Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 1
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை..
என அந்த மாளிகையின் பூஜையறையிலிருந்து சன்னமாகச் சூரமங்களம் சகோதரிகள் பாடிக் கொண்டு இருக்க... அவர்களோடே சேர்ந்து தன் இனிமையான குரலில் பாடியவாறே தீப ஆராதனை காட்டிக் கொண்டிருந்தாள் மது வர்ஷா.
அவளின் கைவண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த சாமி படங்களும், சாம்பிராணி மணம் கமழ்ந்துக் கொண்டிருந்த அந்த அறையும் அந்தக் காலை பொழுதை தெய்வீக மணம் கமழ செய்துக் கொண்டிருந்தது.
ஆரத்தி தட்டுடன் வெளியில் வந்தவள் ஹாலில் இருந்த அந்தப் பெரிய அறைக்குள் நுழையவும், அவளைப் புன்னகை முகமாக வரவேற்றார் மதுவின் மாமியாரும் பத்மதேவ்வின் தாயுமான லலிதா.
"பூஜை... முடிஞ்சிதா... மது..." என்றவருக்கு, "முடிஞ்சது மாமி..." எனப் பதிலுக்கு அவரைப் பார்த்து புன்னகைத்தவாறே பதிலளித்தவள் ஆரத்தி தட்டை அவர் அருகில் கொண்டு சென்று மதுவே ஆரத்தியை தொட்டு அவருக்கு வைத்து விட... கனிவோடு மதுவை பார்த்திருந்தார் லலிதா.
அவருக்குக் கை கால்கள் செயலற்று போயின... பேசுவதில் எந்த ஒரு தடையுமில்லை... ஆனால் வேகமாகப் பேச முடியாது... எப்போதுமே அதிகம் பேச மாட்டார் என்பதால் அது அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
அடுத்து அவருக்கு அருகில் படுத்து வாயில் விரல் வைத்து உறங்கி கொண்டிருந்த குழந்தை மிதுனை வாஞ்சையாய் பார்த்து புன்னகைத்தவள் ஆரத்தியை தொட்டு அவனுக்கும் வைத்தபடியே அவன் தலையை வருடிக் கொண்டே "பாருங்கோ மாமி நானும் எவ்வளவோ முயற்சி செய்யறேன்... இந்தப் பழக்கத்தை மாத்தவே முடியல..." எனக் குறைப்பட்டுக் கொள்ள...
"குழந்தை தானேம்மா... வளர வளர சரியாகிடும்..." என்று நிறுத்தி நிதானமாகப் பதிலளித்தவரை கண்டு தலையசைத்தவள் "உங்களுக்குக் கஞ்சி கொண்டு வரட்டுமா...? குடிக்கறேளா...? என்றவளை பார்த்து முகத்தைச் சுழித்தவர்.
"கொஞ்ச நேரம் போகட்டுமே..." எனவும், "மருந்து எடுத்துக்கணுமோ இல்லையோ... அப்புறம் நேரம் தவறி போகும்..." என்றவளை கண்டு பாவமாக முகத்தை வைத்துக் கொண்ட லலிதா "குட்டி பையன் எழுந்ததும் அவனோட சேர்ந்து சாப்பிடறேன்..." எனக் கூற, "மித்துப் போலவே அடம் பிடிக்கறேள் மாமி..." எனச் செல்லமாக மிரட்டி விட்டு வெளியேறினாள்.
தன்னை அன்போடு மிரட்டி விட்டு செல்பவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த லலிதாவிற்குத் தன் தேர்வு கொஞ்சமும் தப்பாகவில்லை என்ற நிம்மதி எப்போதும் போல் இப்போதும் மனதில் எழுந்தது.
லலிதாவின் அறையில் இருந்து மது வெளியில் வரவும் பத்மதேவ் தன் காலை நேர ஜாகிங் முடித்து வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது. எதிரில் ஆரத்தி தட்டுடன் நிற்பவளின் மேல் பார்வை பதிய...
ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த ஷிப்பான் சேலையில் எந்த வித ஒப்பணையும் இன்றித் தலையில் கட்டிய ஈர துண்டுடனும் கையில் ஏந்திய தீபாராதனை தட்டுடனும் முகத்தில் விபுதி குங்குமத்தோடு அழகு சிலையாக நின்று கொண்டிருந்தவளின் மேல் பார்வையைப் பதித்தவன் தலை முதல் கால் வரை ஒரு அளவிடும் பார்வை பார்க்க...
அந்தப் பார்வையில் இருந்தது என்ன என்பது எப்போதும் போல் இப்போதும் மதுவிற்குப் புரியவில்லை. தேவ்வின் பார்வைக்கான அர்த்தத்தை மொழிப் பெயர்க்க இனி தான் ஒருவன் பிறந்து வர வேண்டும்... இல்லை இப்படிச் சொல்ல வேண்டுமோ...? இதுவரை தன்னை யாரும் புரிந்துக் கொள்ள தேவ் அனுமதிக்கவில்லை என்பதே சரி.
அந்தப் பார்வையில் மதுவிற்கு உள்ளுக்குள் குளிர் பரவியது. அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் மது செய்து கொண்டிருக்க... அதற்கு எந்த அவசியமும் இன்றி மதுவின் பதட்டத்தை அவளின் உடல் மொழியே தேவ்விற்குக் காட்டி கொடுத்தது.
அந்த நொடி தாமதமே வீண் என்பது போல விறுவிறுவெனப் படி ஏறி செல்பவனைப் பார்த்து கொண்டிருந்தவளுக்கு அவனின் அருகாமையில் ஏற்பட்ட நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய... இப்போது அடுத்தக் கட்டமாகக் குழப்பம் வந்து சேர்ந்தது.
'இப்போது தேவ்வின் பின்னே செல்ல வேண்டுமா...? இல்லை வேண்டாமா...?' என எப்போதும் போலவே முழித்துக் கொண்டு நின்றிருந்தாள். ஏனெனில் அவளின் அனுபவம் அப்படி... தேவ் வீட்டிற்கு வந்தவுடன் அவன் பின்னாலேயே சென்றால், 'இப்போ எதுக்கு இங்க வந்தே...?' எனக் காய்பவன், சரி சென்றால் தான் திட்டுகிறானே என்று செல்லாமல் இருந்தால் அதற்கும், 'மகாராணியை ஒவ்வொரு முறையும் கூப்பிடணுமோ..?' என்று தீய்வான்.
குழப்பத்தோடே நின்றுக் கொண்டிருப்பதை விடச் சென்று திட்டு வாங்கிக் கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்து பத்ம தேவ்விற்காக கிரீன் டீ தயாரிக்க உள்ளே சென்றாள்.
சரியாக மது கிரீன் டீயை டிரேயில் வைத்துக் கொண்டு மாடி படியை நெருங்கவும், மேலிருந்து "மதுதுதுது...." என்ற அழுத்தமான குரல் கேட்டது.
அதில் பதட்டமானவள், 'இன்னைக்கு என்ன ஆச்சோ தெரியலையே...' என எண்ணியபடியே தங்கள் அறைக்குள் நுழைய...
அங்கு அப்போதே குளித்து விட்டு வந்து ஈரம் சொட்ட சொட்ட தன் எயிட் பேக் உடல் தெரிய வெள்ளை நிற டவலோடு கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தான் தேவ். தினமும் பார்க்கும் காட்சி தான் என்றாலும் ஒவ்வொரு முறையும் ஏனோ ஏறிட்டு பார்க்க ஒரு தயக்கம் வந்து தடுக்க அருகில் செல்ல கால்கள் தயங்க கதவருகிலேயே நின்றிருந்தாள் மது.
கண்ணாடி வழியாக மதுவையும் அவள் கைகளில் இருந்த டிரேவையும் பார்த்தவன் ஏதுவும் சொல்லாமல் தன் வேலையைத் தொடர... 'இப்போ எதுக்குக் கூப்பிட்டு இருப்பாங்க...' என்று தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டு நின்றிருந்தவளின் முகத்தின் வழியே அகத்தைப் படித்தவன், "ம்ம்... டுயட் பாடலாம்னு... சாங் எப்படி நீ செலக்ட் செய்யறீயா...? இல்ல நான் செய்யவா...?" எனவும்
திடீரென்று எதற்கு இப்படிப் பேசுகிறார்...!!! எனப் புரியாமல் "ஙே..." என விழித்துக் கொண்டு நின்றிருந்தவளை கண்டவன் தன் வேலையை நிறுத்தி விட்டு அவளை அடி மேல் அடி வைத்து நெருங்க...
இப்போது என்ன தவறு செய்தோம்...? எனப் பயத்தோடு விழி விரிய அச்சத்தோடு அவனையே இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தவளை நெருங்கியவன் எதுவும் பேசாமல் அவள் கைகளில் இருந்த டீயை எடுத்து பருக தொடங்க... அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை "ஊப்ப்ப்ப்...." என வெளியிட்டாள் மது.
டீயை பருகி கொண்டிருந்தாலும் மதுவின் ஒவ்வொரு அசைவும் தேவ்வின் கண்களில் படத் தவரவில்லை. ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் "மித்து எங்கே...?" என்றவனின் கேள்விக்கு "மா.. மி... யா... ண்ட... இருக்... கான்..." எனக் காற்றாகி போன குரலில் திக்கி திக்கி பதிலளித்தாள்.
அதற்கு ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாகத் தந்தவன், நீ போகலாம் என்பது போல விரலை அசைக்க, அதற்குச் சம்மதமாக அவசரமாக ஒரு தலையசைப்பை தந்தவள் அறையிலிருந்து உடனே வெளியேறினாள்.
படிகளில் இறங்கும் போதே தேவ் தன்னை அழைத்தது நினைவு வர... 'எதுக்குக் கூப்பிட்டார்ன்னு சொல்லவே இல்லையே...' என்று நினைத்தவளின் மனசாட்சி 'ஏன் போய் நீ தான் கேளேன்...' என எடுத்துக் கொடுக்க....
'ஈஸ்வரா... நானா !!! அவரை பார்த்தாளே காத்து தான் வரது...' என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டும் பதிலளித்துக் கொண்டும் சென்றவளுக்கு எப்போது தான் தன் கணவனிடம் நேருக்கு நேராகப் பேச தைரியம் வருமோ...!!!
மித்து எழுந்துவிட்டானா எனச் சென்று பார்த்தவள், அவன் இன்னும் உறங்கி கொண்டிருக்கவே லலிதாவிற்கு அவர் மறுப்பையும் மீறி கஞ்சியை ஊட்டி விட்டு முகத்தைத் துடைத்து விட்டாள்.
லலிதாவை பார்த்து கொள்வதற்காகவே இரண்டு நர்ஸ்கள் எப்போதும் அவர் அறையிலேயே இருப்பர். அவர்களே அவரின் தேவைகளைப் பார்த்து பார்த்துச் செய்தாலும் மதுவிற்கு உணவு விஷயத்தில் இவர் அவர்களை ஏமாற்றுகிறாறோ என்று ஒரு சந்தேகம் உண்டு. அதற்காக அவளே அதை அருகில் இருந்து கொடுக்கத் தொடங்கினாள்.
அடுத்து அவர் போட வேண்டிய மாத்திரைகளை மது சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டு இருக்க... அலுவலகத்திற்குச் செல்ல தயாராகத் தேவ் தன் அன்னையின் அறைக்குள் நுழைந்தான். இது தினப்படி வழக்கம் தான் காலை உணவிற்கு முன் லலிதாவோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
இரவில் எப்போது வீடு திரும்புவான் என்பது அவனுக்கே தெரியாதென்பதால் காலையில் அன்னையோடும் பிள்ளையோடும் நேரம் செலவழிப்பதை நாள் தவறாமல் செய்வான்.
"குட்மார்னிங் மா..." என்றபடியே அறைக்குள் நுழைந்தவன் நர்ஸ்களிடம் தன் அன்னையின் உடல் நலனை பற்றி விசாரித்து முடித்ததும் அவர்கள் அறையிலிருந்து வெளியேறிவிட... "அப்பறம் மா... என்ன சொல்றான் உங்க பேரன்..." எனக் குழந்தையின் தலையைப் பாசத்தோடு வருடியவாறே அருகில் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தவனின் குரலில் இருந்த வித்தியாசம் மட்டுமே அவன் லலிதாவின் மேல் கொண்டுள்ள அன்பிற்குச் சாட்சி.
இதே போன்ற குரலில் அவன் பேசும் மற்றொரு நபர் மிதுன் மட்டுமே. "இன்னும் பிள்ளை எழுந்துக்கவே இல்லைடா..." என அவர் குறைப்பட்டுக் கொள்ள, "ராத்திரி பிள்ளை ரொம்ப நாழி முழிச்சிண்டு இருந்தான் மாமி..." என மது பதிலளித்தாள் .
"ஏன்... மா... உடம்பு... எதாவது..." என லலிதா கவலை கொள்ள, "அப்பாவும் பிள்ளையும் அத்தனை ஆட்டம்..." என்று புன்னகைத்தவளை கண்டு அவரும் புன்னகைக்க, இருவரையும் பார்த்தபடியே அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.
தேவ்வை திரும்பி பார்த்தவர், "விக்ரமா..." என அழைக்க, அன்னையின் அந்தப் பிரத்யேக அழைப்பில் அவரைத் திரும்பி பார்த்தவன், "சொல்லுங்கம்மா..." எனக் கனிவோடு கேட்க... "உன் பொண்டாட்டி என்னைக் கொடுமைப்படுத்தறாப்பா..." என்று புகார் பத்திரம் வாசிக்க...
சும்மாவே தன்னிடம் காய்பவன் இப்போது என்ன செய்வானோ...? என்று அதிர்ந்த மது தேவ்வை திரும்பி பார்க்க... "நீங்க செலக்ட் செஞ்ச மருமக தானே... என்ஜாய்..." என்றவாறே எழுந்து சென்றவனின் பார்வை மதுவின் பக்கமாகக் கூடத் திரும்பவில்லை.
மாமியும் மருமகளும் செல்பவனின் முதுகையே பார்த்துக் கொண்டு இருக்க... தேவ் கதவை நெருங்கவும் "டாடா..." என்ற மழலை குரல் அழைக்க... அதில் புன்னகையோடு திரும்பியவன் தன் வேக நடையில் நெருங்கி அந்தப் பிஞ்சை தன் நெஞ்சோடு அள்ளி கொண்டு அறையில் இருந்து வெளியேறினான்.
அடுத்து அவன் டைனிங் டேபிளுக்கே செல்வான் என்று தெரிந்து லலிதா "நீ போ மா... " எனக் கூறவும்... வேகமாக டைனிங் டேபிளை நோக்கி விரைந்தாள் மது. அங்குத் தேவ் தன் மடியில் மித்துவை அமர்த்திக் கொண்டு கொஞ்சி கொண்டிருக்க...
அதைப் பார்த்துக் கொண்டே வழக்கமாகத் தேவ் உண்ணும் வீட் பிரட் டோஸ்ட்டையும் பட்டரையும் எடுத்து அவன் முன் வைத்தவளுக்கு லலிதாவின் புன்னகை முகமும் அதற்கு நேரதிராக எப்போதும் உர்ரென்று இருக்கும் தேவ்வின் முகமும் மன கண்ணில் வர...
நேரம் காலம் தெரியாமல் கருணாஸின் காமெடி நினைவு வந்து தொலைத்தது 'ஆஹ... அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்...' என்ற அதே மாடுலேஷனோடு மனதிற்குள் சொல்லி பார்த்தவளுக்கு இதழோரம் சிரிப்பில் துடிக்க... அது வெளியே தெரிவதற்குள் இதழை பற்களால் கடித்துக் கட்டுபடுத்தியவள் நிமிரவும்...
தேவ் தன் கூர்மையான கண்களோடு மதுவையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த பார்வையைக் கண்டவளுக்கு இதயம் நின்று துடித்தது. மதுவின் இத்தனை நாள் அனுபவத்தில் அவள் மனதில் நினைப்பதைக் கூடக் கண்டறிந்து பதிலளிப்பவனின் நினைவு வர... திக்கென்றது.
அதில் எழுந்த படபடப்போடு தட்டில் ஆம்லெட்டை எடுத்து வைத்துத் தேவ் முன் கொண்டு வந்து வைத்தவளின் முகத்தையே தேவ் ஆராய்ச்சியாகப் பார்க்க... அதில் எப்போதும் போல எந்த ஒரு அருவருப்போ முகச்சுளிப்போ தெரியவில்லை.
எதையோ நினைத்து கொண்டவன் "எனக்கு ஆப்பாயில் வேணும்..." எனவும் "ம்ம்..." என்ற தலையசைப்போடு நகர்ந்தவளை "டபுள் ஆப்பாயில் வித் எக்ஸ்ட்ரா பெப்பர்..." என்ற தேவ்வின் குரல் தடுத்து நிறுத்த... திரும்பி மீண்டும் ஒரு தலையசைப்போடு உள்ளே சென்றாள்.
மது கிட்சனில் இருந்து திரும்ப வரும் போது மித்துத் தன் மழலையில் ஆயிரத்து எட்டு டாடா போட்டுக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
"டாடா... இடு அன்ன...?"
"இது பிரட்..."
"டாடா... அப்பூ இடு..."
"இது பட்டர்..."
"ம்ம்...இடு டாடா..."
"இது எஃக்..."
எனக் கொஞ்சமும் சலிக்காமல் மித்துவின் அத்தனை கேள்விகளுக்கும் தேவ் பதிலளித்துக் கொண்டிருந்தான்.
இவை அனைத்துமே தினமும் கேட்கப்படும் கேள்விகள் தான்... ஆனால் ஒரு நாளும் தேவ் பதிலளிக்கச் சலித்துக் கொள்ளவோ பதிலளிக்கத் தவறியதோ இல்லை. ஒவ்வொரு முறையும் முதல் முறையாகக் கேட்கப்படும் கேள்வியைப் போலவே பதிலளிப்பவனின் இந்த முகம் மதுவை என்றும் போல இன்றும் ஆச்சர்யப்படுத்தியது.
மது தன் கையால் செய்த ஆப்பாயில் தட்டை கொண்டு வந்து வைக்கவும் மீண்டும் அவள் முகத்தையே ஆராய்ச்சியாகப் பார்த்து அமைதியாக உண்ண துவங்கியவன் ஆம்லெட்டை போர்க்கில் குத்தி மித்துவின் வாயருகே கொண்டு செல்ல...
"ம்ஹூம்... மிட்டுத் தர்த்திப் பாய் ஈ பண்லா..." எனத் தான் இன்னும் பல் விளக்கவில்லை என்பதைத் தந்தைக்கு நினைவுபடுத்த... "நோ ஒர்ரிஸ் டியர்..." என்றவாறே மீண்டும் கொடுக்க முயன்ற தந்தையைத் தடுத்தவன்...
"துத் பாய் அல்லாம் ஈ பண்ணி சாப்பும்... மிட்டு துத் பாய் இல்ல மா..." என மதுவையும் துணைக்கழைக்க... அதில் வியப்பாக ஒற்றைப் புருவத்தை உயர்த்தி இறக்கினானே தவிர, எதுவும் கூறவில்லை தேவ்.
மது இந்தப் பக்கம் நின்று கொண்டு மித்துவின் கேள்விக்கு ஆம் என்பது போல் தலையசைக்க டேபிள் மேல் தேவ்வை நோக்கி திரும்பி அமர்ந்திருந்தவனுக்கு அது தெரியாததால் "ம்மா தொல்லு..." என்றான்.
"ஆமா கண்ணா... என் மித்து இந்த வேர்ல்ட்லயே ரொம்ப ரொம்ப குட் பாய்..." என்றவள் "வா நாம போய்ப் பிரஷ் ஆயிண்டு வந்துடலாம்..." எனக் கைகளை நீட்டி அழைக்க...
"போ... வம்மாத்தே..." எனத் தந்தையின் கழுத்தை கட்டி கொண்டவனைக் கண்டவளுக்குக் கொஞ்சமும் கோபம் வரவில்லை, அவளுக்கு நன்றாகத் தெரியும் தேவ் வீட்டில் இருந்தால் அவனே மித்துவின் உலகம்... தேவ்விடம் இருந்து கொஞ்சமும் நகர மாட்டான்.
'வாடா படவா உன்னைக் கவனிச்சுக்கறேன்...' என மனதிற்குள் கொஞ்சி கொண்டிருந்த வேலையில் டேபிள் மேல் இருந்த தேவ்வின் போன் ஒலிக்க... ஒரு கையில் குழந்தையைப் பற்றிக் கொண்டு மறு கையால் சாப்பிட்டு கொண்டிருந்தவன் "யாருன்னு கேளு..." என மதுவை பார்த்து கூற...
ஏதோ கிடைப்பதற்கு அரிய பொருளை போல் இரு கைகளில் பத்திரமாக எடுத்து ஆன் செய்து காதில் வைத்தவள் "ஹலோ.." என்பதற்குள் "தேவ் டியர்... நைட் உங்க பிரீப் கேஸ் இங்கே என் ரூம்லயே விட்டுட்டீங்க..." என்ற குரல் கொஞ்சலாக ஒலித்தது.
பார்வையை மட்டும் திருப்பி மது தேவ்வை பார்க்க... அவனோ மித்துவோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான்.
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை..
என அந்த மாளிகையின் பூஜையறையிலிருந்து சன்னமாகச் சூரமங்களம் சகோதரிகள் பாடிக் கொண்டு இருக்க... அவர்களோடே சேர்ந்து தன் இனிமையான குரலில் பாடியவாறே தீப ஆராதனை காட்டிக் கொண்டிருந்தாள் மது வர்ஷா.
அவளின் கைவண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த சாமி படங்களும், சாம்பிராணி மணம் கமழ்ந்துக் கொண்டிருந்த அந்த அறையும் அந்தக் காலை பொழுதை தெய்வீக மணம் கமழ செய்துக் கொண்டிருந்தது.
ஆரத்தி தட்டுடன் வெளியில் வந்தவள் ஹாலில் இருந்த அந்தப் பெரிய அறைக்குள் நுழையவும், அவளைப் புன்னகை முகமாக வரவேற்றார் மதுவின் மாமியாரும் பத்மதேவ்வின் தாயுமான லலிதா.
"பூஜை... முடிஞ்சிதா... மது..." என்றவருக்கு, "முடிஞ்சது மாமி..." எனப் பதிலுக்கு அவரைப் பார்த்து புன்னகைத்தவாறே பதிலளித்தவள் ஆரத்தி தட்டை அவர் அருகில் கொண்டு சென்று மதுவே ஆரத்தியை தொட்டு அவருக்கு வைத்து விட... கனிவோடு மதுவை பார்த்திருந்தார் லலிதா.
அவருக்குக் கை கால்கள் செயலற்று போயின... பேசுவதில் எந்த ஒரு தடையுமில்லை... ஆனால் வேகமாகப் பேச முடியாது... எப்போதுமே அதிகம் பேச மாட்டார் என்பதால் அது அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
அடுத்து அவருக்கு அருகில் படுத்து வாயில் விரல் வைத்து உறங்கி கொண்டிருந்த குழந்தை மிதுனை வாஞ்சையாய் பார்த்து புன்னகைத்தவள் ஆரத்தியை தொட்டு அவனுக்கும் வைத்தபடியே அவன் தலையை வருடிக் கொண்டே "பாருங்கோ மாமி நானும் எவ்வளவோ முயற்சி செய்யறேன்... இந்தப் பழக்கத்தை மாத்தவே முடியல..." எனக் குறைப்பட்டுக் கொள்ள...
"குழந்தை தானேம்மா... வளர வளர சரியாகிடும்..." என்று நிறுத்தி நிதானமாகப் பதிலளித்தவரை கண்டு தலையசைத்தவள் "உங்களுக்குக் கஞ்சி கொண்டு வரட்டுமா...? குடிக்கறேளா...? என்றவளை பார்த்து முகத்தைச் சுழித்தவர்.
"கொஞ்ச நேரம் போகட்டுமே..." எனவும், "மருந்து எடுத்துக்கணுமோ இல்லையோ... அப்புறம் நேரம் தவறி போகும்..." என்றவளை கண்டு பாவமாக முகத்தை வைத்துக் கொண்ட லலிதா "குட்டி பையன் எழுந்ததும் அவனோட சேர்ந்து சாப்பிடறேன்..." எனக் கூற, "மித்துப் போலவே அடம் பிடிக்கறேள் மாமி..." எனச் செல்லமாக மிரட்டி விட்டு வெளியேறினாள்.
தன்னை அன்போடு மிரட்டி விட்டு செல்பவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த லலிதாவிற்குத் தன் தேர்வு கொஞ்சமும் தப்பாகவில்லை என்ற நிம்மதி எப்போதும் போல் இப்போதும் மனதில் எழுந்தது.
லலிதாவின் அறையில் இருந்து மது வெளியில் வரவும் பத்மதேவ் தன் காலை நேர ஜாகிங் முடித்து வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது. எதிரில் ஆரத்தி தட்டுடன் நிற்பவளின் மேல் பார்வை பதிய...
ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த ஷிப்பான் சேலையில் எந்த வித ஒப்பணையும் இன்றித் தலையில் கட்டிய ஈர துண்டுடனும் கையில் ஏந்திய தீபாராதனை தட்டுடனும் முகத்தில் விபுதி குங்குமத்தோடு அழகு சிலையாக நின்று கொண்டிருந்தவளின் மேல் பார்வையைப் பதித்தவன் தலை முதல் கால் வரை ஒரு அளவிடும் பார்வை பார்க்க...
அந்தப் பார்வையில் இருந்தது என்ன என்பது எப்போதும் போல் இப்போதும் மதுவிற்குப் புரியவில்லை. தேவ்வின் பார்வைக்கான அர்த்தத்தை மொழிப் பெயர்க்க இனி தான் ஒருவன் பிறந்து வர வேண்டும்... இல்லை இப்படிச் சொல்ல வேண்டுமோ...? இதுவரை தன்னை யாரும் புரிந்துக் கொள்ள தேவ் அனுமதிக்கவில்லை என்பதே சரி.
அந்தப் பார்வையில் மதுவிற்கு உள்ளுக்குள் குளிர் பரவியது. அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் மது செய்து கொண்டிருக்க... அதற்கு எந்த அவசியமும் இன்றி மதுவின் பதட்டத்தை அவளின் உடல் மொழியே தேவ்விற்குக் காட்டி கொடுத்தது.
அந்த நொடி தாமதமே வீண் என்பது போல விறுவிறுவெனப் படி ஏறி செல்பவனைப் பார்த்து கொண்டிருந்தவளுக்கு அவனின் அருகாமையில் ஏற்பட்ட நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய... இப்போது அடுத்தக் கட்டமாகக் குழப்பம் வந்து சேர்ந்தது.
'இப்போது தேவ்வின் பின்னே செல்ல வேண்டுமா...? இல்லை வேண்டாமா...?' என எப்போதும் போலவே முழித்துக் கொண்டு நின்றிருந்தாள். ஏனெனில் அவளின் அனுபவம் அப்படி... தேவ் வீட்டிற்கு வந்தவுடன் அவன் பின்னாலேயே சென்றால், 'இப்போ எதுக்கு இங்க வந்தே...?' எனக் காய்பவன், சரி சென்றால் தான் திட்டுகிறானே என்று செல்லாமல் இருந்தால் அதற்கும், 'மகாராணியை ஒவ்வொரு முறையும் கூப்பிடணுமோ..?' என்று தீய்வான்.
குழப்பத்தோடே நின்றுக் கொண்டிருப்பதை விடச் சென்று திட்டு வாங்கிக் கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்து பத்ம தேவ்விற்காக கிரீன் டீ தயாரிக்க உள்ளே சென்றாள்.
சரியாக மது கிரீன் டீயை டிரேயில் வைத்துக் கொண்டு மாடி படியை நெருங்கவும், மேலிருந்து "மதுதுதுது...." என்ற அழுத்தமான குரல் கேட்டது.
அதில் பதட்டமானவள், 'இன்னைக்கு என்ன ஆச்சோ தெரியலையே...' என எண்ணியபடியே தங்கள் அறைக்குள் நுழைய...
அங்கு அப்போதே குளித்து விட்டு வந்து ஈரம் சொட்ட சொட்ட தன் எயிட் பேக் உடல் தெரிய வெள்ளை நிற டவலோடு கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தான் தேவ். தினமும் பார்க்கும் காட்சி தான் என்றாலும் ஒவ்வொரு முறையும் ஏனோ ஏறிட்டு பார்க்க ஒரு தயக்கம் வந்து தடுக்க அருகில் செல்ல கால்கள் தயங்க கதவருகிலேயே நின்றிருந்தாள் மது.
கண்ணாடி வழியாக மதுவையும் அவள் கைகளில் இருந்த டிரேவையும் பார்த்தவன் ஏதுவும் சொல்லாமல் தன் வேலையைத் தொடர... 'இப்போ எதுக்குக் கூப்பிட்டு இருப்பாங்க...' என்று தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டு நின்றிருந்தவளின் முகத்தின் வழியே அகத்தைப் படித்தவன், "ம்ம்... டுயட் பாடலாம்னு... சாங் எப்படி நீ செலக்ட் செய்யறீயா...? இல்ல நான் செய்யவா...?" எனவும்
திடீரென்று எதற்கு இப்படிப் பேசுகிறார்...!!! எனப் புரியாமல் "ஙே..." என விழித்துக் கொண்டு நின்றிருந்தவளை கண்டவன் தன் வேலையை நிறுத்தி விட்டு அவளை அடி மேல் அடி வைத்து நெருங்க...
இப்போது என்ன தவறு செய்தோம்...? எனப் பயத்தோடு விழி விரிய அச்சத்தோடு அவனையே இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தவளை நெருங்கியவன் எதுவும் பேசாமல் அவள் கைகளில் இருந்த டீயை எடுத்து பருக தொடங்க... அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை "ஊப்ப்ப்ப்...." என வெளியிட்டாள் மது.
டீயை பருகி கொண்டிருந்தாலும் மதுவின் ஒவ்வொரு அசைவும் தேவ்வின் கண்களில் படத் தவரவில்லை. ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் "மித்து எங்கே...?" என்றவனின் கேள்விக்கு "மா.. மி... யா... ண்ட... இருக்... கான்..." எனக் காற்றாகி போன குரலில் திக்கி திக்கி பதிலளித்தாள்.
அதற்கு ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாகத் தந்தவன், நீ போகலாம் என்பது போல விரலை அசைக்க, அதற்குச் சம்மதமாக அவசரமாக ஒரு தலையசைப்பை தந்தவள் அறையிலிருந்து உடனே வெளியேறினாள்.
படிகளில் இறங்கும் போதே தேவ் தன்னை அழைத்தது நினைவு வர... 'எதுக்குக் கூப்பிட்டார்ன்னு சொல்லவே இல்லையே...' என்று நினைத்தவளின் மனசாட்சி 'ஏன் போய் நீ தான் கேளேன்...' என எடுத்துக் கொடுக்க....
'ஈஸ்வரா... நானா !!! அவரை பார்த்தாளே காத்து தான் வரது...' என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டும் பதிலளித்துக் கொண்டும் சென்றவளுக்கு எப்போது தான் தன் கணவனிடம் நேருக்கு நேராகப் பேச தைரியம் வருமோ...!!!
மித்து எழுந்துவிட்டானா எனச் சென்று பார்த்தவள், அவன் இன்னும் உறங்கி கொண்டிருக்கவே லலிதாவிற்கு அவர் மறுப்பையும் மீறி கஞ்சியை ஊட்டி விட்டு முகத்தைத் துடைத்து விட்டாள்.
லலிதாவை பார்த்து கொள்வதற்காகவே இரண்டு நர்ஸ்கள் எப்போதும் அவர் அறையிலேயே இருப்பர். அவர்களே அவரின் தேவைகளைப் பார்த்து பார்த்துச் செய்தாலும் மதுவிற்கு உணவு விஷயத்தில் இவர் அவர்களை ஏமாற்றுகிறாறோ என்று ஒரு சந்தேகம் உண்டு. அதற்காக அவளே அதை அருகில் இருந்து கொடுக்கத் தொடங்கினாள்.
அடுத்து அவர் போட வேண்டிய மாத்திரைகளை மது சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டு இருக்க... அலுவலகத்திற்குச் செல்ல தயாராகத் தேவ் தன் அன்னையின் அறைக்குள் நுழைந்தான். இது தினப்படி வழக்கம் தான் காலை உணவிற்கு முன் லலிதாவோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
இரவில் எப்போது வீடு திரும்புவான் என்பது அவனுக்கே தெரியாதென்பதால் காலையில் அன்னையோடும் பிள்ளையோடும் நேரம் செலவழிப்பதை நாள் தவறாமல் செய்வான்.
"குட்மார்னிங் மா..." என்றபடியே அறைக்குள் நுழைந்தவன் நர்ஸ்களிடம் தன் அன்னையின் உடல் நலனை பற்றி விசாரித்து முடித்ததும் அவர்கள் அறையிலிருந்து வெளியேறிவிட... "அப்பறம் மா... என்ன சொல்றான் உங்க பேரன்..." எனக் குழந்தையின் தலையைப் பாசத்தோடு வருடியவாறே அருகில் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தவனின் குரலில் இருந்த வித்தியாசம் மட்டுமே அவன் லலிதாவின் மேல் கொண்டுள்ள அன்பிற்குச் சாட்சி.
இதே போன்ற குரலில் அவன் பேசும் மற்றொரு நபர் மிதுன் மட்டுமே. "இன்னும் பிள்ளை எழுந்துக்கவே இல்லைடா..." என அவர் குறைப்பட்டுக் கொள்ள, "ராத்திரி பிள்ளை ரொம்ப நாழி முழிச்சிண்டு இருந்தான் மாமி..." என மது பதிலளித்தாள் .
"ஏன்... மா... உடம்பு... எதாவது..." என லலிதா கவலை கொள்ள, "அப்பாவும் பிள்ளையும் அத்தனை ஆட்டம்..." என்று புன்னகைத்தவளை கண்டு அவரும் புன்னகைக்க, இருவரையும் பார்த்தபடியே அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.
தேவ்வை திரும்பி பார்த்தவர், "விக்ரமா..." என அழைக்க, அன்னையின் அந்தப் பிரத்யேக அழைப்பில் அவரைத் திரும்பி பார்த்தவன், "சொல்லுங்கம்மா..." எனக் கனிவோடு கேட்க... "உன் பொண்டாட்டி என்னைக் கொடுமைப்படுத்தறாப்பா..." என்று புகார் பத்திரம் வாசிக்க...
சும்மாவே தன்னிடம் காய்பவன் இப்போது என்ன செய்வானோ...? என்று அதிர்ந்த மது தேவ்வை திரும்பி பார்க்க... "நீங்க செலக்ட் செஞ்ச மருமக தானே... என்ஜாய்..." என்றவாறே எழுந்து சென்றவனின் பார்வை மதுவின் பக்கமாகக் கூடத் திரும்பவில்லை.
மாமியும் மருமகளும் செல்பவனின் முதுகையே பார்த்துக் கொண்டு இருக்க... தேவ் கதவை நெருங்கவும் "டாடா..." என்ற மழலை குரல் அழைக்க... அதில் புன்னகையோடு திரும்பியவன் தன் வேக நடையில் நெருங்கி அந்தப் பிஞ்சை தன் நெஞ்சோடு அள்ளி கொண்டு அறையில் இருந்து வெளியேறினான்.
அடுத்து அவன் டைனிங் டேபிளுக்கே செல்வான் என்று தெரிந்து லலிதா "நீ போ மா... " எனக் கூறவும்... வேகமாக டைனிங் டேபிளை நோக்கி விரைந்தாள் மது. அங்குத் தேவ் தன் மடியில் மித்துவை அமர்த்திக் கொண்டு கொஞ்சி கொண்டிருக்க...
அதைப் பார்த்துக் கொண்டே வழக்கமாகத் தேவ் உண்ணும் வீட் பிரட் டோஸ்ட்டையும் பட்டரையும் எடுத்து அவன் முன் வைத்தவளுக்கு லலிதாவின் புன்னகை முகமும் அதற்கு நேரதிராக எப்போதும் உர்ரென்று இருக்கும் தேவ்வின் முகமும் மன கண்ணில் வர...
நேரம் காலம் தெரியாமல் கருணாஸின் காமெடி நினைவு வந்து தொலைத்தது 'ஆஹ... அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்...' என்ற அதே மாடுலேஷனோடு மனதிற்குள் சொல்லி பார்த்தவளுக்கு இதழோரம் சிரிப்பில் துடிக்க... அது வெளியே தெரிவதற்குள் இதழை பற்களால் கடித்துக் கட்டுபடுத்தியவள் நிமிரவும்...
தேவ் தன் கூர்மையான கண்களோடு மதுவையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த பார்வையைக் கண்டவளுக்கு இதயம் நின்று துடித்தது. மதுவின் இத்தனை நாள் அனுபவத்தில் அவள் மனதில் நினைப்பதைக் கூடக் கண்டறிந்து பதிலளிப்பவனின் நினைவு வர... திக்கென்றது.
அதில் எழுந்த படபடப்போடு தட்டில் ஆம்லெட்டை எடுத்து வைத்துத் தேவ் முன் கொண்டு வந்து வைத்தவளின் முகத்தையே தேவ் ஆராய்ச்சியாகப் பார்க்க... அதில் எப்போதும் போல எந்த ஒரு அருவருப்போ முகச்சுளிப்போ தெரியவில்லை.
எதையோ நினைத்து கொண்டவன் "எனக்கு ஆப்பாயில் வேணும்..." எனவும் "ம்ம்..." என்ற தலையசைப்போடு நகர்ந்தவளை "டபுள் ஆப்பாயில் வித் எக்ஸ்ட்ரா பெப்பர்..." என்ற தேவ்வின் குரல் தடுத்து நிறுத்த... திரும்பி மீண்டும் ஒரு தலையசைப்போடு உள்ளே சென்றாள்.
மது கிட்சனில் இருந்து திரும்ப வரும் போது மித்துத் தன் மழலையில் ஆயிரத்து எட்டு டாடா போட்டுக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
"டாடா... இடு அன்ன...?"
"இது பிரட்..."
"டாடா... அப்பூ இடு..."
"இது பட்டர்..."
"ம்ம்...இடு டாடா..."
"இது எஃக்..."
எனக் கொஞ்சமும் சலிக்காமல் மித்துவின் அத்தனை கேள்விகளுக்கும் தேவ் பதிலளித்துக் கொண்டிருந்தான்.
இவை அனைத்துமே தினமும் கேட்கப்படும் கேள்விகள் தான்... ஆனால் ஒரு நாளும் தேவ் பதிலளிக்கச் சலித்துக் கொள்ளவோ பதிலளிக்கத் தவறியதோ இல்லை. ஒவ்வொரு முறையும் முதல் முறையாகக் கேட்கப்படும் கேள்வியைப் போலவே பதிலளிப்பவனின் இந்த முகம் மதுவை என்றும் போல இன்றும் ஆச்சர்யப்படுத்தியது.
மது தன் கையால் செய்த ஆப்பாயில் தட்டை கொண்டு வந்து வைக்கவும் மீண்டும் அவள் முகத்தையே ஆராய்ச்சியாகப் பார்த்து அமைதியாக உண்ண துவங்கியவன் ஆம்லெட்டை போர்க்கில் குத்தி மித்துவின் வாயருகே கொண்டு செல்ல...
"ம்ஹூம்... மிட்டுத் தர்த்திப் பாய் ஈ பண்லா..." எனத் தான் இன்னும் பல் விளக்கவில்லை என்பதைத் தந்தைக்கு நினைவுபடுத்த... "நோ ஒர்ரிஸ் டியர்..." என்றவாறே மீண்டும் கொடுக்க முயன்ற தந்தையைத் தடுத்தவன்...
"துத் பாய் அல்லாம் ஈ பண்ணி சாப்பும்... மிட்டு துத் பாய் இல்ல மா..." என மதுவையும் துணைக்கழைக்க... அதில் வியப்பாக ஒற்றைப் புருவத்தை உயர்த்தி இறக்கினானே தவிர, எதுவும் கூறவில்லை தேவ்.
மது இந்தப் பக்கம் நின்று கொண்டு மித்துவின் கேள்விக்கு ஆம் என்பது போல் தலையசைக்க டேபிள் மேல் தேவ்வை நோக்கி திரும்பி அமர்ந்திருந்தவனுக்கு அது தெரியாததால் "ம்மா தொல்லு..." என்றான்.
"ஆமா கண்ணா... என் மித்து இந்த வேர்ல்ட்லயே ரொம்ப ரொம்ப குட் பாய்..." என்றவள் "வா நாம போய்ப் பிரஷ் ஆயிண்டு வந்துடலாம்..." எனக் கைகளை நீட்டி அழைக்க...
"போ... வம்மாத்தே..." எனத் தந்தையின் கழுத்தை கட்டி கொண்டவனைக் கண்டவளுக்குக் கொஞ்சமும் கோபம் வரவில்லை, அவளுக்கு நன்றாகத் தெரியும் தேவ் வீட்டில் இருந்தால் அவனே மித்துவின் உலகம்... தேவ்விடம் இருந்து கொஞ்சமும் நகர மாட்டான்.
'வாடா படவா உன்னைக் கவனிச்சுக்கறேன்...' என மனதிற்குள் கொஞ்சி கொண்டிருந்த வேலையில் டேபிள் மேல் இருந்த தேவ்வின் போன் ஒலிக்க... ஒரு கையில் குழந்தையைப் பற்றிக் கொண்டு மறு கையால் சாப்பிட்டு கொண்டிருந்தவன் "யாருன்னு கேளு..." என மதுவை பார்த்து கூற...
ஏதோ கிடைப்பதற்கு அரிய பொருளை போல் இரு கைகளில் பத்திரமாக எடுத்து ஆன் செய்து காதில் வைத்தவள் "ஹலோ.." என்பதற்குள் "தேவ் டியர்... நைட் உங்க பிரீப் கேஸ் இங்கே என் ரூம்லயே விட்டுட்டீங்க..." என்ற குரல் கொஞ்சலாக ஒலித்தது.
பார்வையை மட்டும் திருப்பி மது தேவ்வை பார்க்க... அவனோ மித்துவோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான்.
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
Last edited: