் பேசி அவர்கள் திருமணத்தையே முடித்து விட்டாய், நீ என்றுமே யூனிக் தான் ரித்வி.உனக்கு நிகர் நீயே தான். பூமராங் மாதிரி அடித்ததா, சஞ்சீஷ்வினிக்கு செய்த நியாயம் உன் மீது உண்மையான அன்பு கொண்டவளுக்கு செய்யவில்லை என்ற குற்றவுணர்வுடன் இருக்கிறாய், அந்த உணர்வே உன்னை கொல்லுது என்று சொல்லும்போது, உன் வேதனை புரிகிறது. உன் கையில் அடிபட்டவுடன் அவள் கொள்ளும் வேதனை, அக்கறை எப்போதும் போல்.லவ் செய்யாமல் காதலிலும், மேரேஜ் செய்யாமல் திருமணத்திலும் தோல்வி அடைந்திருக்கிறேன் என்று சொல்லும் போது நீ எத்தகைய மனவுளைச்சலில் இருக்கிறாய் என்று புரிகிறது.பெற்றோர் புறக்கணிப்பு, தொழிலிலும் தோல்வி இவையனைத்தும் மீறி எப்படியோ வாழ வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறாய். இரத்தம் வந்தும் வலியே தெரியவில்லையா ரித்வி, உனக்கு வலிக்கவில்லை உன் நிலை நினைத்து நமக்கு வலிக்கிறது. நித்து ஆறுதலாக பேச முற்படும் போது, நான் மற்றவர்கள் நிலையை நினைத்து பேசுவதில்லை நீ ஏன் அதை செய்கிறாய் என்கிறாய், அவள் அதற்கு எவ்வளவு அழகாக பதில் சொல்கிறாள், நீ மற்றவர்கள் நிலையை யோசிக்காதவன் தான் ஆனால் மற்றவர் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பவன் 100% உண்மையான வார்த்தை. அவள் உன் வழியிலியே பேசி உன் இயல்பான துடுக்குத்தனத்தை மீட்கிறாள். நீ இரண்டு ஆப்ஷன் தருகிறாய் அவள் மூன்றாவதாக ஒன்றை தேர்ந்தெடுக்கும் போது உன்னை போல் நானும் அவள் காதலிக்கிறேன் என்று சொல்லுவாள் என்று கொஞ்சம் ஆசைப்பட்டேன், ஆனால் அவளுடைய தெளிவான பதிலில் நானும் உன் போலவே மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.பின் அவள் பேச பேச உன் விளையாட்டு தனம் வெளிவருகிறது. உனக்கு நிம்மதியான உறக்கம் கூட இல்லையென்று நீ காரின் மேல் சாய்ந்து உறங்குவதிலேயே தெரிகிறது. நண்பர்களை தள்ளி நிறுத்திய உன்னால் அவளை நிறுத்த முடியவில்லை, உன் வருத்தத்தை அவளிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டாய். உன் ஆழ்மனதில் அவள் மேல் காதல் இருக்கிறது. அது உனக்கு தெரியவில்லை. ஒருவேளை சர்வேஷ் உடன் அவளை கண்டால் உணர்ந்து கொள்வாயோ தெரியவில்லை. உன் ஒருவனுக்கே அனைத்தும் தெரியும். நாளை உங்கள் இருவருக்கும் என்ன காத்திருக்கிறதோ ஆனால் இன்று நீ நெடுநாளைக்கு பின் மகிழ்ச்சியாக இருக்கிறாய் அதனால் தான் இவ்வளவு பொறுமையாக நான் எழுதியதை படித்து கொண்டிருக்கிறாய். உன் முகத்தில் இந்த சந்தோசம் என்றும் நிலைக்கட்டும். விரைவில் உன் துயர் அனைத்திலும் இருந்து மீண்டு வா ரித்வி. அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
wow really like it yours comments, superb...
 

PriyaPraveen

Bronze Winner
Wow romab romba alagana ud....
Nithya varavu rithviku rombave santhosatha kodukkuthu same avanoda eathartha seyal ellam so cute....
Rithvi avanoda intha nilaiku self explanation koduthurukkan athum avanoda Nithya kitta avan innum athai purinjikkama irukkarathu varuthama irukku...Ellarukkum vendi romba yosichu move pandran aan ivanai yarum purinjikkala ean NIthyavum ipdi yosikkalayea ivlo sonna piraku than ivan pokkishamnu purinjuthu.....ivlo kastathulayum ivala pakkanumnu asai pattathu ava nalan vendi vilagi ninnathu,sponsor pandrathu ellame arumai....
Miruthula vendi avan ketta per vangi avala secure pandrathu awesome Rithvi...But Nithya kelviku Rithvi pathil romba athirchiya irukku...
Nithya kathal vendi kai eandhi ninnappa kadhal illainnu sollittu ippa Miruthula kitta commitment kadamaiku urava irukkarathu romba romba varuthama irukku...
ine Rithvi Nithya enna mudivu edupanga,Rithviku eppa tha Nithya mela mulumayana kadhal varum....
 
Top