தீரா 01
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ...............திணையில் தேனை குழைத்தெடுத்தது போல் ஒரு மதுரமான குரல் அந்த மழை பெய்து ஓய்ந்த மாலையில் காற்றில் பரவியது.
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
தேனீர் கோப்பையுடன் மாடி பல்கனியில் இருந்த அசோகன். தேனீர் கோப்பையை வைத்துவிட்டு சுவற்றில் சாய்ந்து கண்மூடி பாடலை ரசிக்க மனைவி யசோதா அருகே இருந்த இருக்கையில் கண் மூடி அமர்ந்தார்.
அலைபோல நினைவாக…
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அந்த மெட்டாலிக் சம்பல் வண்ண ப்ரோடோ சத்தமின்றி வழுக்கி கொண்டு வந்து அந்த வீட்டின் முன் வாசலில் நிற்க, அதிலிருந்து இறங்கியவன் உள்ளே செல்லாமல் அந்த வாகனத்தின் மேல் தலை சாய்த்து கண் மூடி பாடலை ரசித்தான்.
அந்த வீட்டில் வேலை செய்பவர்களும் அவரவர் வேலையை விட்டு அவள் பாடலை ரசித்து கொண்டிருந்தனர் .
அந்த குரலில் ஏதோ சோகம் இழையோட கையிலிருந்த வீணையை மீட்டி இடையில் சுருதி சேர்த்தாள் அவள்.
எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ளே ஒரு வீணை ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடதோ
கண்கள் எங்கும் நெஞ்சின் பாவம் மேலும் ஏற்றும்
கையில் வீணையுடன் திருமகளே கலைமகளாய் வந்து அமர்ந்தது போல் இருந்தவள் கண்களில் கண்ணீர் வழிந்து கன்னத்தை தாண்டி நாடியில் தற்கொலை செய்ததது.
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடதோ
வாழும்..... காலம்.... யாவும்.... இங்கே நெஞ்சம் தேடும்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக…
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே......
பாடல் முடிந்தும் அதன் தாக்கம் என்னில் முடியவில்லை என்பது போல் வீணை இசை ரீங்காரமாய் ஒலிக்க, அனைவரும் அவரவர் வேலையை பார்க்க செல்ல அவன் மட்டும் அசையாது நின்றிருந்தான். ஆறரை அடி உயரத்தில் ஒற்றை நாடி சரீரம் உடல் பயிற்சியில் இறுகி இருக்க தலை கலைந்து முகம் சோர்வையும் களைப்பையும் குத்தகைக்கு எடுத்திருந்தது. அவனுடன் சேர்ந்து தூசி படிந்திருந்த அவன் வாகனமும் கூறியது இருவரும் நெடுந்தூர பயணத்தில் இருந்து வந்திருக்கின்றோம் என்று. அவன் தாமரை வடிவ அழகான கண்கள் மூடியிருக்க ப்ளாக் பாண்ட்டும் மஸ்கட் நிற டீ ஷர்ட் அணிந்து நின்றவன் கம்பீரம் அப்போதும் குறையாமல் இருந்தது.
சில நிமிடங்கள் கழிந்து கண் திறந்தவன் திரும்பி பார்க்க அவன் கண்களில் தென்பட்டாள் அவள். வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசுவதற்கு சில நேரம் தேனீர் அருந்த என கூடாரம் போல் நான்கு புறமும் திறந்த மண்டபம் கட்டியிருக்க அதில் வீணையுடன் அமர்ந்திருந்தாள்.
விரிந்திருந்த கூந்தல் நிலத்தில் புரள நீண்ட விரல்கள் வீணையின் தந்திகளுடன் விளையாட அப்போதும் அவள் குரலை போலவே இனிமையான இசை தவழ அமர்ந்திருந்தவள் முகம் சிரிப்பு என்பதையே மறந்திருந்தது. கடந்த இரண்டு வாரங்களாக இப்படி தான் இருக்கின்றாள். சரியாக சொல்ல போனால் கேரளா போய் வந்ததிலிருந்து. முதலில் அலட்சியமாக விட்டுவிட்டான். ஆனால் இந்த பயணத்தின் போது அறிந்த சில செய்திகளின் பின்னர் அவ்வாறு விட்டு விட முடியவில்லை.
பெருமூச்சு ஒன்றினை சத்தமின்றி விட்டவனுக்கு கேரளா போவதற்கு முன்னர் அவள் தன்னிடம் வந்து பேசியது நினைவிலாடியது.
அவர்கள் அறை மூன்றாக பிரிக்கப்பட்டு ஒருபுறம் அவளும் இன்னொரு புறம் அவள் பயன்படுத்தும் வகையில் இருக்க நடுவில் இருவருக்கும் பொதுவாக கட்டிலும் போடப்பட்டிருந்தது. கல்யாணமாகி இந்த பத்து மாதங்களில் அவளை இருவருக்கும் பொதுவான அறையில் பார்த்ததே இல்லை. அன்று மடி கணனியில் அடுத்த நாள் மீட்டிங்கிற்கான தகவல்களை சரி பார்த்து கொண்டிருந்தவனிடம் வந்தவள் தயங்கி நின்றாள்.
என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தான்.
"இல்லை என்னுடன் நாளைக்கு மட்டும் கேரளா வரமுடியுமா? நடுங்கும் உதடுகளை கட்டுப்படுத்தியவாறே கேட்டாள். ஏனோ அன்று அவள் கலக்கம் சுமந்த முகமும் கண்களும் அவன் கண்ணில் படவேயில்லை. இல்லை இத்தனை நாளில் எதுவும் கேட்காதவள் இன்று ஏன் கேட்கின்றாள் என்றும் யோசிக்கவில்லை. அவன் உதடு ஏளனமாக வளைய "ஏன் இப்போது என்ன தேனிலவு போக வேண்டுமா?" கிண்டலாக கேட்டான்.
அன்று காலை தான் அவன் அம்மா யசோதா பிடித்து வைத்து வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார் "அவள் தனியாகவே இருக்கின்றாள் எங்காவது கூட்டி போ" என்று இவள் தான் ஊமைகோட்டான் போல் இருந்து கொண்டு அம்மாவிடம் போட்டு கொடுத்துவிட்டாள் என்றே எண்ணினான். இப்போது வந்து கேரளா எனவும் விஷம் நிறைந்த குளவியாய் கொட்டிவிட்டான்.
"தேனிலவா..." மெலிதாய் விரக்தி நிறைந்த குரலில் முணுமுணுத்தாள். அதற்கு மேல் அவனிடம் என்ன பேச என்று கேட்ட மனதிற்கு மூளை மௌனத்தையே பதிலாக கொடுக்க எதுவும் வேறு பேசாமல் திரும்பிவிட்டாள். தன் அறைக்கு சென்றவள் பிரெஞ் விண்டோ வழியே வெளியே தெரிந்த வானத்து நிலவை வெறித்தவாறு நிலத்தில் அமர்ந்திருந்தாள்.
சிறு வயதிலிருந்தே எத்தனையோ கஷ்டங்களில் வளர்ந்தவள் தான் ஆனால் இன்றைய நாளை தனியாக சமாளிக்க முடியாதது போல் தோன்றவே போய் கேட்டுவிட்டாள். அருகருகே இருந்தது ஏதோ ஒரு விதத்தில் அவன் உதவுவான் என்று இந்த மட மனம் நம்பிவிட்டது.
ஆனால் இது நாள் வரை யார் தூணையும் இன்றி வாழ்கையை கடந்தது போல் இனியும் கடக்க வேண்டும். இல்லாவிட்டால் மூழ்கி போக வேண்டும். கண்களில் நீர் நிற்காமல் வழிய மிக மிக மெல்லிதாய் விசும்பினாள். சிறு வயதிலிருந்தே அவள் அழுதாள் சத்தம் கேட்காது மெல்லிய விசும்பல் அதுவும் கூட எல்லை கடந்த சோகத்தின் போது மட்டுமே இதுவரை ஒரே ஒரு தடவை தான் அப்படி அழுதாள்.
வேலையை முடித்து படுத்தவனுக்கு உறக்கம் வர மறுத்தது. வேலையின் மும்முரத்தில் கவனிக்க மறந்த அவளின் தோற்றம் இப்போது கண் முன்னே வர எரிச்சலுடன் எழுந்தவன் அவள் அறைக்கு சென்றான். அவள் வந்த பின்னர் அந்த அறைக்கு சென்றதே இல்லை அதற்கு முன் ஜிம்மாக பயன்படுத்தினான்.
திறந்து பார்க்க இருட்டாக இருக்க ஸ்விட்சை தட்டி வெளிச்சத்தை ஒளிரவிட்டான். சோபாவில் தலை சாய்த்துக் கீழே அமர்ந்திருந்தாள்.
"ஏன் கீழே இருக்கின்றாய்?" கேள்விக்கு பதிலின்றி போகவே கோபத்துடன் "கேட்டால் பதில் சொல்ல மாட்டாய்? அவளை திருப்ப போன கை பாதியில் நின்றது. கன்னத்தில் கண்ணீர் கோடுகளுடன் உறக்கத்திலும் விசும்பி கொண்டிருந்தாள்.
கன்னத்தில் தட்ட விசும்பல் அதிகமாகியது கைகளில் ஏந்தியவன் படுக்க வைக்க சுற்றும் முற்றும் பார்த்தான் எதுவும் இல்லை கட்டில் மெட்ரஸ் பாய் தலையணை கூட இல்லை. இவ்வளவு நாளும் எங்கே படுக்கின்றாள் கேள்வி மனதில் எழ குனிந்து கையில் இருப்பவளை பார்த்தன்.
"இம்சை" வாய்க்குள் முனகியவன் அப்படியே விட்டு செல்ல மனமின்றி வெளியே அவன் படுக்கும் கட்டிலில் படுக்க வைத்தான். கன்னத்தின் ஈரத்தை துடைக்க மீண்டும் ஈரமாகியது. நெற்றி சுளித்து பார்த்தவன் கண்களில் பட்டது நீர் ஊற்றுபட்டது போல் நனைந்திருந்த முன் பக்கம். நம்ப முடியாமல் தொட்டு பார்க்க அது நான் ஈரம்தான் என்றது. இப்படி ஈரமென்றால் எவ்வளவு நேரம் இப்படி அழுதாள் வெறுமே கேரளாவுக்கு போகவில்லை என்ற ஒரு காரணத்திற்காக இப்படியா அழுவது கோபம் தான் வந்தது அழுது சாதிக்க நினைக்கின்றாளா? அல்லது வேறு ஏதாவதா? எழுப்பி கேட்டாலும் பதில் சொல்லவாளா என்பது கேள்விக்குறிதான்.
சற்று பொறுத்து பார்த்தவன் அவள் விசும்பல் நிற்பது போல் தெரியவில்லை என்றதும் அவளை இழுத்து மார்பில் போட்டு தலையை வருடி கொடுத்தான். அதன் பிறகு கண்ணீர் சற்று மட்டுப்பட்டது நிற்கவில்லை. அப்படியே அவனும் அயர்ந்துவிட்டான்.
அடுத்த நாள் எழுந்து சோம்பல் முறித்தவனுக்கு ஏதோ குறைவது போல் தோன்றவே புருவம் சுழித்து யோசித்தவனுக்கு இரவு அவள் அழுதது நினைவில் வந்தது. சுற்றும் முற்றும் பார்க்க இல்லை. குளியலறை, மாடி தோட்டம், வீணை வாசிக்கும் மண்டபம் ஒரு இடத்திலும் இல்லை.
கடைசியாய் அவள் அறைக்கு சென்று பார்க்க வெறுமையாய் இருந்தது. ஏதோ தோன்ற அவளின் கபோர்டை திறந்து பார்த்தான். அதில் அவன் இத்தனை நாளும் வாங்கி கொடுத்த பொருட்கள் பத்திரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க அவள் வழமையாக அணியும் ஆடைகளில் சிலது மட்டும் குறைந்தது போல் இருந்தது. நேற்றைய அவள் நிலை கண்முன் வந்து செல்ல பதற்றம் தன்னாலே வந்து ஒட்டிக் கொண்டது.
வேகமாக கீழே இறங்கி வந்தவனிடம் அவன் அம்மா "ஆ... உன்னைத்தான் பார்த்து கொண்டிருந்தேன். நண்பி ஒருத்திக்கு விபத்து அதனால் கேரளா போவதாகவும் ஹாஸ்பிடலில் நிற்க வேண்டி இருக்கும் நேரம் கிடைக்கும் தானே அழைப்பதாகவும் கூறினாள்" தகவலை சொன்னவர் அவசரமாக தன் செயளாலருடன் சென்றுவிட்டார். .
அங்கிருந்து வந்த பின் அம்மாவிடம் என்ன பேசினாலோ தெரியவில்லை வந்த நாளில் இருந்து பின்னால் உள்ள தோட்ட வீட்டில் தான் தாங்கியிருந்தாள். அம்மாவிடம் கேட்டதற்கு "வேண்டுமானால் நீ போய் அவளுடன் இருந்து கொள், அவளை வர சொல்லி கஷ்டப்படுத்ததே " என்றுவிட்டார்
அவள் இருந்த இடத்தை நோக்கி நடந்தவன் அருகே சென்றதும் காலணியை கழட்டி உள்ளே சென்றான். அவனை கண்டதும் திரும்பி கண்ணீரை துடைத்தவள் "வேலங்கில் இருக்க நாற்காலி" என்று அழைக்க வேண்டாம் என்று தலையசைத்தவன் அவளருகே கீழே இருந்தான். இதயம் ஏனோ மெலிதாய் வலித்தது என்னிடம் கண்ணீரை மறைக்கின்றாள். ஏன்...
அதற்குள் "அம்மணி" என்று வேலன் வர அவன் முகத்தை பார்த்தவள் அதிலிருந்த களைப்பையும் சோர்வையும் பார்த்து விட்டு கூறினாள் "யூசும் சான்விச்சும் எடுத்திட்டு வாங்க அங்கிள்" என்றாள்.
"இரண்டு" என்றவன் தன் நீண்ட விரலினால் அவள் வீணையின் நரம்பை சுண்டிவிட்டான்.
"எனக்கு வேண்டாம்" உடனடியாக பதில் வந்தது.
நிமிர்ந்து அவளை பார்த்தவன் கோபத்துடன் கேட்டான் "சாப்பிடுறீயா இல்லையா?"
ஒரு அசைவும் இன்றி குனிந்தவாறு அமர்ந்திருந்தவளை பார்த்து எழுந்த பெருமூச்சை சத்தமின்றி விட்டான். அவள் சிந்தனை மீண்டும் எங்கோ சென்றதை உணர்ந்தவன் "இதை எப்படி வாசிப்பது" அவள் மனதை திசை திருப்ப கேட்டான்.
ஒவ்வொரு தந்தியாக தட்டி சொன்னாள் "இது ஸ இது ரி, இதை மீட்டும் போது இங்கே அமத்தினால் இந்த சத்தம் வரும்...." வீணையை தூக்க "ஏன்" என்றவனிடம் தலைகீழாக வாசிக்க முடியாது இல்லை அதான்" என்றாள். வேலன் வரும் வரை அதை சொல்லி கொடுக்க வாசிக்கின்றேன் என்ற பெயரில் ஸ்வரம் அபஸ்வரமாய் வர "அதென்ன நீ வாசித்தால் மட்டும் நன்றாய் வருது" என்ற அவனின் சிறுபிள்ளைதனத்தில் அவள் இதழில் கீற்றாய் ஒரு முறுவலும் வந்தது
வேலன் யூஸை கொண்டு வர அவன் கையிலிருந்து வீணையை வாங்கியவள் தன் மடியில் வைத்து குடம் இருந்த இடத்தில் கையை வைத்து அதன் மீது கன்னம் வைத்து அதில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். முதல் தடவையாக அவள் அழகு அவன் உள்ளத்தை கொள்ளையிட அவள் தலையில் கை வைத்தான்.
ஆச்சரியத்துடன் கண் விரித்து பார்த்தவளிடம் "இது உனக்கு" சாப்பிடு என்று கண்ணாலேயே உத்தரவிட "இல்லை எனக்கு வேண்டாம் பசியில்லை" மறுத்தாள்.
"மேலே மாடியிலிருந்து அம்மாவும் அப்பாவும் பார்த்து கொண்டிருக்கின்றார்கள் இப்போது நீ சாப்பிடாவிட்டால் எனக்கு தான் மங்களம் விழும் என்னை காப்பாற்றவாவது சாப்பிடு" அவளோ விழித்தாள் 'நான் சாப்பிடவில்லை என்றால் இவனுக்கு ஏன் பேச்சு விழனும்' அதற்கும் மேல் எப்போதிருந்து என்னிடம் இப்படியெல்லாம் பேச ஆரம்பித்தான். அவன் முகமே சொன்னது சாப்பிடாமல் விடமாட்டான். சோர்வுடன் கூப்பிடு தூரத்தில் நின்ற வேலனை அழைத்தவள் வீணையை வணங்கி கூறினாள் "அங்கிள் இதை உள்ளே வைத்து விடுங்கள்".
அவர் எடுத்து சென்றதும் இருவரும் அமைதியாக உண்டு முடித்தனர். யூஸ் கிளாசை உள்ளங்கைகளில் வைத்து உருட்டியவாறே "நான் நாளைக்கு திரும்ப கேரளா போறேன்" சிறிய குரலில் கூறினாள். அவனருகே தன் துன்பம் குறைவதை உணர்ந்தவளுக்கு தவிப்பாய் இருந்தது. அவன் அருகாமை அவளுக்கு என்றும் நிரந்தரமில்லை. அதற்காக ஏங்குவது மடத்தனம் அவன் வந்தால் நன்றாக இருக்கு தான் ஆனால்.... மறுபடியும் மறுத்தால் தாங்கி கொள்ள முடியுமா தெரியவில்லை.
"ஹ்ம்" அதை தவிர எதுவும் சொல்லவில்லை குனிந்திருந்த முகத்தை ஆழ்ந்து பார்த்திருந்தான் வேறு எதுவும் சொல்கின்றாளா என்பது போல்.
அவனின் அமைதி அவளுக்கு அவன் வர விரும்பவில்லை என்பது போல் புரிந்தது. வழமையாக விருப்பமின்மையை இது போல் அமைதியாக இருந்து தானே புரிய வைப்பான். எழுந்த பெருமூச்சை சத்தமற்று விட்டாள்.
"நீங்கள் களைத்து போய் இருப்பீர்கள் உள்ளே போய் ப்ரஷ் ஆகுங்கள்"
ஒரு பக்க உதட்டால் மட்டும் சிரித்தவன் "வரும் போது இருந்தது இப்போது இல்லை" என்றவன் அப்படியே தலைக்கு கீழே கை கொடுத்து கால் மேல் கால் போட்டு படுத்துவிட்டான். அவளுக்கு மிக மிக அருகில்
"ஹா..." விழித்தாள். சும்மாவே மனம் அவனுக்காக ஏங்கி கொண்டிருக்க அவனின் இந்த நடவடிக்கையில் கிறுகிறுத்துவிட சட்டென எழுந்து நின்றவள் கையை பிடித்து இழுத்தான்.
அப்படியே அவன் மார்பில் மலர் கொடியாய் விழுந்தாள் அவள்.